Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச எச்சரிக்கை "புலியை தோற்கடித்தோம்! ஒட்டகங்களே அடங்குங்கள்!"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

bus-3%2B%25281%2529.jpg

 “புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் 

ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.”

 

அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது.

  மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து. அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தது. எப்போதும் ஒரு கெடுபிடி நிலை தொடரவே செய்யும் பகுதிகள் இவை.

அங்கு வாழும் முஸ்லிம் மக்களை எச்சரிப்பதற்காகவே இந்த “ஒட்டகங்களை அடங்கியிருக்கச் சொல்லும்” எச்சரிக்கை.

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதாக முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் அதேவேளை முஸ்லிம்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடங்கியிருக்க தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையை விடுக்கிறது.

அதுவும் அரச போக்குவரத்து வண்டியில் போக்குவரத்து சபையால் பொறிக்கப்பட்டிருகிறது. மதுகம டிப்போவுக்கு சொந்தமான 9532 இலக்கமுடைய பஸ்ஸிலேயே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. 

கோத்தபாய ஆட்சியமர்ந்தபின்னர் மிகவும் துணிச்சலாகவே பேரினவாத சக்திகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள அரச நிறுவனங்களை ஏனைய இனங்களுக்கு எதிராக பயன்படுத்திவருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது போன்ற விடயங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே பேரினவாதத்தின் அமுலாக்கத்துக்கு எதிராகவும், அதன் நிறுவனமயப்படுத்தலுக்கு எதிராகவும் வெகுஜன கூட்டு மனநிலையை கட்டியெழுப்ப முடியும். 

https://www.namathumalayagam.com/2020/11/warningMusims.html

  • Replies 64
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

bus-3+%25281%2529.jpg

 

அமைச்சர் அல் சப்ரி இதற்கான விளக்கத்தை வழங்குவார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தோற்றது அவர்கள்  எடுத்த  முடிவால்...

ஆனால்  அவர்கள்  வைத்த  வலையிலிருந்து  சிறீலங்கா வெளியில் வரவே  முடியாது

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

புலிகள் தோற்றது அவர்கள்  எடுத்த  முடிவால்...

ஆனால்  அவர்கள்  வைத்த  வலையிலிருந்து  சிறீலங்கா வெளியில் வரவே  முடியாது

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

 

 

வாங்கட்டுமே...??

இனி  யுத்தம் அல்லது  தமிழரை  வென்றது  பற்றி பேசினால்  அடி விழும் நிலையும்

தமிழருக்கு  தீர்வை வையுங்கள் அதுவரை  நாம் எழும்ப  முடியாது என்ற குரல்களும்

சிறீலங்காவிலிருந்து  எழும்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

 

வாங்கட்டுமே...??

இனி  யுத்தம் அல்லது  தமிழரை  வென்றது  பற்றி பேசினால்  அடி விழும் நிலையும்

தமிழருக்கு  தீர்வை வையுங்கள் அதுவரை  நாம் எழும்ப  முடியாது என்ற குரல்களும்

சிறீலங்காவிலிருந்து  எழும்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

நிச்சயமாக இல்லை. 

எந்த ஒரு எதிரியையும் வெற்றி கொள்ள வேண்டுமானால் அவனது எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவனது எண்ணவோட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமனால் அவனது வாழ்க்கை முறையை அவனது கலாசாரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 

இல்லாதுபோனால் எங்கள் வெற்றி தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும். 

 

இதற்குச் சிறந்த உதாரணம் ஆப்கானிஸ்தான்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

நிச்சயமாக இல்லை. 

எந்த ஒரு எதிரியையும் வெற்றி கொள்ள வேண்டுமானால் அவனது எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவனது எண்ணவோட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமனால் அவனது வாழ்க்கை முறையை அவனது கலாசாரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 

இல்லாதுபோனால் எங்கள் வெற்றி தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும். 

இதற்குச் சிறந்த உதாரணம் ஆப்கானிஸ்தான்

 

உலகம் எங்கேயோ போய்விட்டது

இனியும் பிக்குகளின் கைகளில்  அரசோ அல்லது  கலாசாரமோ  இருக்க வாய்ப்பில்லை

வரலாறு  அதையும்  உணர்த்தியிருக்கிறது

இன்னும்  உணர்த்தும்

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ.. வெகுவிரைவில் இந்தப் பேரூந்து டீசல் இல்லாமல் ரோட்டில இறங்காமக் கிடக்கும். அப்ப தெரியும் புலிகளை வென்றதன் தார்ப்பரியம். 

புலிகளை அடிக்க ஓடி வந்தவனெல்லாம்.. இப்ப தூர நின்று விடுப்புத்தான் பார்க்கிறாங்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

 

கடன் வேண்டுவது இராஐதந்திராமா?.   அபபடியாயின். சும்மா வேணடுவதற்க்கு   [நன்கொடையாக] என்ன பெயர?60 ஆண்டுகளுக்கு மேல் தீர்வு காண முடியாமல் பிரச்சனையுடனிருக்கும்  ஒரு நாட்டுக்கு இராஐதந்திரம் இருக்க முடியாது...ஆனால் நரி தந்திரம் இருக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

பொறுங்கோ.. வெகுவிரைவில் இந்தப் பேரூந்து டீசல் இல்லாமல் ரோட்டில இறங்காமக் கிடக்கும். அப்ப தெரியும் புலிகளை வென்றதன் தார்ப்பரியம். 

புலிகளை அடிக்க ஓடி வந்தவனெல்லாம்.. இப்ப தூர நின்று விடுப்புத்தான் பார்க்கிறாங்கள். 

புலிகள் மவுனித்தபின்பும் வென்று கொண்டு இருக்கிறார்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

bus-3+%25281%2529.jpg

 

அமைச்சர் அல் சப்ரி இதற்கான விளக்கத்தை வழங்குவார்.

ஒவ்வொரு முசுலிமுக்கும்  பத்தாயிரம் கொடுத்தால் சரி என்பார்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

இதுவும் ராஜதந்திரமா ? உங்களுக்கு நீங்களே சொல்லி சமாதானம் அடையுங்க பாஸ் .

காட்டுக்குள் இருந்த சிங்கள  மோட்டு கூட்டத்துக்கு அதிகாரத்தை கொடுக்க காட்டை வளமிக்க பூமியாக்கினவர்களை ஒரே இரவில் நாடற்றவர்களாக்கி அதிலும் உழைக்கும் வர்க்கம் 6 லட்சம் பேரை இந்தியாவுக்கு கப்பல் ஏற்றி அனுப்பி கொண்டாடிய இனத்துவேச சிங்களவர்களுக்கு அறிவு இருக்குமென்று இன்னும் நம்புவர்களை எப்படி அழைப்பது ?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

இதுவும் ராஜதந்திரமா ? உங்களுக்கு நீங்களே சொல்லி சமாதானம் அடையுங்க பாஸ் .

காட்டுக்குள் இருந்த சிங்கள  மோட்டு கூட்டத்துக்கு அதிகாரத்தை கொடுக்க காட்டை வளமிக்க பூமியாக்கினவர்களை ஒரே இரவில் நாடற்றவர்களாக்கி அதிலும் உழைக்கும் வர்க்கம் 6 லட்சம் பேரை இந்தியாவுக்கு கப்பல் ஏற்றி அனுப்பி கொண்டாடிய இனத்துவேச சிங்களவர்களுக்கு அறிவு இருக்குமென்று இன்னும் நம்புவர்களை எப்படி அழைப்பது ?

 

கிட்லரின்  ஒரு  குண்டு பரிசில் விழாமல்  நாட்டைக்கொடுத்து  விட்டு

இப்ப  பிரெஞ்சு  தேசம்  நிமிர்ந்து  நிற்பதும்  அவர்  சொல்லும்  வரலாறு  தான்

பாவம்  அவர்  விடுங்க

வெல்வது  தான் ராசதந்திரம்  என்று  நினைக்கிறார்

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kandiah57 said:

கடன் வேண்டுவது இராஐதந்திராமா?.   அபபடியாயின். சும்மா வேணடுவதற்க்கு   [நன்கொடையாக] என்ன பெயர?60 ஆண்டுகளுக்கு மேல் தீர்வு காண முடியாமல் பிரச்சனையுடனிருக்கும்  ஒரு நாட்டுக்கு இராஐதந்திரம் இருக்க முடியாது...ஆனால் நரி தந்திரம் இருக்க முடியும்.

 

4 minutes ago, பெருமாள் said:

இதுவும் ராஜதந்திரமா ? உங்களுக்கு நீங்களே சொல்லி சமாதானம் அடையுங்க பாஸ் .

காட்டுக்குள் இருந்த சிங்கள  மோட்டு கூட்டத்துக்கு அதிகாரத்தை கொடுக்க காட்டை வளமிக்க பூமியாக்கினவர்களை ஒரே இரவில் நாடற்றவர்களாக்கி அதிலும் உழைக்கும் வர்க்கம் 6 லட்சம் பேரை இந்தியாவுக்கு கப்பல் ஏற்றி அனுப்பி கொண்டாடிய இனத்துவேச சிங்களவர்களுக்கு அறிவு இருக்குமென்று இன்னும் நம்புவர்களை எப்படி அழைப்பது ?

“Read between the lines”

கடன் வேண்டுவது அல்ல ராசதந்திரம். த்ன்னுடைய நோக்கத்தில் வெற்றியடைவதுதான் இராசதந்திரம். 

சிங்களம் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்கிறது. அது பிச்சை எடுத்தோ காலில் விழுந்தோ..

சிங்களத்தின் பொருளாதாரம் 3Tயில் தங்கியிருக்கிறது. Tea, Tourism and Textile. 

பெருந்தொற்று முடிந்தவுடன் அது மீண்டும் எழுந்து நகரத் தொட்ங்கும். 

நாமோ...காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டத்தையே வெகுசனப் போராட்டமாக மாற்ற முடியாமல் சேடம் இழுத்துக் கிடக்கிறோம். 

உண்மை சுடும். ஆனால் அதுதான் மருந்து.

(யாருக்கு மருந்து ? சிந்திக்கத் தெரிந்தவனுக்கு)

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

வாங்கட்டுமே...??

இனி  யுத்தம் அல்லது  தமிழரை  வென்றது  பற்றி பேசினால்  அடி விழும் நிலையும்

தமிழருக்கு  தீர்வை வையுங்கள் அதுவரை  நாம் எழும்ப  முடியாது என்ற குரல்களும்

சிறீலங்காவிலிருந்து  எழும்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

இப்பிடி நடந்தால் நல்லது, ஆனால் இப்பிடி நடக்கும் என்று நம்புகிறீர்களா? எங்களது பிரச்னையின் அடிப்படை  என்னவென்று தெரியாத அளவுக்கு, பரம்பரை பரம்பரையாக, சிறு வயதில் இருந்து  இனவாதம் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. மதத்தலைவர்களின் கடும் பிடியில் இருக்கும் நாட்டில், இதிலிருந்து இலகுவில் மீள முடியாது. இப்ப இருப்பதை விட எங்களுக்கு கொஞ்சம் RELIEF கிடைக்கலாம். முழுமையாக மீள முடியாவிட்டாலும், எனக்கென்னவோ இந்த பிரச்சனையை ஆட்சியை மாற்றியாவது,  எப்பிடியாவது சமாளித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தற்காலிகமாக எங்களுக்கு ஆதரவான அல்லது எங்களது பிரச்னையை சிங்களர்கள் புரிந்தது போன்ற ஒரு போக்கு தோன்றுகிறது, அவ்வளவுதான். இப்ப நாடு இருக்கும் நிலையை வைத்துக்கொண்டு எம்மால் ஏதாவது எடுக்க முடிந்தால் நல்லது, ஆனால் யார் அடியெடுத்து வைப்பது, தலைமை தாங்குவது? 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

 

கிட்லரின்  ஒரு  குண்டு பரிசில் விழாமல்  நாட்டைக்கொடுத்து  விட்டு

இப்ப  பிரெஞ்சு  தேசம்  நிமிர்ந்து  நிற்பதும்  அவர்  சொல்லும்  வரலாறு  தான்

பாவம்  அவர்  விடுங்க

வெல்வது  தான் ராசதந்திரம்  என்று  நினைக்கிறார்

 

 

Hitler Eiffel கோபுரத்தில் நின்றபடியே Paris நகரைப் பார்த்து தனது தளபதிகளுக்கு என்ன சொன்னார் என்று கூற முடியுமா? 

அந்தப் பதிலில் இருக்கிறது இராசதந்திரத்தின் உச்சம்

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

சிங்களத்தின் பொருளாதாரம் 3Tயில் தங்கியிருக்கிறது. Tea, Tourism and Textile. 

பெருந்தொற்று முடிந்தவுடன் அது மீண்டும் எழுந்து நகரத் தொட்ங்கும். 

யுத்தம் முடிந்தபின்தான் தெரிந்தது அந்த சண்டைக்கு எவ்வளவு சிலவளித்தார்கள் என்று இனி எவ்வளவு சிலவழிப்பார்கள் என்று தெரிய 2012 ல் உண்மைகள் வெளிவந்தது என்னது  3tயா  வாய்ப்பே இல்லை ராஜா இன்னும் இரண்டுமாதம் உக்கிரேன் சண்டை தொடர்ந்தால்  சோமாலியாவை விட பாரிய நரகம் உருவாகும் இல்லாவிட்டாலும் 2025க்கு மேல தாக்கு பிடிக்காது. இல்லாவிடின் அதிசயம் நடக்கணும் .

16 minutes ago, நீர்வேலியான் said:

இப்பிடி நடந்தால் நல்லது, ஆனால் இப்பிடி நடக்கும் என்று நம்புகிறீர்களா? எங்களது பிரச்னையின் அடிப்படை  என்னவென்று தெரியாத அளவுக்கு, பரம்பரை பரம்பரையாக, சிறு வயதில் இருந்து  இனவாதம் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. மதத்தலைவர்களின் கடும் பிடியில் இருக்கும் நாட்டில், இதிலிருந்து இலகுவில் மீள முடியாது. இப்ப இருப்பதை விட எங்களுக்கு கொஞ்சம் RELIEF கிடைக்கலாம். முழுமையாக மீள முடியாவிட்டாலும், எனக்கென்னவோ இந்த பிரச்சனையை ஆட்சியை மாற்றியாவது,  எப்பிடியாவது சமாளித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தற்காலிகமாக எங்களுக்கு ஆதரவான அல்லது எங்களது பிரச்னையை சிங்களர்கள் புரிந்தது போன்ற ஒரு போக்கு தோன்றுகிறது, அவ்வளவுதான். இப்ப நாடு இருக்கும் நிலையை வைத்துக்கொண்டு எம்மால் ஏதாவது எடுக்க முடிந்தால் நல்லது, ஆனால் யார் அடியெடுத்து வைப்பது, தலைமை தாங்குவது? 

ஆட்சி வெகுவிரைவில் மாறும் மகிந்த கூட்டம் மறுபடியும் வருவது போல் ஏதாவது செய்து விட்டு விலகுவார்களாம் .ஆனால் பூனை விழுந்தாலும் எழுந்து ஓடும் யானை விழுந்தால் எழும்பி ஓடுவது சந்தேகமே .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

Hitler Eiffel கோபுரத்தில் நின்றபடியே Paris நகரைப் பார்த்து தனது தளபதிகளுக்கு என்ன சொன்னார் என்று கூற முடியுமா? 

அந்தப் பதிலில் இருக்கிறது இராசதந்திரத்தின் உச்சம்

 

சொல்லில் இல்லை

செயலில் இருக்கிறது என்பதும் நீங்க  தான்??

ஆமா கிட்லர் என்ன  சொன்னர் என்று  என்னை  எதற்கு  கேட்கிறீர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நீர்வேலியான் said:

இப்பிடி நடந்தால் நல்லது, ஆனால் இப்பிடி நடக்கும் என்று நம்புகிறீர்களா? எங்களது பிரச்னையின் அடிப்படை  என்னவென்று தெரியாத அளவுக்கு, பரம்பரை பரம்பரையாக, சிறு வயதில் இருந்து  இனவாதம் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. மதத்தலைவர்களின் கடும் பிடியில் இருக்கும் நாட்டில், இதிலிருந்து இலகுவில் மீள முடியாது. இப்ப இருப்பதை விட எங்களுக்கு கொஞ்சம் RELIEF கிடைக்கலாம். முழுமையாக மீள முடியாவிட்டாலும், எனக்கென்னவோ இந்த பிரச்சனையை ஆட்சியை மாற்றியாவது,  எப்பிடியாவது சமாளித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தற்காலிகமாக எங்களுக்கு ஆதரவான அல்லது எங்களது பிரச்னையை சிங்களர்கள் புரிந்தது போன்ற ஒரு போக்கு தோன்றுகிறது, அவ்வளவுதான். இப்ப நாடு இருக்கும் நிலையை வைத்துக்கொண்டு எம்மால் ஏதாவது எடுக்க முடிந்தால் நல்லது, ஆனால் யார் அடியெடுத்து வைப்பது, தலைமை தாங்குவது? 

 

அதாவது  ஒரு கட்டத்தை  தாண்டியிருக்கின்றோம்?

இப்போ  தோல்வியால் நாம் துவண்டு  இருந்தவை  அனைத்தையும் பிளந்ததை அல்லது  மூடியதை  தேடுகின்றோம்?

அதுவும் அடுத்த  கட்டம் தானே???

யார் அடி  எடுத்த  வைப்பது?

தலைமை தாங்குவது???நாம  தான்

இனியாவது  இவ்வாறு  சிந்திப்போம்

சிந்திக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

 

சொல்லில் இல்லை

செயலில் இருக்கிறது என்பதும் நீங்க  தான்??

ஆமா கிட்லர் என்ன  சொன்னர் என்று  என்னை  எதற்கு  கேட்கிறீர்கள்???

France ஐயும் Hitler ஐயும் நீங்கள்தானே இங்கே  கொண்டுவந்தீர்கள். அதனால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன்.  

இராசதந்திரம் என்றால் என்னவென்று தமிழருக்கு அறவே தெரியாது. அதுதான் உண்மை.

சிங்களம் தற்போது Canada வில் செய்வதுதான் இராசதந்திரம். (?)

நாங்கள்....

வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

France ஐயும் Hitler ஐயும் நீங்கள்தானே இங்கே  கொண்டுவந்தீர்கள். அதனால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன்.  

இராசதந்திரம் என்றால் என்னவென்று தமிழருக்கு அறவே தெரியாது. அதுதான் உண்மை.

சிங்களம் தற்போது Canada வில் செய்வதுதான் இராசதந்திரம். (?)

நாங்கள்....

வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.

 

புலிகளின் காலத்தில் வாழ்ந்த  எம்மிடம்  இவ்வாறு  சொல்வது வெறும் விதண்டாவாதம்  மட்டுமே??

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

யுத்தம் முடிந்தபின்தான் தெரிந்தது அந்த சண்டைக்கு எவ்வளவு சிலவளித்தார்கள் என்று இனி எவ்வளவு சிலவழிப்பார்கள் என்று தெரிய 2012 ல் உண்மைகள் வெளிவந்தது என்னது  3tயா  வாய்ப்பே இல்லை ராஜா இன்னும் இரண்டுமாதம் உக்கிரேன் சண்டை தொடர்ந்தால்  சோமாலியாவை விட பாரிய நரகம் உருவாகும் இல்லாவிட்டாலும் 2025க்கு மேல தாக்கு பிடிக்காது. இல்லாவிடின் அதிசயம் நடக்கணும் .

ஆட்சி வெகுவிரைவில் மாறும் மகிந்த கூட்டம் மறுபடியும் வருவது போல் ஏதாவது செய்து விட்டு விலகுவார்களாம் .ஆனால் பூனை விழுந்தாலும் எழுந்து ஓடும் யானை விழுந்தால் எழும்பி ஓடுவது சந்தேகமே .

 

22 minutes ago, விசுகு said:

 

அதாவது  ஒரு கட்டத்தை  தாண்டியிருக்கின்றோம்?

இப்போ  தோல்வியால் நாம் துவண்டு  இருந்தவை  அனைத்தையும் பிளந்ததை அல்லது  மூடியதை  தேடுகின்றோம்?

அதுவும் அடுத்த  கட்டம் தானே???

யார் அடி  எடுத்த  வைப்பது?

தலைமை தாங்குவது???நாம  தான்

இனியாவது  இவ்வாறு  சிந்திப்போம்

சிந்திக்கணும்

எவ்வளவு தூரத்துக்கு இந்த பிரச்னை போகுதென்று பார்ப்போம். சிம்பாவே, லெபெனான், கிரீஸ்  என்று சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் சிம்பாவேயில் ஆட்சி மாற்றம் கூட நிகழவில்லை என்று நினைக்கிறன். எனக்கென்னவோ இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை, இந்தியா இவர்களுக்கு ஏதாவது ஊட்டிக்கொண்டே இருக்கும். வருடக்கணக்காக நடப்பவற்றை பார்த்த அனுபவம் இன்னும் அவநம்பிகையையே ஊட்டிக்கொண்டு இருக்கிறது.   

இங்கு அடிக்கடி பேசும் விடயம்தான். நாங்கள்தான் செய்வதென்று சுலபமாக சொல்லலாம், இது ஒரு மலைப்பான வேலை. இங்கு எல்லாரும் ஒன்றாக சேர வேண்டும், இந்த யாழ் களத்திலேயே நம்மால் சேர்ந்து ஒருமித்த கருத்து வைக்க முடியவில்லை. அப்பிடியே நாங்கள் ஒரு அமைப்பை உருவாக்கி அல்லது இருக்கும் அமைப்புக்களை சேர்த்து  இங்கிருந்து ஏதாவது முயற்சித்தாலும் அங்கிருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். தற்போது பொருளாதாரத்தில் பெரும் அடியென்பதால் சிலவேளை நமது இடையூறு தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்படலாம். இதற்கான முயற்சியும் தலைமைத்துவம் அங்கிருந்து வரவேண்டும் என்று நினைக்கிறன், அதுவே சரியான முறை, நாங்கள் கை கொடுக்கலாம். அங்கிருக்கும் தமிழ் கட்சிகள் இணைத்து இதற்கான முதல் அடியை எடுத்து வைக்கவேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமா என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை    

   

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

 

எவ்வளவு தூரத்துக்கு இந்த பிரச்னை போகுதென்று பார்ப்போம். சிம்பாவே, லெபெனான், கிரீஸ்  என்று சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் சிம்பாவேயில் ஆட்சி மாற்றம் கூட நிகழவில்லை என்று நினைக்கிறன். எனக்கென்னவோ இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை, இந்தியா இவர்களுக்கு ஏதாவது ஊட்டிக்கொண்டே இருக்கும். வருடக்கணக்காக நடப்பவற்றை பார்த்த அனுபவம் இன்னும் அவநம்பிகையையே ஊட்டிக்கொண்டு இருக்கிறது.   

இங்கு அடிக்கடி பேசும் விடயம்தான். நாங்கள்தான் செய்வதென்று சுலபமாக சொல்லலாம், இது ஒரு மலைப்பான வேலை. இங்கு எல்லாரும் ஒன்றாக சேர வேண்டும், இந்த யாழ் களத்திலேயே நம்மால் சேர்ந்து ஒருமித்த கருத்து வைக்க முடியவில்லை. அப்பிடியே நாங்கள் ஒரு அமைப்பை உருவாக்கி அல்லது இருக்கும் அமைப்புக்களை சேர்த்து  இங்கிருந்து ஏதாவது முயற்சித்தாலும் அங்கிருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். தற்போது பொருளாதாரத்தில் பெரும் அடியென்பதால் சிலவேளை நமது இடையூறு தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்படலாம். இதற்கான முயற்சியும் தலைமைத்துவம் அங்கிருந்து வரவேண்டும் என்று நினைக்கிறன், அதுவே சரியான முறை, நாங்கள் கை கொடுக்கலாம். அங்கிருக்கும் தமிழ் கட்சிகள் இணைத்து இதற்கான முதல் அடியை எடுத்து வைக்கவேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமா என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை    

 

 

இது  தான் எனது நிலைப்பாடும்

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

 

புலிகளின் காலத்தில் வாழ்ந்த  எம்மிடம்  இவ்வாறு  சொல்வது வெறும் விதண்டாவாதம்  மட்டுமே??

நல்ல விடயம் நீங்கள் இதைத் தொட்டது.

உண்மை, நேர்மை, வீரத்தில் நம்பிக்கை கொண்டது நமது இனம். அதன் விழைவுதான் தற்போது நாம் மிகப் பலவீனமான நிலையில் இருப்பது. 

இங்கே இராசதந்திரம் இல்லை. 

ஆங்கிலேயரது வெளியேற்றத்தில் காட்டியிருக்கவேண்டிய இராசதந்திரத்தின் தோல்வி எம்மை அகதிகளாக பிரான்சிலும் கனடாவிலும் இருந்து புலம்ப வைக்கிறது. 

இறுதியாகக் கிடைத்த சந்தர்ப்பம், யசூகி அகாசியையும் ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகாரச் செயளாளரையும் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு. அதுவும், வன்முறையைக் கொண்ட ஆயுதப் போராட்டத்தில், சனனாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களையும், பொது மக்களையும் வன்முறைக்கு பகியாக்கிய போராட்டம். இருந்தும் எங்கள் போராட்டத்திற்கு இன்றளவு அங்கிகாராம் கிடைத்ததற்குக் காரணம் எமது போராட்டத்றிலுள்ள நியாயமும், போராளிகளின் வீரமும்தான்.

அதனைக் காசாக்கத் தெரியாத ஆட்கள் நாம்தானே. 

(கனடாவில் சிங்களம் என்ன செய்கிறது என்று கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன். ☹️)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

நல்ல விடயம் நீங்கள் இதைத் தொட்டது.

உண்மை, நேர்மை, வீரத்தில் நம்பிக்கை கொண்டது நமது இனம். அதன் விழைவுதான் தற்போது நாம் மிகப் பலவீனமான நிலையில் இருப்பது. 

இங்கே இராசதந்திரம் இல்லை. 

ஆங்கிலேயரது வெளியேற்றத்தில் காட்டியிருக்கவேண்டிய இராசதந்திரத்தின் தோல்வி எம்மை அகதிகளாக பிரான்சிலும் கனடாவிலும் இருந்து புலம்ப வைக்கிறது. 

இறுதியாகக் கிடைத்த சந்தர்ப்பம், யசூகி அகாசியையும் ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகாரச் செயளாளரையும் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு. அதுவும், வன்முறையைக் கொண்ட ஆயுதப் போராட்டத்தில், சனனாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களையும், பொது மக்களையும் வன்முறைக்கு பகியாக்கிய போராட்டம். இருந்தும் எங்கள் போராட்டத்திற்கு இன்றளவு அங்கிகாராம் கிடைத்ததற்குக் காரணம் எமது போராட்டத்றிலுள்ள நியாயமும், போராளிகளின் வீரமும்தான்.

அதனைக் காசாக்கத் தெரியாத ஆட்கள் நாம்தானே. 

(கனடாவில் சிங்களம் என்ன செய்கிறது என்று கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன். ☹️)

 

இந்த வருத்தம்  எனக்குமுண்டு

ஆனால் செயல்  வேண்டும்  காண்

அதனை  செய்யணும் நாம்

அப்புறம் கனடா

சொல்லுங்கள்  ஏதோ  சொல்ல வருவது  தெரிகிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.