Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சவினர் எங்களது வம்சாவளியினர்: தமிழ்நாடு காமாட்சி நாயுடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நாயக்க என்ற குடும்ப பெயர்களை கொண்டுள்ளவர்கள், தெலுங்கு நாயுடு வம்சாவளியினர் எனவும் ராஜபக்சவினரும் தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் எனவும் தமிழ் நாடு நாயுடு பேரவையின் தலைவர் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழ் வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

22-62679b69e0d2d.webp

 

பண்டாரநாயக்க என்ற பெயரில் இருக்கும் பண்டார என்பது தமிழில் இருக்கும் பண்டாரம் என்ற பெயர்களை கொண்ட மக்களை குறிக்கும். பண்டாரம் என்பவர் அம்மன் கோயில் ஒன்றில் பூசாரியாக இருந்தார். அவரது பெண்ணை இலங்கைக்கு மணம் முடித்து கொடுத்தனர்.

இலங்கை சென்றது, இந்த பெண்ணின் கணவன் இறந்து போகிறார். இதன் பின்னர், அந்த பெண் இலங்கையில் வாழ்ந்து வருகிறார். அதன் பின்னர், அங்கு ஆட்சி செய்த நாயக்கர்களான நாயுடுகளில் ஒருவரை திருமணம் செய்த பின்னர் பண்டாரநாயக்க என்று குடும்ப பெயர் மாறுகிறது.

இலங்கையில் 1793 ஆம் ஆண்டில் எங்களது (தெலுங்கர்களின்) ஆட்சி உதயமாகின்றது. அன்றிலிருந்து இலங்கையில் நாயக்கர்களில் ஆட்சி ஆரம்பமாகிறது. எனினும் அதற்கு முன்னரே பண்டாரம் என்ற வார்த்தை இலங்கைக்கு சென்று விட்டது.

பண்டாரம் என்ற குடியிலேயே திருவள்ளுவர் பிறந்ததாக கூறுகின்றனர். அது உண்மையாகவும் இருக்கலாம். ஏன் என்றால், அவர்கள் மிகவும் திறமையானவர்கள். பட்டியலின வகுப்புகளில் இவர்கள் சற்று மாறுப்பட்டவர்கள். இவர்கள் ஜாதகம் பார்ப்பது கோயில்களில் பூசாரிகளாக பணியாற்றுகின்றனர். பழனியில் இருக்கும் பூசாரிகள் அனைவரும் பண்டாரம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் வம்சாவளியில் வந்தவர்களே பண்டாரநாயக்கர்கள்.

சிங்க( ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கன் ) என்ற கண்டி மன்னர் தமிழகத்தின் மதுரை நாட்டில் இருந்து இரண்டு நாயுடு பெண்களை மணம் முடித்துக்கொள்கிறார். அந்த இரண்டு பெண்களுக்கும் வாரிசுகள் இல்லை.

இதன் பின்னர் 1793 ஆம் ஆண்டில் மதுவரையில் இருந்த இந்த பெண்களின் சகோதரனை(ஸ்ரீ விஜய ராஜசிங்கன் ) கண்டிக்கு அழைத்துச் சென்று மன்னராக முடி சூடுகின்றனர்.

அதன் பின்னர் அங்கு நாயுடுக்களின் ஆட்சி அங்கு ஏற்படுகிறது. சிங்களவர்கள் அனைவருமே நாயுடுகள். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ராஜபக்சவினரின் வம்சாவளியினரும் நூற்றுக்கு நூறு நாயுடுகளே.

இலங்கையில் இருக்கும் ராஜபக்சவினரும், இந்தியாவில் இருக்கும் நாயுடுகளின் வம்சாவளிகள் ஒரே இனத்தவர்களே. அவர்கள் நாயுடுகள் என்பதற்காக அவர்கள் செய்வது அனைத்தையும் நியாயப்படுத்தவில்லை.

அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட குற்றங்கள் முற்றிலும் தவறானது. அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு நாயுடு பேரவையின் தலைவர் காமாட்சி நாயுடு, தெலுங்கர் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்தார். அதனை பின்னர் திராவிட முன்னேற்றக் கழத்துடன் இணைத்து அந்த கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகிறார்.

தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கட்சியை ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைத்தீர்கள் என அண்மையில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்த காமாட்சி நாடு, திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதால், தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தேவை இல்லை எனக் கருதி,அதனை திமுகவுடன் இணைத்ததாகவும் தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது தமது ஆள் என்பதால், தனியாக கட்சியை வைத்திருக்கும் அவசியமில்லை எனவும் கூறியிருந்தார்.

இலங்கையின் கண்டி ராஜ்ஜியத்தின் இறுதி சிங்கள மன்னனான ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கனின் மறைவிக்கு பின்னர், கண்டியை மதுரையை சேர்ந்த நாயக்கர் வம்சத்தை சேர்ந்த நான்கு மன்னர்கள் ஆட்சி செய்தினர். 1739 ஆம் ஆண்டு முதல் 1747 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய ராஜசிங்கனும், 1747 ஆம் ஆண்டு முதல் 1782 ஆம் ஆண்டு வரை கீர்த்தி ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனும் 1782 ஆம் ஆண்டு முதல் 1798 ஆம் ஆண்டு முதல் ராஜாதி ராஜசிங்கனும் 1798 ஆம் ஆண்டு முதல்1815 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனும் கண்டியை ஆட்சி செய்தனர். 1815 ஆம் ஆண்டு கண்டி ராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றினர்.  

https://tamilwin.com/article/telugu-kandy-madurai-nayakkar-kings-1650954987?itm_source=parsely-detail

  • Replies 65
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கோசானையும், நாதமுனியையும்… உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்.😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காமாட்சி நாயுடு ஆந்திராவில்  தெலுங்கர். தமிழ்நாட்டில் திராவிடர் அர்த்தம் புரியுதா? 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கோசானையும், நாதமுனியையும்… உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்.😂

இந்த செய்தியை யாராவது சிங்களத்தில் மொழிமாற்றி போடுங்க உடனே கோ கோம் அமெரிக்கா என்பதுக்கு பதிலா கோ கோம்  தெலுங்கு தேசம் என்று மாற்றி கத்தட்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

கூப்பிடீங்களே என்று, ஓடியாந்தேன்... ஏதோ நம்மால் முடிந்தது.... 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

சல்லி சல்லியா நொருக்கிறாங்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயமா இங்கே பெரிய சண்டையே நடந்தது.... இப்ப... வேறு யாரு.... காமாட்சி நாயுடுவே அடிச்சு சொல்லிப்புட்டார்... 🤗

பண்ணியில், பண்ணிப் பாருங்கோவன்... 😁

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இனி யாழ்ப்பாண கோவியரும் நாயுடுக்கள் தான் போல.. ஏற்கனவே அவர்கள் தாங்கள் கண்டிய ராஜசிங்கன் குடி என்று சொல்லிகொண்டவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பகிடி said:

ஆக இனி யாழ்ப்பாண கோவியரும் நாயுடுக்கள் தான் போல.. ஏற்கனவே அவர்கள் தாங்கள் கண்டிய ராஜசிங்கன் குடி என்று சொல்லிகொண்டவர்கள் 

உப்புடிச் சொல்லாதேயுங்கோ பகிடி, பிறகு அவனுகள் கோவிச்சுப் போடுவானுகள்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த விசயமா இங்கே பெரிய சண்டையே நடந்தது.... இப்ப... வேறு யாரு.... காமாட்சி நாயுடுவே அடிச்சு சொல்லிப்புட்டார்... 🤗

பண்ணியில், பண்ணிப் பாருங்கோவன்... 😁

 

நீ இஸ்டம் போல விளையாடு தல, எவனும் இல்ல குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க🤣.

பிகு

இன்னும் இது போல பல புரட்டுகள் யாழில் வரணும், அவை எதிர் கேள்வி கேட்டு fact check பண்ணபடமல் போகணும். இதன் பலனாக இன்னொரு ஏப்ரல் பூக் ஊடகமாக யாழும் வரணும்.  அப்பவாவது கருத்தியல் பல்லினதுவத்தின் அவசியம் உறைக்கட்டும்.

அதுவரை … 

You dance, me dance …உடான்ஸ்…

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

இன்னும் இது போல பல புரட்டுகள் யாழில் வரணும், அவை எதிர் கேள்வி கேட்டு fact check பண்ணபடமல் போகணும். இதன் பலனாக இன்னொரு ஏப்ரல் பூக் ஊடகமாக யாழும் வரணும்.  அப்பவாவது கருத்தியல் பல்லினதுவத்தின் அவசியம் உறைக்கட்டும்.

அதுவரை … 

காமாட்சி நாயுடு  சொன்னது பொய்யா?  fact check எங்கு செய்யணும்? 

இங்கு தெலுங்கனே தமிழ் இனத்தை அழித்த  ராஜபக்சேவை தெலுங்கன் என்று கூறுமளவுக்கு தமிழ் எதிர்ப்பு தெலுங்கர்களிடம் எவ்வளவு ஊறியிருக்கு என்பதை வாசகர்கள் அறியட்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

காமாட்சி நாயுடு  சொன்னது பொய்யா?  fact check எங்கு செய்யணும்? 

இங்கு தெலுங்கனே தமிழ் இனத்தை அழித்த  ராஜபக்சேவை தெலுங்கன் என்று கூறுமளவுக்கு தமிழ் எதிர்ப்பு தெலுங்கர்களிடம் எவ்வளவு ஊறியிருக்கு என்பதை வாசகர்கள் அறியட்டும் .

கொஞ்சம் பொறுங்கோ.....விரைவில் ராஜபக்ச & ஸ்டாலின் தலைமையில் அகண்ட திராவிடம் அமைப்பார்கள்..

Saravanan's Blog: தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஜி ஆர் க்கு முதலே இயக்கங்களுக்கு trainning கொடுத்தது என் டி ஆர் என்று கேள்வி. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நீ இஸ்டம் போல விளையாடு தல, எவனும் இல்ல குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க🤣.

பிகு

இன்னும் இது போல பல புரட்டுகள் யாழில் வரணும், அவை எதிர் கேள்வி கேட்டு fact check பண்ணபடமல் போகணும். இதன் பலனாக இன்னொரு ஏப்ரல் பூக் ஊடகமாக யாழும் வரணும்.  அப்பவாவது கருத்தியல் பல்லினதுவத்தின் அவசியம் உறைக்கட்டும்.

அதுவரை … 

You dance, me dance …உடான்ஸ்…

நா காமன்ஸ் தல..... 😂😁

என்னடா கண்ணு இது, மதுரைக்கு, சா... காமாட்சி நயுடுக்கு வந்த சோதனை.....

ஏதோ.....நாம சொன்னது போல.... நம்ம உடான்சு குழம்புறாரே..... இது தமிழகத்தில், தமிழருக்கு.... ஒரு தெலுங்கர் சொன்னது... கண்ணு...

குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் அவனுகளே கேட்கட்டும், பதிலு குடுக்கிறன் குடுக்கட்டும் கண்ணு....

நோ டென்சன் தல.... 😂

பக்டு செக் அவனுக பண்ணட்டு்ம், பண்ணாம போகட்டும்.... நமக்கேன் பொல்லாப்பு...

நம்ம பேரீச்சம்பழ ஜோலி பார்ப்போமே...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

காமாட்சி நாயுடு  சொன்னது பொய்யா?  fact check எங்கு செய்யணும்? 

இங்கு தெலுங்கனே தமிழ் இனத்தை அழித்த  ராஜபக்சேவை தெலுங்கன் என்று கூறுமளவுக்கு தமிழ் எதிர்ப்பு தெலுங்கர்களிடம் எவ்வளவு ஊறியிருக்கு என்பதை வாசகர்கள் அறியட்டும் .

 

41 minutes ago, Nathamuni said:

நா காமன்ஸ் தல..... 😂😁

என்னடா கண்ணு இது, மதுரைக்கு, சா... காமாட்சி நயுடுக்கு வந்த சோதனை.....

ஏதோ.....நாம சொன்னது போல.... நம்ம உடான்சு குழம்புறாரே..... இது தமிழகத்தில், தமிழருக்கு.... ஒரு தெலுங்கர் சொன்னது... கண்ணு...

குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் அவனுகளே கேட்கட்டும், பதிலு குடுக்கிறன் குடுக்கட்டும் கண்ணு....

நோ டென்சன் தல.... 😂

பக்டு செக் அவனுக பண்ணட்டு்ம், பண்ணாம போகட்டும்.... நமக்கேன் பொல்லாப்பு...

நம்ம பேரீச்சம்பழ ஜோலி பார்ப்போமே...

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

fact check எங்கு செய்யணும்?  என்றாவது அருளிவிட்டு போங்கள்  குருவே .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

அதே கமாட்சி நாயுடு காரு.... ஸ்ராலின் நம்மாளு என்று சொன்னதை புரட்டு என்று ஸ்ராலினோ, திமுகவோ சொல்லலியே கண்ணு.... அப்புறம்?

இப்ப என்ன, ராசபக்சேகளே வந்து இல்லைன்னு சொல்லணுமா, கண்ணு?

சரி விடு கண்ணு..... நம்ம ஜோலிய பார்கலாம். 😊👍

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

 

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

யாழ் தமிழரை தெலுங்கு வ ......குடிகள் என்று இதே யாழில் தலையங்கம் போட்டு அல்லும் பகலும் போராடியவர் இதனால் நான் கடுப்பாக நிழலி அதப்பார்த்து கடுப்பாக வெட்டுப்புள்ளி வாங்கியது வரலாறு உலகம் உருண்டை இப்ப யார் உண்மையான தெலுங்கர் என்பதை தெலுங்கு மக்களே கூறி விட்டார்கள் வழக்கம் போல் இந்த திரியை மறந்து திண்ணை தான் தஞ்சம் என்று சாட்டா ?

அல்லது உங்கடை ஆட்கள் போல் வேலியை பிய்த்து கொண்டு ஓடிப்போய் ஒளித்து நின்று பார்க்கபோரியல் போல் உள்ளது .😃

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

யாழ் தமிழரை தெலுங்கு வ ......குடிகள் என்று இதே யாழில் தலையங்கம் போட்டு அல்லும் பகலும் போராடியவர் இதனால் நான் கடுப்பாக நிழலி அதப்பார்த்து கடுப்பாக வெட்டுப்புள்ளி வாங்கியது வரலாறு உலகம் உருண்டை இப்ப யார் உண்மையான தெலுங்கர் என்பதை தெலுங்கு மக்களே கூறி விட்டார்கள் வழக்கம் போல் இந்த திரியை மறந்து திண்ணை தான் தஞ்சம் என்று சாட்டா ?

அல்லது உங்கடை ஆட்கள் போல் வேலியை பிய்த்து கொண்டு ஓடிப்போய் ஒளித்து நின்று பார்க்கபோரியல் போல் உள்ளது .😃

கமாட்சி நாயுடு காரு.... செல்வநாயகமும் உங்காளா, இல்லையா? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

சீமான் சிங்கள தலைவர்களை தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று கூறி விட்டார் என்பதுக்காக அந்த திரியை தொடக்கி கடைசியில் சீமான் சொன்னது உண்மையாகி போட்டுது ஆனால் தலை ஓடி............ விட்டார் 😆

  • கருத்துக்கள உறவுகள்

image.gif.43170f12657af5ec70f797a761312113.gifதிராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! ஆய்வு முடிவு!

 4 years ago  aanthai

நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர். இதில் இந்தோ ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். திராவிடம்என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. மொழியியல் அறிஞர் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளை திராவிட மொழிகள் என அழைத்தார். தென்னிந்திய பேச்சு மொழிகளைக் குறிக்கும் போது, வட மொழி ஆய்வாளர்கள் திராவிடிஎன்ற சொல்லால் குறிப்பிட்டனர். தற்காலத்தில் 23க்கும் அதிகமான மொழிகள், திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன, 1.தமிழ், 2.மலையாளம், 3.கன்னடம், 4.தெலுகு, 5.கோண்டி, 6.குரூக், 7.துளு, 8.கூயி, 9.பிராகூய், 10.கூவி, 11.கோயா, 12.மால்தோ, 13.குடகு, 14.கோலாமி, 15.பர்ஜி, 16.கொண்டா(கூபி), 17.கதபா, 18.நாயக்கி, 19.பெங்கோ, 20.கோத்தா,21.தோடா, 22.மண்டா, 23.கொரகா என்பனவாகும்.

இவற்றுள், தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா என்ற எட்டு மொழிகளும் தென்திராவிட மொழிகள்; தெலுகு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டா என்ற 12 மொழிகளும் நடுத்திராவிட மொழிகள்; குரூக், மால்தோ, பிராகூய் என்ற மூன்றும் வட திராவிட மொழிகள் என்ற பகுப்பில் உள்ளடங்குகின்றன என்றெல்லாம் ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில் நம் இந்தியாவில் சுமார் 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிலாங்க் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியாவின் டேராடூனில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவை சேர்ந்து உலக மொழிகளின் பழமை குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குழுவினர் திராவிட கிளை குடும்பங்களில் தங்களது தாய்மொழியை பேச்சுவழக்கில் கொண்டுள்ள ஏராளமான மக்களை நேர்காணல் செய்தனர். அதன் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் இலக்கியத்தின் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக உள்ளன. இதில் தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி என்றும் கூறியுள்ளனர்.

உலகின் தொன்மை மிக்க செம்மொழியாக தமிழ் விளங்கி வருவதாகவும், காலப்போக்கில் அழிந்து போகாமல் பண்டைய காலத்திற்கும் நவீன யுகத்திற்கும் இடையில் இணைப்பு பாலமாக உள்ளது. செய்யுள்கள், கவிதைகள், மதசார்பற்ற மற்றும் பக்திசார்ந்த உரைநடைகள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை தமிழ்மொழியில் எழுத்து வடிவில் இருந்து வருவதாகவும் இந்த ஆய்வு குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்தியா மற்றும் இந்தியாவின் மத்திய பகுதிகளிலும் அருகாமையிலும் உள்ள நாடுகளிலும் 80 மொழி வகைகளாக சுமார் 22 கோடி மக்களால் பேசப்பட்டுவரும் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடித்துள்ளனர். திராவிட மொழியின் தோற்றக்காலம் குறித்து கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாச்சார மேம்பாடுகளில் ஆரம்ப காலகட்டமும் ஒத்துப்போவதாகவும் இக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-ஆரியர்கள் (இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியவர்கள்) எனப்படும் ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.aanthaireporter.com/

 

குடும்பம் என்றால் அதற்கு ஒரு தலைமை இருக்கும். 

திராவிட மொழி குடும்பத்திற்குத் தலைமையாக இருப்பதுதான் தமிழ்.

image.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, பெருமாள் said:

சீமான் சிங்கள தலைவர்களை தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று கூறி விட்டார் என்பதுக்காக அந்த திரியை தொடக்கி கடைசியில் சீமான் சொன்னது உண்மையாகி போட்டுது ஆனால் தலை ஓடி............ விட்டார் 😆

ஆள்  இப்ப அடிபட்ட பாம்பு மாதிரி😂.......எப்பிடியும் பெரிய உரல் உருட்டோடை திரும்பி வருவார்🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆள்  இப்ப அடிபட்ட பாம்பு மாதிரி😂.......எப்பிடியும் பெரிய உரல் உருட்டோடை திரும்பி வருவார்🤣

இந்த டிரிக்ஸ் எல்லாம் நம்பியார் காலத்திலயே பார்த்தாச்சு🤣

4 hours ago, Nathamuni said:

கமாட்சி நாயுடு காரு.... செல்வநாயகமும் உங்காளா, இல்லையா? 😂

 

2 hours ago, Paanch said:

image.gif.43170f12657af5ec70f797a761312113.gifதிராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! ஆய்வு முடிவு!

 4 years ago  aanthai

நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர். இதில் இந்தோ ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். திராவிடம்என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. மொழியியல் அறிஞர் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளை திராவிட மொழிகள் என அழைத்தார். தென்னிந்திய பேச்சு மொழிகளைக் குறிக்கும் போது, வட மொழி ஆய்வாளர்கள் திராவிடிஎன்ற சொல்லால் குறிப்பிட்டனர். தற்காலத்தில் 23க்கும் அதிகமான மொழிகள், திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன, 1.தமிழ், 2.மலையாளம், 3.கன்னடம், 4.தெலுகு, 5.கோண்டி, 6.குரூக், 7.துளு, 8.கூயி, 9.பிராகூய், 10.கூவி, 11.கோயா, 12.மால்தோ, 13.குடகு, 14.கோலாமி, 15.பர்ஜி, 16.கொண்டா(கூபி), 17.கதபா, 18.நாயக்கி, 19.பெங்கோ, 20.கோத்தா,21.தோடா, 22.மண்டா, 23.கொரகா என்பனவாகும்.

இவற்றுள், தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா என்ற எட்டு மொழிகளும் தென்திராவிட மொழிகள்; தெலுகு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டா என்ற 12 மொழிகளும் நடுத்திராவிட மொழிகள்; குரூக், மால்தோ, பிராகூய் என்ற மூன்றும் வட திராவிட மொழிகள் என்ற பகுப்பில் உள்ளடங்குகின்றன என்றெல்லாம் ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில் நம் இந்தியாவில் சுமார் 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிலாங்க் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியாவின் டேராடூனில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவை சேர்ந்து உலக மொழிகளின் பழமை குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குழுவினர் திராவிட கிளை குடும்பங்களில் தங்களது தாய்மொழியை பேச்சுவழக்கில் கொண்டுள்ள ஏராளமான மக்களை நேர்காணல் செய்தனர். அதன் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் இலக்கியத்தின் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக உள்ளன. இதில் தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி என்றும் கூறியுள்ளனர்.

உலகின் தொன்மை மிக்க செம்மொழியாக தமிழ் விளங்கி வருவதாகவும், காலப்போக்கில் அழிந்து போகாமல் பண்டைய காலத்திற்கும் நவீன யுகத்திற்கும் இடையில் இணைப்பு பாலமாக உள்ளது. செய்யுள்கள், கவிதைகள், மதசார்பற்ற மற்றும் பக்திசார்ந்த உரைநடைகள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை தமிழ்மொழியில் எழுத்து வடிவில் இருந்து வருவதாகவும் இந்த ஆய்வு குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்தியா மற்றும் இந்தியாவின் மத்திய பகுதிகளிலும் அருகாமையிலும் உள்ள நாடுகளிலும் 80 மொழி வகைகளாக சுமார் 22 கோடி மக்களால் பேசப்பட்டுவரும் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடித்துள்ளனர். திராவிட மொழியின் தோற்றக்காலம் குறித்து கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாச்சார மேம்பாடுகளில் ஆரம்ப காலகட்டமும் ஒத்துப்போவதாகவும் இக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-ஆரியர்கள் (இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியவர்கள்) எனப்படும் ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.aanthaireporter.com/

 

குடும்பம் என்றால் அதற்கு ஒரு தலைமை இருக்கும். 

திராவிட மொழி குடும்பத்திற்குத் தலைமையாக இருப்பதுதான் தமிழ்.

image.gif

நன்றி பெரும்ஸ், நாதம்.

#உறைக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

பக்சாக்களின் பூர்விகம் இப்போதைய மலேசிய - இந்தோனேசியா பிராந்தியம்.  

மலே அடிக்கு சாத்தியக்கூறுகள் மிகவும்  அதிகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.