Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’முறையான மாற்றங்கள் இல்லையேல் பாரிய மக்கள் புரட்சி வெடிக்கும் ’ - எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’முறையான மாற்றங்கள் இல்லையேல் பாரிய மக்கள் புரட்சி வெடிக்கும் ’ - எம்.ஏ.சுமந்திரன்

நாம் பிரதமர் ரணிலை எதிர்க்கவில்லை, மாறாக  ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லாது போராடிக்கொண்டுள்ளோம். நாம் அன்றும் இன்றும் ஜனநாயகத்தின் பக்கமே நிற்கின்றோம் என  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முறையான மாற்றங்களை பாராளுமன்றத்தில் மேற்கொள்ளாவிட்டால் வெளியில் இருந்து மாற்றங்கள் உருவாகும். அது நாட்டில்  இரத்த வெள்ளத்தை உருவாக்கி பாரிய மக்கள் போராட்டத்தை நோக்கி பயணிக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த நல்லாட்சி அரசாங்க காலகட்டத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற போராடினோம், அப்போது ரணில் ஜனநாயகத்தின் பக்கம் நின்றார், இப்போதும் அதே ஜனநாயகத்தை காப்பாற்றவே போராடுகின்றோம். ஆனால் இப்போது ரணில் ஜனநாயகத்திற்கு எதிரான பக்கம் நிற்கின்றார். ஆனால் நாம் அன்றும் இன்றும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம், 
21 ஆம் திருத்த விடயத்தில் இக்கட்டான  நிலையில் நாம் உள்ளோம், 21 ஆம் திருத்தத்தை கொண்டுவந்து அதில் நிறைவேற்று அதிகாரத்தை எவ்வளவு தான் குறைத்தாலும் அதனை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்,  இதில் முன்னெடுக்கும் நல்ல விடயங்களை நாம் ஆதரிக்க வேண்டும். 

ஆனால் ஒட்டுமொத்தமாக இது கண்துடைப்பு நாடகமேயாகும். இதனையும் நாம் வெளிக்கொண்டுவர வேண்டும். 19 ஆம் திருத்தத்தில் இருந்த சில ஆரோக்கியமான விடயங்கள் கூட 21 ஆம் திருத்தத்தில் இல்லை. இது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும்.  
அதேபோல்,  பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கு கிழக்கு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் முதலில் ஒட்டுமொத்த நாட்டினதும் பிரச்னைக்கு தீர்வு கண்டால் மட்டுமே எம்மால் வடக்கு கிழக்கின் பொருளாதார பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். முழு நாடுமே  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதியுடனோ பிரதமருடனோ பேசி அதில் தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாது. ஆகவே முதலில் முழு நாட்டின் பொருளாதார பிரச்சினைக்குமான தீர்வு குறித்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/முறையான-மாற்றங்கள்-இல்லையேல்-பாரிய-மக்கள்-புரட்சி-வெடிக்கும்/175-297530

 

  • கருத்துக்கள உறவுகள்

" ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.." 👌

வெள்ளசாமி பாட ஆரம்பிச்சுட்டா குழந்தைங்க எல்லாம் இனி தூங்கிரும்..👍

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

" ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.." 👌

வெள்ளசாமி பாட ஆரம்பிச்சுட்டா குழந்தைங்க எல்லாம் இனி தூங்கிரும்..👍

சட்டமான் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, கிருபன் said:

முறையான மாற்றங்கள் இல்லையேல் பாரிய மக்கள் புரட்சி வெடிக்கும் ’ - எம்.ஏ.சுமந்திரன்

எப்பிடியான புரட்சி எண்டு சொன்னியளெண்டால் நாங்கள் கொஞ்சம் கவனமாய் இருக்கலாம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

வெடிக்கும், சிதறும் போன்ற மாவையின் சொற்களை  திருடி பாவிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.😝

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

வெடிக்கும், சிதறும் போன்ற மாவையின் சொற்களை  திருடி பாவிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.😝

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளிடம்  நடைமுறைக்கு ஒப்பான வார்த்தைகளை எதிர்பார்க்கப்படாது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

நாம் அன்றும் இன்றும் ஜனநாயகத்தின் பக்கமே நிற்கின்றோம்

th?id=OIP.CHpSs6LY3iZCHCUxkAIONQHaD6&pid=Api&P=0&w=358&h=189

 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/5/2022 at 17:45, கிருபன் said:

அது நாட்டில்  இரத்த வெள்ளத்தை உருவாக்கி பாரிய மக்கள் போராட்டத்தை நோக்கி பயணிக்கும் என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

 ஆயுதப்போராட்டத்தை விரும்பாதவர், வன்முறையை ஆதரிக்காத பெரிய மனிதர், இப்படி எச்சரித்து மக்களை தூண்டிவிடலாமா?

On 31/5/2022 at 17:45, கிருபன் said:

முறையான மாற்றங்கள் இல்லையேல் பாரிய மக்கள் புரட்சி வெடிக்கும்

 இவரும் சளைக்காமல் அடுக்கடுக்காய்  கொழுத்தி போட்டுக்கொண்டே இருக்கிறார் ஆனால் ஒன்றும் வெடிக்கிற மாதிரி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

 இவரும் சளைக்காமல் அடுக்கடுக்காய்  கொழுத்தி போட்டுக்கொண்டே இருக்கிறார் ஆனால் ஒன்றும் வெடிக்கிற மாதிரி இல்லை.

வெடிக்காத பட்டாசு கையில் எடுக்க வேண்டாம்

எக்காரணம் கொண்டும் வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க வேண்டாம். அவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். சில சமயங்களில் புஸ்வாணம் கூட வெடிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.
 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற திலீபனை பயங்கரவாதின்னு சொன்ன வாய்.. இப்ப இப்படி சொல்லுது. அப்ப இவரும் ஒரு பயங்கரவாதி.. அப்படித்தானே..?!

  • கருத்துக்கள உறவுகள்
On 2/6/2022 at 16:58, nedukkalapoovan said:

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற திலீபனை பயங்கரவாதின்னு சொன்ன வாய்.. இப்ப இப்படி சொல்லுது. அப்ப இவரும் ஒரு பயங்கரவாதி.. அப்படித்தானே..?!

மக்களைக் காக்கச் சிலுவை சுமந்த யேசுபிரானை அரசு அந்தச் சிலுவையிலே அறைந்தது. அது திலீபனுக்குப் பொருந்தும்.

தன் மக்களை அழிக்கப் பயங்கரவாதத்தைச் சுமக்கும் சுமந்திரனை மக்களே அந்தப் பயங்கரவாதத்தில் அறைந்து வருகிறார்கள். இது சுமந்திரனுக்குப் பொருந்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமக்கள் ......புரட்சிகர முன்னனி போல தமிழ் தேசிய கூட்டனி  புரட்சி செய்ய போயினமோ ;;;;;அடே கோதரி பிடிச்சவங்களே உலகத்தில புரட்சி ஒரு தடவை தான்வெற்றியடைந்திருக்கு அதனால் அந்த  மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.....ஆகவே சும்மா புரட்சி புண்ணாக்கு என றீல் விடாம,ல் வக்கீல் தொழிலை செய்யுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.