Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு... வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக... டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாதுகாப்புத் தலைவர்களைச் சந்தித்த பிறகு  கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறுகிறார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு... வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜூலை 9 போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கையின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் இருந்த ராஜபக்சே, காலையில் முப்படைத் தளபதிகளைச் சந்தித்துவிட்டு இன்று நாட்டை விட்டு வெளியேறினார்.

ஜூலை 13-ம் தேதி அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்கிறார், அதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தற்காலிக காலத்திற்கு அதிபராக பதவியேற்கிறார். (ஜமிலா ஹுசைன்)

https://www.dailymirror.lk/top_story/GR-leaves-the-country-after-meeting-defence-leaders/155-240856

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி நாட்டை விட்டு செல்லவில்லை : நான் தவறுதலாக கூறிவிட்டேன்- சபாநாயகர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு செல்லவில்லையென சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் .

No description available.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள நாடொன்றில் இருக்கின்றார் என பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ள சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன ஜனாதிபதி புதன்கிழமை நாடு திரும்புவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு செல்லவில்லை, அவர் நாட்டில் தான் இருக்கிறார் நான் தவறுதலாகக் கூறிவிட்டதாக ஏ.என்.ஐ. என்ற இந்திய செய்திச் சேவைக்கு மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி நாட்டை விட்டு செல்லவில்லை : நான் தவறுதலாக கூறிவிட்டேன்- சபாநாயகர் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்கு கொரோனாவே காரணம் – சபாநாயகர்

ஜனாதிபதி நாட்டில் இல்லை என... தான் கூறியது, தவறு என்கிறார்... சபாநாயகர் மஹிந்த  யாப்பா  !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டிலேயே இன்னும் இருக்கின்றார். பிபிசிக்கான நேர்காணலின் போது தான் தவறு செய்துவிட்டதாக  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பிபிசிக்கு வழங்கிய செய்தியில் “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டில் இல்லை அண்மைய நாடொன்றுக்கு சென்றுள்ளார், புதன்கிழமைக்கு முன் அவர்  நாடு திரும்புவார்” என தெரிவித்திருந்தார்.  எனினும் இந்திய செய்தி சேவையான ஏஎன்ஐ க்கு, தொலைப்பேசி ஊடாக வழங்கிய நேர்காணலில் தான் கூறிய  கருத்தை   மறுத்துள்ளார்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

ஜனாதிபதி கோட்டா தொடர்பாக... சபாநாயகர் வெளியிடுவதே, உண்மையான செய்தி – ஜனாதிபதி அலுவலகம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செய்திகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மட்டுமே வெளியிடுவார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் அறிவித்தபடி பதவி விலகுவதாக ஜனாதிபதி பிரதமருக்கு தெரியப்படுத்தியதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1290733

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்

Published by Rajeeban on 2022-07-11 20:29:11

 
 

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிலேயே உள்ளார் இன்று காலை முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார் என தெரியவருவதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

9ம் திகதி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இலங்கையின் கடற்பரப்பிற்குள் கடற்படை கலத்தில் தங்கியிருந்த ஜனாதிபதி இன்றுநாடு திரும்பியுள்ளார் முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்.

gota111.jpg

13ம் திகதி பதவியை இராஜினாமா செய்யவுள்ள ஜனாதிபதி பின்னர் வெளிநாட்டிற்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி நாட்டில் இல்லை என... தான் கூறியது, தவறு என்கிறார்... சபாநாயகர் மஹிந்த  யாப்பா  !

இவர் தற்காலிக ஜனாதிபதியாக வந்து தமிழீழத்தை பிரித்துக்கொடுப்பதாக அறிவிக்கவும் கூடும்!🤪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

இவர் தற்காலிக ஜனாதிபதியாக வந்து தமிழீழத்தை பிரித்துக்கொடுப்பதாக அறிவிக்கவும் கூடும்!🤪

பிறகு… தான், தமிழீழத்தை தவறாக பிரித்துக் கொடுத்து விட்டேன் என்று சொன்னால்….. 😂

18 minutes ago, கிருபன் said:

இவர் தற்காலிக ஜனாதிபதியாக வந்து தமிழீழத்தை பிரித்துக்கொடுப்பதாக அறிவிக்கவும் கூடும்!🤪

பிறகு மறந்து போனேன் என்பார்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

1 hour ago, கிருபன் said:

இவர் தற்காலிக ஜனாதிபதியாக வந்து தமிழீழத்தை பிரித்துக்கொடுப்பதாக அறிவிக்கவும் கூடும்!🤪

😂 தமிழீழம் கொடுக்கலாம் என்று  நான் கூறியது தவறு. ஆகவே நாட்டை பிரித்து கொடுக்க முடியாது என்று பின்பு அறிவிக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

பிறகு… தான், தமிழீழத்தை தவறாக பிரித்துக் கொடுத்து விட்டேன் என்று சொன்னால்….. 😂

சிங்களம் ஓமெண்டு  குடுத்தாலும் எங்கடை ஆட்கள் ஒமெண்ட வேணுமே?🤣

ஐக்கிய ஐக்கியம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

சிங்களம் ஓமெண்டு  குடுத்தாலும் எங்கடை ஆட்கள் ஒமெண்ட வேணுமே?🤣

ஐக்கிய ஐக்கியம் :cool:

சுமா ஜனாதிபதியாகட்டும் ….

ஜேர்மனிக்கு ஒரு நாடு கடத்தல் கோரிக்கையை அனுப்பி……

கொண்டு போய் குடத்தனையில 6 மாசம் கட்டாய லீவில் வைத்திருக்கத்தான் இருக்கு😆.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டில் இல்லை அண்மைய நாடொன்றுக்கு சென்றுள்ளார், புதன்கிழமைக்கு முன் அவர்  நாடு திரும்புவார்” என தெரிவித்திருந்தார்.  எனினும் இந்திய செய்தி சேவையான ஏஎன்ஐ க்கு, தொலைப்பேசி ஊடாக வழங்கிய நேர்காணலில் தான் கூறிய  கருத்தை   மறுத்துள்ளார்.

இது  இலங்கையிலுள்ள எல்லா அரசியல்வாதிகளுக்கு உள்ள ஒரு வியாதி. நம்ம சுமந்திரனுக்கும் இருக்கு. கொஞ்சம் வித்தியாசம், தான் சொன்னதை ஊடகங்கள் பிழையாக விளங்கிக்கொண்டன என்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி ஈழம் கிடைத்தால் யார் தலைவர்.கெரியா ஒரு முடிவுக்கு வாங்கோ.அவகாசம் வெகு சிறிது.😁

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, சுவைப்பிரியன் said:

எல்லாம் சரி ஈழம் கிடைத்தால் யார் தலைவர்.கெரியா ஒரு முடிவுக்கு வாங்கோ.அவகாசம் வெகு சிறிது.😁

அதை கணபதி ஐயர் எல்லோ முடிவு செய்ய வேணும். நாம் ஏன் அவசரபடுவான்.

அவர்ர பேக்கரிய அவர் இரெண்டா பிரிச்சு, ரெண்டு மனேஜர் போடுவதெண்டால் - அது அவரின் முடிவு மட்டுமே😆.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

சுமா ஜனாதிபதியாகட்டும் ….

ஜேர்மனிக்கு ஒரு நாடு கடத்தல் கோரிக்கையை அனுப்பி……

கொண்டு போய் குடத்தனையில 6 மாசம் கட்டாய லீவில் வைத்திருக்கத்தான் இருக்கு😆.

நடக்கிறதை கதையுங்கோ 🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சுமா ஜனாதிபதியாகட்டும் ….

ஜேர்மனிக்கு ஒரு நாடு கடத்தல் கோரிக்கையை அனுப்பி……

கொண்டு போய் குடத்தனையில 6 மாசம் கட்டாய லீவில் வைத்திருக்கத்தான் இருக்கு😆.

இலங்கை என்றால் Holidays  மாதிரி மகிழ்ச்சியாக நின்றுவிடுவார் ரஷ்யாவில் 6 மாசம் கட்டாய லீவில் வைத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை என்றால் Holidays  மாதிரி மகிழ்ச்சியாக நின்றுவிடுவார் ரஷ்யாவில் 6 மாசம் கட்டாய லீவில் வைத்திருக்க வேண்டும்.

ரஸ்யாவில் படித்து யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் எனது நண்பியும் ரஸ்யாவில்  6 மாதம் கட்டாய லீவிலிருந்தவர்.🙃🙃🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

48 நாடுகள் முன்னிலையில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை !

நாடு திரும்பினார் கோட்டாபய?

கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டதை அடுத்து, கப்பலில் தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கரை திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஜனாதிபதி அருகிலுள்ள நாட்டிற்குச் சென்றுவிட்டார் என்று முன்னர் தெரிவித்திருந்தார்.

பின்னர் தான் தவறுதலாக அவ்வாறு கூறியதாக தெரிவித்து தனது அறிக்கையை மீளப் பெற்றிருந்தார்.

அத்தோடு நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானோர் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதை அடுத்து, பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை  ஜனாதிபதி அங்கிருந்து வெளியேறியிருந்தார்.

அதனையடுத்து அவர், இலங்கை கடற்பரப்பில் தங்கியிருந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த நிலையிலேயே, கப்பலில் தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது கரை திரும்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2022/1290883

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.