Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜோசப் ஸ்டாலின் கைது - ஐநா கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் ஸ்டாலின் கைது - ஐநா கவலை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டமை குறித்து மனித உரிமை பாதுகாவலர்கள் குறித்த ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார். 

மனித உரிமை பாதுகாவலர் ஜோசப் ஸ்டாலின் மாலை ஆறுமணிக்கு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்ற  கவலை தரும் செய்தியை இலங்கையிலிருந்து கேள்விப்படுகின்றேன்.

mary_low.jpg

ஜோசப்ஸ்டாலின் போன்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களின்  செயற்பாடுகள் முன்னர் எப்போதையும் விட சமீபவாரங்களில் மிக முக்கியமானவையாக காணப்படுகின்றன,அவற்றிற்கு ஆதரவளிக்கவேண்டும் - தண்டிக்ககூடாது என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

 

https://www.virakesari.lk/article/132844

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

 இதைவிட இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்!

3 hours ago, கிருபன் said:

ஐநாவின் விசேட அறிக்கையாளர் மேரி லோவ்லெர் கவலை வெளியிட்டுள்ளார். 

இவைக்கு என்ன நடந்தாலும் உடனை கவலை அறிக்கை. பிறகு கண்டன அறிக்கை. பிறகு மனித உரிமை மீறல் அறிக்கை. மரணவிசாரணை அறிக்கை. கடைசியாக  மரணத்தை விசாரிக்க 'விசாரணைக் குழு' அமைத்ததையிட்டு  ஐநாவின் விசேட அறிக்கையாளர் அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்து அறிக்கை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்க மறியல்!: 

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட அவர் நேற்றைய தினம் மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது இவரை விளக்க மறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் நேற்று பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/ஜோசப்-ஸ்டாலினுக்கு-விளக்/

 

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றங்கள்… கொள்ளை அடித்தவனை பாராளுமன்றத்தில் வைத்திருந்து கொண்டு,
நீதி கேட்டு… போராடியவனை கைது பண்ணுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2022 at 03:08, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

அது எங்கட கதிர்காமர் ஐயா வெளியுறவுத்துறை அமைச்சரா இருக்கேக்க விட்ட எச்சரிக்கை எல்லோ!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அது எங்கட கதிர்காமர் ஐயா வெளியுறவுத்துறை அமைச்சரா இருக்கேக்க விட்ட எச்சரிக்கை எல்லோ!

ஓம். யார் சொன்னாலும் ஐ நாவுக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

நம்ம கதிர்காமர் திருவாய் மலர்ந்தருளியது அது. ஐ. நா. நுளம்புக்கு மருந்தடிப்பதோடு தன் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் என்றால் பாருங்கோவேன் நம்மட ஆளின்ர திமிரை!

On 4/8/2022 at 17:08, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

மற்றவர்களுக்காக கவலைப்படுவதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சபை. 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

 

28 minutes ago, nunavilan said:

ஓம். யார் சொன்னாலும் ஐ நாவுக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

 

19 minutes ago, satan said:

நம்ம கதிர்காமர் திருவாய் மலர்ந்தருளியது அது. ஐ. நா. நுளம்புக்கு மருந்தடிப்பதோடு தன் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் என்றால் பாருங்கோவேன் நம்மட ஆளின்ர திமிரை!

மற்றவர்களுக்காக கவலைப்படுவதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சபை. 

இதை விட... கேவலமாக வேறு நாட்டுக்காரன், ஐ.நா. வை சொல்லியிருக்க மாட்டான். 😂
அப்படியிருந்தும், சுரணை வரவில்லையே... 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

இப்ப அதுக்கும் லாயக்கில்லை. கொரோனா பின்னியெடுத்துட்டுது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஐ.நா நுழம்புக்கு மருந்து அடிக்கத்தான் லாயக்கு என்றது தான் நினைவுக்கு வருகிறது.

 

அதுக்கு கூட  இப்ப நல்லா மருந்து  அடிப்பவர்கள்  வந்து  விட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

(எம்.நியூட்டன்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

IMG-20220805-WA0007.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. 

IMG-20220805-WA0008.jpg

மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைதைக் வன்மையாக கண்டிக்கிறோம், ஜோசப் ஸ்டாலின் உட்பட ஜனநாயகப் போராட்ட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் உடன் விடுதலை செய், ஸ்ரீலங்கா அரசின் பாசிசவாதத்தை எதிர்த்து நாம் தொடர்ந்தும் போராடுவோம் போன்ற பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

IMG-20220805-WA0003.jpg

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

IMG-20220805-WA0004.jpg

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக ஓகஸ்ட் 3ம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 4ம் திகதி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் கைதைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு எதிராக வலுத்த ஆசிரியர்களின் திடீர் போராட்டம்

  • யு.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

ஜோசப் ஸ்டாலின்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 28ஆம் தேதி நீதிமன்ற உத்தரவை மீறி, ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், நேற்று முன்தினம் ஜோசப் ஸ்டாலினை பொலிஸார் கைது செய்தனர்.

அரசாங்கத்துக்கு எதிரான 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தின் 50ஆவது தினத்தையொட்டி, கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் ஜோசப் ஸ்டாலின் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஜோசப் ஸ்டாலின் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

பல முனைகளில் எதிர்ப்பு

இந்த நிலையில் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் காப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

 

ஜோசப் ஸ்டாலின்

'ஜோசப் ஸ்டாலின் போன்ற மனித உரிமை பாதுகாவலர்களின் பணி, முன்னெப்போதையும் விடவும் சமீப வாரங்களில் முக்கியமானது' என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மேரி லோலர்; 'மனித உரிமைப் பாதுகாவலர்களின் இத்தகைய செயல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமேயொழிய, தண்டிக்கப்படக் கூடாது' எனவும் தெரிவித்துள்ளார்.

ஜோசப் ஸ்டாலின் கைது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், "அரசாங்கத்துக்கு எதிரான போட்டங்களை வழிநடத்திய தலைவர்களை தற்போது அரசாங்கம் வேட்டையாடுகிறது," என்றார்.

"கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் - முன்னிலையிலிருந்து செயற்படுகின்றதொரு தொழிற்சங்க வீரர். அவரைக் கைது செய்தமையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படியான கைதுகள் மூலம், தற்போதைய பொருளாதார பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது" எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. ராதாகிருஷ்ணன், இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

"ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது; ஜோசப் ஸ்டாலினை கைது செய்யப் கூடாது என்றார். ஸ்டாலினை கைது செய்தால் அல்லது அவரின் போராட்டத்தை அச்சுறுத்தினால், இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கும் ஜஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்றில் ரணில் கூறினார். ஆனால், அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் ஸ்டாலினை கைது செய்துள்ளார்" என தெரிவித்தார்.

கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்

 

ஜோசப் ஸ்டாலின்

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிக்குமாறு கோரியும், நாட்டின் பல பாகங்களிலும் நேற்றைய தினம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறன ஆர்ப்பாடங்கள் இடம்பெற்றன.

கொழும்பு - கோட்டே ரயில் நிலையத்துக்கு முன்பாகவும் தொழிற்சங்கங்கள் இணைந்து, ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டன.

ஜோசப் ஸ்டான் கைது செய்யப்பட்டமை அரச பயங்கரவாதச் செயற்பாடு எனத் தெரிவித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தமது செயலாளரை விடுவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு எதிராக விமர்சனம்

இது இவ்வாறிருக்க, ஜோசப் ஸ்டாரின் கைது விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கோரமான இரட்டை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார் என, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான அஸீஸ் நிஸாருத்தீன் தெரிவித்துள்ளார்.

"கடந்த மே மாதம் 28ஆம் தேதி 'அரகலய' (போராட்டம்) 50ஆம் நாள் நிறைவையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை காரணம் காட்டி, இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சமன் ரத்னபிரிய என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியொன்றை வழங்கியுள்ளார்," என அஸீஸ் நிஸாருத்தீன் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜோசப் ஸ்டாலின்

"சமன் ரத்னப்பிரிய என்பவர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் சுகாதார தொழிற் சங்கத் தலைவாராக உள்ளார்.

இவர் சில தினங்களுக்கு முன்னா் ரணில் விக்ரமசிங்கவினால், 'ஜனாதிபதி தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம்' எனும் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோசப் ஸ்டாலினை கைது செய்துள்ள ரணிலின் காவல்துறை, ரத்ன பிரியவையும் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு உயர் பதவி ஒன்றை ரணில் வழங்கினார்.

இது தவிர, கொரோனா காலத்தில் 2021ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டம் செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் - அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தில் கைது செய்யப்பட்ட போது, ரணில் கொதித்தெழுந்தார். ஜோசப் ஸ்டானின் கைதுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினார்.

'ஜோசப் போன்றவா்களை கைது செய்வதால் இந்நாட்டுக்கு சா்வதேசத்தின் உதவிகள் கிடைக்காமல் போகும், ஜிஎஸ்பி பிளஸ் சலுகையும் இல்லாமல் போகும் என்று நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு- கோட்டா அரசாங்கத்தை கடுமையாக ரணில் விமர்சித்தார்.

ஆனால் அவரே தற்போது பிரபல தொழிற் சங்கவாதியான ஜோசப் ஸ்டாலினை கைது செய்து - ஜனநாயகத்துக்கு எதிராக தனது மற்றுமொரு நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளார்" என, அஸீர் நிஸாருத்தீன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை போராட்டம்

'அரகலய'வின் (போராட்டத்தின்) புண்ணியத்தால் - தந்திரமாக ஆட்சியைப் பிடித்துக் கொண்ட ரணில், பதவிப் பித்து தலைக்கேறி செயற்பட்டு வருகிறார் எனக் குறிப்பிட்டுள்ள நிஸாருத்தீன்; "நிறைவேற்று அதிகாரம் ரணிலுக்கு கிடைத்திருப்பது குரங்கின் கைக்கு கத்தி ஒன்று கிடைத்ததற்கு ஒப்பானதாகும்" எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஜோசப் ஸ்டாலினை கைது செய்திருப்பதன் மூலம், ரணிலின் இரட்டை கோர முகமும், அவரின் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் நாளுக்கு நாள் அம்பலத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் நிஸாருத்தின் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கம்

இலங்கை ஆசிரியர் சங்கம் 1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக ஜயந்த பெனாண்டோ என்பவரும், பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலினும் பணியாற்றி வருகின்றனர்.

இலங்கை ஆசியர் சங்கமானது ஆசிரியர் நலன்களுக்காக உழைப்பதோடு நின்றுவிடாமல், இலங்கையிலுள்ள அரச ஊழியர்களின் தொழிற் சங்கங்களுடன் இணைந்து, அவர்களின் நலன்களுக்காகவும் பணியாற்றி வருவதாக, அச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ. அபாஜுல்பான் கூறுகிறார்.

"இலங்கை மக்களின் நலன்களுக்காக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கை ஆசிரியர் சங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆனால், எமது சங்கம் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதது" எனவும் அபாஜுல்பான் குறிப்பிட்டார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-62440444

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது; ஜோசப் ஸ்டாலினை கைது செய்யப் கூடாது என்றார். ஸ்டாலினை கைது செய்தால் அல்லது அவரின் போராட்டத்தை அச்சுறுத்தினால், இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கும் ஜஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்றில் ரணில் கூறினார். ஆனால், அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் ஸ்டாலினை கைது செய்துள்ளார்" என தெரிவித்தார்.

அது வேற வாய். இது நாறல் வாய்..
சிறையில் வாடும் தமிழ் கைதிகளை விடுவிப்பேன் என்பதும் இதே போல் ஒரு சுத்துமாத்து தான்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

அது வேற வாய். இது நாறல் வாய்..
சிறையில் வாடும் தமிழ் கைதிகளை விடுவிப்பேன் என்பதும் இதே போல் ஒரு சுத்துமாத்து தான்.

இவர் கடந்த இரண்டு மாதத்தில் கூறிய அத்தனை கருத்துக்களும்…
ஜனாதிபதி ஆகியவுடன், நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இவரைப் பற்றி நன்கு தெரிந்த, “முதுகு எலும்பு இல்லாத, கூட்டமைப்பும்”…
மீண்டும் மீண்டும்…. இவர் விரித்த வலையில் போய் விழுகுது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

சுரணை வரவில்லையே

அவர்களிடம் அது இருந்தாற்தானே வருவதற்கு?

3 hours ago, nunavilan said:

விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது; ஜோசப் ஸ்டாலினை கைது செய்யப் கூடாது என்றார். ஸ்டாலினை கைது செய்தால் அல்லது அவரின் போராட்டத்தை அச்சுறுத்தினால், இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கும் ஜஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்றில் ரணில் கூறினார். ஆனால், அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் ஸ்டாலினை கைது செய்துள்ளார்" என தெரிவித்தார்.

பதவி பெறும்வரை பணிவு, பெருந்தன்மை. அது வந்துவிட்டால் அதை தக்க வைப்பதற்கு அதிகாரத்தை பயன்படுத்துவார்கள். ஸ்ராலினை கைது செய்வதன் மூலம் ஆசிரியர் மாணவர்களை போராட்டத்திலிருந்து விலகியிருக்கச் செய்தல், ஆனால் இவர்களின் செயற்பாடு எல்லோரையும் சினமடையச் செய்து நிலைமையை மோசமாக்கும் என்பதை உணர பதவிஆசை விடாது.

உண்மையான குற்றவாளிகளை கைது, செய்து நீதியை நிலை நாட்டியிருந்தால் நாட்டுக்கு இந்தநிலை வந்திராது. நீதியின் குரலை நசுக்குகின்ற செயற்பாடுகளையே கையறுந்த நீதிமன்றங்கள் செய்கின்றன. அதை விமர்சிப்பதை அதுவும் தண்டிக்கிறது, தன்னை திருத்திக்கொள்ள மறுக்கிறது. எங்கே முறையிடுவது? அங்கும் ஊழல், எங்கும் ஊழல். குற்றவாளிகளை காப்பாற்ற, அப்பாவிகளை தண்டிக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்
On 4/8/2022 at 03:08, தமிழ் சிறி said:

ஐ.நா. கவலைப் படுவதை பார்க்க, எனக்கும் சரியான கவலையாய் இருக்கு. 😢

நான் அறிய 45 வருசமா கவலைப்பட்டு அறிக்கை விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்....சந்தோசமான் அறிக்கை இது வரை விடவில்லை 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.