Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

 

‘அறகலய’ போராட்டத்தின் போது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னணி வர்த்தகர்கள் உட்பட சுமார் எண்பது பேர் பல்வேறு வழிகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற இவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு தரப்பினர் தற்போது ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களை கைது செய்வதற்கு இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு அமைப்புகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி தூதரகங்களில் தவறான தகவல்களை சமர்ப்பித்து சிலர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்ட கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தியதை அடுத்து அவர் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மேலும் 200 பேர் வெளிநாடு செல்வதற்காக தூதரகங்களில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/205147

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nunavilan said:

போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

நாட்டை கொள்ளை அடித்தவர்கள் மீது, ஒரு நடவடிக்கையும் இல்லை.
அவர்கள்... சர்வசாதாரணமாக, பாராளுமன்றத்துக்குள் கூட உலா வருகின்றார்கள்.
நீங்கள்... ஒழுங்காக, இருந்திருந்தால்... அவர்கள் ஏன் போராடப்  போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 80 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

அதுதான் பெரிய கள்வன் நாட்டுக்குள் வந்து இறங்கிட்டாரே,பிறகு சின்னக்கள்வர்கள் இருந்து என்ன செய்வது. வந்திட்டான்யா வந்திட்டான்.நேத்து கோத்தா கெத்தா ஆவா.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

நாட்டை கொள்ளை அடித்தவர்கள் மீது, ஒரு நடவடிக்கையும் இல்லை.
அவர்கள்... சர்வசாதாரணமாக, பாராளுமன்றத்துக்குள் கூட உலா வருகின்றார்கள்.
நீங்கள்... ஒழுங்காக, இருந்திருந்தால்... அவர்கள் ஏன் போராடப்  போகிறார்கள்.

இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளாவன:

1.தமிழர்களை அழித்தல், கடத்துதல், சிறையிலடைத்தல், கொலைசெய்தல், காணாமலாக்குதல்.

2.தமிழர்களது சொத்துகளைச் சூறையாடுதல் மற்றும் அழித்தல்.

3.தமிழர்களது நிலங்களை அபகரித்தல்.

4.தமிழர்களது நிலங்களில் பாதுகாப்புப் போர்வையில் படைத்தளம் அமைத்து நிலஆக்கிரமிப்புச் செய்தல்.

5.தமிழர் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வேண்டிப் பணத்தைக் கொடுக்காதுவிடல். 

6.வாய்ப்புக் கிடைக்கும்போது தமிழ்ப் பெண்களைப் பாலியல் துட்பிரயோகம் செய்தல்

7.ஒட்டுக்குழுக்களை உருவாக்குதலும், பாதுகாத்தலும்.

8.சைவ ஆலயங்களை அபகரித்துப்  புத்தவிகாரைகட்டப் பாதுகாப்பளித்தல்.

9.புத்த பிக்குகள் தமிழர் நிலங்களை அபகரித்துப் புத்தவிகாரைகட்டப் பாதுகாப்பளித்தல்.

10.தமிழர் பகுதிகளில் புத்தவிகாரைகட்டுதல்.

11.தமிழர்களைப் பூர்வீக நிலங்களில் இருந்து கலைத்துவிட்டு பண்ணைகளை    அமைத்து விவசாயம் செய்தல்.

12.தமிழ்ப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையை ஊக்குவித்தல்.

13.வாள்வெட்டு, களவு  போன்ற குமுகச் சீரழிவுகளை ஊக்குவித்தல்.

14.தமிழர்களுக்கு எதிரான தமிழர்கள் மற்றும் அரசியல்வாதிகளைப் பாதுகாத்தல்.

15.மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து சுகபோகமாகவாழும் அரசியல்வாதிகளைப் பாதுகாத்தலும், அவர்களது ஏவல்களை நிறைவேற்றுதலும்.

16.கொல்லப்படும் தமிழர் எண்ணிக்கைக்கேற்ப பதவி உயர்வுகளும் சலுகைகளுக்குமான உரிமை.

17.அதிகாரிகளாயின், அவர் தலைமையில் கொல்லப்படும் தமிழர் எண்ணிக்கைக்கேற்பத்  தூதுவர் பதவி மற்றும் சிறப்புப் பதவிகளும் சலுகைகளும்.

18.அரசுத் தலைமைகளை ஊழல், அரச நிதிக்கையாடல் என்று அவனை சிங்களவரே எதிர்த்தாலும் அவர்கள் மீதும் தாக்குதல் நடாத்துதல், காணாமலாக்குதல், கொல்லுதல்.

19.அரசினது ஊழல்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களைக் கொல்லுதல் மற்றும் காணாமலாக்குதல்.

20.அரச ஆதரவுக் குண்டர்களைப் பாதுகாத்தல்.                              

இப்படியான ஒழுக்கக் கோவையைப் பின்பற்றும் படைகளிடம் நீங்கள் இதை எதிர்பார்க்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

நாட்டை கொள்ளை அடித்தவர்கள் மீது, ஒரு நடவடிக்கையும் இல்லை.
அவர்கள்... சர்வசாதாரணமாக, பாராளுமன்றத்துக்குள் கூட உலா வருகின்றார்கள்.
நீங்கள்... ஒழுங்காக, இருந்திருந்தால்... அவர்கள் ஏன் போராடப்  போகிறார்கள்.

ஐயோ..... ஐயோ ......  நீங்கள் ஒன்று சிறியர்! அவர்களெல்லாம் சர்வதேச கொள்ளைக்காரர், அவர்களின் சுரண்டல் சொத்தெல்லாம் நாட்டுக்கு வெளியே பதுங்கியிருக்கு, அவர்களை சாதாரணமாக கைது செய்து விட முடியாது. அவர்களை பாதுகாக்க வேண்டுமென்றால் இவர்களுக்கு பின்னல் நா வரல ஓடவேண்டும் இலங்கை பாதுகாப்பு படை. கள்ளனுக்கு மாலையும் வரவேற்பும், தட்டிக்கேட்டவனுக்கு கைதும் சிறையும்.  உலகில் வேறெங்காவது கேட்டிருப்பீர்களா இத்தகைய புதுமையான செய்தியை?

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை விட்டு ஓடவே அனைவரும் விரும்புவதாக தெரிகிறது பாண் ஒன்றின விலை 300 ரூபாயாக அதிகரிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

அறகலய’ போராட்டத்தின் போது பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்னணி வர்த்தகர்கள் உட்பட சுமார் எண்பது பேர் பல்வேறு வழிகளில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நாட்டை விட்டு ஓடவே அனைவரும் விரும்புவதாக தெரிகிறது பாண் ஒன்றின விலை 300 ரூபாயாக அதிகரிக்கிறது

ஓஓ .....! பாண் வாங்க வழியில்லாமல் ஓடுபவர்களையா இப்படி சொல்கிறார்கள் பாவம்? நாட்டின் வங்குரோத்து தன்மையை மறைக்க இப்படி ஒரு விளக்கமா? பின்ன, வெக்கம் வராதா என்ன? இந்த லட்ஷணத்தில மக்களை கொள்ளையடிச்சவனுகளுக்கெல்லாம் சிறப்புரிமை!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 

ஓஓ .....! பாண் வாங்க வழியில்லாமல் ஓடுபவர்களையா இப்படி சொல்கிறார்கள் பாவம்? நாட்டின் வங்குரோத்து தன்மையை மறைக்க இப்படி ஒரு விளக்கமா? பின்ன, வெக்கம் வராதா என்ன? இந்த லட்ஷணத்தில மக்களை கொள்ளையடிச்சவனுகளுக்கெல்லாம் சிறப்புரிமை!

அழகிய மாம்பழம் போன்ற தீவு என்று அதனது வரைபடத்தை பதியவைக்க 3ஆம் 4ஆம் வகுப்பிலை வாத்தியார் சொல்லுவார். இப்ப அது தமிழின அழிப்பாலும், அரச, அரசியல் கொள்ளையர்களாலும் அழுகிய மாம்பழம்போலாகிவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நாட்டை விட்டு ஓடவே அனைவரும் விரும்புவதாக தெரிகிறது பாண் ஒன்றின விலை 300 ரூபாயாக அதிகரிக்கிறது

தனிக்காட்டு ஐயா பாணின்  நிறையையும் சேர்ந்து பதிவு இடுங்கள்.  500 கிராம் 1000 கிராம். அல்லது 1 கிலோகிராம் 😄. முன்பு அரை இறாத்தல் என்று தட்டையாகப். பாண் இருந்தது   எந்தப் பாண். 300ரூபாவால். அதிகரிப்பு 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kandiah57 said:

தனிக்காட்டு ஐயா பாணின்  நிறையையும் சேர்ந்து பதிவு இடுங்கள்.  500 கிராம் 1000 கிராம். அல்லது 1 கிலோகிராம் 😄. முன்பு அரை இறாத்தல் என்று தட்டையாகப். பாண் இருந்தது   எந்தப் பாண். 300ரூபாவால். அதிகரிப்பு 

450 கிராம் நிறையுடைய பாண் 300ரூபாவிற்கு விற்கவேண்டியுள்ளதாக சொல்கிறார்கள், இதற்குக் காரணம் கோதுமை மாவின் விலையேற்றமும் தட்டுப்பாடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி என்ற போர்வையில்..மில்லியன் கணக்கான டொலர் அடித்தவனே நாட்டிற்கு திரும்ப வரும்போது...போராட்டம் செய்தவன் ..பெரும் குற்றமா செய்தவன்...காசு வருமட்டும் கண் துடைப்பு நாடகம்தான்..நம்ம புலம்பெயர்ஸ்  சுற்றுலா வருமானமே 400 மில்லியன் டொலராமே.....

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nochchi said:

இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளாவன:

1.தமிழர்களை அழித்தல், கடத்துதல், சிறையிலடைத்தல், கொலைசெய்தல், காணாமலாக்குதல்.

2.தமிழர்களது சொத்துகளைச் சூறையாடுதல் மற்றும் அழித்தல்.

3.தமிழர்களது நிலங்களை அபகரித்தல்.

4.தமிழர்களது நிலங்களில் பாதுகாப்புப் போர்வையில் படைத்தளம் அமைத்து நிலஆக்கிரமிப்புச் செய்தல்.

5.தமிழர் வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வேண்டிப் பணத்தைக் கொடுக்காதுவிடல். 

6.வாய்ப்புக் கிடைக்கும்போது தமிழ்ப் பெண்களைப் பாலியல் துட்பிரயோகம் செய்தல்

7.ஒட்டுக்குழுக்களை உருவாக்குதலும், பாதுகாத்தலும்.

8.சைவ ஆலயங்களை அபகரித்துப்  புத்தவிகாரைகட்டப் பாதுகாப்பளித்தல்.

9.புத்த பிக்குகள் தமிழர் நிலங்களை அபகரித்துப் புத்தவிகாரைகட்டப் பாதுகாப்பளித்தல்.

10.தமிழர் பகுதிகளில் புத்தவிகாரைகட்டுதல்.

11.தமிழர்களைப் பூர்வீக நிலங்களில் இருந்து கலைத்துவிட்டு பண்ணைகளை    அமைத்து விவசாயம் செய்தல்.

12.தமிழ்ப் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையை ஊக்குவித்தல்.

13.வாள்வெட்டு, களவு  போன்ற குமுகச் சீரழிவுகளை ஊக்குவித்தல்.

14.தமிழர்களுக்கு எதிரான தமிழர்கள் மற்றும் அரசியல்வாதிகளைப் பாதுகாத்தல்.

15.மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து சுகபோகமாகவாழும் அரசியல்வாதிகளைப் பாதுகாத்தலும், அவர்களது ஏவல்களை நிறைவேற்றுதலும்.

16.கொல்லப்படும் தமிழர் எண்ணிக்கைக்கேற்ப பதவி உயர்வுகளும் சலுகைகளுக்குமான உரிமை.

17.அதிகாரிகளாயின், அவர் தலைமையில் கொல்லப்படும் தமிழர் எண்ணிக்கைக்கேற்பத்  தூதுவர் பதவி மற்றும் சிறப்புப் பதவிகளும் சலுகைகளும்.

18.அரசுத் தலைமைகளை ஊழல், அரச நிதிக்கையாடல் என்று அவனை சிங்களவரே எதிர்த்தாலும் அவர்கள் மீதும் தாக்குதல் நடாத்துதல், காணாமலாக்குதல், கொல்லுதல்.

19.அரசினது ஊழல்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களைக் கொல்லுதல் மற்றும் காணாமலாக்குதல்.

20.அரச ஆதரவுக் குண்டர்களைப் பாதுகாத்தல்.                              

இப்படியான ஒழுக்கக் கோவையைப் பின்பற்றும் படைகளிடம் நீங்கள் இதை எதிர்பார்க்கலாமா?

நன்றி ஐயா நன்றி உங்கள் கருத்துக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

நன்றி ஐயா நன்றி உங்கள் கருத்துக்கு .

நன்றி., தமிழினத்திற்கு இயற்கையாகவே மறதிக்குணம் கூட உலாவுவது சிறப்பம்சமென்று நினைக்கின்றேன். தாயகம் சென்றுவரும் அன்பர்களிடம் கேளுங்கள். சுப்பரா இருக்காம். யூரோவை உரூபாய்க்கு மாத்திவிசுக்குவதால் இருக்கலாம். இலங்கைப் படைகளின் இந்த மனிதாபிமானத்தை நினைவூட்டுதல் அவசியமானதென்று நினைத்தேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nochchi said:

நன்றி., தமிழினத்திற்கு இயற்கையாகவே மறதிக்குணம் கூட உலாவுவது சிறப்பம்சமென்று நினைக்கின்றேன். தாயகம் சென்றுவரும் அன்பர்களிடம் கேளுங்கள். சுப்பரா இருக்காம். யூரோவை உரூபாய்க்கு மாத்திவிசுக்குவதால் இருக்கலாம். இலங்கைப் படைகளின் இந்த மனிதாபிமானத்தை நினைவூட்டுதல் அவசியமானதென்று நினைத்தேன்.  

மீண்டும் நன்றி தலைவரே .

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2022 at 14:38, Kandiah57 said:

தனிக்காட்டு ஐயா பாணின்  நிறையையும் சேர்ந்து பதிவு இடுங்கள்.  500 கிராம் 1000 கிராம். அல்லது 1 கிலோகிராம் 😄. முன்பு அரை இறாத்தல் என்று தட்டையாகப். பாண் இருந்தது   எந்தப் பாண். 300ரூபாவால். அதிகரிப்பு 

சரியான நிறையில் பாண் இல்லை ஆனால் விலை மட்டும் சரியாக இருக்கும் அந்த கால அரை இறாத்தல் கால் இறாத்தல் பாண் இல்லை

On 4/9/2022 at 14:56, ஏராளன் said:

450 கிராம் நிறையுடைய பாண் 300ரூபாவிற்கு விற்கவேண்டியுள்ளதாக சொல்கிறார்கள், இதற்குக் காரணம் கோதுமை மாவின் விலையேற்றமும் தட்டுப்பாடும்.

தற்போத 430 ரூபா ஒரு கிலோ என்று சொல்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.