Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்!

10-20.jpg

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் எப்போதும் தனித்து நிற்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமான அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேற்று (புதன்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது, உக்ரைனுக்கு அதிநவீன பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உட்பட மேலும் 2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான இராணுவ உதவிகளுக்கான தொகுப்பினை பைடன் உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பைடன், ‘சர்வதேச கூட்டணியை ஒன்றாக வைத்திருப்பது பற்றி எந்தக் கவலையும் இல்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இந்த கொடூரமான போரை நிறுத்தும் எண்ணம் இல்லை’ என கூறினார். அமெரிக்காவின் ஆதரவுக்கு தனது நன்றியைத் ஸெலென்ஸ்கி, தெரிவித்தார்.

உக்ரைனின் மிக முக்கியமான நட்பு நாடாக, அமெரிக்கா ஏற்கனவே 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மனிதாபிமான, நிதி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளது. இது மற்ற எந்த நாட்டையும் விட அதிகம்.

எங்கள் மதிப்புகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க எங்களுக்கு உதவ உக்ரைனுக்கு காங்கிரஸ் கூடுதல் 45 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று ஸெலென்ஸ்கி, நம்பிக்கை தெரிவித்தார்.

குடியரசுக் கட்சியினர் ஜனவரியில் பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவார்கள். ஆனால், உக்ரைனுக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என எச்சரித்துள்ளனர். காங்கிரஸில் மாற்றங்கள் இருந்தாலும், தனது நாட்டிற்கு இரு கட்சி ஆதரவு இருக்கும் என்று நம்புவதாக ஸெலென்ஸ்கி, கூறினார்.

வெள்ளை மாளிகை கூட்டத்திற்குப் பிறகு, 44 வயதான உக்ரைனிய ஜனாதிபதி காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றினார், அங்கு அவர் கைத்தட்டலுடன் வரவேற்கப்பட்டார்.

அவர் அமெரிக்க சட்டமியற்றுபவர்களிடம் தனது நாடு இன்னும் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக நிற்கிறது என்றும் அடுத்த ஆண்டு மோதலில் திருப்புமுனை என்றும் கணித்தார்.

உக்ரைன் ஒருபோதும் சரணடையாது என்று உறுதியளித்தாலும், அதற்கு மேலும் ஆயுதங்கள் தேவை என அவர் கூறினார். ‘ரஷ்ய இராணுவம் முழுமையாக வெளியேற, மேலும் பீரங்கி மற்றும் குண்டுகள் தேவை,’ என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு உதவித் தொகுப்பில் ஒரு புதிய பேட்ரியாட் ஏவுகணை அமைப்பு உள்ளது, இது உக்ரைன் தனது நகரங்களை ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களில் இருந்து பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

https://akkinikkunchu.com/?p=233185

 

  • Replies 54
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ரஷ்யாவுக்கு வெளிச்சம் தெரியவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ரஷ்யாவுக்கு வெளிச்சம் தெரியவில்லை 

புட்டினின் வெளிச்சம் 2024 இல் வரலாம்!

அமெரிக்க சமூகத்தை, குறிப்பாக வாக்காளர்களை, சிவப்பு- நீலம் எனப் பிரித்து வைக்கும் சில விடயங்கள் இருக்கின்றன: ஒரு பால் மணம், பால்மாற்றம், பால் சமத்துவம், துப்பாக்கி வைத்திருக்கும் சுதந்திரம், மத சுதந்திரம் (ஆனால், எல்லா மதங்களுக்குமல்ல, கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமான சுதந்திரம்!😂) - இவையெல்லாம் ரஷ்ய பொற் (bot) களால் இனி சமூக ஊடகங்களில் கிளறப்படும்.

2016 இல் போலவே, இவை மூலம் ட்ரம்பை வெல்ல வைக்க ரஷ்ய நகரங்களின் மூலைகளில் ஒளிந்திருந்து முயல்வர். ட்ரம்பிற்கு வெல்வது மட்டும் தானே முக்கியம்? அவரும் பயன்படுத்திக் கொண்டு வெல்ல முயல்வார்!

எனவே, 2024 வரை புட்டின் போரை இழுப்பார், உக்ரைன் நகரங்கள் தாக்கப் படும். இதை எதிர்பார்த்துத் தான் பேட்றியாற்றை இப்பவே கொடுத்து விட்டார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் தொடங்கி 10 மாதங்களாகிறது. உக்ரேனுக்கு இன்றுவரை அழிவுகள் தான் மிச்சம். ரஷ்யா தனக்கு எது தேவையோ அதை பிடித்து வைத்திருக்கிறது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் இது வரைக்கும் ஆயுதங்களையும் பணத்தையும் உக்கல் உக்ரேனுக்கு கொடுத்ததுதான் மிச்சம். இப்போதும் பல இடங்களில் மின்சாரமும் இல்லை. எரிபொருளும் இல்லை.
மாண்புமிகு  அதி உத்தம புட்டின் ஐயாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதலை நிறுத்தலாமே ஒழிய வெல்ல முடியாது.😎 என்ன புது ரக ஆயுதங்களை உக்ரேனுக்கு கொடுத்தும் கோமாளி செலென்ஸ்கியின் இழப்புகளை  தடுக்க முடியாது.

வியாபார மேற்குலகின் முகத்திரையை கிழிக்கும்  மதிப்பிற்குரிய புட்டின் நாமம் வாழ்க.💪🏼

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Justin said:

புட்டினின் வெளிச்சம் 2024 இல் வரலாம்!

அமெரிக்க சமூகத்தை, குறிப்பாக வாக்காளர்களை, சிவப்பு- நீலம் எனப் பிரித்து வைக்கும் சில விடயங்கள் இருக்கின்றன: ஒரு பால் மணம், பால்மாற்றம், பால் சமத்துவம், துப்பாக்கி வைத்திருக்கும் சுதந்திரம், மத சுதந்திரம் (ஆனால், எல்லா மதங்களுக்குமல்ல, கிறிஸ்தவ மதத்திற்கு மட்டுமான சுதந்திரம்!😂) - இவையெல்லாம் ரஷ்ய பொற் (bot) களால் இனி சமூக ஊடகங்களில் கிளறப்படும்.

2016 இல் போலவே, இவை மூலம் ட்ரம்பை வெல்ல வைக்க ரஷ்ய நகரங்களின் மூலைகளில் ஒளிந்திருந்து முயல்வர். ட்ரம்பிற்கு வெல்வது மட்டும் தானே முக்கியம்? அவரும் பயன்படுத்திக் கொண்டு வெல்ல முயல்வார்!

எனவே, 2024 வரை புட்டின் போரை இழுப்பார், உக்ரைன் நகரங்கள் தாக்கப் படும். இதை எதிர்பார்த்துத் தான் பேட்றியாற்றை இப்பவே கொடுத்து விட்டார்கள். 

 

இந்த உண்மை  அல்லது அரசியல்

அமெரிக்க  மக்களுக்கு  தெரியாதா???

அவ்வளவு  முட்டாள்தனமாக  வாக்களிக்கும் கூட்டமா  அது???

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

 

இந்த உண்மை  அல்லது அரசியல்

அமெரிக்க  மக்களுக்கு  தெரியாதா???

அவ்வளவு  முட்டாள்தனமாக  வாக்களிக்கும் கூட்டமா  அது???

ட்ரம்பின் அல்லது சிவப்புக் கட்சியின் 80+ மில்லியன் ஆதரவாளர்கள் அல்லது வாக்காளர்கள் முழுவதும் முட்டாள்கள் எனச் சொல்ல முடியாது, ஆனால் சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாநிலங்களை வென்று விட்டால் ஜனாதிபதியாகலாம் என்பதே நிலை.

எனவே, ஒரு சிறு தொகை முட்டாள்களைப் பேய்க்காட்டி விட்டால் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்க முடியும் என்பது ட்ரம்பிற்கும், ரஷ்யாவிற்கும் நன்கு தெரியும் - அதைத் தான் 2016 இல் செய்தார்கள்: கீழே இருப்பது தான் 2016 இன் ட்ரம்ப் playbook , சிலவற்றை ரஷ்ய bots முன்னிலைப் படுத்தி உதவின:

1. இந்திய அமெரிக்க மோடி வாலாக்களிடம் முஸ்லிம் எதிர்ப்பைக் கிளறி விடுவது.
2. தென் மாநில வெள்ளையரிடம் கறுப்பின மக்கள் பற்றிய பயத்தைக் கிளறி விடுவது.
3. நகரங்களில் வசிக்கும் வெள்ளையினப் பெண்களிடம் கறுப்பின ஆண்கள் பற்றிய பயத்தைக் கிளறி விடுவது.
4. மத்திய அமெரிக்கா (Middle America) எனப்படும் கிராமச் சூழலில் வாழும் வெள்ளையின மக்களிடம் "உன் வேட்டைத் துப்பாக்கியை நீலக் கட்சி பறிக்கப் போகுது" என்று பீதியைக் கிளறி விடுவது.
5. Evangelicals எனப்படும் தீவிர கிறிஸ்தவ தலிபான்களிடம் , "உன் கிறிஸ்தவ மதம் ஏனைய மதங்களால் சிறுபான்மையாகி விடும்" என்ற பயத்தை ஊட்டுவது.
6. நடுத்தர வயது தாண்டிய ஆண்களிடம் "பெண்களுக்கு அதிக வாய்ப்புக் கொடுத்தால் உன் மேலாண்மை போய் விடும்" என்று பீதியூட்டுவது.

இதெல்லாம் மீள அரங்கேறும் என்பதில் எனக்கு சந்தேகமேதுமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ட்ரம்பின் அல்லது சிவப்புக் கட்சியின் 80+ மில்லியன் ஆதரவாளர்கள் அல்லது வாக்காளர்கள் முழுவதும் முட்டாள்கள் எனச் சொல்ல முடியாது, ஆனால் சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மாநிலங்களை வென்று விட்டால் ஜனாதிபதியாகலாம் என்பதே நிலை.

எனவே, ஒரு சிறு தொகை முட்டாள்களைப் பேய்க்காட்டி விட்டால் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்க முடியும் என்பது ட்ரம்பிற்கும், ரஷ்யாவிற்கும் நன்கு தெரியும் - அதைத் தான் 2016 இல் செய்தார்கள்: கீழே இருப்பது தான் 2016 இன் ட்ரம்ப் playbook , சிலவற்றை ரஷ்ய bots முன்னிலைப் படுத்தி உதவின:

1. இந்திய அமெரிக்க மோடி வாலாக்களிடம் முஸ்லிம் எதிர்ப்பைக் கிளறி விடுவது.
2. தென் மாநில வெள்ளையரிடம் கறுப்பின மக்கள் பற்றிய பயத்தைக் கிளறி விடுவது.
3. நகரங்களில் வசிக்கும் வெள்ளையினப் பெண்களிடம் கறுப்பின ஆண்கள் பற்றிய பயத்தைக் கிளறி விடுவது.
4. மத்திய அமெரிக்கா (Middle America) எனப்படும் கிராமச் சூழலில் வாழும் வெள்ளையின மக்களிடம் "உன் வேட்டைத் துப்பாக்கியை நீலக் கட்சி பறிக்கப் போகுது" என்று பீதியைக் கிளறி விடுவது.
5. Evangelicals எனப்படும் தீவிர கிறிஸ்தவ தலிபான்களிடம் , "உன் கிறிஸ்தவ மதம் ஏனைய மதங்களால் சிறுபான்மையாகி விடும்" என்ற பயத்தை ஊட்டுவது.
6. நடுத்தர வயது தாண்டிய ஆண்களிடம் "பெண்களுக்கு அதிக வாய்ப்புக் கொடுத்தால் உன் மேலாண்மை போய் விடும்" என்று பீதியூட்டுவது.

இதெல்லாம் மீள அரங்கேறும் என்பதில் எனக்கு சந்தேகமேதுமில்லை!

 

நன்றி ஐயா

உங்களது  நேரத்திற்கு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

போர் தொடங்கி 10 மாதங்களாகிறது. உக்ரேனுக்கு இன்றுவரை அழிவுகள் தான் மிச்சம்.

உக்கிரேனுக்கு மட்டுமல்ல இரஸ்சியாவிற்கும் போரினால் பெருமளவில் உயிர்கள் இழக்கப்படுகின்றது, உலக பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது ஆனால் சில அரசியல்வாதிகளுக்கு மட்டும் ஆயுத வியாபாரிகளிடமிருந்து பனம் கிடைக்கிறது.

12 hours ago, கிருபன் said:

நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்

செலன்ஸ்கி சுயமாக சிந்திக்காதவரைக்கும் பிரச்சினை இல்லை என்பதைதான் அமெரிக்கா இவ்வாறு கூறியிருக்கலாம்.

இந்த போரினால் இரஸ்சியாவிற்கும் ஆதாயம் இல்லை உக்கிரேனுக்கும் ஆதாயம் இல்லை, இந்த பிரச்சினை பேச்சினால் தீர்க்கமுடியாத பெரிய பிரச்சினை ஒன்றுமில்லையே! இதனாலேயே இந்தியா ஆரம்பத்திலிருந்து இந்த பிரச்சினைக்கு போர் தீர்வல்ல பேச்சுவார்த்தைதான் தீர்வு என கூறிவருகிறது.

ஆனால் இனியொரு பேச்சுவார்த்தைக்கு செலன்ஸ்கியினால் மேற்கினை மீறி போக முடியுமா?

அமெரிக்கா 3ஆம் உலக போரை தவிர்த்த தமது ஜனாதிபதியினையே கொன்றதாக கூறுகிறார்கள் செலன்ஸ்கியின் நிலை என்னவாகும்?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உக்கிரேனுக்கு மட்டுமல்ல இரஸ்சியாவிற்கும் போரினால் பெருமளவில் உயிர்கள் இழக்கப்படுகின்றது, உலக பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது ஆனால் சில அரசியல்வாதிகளுக்கு மட்டும் ஆயுத வியாபாரிகளிடமிருந்து பனம் கிடைக்கிறது.

செலன்ஸ்கி சுயமாக சிந்திக்காதவரைக்கும் பிரச்சினை இல்லை என்பதைதான் அமெரிக்கா இவ்வாறு கூறியிருக்கலாம்.

இந்த போரினால் இரஸ்சியாவிற்கும் ஆதாயம் இல்லை உக்கிரேனுக்கும் ஆதாயம் இல்லை, இந்த பிரச்சினை பேச்சினால் தீர்க்கமுடியாத பெரிய பிரச்சினை ஒன்றுமில்லையே! இதனாலேயே இந்தியா ஆரம்பத்திலிருந்து இந்த பிரச்சினைக்கு போர் தீர்வல்ல பேச்சுவார்த்தைதான் தீர்வு என கூறிவருகிறது.

ஆனால் இனியொரு பேச்சுவார்த்தைக்கு செலன்ஸ்கியினால் மேற்கினை மீறி போக முடியுமா?

அமெரிக்கா 3ஆம் உலக போரை தவிர்த்த தமது ஜனாதிபதியினையே கொன்றதாக கூறுகிறார்கள் செலன்ஸ்கியின் நிலை என்னவாகும்?

 

அருமையான மில்லியன் டொலர் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் வசி: ஏன் பேச்சு வார்த்தையால் தீர்க்க முடியாமல் இருக்கிறது?

உக்ரைன் மக்களின் விருப்பம் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிப் போவது (கவனிக்க, ஐ.ஒ நோக்கித் தான், நேட்டோ உக்ரைனைச் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கவேயில்லை புட்டின் ஆக்கிரமிக்கும் வரையில்!). இந்த சுதந்திரத்தை விட்டுக் கொடு என்பது தான் ரஷ்யாவின் கோரிக்கை, ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? இதற்காகத் தான் மின்சாரம், நீர் எல்லாம் இல்லாமல் போனாலும் சமாதானம் என்று விட்டுக் கொடுக்காமல் சாகிறார்கள் உக்ரைனியர்கள்.

இதைப் புரிந்து கொள்வது 1995 வரை யாழிலும், 2009 வரை வன்னியிலும் மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமலே வாழ்ந்த தமிழர்களுக்கு ஏன் கடினமாக இருக்கிறது?  

இதைப் பலரும் இங்கே பல தடவை அரைத்திருக்கிறார்கள்: எங்களுக்கு ஏன் இந்தியா மீது காண்டு? எங்கள் சுயநிர்ணய உரிமையை தங்கள் ஒருமைப்பாட்டுக்காக மறந்து விடும்படி கேட்பதால் தானே? அது போன்ற காண்டு தான் உக்ரைனுக்கும் ரஷ்யா மீது இனி காலா காலமாக இருக்கும்.

மற்றபடி இந்த வாய்ப்பை நேட்டோவும் அமெரிக்காவும் பயன்படுத்திக் கொள்வது வெளிப்படை! இத்தகைய சந்தர்ப்பவாதம் நிகழும் என யாருமே பெப்ரவரி 2022 இல் எதிர்வுகூறியிருக்க முடியும் - புட்டினின் ஆலோசகர்களுக்கு மட்டும் முடியாமல் போய் விட்டது என்பது சோகம்! 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அருமையான மில்லியன் டொலர் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் வசி: ஏன் பேச்சு வார்த்தையால் தீர்க்க முடியாமல் இருக்கிறது?

உக்ரைன் மக்களின் விருப்பம் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிப் போவது (கவனிக்க, ஐ.ஒ நோக்கித் தான், நேட்டோ உக்ரைனைச் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கவேயில்லை புட்டின் ஆக்கிரமிக்கும் வரையில்!). இந்த சுதந்திரத்தை விட்டுக் கொடு என்பது தான் ரஷ்யாவின் கோரிக்கை, ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? இதற்காகத் தான் மின்சாரம், நீர் எல்லாம் இல்லாமல் போனாலும் சமாதானம் என்று விட்டுக் கொடுக்காமல் சாகிறார்கள் உக்ரைனியர்கள்.

இதைப் புரிந்து கொள்வது 1995 வரை யாழிலும், 2009 வரை வன்னியிலும் மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமலே வாழ்ந்த தமிழர்களுக்கு ஏன் கடினமாக இருக்கிறது?  

இதைப் பலரும் இங்கே பல தடவை அரைத்திருக்கிறார்கள்: எங்களுக்கு ஏன் இந்தியா மீது காண்டு? எங்கள் சுயநிர்ணய உரிமையை தங்கள் ஒருமைப்பாட்டுக்காக மறந்து விடும்படி கேட்பதால் தானே? அது போன்ற காண்டு தான் உக்ரைனுக்கும் ரஷ்யா மீது இனி காலா காலமாக இருக்கும்.

மற்றபடி இந்த வாய்ப்பை நேட்டோவும் அமெரிக்காவும் பயன்படுத்திக் கொள்வது வெளிப்படை! இத்தகைய சந்தர்ப்பவாதம் நிகழும் என யாருமே பெப்ரவரி 2022 இல் எதிர்வுகூறியிருக்க முடியும் - புட்டினின் ஆலோசகர்களுக்கு மட்டும் முடியாமல் போய் விட்டது என்பது சோகம்! 😂

மிகச்சரியான பார்வை

எப்படி இருந்த ரசியா இன்று???

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நல்லவர்கள்

1 hour ago, Justin said:

இந்த வாய்ப்பை நேட்டோவும் அமெரிக்காவும் பயன்படுத்திக் கொள்வது வெளிப்படை! இத்தகைய சந்தர்ப்பவாதம் நிகழும் என யாருமே பெப்ரவரி 2022 இல் எதிர்வுகூறியிருக்க முடியும் - புட்டினின் ஆலோசகர்களுக்கு மட்டும் முடியாமல் போய் விட்டது என்பது சோகம்! 😂

விசுகு அய்யாவின் வார்த்தையில் சொல்வதானால் புதினுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வெளிச்சத்தை காண முடியாதபடி செய்துவிட்டார்கள் புதினுடைய ஆலோசகர்கள்.  அந்த நல்லவர்கள் வாழ்க 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

உக்கிரேனுக்கு மட்டுமல்ல இரஸ்சியாவிற்கும் போரினால் பெருமளவில் உயிர்கள் இழக்கப்படுகின்றது, உலக பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது ஆனால் சில அரசியல்வாதிகளுக்கு மட்டும் ஆயுத வியாபாரிகளிடமிருந்து பனம் கிடைக்கிறது.

போரை ஆரம்பித்தவருக்கு இது தெரியாதா?

அல்லது ரசியா வருகுது என்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு காலில் விழுவார்கள் என்ற மமதையா???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உக்ரைன் மக்களின் விருப்பம் ஐரோப்பிய ஒன்றியம் நோக்கிப் போவது (கவனிக்க, ஐ.ஒ நோக்கித் தான், நேட்டோ உக்ரைனைச் சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கவேயில்லை புட்டின் ஆக்கிரமிக்கும் வரையில்!). இந்த சுதந்திரத்தை விட்டுக் கொடு என்பது தான் ரஷ்யாவின் கோரிக்கை, ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? இதற்காகத் தான் மின்சாரம், நீர் எல்லாம் இல்லாமல் போனாலும் சமாதானம் என்று விட்டுக் கொடுக்காமல் சாகிறார்கள் உக்ரைனியர்கள்.

எனக்கு ஒரு சந்தேகம் உண்மையில் உக்கிரேன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்புகிறார்களா அல்லது அவர்களை தலைமை தாங்கும் அரசுகள் தமது முடிவுகளை திணிக்கிறார்களா?

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏழை நாடு இணைந்தால் அதனால் அதன் பொருளாதாரத்தினை மீத கட்டுபாடு செலுத்த  முடியாது, பல கட்டுப்பாடுகள் உண்டு உதாரணத்திற்கு பெரிய சமுத்திரத்திலுள்ள  மீனுக்கு சிறிய மீன் இரை உக்கிரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் தற்போது கிறீஸ் தானாக வெளியேறியது போல அனைத்தினையும் இழந்து வெளியேறும் 10 - 15 வருடங்களில்.

நேட்டோவில் இணைந்தால் அதன் மொத்த தேசிய வருமானத்தில் நேட்டோ தரத்திற்கு இணைவாக தமது குறித்த பகுதியினை பாதுகாப்பிற்கு செலவழிக்க வேண்டும், பின்னர் போலந்து போல பேட்ரியாட் வான் பாதுகாப்பு சாதனத்தினை வழங்குகிறோம் என சொல்ல (அதற்கு காசு செலவழிக்க வேணுமல்லவா?) போலந்து இல்லை அதனை உக்கிரேனுக்கு கொடுங்கள் என சொல்லும் நிலை போல அவரவர் ஆயுத விற்பனை சந்தையாக  ஒரு ஏழை நாடான உக்கிரேன் உருவாகி மக்கள் பஞ்சத்தில் சிக்குப்படுவார்கள்.

ஆனால் பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியாமல் ஐரோப்பிய யூனியன் விதிமுறைகள் வேறு மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடிதான்.

38 minutes ago, விசுகு said:

போரை ஆரம்பித்தவருக்கு இது தெரியாதா?

அல்லது ரசியா வருகுது என்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு காலில் விழுவார்கள் என்ற மமதையா???

இரஸ்சியா, உக்கிரேன் மற்றும் மேற்கு, சீனாவின் பொறியில் மாட்டிக்கொண்டுவிட்டன.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

போரை ஆரம்பித்தவருக்கு இது தெரியாதா?

அல்லது ரசியா வருகுது என்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு காலில் விழுவார்கள் என்ற மமதையா???

விளைவுகளை எதிர்பார்க்கத் தவறியமைக்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள்: புட்டின் உவப்பில்லாத ஆலோசனைகளை ஏற்பதில்லை, ரஷ்யாவின் உண்மையான பலம் தெரியாமல் இருந்தார், கோவிட் நேரம் நேரடியாக ஆலோசகர்கள் சந்திக்க இயலாமல் போனதால் நிலைமை தெரியவில்லை, இப்படிப் பல.

காரணம் எதுவானாலும், விளைவு ஒன்று தானே?

மறு பக்கம், மேற்குலகு ஒரு அச்சுறுத்தல் தரும் நாட்டோடு இப்படித் தான் நடந்து கொள்ளும் என்பதற்கு 1914 முதல் தற்போது வரை ஏராளம் உதாரணங்கள் பாடங்களாக இருக்கின்றன:

1. முதல் உலகப் போரில் அமெரிக்கா உடனே குதிக்கவில்லை. பிரிட்டன் ஜேர்மனி மீது கப்பல் போக்கு வரத்துத் தடை விதித்து அதன் எதிரொலியாக எல்லாக் கப்பல்களையும் ஜேர்மனி மூழ்கடிக்க ஆரம்பித்த போது தான் அமெரிக்கா போரில் இணைந்தது.

2. பின்னர் இரண்டாம் உலகப்போரிலும் அமெரிக்கா உடனே இணையவில்லை - ஜப்பான் மீது பொருளாதாரத் தடையை இறுக்கி, வழிக்கு வராமல் பேர்ள் தாக்கப் பட்ட பின்னர் இணைந்தது.

3. இன்றும் ஈரான், வட கொரியா எல்லாம் பொருளாதாரத் தடை நிலை தான், நேரடி யுத்தம் இல்லை.

 மேற்குலகு இப்படித் தான் நடந்து கொள்ளும் என்ற ஒரு  முன்னனுபவம் இருந்தும், புட்டின் உக்ரைனோடு சேட்டை விடக் காரணம் 2008 , 2014 களில் புட்டினின் ஆக்கிரமிப்புகளை அமெரிக்கா பலமாக எதிர்க்காமல் விட்டது தான். ஆனால் இந்த முறை கணக்குப் பிசகி விட்டது. இந்த அமெரிக்க ஈடுபாட்டிற்கு முக்கிய காரணங்கள் செலன்ஸ்கியின் தலைமைத்துவம்,  அருகிலிருக்கும் போலந்தின் பாதுகாப்புக் கரிசனையும்.

ஊரில் தண்ணியப் போட்டு விட்டு எல்லாரையும் சண்டைக்கிழுக்கும் வெறிக்குட்டிக்கு ஒரு நாள் யாராவது கன்னத்தைப் பொத்தி இளக்கி விட்டால் என்ன நடக்குமோ, அது தான் புட்டினுக்கு நடந்திருக்கிறது இப்போது!😂

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, vasee said:

எனக்கு ஒரு சந்தேகம் உண்மையில் உக்கிரேன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்புகிறார்களா அல்லது அவர்களை தலைமை தாங்கும் அரசுகள் தமது முடிவுகளை திணிக்கிறார்களா?

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏழை நாடு இணைந்தால் அதனால் அதன் பொருளாதாரத்தினை மீத கட்டுபாடு செலுத்த  முடியாது, பல கட்டுப்பாடுகள் உண்டு உதாரணத்திற்கு பெரிய சமுத்திரத்திலுள்ள  மீனுக்கு சிறிய மீன் இரை உக்கிரேன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் தற்போது கிறீஸ் தானாக வெளியேறியது போல அனைத்தினையும் இழந்து வெளியேறும் 10 - 15 வருடங்களில்.

நேட்டோவில் இணைந்தால் அதன் மொத்த தேசிய வருமானத்தில் நேட்டோ தரத்திற்கு இணைவாக தமது குறித்த பகுதியினை செலவழிக்க வேண்டும், பின்னர் போலந்து போல பேட்ரியாட் வான் பாதுகாப்பு சாதனத்தினை வழங்குகிறோம் என போலந்து சொல்ல இல்லை அதனை உக்கிரேனுக்கு கொடுங்கள் என சொல்லும் நிலை போல அவரவர் ஆயுத விற்பனை சந்தையாக  ஒரு ஏழை நாடான உக்கிரேன் உருவாகி மக்கள் பஞ்சத்தில் சிக்குப்படுவார்கள்.

ஆனால் பொருளாதாரத்தினை மேம்படுத்த முடியாமல் ஐரோப்பிய யூனியன் விதிமுறைகள் வேறு மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடிதான்.

இரஸ்சியா, உக்கிரேன் மற்றும் மேற்கு சீனாவின் பொறியில் மாட்டிக்கொண்டுவிட்டன.

இதன் பதில் 2014 இல் யனுகோவிச் ஒறேஞ் மக்கள் புரட்சி மூலம் அகற்றப் பட்ட பின்னர் இடம் பெற்ற தேர்தலிலேயே இருக்கிறது: அந்தத் தேர்தலில் முதன் முறையாக ஐரோப்பாவை நோக்கி நகர விரும்பும் இரு கட்சிகளுக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை கிடைத்தது. ஏனைய தேசியவாத, ஐரோப்பிய எதிர் கட்சிகளுக்கு குறைந்த வாக்குகள் கிடைத்தன.

யனுகோவிச் ரஷ்யாவுடன் வர்த்தக நோக்கங்களுக்காக சார முயன்றதைத் தான் உக்ரேனிய மக்கள் மேலிடத்திலிருந்து வந்த திணிப்பாகப் பார்த்தனர், அதனால் தான் அவரையும் அகற்றி அடுத்த தேர்தலில் ஐரோப்பிய ஆதரவுக் கட்சிகளை வெல்ல வைத்தனர் என்று தான் ஆய்வுகள் சொல்கின்றன.

மற்றப் படி, இலாபமோ, நட்டமோ, செலவோ- உக்ரைன் யாரோடு சார வேண்டுமென்பதை உக்ரைனியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காதென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

மற்றப் படி, இலாபமோ, நட்டமோ, செலவோ- உக்ரைன் யாரோடு சார வேண்டுமென்பதை உக்ரைனியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காதென நினைக்கிறேன்.

உண்மைதான் அனுபவம்தான் சிறந்த பாடம், அதற்கு உக்கிரேனியர்களும் விதிவிலக்கில்லை.

ரஸ்சியர்களும்தான்

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, vasee said:

உண்மைதான் அனுபவம்தான் சிறந்த பாடம், அதற்கு உக்கிரேனியர்களும் விதிவிலக்கில்லை.

ரஸ்சியர்களும்தான்

என்ன வசி திரும்ப திரும்ப ஒரே சந்தேத்தை கேட்கிறீர்கள்🤣.

சில நாட்கள் முன் timeline போட்டு - சொன்னேனே - எப்படி உக்ரேனியர்கள் ஈயூவில் சேர விரும்பினார்கள் - அதை எப்படி உக்ரேன் அரசை மிரட்டி ரஸ்யா தடுக்க பார்த்தது - மைதான் புரட்சி இதை எல்லாம் விளக்கினேன்?

முன்பும் ஒரு முறை இதை சொன்னேன். நீங்கள் எழுதுவது ஏதோ உக்ரேன் மக்கள் எல்லாம் மொக்கு கேசுகள், அமெரிக்கா சொன்னால் பலத்த அழிவை சந்தித்து அடிபடுவார்கள், அழிந்து போவார்கள் என்பதை போல் ஒரு patronizing தொனியாக இருக்கிறது.

இத்தனை அழிவுக்கு பின்னும் அந்த மக்கள் ஏகோபித்த ஆதரவு இருப்பதால்தான் 2022 பெப்ரவரிக்கு பின் ஒரு பெரு நகரை கூட ரசியாவால் தக்க வைக்க முடியவில்லை. 

முன்பு பல சிங்கள மேட்டுகுடிகள் சொல்வார்கள் - “சாதாரண தமிழருக்கு போரில் ஆர்வம் இல்லை, புலிகளும் ஆயுத வியாபாரிகளும்தான் போரை நடத்துகிறனர்”. 

இப்படித்தான் இருக்கிறது நீங்கள் சொல்வதும்.

ஹிமார்ஸ் என்ன, பேறியட் என்ன, எதை கொடுத்தாலும் உக்ரே நாட்டு மக்களும், இராணுவம் விரும்பாமல் போரை நடத்த முடியாது. ஆப்கானிஸ்தான் உதாரணம் முன்பே காட்டப்பட்டது.  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

போர் தொடங்கி 10 மாதங்களாகிறது. உக்ரேனுக்கு இன்றுவரை அழிவுகள் தான் மிச்சம். ரஷ்யா தனக்கு எது தேவையோ அதை பிடித்து வைத்திருக்கிறது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் இது வரைக்கும் ஆயுதங்களையும் பணத்தையும் உக்கல் உக்ரேனுக்கு கொடுத்ததுதான் மிச்சம். இப்போதும் பல இடங்களில் மின்சாரமும் இல்லை. எரிபொருளும் இல்லை.
மாண்புமிகு  அதி உத்தம புட்டின் ஐயாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதலை நிறுத்தலாமே ஒழிய வெல்ல முடியாது.😎 என்ன புது ரக ஆயுதங்களை உக்ரேனுக்கு கொடுத்தும் கோமாளி செலென்ஸ்கியின் இழப்புகளை  தடுக்க முடியாது.

வியாபார மேற்குலகின் முகத்திரையை கிழிக்கும்  மதிப்பிற்குரிய புட்டின் நாமம் வாழ்க.💪🏼

கீழே இருப்பது ரஸ்யாவின் யுத்த ஆட்சேர்ப்பு வீடியோ. மாதகணக்கில் சம்பளம் கொடாத தொழில்சாலைகள், பிள்ளையின் சல்லி முட்டியை உடைக்கும் பெற்றார், சண்டையில் முன் PTSD யால் பாதிக்கபட்ட்ச் நடுத்தர வயதினர் மீண்டும் யுத்தத்துக்கு அனுப்பபடும் அவலம், மகளுக்கு ஒரு போனை வாங்க தந்தை தன்னுயிரை பணயம் வைக்க வேண்டிய நிலை.

நான் சொல்லவில்லை. ரஸ்யா சொல்கிறது.

இந்த ரஸ்யாவில்தான் பாலும் தேனும் ஓடுவதாக, ரூபிள் வானுயர்வதாக, மேற்கின் தடை மீறி ரஸ்யபொருளாதாரம் வளர்வதாக யாழில் கம்பி கட்டும் கதைகள் சொல்லப்பஎஉகிறன🤣

  • கருத்துக்கள உறவுகள்

[இலாபமோ, நட்டமோ, செலவோ- உக்ரைன் யாரோடு சார வேண்டுமென்பதை உக்ரைனியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.]  👍

அதுவும் ரஷ்யா வாழ தகுதியற்ற நாடு  வாழ்வதற்கு பாதுகாப்பும் வசதிகள் கொண்ட நாடுகள் மேற்குலநாடுகள் என்பதை விளங்கி கொண்டு தங்களது வாழ்கையை நிரந்தரமாக இங்கே அமைத்து கொண்ட ரஷ்ய ஆதரவு இலங்கை தமிழர்கள்  உக்ரைன் மக்களுக்கு நீங்கள் மேற்குலகோடு சேராதீர்கள், அவர்கள் கொடுரமானவர்கள்,அவர்களோடு சேர்ந்தால் உருப்படமாட்டீர்கள், ரஷ்யா தான் நல்லது அவர்களுடன் சேருங்கோ என்ற அறிவுரைகள் வழங்குவது ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாதவை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

என்ன வசி திரும்ப திரும்ப ஒரே சந்தேத்தை கேட்கிறீர்கள்🤣.

சில நாட்கள் முன் timeline போட்டு - சொன்னேனே - எப்படி உக்ரேனியர்கள் ஈயூவில் சேர விரும்பினார்கள் - அதை எப்படி உக்ரேன் அரசை மிரட்டி ரஸ்யா தடுக்க பார்த்தது - மைதான் புரட்சி இதை எல்லாம் விளக்கினேன்?

முன்பும் ஒரு முறை இதை சொன்னேன். நீங்கள் எழுதுவது ஏதோ உக்ரேன் மக்கள் எல்லாம் மொக்கு கேசுகள், அமெரிக்கா சொன்னால் பலத்த அழிவை சந்தித்து அடிபடுவார்கள், அழிந்து போவார்கள் என்பதை போல் ஒரு patronizing தொனியாக இருக்கிறது.

இத்தனை அழிவுக்கு பின்னும் அந்த மக்கள் ஏகோபித்த ஆதரவு இருப்பதால்தான் 2022 பெப்ரவரிக்கு பின் ஒரு பெரு நகரை கூட ரசியாவால் தக்க வைக்க முடியவில்லை. 

முன்பு பல சிங்கள மேட்டுகுடிகள் சொல்வார்கள் - “சாதாரண தமிழருக்கு போரில் ஆர்வம் இல்லை, புலிகளும் ஆயுத வியாபாரிகளும்தான் போரை நடத்துகிறனர்”. 

இப்படித்தான் இருக்கிறது நீங்கள் சொல்வதும்.

ஹிமார்ஸ் என்ன, பேறியட் என்ன, எதை கொடுத்தாலும் உக்ரே நாட்டு மக்களும், இராணுவம் விரும்பாமல் போரை நடத்த முடியாது. ஆப்கானிஸ்தான் உதாரணம் முன்பே காட்டப்பட்டது.  

 

35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

[இலாபமோ, நட்டமோ, செலவோ- உக்ரைன் யாரோடு சார வேண்டுமென்பதை உக்ரைனியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.]  👍

அதுவும் ரஷ்யா வாழ தகுதியற்ற நாடு  வாழ்வதற்கு பாதுகாப்பும் வசதிகள் கொண்ட நாடுகள் மேற்குலநாடுகள் என்பதை விளங்கி கொண்டு தங்களது வாழ்கையை நிரந்தரமாக இங்கே அமைத்து கொண்ட ரஷ்ய ஆதரவு இலங்கை தமிழர்கள்  உக்ரைன் மக்களுக்கு நீங்கள் மேற்குலகோடு சேராதீர்கள், அவர்கள் கொடுரமானவர்கள்,அவர்களோடு சேர்ந்தால் உருப்படமாட்டீர்கள், ரஷ்யா தான் நல்லது அவர்களுடன் சேருங்கோ என்ற அறிவுரைகள் வழங்குவது ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாதவை.

ஆயுதப்பெட்டியில் வெறும் சுத்தியல் இருந்தால், அனைத்து பிரச்சினைக்கும் சுத்தியல்தான் தீர்வாக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, vasee said:

 

ஆயுதப்பெட்டியில் வெறும் சுத்தியல் இருந்தால், அனைத்து பிரச்சினைக்கும் சுத்தியல்தான் தீர்வாக தெரியும்.

உக்ரேன் ஐநாவால் அங்கீகரிக்கபட்ட, ரஸ்யாவும் ஏற்று கொண்ட எல்லைகளை உடைய நாடு - உக்ரேன் ரஸ்யாவில் இறங்கவில்லை. 

2014 இல் உக்ரேனின் பகுதியான கிரிமியாவை ரஸ்யா  பிடித்த போதும்,

அதன் பின் கிளர்சி படைகள் என்ற போர்வையில் டொன்பாசில் சில பகுதிகளை ரஸ்யா பிடித்த போதும் உக்ரேன் ரஸ்யாவை தாக்கி போரிடவில்லை. 

கிரிமியாவை விட்டு விலகியது. டொன்பாசில் அந்த பகுதிகளில் இருந்து பின்வாங்கி அடுத்த நிலைகளை பாதுகாத்தது.

இப்போதும் ரஸ்யாதான் உக்ரேனில் இறங்கியது.

இப்போதும் உக்ரேன் ரஸ்ய நிலத்தில் ஒரு இஞ்சியையேனும் ஆக்கிரமிக்கவில்லை.

எனது வீட்டுக்குள் ஒரு களுசறை புகுந்து என் மகளின் கையை பிடித்து இழுத்தால் - ஆயுத பெட்டியில் சுத்தியல் மட்டுமே இருந்தால் - சுத்தியலால் தலையில் ஒண்டு போடத்தான் வேண்டும். 

வன்முறை ஆகாது எண்டு களுசறை செய்வதை வேடிக்கை பார்க்கவா முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பல தேசிய இனங்களின் குடியரசுகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் சோவியத் சோசலிச ஒன்றிய நாடு லெனின் தலைமையில் சென்ற நூற்றாண்டில் உருவானது. 120-க்கும் மேற்பட்ட மொழி, இன, தேசிய இனச் சிறுபான்மை மக்களனைவரையும் சரியான அரசியல், பொருளாதார, சமூக ஜனநாயகக் கொள்கைகளினால் அரவணைத்துக் காத்தது, ஸ்டாலின் தலைமையிலான அன்றைய சோவியத் சோசலிச ஒன்றியம். இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலிய பாசிச மற்றும் ஜெர்மனியின் நாஜிச ஆக்கிரமிப்பின் கீழ் ஒடுக்கப்பட்ட பல்வேறு கிழக்கு ஐரோப்பிய தேசிய இனத்தவர்கள் செஞ்சேனையில் இணைந்து, பாசிச எதிர்ப்புப் போரில் வென்று விடுதலையடைந்த பிறகு, சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல தேசிய இனங்களைக் கொண்ட மக்கள் ஜனநாயக அரசுகள் இந்நாடுகளில் உருவாகின. தேசிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய குடியரசுகளை அமைத்துக் கொண்டு, அவை சோசலிசப் பாதையில் முன்னேறின.

உக்ரைன் - ஈரோ மைதானம்
பிப்ரவரி 22 அன்று ஆட்சிக் கவிழ்ப்பைச் சாதித்த வெற்றியை நாஜிசக் கொடியுடன் கொண்டாடும் “ஈரோ மைதானம்” இயக்கத்தின் வலதுசாரி தீவிரவாதிகளும் புதிய நாஜிகளும்.

ஸ்டாலினது சர்வாதிகார அரசினால் பல சிறிய தேசிய இனங்கள் வலுக்கட்டாயமாக சோவியத் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டதாக மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பித்தலாட்டப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டன. சோவியத் ஒன்றியத்தையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் பலவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாகவே, இந்நாடுகளின் கம்யூனிச அரசுகளை ஒழித்து ஜனநாயக அரசுகளை நிறுவினால்தான் இத்தேசிய இனங்கள் விடுதலையையும் சமத்துவத்தையும் அடைய முடியுமென்று புளுகி, இனவெறிக்குத் தூபம் போட்டு பல சதிகளை அரங்கேற்றின.

சோசலிசக் கட்டுமானத்தின் கீழ் கணிசமான அளவுக்கு முன்னேறி, தேசிய இனங்களிடையே சமத்துவமும் ஒன்றுகலத்தல்களும் ஏற்பட்டிருந்த நிலையில், ஒரே அரசின் கீழிருந்த சோவியத் ஒன்றியம் 15 தனித்தனிக் குடியரசுகளாகப் பிளவுபட்டுப் போயின. தேசிய இனங்களிடையே நிலவிய நல்லிணக்கம் சிதைக்கப்பட்டு, மக்களின் சமூகப் பாதுகாப்பு நொறுக்கப்பட்டு, இனவெறியும் மதவெறியும் கட்டவிழ்த்து விடப்பட்டன. சில அதிரடி ஆட்சிக் கவிழ்ப்புகளும் தேசிய இனங்களிடையே போர்களும் வெடித்து, இனவெறிப் படுகொலைகளும் கிரிமினல் போர்க்குற்றங்களும் நடந்தன. முன்னாள் யுகோஸ்லாவியாவில் தேசிய இனப்போர்கள் நடந்து, அந்நாடு ஆறு குடியரசுகளாகவும் இரண்டு சுயாட்சிப் பகுதிகளாகவும் துண்டாடப்பட்டதை நாம் பார்த்தோம்.

அவற்றில் சில நாடுகளை, தனது மறைமுகக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இயக்கி வருகிறது, அமெரிக்கா. மத்திய ஆசியாவில் எரிவாயு வளம் கண்டறியப்பட்ட பிறகு, உஸ்பெகிஸ்தானிலும் தாஜிகிஸ்தானிலும் இராணுவத் தளங்களை அமைத்துள்ளது. இதன் மூலம் மத்திய ஆசியாவின் எரிவாயு வளத்தைச் சுற்றி வளைத்துச் சூறையாடவும் மேற்கு ஆசியாவில் அதற்காக நடத்திவரும் ஆதிக்கப் போருக்கு அவற்றை ஏவுதளமாகக் கொள்ளவும் அமெரிக்கா முயலுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளோடு உக்ரைனையும் நேட்டோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் இணைத்து, அவற்றை ஐரோப்பாவின் புறக்காவல் அரணாக மாற்றித் தனது ஆதிக்கத்தின் கீழ் நிரந்தரமாக வைப்பதுதான் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் நோக்கமாக உள்ளது. இதன்படியே, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நோட்டோவிலும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய முன்னாள் கம்யூனிச நாடுகள் ஒவ்வொன்றாகச் சேர்ந்து வருகின்றன. இதன் மூலம் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்துள்ள குடியரசுகளும் கிழக்கு ஐரோப்பிய முன்னாள் கம்யூனிச நாடுகளும் தமது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து, விரைவான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற மாயை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களால் ஊட்டப்படுகின்றது. இது, அந்நாடுகளில் தோன்றியுள்ள கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த, ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகளாலும், அவர்களின் மதவெறி, இனவெறிக் கட்சிகளாலும் நடுத்தர, மேட்டுக்குடிவர்க்க புதிய தாராளவாதக் கொள்கையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரப்பப்படுகிறது.

இனவெறியாட்டம்
தேசியவெறி இனவெறியூட்டி லெனின் சிலையையும் பாசிச எதிர்ப்புச் சின்னங்களையும் உடைத்து நாசமாக்கிய புதிய நாஜிகளின் பயங்கரவாத வெறியாட்டம்.

மேற்கத்திய பாணி முதலாளித்துவத்தை நிறுவுவதில் வெற்றி பெற்ற போதிலும், இந்நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகள் ஜனநாயகத்தையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ சாதிக்க முடியவில்லை. அந்நாடுகளின் உழைக்கும் மக்கள் விலையேற்றம், வேலையின்மை, வறுமையில் வதைபடுகின்றனர். இந்நெருக்கடிகளும் பிரச்சினைகளும் தீர்க்கப்படாத அதேசமயம், உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் அமெரிக்கா, புதிய பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்து வருகிறது.

முதலாளித்துவம் மீட்கப்பட்ட ரஷ்யா, சீனா உட்பட முன்னாள் சோசசலிச நாடுகளின் சமூகத்தைப் பற்றிய, குறிப்பாக அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களைப் பற்றிய தெளிவான சித்திரத்தை இன்றைய உலகின் படிப்பாளி வர்க்கத்தினரேகூட பெற்றிருக்கவில்லை என்றுதான் கருதவேண்டும். கிரமமான முதலாளித்துவ வளர்ச்சியினூடாகவோ, மேலைக்காலனிய, ஏகாதிபத்தியங்களால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியினூடாகவோ அல்லது அதற்கு முந்தைய சமூகத்தைச் சேர்ந்ததாகவோ தோன்றிய ஆளும் வர்க்கங்களை முதலாளித்துவம் மீட்கப்பட்ட முன்னாள் சோசாசலிச நாடுகள் பெற்றிருக்கவில்லை. அந்நாடுகளில் தற்போது நடக்கும் கொந்தளிப்புகளுக்கு இது முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.

அந்நாடுகளின் கம்யூனிசக் கட்சிகளிலும் அரசிலும், குறிப்பாக – இராணுவம், போலீசு, உளவுத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் உயர்பதவிகளில் ஒளிந்து கொண்டிருந்தனர், முதலாளித்துவப் பாதையாளர்களான அதிகார வர்க்க பாசிசக் குற்றக் கும்பல் (fascist oligarchies) தலைவர்கள். இவர்கள் முன்னாள் சோசலிச நாடுகளில் ஆட்சியிலிருந்த கம்யூனிசக் கட்சியில் திரிபுவாதத் தலைமையைக் கைப்பற்றிய பிறகு, அதற்கும் முதலாளித்துவம் முழுமையாக மீட்கப்படுவதற்கும் இடையிலான காலத்தில் அரசு ஆலைகளிலேயே இரகசிய உற்பத்தி, சந்தைப்படுத்துதல்கள் மூலமும், முதலாளிய, ஏகாதிபத்திய நாடுகளுடன் துரோகத்தனமான கள்ளப் பொருளாதார உறவுகள், இலஞ்சம், அதிகாரமுறைகேடுகள் மூலமாகவும் அந்நிய வங்கிகளில் கள்ளப் பணத்தையும் சொத்துகளையும் குவித்து வைத்திருந்தார்கள். (சோசலிச நாடுகளில் இம்மாதிரியான சக்திகளுக்கு எதிராக வர்க்கப் போராட்டங்களை – மாபெரும் கலாச்சாரப் புரட்சிகளை – நடத்தி வீழ்த்துவதன் மூலம்தான் முதலாளியப் பாதையாளர்களை முறியடிக்க முடியும்.)

அடுத்தடுத்த ஆட்சிக் குடைக்கவிழ்ப்புகள் மூலம் முதலாளித்துவத்தை மீட்ட பிறகு அரசுச் சொத்துகளைக் கைப்பற்றிக்கொண்டனர், இந்த அதிகார வர்க்க பாசிசக் குற்றக் கும்பல் (fascist oligarchies) தலைவர்கள். இந்த ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு புதிய ஆளும் வர்க்கமாகினர். அதேசமயம், இவர்கள் ஒற்றைக் குழுவாக ஒரே தலைமையின் கீழ் உருத்திரண்டு விடவில்லை. இவர்கள் வெவ்வேறு கும்பல்களாக அமைந்து அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்றிக் கொள்வதற்கான, வேட்டையில் கிடைத்த இரையைப் பங்குபோட்டுக்கொள்வதற்கான தீராத நாய்ச் சண்டைகளில் ஈடுபடுகின்றனர்.

சோவியத் ஒன்றியத்தில் இருந்து தனியே பிரிந்து போன, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான உக்ரைன் வரலாற்றில் ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் மற்றும் பாசிசக் குற்றக்கும்பல்கள் (fascist oligarchies) அடங்கிய ஆளும் வர்க்கத்தினரிடையே சட்டபூர்வமாகவும் நாடாளுமன்ற முறைகளிலும் சட்டவிரோத முறைகளிலும் மோதல்களும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் நடந்தன. அந்தவாறான போக்கில் ஆட்சிக்கு வந்த உக்ரைனின் ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர் யானுகோவிச் தன் நாடு ஐரோப்பிய யூனியனோடு நடத்தி வந்த பேச்சு வார்த்தையை கடந்த நவம்பரில் முறித்துக் கொண்டு, சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார். ஏனெனில், அது ஏகாதிபத்திய எடுபிடியான ஐ.எம்.எஃப்.-பின் சிக்கன சீரமைப்பு, கட்டண உயர்வு முதலிய நிபந்தனைகளை உள்ளடக்கியிருந்தது; இவற்றின் விளைவாக உள்நாட்டில் சமூகக்கொந்தளிப்பு ஏற்படும் என்று அரசு அஞ்சியது.

ஆனால், ரஷ்ய ஆதரவு உக்ரைன் அதிபரான விக்டர் யானுகோவிச் கும்பலே உக்ரைன் மக்கள் வெறுக்கும் இலஞ்சம்-ஊழல் அதிகாரமுறைகேடுகளில் மூழ்கித் திளைக்கும் ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் மற்றும் பாசிசக் குற்றக் கும்பல்கள் (fascist oligarches) அடங்கிய ஆளும் வர்க்கக் கும்பலில் ஒன்றுதான். இதனால், ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்த முறிவைக் காரணம் காட்டி விக்டர் யானுகோவிச் கும்பலின் அரசுக்கு எதிராக “யூரோ மைதானம்” என்ற இயக்கம் பெரிய அளவு வெடித்தது. வலதுசாரி பிற்போக்கு மற்றும் புதிய நாஜிகள் அதில் பெருமளவு பங்கேற்றறுத் தலைமை தாங்கின. அமெரிக்கா மற்றும் பிற மேலை நாடுகளின் எடுபிடிகளான “அரசுசாரா தொண்டு நிறுவனங்கள்” அதை வழிநடத்தின. ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகளுக்குச் சொந்தமான ஊடகங்கள் அவசியமான பிரச்சார பின்புலத்தைக் கொடுத்தன. இலஞ்சம்-ஊழல் அதிகாரமுறைகேடுகளால் சீரழிந்த ஆளும் கும்பலுக்கும் அரசுக்கும் எதிரான எழுச்சியாக அது சித்தரிக்கப்பட்டது.

யானுகோவிச் - புடின்
ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முன், டிசம்பர் 2013-ல் ரசியா தலைமையிலான சுங்க ஒன்றியத்தில் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச்சுடன் (இடது) ரசிய அதிபர் புடின் (வலது)

2004-ம் ஆண்டு உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் முதலில் விக்டர் யானுகோவிச் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது தேர்தல் மோசடி என்று எதிர்த்துப் போட்டியிட்ட யூஷெசன்கோ தலைமையிலான கும்பல் “ஆரஞ்ச் புரட்சி” என்ற “எழுச்சியை”க் கட்டவிழ்த்து விட்டது. “கலகங்களும், கொந்தளிப்புகளும்” வெடித்தன. உக்ரைன் உச்சநீதிமன்றம் தலையிட்டு, யூஷெசன்கோவை அதிபராக்கியது. பின்னர் அந்நாட்டுத் தேர்தல் கமிசன் நடத்திய விசாரணையில் தேர்தல் மோசடி எதுவும் நடக்கவில்லையெனக் கூறி விக்டர் யானுகோவிச் அதிபரானார். அந்த ஆரஞ்சு புரட்சியை நடத்திய “ஆரஞ்ச் குடும்பம்”தான் இந்த “யூரோ மைதானம்” இயக்கத்தின் முதுகெலும்பாக உள்ளது. வலது தீவிரவதிகளும் புதிய நாஜிகளும் தலைமையேற்கும் “யூரோ மைதானம்” இயக்கத்தினர் ஜனநாயம் மற்றும் தேசியத் தீவிரவாத வெறியைக் கிளப்பி வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். இனவெறி பாசிச கும்பல் கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத வெறியாட்டங்களில் லெனின் சிலையும் பாசிச எதிர்ப்புச் சின்னங்களும் பொதுச்சொத்துக்களும் நாசமாக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வையில், யானுகோவிச் அரசுக்கும் மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளான போராட்டக்காரர்களுக்குமிடையே ஒரு சமரச ஒப்பந்தம் போடப்பட்ட போதிலும், பிப்ரவரி 22-ம் தேதியன்றே ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, எதிர்த்தரப்பான பாசிசக் கும்பல்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தின. அதிபர் விக்டர் யானுகோவிச் நாட்டைவிட்டுத் தப்பியோடியதும், பெருமுதலாளிகள், ஊழல் பெருச்சாளிகள், நவீன நாஜிகள் உள்ளிட்ட பல்வேறு கும்பல்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ரஷ்ய வல்லரசின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது எண்ணெய் மற்றும் எரிவாயு வளம். ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் எரிவாயுவையே மேற்கு ஐரோப்பிய நாடுகள் பெரிதும் சார்ந்துள்ளன. ரஷ்யாவிலிருந்து அதிக அழுத்தம் கொண்ட குழாய்களின் மூலம் மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் ஐந்து பெரும் எரிவாயுக் குழாய்கள் பெலாரஸ், உக்ரைன் முதலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் வழியாகவே செல்கின்றன. ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், உக்ரைன் மீண்டும் ரஷ்யச் செல்வாக்கின் கீழ் போய்விடாமல் தடுக்கவும் உக்ரைனில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகள் குவிக்கப்பட்டன. ரஷ்யாவோ உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பையும் அமெரிக்க ஆதரவு பிற்போக்கு அரசு அமைக்கப்பட்டுள்ளதையும் எதிர்த்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே கருங்கடல் பகுதியில் தனது படைகளைக் குவித்து எச்சரித்தது. இதைத் தொடர்ந்து உக்ரைனின் தென்கிழக்கிலுள்ள சுயாட்சிப் பிரதேசமான கிரிமியாவில், ரஷ்யாவுடன் இணைவதற்கான தீர்மானத்தை கிரிமியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியும் இதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தலையும் நடத்தியும், கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

யூகோஸ்லாவியாவில் தேசிய உரிமையை ஆதரித்துப் போர் புரிந்த அமெரிக்கா, இப்போது கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்ததை எதிர்க்கின்றது. ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளனாகவும், போர்ப் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியையும் ஜனநாயகத்தையும் சீர்குலைப்பதாகவும் கூச்சலிடுகின்றது. மறுபுறம், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவதோடு, தொழில் வளர்ச்சியடைந்த பெரும் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-8 லிருந்து தற்காலிகமாக ரஷ்யாவை நீக்கிவிட்டது.

ஆனால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்தால், அதற்குப் பதிலடியாக ரஷ்யா தனது எரிவாயுவை விலையேற்றம் செய்தாலோ அல்லது எரிவாயுவை விநியாகிக்க மறுத்தாலோ, அது ஐரோப்பிய கண்டத்தில் மிகப்பெரிய நெருக்கடியாக மாறிவிடும். மேலும் சீமென்ஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஜெர்மன் நிறுவனங்கள் ரஷ்யாவில் பல்லாயிரம் கோடி டாலரில் முதலீடு செய்துள்ள நிலையில், ஜெர்மனி பெரும் பாதிப்புக்குள்ளாகும். இதனால் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் திணறுகின்றன.

அன்று இந்த ஏகாதிபத்தியவாதிகள், கம்யூனிசத்தால்தான் பிரச்சினை, மேற்கத்திய பாணி ஜனநாயகம்தான் இதற்கு ஒரே தீர்வு என்றார்கள். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததும் கம்யூனிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவம் வெற்றியைச் சாதித்துவிட்டது என்றார்கள். இனி போர் அபாயமே இருக்காது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் வளர்ச்சியைச் சாதிப்பதிலும் உலகம் தனது கவனத்தைச் செலுத்தும் என்றார்கள். ஆனால் நடப்பதென்ன? மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறுவிய பின்னரும்கூட, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் தொடர்கின்றன. வாய் கொள்ளாத அளவுக்கு, பெரிய துண்டைக் கவ்விக் கொண்டு மெல்லவும்முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழிக்கின்றன, ஏகாதிபத்தியங்கள்.

– மாணிக்கவாசகம்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
______________________________

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தேசிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பல தேசிய இனங்களின் குடியரசுகளை உள்ளடக்கிய ஒரு மாபெரும் சோவியத் சோசலிச ஒன்றிய நாடு லெனின் தலைமையில் சென்ற நூற்றாண்டில் உருவானது. 120-க்கும் மேற்பட்ட மொழி, இன, தேசிய இனச் சிறுபான்மை மக்களனைவரையும் சரியான அரசியல், பொருளாதார, சமூக ஜனநாயகக் கொள்கைகளினால் அரவணைத்துக் காத்தது, ஸ்டாலின் தலைமையிலான அன்றைய சோவியத் சோசலிச ஒன்றியம். இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலிய பாசிச மற்றும் ஜெர்மனியின் நாஜிச ஆக்கிரமிப்பின் கீழ் ஒடுக்கப்பட்ட பல்வேறு கிழக்கு ஐரோப்பிய தேசிய இனத்தவர்கள் செஞ்சேனையில் இணைந்து, பாசிச எதிர்ப்புப் போரில் வென்று விடுதலையடைந்த பிறகு, சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல தேசிய இனங்களைக் கொண்ட மக்கள் ஜனநாயக அரசுகள் இந்நாடுகளில் உருவாகின. தேசிய சுயநிர்ணய உரிமையுடன் கூடிய குடியரசுகளை அமைத்துக் கொண்டு, அவை சோசலிசப் பாதையில் முன்னேறின.

உக்ரைன் - ஈரோ மைதானம் பிப்ரவரி 22 அன்று ஆட்சிக் கவிழ்ப்பைச் சாதித்த வெற்றியை நாஜிசக் கொடியுடன் கொண்டாடும் “ஈரோ மைதானம்” இயக்கத்தின் வலதுசாரி தீவிரவாதிகளும் புதிய நாஜிகளும்.

ஸ்டாலினது சர்வாதிகார அரசினால் பல சிறிய தேசிய இனங்கள் வலுக்கட்டாயமாக சோவியத் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டதாக மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் பித்தலாட்டப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டன. சோவியத் ஒன்றியத்தையும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் பலவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு அங்கமாகவே, இந்நாடுகளின் கம்யூனிச அரசுகளை ஒழித்து ஜனநாயக அரசுகளை நிறுவினால்தான் இத்தேசிய இனங்கள் விடுதலையையும் சமத்துவத்தையும் அடைய முடியுமென்று புளுகி, இனவெறிக்குத் தூபம் போட்டு பல சதிகளை அரங்கேற்றின.

சோசலிசக் கட்டுமானத்தின் கீழ் கணிசமான அளவுக்கு முன்னேறி, தேசிய இனங்களிடையே சமத்துவமும் ஒன்றுகலத்தல்களும் ஏற்பட்டிருந்த நிலையில், ஒரே அரசின் கீழிருந்த சோவியத் ஒன்றியம் 15 தனித்தனிக் குடியரசுகளாகப் பிளவுபட்டுப் போயின. தேசிய இனங்களிடையே நிலவிய நல்லிணக்கம் சிதைக்கப்பட்டு, மக்களின் சமூகப் பாதுகாப்பு நொறுக்கப்பட்டு, இனவெறியும் மதவெறியும் கட்டவிழ்த்து விடப்பட்டன. சில அதிரடி ஆட்சிக் கவிழ்ப்புகளும் தேசிய இனங்களிடையே போர்களும் வெடித்து, இனவெறிப் படுகொலைகளும் கிரிமினல் போர்க்குற்றங்களும் நடந்தன. முன்னாள் யுகோஸ்லாவியாவில் தேசிய இனப்போர்கள் நடந்து, அந்நாடு ஆறு குடியரசுகளாகவும் இரண்டு சுயாட்சிப் பகுதிகளாகவும் துண்டாடப்பட்டதை நாம் பார்த்தோம்.

அவற்றில் சில நாடுகளை, தனது மறைமுகக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இயக்கி வருகிறது, அமெரிக்கா. மத்திய ஆசியாவில் எரிவாயு வளம் கண்டறியப்பட்ட பிறகு, உஸ்பெகிஸ்தானிலும் தாஜிகிஸ்தானிலும் இராணுவத் தளங்களை அமைத்துள்ளது. இதன் மூலம் மத்திய ஆசியாவின் எரிவாயு வளத்தைச் சுற்றி வளைத்துச் சூறையாடவும் மேற்கு ஆசியாவில் அதற்காக நடத்திவரும் ஆதிக்கப் போருக்கு அவற்றை ஏவுதளமாகக் கொள்ளவும் அமெரிக்கா முயலுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளோடு உக்ரைனையும் நேட்டோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் இணைத்து, அவற்றை ஐரோப்பாவின் புறக்காவல் அரணாக மாற்றித் தனது ஆதிக்கத்தின் கீழ் நிரந்தரமாக வைப்பதுதான் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் நோக்கமாக உள்ளது. இதன்படியே, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்திலும் நோட்டோவிலும் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் இராணுவக் கூட்டமைப்பான நேட்டோவிலும் ஐரோப்பிய யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய முன்னாள் கம்யூனிச நாடுகள் ஒவ்வொன்றாகச் சேர்ந்து வருகின்றன. இதன் மூலம் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்துள்ள குடியரசுகளும் கிழக்கு ஐரோப்பிய முன்னாள் கம்யூனிச நாடுகளும் தமது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து, விரைவான முன்னேற்றத்தை அடைய முடியும் என்ற மாயை மேற்கத்திய ஏகாதிபத்தியங்களால் ஊட்டப்படுகின்றது. இது, அந்நாடுகளில் தோன்றியுள்ள கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த, ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகளாலும், அவர்களின் மதவெறி, இனவெறிக் கட்சிகளாலும் நடுத்தர, மேட்டுக்குடிவர்க்க புதிய தாராளவாதக் கொள்கையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரப்பப்படுகிறது.

இனவெறியாட்டம் தேசியவெறி இனவெறியூட்டி லெனின் சிலையையும் பாசிச எதிர்ப்புச் சின்னங்களையும் உடைத்து நாசமாக்கிய புதிய நாஜிகளின் பயங்கரவாத வெறியாட்டம்.

மேற்கத்திய பாணி முதலாளித்துவத்தை நிறுவுவதில் வெற்றி பெற்ற போதிலும், இந்நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகள் ஜனநாயகத்தையோ, பொருளாதார முன்னேற்றத்தையோ சாதிக்க முடியவில்லை. அந்நாடுகளின் உழைக்கும் மக்கள் விலையேற்றம், வேலையின்மை, வறுமையில் வதைபடுகின்றனர். இந்நெருக்கடிகளும் பிரச்சினைகளும் தீர்க்கப்படாத அதேசமயம், உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் அமெரிக்கா, புதிய பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்து வருகிறது.

முதலாளித்துவம் மீட்கப்பட்ட ரஷ்யா, சீனா உட்பட முன்னாள் சோசசலிச நாடுகளின் சமூகத்தைப் பற்றிய, குறிப்பாக அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்களைப் பற்றிய தெளிவான சித்திரத்தை இன்றைய உலகின் படிப்பாளி வர்க்கத்தினரேகூட பெற்றிருக்கவில்லை என்றுதான் கருதவேண்டும். கிரமமான முதலாளித்துவ வளர்ச்சியினூடாகவோ, மேலைக்காலனிய, ஏகாதிபத்தியங்களால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியினூடாகவோ அல்லது அதற்கு முந்தைய சமூகத்தைச் சேர்ந்ததாகவோ தோன்றிய ஆளும் வர்க்கங்களை முதலாளித்துவம் மீட்கப்பட்ட முன்னாள் சோசாசலிச நாடுகள் பெற்றிருக்கவில்லை. அந்நாடுகளில் தற்போது நடக்கும் கொந்தளிப்புகளுக்கு இது முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.

அந்நாடுகளின் கம்யூனிசக் கட்சிகளிலும் அரசிலும், குறிப்பாக – இராணுவம், போலீசு, உளவுத்துறை, நீதித்துறை ஆகியவற்றில் உயர்பதவிகளில் ஒளிந்து கொண்டிருந்தனர், முதலாளித்துவப் பாதையாளர்களான அதிகார வர்க்க பாசிசக் குற்றக் கும்பல் (fascist oligarchies) தலைவர்கள். இவர்கள் முன்னாள் சோசலிச நாடுகளில் ஆட்சியிலிருந்த கம்யூனிசக் கட்சியில் திரிபுவாதத் தலைமையைக் கைப்பற்றிய பிறகு, அதற்கும் முதலாளித்துவம் முழுமையாக மீட்கப்படுவதற்கும் இடையிலான காலத்தில் அரசு ஆலைகளிலேயே இரகசிய உற்பத்தி, சந்தைப்படுத்துதல்கள் மூலமும், முதலாளிய, ஏகாதிபத்திய நாடுகளுடன் துரோகத்தனமான கள்ளப் பொருளாதார உறவுகள், இலஞ்சம், அதிகாரமுறைகேடுகள் மூலமாகவும் அந்நிய வங்கிகளில் கள்ளப் பணத்தையும் சொத்துகளையும் குவித்து வைத்திருந்தார்கள். (சோசலிச நாடுகளில் இம்மாதிரியான சக்திகளுக்கு எதிராக வர்க்கப் போராட்டங்களை – மாபெரும் கலாச்சாரப் புரட்சிகளை – நடத்தி வீழ்த்துவதன் மூலம்தான் முதலாளியப் பாதையாளர்களை முறியடிக்க முடியும்.)

அடுத்தடுத்த ஆட்சிக் குடைக்கவிழ்ப்புகள் மூலம் முதலாளித்துவத்தை மீட்ட பிறகு அரசுச் சொத்துகளைக் கைப்பற்றிக்கொண்டனர், இந்த அதிகார வர்க்க பாசிசக் குற்றக் கும்பல் (fascist oligarchies) தலைவர்கள். இந்த ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு புதிய ஆளும் வர்க்கமாகினர். அதேசமயம், இவர்கள் ஒற்றைக் குழுவாக ஒரே தலைமையின் கீழ் உருத்திரண்டு விடவில்லை. இவர்கள் வெவ்வேறு கும்பல்களாக அமைந்து அதிகாரத்தை ஏகபோகமாகக் கைப்பற்றிக் கொள்வதற்கான, வேட்டையில் கிடைத்த இரையைப் பங்குபோட்டுக்கொள்வதற்கான தீராத நாய்ச் சண்டைகளில் ஈடுபடுகின்றனர்.

சோவியத் ஒன்றியத்தில் இருந்து தனியே பிரிந்து போன, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலான உக்ரைன் வரலாற்றில் ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் மற்றும் பாசிசக் குற்றக்கும்பல்கள் (fascist oligarchies) அடங்கிய ஆளும் வர்க்கத்தினரிடையே சட்டபூர்வமாகவும் நாடாளுமன்ற முறைகளிலும் சட்டவிரோத முறைகளிலும் மோதல்களும் ஆட்சிக்கவிழ்ப்புகளும் நடந்தன. அந்தவாறான போக்கில் ஆட்சிக்கு வந்த உக்ரைனின் ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர் யானுகோவிச் தன் நாடு ஐரோப்பிய யூனியனோடு நடத்தி வந்த பேச்சு வார்த்தையை கடந்த நவம்பரில் முறித்துக் கொண்டு, சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தார். ஏனெனில், அது ஏகாதிபத்திய எடுபிடியான ஐ.எம்.எஃப்.-பின் சிக்கன சீரமைப்பு, கட்டண உயர்வு முதலிய நிபந்தனைகளை உள்ளடக்கியிருந்தது; இவற்றின் விளைவாக உள்நாட்டில் சமூகக்கொந்தளிப்பு ஏற்படும் என்று அரசு அஞ்சியது.

ஆனால், ரஷ்ய ஆதரவு உக்ரைன் அதிபரான விக்டர் யானுகோவிச் கும்பலே உக்ரைன் மக்கள் வெறுக்கும் இலஞ்சம்-ஊழல் அதிகாரமுறைகேடுகளில் மூழ்கித் திளைக்கும் ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகள் மற்றும் பாசிசக் குற்றக் கும்பல்கள் (fascist oligarches) அடங்கிய ஆளும் வர்க்கக் கும்பலில் ஒன்றுதான். இதனால், ஐரோப்பிய யூனியனுடனான ஒப்பந்த முறிவைக் காரணம் காட்டி விக்டர் யானுகோவிச் கும்பலின் அரசுக்கு எதிராக “யூரோ மைதானம்” என்ற இயக்கம் பெரிய அளவு வெடித்தது. வலதுசாரி பிற்போக்கு மற்றும் புதிய நாஜிகள் அதில் பெருமளவு பங்கேற்றறுத் தலைமை தாங்கின. அமெரிக்கா மற்றும் பிற மேலை நாடுகளின் எடுபிடிகளான “அரசுசாரா தொண்டு நிறுவனங்கள்” அதை வழிநடத்தின. ஒட்டுண்ணி ஏகபோக முதலாளிகளுக்குச் சொந்தமான ஊடகங்கள் அவசியமான பிரச்சார பின்புலத்தைக் கொடுத்தன. இலஞ்சம்-ஊழல் அதிகாரமுறைகேடுகளால் சீரழிந்த ஆளும் கும்பலுக்கும் அரசுக்கும் எதிரான எழுச்சியாக அது சித்தரிக்கப்பட்டது.

யானுகோவிச் - புடின் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முன், டிசம்பர் 2013-ல் ரசியா தலைமையிலான சுங்க ஒன்றியத்தில் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச்சுடன் (இடது) ரசிய அதிபர் புடின் (வலது)

2004-ம் ஆண்டு உக்ரைனில் நடந்த அதிபர் தேர்தலில் முதலில் விக்டர் யானுகோவிச் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது தேர்தல் மோசடி என்று எதிர்த்துப் போட்டியிட்ட யூஷெசன்கோ தலைமையிலான கும்பல் “ஆரஞ்ச் புரட்சி” என்ற “எழுச்சியை”க் கட்டவிழ்த்து விட்டது. “கலகங்களும், கொந்தளிப்புகளும்” வெடித்தன. உக்ரைன் உச்சநீதிமன்றம் தலையிட்டு, யூஷெசன்கோவை அதிபராக்கியது. பின்னர் அந்நாட்டுத் தேர்தல் கமிசன் நடத்திய விசாரணையில் தேர்தல் மோசடி எதுவும் நடக்கவில்லையெனக் கூறி விக்டர் யானுகோவிச் அதிபரானார். அந்த ஆரஞ்சு புரட்சியை நடத்திய “ஆரஞ்ச் குடும்பம்”தான் இந்த “யூரோ மைதானம்” இயக்கத்தின் முதுகெலும்பாக உள்ளது. வலது தீவிரவதிகளும் புதிய நாஜிகளும் தலைமையேற்கும் “யூரோ மைதானம்” இயக்கத்தினர் ஜனநாயம் மற்றும் தேசியத் தீவிரவாத வெறியைக் கிளப்பி வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். இனவெறி பாசிச கும்பல் கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாத வெறியாட்டங்களில் லெனின் சிலையும் பாசிச எதிர்ப்புச் சின்னங்களும் பொதுச்சொத்துக்களும் நாசமாக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு, பலர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வையில், யானுகோவிச் அரசுக்கும் மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளான போராட்டக்காரர்களுக்குமிடையே ஒரு சமரச ஒப்பந்தம் போடப்பட்ட போதிலும், பிப்ரவரி 22-ம் தேதியன்றே ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்துவிட்டு, எதிர்த்தரப்பான பாசிசக் கும்பல்கள் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தின. அதிபர் விக்டர் யானுகோவிச் நாட்டைவிட்டுத் தப்பியோடியதும், பெருமுதலாளிகள், ஊழல் பெருச்சாளிகள், நவீன நாஜிகள் உள்ளிட்ட பல்வேறு கும்பல்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ரஷ்ய வல்லரசின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது எண்ணெய் மற்றும் எரிவாயு வளம். ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் எரிவாயுவையே மேற்கு ஐரோப்பிய நாடுகள் பெரிதும் சார்ந்துள்ளன. ரஷ்யாவிலிருந்து அதிக அழுத்தம் கொண்ட குழாய்களின் மூலம் மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பாவுக்குச் செல்லும் ஐந்து பெரும் எரிவாயுக் குழாய்கள் பெலாரஸ், உக்ரைன் முதலான முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் வழியாகவே செல்கின்றன. ரஷ்யாவின் எரிவாயு விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும், உக்ரைன் மீண்டும் ரஷ்யச் செல்வாக்கின் கீழ் போய்விடாமல் தடுக்கவும் உக்ரைனில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகள் குவிக்கப்பட்டன. ரஷ்யாவோ உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பையும் அமெரிக்க ஆதரவு பிற்போக்கு அரசு அமைக்கப்பட்டுள்ளதையும் எதிர்த்து, உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே கருங்கடல் பகுதியில் தனது படைகளைக் குவித்து எச்சரித்தது. இதைத் தொடர்ந்து உக்ரைனின் தென்கிழக்கிலுள்ள சுயாட்சிப் பிரதேசமான கிரிமியாவில், ரஷ்யாவுடன் இணைவதற்கான தீர்மானத்தை கிரிமியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியும் இதற்கான கருத்துக் கணிப்புத் தேர்தலையும் நடத்தியும், கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டுள்ளது.

யூகோஸ்லாவியாவில் தேசிய உரிமையை ஆதரித்துப் போர் புரிந்த அமெரிக்கா, இப்போது கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்ததை எதிர்க்கின்றது. ரஷ்யாவை ஆக்கிரமிப்பாளனாகவும், போர்ப் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியையும் ஜனநாயகத்தையும் சீர்குலைப்பதாகவும் கூச்சலிடுகின்றது. மறுபுறம், ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவதோடு, தொழில் வளர்ச்சியடைந்த பெரும் பணக்கார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-8 லிருந்து தற்காலிகமாக ரஷ்யாவை நீக்கிவிட்டது.

ஆனால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை விதித்தால், அதற்குப் பதிலடியாக ரஷ்யா தனது எரிவாயுவை விலையேற்றம் செய்தாலோ அல்லது எரிவாயுவை விநியாகிக்க மறுத்தாலோ, அது ஐரோப்பிய கண்டத்தில் மிகப்பெரிய நெருக்கடியாக மாறிவிடும். மேலும் சீமென்ஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான ஜெர்மன் நிறுவனங்கள் ரஷ்யாவில் பல்லாயிரம் கோடி டாலரில் முதலீடு செய்துள்ள நிலையில், ஜெர்மனி பெரும் பாதிப்புக்குள்ளாகும். இதனால் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளான ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் திணறுகின்றன.

அன்று இந்த ஏகாதிபத்தியவாதிகள், கம்யூனிசத்தால்தான் பிரச்சினை, மேற்கத்திய பாணி ஜனநாயகம்தான் இதற்கு ஒரே தீர்வு என்றார்கள். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததும் கம்யூனிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவம் வெற்றியைச் சாதித்துவிட்டது என்றார்கள். இனி போர் அபாயமே இருக்காது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதிலும் வளர்ச்சியைச் சாதிப்பதிலும் உலகம் தனது கவனத்தைச் செலுத்தும் என்றார்கள். ஆனால் நடப்பதென்ன? மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகத்தை நிறுவிய பின்னரும்கூட, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நெருக்கடிகளும் பிரச்சினைகளும் தொடர்கின்றன. வாய் கொள்ளாத அளவுக்கு, பெரிய துண்டைக் கவ்விக் கொண்டு மெல்லவும்முடியாமல் விழுங்கவும் முடியாமல் விழிக்கின்றன, ஏகாதிபத்தியங்கள்.

– மாணிக்கவாசகம்
___________________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2014
______________________________

🤣 இதுதான் ரஸ்யாவின் ஆதரவாளர்கள் கடைசியாக வந்து சேரப்போகும் முட்டு சந்து என்பது எனக்கு அப்பவே தெரியும்🤣.

அது எந்த முட்டு சந்து?

தேசிய இனங்களின் சுய நிர்ணயத்தை, தேசிய இன வழி அரசுகளை (Nation states) - இனவெறியர்களாயும், நாஜிகளாயும், பாசிஸ்டுகளாயும் சித்தரித்து சகல இன வழி சிறுபான்மைகளையும் ஒரு பேரினம், கம்யூனிஸ்ட் தத்துவ அடிப்படையில் நசுக்கும், வரட்டு சிவப்பு சித்தாந்த முட்டு சந்து.🤣

இதே அடக்குமுறை வரட்டு சித்தாந்தத்தைதான் ஜேவியும் ஏன் மகிந்தவும் கூட கையில் எடுத்தார்கள். உழைக்கும் வர்க்கம் என்ற போர்வையில் தமிழர் இன உரிமையை நசுக்கும் சித்தாந்தம். அதுக்கு கஸ்ரோவின் ஆசியும் கிட்டியது.

சோத்தாங்கையால் ஈழதனிழர் தேசிய இனவழி அரசு அமைக்க வேண்டும், தமிழ் நாடு பிரிந்து வந்து தேசிய இனவழி அரசாக வேண்டும் என எழுதியபடியே, பீச்சாங்கையால் லத்விய, ஸ்லொவீனிய, ஜார்ஜிய, உக்ரேனிய இன்னும் பல தேசிய இனங்களை ரஸ்ய பேரினவாதம்+கம்யூனிசம் கழுத்தை நெரிப்பதை ஆதரிக்கும் கட்டுரைகளை பகிர்கிறோம் பாருங்கள்,

இதுதான் அந்த முட்டு சந்து.

பிகு

புட்டினின் ரஸ்யா கம்யூனிஸ்ட்டு அல்ல, கப்பிடலிஸ்டும் அல்ல, ஜனநாயக நாடும் அல்ல. அது ஒரு மாபியா ஸ்டேட்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 இதுதான் ரஸ்யாவின் ஆதரவாளர்கள் கடைசியாக வந்து சேரப்போகும் முட்டு சந்து என்பது எனக்கு அப்பவே தெரியும்🤣.

அது எந்த முட்டு சந்து?

தேசிய இனங்களின் சுய நிர்ணயத்தை, தேசிய இன வழி அரசுகளை (Nation states) - இனவெறியர்களாயும், நாஜிகளாயும், பாசிஸ்டுகளாயும் சித்தரித்து சகல இன வழி சிறுபான்மைகளையும் ஒரு பேரினம், கம்யூனிஸ்ட் தத்துவ அடிப்படையில் நசுக்கும், வரட்டு சிவப்பு சித்தாந்த முட்டு சந்து.🤣

இதே அடக்குமுறை வரட்டு சித்தாந்தத்தைதான் ஜேவியும் ஏன் மகிந்தவும் கூட கையில் எடுத்தார்கள். உழைக்கும் வர்க்கம் என்ற போர்வையில் தமிழர் இன உரிமையை நசுக்கும் சித்தாந்தம். அதுக்கு கஸ்ரோவின் ஆசியும் கிட்டியது.

சோத்தாங்கையால் ஈழதனிழர் தேசிய இனவழி அரசு அமைக்க வேண்டும், தமிழ் நாடு பிரிந்து வந்து தேசிய இனவழி அரசாக வேண்டும் என எழுதியபடியே, பீச்சாங்கையால் லத்விய, ஸ்லொவீனிய, ஜார்ஜிய, உக்ரேனிய இன்னும் பல தேசிய இனங்களை ரஸ்ய பேரினவாதம்+கம்யூனிசம் கழுத்தை நெரிப்பதை ஆதரிக்கும் கட்டுரைகளை பகிர்கிறோம் பாருங்கள்,

இதுதான் அந்த முட்டு சந்து.

பிகு

புட்டினின் ரஸ்யா கம்யூனிஸ்ட்டு அல்ல, கப்பிடலிஸ்டும் அல்ல, ஜனநாயக நாடும் அல்ல. அது ஒரு மாபியா ஸ்டேட்.

இரத்திணச் சுருக்கம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின் காட்டுக்குள் ஒளிந்திருந்து சில தசாப்தங்களின் பின் வெளியே வந்த ஒரு ஜப்பானியப் படையினன் போல, 80 களிலேயே தங்கி விட்ட சிவப்புச் சட்டைக் காரர்கள் சிலர் இருக்கிறார்கள், இன்னும் (2014 இல் மட்டுமல்ல) எழுதுகிறார்கள்😂.

ஏகாதிபத்தியம், சுரண்டல், முதலாளித்துவம், வர்க்கப் வேறுபாடு -  இவையெல்லாம் ரஷ்யாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த 2014 இல் ஒருவர் இதை எழுதியிருக்கிறார் என்றால் நிச்சயம் செய்தி வாசிக்காத "டீப் ஸ்லீப் கேஸ்" தான் அவர்! 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.