Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

View of our Earth from Mars
 
மனிதா உன்னைத்தான்!
வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி
காணவும் கூடாக் கடுகு. - எதற்காக
உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய்.
செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற
பூமியை நோக்குகையில் புழுதிமணியாக,
தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது.
உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர்
சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி
நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே
மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார்.
எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை.
மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம்.
தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில்
ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம்.
ஆசை பலகோடி அத்தனையும் தீராமல்
காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள்
பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால்
விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள்
நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு.
கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர்
புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.

Edited by karu
படத்துக்கு டைட்டில் கொடுக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கவிதை karu, இதை நீங்கள் யாழ் அகவை 25 ல் கூட பதியலாம் என்று நினைக்கின்றேன்......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி சுவி.  முயற்சிக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி, கரு அவர்களே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

கவிதைக்கு நன்றி, கரு அவர்களே.

மிக்க நன்றி நுணாவிலான்.

5 hours ago, ஈழப்பிரியன் said:

கவிதை நன்று.

நன்றி ஈழப்பிரியன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நன்று…! அதன் கருப்பொருளும் அருமை…!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, karu said:
வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி
காணவும் கூடாக் கடுகு. - எதற்காக
உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய்.

சிந்திக்க வைக்கும் நல்லதொரு சிந்தனைக் கவிதை.👍🏼

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புங்கையூரன் said:

கவிதை நன்று…! அதன் கருப்பொருளும் அருமை…!

மிகுந்த நன்றி புங்கையூரான்.

17 hours ago, குமாரசாமி said:

சிந்திக்க வைக்கும் நல்லதொரு சிந்தனைக் கவிதை.👍🏼

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி குமாரசாமி.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 10:52, karu said:
செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற
பூமியை நோக்குகையில் புழுதிமணியாக,
தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது.

கவிதை நன்று.

இந்தப் பூமியின் ஓட்டில் எறும்புகள் போல ஊரும் மனிதர்கள் நிலத்துக்கு கீழும் வசிக்கமுடியாது. 8 km உயர மலையிலும் வசிக்கமுடியாது. இவற்றை அறியாமல் ஆடும் ஆட்டம் இருக்கே! அதை எப்படி பிரபஞ்சம் தாங்குகின்றது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 10:52, karu said:
குவலயத்திலே நீயோர்
புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்

👏🏾👏🏾👏🏾 அருமை அருமை கரு அவர்களே.

#நிலையாமை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

👏🏾👏🏾👏🏾 அருமை அருமை கரு அவர்களே.

#நிலையாமை 

மிக்க நன்றி goshan_che.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 05:52, karu said:

No photo description available.

View of our Earth from Mars
 
மனிதா உன்னைத்தான்!
வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி
காணவும் கூடாக் கடுகு. - எதற்காக
உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய்.
செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற
பூமியை நோக்குகையில் புழுதிமணியாக,
தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது.
உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர்
சாதியென்றும் சமயமென்றும் தம்வாழ்வை வீணாக்கி
நீதியறியா நீசர்களாய்த் தம்முள்ளே
மோதியழிகின்றார், மூடர்களாய்ச் சாகின்றார்.
எம்மினிய சந்ததியே எண்ணிப்பார் இத்துயரை.
மண்ணில் எதற்காக வாழ்வைக் கெடுக்கின்றோம்.
தூசினும் தூசாய் தூலமற்ற சூனியத்தில்
ஞாலம் உதித்ததில் நாம் பிறந்து வாடுகிறோம்.
ஆசை பலகோடி அத்தனையும் தீராமல்
காசு போருள் தேடி கணக்கற்ற வேதனைகள்
பட்டுத் தவித்துப் பதறுகிறோம் ஆதலினால்
விட்டுவிட முடியா விபரீத எண்ணங்கள்
நெஞ்சை நிரப்பாது நிம்மதியை நீதேடு.
கொஞ்சம் அமைதிபெறு குவலயத்திலே நீயோர்
புழுதிமணி அஃதைப் புரிந்துகொள் எப்போதும்.

எல்லாம் அறியாமையே. அறியாமை நீங்கியவன் அமைதி ஆகின்றான். எல்லோருக்குமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் அறியாமை நீங்கியே ஆகவேண்டும். 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நமக்குள் உள்ள குறைகளை உணர்ந்தாலும் மாற்ற முடியாத அகம்பாவத்தில் கட்டுண்டு கிடக்கிறோம் கரு. கவிதை நன்றாக உள்ளது.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 13:11, nunavilan said:

கவிதைக்கு நன்றி, கரு அவர்களே.

மிக்க நன்றி நுணாவிலான்.

On 12/3/2023 at 02:44, நியாயத்தை கதைப்போம் said:

எல்லாம் அறியாமையே. அறியாமை நீங்கியவன் அமைதி ஆகின்றான். எல்லோருக்குமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் அறியாமை நீங்கியே ஆகவேண்டும். 

கருத்துக்கு நன்றி

On 24/3/2023 at 00:57, வல்வை சகாறா said:

நமக்குள் உள்ள குறைகளை உணர்ந்தாலும் மாற்ற முடியாத அகம்பாவத்தில் கட்டுண்டு கிடக்கிறோம் கரு. கவிதை நன்றாக உள்ளது.

கருத்துக்கு நன்றி வல்வை சகாறா.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவயதில் கண்ட கனவு நினைவு வருகிறது. தனியனாக பிரமாண்டத்தின் முன் நிற்பேன். அந்தக் கனவு இரண்டு/மூன்று முறை வந்தது. ஒவ்வொரு முறையும் பயந்து அம்மாவை அருகே தூங்க அழைப்பேன்.
பேரண்டத்தின் முன் நாமெல்லாம் தூசி தான்.

கரு உங்கள் கவிதைக்கு நன்றி.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.