Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

@nilmini

அக்கா அல்வாய், பருத்தித்துறையில் Hari Engineering என்ற நிறுவனம் வீட்டு கட்டுமானத்தில் ஓரளவு நல்லது. அவர்களின் Rate அதிகம் ஆனால் வேலைகளின் தரம் வெளிநாடுகளில் செய்வது போல் உள்ளது.

தகவலுக்கு மிகவும் நன்றி மீரா. வீட்டின் கால்வாசி பகுதிதான் புதிதாக காட்டியது. மிகுதியாய் பழைய நாட்சார் அமைப்புடன் மெருகு படுத்த முடியுமா என்று Hari Engineering இடம் கேட்டு பார்க்கிறேன்,

  • Replies 89
  • Views 5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்த

  • நன்றி அண்ணா. நிறைய இடங்களுக்கு போய் படங்கள் எடுத்தது வைத்திருக்கிறேன். இந்த கிழமை மடகாஸ்கர் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். ஜெர்மனி தமிழ் பேப்பர் ஒன்றுக்கும் கேட்டிருந்தார்கள்.   வீட்ட

  • இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு சித்தியின் வீடு. எமது வீடு அடுத்தது. சரிவந்துவிட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புங்கையூரான், 

இது பொன்னொச்சி மரம் என்பது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிந்தது.  போனமுறை கேதீஸ்வவரம் போய்த்தான் முதல் தடவையாக கொன்றை பூவை அடையாளம் கண்டேன். உண்மைதான் சிட்னி கோவில்காரர் கண்டுபிடித்து விட்டால் உங்கள் நினைவு மீட்டல்களையும் குழப்பி விடுவார்கள். எனது தோட்டத்தில் நான் முதன்மையாக கேட்டது பாக்கு மரம் தான்.அப்பாவுக்கு விருப்பமானது. மிச்சம் எல்லாம் lanscaperரே தெரிவு செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

எழுதுமட்டுவாளில் இருந்து எமது உறவினர் பலர் நுணாவிலில் கலியாணம் செய்திருக்கிறரார்கள்

ஆம் சோதிலிங்கம் மாஸ்டர் எமது ஊர் அழகிய திலக ரீச்சரை திருமணம் செய்து இருவரும் சாவகச்சேரி இந்துவில் கணித ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள். அவரின் தம்பி தென் கோட்ட இராணுவபொறுப்பாளராக இருந்தவர்.🙂

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் மருத்துவர் அம்மா. படங்களும் அதன் நினைவுகளையும் தொடருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nilmini said:
 

17.jpg

18.jpg

19.jpg

20.jpg

21.jpg

22.jpg

23.jpg

24.jpg

25.jpg

26.jpg

27.jpg

o2.jpg

நில்மினி, வீட்டின்.... பழமையை அழிக்காமல்,
புதுமையையும் கலந்து அழகு படுத்தியமை நன்றாக உள்ளது.
தோட்டம் செய்பவர் நன்றாக மினக்கெட்டுள்ளார். அவருக்கும் எமது பாராட்டுக்கள்.
அந்த வரவேற்பறையில் இருந்து... தேனீர் குடித்தது, நல்ல நினைவில் உள்ளது. 🙂

நிக்சன் CONSTRUCTION  தான் இப்போதுள்ள நிலைமைக்கு ஓரளவு நியாயமான விலைக்கு செய்து தருகிறார்கள் 
ஹரி ENGINEERING  வெளிநாட்டுக்காரர் என்றாலே உச்ச விலை சொல்கிறார்கள் .. ஊரில் விழுந்து எழும்பினால் ஒவ்வொரு ஒப்பந்த காரரின் முகத்தில தான் முழிக்கனும்  யாருமே ஒழுங்கான வேலைக்காரர்கள்  இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, MEERA said:

@nilmini

அக்கா அல்வாய், பருத்தித்துறையில் Hari Engineering என்ற நிறுவனம் வீட்டு கட்டுமானத்தில் ஓரளவு நல்லது. அவர்களின் Rate அதிகம் ஆனால் வேலைகளின் தரம் வெளிநாடுகளில் செய்வது போல் உள்ளது.

தகவலுக்கு மிகவும் நன்றி மீரா. நாற்சார் வீட்டின் கால் பகுதியை அப்படியே வைத்துக்கொண்டு இரன்டு அடுக்காக கட்டினது. மிகுதியை பழையமாதிரியே  இருக்கத்தக்கதாக  சீலிங் அடித்து, நிலத்தையும் திருத்த வேணும். பாசையூர் கட்டிட்டா என்ஜினீயர் ஒருவர்தான் இதுவரை செய்து தந்தவர். வேலை நல்லம் ஆனால் ஸ்லோ.

  • கருத்துக்கள உறவுகள்

நில்மினி தங்கள்படங்கள் மீண்டும் ஊருக்கு அழைத்து செல்கிறது. அப்படி ஒரு மகிழ்ச்சி . பூர்வீக வீடடை   அழிக்காமல் அருகில் புதிய வீடு நிர்மாணிக்கும் உங்கள் பண்பு பாராடடத்தக்கது . மஞ்சள் பூ நிறைந்த படத்தில்  அரசமரம் வளர்கிறதுபோல் உள்ளது .

 அவதானம்😃 .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, nunavilan said:

ஆம் சோதிலிங்கம் மாஸ்டர் எமது ஊர் அழகிய திலக ரீச்சரை திருமணம் செய்து இருவரும் சாவகச்சேரி இந்துவில் கணித ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள். அவரின் தம்பி தென் கோட்ட இராணுவபொறுப்பாளராக இருந்தவர்.🙂

அப்ப உங்களுக்கு நளாயினி ரீச்சரையும் தெரியும்......அல்லது சொந்தக்காரர்? :beaming_face_with_smiling_eyes:

சோதிலிங்கம் வாத்தியார் வீட்டிலையும் ஒரே லிங்கங்கள் தான். யாருடனும் தொடர்பில் உள்ளீர்களா?

5 hours ago, தமிழ் சிறி said:

அந்த வரவேற்பறையில் இருந்து... தேனீர் குடித்தது, நல்ல நினைவில் உள்ளது. 🙂

எல்லாம் அமசடக்கு கள்ளராய் கிடக்கு:rolling_on_the_floor_laughing:  நாதமுனி என்ன மாதிரி அங்கையும் தேத்தண்ணி குடிச்சிருப்பியள் எண்டு நினைக்கிறன்.:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

அப்ப உங்களுக்கு நளாயினி ரீச்சரையும் தெரியும்......அல்லது சொந்தக்காரர்? :beaming_face_with_smiling_eyes:

சோதிலிங்கம் வாத்தியார் வீட்டிலையும் ஒரே லிங்கங்கள் தான். யாருடனும் தொடர்பில் உள்ளீர்களா?

 

நளாயினி ரீச்சரை தெரியும். ஆங்கிலம் படிப்பித்தவர் என நினைக்கிறேன்.
யோகலிங்கத்துடன் தொடர்பு உண்டு.வன்கூவரில் உள்ளார். அமிர்தலிங்கம் ரொரன்டோவில் உள்ளார் என நினைக்கிறேன். தொடர்பு இல்லை. 

திலக ரீச்சர் தான் சொந்தம்.🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nunavilan said:

யோகலிங்கத்துடன் தொடர்பு உண்டு.வன்கூவரில் உள்ளார். அமிர்தலிங்கம் ரொரன்டோவில் உள்ளார் என நினைக்கிறேன். தொடர்பு இல்லை. 

தகவலுக்கு நன்றி நுணாவில் தம்பி......அவர்களுடனான கரிக்கோச்சி பயணங்கள்,பேரூந்து பயணங்கள்,கல்லூரி அமர்க்களங்கள் எக்கச்சக்கம். அதெல்லாம் ஒரு காலம்.

அமிர்தலிங்கத்தை அமுது என கூப்பிடுவார்கள். அவர் நுணாவிலில் இருந்துதான் படித்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2023 at 13:55, nilmini said:

1.jpg

10.jpg

 

12.jpg11.jpg

13.jpg

14.jpg

 

15.jpg

16.jpg

2.jpg

3.jpg

4.jpg

5.jpg

6.jpg

7.jpg

9.jpg

 

 

வீட்டு வேலைகள் முடிந்து விட்டது. ஆனால் நான் நினைத்தது போல பினிஷிங் வரவில்லை. சமருக்கு போய்தான் செய்யப்போகிறேன். தோட்டம் அழகாக வருகிறது. ஓய்வு பெற்ற பரி யோவான் கல்லூரி விவசாய டீச்சர் தான் தோட்டம் செய்து பராமரிக்கிறார். சில யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பகுதி நேர வேலை இந்தமாதிரி தோட்டங்களில் கொடுக்கிறார். இப்போது பல்கலைக்கழக தோட்டக்காரரும் அவர்தான்.

 மருத்துவக்கல்லூரி, யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களுக்கு இவர்தான் அலங்காரம் செய்வபவர்

நல்லது   ஒரு மூலையில் ஒரு சின்ன   கிடுகில் ஆன  கொட்டில். போட்டால்   குறைந்த போய் விடுவீர்கள்.  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

ஆம் சோதிலிங்கம் மாஸ்டர் எமது ஊர் அழகிய திலக ரீச்சரை திருமணம் செய்து இருவரும் சாவகச்சேரி இந்துவில் கணித ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள். அவரின் தம்பி தென் கோட்ட இராணுவபொறுப்பாளராக இருந்தவர்.🙂

நுணாவில் உறவினர்களிடம் அவர்களை தெரியுமா கேட்டுப்பார்க்கிறேன். திலகா டீச்சர் அவ்வளவு வடிவா? பெயரும் அழகாகத்தான் இருக்கிறது.

14 hours ago, PIRA said:

நிக்சன் CONSTRUCTION  தான் இப்போதுள்ள நிலைமைக்கு ஓரளவு நியாயமான விலைக்கு செய்து தருகிறார்கள் 
ஹரி ENGINEERING  வெளிநாட்டுக்காரர் என்றாலே உச்ச விலை சொல்கிறார்கள் .. ஊரில் விழுந்து எழும்பினால் ஒவ்வொரு ஒப்பந்த காரரின் முகத்தில தான் முழிக்கனும்  யாருமே ஒழுங்கான வேலைக்காரர்கள்  இல்லை.

உண்மைதான் PIRA. நான் போட்ட பிளானின் படி வேலைகள் முடிந்து விட்டது. இற்கு முதலே செய்ததால் செலவு பரவாயில்லை.

20 hours ago, ஏராளன் said:

வாழ்த்துகள் மருத்துவர் அம்மா. படங்களும் அதன் நினைவுகளையும் தொடருங்கோ.

மீண்டும் சந்தித்ததில் சந்தோசம் ஏராளன். நலமாக இருக்கிறீர்களா? தொடர்ந்து ஏதாவது சுவாரசியமான , பிரயோசனமான விடயங்களை எழுதலாம் என்று இருக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

நில்மினி தங்கள்படங்கள் மீண்டும் ஊருக்கு அழைத்து செல்கிறது. அப்படி ஒரு மகிழ்ச்சி . பூர்வீக வீடடை   அழிக்காமல் அருகில் புதிய வீடு நிர்மாணிக்கும் உங்கள் பண்பு பாராடடத்தக்கது . மஞ்சள் பூ நிறைந்த படத்தில்  அரசமரம் வளர்கிறதுபோல் உள்ளது .

 அவதானம்😃 .

நன்றி நிலாமதி. எனக்கு பழமையை பேணிப்பாதுகாப்பதில் மிகுந்த விருப்பம். மனதுக்குள் நினைத்த மாதிரி செய்வதில் சில தடங்கல்கள். என்றாலும் அம்பது வீதமாவது செய்யக்கூடியதாக இருக்கு. அரச மரமே வேண்டாம். சில மாதங்களில் போ ய்ய பினிஷிங் செய்யலாம் என்று இருக்கிறேன். அரசமரம் இருந்தால் தறிக்க வேண்டியதுதான்.

10 hours ago, குமாரசாமி said:

அப்ப உங்களுக்கு நளாயினி ரீச்சரையும் தெரியும்......அல்லது சொந்தக்காரர்? :beaming_face_with_smiling_eyes:

சோதிலிங்கம் வாத்தியார் வீட்டிலையும் ஒரே லிங்கங்கள் தான். யாருடனும் தொடர்பில் உள்ளீர்களா?

எல்லாம் அமசடக்கு கள்ளராய் கிடக்கு:rolling_on_the_floor_laughing:  நாதமுனி என்ன மாதிரி அங்கையும் தேத்தண்ணி குடிச்சிருப்பியள் எண்டு நினைக்கிறன்.:face_with_tears_of_joy:

கு. சா அண்ணாவும் நுணாவிலா? எழுதுமட்டுவாள் தேத்தண்ணி அந்த தண்ணீருக்கு மிகவும் சுவையாக இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நல்லது   ஒரு மூலையில் ஒரு சின்ன   கிடுகில் ஆன  கொட்டில். போட்டால்   குறைந்த போய் விடுவீர்கள்.  🤣

கிடுகுக்கொட்டில்  ஒன்றை போட்டிட்டால் போச்சு😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

தகவலுக்கு நன்றி நுணாவில் தம்பி......அவர்களுடனான கரிக்கோச்சி பயணங்கள்,பேரூந்து பயணங்கள்,கல்லூரி அமர்க்களங்கள் எக்கச்சக்கம். அதெல்லாம் ஒரு காலம்.

அமிர்தலிங்கத்தை அமுது என கூப்பிடுவார்கள். அவர் நுணாவிலில் இருந்துதான் படித்தவர்.

ஆம். யோகலிங்கமும் அங்கு இருந்து தான் படித்தவர். அண்ணா, அண்ணியின் கட்டுப்பாட்டில் இருந்தால்  ஒழுக்க்காக படிப்பார்கள் என்பதற்க்காக என நினைக்கிறேன்.
அமுது தங்களின் வகுப்பு பாடசாலை விடுமுறை விட முதல் தங்கள் வகுப்பு கதிரை மேசைகள் எல்லாம் உடைத்து அடுக்கி விட்டு வந்ததாக சொன்ன நினைவு. நீங்களும் அதில் ஓராளா?🙂
சோதிலிங்கம் மாஸ்டர் அண்மையில் தான் இறந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:
11 hours ago, குமாரசாமி said:

அப்ப உங்களுக்கு நளாயினி ரீச்சரையும் தெரியும்......அல்லது சொந்தக்காரர்? :beaming_face_with_smiling_eyes:

சோதிலிங்கம் வாத்தியார் வீட்டிலையும் ஒரே லிங்கங்கள் தான். யாருடனும் தொடர்பில் உள்ளீர்களா?

 

நளாயினி ரீச்சரை தெரியும். ஆங்கிலம் படிப்பித்தவர் என நினைக்கிறேன்.
யோகலிங்கத்துடன் தொடர்பு உண்டு.வன்கூவரில் உள்ளார். அமிர்தலிங்கம் ரொரன்டோவில் உள்ளார் என நினைக்கிறேன். தொடர்பு இல்லை. 

திலக ரீச்சர் தான் சொந்தம்

அப்புறம் என்ன ஒன்றுக்குள் ஒன்றாகிட்டீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nilmini said:

மீண்டும் சந்தித்ததில் சந்தோசம் ஏராளன். நலமாக இருக்கிறீர்களா? தொடர்ந்து ஏதாவது சுவாரசியமான , பிரயோசனமான விடயங்களை எழுதலாம் என்று இருக்கிறேன்.

ஓம் நலமாக இருக்கிறேன். தொடருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அப்புறம் என்ன ஒன்றுக்குள் ஒன்றாகிட்டீங்க.

 நாங்கள் ஒண்டுக்கை ஒண்டாகிறதுக்கு இஞ்சை என்ன கலியாண பேச்சுக்காலே நடத்துறம்? 
விடியப்பறமே சும்மா விசர கிளப்பிக்கொண்டு....:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, nunavilan said:

எல்லாம் உடைத்து அடுக்கி விட்டு வந்ததாக சொன்ன நினைவு. நீங்களும் அதில் ஓராளா?🙂

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 04:46, PIRA said:

நிக்சன் CONSTRUCTION  தான் இப்போதுள்ள நிலைமைக்கு ஓரளவு நியாயமான விலைக்கு செய்து தருகிறார்கள் 
ஹரி ENGINEERING  வெளிநாட்டுக்காரர் என்றாலே உச்ச விலை சொல்கிறார்கள் .. ஊரில் விழுந்து எழும்பினால் ஒவ்வொரு ஒப்பந்த காரரின் முகத்தில தான் முழிக்கனும்  யாருமே ஒழுங்கான வேலைக்காரர்கள்  இல்லை.

மிகவும் நன்றி PIRA அவர்களை எப்படி தொடர்பு கொள்வது?

On 2/3/2023 at 20:14, nilmini said:

மிகவும் நன்றி PIRA அவர்களை எப்படி தொடர்பு கொள்வது?

தனி மடலில் அவர்களின் தொடர்பு அனுப்பியுள்ளேன் வைபர் ல தொடர்பு கொள்ளுங்க .

உங்களின் வேலை விபரங்களை அவர்களிடம் சொல்லி வந்து பார்க்க சொல்லி அவர்களின் மதிப்பீட்டினை பெற்று பின்னர் வேலைகளை ஆரம்பியுங்கள் , பொருட்களை நீங்களே வாங்கி குடுத்தால் அவர்கள் கூலி  contract  ல செய்து தருவார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஐய்க்... நம்ம ஊரு...

அப்படியே பழம் றோட்டாலை போய், வலதுபக்கம் வாற, பிள்ளையாருக்கும் கும்புடு போட்டு, அரசடி ரோட்டில், ஒரு ரைட், 10 மீட்டரில், கந்தபுராண வீதியில் ஒரு லெப்ட்... நம்ம வீடு.

அரசடி ரோட்டில் லெப்ட் எடுத்தால், நல்லூர் போகலாம். போறவழியில் இடது பக்கம் மடத்து பள்ளிக்கூடம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2023 at 01:48, nilmini said:

எழுதுமட்டுவாள் 

இதன் அர்த்தம் தெரியுமா?

கொழும்பில் இருந்து யாழ் சென்ற யாழ்தேவியில், முன் சீட்டில் இருந்த ஒருவர் சொன்னார்.

வயது போன ஒருவரை அவரது சொத்துக்காக, ஒரு இளம் பெண் கலியாணம் கட்டி கொண்டாராம். அவர் ஒரு வருத்தக்காரரை போல தினமும் தூங்கி வழிந்து கொண்டிருப்பதாக, பார்க்க வந்த தாயிடம் காதில் மகள் புறுபுறுக்க, பிள்ளை, சொத்தை, எழுதுமட்டு(ம்)வாழ் என்று புத்தி சொல்லி திரும்பினவாம்.

பக்கத்தில் இருந்தவர், உங்களுக்கு எப்படி, தாய், காதில் சொன்னது தெரியவந்தது என்று கேட்க, ஹா...ஹா.. நான் அந்த ஊர், எனது முப்பாட்டி தான் அந்த இளம்பெண் என்று சொல்லி இறங்கிப்போனார்.

இது வீரகேசரி பத்திரிகையில் முன்பு வாசித்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

ஐய்க்... நம்ம ஊரு...

அப்படியே பழம் றோட்டாலை போய், வலதுபக்கம் வாற, பிள்ளையாருக்கும் கும்புடு போட்டு, அரசடி ரோட்டில், ஒரு ரைட், 10 மீட்டரில், கந்தபுராண வீதியில் ஒரு லெப்ட்... நம்ம வீடு.

அரசடி ரோட்டில் லெப்ட் எடுத்தால், நல்லூர் போகலாம். போறவழியில் இடது பக்கம் மடத்து பள்ளிக்கூடம்.

நாதமுனி…. உங்களுக்கு கந்தபுராண வீதி, அரசடி வீதியின் ஆரம்பத்தில் இருந்த வீட்டில் வசித்த கலியாண புறோக்கர் தட்சிணாமூர்த்தியை தெரியுமா.

கந்தர்மட  சந்தியில் வாடகை கார் வைத்திருந்தவர்களான சின்னத்தம்பி, கனகலிங்கம் என்ற சகோதரர்களின் வீடும் கந்தபுராண வீதியில் தான் உள்ளது. அவர்கள் வேளைக்கே இறந்து விட்டார்கள்.

இன்னுமொருவர்…. பெயர் நினைவிற்கு வரவில்லை, அவர் வீட்டிலேயே  பிள்ளைகளுடன் 
ஆங்கிலத்தில் கதைத்து பிள்ளைகளை சிறு வயதிலேயே ஆங்கிலத்தை சரளமாக பேச பழக்கி வைத்திருந்தார். இவர்களின் வீட்டிற்கு முன்னால்… ஒரு கட்டிடம், எனக்கு தெரிந்த நாளில் இருந்து பாவனையில் இல்லாமல், பூட்டியே இருந்தது. அதற்கு பலாலி வீதியிலும் வீட்டுடன் முன் வாசல் உள்ளது. இப்போ அதனை சிங்களவர் ஒருவர் வாங்கி தளபாட கடையாக வைத்திருக்கிறார் என்றார்கள்.

கந்தபுராண வீதி, அம்மன் வீதி சந்திக்கும் இடத்தில்… யாழ். இந்துக் கல்லூரியில் இரசாயனம்
கற்பித்த ஆசிரியர் முத்துக்குமாரசாமி மாஸ்ரரின் மேல்வீடு ஒன்றும் இருந்தது.
 

Edited by தமிழ் சிறி

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.