Jump to content

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவிப்பு

Published By: SETHU

24 MAR, 2023 | 02:36 PM
image

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தக்கூடிய நீரடி ஆயுதமொன்றை தான் பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது. 

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், நேரடியாக இந்த சோதனையை மேற்பார்வை செய்தார் என வட கொரிய ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

தென் ஹம்ஜியோங் மாகாணத்தின் கரையோரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ரகசிய ஆயுதக் கலம் கடலில் விடப்பட்டதாகவும், 80 முதல் 150 மீற்றர் ஆழத்தில் 59 மணித்தியாலங்கள் இந்த ஆயுத கலம் பயணம் செய்து பின்னர் கிழக்கு கரையோரத்தில் வெடிக்க வைக்கப்பட்டதாகவும் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

ஹேய்ல் என இந்த ஆயுதத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு கொரிய மொழியில் சுனாமி என அர்த்தமாகும்.

எந்தவொரு கடற்கரையிலும் துறைமுகத்திலும் இந்த ஆளில்லா கலத்தை பயன்படுத்த முடியும் என கேசிஎன்ஏ மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடகொரியாவின் ஆத்திரமூட்டல்களுக்கு அது விலை கொடுக்கச் செய்யப்படும் என தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/151325

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

தென் கொரியா,யப்பானின் பாதுகாப்பு கேள்விகுறி ஆகியுள்ளது.

இது வட கொரொயாவின் பிராந்திய பாதுகாப்பு சம்பந்த பட்ட விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தென் கொரியா,யப்பானின் பாதுகாப்பு கேள்விகுறி ஆகியுள்ளது.

அப்படியானால்

தென் கொரியாவும் யப்பானும் வடகொரியாயை கைப்பற்றலாம் அதுக்காக என்ன அழிவையும் செய்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கதிர்வீச்சு சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவிப்பு

வடகொரியா  தான் செய்ததை வெளியிலை வெளிப்படையாய்  சொல்லுது. 😎
மற்றவனுகள் வாயே திறக்கானுகள் :rolling_on_the_floor_laughing:

மற்றவனுகள் செய்திட்டு வாயே திறக்கானுகள் :face_with_tears_of_joy:

  • Like 1
Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

இது வட கொரொயாவின் பிராந்திய பாதுகாப்பு சம்பந்த பட்ட விடயம்.

தென் கொரியா, யப்பான் அயல்நாடுகள் அல்லவா?  செயற்கை சுனாமி தனிய வடகொரியாவை மட்டும் தாக்குமா?

1 hour ago, விசுகு said:

அப்படியானால்

தென் கொரியாவும் யப்பானும் வடகொரியாயை கைப்பற்றலாம் அதுக்காக என்ன அழிவையும் செய்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்??

ஈராக்கை அமெரிக்கா அழித்த போது எப்படி உலகம் மெளனம் காத்ததோ அதே போல் எல்லோரும் மெளனம் காக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு விதி தானே??

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

ஈராக்கை அமெரிக்கா அழித்த போது எப்படி உலகம் மெளனம் காத்ததோ அதே போல் எல்லோரும் மெளனம் காக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு விதி தானே??

சதாம் உசேன் ஏன் பதுங்கி குழியில் தனியே இருந்தார்?? ஏன் ஒரு மக்கள் கூட அவருக்கு தமது வீட்டில் இடம் கொடுக்கவில்லை.?

 தனது மக்களின் ஆதரவை பெறாத தலைவராக இருந்ததால் தான் அவர் அழிந்து போனார் என்று நான் நினைக்கிறேன். 

  • Like 1
Link to comment
Share on other sites

Just now, விசுகு said:

சதாம் உசேன் ஏன் பதுங்கி குழியில் தனியே இருந்தார்?? ஏன் ஒரு மக்கள் கூட அவருக்கு தமது வீட்டில் இடம் கொடுக்கவில்லை.?

 தனது மக்களின் ஆதரவை பெறாத தலைவராக இருந்ததால் தான் அவர் அழிந்து போனார் என்று நான் நினைக்கிறேன். 

மகிந்தவுக்கும் இப்போ ஆதரவு இல்லை என்பதை பார்த்தோம். ஏன் அங்கு அமெரிக்கா அங்கு போகவில்லை என்று  கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்?
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

தென் கொரியா, யப்பான் அயல்நாடுகள் அல்லவா?  செயற்கை சுனாமி தனிய வடகொரியாவை மட்டும் தாக்குமா?

இல்லை.

உக்ரேனில் அணுகுண்டு வீசினாலும் உக்ரேனை மட்டும் தாக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

மகிந்தவுக்கும் இப்போ ஆதரவு இல்லை என்பதை பார்த்தோம். ஏன் அங்கு அமெரிக்கா அங்கு போகவில்லை என்று  கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்?
 

மகிந்த அமெரிக்காவுடன் சவால் விட்டால் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

North Korea: நீருக்கடியில் சென்று தாக்கும் Under Water Nuclear Drone-ஐ சோதனை செய்த Kim Jong Un

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

சதாம் உசேன் ஏன் பதுங்கி குழியில் தனியே இருந்தார்?? ஏன் ஒரு மக்கள் கூட அவருக்கு தமது வீட்டில் இடம் கொடுக்கவில்லை.?

 தனது மக்களின் ஆதரவை பெறாத தலைவராக இருந்ததால் தான் அவர் அழிந்து போனார் என்று நான் நினைக்கிறேன். 

ஆதாரம்?, மேற்குலகின் பரப்புரை, அதை நம்பி மக்களின் ஆதரவைப்பற்றி கேள்வி கேட்கின்றீர்கள்?😁

இந்த அமெரிக்கன் ஈராக்கில் பெண்களுக்கு செய்த அட்டூழியங்கள் வீடியோ வீடியோவாக இருக்கு, எப்படி கிந்திய இராணுவம் எமது மண்ணில் செய்திச்சோ, அதே அட்டுழீயம் வியாட்னாமில், ஈராகில், ஆப்கானிஸ்தானில், .......... அவர்களின் ஆட்டத்திற்கு இது ஒரு இடைவேளை, தொடரும்...

அதற்கு நீங்கள் ஆதரவு🤔

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

அப்படியானால்

வடகொரியாயை கைப்பற்றலாம் அதுக்காக என்ன அழிவையும் செய்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்??

அமெரிகாவளை ஒரு புல்லை கூட பிடுங்க முடியவில்லை வடகொரியாவில், இவர்கள் கைப்பற்ற போகின்றார்களா?, நீங்கள் நகைச்சுவையாக தானே இதை பதிவிட்டீர்கள்😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

ஆதாரம்?, மேற்குலகின் பரப்புரை, அதை நம்பி மக்களின் ஆதரவைப்பற்றி கேள்வி கேட்கின்றீர்கள்?😁

இந்த அமெரிக்கன் ஈராக்கில் பெண்களுக்கு செய்த அட்டூழியங்கள் வீடியோ வீடியோவாக இருக்கு, எப்படி கிந்திய இராணுவம் எமது மண்ணில் செய்திச்சோ, அதே அட்டுழீயம் வியாட்னாமில், ஈராகில், ஆப்கானிஸ்தானில், .......... அவர்களின் ஆட்டத்திற்கு இது ஒரு இடைவேளை, தொடரும்...

அதற்கு நீங்கள் ஆதரவு🤔

அமெரிக்கா செய்ததை ஆதரித்து எழுதவில்லை 

ஏன் அவர் தனது நாட்டின் மக்களால் தூக்கி எறியப்பட்டார்? மேற்குலகு எனக்கு அடைக்கலம் அடைந்தனர். அதனால் ஆதரிக்காது விட்டாலும் துரோகம் செய்வதில்லை. 

 

3 minutes ago, உடையார் said:

அமெரிகாவளை ஒரு புல்லை கூட பிடுங்க முடியவில்லை வடகொரியாவில், இவர்கள் கைப்பற்ற போகின்றார்களா?, நீங்கள் நகைச்சுவையாக தானே இதை பதிவிட்டீர்கள்😂🤣

ஓம் உங்கள் சிரிப்பு எனக்கும் தோன்றிவிட்டது உண்மை தான் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அமெரிக்கா செய்ததை ஆதரித்து எழுதவில்லை 

ஏன் அவர் தனது நாட்டின் மக்களால் தூக்கி எறியப்பட்டார்? மேற்குலகு எனக்கு அடைக்கலம் அடைந்தனர். அதனால் ஆதரிக்காது விட்டாலும் துரோகம் செய்வதில்லை. 

 

ஓம் உங்கள் சிரிப்பு எனக்கும் தோன்றிவிட்டது உண்மை தான் 😀

உண்மையை கூறியதிற்கு நன்றி, அடைகலம் தந்ததிற்காக எதுவும் செய்யவீர்கள்😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

20 hours ago, விசுகு said:

மகிந்த அமெரிக்காவுடன் சவால் விட்டால் பார்க்கலாம்.

ஓ அமெரிக்காவுக்கு சவால் விட்டால் செத்தான் என்கிறீர்கள்?

20 hours ago, goshan_che said:

இல்லை.

உக்ரேனில் அணுகுண்டு வீசினாலும் உக்ரேனை மட்டும் தாக்காது.

இது 4ம் வகுப்புக்கே தெரியுமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

 ஏன் அவர் தனது நாட்டின் மக்களால் தூக்கி எறியப்பட்டார்?

அவர் தூக்கி எறியப்பட்டாரா மக்களால்?, அமெரிக்கா தனது துனை நாடுகளின் (தனியாக இல்லை😁) உதவியுடன் அவரை கைது செய்தார்கள்.  இது ஒரு குழந்தைக்கு கூட தெரியும் வெள்ளிடை மலையாக, உங்களுக்கு தெரியாத து வியப்பாக இருக்கு

4 minutes ago, nunavilan said:

ஓ அமெரிக்காவுக்கு சவால் விட்டால் செத்தான் என்கிறீர்கள்?

 

ஆதிக்க வெறி😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, உடையார் said:

உண்மையை கூறியதிற்கு நன்றி, அடைகலம் தந்ததிற்காக எதுவும் செய்யவீர்கள்😂🤣

கேள்வியையும் வாசிப்பதில்லை 

பதிலையும் வாசிப்பதில்லை.

மீண்டும் 

ஆதரவு தராவிட்டால் துரோகம் செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஓ அமெரிக்காவுக்கு சவால் விட்டால் செத்தான் என்கிறீர்கள்?

அமெரிக்க   அண்ணனுக்கு  தண்ணி காட்டுற  இந்த மனிசனை அப்பப்ப ஞாபகப்படுத்த  வேண்டிக்கிடக்கு....  

Kim Jong Un GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அவர் தூக்கி எறியப்பட்டாரா மக்களால்?, அமெரிக்கா தனது துனை நாடுகளின் (தனியாக இல்லை😁) உதவியுடன் அவரை கைது செய்தார்கள்.  இது ஒரு குழந்தைக்கு கூட தெரியும் வெள்ளிடை மலையாக, உங்களுக்கு தெரியாத து வியப்பாக இருக்கு

எமக்கு மேற்குலக ஊடகங்கள் எது என்னென்ன சொல்லுதோ அதெல்லாம் தாரகமந்திரம்.

அன்றைய காலங்களில் ஈழப்பிரச்சனைகள் சம்பந்தமாக எதையெல்லாம் குற்றமாக சுமத்தினார்களோ அதையெல்லாம்  நம்பினோமா இல்லையே.ஏனெனில் உண்மை நிலவரம் எமக்கு மட்டும் தானே தெரிந்தது. மக்களுக்காக போராடியவர்களை பயங்கரவாதிகள் என்றனர்.எமக்கெல்லாம் எப்படி வலித்தது?????  இன்று கூட பயங்கரவாதிகள் என்றுதானே சொல்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2023 at 10:58, விசுகு said:

அப்படியானால்

தென் கொரியாவும் யப்பானும் வடகொரியாயை கைப்பற்றலாம் அதுக்காக என்ன அழிவையும் செய்வது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்??

தென் கொரியாவும் வடகொரியாவும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் ஒரே நாடுகள்,ஒரே மக்கள் கூட்டம் என்பதையும், அவர்களை யார் எதற்காகப் பிரித்தார்கள் என்பதையும்  தாங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். 

அதுதவிர, 

சப்பான் கடலால் பிரிக்கப்பட்டிருப்பதையும், சப்பான் கொரியா, சீனா மீது படையெடுத்து என்னவெல்லாம் செய்தது என்பதைய் தாங்கள் மறந்துவிட்டீர்கள். 

 

On 24/3/2023 at 12:49, nunavilan said:

தென் கொரியா, யப்பான் அயல்நாடுகள் அல்லவா?  செயற்கை சுனாமி தனிய வடகொரியாவை மட்டும் தாக்குமா?

ஈராக்கை அமெரிக்கா அழித்த போது எப்படி உலகம் மெளனம் காத்ததோ அதே போல் எல்லோரும் மெளனம் காக்க வேண்டும். எல்லோருக்கும் ஒரு விதி தானே??

இந்தச் செய்தி முழுமையானதல். 

 

On 24/3/2023 at 13:09, விசுகு said:

சதாம் உசேன் ஏன் பதுங்கி குழியில் தனியே இருந்தார்?? ஏன் ஒரு மக்கள் கூட அவருக்கு தமது வீட்டில் இடம் கொடுக்கவில்லை.?

 தனது மக்களின் ஆதரவை பெறாத தலைவராக இருந்ததால் தான் அவர் அழிந்து போனார் என்று நான் நினைக்கிறேன். 

மக்கள் ஆதரவு இல்லாத தலைவர்களை மட்டும்தான்  அழித்தார்களா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kapithan said:

தென் கொரியாவும் வடகொரியாவும், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் ஒரே நாடுகள்,ஒரே மக்கள் கூட்டம் என்பதையும், அவர்களை யார் எதற்காகப் பிரித்தார்கள் என்பதையும்  தாங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். 

முதலில் எனது கேள்வி எங்கிருந்து எதிலிருந்து ஆரம்பித்தது??

என் கேள்வி எதற்காக யாரிடம் வைக்கப்பட்டது என்று தெரிந்து கொண்டு வாருங்கள். எனக்கு நேரம் பொன்னானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

இது 4ம் வகுப்புக்கே தெரியுமே

நான் முதலாம் வகுப்பு 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

அப்போ டைப்பர் தான்.🤣🤣🤣

இல்லை கட் அண்ட் பேஸ்ட்😝

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கல் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள்  தானே...இப்ப உபதேசம் செய்யிறியள்..
    • கனகமக்கா போராட்டத்தில் இந்த தாய் யார்... கனகமக்கா என்றால் அந்த ஊரில் யாருக்கும் தெரியும். அவ்வூரின் எல்லா நன்மை தீமைகளிலும் பங்கேற்கும் ஒரு தாயாகவே அவள் மாறிவிட்டாள். தன்னுடைய கணவனுக்கு சிங்கள இராணுவம் இழைத்த கொடுமைச் சாவை அவளின் மனம் மறக்க முடியாதிருந்தது. அன்றைய நிலையிலிருந்து தன்னை ஒரு போராளியாகவே மாற்றி விட்டாள் கனகமக்கா. காலம் உருண்டோடியது. இந்திய இராணுவம் தமிழீழம் எங்கும் ஊடுருவியது. கனகமக்கா தன் மகனுக்காகவே தான் இன்னும் உயிரோடிருப்பதாகக் கூறுவாள். அவனோ தன்னை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். என்னதான் இருந்தாலும் கனகமக்கா தானும் ஒரு சாதாரண தாயாக இருந்துவிட விரும்பவில்லை. அவன் தன்னை இயக்கத்துடன் இணைத்துக்கொன்டத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டாள். காடுகளுடன் அண்டிய அவ்வூரில் இந்திய இராணுவத்தின் பெரும் படைப்பிரிவு ஒன்று முகாமிட்டிருந்தது. இப்பிரிவைச் சேர்ந்த இராணுவம், கனகமக்கா தன் பிள்ளைகளைப் போல் நேசிக்கும் இயக்க வீரர்களை தேடி அழிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இவ்விராணுவ நடமாட்டங்களை அவ்வப்போது அறிந்து இயக்க வீரர்களின் முகாம்களுக்குச் சென்று தெரிவிப்பதை தனது கடமைபோல் செய்தாள். ஒரு நாள் ஊரின் எல்லையில் வைத்து மேஜர் கஜன் ஒரு அவசரக் கடிதத்தைக் கொடுக்கிறான். மின்வெட்டில் அதை ஒளித்துக் கொள்கிறாள் கனகமக்கா. “ஆமி அங்கால நிக்குதக்கா கவனம்” கஜன் சொல்கிறான். வாயில் கொதப்பிய வெற்றிலையுடன் வெடவெட என்று நடக்கத் தொடங்குகிறாள் கனகமக்கா. இந்திய கூலி இராணுவத்தினன் ஒருவன் கனகமக்காவை வழிமறித்து ‘உந்தப் பக்கம் ஏன் போற’ என்று கேட்கிறான். சற்றும் பதட்டமின்றி ‘விறகு முறிச்சரப் போறான் சாமி’ என்கிறாள் கனகமக்கா. இந்தியச் சிப்பாய் சிறிது ஐயத்துடனே அவளைப் போகச் சம்மதிக்கிறான். காட்டு வழிகளினூடாக நடந்து விடுதலைப் புலிகளின் முகாமைச் சென்றடைகின்றாள். முகாமில் இருந்தவர்களின் இன்முகம் கண்டு முகம் மலர்கிறாள். தான் பெற்ற பிள்ளைகளைவிட பாசம் பொங்க பழகுகிறாள். மேஜர் கஜனின் கடிதத்தை கொடுத்துவிட்டு மீண்டும் திரும்புகிறாள். வழியில் “நெரிஞ்சியாக்கும் குத்திப் போட்டுது” என்றவாறு குனிந்தவள் முல்லை எடுக்கும் போதுதான் உணருகிறாள் அம்முள் குத்தியதை விட மீண்டும் எப்படி இந்திய இராணுவத்தினரைக் கடப்பேன் என்று நினைக்கிறாள். கையிலோ, தலையிலோ ஒரு தடி விறகு கூட இல்லை என்று பதட்டமடைகிறாள். காட்டில் பெரியதொரு புளியமரத்தின் பின்னால் மறைந்து கொள்கிறாள். பல மணி நேரத்தின் பின் கூலிப்பட்டாளம் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அதன் பின்புதான் கனகமக்கா வீடு திரும்புகிறாள். இப்படி பலமுறை ஏமாந்த இராணுவம் கனகமக்கா மேல் சந்தேகிக்க ஆரம்பிக்கிறது. இராணுவத்துடன் ஒட்டிய துரோகக் கும்பலுடன் தேடப்படுகிறாள் கணக்மக்கா. “என்னவாயிருந்தாலும் நீயும் பொம்பிளை தானேடி” என்று கூறும் மாமியாரின் வார்த்தைக்கு மதிப்பளித்து மாமியாருடன் அவளின் வீட்டில் தனது இருப்பை அமைத்துக் கொள்கிறாள் கனகமக்கா. ஒருநாள் நடுச்சாமம் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. யாரது இந்த நேரத்தில் என தனக்குள் நினைத்துக் கொண்டு கதவை திறக்கிறாள் கனகமக்காவின் மாமியார். மாமியார் உடலெல்லாம் வெடவெடத்து நடுங்குகிறாள். கனகமக்கா துணிந்து விட்டால். மரணமாயினும் தன்மானத்துடன் ஆகவேண்டும் எண்றெண்ணினாள். கதவைத் திறந்ததும் உள்ளே வந்த இராணுவச் சிப்பாய் ‘யாரடி கனகம்’ என்கிறான். ‘நான்தான் கனகம், என்ன வேணும்’ என்கிறாள் கனகமக்கா. “நீ யாருக்கடி தூது போகிறாய்” என்று சத்தமிட்டவாறே கையிலிருந்த துப்பாக்கியை இயக்குகிறான். பல குண்டுகள் தாக்க நொடிப்பொழுதில் கனகமக்கா தாய் மடியில் சாய்ந்தாள். துயருற்று அழும் குழந்தையைப் போல் கனகத்தின் மாமியார் அழுதாள். அந்த அழுகையிலிருந்து அவள் ஒரு விதி செய்யத் துணிந்தாள். துப்பாக்கி கட்டைகளோடு நிற்கும் இந்தியச் சிப்பாய்களை பழிவாங்கத் துடிக்கும் பார்வையோடு விழித்து “கனகத்தை மட்டுமில்லை நீ யாரைக் கொண்டாலும் நான் உன்னைக் கொல்லாமல் விடமாட்டனடா” என்று கர்ஜிக்கிறாள். கனகம் மடியவில்லை, அவளின் நினைவை எம் தாய்ப் பூமி தன் நெஞ்சில் ஆறாத காயமாக சுமந்து கொண்டெழுகின்றது https://maaveerarkal.blogspot.com/2015/02/blog-post.html   கனகமக்கா
    • Tuesday, June 02, 2020       புலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார். திரு.நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ''புலிகளின் குரல்'' என்று அழைக்கப்பட்டு பின்னர் ''உறுமல்''  என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலைகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்றுக் கடமையாற்றியவர். இதேவேளை இவரது ஆங்கிலப் புலமையையும், எழுத்தாற்றலையும், அறிந்த விடுதலைப் புலிகளின் ''படைத்துறைச் செயலகம்'' முக்கியமான தந்திரோபாயங்களை தனது படையணிகளுக்கப் போதிக்கும் பொருட்டு ஆங்கில மொழி நூல்களை மொழிபெயர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். பொறுப்பாளர்களான கேணல் ராஜு, காண்டீபன் ஆகியவர்களின் கீழ் கடமையாற்றிய இவர் 1997-2001 ஆண்டு காலப்பகுதியில் இயக்கப் போராளிகளுக்கு மொழி பெயர்க்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தார். புதிய தமிழ் மொழிச் சொற்களை உருவாக்கும் பணியினையும் மேற்கொண்டிருந்தார். பல ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழாக்கத்திற்கு வழிவகுத்தவர். இவர் ''THE WILD GEESE'' எனும் திரைப்படத்தில் குரல் கொடுத்துமிருந்தார். இறுதியாக சமர்க்கள ஆய்வுப் பணியகத்தில் யோகி என்ற அழைக்கப்படும் யோகரத்தினத்தின் கீழ் பணிபுரிந்து வந்த நிலையில் நோய்வாய்பட்டிருந்தார். அவரின் மதுத்துவ வசதி கருதியும், பாதுகாப்புக் கருதியும் இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வந்த அவரது குடும்பத்தினரின் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யுத்தம் மீண்டும் ஆரம்பித்த போது, அங்கிருப்பது பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் இந்தியா சென்று உயிர் போகும் வரை அங்கேயே வசித்து வந்தார்.   https://maaveerarkal.blogspot.com/2020/06/blog-post.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.