Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் அமைப்புகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது இலங்கை அரசாங்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் அமைப்புகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது இலங்கை அரசாங்கம்!

புலம்பெயர் அமைப்புகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது இலங்கை அரசாங்கம்!

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின்  பொருளாதாரத்தை முன்னேற்றுமாறு அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுப்பதாக ஐனாதிபதி செயலக பணிக்குழாமின் தலைவரும் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசகரமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வறிய மக்களுக்கு அரிசி வழங்கும்  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு பெரும்பாலான இடங்களில் நெல் உற்பத்தியிலும் ஈடுபடுகின்றார்கள் இலங்கை இராணுவத்தினரின் விவசாய திட்டத்தில் பெரும் போக அறுவடையின் பின்னர் தமது செலவுகளினை கழித்து விட்டு மிகுதி நெல்லினை ஏழை மக்களுக்கு வழங்க  தயாராக இருப்பதாக இராணுவ தளபதி ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.

அவர்களுடைய விருப்பத்தின்படி அது மக்களுக்கு வழங்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட யுத்த அழிவுகளுக்கு பின்னர் நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக வேறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

அதாவது கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டிய ஏற்பட்டது. அதேபோல பொதுமக்களால்  மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களுக்கும் நாங்கள் முகம் கொடுக்க வேண்டி இருந்தது.

அதேபோல பொருட்களைக் கொள்ளவும் செய்ய வரிசைகளில் நிற்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. அது வடக்கு கிழக்கு அல்ல தெற்கு மக்கள் என்றல்லாது இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்குமான பிரச்சினையாக காணப்பட்டது.

அந்த நேரத்தில்தான் தற்போதைய ஜனாதிபதி  விக்கிரமசிங்க இந்த நாட்டினை முன்னேற்றுவதற்காக ஐனாதிபதி பதவியினை பொறுப்பேற்றிருந்தார்.

மக்கள் வாழ்வதற்கு முடியாத ஒரு நிலை காணப்பட்டது. ஆனால் ரணில்  விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்த்து நாட்டில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டதோடு மக்களுக்கான பிரச்சினைகளையும் ஒவ்வொன்றாக தீர்க்க நடவடிக்கை எடுத்தார்.

நாங்கள் முன்னோக்க நகர்கின்றோம் ஒரு அடி ஏனும் பின்னோக்கி செல்ல மாட்டோம் என்ற அடிப்படையில் தற்போது நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும்  திட்டத்தில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார். இந்த வேலை திட்டத்தில் முழு இலங்கையும் உள்ளடங்கப்பட்டுள்ளது.

வட பகுதியில் விவசாயத்தை நவீன மயப்படுத்தி விவசாயத்தை முன்னேற்றி அதே போல காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்து   வர்த்தகத்தை ஏற்படுத்திவடபகுதியில் சுபிட்சமான நிலை ஏற்படுத்த நாங்கள் முனைகின்றோம்.

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வும் பெற்றுக் கொடுக்கப்படும்.

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டுமக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றது.“ எனத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1331044

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டுமக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றது.“ எனத் தெரிவித்துள்ளார்.

நல்லூருக்கு போற சனமே இப்ப போகப்பயப்பிடுது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, குமாரசாமி said:

நல்லூருக்கு போற சனமே இப்ப போகப்பயப்பிடுது..

ஓம்.  நெடுந்தீவு, அனலைதீவு கொலைக்குப் பின் 
முன்பே விமான சீட்டு வாங்கியவர்கள் யோசிக்கிறார்கள்.

ஒட்டுக்குழு, ஓணான் குழு, ஆவா குழு, வாள்  வெட்டு குழு எல்லாம்...
இப்பவே.. பிளான் போட்டு வைத்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, தமிழ் சிறி said:

ஓம்.  நெடுந்தீவு, அனலைதீவு கொலைக்குப் பின் 
முன்பே விமான சீட்டு வாங்கியவர்கள் யோசிக்கிறார்கள்.

ஒட்டுக்குழு, ஓணான் குழு, ஆவா குழு, வாள்  வெட்டு குழு எல்லாம்...
இப்பவே.. பிளான் போட்டு வைத்திருப்பார்கள்.

தமிழனை வைச்சு தமிழனை அழிக்கிறதிலை சிங்களவன் கெட்டிக்காரன் எல்லோ?
ஏனெண்டால் வரலாறு அப்பிடித்தானே போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சித்திரித்த பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது, இன்னும் ஏன் இராணுவம் வடக்கில் நிலை கொண்டுள்ளது? கனடாவிலிருந்து போதைப்பொருள் யாழுக்கு கடத்தப்படுகிறது, வாள்வெட்டுக்குழு இயங்குகிறது, இவற்றை தடுக்க வேண்டாமோ? இராணுவம் நம் மண்ணில் நிலை கொள்வதற்கு முதல் இவை எல்லாம் எம்மண்ணில் அறியப்படவில்லை, நிலைகொண்டிருப்பவர்களாலும் தடுக்க முடியவில்லை தற்போது ஏனெனில் ஏற்பாட்டாளர்களும், விநியோகஸ்தரும் அவர்களே. விகாரை அமைக்க, காணி பிடிக்க, சமூக சீர்கேடுகளை வளர்க்க குந்திக்குண்டு, விவசாயம் செய்யினமாம். யார் நிலத்தில் யார் செய்யிறது? விவசாயத்தில் தன்னிறைவு கண்டு தெற்கிற்கு ஏற்றுமதி செய்தவனுக்கு அவை உதவி செய்யினமாம். இதை ஒட்டி இருந்து அனுபவிப்பவர்கள் பாராட்டலாம், நாம் பாராட்ட முடியாது. எங்கள் நிலங்கள், தொழில் வளங்கள் பறிக்கப்பட்டு, கையேந்தும் நிலையில் வைத்துக்கொண்டு என்ன திமிர்பேச்சு!

3 hours ago, தமிழ் சிறி said:

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டுமக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றது.“

ஒருபக்கம் இது சிங்கள பவுத்தநாடு என அறைகூவல், மறுபக்கம் அந்த நாட்டை முன்னேற்ற அழைப்பு. முதலில் இராணுவம் வெளியேறவேண்டும், எமக்குரிய அதிகாரம் தரப்படவேண்டும். அரசியல் அதிகாரம் தேவையில்லை, அபிவிருத்தி போதும் என்றவர்களுக்கு பிச்சை போட வந்திருக்கிறாராம். நிலங்களை அபகரிப்பதை தடுக்க முடியவில்லை, எழும் விகாரை பற்றி கேள்வி எழுப்ப முடியவில்லை, எங்கள் தொழில் வளங்களை அபகரிப்பதை நிறுத்த முடியவில்லை, என்ன அபிவிருத்தியை கண்டார்கள்? சிங்களத்துக்கு காவடி தூக்கி, செய்யும் தவறுகளை சரி என்று தலையாட்டி சேவகம் செய்துகொண்டு  பல்லிளிக்கத்தான் லாயக்கு.       

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடுகளை செய்து நாட்டுமக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு தற்போதைய அரசாங்கம் அழைப்பு விடுக்கின்றது.“ எனத் தெரிவித்துள்ளார்.

தங்கள் தேவைக்கு நாங்கள் தேவை. ஆனால் எமது மக்களின் நிலங்களை பறிப்போம். புத்த கோவில் கட்டுவோம். இராணுவத்தை வைத்து எமது மக்களையும் அச்சுறுத்துவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

தங்கள் தேவைக்கு நாங்கள் தேவை. ஆனால் எமது மக்களின் நிலங்களை பறிப்போம். புத்த கோவில் கட்டுவோம். இராணுவத்தை வைத்து எமது மக்களையும் அச்சுறுத்துவோம்.

உண்மைதான்... சிங்களவனால் இவற்றை எல்லாம் கூச்சம் இல்லாமல்,  
எப்படி சொல்ல முடிகின்றது என்று தெரியவில்லை.  

வெளிநாட்டு நிதி அமைப்புகள் கொடுக்கும் நிதியை கூட... 
தமிழ்ப் பகுதிக்கு கொடுக்க விரும்பாதவர்களுக்கு, புலம் பெயர் தமிழனின் பணம் வேணுமாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நல்லூருக்கு போற சனமே இப்ப போகப்பயப்பிடுது..

இல்லை அண்ணா, யாழில் பல விடுதிகள் 8ம் மாதம் 80% மேல்  ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான்... சிங்களவனால் இவற்றை எல்லாம் கூச்சம் இல்லாமல்,  
எப்படி சொல்ல முடிகின்றது என்று தெரியவில்லை.

எல்லாம் நம்மடையள் கொடுக்கிற இடம், அதையும் கைதட்டி வரவேற்குதுகள். அன்று ஒரு எட்டப்பன், காக்கைவன்னியனையே தாங்கமுடியவில்லை, இப்போ எந்தப்பக்கம் திரும்பினாலும் அவர்கள்தான். அவன் சொல்வதை ரசித்து நிஞாயப்படுத்துதுகள். சிங்களத்துக்கு எப்படி கூச்சம் வரும்? கூச்சப்படவேண்டியவர்கள் நாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

இல்லை அண்ணா, யாழில் பல விடுதிகள் 8ம் மாதம் 80% மேல்  ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழைய வீடுகள் எல்லாம் தூசு தட்டி பெயிண்ட் அடிக்கிறாங்கள் ஊர் முழுக்க சனம் கோவில் திருவிழாவுக்கு வரப்போகுது போல பட்சி சொல்லுது ( அம்மன் கோவில் சடங்கு, கதிர்காம உற்சவம் , நல்லூர் , வற்றாப்பளை  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்) 

  • கருத்துக்கள உறவுகள்

வந்தமா காச போட்டமா போய்கிட்டே இருக்கணும்..

IMG-20230429-224020.jpg

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

தங்கள் தேவைக்கு நாங்கள் தேவை. ஆனால் எமது மக்களின் நிலங்களை பறிப்போம். புத்த கோவில் கட்டுவோம். இராணுவத்தை வைத்து எமது மக்களையும் அச்சுறுத்துவோம்.

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கென்று பொதுவான ஒற்றைத்தலைமை முதலில் உருவாக்கப்படவேண்டும். அவர்கள் மூலம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள்ய்ம் நிபந்தனைகளும் இலங்கைக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். பேரம் பேசுதலுக்கு நாம் ஒன்றாதல் அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, MEERA said:

இல்லை அண்ணா, யாழில் பல விடுதிகள் 8ம் மாதம் 80% மேல்  ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் உறவினர் பல குடும்பம் போக இருப்பதாக சொன்னீர்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரஞ்சித் said:

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கென்று பொதுவான ஒற்றைத்தலைமை முதலில் உருவாக்கப்படவேண்டும். அவர்கள் மூலம் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள்ய்ம் நிபந்தனைகளும் இலங்கைக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். பேரம் பேசுதலுக்கு நாம் ஒன்றாதல் அவசியம்.

சிறந்த கருத்து. அப்படியான ஒற்றைத் தலைமை கடினம் என்றால் புரிந்ஒதுணர்வு அடிப்படையில் கட்டியமைக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையாவது இருந்திருந்தால் இன்றய சூழலில் இலங்கை அரசுடன் பேரம் பேசி நன்மைகளை பெற்றுக் கொடிருக்கலாம். ஆனால் இதனை காது கொடுத்து கேட்கும் நிலையில் கூட புலம் பெயர் குழுக்கள் இல்லை. அவர்களது நோக்கம் யார் பெரிது என்பதே. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, island said:

சிறந்த கருத்து. அப்படியான ஒற்றைத் தலைமை கடினம் என்றால் புரிந்ஒதுணர்வு அடிப்படையில் கட்டியமைக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையாவது இருந்திருந்தால் இன்றய சூழலில் இலங்கை அரசுடன் பேரம் பேசி நன்மைகளை பெற்றுக் கொடிருக்கலாம். ஆனால் இதனை காது கொடுத்து கேட்கும் நிலையில் கூட புலம் பெயர் குழுக்கள் இல்லை. அவர்களது நோக்கம் யார் பெரிது என்பதே. 

வருத்தம் தரும் உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, island said:

சிறந்த கருத்து. அப்படியான ஒற்றைத் தலைமை கடினம் என்றால் புரிந்ஒதுணர்வு அடிப்படையில் கட்டியமைக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையாவது இருந்திருந்தால் இன்றய சூழலில் இலங்கை அரசுடன் பேரம் பேசி நன்மைகளை பெற்றுக் கொடிருக்கலாம். ஆனால் இதனை காது கொடுத்து கேட்கும் நிலையில் கூட புலம் பெயர் குழுக்கள் இல்லை. அவர்களது நோக்கம் யார் பெரிது என்பதே. 

இப்படி எல்லோரும் சொன்னால் செய்வது யார்??

நானும் சேர்ந்தால் தானே நாம் ஆகமுடியும்.

நாம் ஒவ்வொருவரும் இனியாவது நாடு பெரிதென்று சிந்திக்க தொடங்கவேண்டும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.