Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேதகு - முதற்பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படத்தில் வரும் இந்த பாடல்தான் இன்னமும் காதுகளில் கேட்கிறது.. 

 

  • Replies 147
  • Views 14.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தப்படத்தில் வரும் இந்த பாடல்தான் இன்னமும் காதுகளில் கேட்கிறது.. 

 

பிரபாவும், @appan உம், படம் பார்த்த ஏனையோரும் படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சிகள், நடிகர்கள் படம் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்🙏🏾.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தப்படத்தில் வரும் இந்த பாடல்தான் இன்னமும் காதுகளில் கேட்கிறது.. 

இலங்கையில் இனவாதம் உக்கிரம் அடைந்த போது இந்த பாவேந்தர் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பெயர் பாடலை ஒழிபரப்ப தடை விதிக்கப்பட்டது. 90களில்தான் இந்த தடை நீங்கியது.

இந்த பாடலில் வரும் மீதி வரிகள் காசி ஆனந்தன் உடையது என நினைக்கிறேன்.

இதுவரை கர்நாடக இசையில் மட்டும் கேட்ட இந்த பாடலை எமது ஆதி இசையான பறையோடு கேட்பது ஒரு சுகானுபவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பிரபாவும், @appan உம், படம் பார்த்த ஏனையோரும் படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சிகள், நடிகர்கள் படம் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும்🙏🏾.

இந்த படத்தை(தெருக்கூத்தை) பார்ப்பவர்களில் நானும் ஒருத்தியாகி ஒன்றியப்போனேன்.. என் மனதில் எழுந்தவை

- படத்தின் ஆரம்பம் குமரிகண்டதை தொட்டு எங்களது கலையான தெருக்கூத்து வடிவில் கதையை படமாக்கியது.. வித்தியாசமான ஒன்று

- தமிழர் நிலங்களை/இடங்களை எடுத்துக்கூறியது

- மற்றைய படங்களைப்போலில்லாமல் யாழ்ப்பாண தமிழில் பேசியது(முழுமையாக இல்லாவிட்டாலும் முயற்சித்தமை பாராட்டிற்குரியது)

- இலங்கையில் இதை படமாக்க முடியாதுதான் என்பதால் படமாக்கப்பட்ட இடத்தைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை ஏனெனில் படத்தின் கதைதான் கருத்தை கவர்ந்தது ஒரு காரணம்.. 

- முதன் முதலில் தலைவர் ரிவோல்வரை விரல்களால் வருடும் பொழுது எனக்கு அவருடைய சந்தோஷத்தை உணரமுடிந்தது.. அதிலும் அந்த சிரிப்பு.. உடனேயே எல்லாம் போய்விட்டதே என்ற கவலை தொண்டைக்குழி வரை வந்தது..

- எத்தனையோ விஷயங்களை உணர முடிந்தது.. 

- சிங்கள புத்தபிக்குகள், காடையர்கள் அவர்களின் முகபாவங்கள் எவ்வளவு கொடூரமானவர்கள்.. எப்படி இந்த மாதிரி இவர்களால் செய்யமுடிந்து என தெரியவில்லை.. புத்தரின் போதனைகள் எங்கே இந்த காடையர்கள் எங்கே..

- பவர் டயலாக்குகள் வரவேண்டிய இடத்தில் அந்த பவர் இல்லை.. 

- அல்பிரட் துரையப்பாவின் காட்சிகள் வரும் பொழுது, யாழ் இணையத்தில் அவரை பற்றி எழும் கருத்துக்களும் நினைவில் வந்தன. 

- கடைசி காட்சியும் கோவில் மணியும் கூறியது வரலாறு ஆரம்பம் என்று.. 

- தமிழிற்கு அமுதென்ற என்ற பாடலும் காட்சியமைப்பும் நன்றாக இருந்தது. 

 

மொத்தத்தில் படத்தை பார்த்து முடித்த பொழுது, படத்தை எடுத்தவர்களை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.. அதே நேரம் எங்களது ஈழத்தமிழர்களிடம் (உள்ளூர்/புலம்பெயர்ந்த), கலைஞர்கள், புலமைமிக்கவர்கள் இருக்கிறார்கள், பொருளாதார பலம் உள்ளது, எங்களது வரலாற்றை தெரிந்திருந்தும் அதை எதிர்கால சந்ததிக்கு சேர்ப்பிக்கும் வழிமுறைகளில் ஒன்றாக இவ்வாறான படங்களை எடுக்காமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கமும் வந்தது

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

- முதன் முதலில் தலைவர் ரிவோல்வரை விரல்களால் வருடும் பொழுது எனக்கு அவருடைய சந்தோஷத்தை உணரமுடிந்தது.. அதிலும் அந்த சிரிப்பு.. உடனேயே எல்லாம் போய்விட்டதே என்ற கவலை தொண்டைக்குழி வரை வந்தது

அந்த இடத்தில் நடிகர் குட்டிமணியின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

எனக்கு படத்தில் அதிகம் பிடித்த காட்சியும் இதுதான்.

ஒரு பதின்மவயதினுக்காக ஆயுத கவர்சி மட்டும் அல்ல, அந்த முகத்தில் தெரியும்  உவகையில் ஒரு இனத்தின் விடிவுக்கான ஒரே வழியை (அவர் பார்வையில்) கண்டு பிடித்த சந்தோசமும் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

தயவு செய்து BS Value OTT தளத்தில் மட்டும் பார்க்கவும்.

வேறு எங்கும் திருட்டு கொப்பி வந்தால் ரிப்போர்ட் அடிக்கவும்🙏🏾

இந்த BS Value app இனை  android TV அல்லது rocku TVஇல் தரவிறக்கம் செய்து Smart TV யில் பார்க்க முடியுமா? அவ்வாறு முடிந்தால் பிள்ளைகளுடன் சேர்ந்து TV  இல் பார்க்க நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

இந்த BS Value app இனை  android TV அல்லது rocku TVஇல் தரவிறக்கம் செய்து Smart TV யில் பார்க்க முடியுமா? அவ்வாறு முடிந்தால் பிள்ளைகளுடன் சேர்ந்து TV  இல் பார்க்க நினைக்கின்றேன்.

access கிடைத்த பின், உங்கள் லப்டோபினை நேரடியா ஸ்மார்ட் டிவி உடன் இணைத்தால் வேலை செய்யுமே.

13 minutes ago, Nathamuni said:

access கிடைத்த பின், உங்கள் லப்டோபினை நேரடியா ஸ்மார்ட் டிவி உடன் இணைத்தால் வேலை செய்யுமே.

screen mirroring உம் செய்யலாம், ஆனால் ஒரு மணித்தியாலத்தில் பத்து மெசெஜ்கள் வந்து தொல்லை கொடுக்கும். Office இல் உள்ள automated process களுக்கான மெசேஜ்களே ஒரு நாளைக்கு நூறுக்கும் மேல் வரும் என்பதால் நேரிடையாக டிவியில் பார்ப்பது வசதி. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது smart tv யின் சிஸ்டம் அன்ரோயிட் இல்லை வெப் ஓ எஸ். அதிலும் தேடிப்பார்த்தேன் இந்த அப் இல்லை.

முந்திய அனுபவத்தில் (லைக்கா செட் டாப் பொக்ஸ்) எல்லா அன்ரோயிட் அப்சும், எல்லா அன்ரோயிட் செட்டாப் பொக்சிலும் வருவதில்லை.

நான் நாதம் சொன்னது போல் லப்டாப்பை எச்டிஎம்ஐ மூலம் டிவியில் கொழுவியே பார்த்தேன். தரம் துல்லியம்.

நீங்கள் கேட்டபின் ஐபோனில் இருந்து டிவியில் பார்க்க முயற்சித்தேன்.

ஏர்பிளே பண்ண முடியவில்லை. ஆனால் ஸ்கிரீன் மிரரிங் செய்யும் போது, புல் ஸ்கிரீனை தட்டி விட்டால் அதே துல்லியம் கிடைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஆ.சாமி said:

 

இந்த வகை சந்தேகமே பலருக்கும் இருந்தது.

Family man II போல வரும் என்றே பயந்தார்கள்.

ஆனாலும், பலர் பாராடக்கூடியதாக வந்ததால், சீமானும் பாராட்டலாம்.

****

சிறப்பாக எடுத்திருக்கிறார்கள் என்று சீமான், அறிக்கை விட்டிருக்கிறார். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு படம் பார்ப்பதற்கான மெச்சேஜ் வரமாட்டேன் என்கிறது. ஆனால் ஆர்வத்தை கட்டுப்படுத்த இயலாமல் இன்று பார்த்தேன்.  சுருக்கமாக வலியை சொல்லியுள்ளது சிறப்பு..!

படத்தின் பெரும்பகுதி காரைக்குடி செட்டினாடு பகுதிகளில் எடுத்துள்ளது போல தெரிகிறது. அப்பகுதிகளில்தான் இம்மாதிரி செம்மண் பூமி,கட்டிடக் கலைகளை பார்க்க இயலும்.

குறைந்த பொருட்செலவில் எளிமையாக, அதேநேரம் நடந்தவற்றை சொல்லி படமெடுத்திருப்பதால் பிற தமிழ் படங்களில் வரும் ஆடம்பரத்தை இதில் எதிர்பார்க்க முடியாது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் அறிஞர் வேடத்தில் திரு.கல்யாணசுந்தரம் நடித்துள்ளார்.

 

m1.jpg

பொன். சிவகுமாரன் காவல் துறையினர் சுற்றிவளைத்த போது..

 

m2.jpg

"பெரிய ஆளுங்க எல்லாம் இயக்கத்தவிட்டு வெளிய வந்துட்டாங்க. நீ ஒத்த ஆளா இருந்து என்ன செய்ய போற..?"

"மத்த ஆளுங்கள நம்பி எங்கட மக்களுக்காக நான் போராட வரல. இன்னைக்கு நான், நாளை நூறு ஆயிரமாகும். வரலாறும் அப்படிதான் அம்மா..!"

 

m3.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

கொச்சைப்படுத்தி, சேறடிக்கும் இக்காலகட்டத்தில், இம்மாதிரி படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும், தமிழ்நாட்டு அடித்தள மக்களிடம் செய்தியும், துயரமும் இன்னும் ஆழமாக சென்றடைய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த வகை சந்தேகமே பலருக்கும் இருந்தது.

Family man II போல வரும் என்றே பயந்தார்கள்.

ஆனாலும், பலர் பாராடக்கூடியதாக வந்ததால், சீமானும் பாராட்டலாம்.

****

சிறப்பாக எடுத்திருக்கிறார்கள் என்று சீமான், அறிக்கை விட்டிருக்கிறார். 

இதன் பின்னால் நடக்கும் அரசியல் மிக கேவலமானது. இந்த திரியில் இருந்து திசை மாறக்கூடாது என்பதால் எழுதவில்லை.

39 minutes ago, ராசவன்னியன் said:

கொச்சைப்படுத்தி, சேறடிக்கும் இக்காலகட்டத்தில், இம்மாதிரி படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும், தமிழ்நாட்டு அடித்தள மக்களிடம் செய்தியும், துயரமும் இன்னும் ஆழமாக சென்றடைய வேண்டும்.

நிச்சயமாக. இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களும் வரவேண்டும்.

ஒரு ஆறு மாதம் வரை ஓடிடி யில் ஓடவிட்டு அதன் பின் சிடி உரிமையை யாராவது வாங்கி, இலவச சீடீக்களளை தமிழ் நாடெங்கும் விநியோகிக்க வேண்டும். 

 

உலக அளவில் டிவிட்டரில் டிரெண்ட்டாகி இருக்க வேண்டிய #மேதகு இந்திய அளவில் 38 ஆவது இடம் வரைதான் வர முடிந்தது 😞.

சதி எனும் கொடி சுற்றி பிறந்த பிள்ளை தமிழ் தேசியம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அந்த இடத்தில் நடிகர் குட்டிமணியின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

எனக்கு படத்தில் அதிகம் பிடித்த காட்சியும் இதுதான்.

ஒரு பதின்மவயதினுக்காக ஆயுத கவர்சி மட்டும் அல்ல, அந்த முகத்தில் தெரியும்  உவகையில் ஒரு இனத்தின் விடிவுக்கான ஒரே வழியை (அவர் பார்வையில்) கண்டு பிடித்த சந்தோசமும் தெரிகிறது.

உண்மைதான்.. 

கடைசியாக வரும் காட்சி கூட மனதைவிட்டு அகலவில்லை, இப்படிதானே சாதாரண மக்களாகிய நாங்கள் கோவில் வாசல்களில் போய் கண்ணீர் விட்டிருப்போம்.. கடவுள் என்பவரின் இருப்பையே கேள்விக்குறியாக்கியதும் இதனால்தான்..anyway..

2 hours ago, ராசவன்னியன் said:

கொச்சைப்படுத்தி, சேறடிக்கும் இக்காலகட்டத்தில், இம்மாதிரி படங்கள் இன்னும் நிறைய வரவேண்டும், தமிழ்நாட்டு அடித்தள மக்களிடம் செய்தியும், துயரமும் இன்னும் ஆழமாக சென்றடைய வேண்டும்.

உண்மைதான்..   

  • கருத்துக்கள உறவுகள்

படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட சில கணங்கள் ஆகிற்று.

எனக்கு இதனை ஒரு படம் என்று சாதாரணமாகப் பார்த்துவிட்டுக் கடந்துசெல்ல முடியவில்லை. எங்கள் வாழ்க்கையில் நாம் பார்த்த மிக முக்கியமான ஒரே மனிதனின் ஆரம்பகாலப் பருவம் சொல்லப்படுகிறது. "ஏன் அப்பா நாங்கள் திரும்பி அடிக்கையில்லை?" என்கிற கேள்வியுடன் எமது மனதில் அமர்ந்துவிடும் மேதகு இந்தக் காவியம் முழுதும் எங்கள் தலைவனை நினைவுபடுத்துவதால் அவரே எங்கள் முன்னால் வந்துநின்றதான பிரமை.

தலைவரின் கொள்கை மீதான உறுதி, சமரசமில்லாத இலட்சியம் நோக்கிய பார்வை, எவர் இல்லாவிட்டாலும் நான் போராடுவேன் என்கிற தன்னம்பிக்கை என்று படம் முழுதும் அவரது குணாதிசயங்களைப் பரப்பிவிட்டுக்கொண்டே போகும் கிட்டு.

தலைவரின் ஆயுதம் மீதான பற்றும், அதனை அவர் முதல்முறை வருடிப்பார்க்கும்போது வரும் மகிழ்வும் வெறுமனே அவரை ஆயுதத்தில் மோகம் கொண்டவன் என்று காட்டாமல் அவ்வாயுதத்தை தன் மக்களின் அடிமை விலங்குடைக்க கிடைத்த திறவுகோலாகக் காட்டுவதும், அதனை அவர் இலாவகமாக கையாளும் முறையும் நாம் சிறுவயதுமுதல் தலைவரைப் பற்றிக் கேள்விப்பட்டவற்றை மீண்டும் நினைக்கத் தூண்டியது.

தலைவரை நான் சிறுவயதில் பார்த்ததில்லை. ஆனால்  பதின்மவயதுத் தலைவராக வந்த அந்த இளைஞனின் நடிப்பு  எனக்கு அவரைத்  தலைவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. தலைவரின் முகச்சாயல் (அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்), உடல் மொழி, பேசும் வசீகரம், பேசும் சொற்களுக்கும் முக பாவனைக்கும் இடையிலான தொடர்பு, மென்மையான ஆனால் உறுதியான பேச்சு....இப்படிப் பலவிடங்களில் தலைவரே முன்னால் நிற்பதுபோன்ற உணர்வு. தலைவராகக் காட்டப்பட்ட பாத்திரம் கன கச்சிதமாகப் பொறுந்திப்போக சுற்றியிருக்கும் கதாப்பாத்திரங்கள் அதற்கு மெருகூட்ட எமது சரித்திரம் திரையில் காவியமாக்கப்படுவது கண்டு ஆனந்தமும் அதேவேளை ஒப்பற்ற எமது தலைவரை இன்று காணமுடியவில்லையே என்கிற ஆதங்கமும், அவர் வளர்த்த நம்பிக்கையும் எமது விடுதலைப் போராட்டமும் இன்று முற்றாக அழிக்கப்பட்டிருப்பது கண்டு வேதனையும் படத்துடன் சேர்ந்து பயணிக்க வழிந்தோடும் கண்ணீரை துடைக்க மனமின்றி  பார்த்து முடித்தேன்.

தலைவருக்கு அடுத்ததாக வரும் கதாப் பாத்திரங்களில் அவரது தாய் தந்தையரின் பாத்திரங்களும் அழகுசொட்டும் எமது தமிழ் நடையும் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. படம் முழுக்க வரும் "தம்பி" எனும் அந்த மந்திர வார்த்தை எம்மையறியாமலேயே படத்தினுள் எம்மை ஆழ்த்திவைக்க நாம் அறிந்த வரலாற்று நாயகர்களூடு கூறப்பட படத்துடன் மனது ஒன்றித்துப் பயணிக்கிறது.

தமிழுக்கு அமுதென்று பெயர் - இந்தப்பாடலை இந்தப் படத்தில் மட்டும் அல்ல எங்கு கேட்டாலும் எனக்குக் கண்கள் கலங்கும், மனம் வெம்பும். இங்கும் அப்படித்தான். அப்பாடல் இங்கு படமாக்கப்பட்ட விதம் மனதில் இனம்புரியாத பெருமையும், நம்பிக்கையும் ஏற்பட்டுவிடுகிறது.

இப்படத்தில் தொழிநுட்ப ரீதியில் சில திருத்தங்கள் இருக்கலாம், ஆனால் அதுபற்றி பேசவேண்டிய தேவை எனக்கில்லை. என்னைப்பொறுத்தவரை எம் வாழ்வின் ஒப்பற்ற ஒரு மனிதனை இப்படம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவிட்டுச் சென்றிருக்கிறது. அம்மனிதனைப்போலவே இப்படமும் போற்றப்படவேண்டிய ஒரு சொத்து.

முதன்முறையாக எமது தலைவரை தமிழக சினிமாத்தனம் இல்லாது, எமது கண்களினூடாக இயல்பாக தரிசிக்க வைத்த படம். 

இப்படத்தை உருவாக்கியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இறுதியாக, கிட்டு எனும் அந்த மனிதன். அவரது பெயரே அவரின் பால் எனக்கு கவனத்தை இதுவரை இழுத்துவைத்திருக்க, மேதகுவின் மூலம் எனக்கு அவர் மீதான நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள். 

11 hours ago, goshan_che said:

 

எமது தலைவரை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய காட்சிகளில் ஒன்று. அதே மென்மையான, மெதுவான ஆனால் இலட்சிய வெறிகொண்ட பேச்சு. தலைவரைப்போலவே நிறுத்தி நிறுத்திப் பேசும் பாங்கு. அச்சொட்டு !!!

12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்தப்படத்தில் வரும் இந்த பாடல்தான் இன்னமும் காதுகளில் கேட்கிறது.. 

 

இந்த மொழிக்காக உயிரைக் கொடுக்கலாம், தவறேயில்லை !!!

Edited by ரஞ்சித்
spelling

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says '*மேதகு* *திரைப்படத்தை காண்பதற்கு BSvalue App-ல் OTP சிக்கல் வந்தால்.. நேரடியாக www.bsvalue.com க்கு சென்று உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து OTP இல்லாமல் உடனே login செய்து தடையில்லாமல் பார்க்கலாம். osvalue.com/homescreer LOGIN BLACKSHEEP Wishlist niumMovies nium Movies Ind 999 25-6-2021 25-6-2021 12.35PM IST. மேதகு > PROMO Duration: 105Min Currency: INR Price: Rs.70 வெளிநாடு -5$ Dollar மேத்கு www.bsvalue.com o Buy Now'

 

#####################    ###################### #############

தம்பி கிட்டு தமிழினத்தின் ஆகச்சிறந்த திரைக் கலைஞர்களில் ஒருவர்.
ஒரு நிமிடத்திற்குள் அரசியலை பார்வையாளர்களுக்கு கடத்தும் வகையில் அவர் எடுத்த அரசியல் குறும்படங்கள் அத்தனையும் அட்டகாசமானது. அந்த படங்களின் ரசிகன் நான்.
அந்த வகையில் மேதகு என்ற படத்தை ஊர் கூடி தேர் இழுப்பதுபோல் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பங்களிப்புடன் இயக்கியிருக்கிறார்.
பேமிலி மேன் , ஜகமே தந்திரம் போன்ற குப்பைகளுக்கு கிடைக்கும் அனுமதி மேதகுகளுக்கு கிடைப்பதில்லை.
பல்வேறு தடைகள் மற்றும் போராட்டங்களுக்கு நடுவில் இன்று மேதகு படம் bsvalue என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.. நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவும்..
ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கான
முதல் புள்ளியாக ஒரு நியாயம் இருக்கும்.
அப்படியொரு நியாயத்தை
மேதகு படம் பதிவு செய்திருக்கிறது.
ஒற்றை துப்பாக்கியில் ஆரம்பித்த பயணம் ஒரு பெரும் சாம்ராஜ்யமாக விரிவடைந்தது நினைத்து பார்த்தால் பெரும் மலைப்பாக இருக்கிறது.
அந்த வீர வரலாற்றினை பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.. அதில் ஒரு சிறு துளியை தனக்கு தெரிந்த திரைமொழியில் மேதகுவாக பதிவு செய்திருக்கிறார் கிட்டு.
பொருளாதார நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்..
கிடைத்த குறைந்த தொகையில் சொல்ல வந்த நியாயத்தை மேதகு மிகச்சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறது.
இதுபோல்,
நல்ல நிதி பின்புலத்துடன், வீரம் நிறைந்த தமிழ் இனத்தின் விடுதலையை பதிவு செய்யும் திரைக்காவியங்கள் அடுத்தடுத்து வர வேண்டும்..
அந்த தொடர் ஓட்டத்திற்கான முதல் ஒலிம்பிக் ஜோதியை இயக்குனர் கிட்டு குழுவினர் மேதகு படம் மூலம் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்..
வாழ்த்துகள்.. 🙂
-கார்ட்டூனிஸ்ட் பாலா

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

படத்தைப்பற்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை......படக்காட்சிகளுடன் அதன் பின்னர் நடந்த சம்பவங்களும் மனக்கண்ணில் ஓடி ஆங்காங்கே கண்கள் குளமாகின்றன......எம் கண்முன்னே நடந்த எமது வாழ்வின் சில பரிணாமங்களைச் சொல்லும் எளிமையான படம்.......இது ஆரம்பம்.....இதுபோல் தொடர்ந்து வர வேண்டும்.......!

இதில் பங்காற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்......!

திரைப்பட விமர்சனத்திற்கு நன்றி கோஷான். ஆயுத போராட்டத்திற்கு முந்திய எமது வரலாற்று மிக சுருக்கமாக தொட்டு சென்ற படம் என்று இதை கூறலாம். போராட்ட வரலாற்றை முழுக்க முழுக்க தமிழ் மக்கள் பாரவையுடன் எடுத்துள்ளார்கள். படத்தை எடுத்த கலைஞர்களுக்கு பாராட்டுக்கள். நீங்கள் ஏற்கனவே கூறியது போல தமிழர் போராட்டத்தின் மிக முக்கியமான திருப்பு முனையான தமிழாராய்சசி மகாநாட்டு படு கொலைகளை  வரலாற்று திரிபுடன் காட்டியது இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பொயின்ற். நடந்த உண்மையை அப்படியே காட்டி இருக்கலாம். பொலிசார் நேரடியாக தாக்கி மகாநாட்டு ஏற்பாட்டாளர்களை கொன்றதாக மிக பெரிய பொய்யை கூறுவது   எமது போராட்டத்திற்கு மேலும் உதவும் என்று பட இயக்குனர் நினைத்திருக்கலாம்.

இருந்தாலும்  ஒரு சிறந்த கலைப்படைப்பு என்ற ரீதியில் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.