Jump to content

ராமர் பாலம் கட்டவில்லை.....மத்திய தொல்பொருள் ஆரய்ச்சியாளர் துறை அறிவிப்பு !!!


narathar

Recommended Posts

மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை, ஒரு செய்தியயை அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், இருந்த வழக்கில், தொல்பொருள் ஆராய்ச்சித்துறை இன்று அதன் அறிக்கையயை சமர்பித்து இருக்கிறது. அதில் ராமர் இருந்தற்கான, வரலாற்றுப்பூர்வமான, சான்றுகள் ஏதும் இல்லை என்று சொல்லியிருக்கிறது.

இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தில், ராமர் பாலம் என்று கருதப்படுவதை முற்றாக மறுத்துள்ளது, மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித்துறை.

தகவல் உதவி: Press unit Trust of India.

http://news.digitaltoday.in/news/india.jsp...ory&id=8671

Sethusamudram project: Centre denies existence of Rama

Press Trust of India

New Delhi, September 12

In the midst of a political controversy over the Sethusamudram project, the Centre on Wednesday told the Supreme Court that there was no historical evidence to establish the existence of Lord Rama or the other characters in Ramayana.

In an affidavit filed before the apex court, the Archaeological Survey of India (ASI) rejected the claim of the existence of the "Ramasetu bridge" in the area where the project was under construction.

The multi-crore rupee project proposes to provide a shorter sea route from Rameshwaram to Sri Lanka.

Referring to the Ramayana, the affidavit said there is no "historical record" to incontrovertibly prove the existence of the character, or the occurrences of the events, depicted therein

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

In the midst of a political controversy over the Sethusamudram project, the Centre on Wednesday told the Supreme Court that there was no historical evidence to establish the existence of Lord Rama or the other characters in Ramayana.

இராமாயணத்தில் உள்ள எந்த கதாப்பாத்திரனத்தின் இருப்பையும் நிறுவக் கூடிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதுதான் மேலுள்ள ஆங்கில வரியில் சொல்லப்பட்டுள்ளது.

இராவணன் உள்ளடங்க. இராவணன் தமிழன்.. இராமன் ஆரியன்.. இராமாயணம் ஆரிய - திராவிட யுத்தம் என்றது எல்லாமே பொய். நேரு மாமா தொடங்கி அனைவரும் சொன்னது வரலாற்றுத் திரிபு. இராமர் பாலம் அல்லது அடம்ஸ் பாலம் என்று அழைக்கப்பட்ட புவியியல் கூறு மட்டும் உண்மை. நல்ல முடிவு..! இப்போதைக்கு இந்த வடிவ அறிக்கை வரவேற்கத்தக்கது..! :D

அடம்ஸ் பாலம் தொடர்பான வரலாற்றுப் புவியியல் உண்மைகளை கண்டறிய வேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது. எனி இராமர் பாலம் என்று யாரும் அழைக்காதீர்கள். குறித்த புவியியல் கூறுக்கு.. அடம்ஸ் பாலம் என்று பெயரிடுங்கள். அதைத்தான் வெள்ளைக்காரன் எப்பவோ செய்திட்டான்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு... ஆரிய - திராவிட இருப்பை, சண்டையை நிலை நிறுத்த முற்பட்டவர்களுக்கு எதிரான நல்ல அறிவுப்பு. நிச்சயம் அப்படியான வாதங்களை இது நிலைகுலைய வைக்கும்..! வரலாற்றை மாற்றி எழுதத் தூண்டும். இலங்கையின் வரலாற்றை மகாவம்சம் நோக்கித் தள்ளும். தமிழர்களை விட்டு விலக்கும். :lol::lol:

Link to comment
Share on other sites

இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு... ஆரிய - திராவிட இருப்பை, சண்டையை நிலை நிறுத்த முற்பட்டவர்களுக்கு எதிரான நல்ல அறிவுப்பு. நிச்சயம் அப்படியான வாதங்களை இது நிலைகுலைய வைக்கும்..! வரலாற்றை மாற்றி எழுதத் தூண்டும். இலங்கையின் வரலாற்றை மகாவம்சம் நோக்கித் தள்ளும். தமிழர்களை விட்டு விலக்கும். :lol: :D

பல பொய்களால் உருவாக்கப்பட்ட சரித்திரங்கள் ஒருபொய் சரியும்போது மற்றையதை நோக்கி சாய்வது இயல்புதானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல பொய்களால் உருவாக்கப்பட்ட சரித்திரங்கள் ஒருபொய் சரியும்போது மற்றையதை நோக்கி சாய்வது இயல்புதானே.

அதனால் தான் நாங்கள் எப்பவும் குறிப்பிடுகிறோம்.. தமிழர்களின் வரலாற்றைத் தனித்து ஆராய வேண்டும். ஆரிய திராவிடக் கலப்பின்றி எமது வரலாற்றுச் சான்றுகள் அறிவியல் ரீதியாகவும்.. ஆர்கியோகொலொஜி ரீதியாகவும்.. அணுகிப் பெறப்பட வேண்டும். புராண இலக்கியங்களில்.. இராவணனைத் தமிழனாக்கி சா.. திராவிடனாக்கி... இராமனை ஆரியனாக்கி.. ஆரிய - திராவிட கற்பனை சித்தாந்தம் பேசி வரலாறு படைப்போர் சிந்திக்க வேண்டியது இதுவே..!

இலக்கியங்கள் காலப்பதிவுகள் என்ற வகையில் சில புவியியல் கூறுகளை மட்டும் தான் உண்மையாக பிரதிபலித்தனவா என்ற கேள்வி எழுத்தான் செய்கிறது..!

ஆரிய - திராவிட மக்கள் கூட்டம் அடிபட்டது அதை பார்பர்னியர்கள்.. கடவுள், அரக்கன் ஆக்கி விட்டனர் என்பதையும் இந்த அறிவிப்பு.. நிர்மூலமாக்கிவிட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் அப்படி ஒரு யுத்தம் நடந்திருந்தால் மனித எச்சங்கள்.. கிடைத்திருக்கும். போர் தளபாட மீதிகள் கிடைத்திருக்கும். இவை எவையும் இல்லை.. என்பதைத்தான் அறிக்கை சொல்லி இருக்கிறது. இராமாயணம் எனும் புராண இலக்கியம் சொன்ன சில புவியியல் உண்மைகளைத் (இராமர் பாலம் என்று அடையாளம் காட்டப்பட்ட கூறு உள்ளடங்க) தவிர வேறு எல்லாமே பொய். அப்படின்னு.. அறிக்கை தெளிவாகச் சொல்லி இருக்கிறது. :D:lol:

Link to comment
Share on other sites

நாம் மறுபடியும் இந்தத் திரியிலும் ஆரியர் திராவிடர் என்ற விவாதத்தைப் புகுத்தாமல், குறிப்பிட்ட தலைப்புடன் தொடர்புடைய, பின்வரும் விடயங்களில் உங்கள் கருத்துக்களைக் கூறலாமல்லவா ?

- பல்லாண்டுகளாக உண்மை என நினைத்து வணங்கிய இராமர் பொய் என்பது நிரூபிக்கப்பட்டபோது ஏற்படப்போகும் சமூக மாற்றங்கள்.

- இத் தீர்ப்பினால் இந்து மதத்தில் உள்ள ஏனைய கடவுள்களும் கேள்விக்குறியாகிவிட்டால் ஒவ்வொரு மனித மனங்களிலும் எழும் கேள்விகள்.

- மதத்தை அடிப்படையாக வைத்து கட்டியெழுப்பப்பட்ட அரசியல் கட்சிகள், நிறுவனங்களின் எதிர்காலம்.

- ஏனைய மதத்தினரின் முன்பாக இந்து மதத்தினரின் நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் மறுபடியும் இந்தத் திரியிலும் ஆரியர் திராவிடர் என்ற விவாதத்தைப் புகுத்தாமல், குறிப்பிட்ட தலைப்புடன் தொடர்புடைய, பின்வரும் விடயங்களில் உங்கள் கருத்துக்களைக் கூறலாமல்லவா ?

- பல்லாண்டுகளாக உண்மை என நினைத்து வணங்கிய இராமர் பொய் என்பது நிரூபிக்கப்பட்டபோது ஏற்படப்போகும் சமூக மாற்றங்கள்.

- இத் தீர்ப்பினால் இந்து மதத்தில் உள்ள ஏனைய கடவுள்களும் கேள்விக்குறியாகிவிட்டால் ஒவ்வொரு மனித மனங்களிலும் எழும் கேள்விகள்.

- மதத்தை அடிப்படையாக வைத்து கட்டியெழுப்பப்பட்ட அரசியல் கட்சிகள், நிறுவனங்களின் எதிர்காலம்.

- ஏனைய மதத்தினரின் முன்பாக இந்து மதத்தினரின் நிலைப்பாடு.

இராமர் பாலம் விடயத்தில் தான் இராமர் பொய். அயோத்திய இராம ஜென்ம பூமி விவகாரத்தில் இராமர் மெய். அதற்கு நீதிமன்றத்தில் இதே இந்திய அகிழ்வாராச்சி மையம் சான்றுகளை அளித்துள்ளது.

இராமர் அவதாரமாகவே சித்தரிக்கப்பட்டு புராண இலக்கியத்தில் காட்டப்பட்டுள்ளார். இராமர் சார்ந்து எழுந்ததல்ல இந்து மதம். இராமருக்கு முன்னாடியே அது இருக்கு சார். நீங்க ரெம்பவே குழம்பிடுறீங்க.

நீங்க சுற்றிச் சுழன்று எங்க வாறீங்க என்றது புரியுது. ஆனால் விசயத்தில ரெம்ப அவசரப்படுறீங்க. பொறுமையா ஆராய்ஞ்சி பார்த்திட்டு எழுதனும்..! :D

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்!

தயவுசெய்து தவறான தகவல்களைக் கொடுக்க வேண்டாம். அயோத்தி விவகாரத்தில் "ராமர் இருந்தாரா, இல்லையா?" என்பது அல்ல பிரச்சனை. அங்கே ராமர்கோயில் இருந்ததா, இல்லையா? என்பதுதான்.

ராமர்கோயில் பற்றித்தான் இந்திய அகழ்வாராய்ச்சி மன்றம் நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தது. ராமரைப் பற்றி அல்ல.

Link to comment
Share on other sites

நாரதரே!!

மாங்கனியை இங்கு வைத்துவிட்டு எங்கைய்யா நிக்கிறீர். இங்கு திருப்பியும் ஒரு கலம்பகம் தொடங்கும் போலுள்ளது. :D:lol:

Link to comment
Share on other sites

இராமாயணத்தில் உள்ள எந்த கதாப்பாத்திரனத்தின் இருப்பையும் நிறுவக் கூடிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதுதான் மேலுள்ள ஆங்கில வரியில் சொல்லப்பட்டுள்ளது.

இராவணன் உள்ளடங்க. இராவணன் தமிழன்.. இராமன் ஆரியன்.. இராமாயணம் ஆரிய - திராவிட யுத்தம் என்றது எல்லாமே பொய். நேரு மாமா தொடங்கி அனைவரும் சொன்னது வரலாற்றுத் திரிபு. இராமர் பாலம் அல்லது அடம்ஸ் பாலம் என்று அழைக்கப்பட்ட புவியியல் கூறு மட்டும் உண்மை. நல்ல முடிவு..! இப்போதைக்கு இந்த வடிவ அறிக்கை வரவேற்கத்தக்கது..! :D

அடம்ஸ் பாலம் தொடர்பான வரலாற்றுப் புவியியல் உண்மைகளை கண்டறிய வேண்டியது இன்னும் பாக்கி இருக்கிறது. எனி இராமர் பாலம் என்று யாரும் அழைக்காதீர்கள். குறித்த புவியியல் கூறுக்கு.. அடம்ஸ் பாலம் என்று பெயரிடுங்கள். அதைத்தான் வெள்ளைக்காரன் எப்பவோ செய்திட்டான்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு... ஆரிய - திராவிட இருப்பை, சண்டையை நிலை நிறுத்த முற்பட்டவர்களுக்கு எதிரான நல்ல அறிவுப்பு. நிச்சயம் அப்படியான வாதங்களை இது நிலைகுலைய வைக்கும்..! வரலாற்றை மாற்றி எழுதத் தூண்டும். இலங்கையின் வரலாற்றை மகாவம்சம் நோக்கித் தள்ளும். தமிழர்களை விட்டு விலக்கும். :lol::lol:

நெடுக்காலபோவான் பொய் சொலவதற்க்கும் ஒரு அளவு வேணும்,

மேற்கூறிய செய்தியில் இந்திய மத்திய தொல்பொருட் துறை 'இராமர் பாலம் கட்டவில்லை என்று தான் கூறி இருக்கிறது.ஆரிய திராவிட இனக்குழுமங்கள் இல்லை என்றோ ஆரியர் வடக்கில் இருந்து வந்தனர் என்பதையோ இராமாயணம் போன்ற புனைகதைகளை உருவாக்கி தங்களை கடவுளர்களின் தூதர்கள் போலவும் திராவிடரை கீழானவர்கள் என்றும் சொல்லி பல கதைகளைப் புனைந்ததை மறுத்தோ எதனையும் கூறி விடவில்லை.தாங்கள் எதிர் நோக்கிய திராவிட மக்களை அடக்கி ஆளவே இப்படியான கட்டுக் கதைகளைப் புனைந்தனர்.இவற்றை நியாயப்படுத்த இருக்கிற இயற்கையான பூகோளத்தையும் திராவிட மக்களிடம் ஏற்கனவே இருந்த செவிவழிக் கதைகள் போன்றவற்றில் இருந்து தமக்கு ஏற்றவாறு திருத்து எழுதப்பட்டதே இராமயணம். நீங்கள் இங்கே யாழ்க் களத்தில் செய்யும் திருப்புகளைப் போல. உங்கள் திரிப்புக்களை நீட்டி முழங்கிச் செய்வதை நிற்பாட்டவும்.இங்கிருப்பவர் எல்லோரும் மடையர் நான் தான் அதி புதிசாலி எங்கிற நினைப்பில் திரிப்புக்களைச் செய்ய வேண்டாம்.

ஆறிய திராவிட இனக்குழுமங்கள் இருந்தன என்பதை மரபணுவியல், மொழியியல், தொல்பொருட் சான்றுகள் ஏற்கனவே நிருபித்துள்ளது.இது பற்றி நடந்த விவாதத்தில் உங்களால் எந்த ஆய்வையும் காட்ட முடியாது போனதை மீளவும் நினைவு படுத்துகிறேன்.

எனவே பொய்களையும் புரட்டுக்களையும் இங்கே விதைத்து கொண்டிருக்காமல் நேர்மையாக கருத்தாடவும்.

மற்றவர்களை மடையராக்கும் எண்ணத்தில் அதி மேதாவித்தனமாக இப்படி எழுதுவதால் உங்களை எல்லோரும் நகைப்பிக்கிடமான வகையிலேயே பார்க்க வேண்டி இருக்கும்.

திராவிடரின் சரித்திரத்தை ஆரியரின் இராமயணப் புனைகதையை வைத்து எவரும் நிறுவி விடவில்லை.எவ்வாறு இலங்கையில் தமிழரின் சரித்திரம் மகாவம்சத்தால் எழுதப்பட முடியாதோ அதே போல் திராவிடரின் சரிதிரத்தை இராமாயணம் சொல்ல முடியாது.இராமயணம் ஆரியரின் சூழ்ச்சியைப் பறை சாற்றும் ஒரு ஆதாராம் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறிய திராவிட இனக்குழுமங்கள் இருந்தன என்பதை மரபணுவியல், மொழியியல், தொல்பொருட் சான்றுகள் ஏற்கனவே நிருபித்துள்ளது.இது பற்றி நடந்த விவாதத்தில் உங்களால் எந்த ஆய்வையும் காட்ட முடியாது போனதை மீளவும் நினைவு படுத்துகிறேன்.

ஆமாம் நீங்களே ஒட்டி.. தயாவை வெருட்டி.. அவருக்கு மரபணுவியல் தெரியாது என்று பேக்காட்டி.. எல்லாம் பார்த்திட்டுத்தான் இருந்தேன். எந்த இடத்திலும் இந்திய ஆரிய திராவிட கோட்பாட்டாளர்களைத் தவிர எவரும்.. ஆரிய திராவிடம் என்பதை நவீன அறிவியல் ஆய்வூடு சொல்ல விளையல்ல..! குறிப்பா மரபணுவியல்.. ஆரிய திராவிடம் என்ற இனக்குழுங்களை இவைதான் என்று வரையறுத்து.. அவற்றுக்கான அடையாளங்கள் இவை என்று எவற்றையும் வரையறுக்கவும் இல்லை.

நீங்கள் மற்றவர்களை மட்டம் தட்டிக் கருத்தாடி வருவதால் உங்களுக்கு பதில் அளிக்கிறதில பிரயோசனம் இல்லை என்று விட்டிட்டேன்.

அவையே இராமருக்கு அடையாளம் இல்லை இராமர் பாலத்துக்க என்றினம்.. அங்கால அயோத்தில.. இராமர் பிறந்ததும் என்றினம். கோயிலில இருக்கிற ராமர்.. பிறக்காமலா.. இராம ஜென்ம பூமி வந்தது. குழப்பிறது.. நாங்களல்ல.. இந்திய அகழ்வாராய்ச்சி.. மன்னர்களும்.. யாழ் கள ஆரிய திராவிட விசுவாசிகளும். ஏதோ இந்திய அமைப்புகளாம். லஞ்சம் கொடுத்தா எல்லாம் அறிக்கைல வரும். அப்படியான நாடு அது. இதையெல்லாம் நம்பி.. அதுவும் உங்க கூட கருத்தாடினா.. மரபணு தெரியாததுகள் என்று எங்களையும் உங்க லெவலுக்கு கொண்டு வந்திருவீங்க சாமி. நீங்களும்.. உங்கட ஆரியமும் திராவிடமும். கட்டி பத்திரமா வைச்சி.. பெரியாருக்கு படைச்சு தீபம் காட்டுங்க. :):lol:

நவீன ஆய்வுகள் தெளிவாகச் சொல்கின்றன.. ஆரிய.. திராவிடம் எல்லாம் சுத்துமாத்து என்று. அதற்கான ஆதாரங்கள் போதிய அளவுக்கு இங்கு கொடுத்து விளக்கியாச்சு. பழைய வரலாற்றுக் குறிப்புகளை.. மாறி மாறி.. சோடிச்சிட்டு.. மரபணு அப்படிச் சொல்லுது.. சாதி இருக்கு எண்டுது... சாதிய அடிப்படைல மரபணு வேறுபடுகுது.. என்று.. இந்திய சாதியத்தை அடிப்படையாகக் கொண்டு.. அதுக்குள்ள நின்று சோடிச்சதுகள் எல்லாம் ஆய்வு..???! நடுநிலையோடு நியோர்க் ரைம்ஸ் போட்டது குப்பை..! :lol::)

நெடுக்காலபோவனைப் பார்த்து சிரிக்கிறது இருக்கட்டும்... திராவிடருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பை விளக்கும் அல்லது சான்று பகரும்.. நவீன மரபணு ஆய்வு முடிவை ஒருக்கா தாறீங்களா சார். சும்மா அவிழ்காதேங்க. இங்க வேகாது உங்க பருப்பு.

ஆரிய கொள்கையே நாசியத்தின் பிரச்சாரம் என்பதை இஸ்ரேலியர்கள் தெளிவாக நிறுவி உள்ளனர். அண்மையில் அதைக் கூட இணைத்திருந்தேன். அதுமட்டுமன்றி.. இதுதான் ஆரிய இயல்புகள்.. இவைதான் திராவிட இயல்புகள் என்று மனிதரில் எதுவும் மரபணுவியல் ரிதியா பாகுபடுத்தப்படல்ல.

சும்மா ஜீன் பூல் எண்டியள்.. அதாம் இதாம் எண்டியள்.. என்ன அடிப்படைல ஆய்வுகள் செய்யுறாங்க என்பதையே புரியாம.. ஜீன் பூல்.. சுமிங் பூல் என்று தயாவை வெருட்டினாப் போல.. ஒட்டித் தள்ளினாப் போல.. அதெல்லாம் ஆரிய திராவிட நிறுவல் ஆகிடாது சார். :) :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்!

தயவுசெய்து தவறான தகவல்களைக் கொடுக்க வேண்டாம். அயோத்தி விவகாரத்தில் "ராமர் இருந்தாரா, இல்லையா?" என்பது அல்ல பிரச்சனை. அங்கே ராமர்கோயில் இருந்ததா, இல்லையா? என்பதுதான்.

ராமர் கோயில் பற்றித்தான் இந்திய அகழ்வாராய்ச்சி மன்றம் நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தது. ராமரைப் பற்றி அல்ல.

இங்க மட்டும் என்ன பிரச்சனை... பாலத்தை இராமர் கட்டினாரா இல்லையா என்பதுதானே...???! இல்லாத இராமருக்கு எப்படி சார் கோவில் வரும்.. ஜென்ம பூமி வரும்..>>>???!! இப்ப தானே சொல்லி இருக்கிறீங்க.. இராமரோ.. இல்ல இராமாயண கதாப்பாத்திரங்களோ இருந்ததுக்கு சான்றில்லை என்று. அப்ப ஒட்டுமொத்த இராமாயணமும்.. பொய். அப்ப எப்படி அயோத்தியும்.. இராம ஜென்பம் பூமியும்.. மட்டும் கோயிலோட இருக்க முடியும். இராமரே இருக்கல்ல.. அப்படி எனும் போது அவர் பிறந்த இடமென்று சொல்லி எப்படி கோயில் கட்டி இருப்பாங்க. அப்ப அது இராமர் கோவில் அல்ல.. நபிகள் நாயகம் வந்த பள்ளிவாசலே...>>>??! என்றால்.. ஏற்றுக் கொள்ளத்தானே வேணும். :lol::lol:

http://en.wikipedia.org/wiki/Ram_Janmabhoomi

Link to comment
Share on other sites

இங்க மட்டும் என்ன பிரச்சனை... பாலத்தை இராமர் கட்டினாரா இல்லையா என்பதுதானே...???! இல்லாத இராமருக்கு எப்படி சார் கோவில் வரும்.. ஜென்ம பூமி வரும்..>>>???!! இப்ப தானே சொல்லி இருக்கிறீங்க.. இராமரோ.. இல்ல இராமாயண கதாப்பாத்திரங்களோ இருந்ததுக்கு சான்றில்லை என்று. அப்ப ஒட்டுமொத்த இராமாயணமும்.. பொய். அப்ப எப்படி அயோத்தியும்.. இராம ஜென்பம் பூமியும்.. மட்டும் கோயிலோட இருக்க முடியும். இராமரே இருக்கல்ல.. அப்படி எனும் போது அவர் பிறந்த இடமென்று சொல்லி எப்படி கோயில் கட்டி இருப்பாங்க. அப்ப அது இராமர் கோவில் அல்ல.. நபிகள் நாயகம் வந்த பள்ளிவாசலே...>>>??! என்றால்.. ஏற்றுக் கொள்ளத்தானே வேணும். :lol::)

ஆமாம். இன்று உலகில் ராமருக்கு எங்குமே கோவில் இல்லை. அதெல்லாம் சும்மா. :lol::)

மிக வேடிக்கையாக இருக்கிறது.

அவர்கள் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள். இராமாயண கதாபாத்திரங்களை நிறுவ எந்தவித புதைபொருள் தடயங்களும் இல்லை என்று. கோவில்கட்டி கும்மியடிப்பது மக்களின் பிரச்சனை. இந்த இரண்டையும் ஏன் ஒன்றாக்குகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். இன்று உலகில் ராமருக்கு எங்குமே கோவில் இல்லை. அதெல்லாம் சும்மா. :lol::lol:

மிக வேடிக்கையாக இருக்கிறது.

அவர்கள் தெளிவாகவே சொல்லி இருக்கிறார்கள். இராமாயண கதாபாத்திரங்களை நிறுவ எந்தவித புதைபொருள் தடயங்களும் இல்லை என்று. கோவில்கட்டி கும்மியடிப்பது மக்களின் பிரச்சனை. இந்த இரண்டையும் ஏன் ஒன்றாக்குகிறீர்கள்?

இராம ஜென்ம பூமி மட்டும் இராமாயண அடிப்படையில்லாமல் எழுந்ததா...????! அயோத்தியில் இராமர் பிறந்தார் என்பது வேறேதாவது இதிகாச புராணங்களில் கூறப்பட்டுள்ளதா..??! இராமர் பற்றிய புராண இலக்கியமாக இராமாயணம் தானே விளங்குகிறது...??!

இராமாயணத்தில் உள்ள இராமரின் மற்றும் கதாப்பாத்திரங்களின் existence க்குத்தான் ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளதே தவிர.. இராமாயணத்தில் உள்ள இராமரின் மற்றும் கதாப்பாத்திரங்களின் presence இராமர் பாலத்தில் இல்லை என்பதாக அந்த வரி விளக்கம் சொல்லவில்லை. முழு இராமாயணத்துக்குமான இராமரின் மற்றும் பிற கதாப்பாத்திரங்களின் இருப்புக்கும் சான்றில்லை எங்கிறது. இராமர் பாலத்தில் என்று வரையறுத்து மட்டும் சொல்லவில்லை. இது மிக முக்கியமா கவனிக்க வேண்டிய விடயம்.

காரணம்.. இல்லாத இராமருக்கு எப்படி.. ஜென்ம பூமி.. அயோத்தியில் வரும்...????! அங்கு கோவில் வரும்...???! கோவில் எங்கும் இருக்கலாம். அது மக்களின் மத உரிமை. ஆனால் இராமாயண அடிப்படையில் அயோத்தியும்.. இராமர் பிறப்பும்.. ஜென்ம பூமியும்.. கோயிலும் நெருங்கி நிற்கின்றனவே. அங்கே இராமருக்கு ஆலயம் இருந்ததும்.. இராமர் பிறந்த இடமும் அதுதான் என்று நிறவ வரலாற்றுச் சான்றுகளை தேடியவர்கள்.. இன்னோர் இடத்தில்.. மொத்த இராமாயண பாத்திரங்களுக்கும் வரலாற்றுச் சான்றில்லை எங்கிறார்கள் இது அவர்களுடைய முரண்பாட்டைக் காட்டவில்லையா..??!

இராமர் பாலத்தில் இராமரின் மற்றும் இராமாயண கதாப்பாத்திரங்களின் பிரசன்னம் (presence) இல்லை என்பது வேறு. இராமர் மற்றும் இராமாயண கதாப்பாத்திரங்களின் இருப்புக்கு (existence) ஆதாரம் இல்லை என்பதும் வெவ்வேறானவை. அதனால் தான் எனது சந்தேகத்தை கிளப்பினேன். அதில் தவறிருப்பதாக நான் கருதவில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் இருந்ததற்கான சான்றுகள் இல்லை!

சுப்ரீம் கோர்ட்டில் தொல்பொருள்துறை!!

வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007

டெல்லி:

ராமர் இருந்ததற்கான ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை. மேலும், ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டதற்கான ஆதாரங்களும் இல்லை. அது இயற்கையாக உருவானதாகவும் என்று மத்திய தொல்பொருள்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராமர் பாலத்தை இடிக்கத் தடை விதிக்கக் கோரி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் ராமர் பாலத்திற்கு சேதம் விளைவிக்க இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய தொல்பொருள்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதன்படி மத்திய தொல்பொருள்துறை உச்சநீதிமன்றத்தில் பதில் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அதில், ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதற்கு என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. வரலாற்றுச் சான்றுகளிலும் அதுகுறித்து எதுவும் இல்லை.

இதிகாசங்களில் கூறப்படுபவை எல்லாம் வரலாற்றுச் சான்றுகள் கிடையாது. அதில் உள்ள நிகழ்வுகளும் (ராமாயணம்), பாத்திரங்களும் (ராமர்) உண்மையானவை என்று கூற முடியாது.

ராமர் பாலம் என்று கூறப்படுவது இயற்கையான மணல் திட்டுக்களால் ஆன வடிவமாகும். பல நூற்றாண்டுகளாக இது இருந்து வருவதால் இறுகிப் போய் அசைக்க முடியாத ஒரு பால அமைப்பு போல மாறியுள்ளது.

இது ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால்தான் இந்த பாலம் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை எந்த ஆய்வையும் இதுவரை நடத்தவில்லை.

இந்த பால அமைப்பு உருவாகி 1 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளாகியிருக்கக் கூடும். ஆனால் மனுதாரர்கள் கூறுவது போல ராமாயண காலத்தில் இது உருவாகவில்லை.

ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலை மன்னாருக்கும் இடையிலான இந்த பாலம், கிமு 18,000க்கும், கிமு. 70000க்கும் இடைப்பட்ட காலத்திற்குள் உருவாகியிருக்க வேண்டும். அப்போது கடல் மட்டம் இந்தப் பாலத்தை தொடவில்லை. எனவே இந்தப் பாலம் வழியாக இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் போய் வந்திருக்கலாம், வியாபாரம் கூட நடந்திருக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அத்வானி கடும் கண்டனம்:

மத்திய தொல்பொருள்துறையின் இந்த அறிக்கைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தொல்பொருள் துறை தாக்கல் செய்த மனு விவரங்கள் வெளியானவுடன் பாஜக மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து தொல்பொருள் துறையின் அறிக்கையில் ராமர் இருந்தற்கு சான்றுகள் கிடையாது என்று கூறியிருப்பதற்கு கடும் கண்டனமும், ஆட்சேபனையும் தெரிவித்தார்.

இந்த அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

-தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

அயோத்தியில் ராமர் கோயில் இருந்திருக்கக்கூடும்.

ஆனால் அது ராமர் இருந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை.

அங்கே ராமர் என்று ஒருவர் இருந்தார் என்றும், அயோத்தி ராமர் பிறந்த இடம் என்றும் நம்பியர்வர்கள், தாம் நம்பிய ராமருக்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள் என்பதற்கான ஆதாரம்தான் அது.

யாரும் முட்டாள்தனமாக எதையும் நம்பலாம். நம்பிக் கோயிலும் கட்டலாம். கோயில் இருக்கிறது என்பதற்காக அவர்கள் நம்பியதும் இருந்தது என்று அர்த்தம் இல்லை.

Link to comment
Share on other sites

உப்பிடிப் பாத்தா இன்னமும் 100...200 வருடங்களில் "வரலாற்று எச்சங்களின்" அடிப்படையில் அபிராமி அம்மன் டென்மார்கில கூட உயிர் வாழ்ந்திருப்பா என்றும் அப்படியே கடவுள் இருக்கிறார் என்று அங்கு இன்று நடக்கும் அதிசயங்களை வைத்தும் பக்த்தர்களின் எண்ணிக்கையை வைத்தும் நிறுவப்படுமோ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே வகை யானை இனங்கள் உள்ளன. ஆகவே ஒருகாலத்தில் இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலத்திட்டாய் இருந்திருக்க வேண்டும். தனிப்படுத்துகை மூலம் ஆபிரிக்கயானை இனங்கள் சற்று உருமாற்றம் பெற்றது போல இங்கு நடைபெறவில்லை. பூகற்பவியல் ரீதியில் மிகப்பிற்பட்ட காலத்திலேயே இலங்கை இந்தியாவிடமிருந்து சுனாமியாற் பிரிந்திருக்க வேண்டும். அதன்பிறகும் மக்கள் இருபுறங்களுக்கும் ஆழங்குறைந்த பகுதியூடாகப் போய்வந்திருக்கலாம். அரசர்கள் சில கற்களைப்போட்டு படைநடத்திச் சென்றுகூட இருக்கலாம். ஆகவே ஏதோ ஒன்று நடந்திருக்கிறது.

ஹரப்பா மொகஞ்சரொப் பகுதிகளுக்கு வந்த வெள்ளை இனத்து ஆரியர்கள் அங்கிருந்த கறுப்பின மக்களோடு செய்த பதினெட்டு வருடகால யுத்தமே இன்று தேவாசுர யுத்தமாகக் கணிக்கப்படுகிறது.

இராமர் போன்றவர்கள் வில்லம்பு வைத்திருந்த ராசாக்களேயாவர். இராமாயணத்தில் வரும் அறிவுக்கொவ்வாத புழுகுகளைப் புறமொதுக்கிவிட்டுப் பார்த்தால் அதையும் ஒரு சரித்திர நூலாக ஏற்று மேலும் ஆராய்ச்சிகளைத் தொடரமுடியும். இருக் வேதமும் இவ்வாறே தற்காலத்தில் சரித்திரச் சான்றுகளைத் தரும் நூலாகக் கருதப்படுகின்றது. ஒன்றில் புராணத்தனமான செய்திகளைக் கண்ணை மூடிக்கொண் ஏற்பது அல்லது விஞஞானத்தனமான செய்திகளை முற்றாக நம்புவது என்னும் நிலைப்பாடு மாறி புராணக்கதாபாத்திரங்களும் அக்காலத்தில் வாழ்ந்த சாதாரண மனிதர்களேயென்ற அணுகுமுறையோடு நோக்கினால் வரலாற்றை ஓரளவு புரிந்துகொள்ளமுடியும். ராகுலசங்கிருத்தியாயன் போன்றவகளின் புத்திஜீவிப் பார்வை பலரிடம் இல்லை. ஆரிய திராவிட இருப்பை மறுப்பதற்குப் புராணங்களையும் இதிகாசங்களையும் முற்றாக மறுக்கும் அணுகுமுறையைச் சிலரும், அவற்றை அப்படியே ஏற்கும் அணுகுமுறையைச் சிலரும் கொள்கின்றனர். அப்படியல்லாமல் புராணங்களைச் சரித்திரச்சான்றுகளாகவும் அவற்றின் கதாபாத்திரங்களைச் சாதாண மனிதர்களாகவும் நோக்கி அணுகும்போது ஆரிய திராவிட இருப்பின் உண்மை தெரியவரும். அக்காலத்தில் நிறையப் போர்கள் நடந்திருக்கின்றன. மக்கள் ஒதுங்கி வாழ்ந்தாதால் பல்வேறு மொழிகள் இந்தியாவில் உருவாகியிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் இனக் குழுமங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையின்மையே. தெற்காசியர்களின் நிறம் மண் நிறமாக மாறிப் போனதற்கான காரணம் அது சீன, ஆரிய, கறுப்பினங்களின் கலவையால் உண்டானதால் இருக்கலாம். இதற்கு வெகுகாலம் முந்தியே கறுப்புத் திராவிட இனங்கள் இந்தியாவில் வாழ்ந்திருக்கின்றன. ஆனால் இன்று இருப்பது கலப்பினமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயோத்தியில் ராமர் கோயில் இருந்திருக்கக்கூடும்.

ஆனால் அது ராமர் இருந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை.

அங்கே ராமர் என்று ஒருவர் இருந்தார் என்றும், அயோத்தி ராமர் பிறந்த இடம் என்றும் நம்பியர்வர்கள், தாம் நம்பிய ராமருக்கு ஒரு கோயிலைக் கட்டினார்கள் என்பதற்கான ஆதாரம்தான் அது.

யாரும் முட்டாள்தனமாக எதையும் நம்பலாம். நம்பிக் கோயிலும் கட்டலாம். கோயில் இருக்கிறது என்பதற்காக அவர்கள் நம்பியதும் இருந்தது என்று அர்த்தம் இல்லை.

இவ்வளவு மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருக்கின்ற போது.. இராமர் என்ற நம்பிக்கை.. இராமாயண அடிப்படையில் வர வேண்டிய தேவை என்ன..??! அயோத்தியே இராம ஜென்ம பூமி என்று வரக் காரணம் என்ன..??! சிவனை நம்புகிறார்கள்.. எங்காவது சிவன் ஜென்ம பூமி என்று ஒன்றிருக்கா..???! புராண அடிப்படைகளில் இருந்துதான் அவை எழுகின்றன. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் இருந்தது என்றால்.. அதுவும் இராமாயணம் கூறியபடி.. அயோத்தியில் இருந்தது என்று நிறுவ முற்பட்டவர்கள்.. இப்ப இராமாயணத்தின் படி இராமரின் இருப்பே இல்லை என்று விட்டார்களே. அப்போ.. இராம ஜென்ம பூமி என்பது இல்லை. அங்கு வெறும் கோவில் போன்ற ஒரு அமைப்புத்தான் இருந்தது. அப்ப ஏன் பாபர் மசூதியை இடிக்கனும்..??! அதை இதே காங்கிரஸ் அரசு அனுமதிக்கனும்...???! :lol::)

சபேசன்.. நீங்கள் இங்கு வைக்கும் கருத்து வெட்கக் கேடானது. காரணம்.. உங்கள் இராவணனும் இல்லை என்று விட்டார்கள். நீங்கள் தான் அவனை தமிழனாக்கி காட்டினீங்களே. எனி சொல்வீர்கள் போல.. தமிழ் மன்னன் இருந்தான்.. அவனின் செல்வாக்கை அறிந்த பார்பர்னர்கள்.. இராமாயணம் என்ற கட்டுக்கதைக்குள்.. அவனை இழுந்து பார்பர்ன மன்னனான இராமனால் அவன் தோற்கடிக்கப்பட்டதாக சித்தரித்து ஆரிய - திராவிட வாதத்தை நிறுவினர் என்று.

இராமாயணத்தில் உச்சரிக்கப்பட்ட புவியியல் கூறுதான் உண்மை. ஆனால்.. இலங்கையிலோ... இல்ல பாலத்திலோ.. இராமாயணம் சொல்லும் காலத்தில் யுத்தம் நடந்ததற்காக எந்த வரலாற்றுச் சான்றும் இல்ல அப்படித்தான் அகழ்வாராய்ச்சி செய்யாமலே.. முடிவு கட்டினம்...??! அப்படி இருக்க.. எப்படி.. தமிழ் மன்னன் - ஆரிய மன்னன்... யுத்தம் செய்திருப்பினம்....??!

இது ஒரு வரலாற்றுச் சின்னம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால்தான் இந்த பாலம் குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை எந்த ஆய்வையும் இதுவரை நடத்தவில்லை. - தற்ஸ் தமிழ்.

அகழ்வாரராய்ச்சி எதுவும் செய்யாமலே.. அகழ்வாராய்ச்சி அறிக்கை சமர்பித்த ஒரே டிப்பாட்மெண்ட் இந்திய அகழ்வாராய்ச்சி.. நிறுவனம் தான்..! இராமர் பாலம் வரலாற்று முக்கியமானதில்லை என்று கருதி தாங்கள் அகழ்வாராய்ச்சி செய்யல்லையாம். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கினமாம்...???! எங்கையோ உதைக்குதே...???! :lol::)

இப்படி பல விடயங்கள் சங்கிலித் தொடராக தொக்கு நிற்கும்...! :):huh:

Link to comment
Share on other sites

நான் தொடர்ந்து சொல்லி வருகின்ற விடயம் உங்களுக்கு இன்னமும் விளங்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு குழந்தைப் பிள்ளைக்கு விளங்கப்படுத்தவது போல் நான் என்னுடைய கருத்தை இங்கே பல முறை சொல்லியிருக்கிறேன்.

இப்பொழுது இன்னும் ஒரு முறை சொல்கிறேன்.

1. ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புனைகதை.

2. திராவிடர்கள் அந்தக் கதையில் அரக்கர்களாகவும் குரங்குகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

3. ஆரியார்கள் உயர்ந்தவர்களாகவும் தெய்வ சக்தி மிக்கவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

4. ஆரியர்களின் தலைமைத்துவம் "ராமர்" என்பதன் மூலம் குறிக்கப்படுகிறது

5. திராவிடர்களின் தலைமைத்துவம் "இராவணன்" என்பதன் மூலம் குறிக்கப்படுகிறது

6. அன்றைய ஒட்டுக்குழுக்கள் "சுக்கிரீவன், அனுமான், விபீடணண்" போன்றவர்கள் மூலம் குறிக்கப்படுகிறது

இங்கே குறிப்பிடப்படுகின்ற பாத்திரங்கள் அன்றைக்கு இருந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. இதை அப்படி விளங்கிக் கொள்ளக்கூடாது. அன்றைக்கு இருந்தவர்கள் இவ்வாறான கற்பனைப் பாத்திரங்கள் மூலம் குறிக்கப்படுகிறார்கள் என்பதே அர்த்தம்.

இராவணன் இருந்தான் என்பதற்கும் திராவிட மக்களின் தலைமைத்துவத்திற்கு இராமாயணம் "இராவணன்" என்ற குறியீட்டை வழங்கியது என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இங்கே நாம் இராவணன் என்ற குறியீட்டை உயர்த்திப் பேசுவது, "இராமன்" என்ற குறியீட்டிற்கு எதிரான கலகம்தான். "இராவணன்" என்று ஒருவன் இருந்தான் என்று நான் சொல்வதாக அதை அர்த்தப்படுத்தக்கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொடர்ந்து சொல்லி வருகின்ற விடயம் உங்களுக்கு இன்னமும் விளங்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஒரு குழந்தைப் பிள்ளைக்கு விளங்கப்படுத்தவது போல் நான் என்னுடைய கருத்தை இங்கே பல முறை சொல்லியிருக்கிறேன்.

இப்பொழுது இன்னும் ஒரு முறை சொல்கிறேன்.

1. ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு புனைகதை.

2. திராவிடர்கள் அந்தக் கதையில் அரக்கர்களாகவும் குரங்குகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

3. ஆரியார்கள் உயர்ந்தவர்களாகவும் தெய்வ சக்தி மிக்கவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.

4. ஆரியர்களின் தலைமைத்துவம் "ராமர்" என்பதன் மூலம் குறிக்கப்படுகிறது

5. திராவிடர்களின் தலைமைத்துவம் "இராவணன்" என்பதன் மூலம் குறிக்கப்படுகிறது

6. அன்றைய ஒட்டுக்குழுக்கள் "சுக்கிரீவன், அனுமான், விபீடணண்" போன்றவர்கள் மூலம் குறிக்கப்படுகிறது

இங்கே குறிப்பிடப்படுகின்ற பாத்திரங்கள் அன்றைக்கு இருந்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. இதை அப்படி விளங்கிக் கொள்ளக்கூடாது. அன்றைக்கு இருந்தவர்கள் இவ்வாறான கற்பனைப் பாத்திரங்கள் மூலம் குறிக்கப்படுகிறார்கள் என்பதே அர்த்தம்.

இராவணன் இருந்தான் என்பதற்கும் திராவிட மக்களின் தலைமைத்துவத்திற்கு இராமாயணம் "இராவணன்" என்ற குறியீட்டை வழங்கியது என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

இங்கே நாம் இராவணன் என்ற குறியீட்டை உயர்த்திப் பேசுவது, "இராமன்" என்ற குறியீட்டிற்கு எதிரான கலகம்தான். "இராவணன்" என்று ஒருவன் இருந்தான் என்று நான் சொல்வதாக அதை அர்த்தப்படுத்தக்கூடாது.

நீங்கள் சொன்னது எவையுமே வரலாற்றுச் சான்றுகள் அடிப்படையில் அமையல்ல. பார்பர்னர்கள்.. அப்படிச் சொல்லி இருக்கலாம்.. இப்படிச் சொல்லி இருக்கலாம் என்று சொல்கிறீர்களே தவிர..??! இராமர் பாலத்தை.. கடந்து வந்த திராவிடர்களின் எச்சங்கள் எங்கே...???! தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளிலும் சரி.. சிங்களவர்கள் வாழும் பகுதிகளிலும் சரி.. இதற்கான எச்சங்கள் கிடைக்கல்ல...???! போர் நடந்ததற்கான அறிகுறியே கிடைக்கல்ல இன்னும்..! அப்படி இருக்க...???! இராமர் படை -- ஆரியரானதும்.. இராவணன் படை - திராவிடர் ஆனதும் எப்படி..???!

இராமாயணம் சொன்னது போல நீங்கள் குறிப்பிடுவது போல..அப்படி ஒரு ஆரிய - திராவிட யுத்தம் நடந்திருந்தால்.. அதன் எச்சங்கள் சான்றுகள் கிடைத்திருக்கும். பெரு நகரங்கள் இருந்த அடையாளங்கள் இருந்திருக்கும்...???! ஆனால் இல்லையே...???! அப்படி ஒன்று கிடைத்திருந்தால்.. இராமாயணம்... நிறுவப்பட்டிருக்குமே..??! இராமாயணம் நிராகரிக்கப்படும் போது அது சார்ந்து எழும் பார்பர்ன எதிர்ப்பு திரிபுகளும் நிராகரிக்கப்படுகின்றன. இந்த இலகு உண்மை புரியாமல்.. அடுத்தவர்களை சிறுபிள்ளை என்பதில் உள்ள சிறுமைத்தனத்தை நீங்கள் உணரத்தவறுகிறீர்கள்.

எப்படி இராமாயணத்துக்கு தற்போதுள்ள வடிவில் சான்றுகள் இல்லையோ.. அதுபோல.. உங்களின் ஆரிய - திராவிடத் திரிபுக்கும் சான்றுகள் இல்லை.

நீங்கள் பார்பர்ன எதிர்ப்பு என்ற கற்பனையை கதைக்குள் திணிப்பது போலவே எல்லாம் நடக்கிறது. :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வது சரி!

இராமன் இல்லாமல் போகின்ற பேர்து இராவணன் என்பது இல்லாமல் போய்விடும். காரணம் அவைகள் உண்மையானவைகள் அல்ல. இரு சித்தாந்தகள் கொண்டிருக்கும் குறியீடுகளில் இரண்டுதான் அவைகள்

அதே போன்று

பார்ப்பனியம், ஆரியம், இந்துத்துவம் என்பவைஇல்லாமல் போகின்ற போது திராவிடம் என்பதும் இல்லாமல் போய் விடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி!

இராமன் இல்லாமல் போகின்ற பேர்து இராவணன் என்பது இல்லாமல் போய்விடும். காரணம் அவைகள் உண்மையானவைகள் அல்ல. இரு சித்தாந்தகள் கொண்டிருக்கும் குறியீடுகளில் இரண்டுதான் அவைகள்

அதே போன்று

பார்ப்பனியம், ஆரியம், இந்துத்துவம் என்பவைஇல்லாமல் போகின்ற போது திராவிடம் என்பதும் இல்லாமல் போய் விடும்

அப்ப திராவிடத்தை நிலை நிறுத்த ஆரியம்.. பார்பர்னியம்... இந்துத்துவம் - (இந்துத்துவம் என்பது இந்துமதப் போதனையல்ல. மாறாக இந்து மத வெறி. இந்து மதம் போதிக்கவில்லை அதை. எப்படி ஆரிய திராவிட கற்பனை வெறி இருக்கோ அப்படி.. ஒன்றுதான் இந்துத்துவம் ) வேணும் என்றீங்க...! நல்ல சித்தாந்தம். சித்தாந்தத்தைக் காக்க சித்தாந்தங்கள் தேவை. ஆனால் அவை மெய்ப்படும் என்று கனவு காண்பதும் பலிக்காது.

ஆனால் நாங்கள் தமிழர்கள் என்ற மெய்யில் இருந்து தேடல் செய்கிறம். அதனால் சித்தாந்தங்கள் பேசுவது பற்றியோ.. அல்லது அவற்றின் வீழ்ச்சி பற்றியோ நமக்கு கவலையில்லை. தமிழர்கள் தேட வேண்டியது அறிவியல் கொண்டதான உலக அங்கீகாரமுள்ள..தங்கள் இருப்புக்கான வரலாற்று உண்மைகளேயே அன்றி.. சித்தாந்தங்களுக்குள் உள்ள சித்தரிப்புக்களை அல்ல..! அவற்றுக்கு முக்கியமளித்தலும் அவசியமில்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாண்டுகளாக உண்மை என நினைத்து வணங்கிய இராமர் பொய் என்பது நிரூபிக்கப்பட்டபோது ஏற்படப்போகும் சமூக மாற்றங்கள்.

இராமர் தான் இல்லை என்று சொல்லி இருகிறாங்க மற்ற கடவுள்களை பற்றிய தீர்ப்பு என்னும் நீதிமன்றத்தால் வழங்கபடவில்லை ஆகையால் சமூகத்தில் மாற்றங்கள் பெரிதாக வரபோகிறது இல்லை,இராமருக்கு பதிலாக புலத்தில புதுசாமி உண்டாக்க நாங்கள் முழுமூச்சாக பாடுபடுவோம் என்று இத்தால் உறுதியாக கூறுகிறோம்.

Link to comment
Share on other sites

நெடுக்காலபோவான்!

நீங்கள் சொல்வது மீண்டும் சரி!

அறிவியல்ரீதியாகத்தான் எல்லாவற்றையும் அணுக வேண்டும். அறிவியல்ரீதியாக அணுகுவதால்தான் நாம் அன்றிலிருந்து இன்று வரை ராமன் என்ற கடவுள் இல்லையென்றும், ராமன் என்பவனும் குரங்குகளும் இணைந்து பாலம் கட்டவில்லை என்றும் சொல்லி வருகின்றோம்.

அறிவியல்ரீதியாக அணுகித்தான் நிறைய விடயங்கள் சொல்கிறோம். ஆனால் சிலர் இங்கே எதையும் அறிவியல்ரீதியாக அணுகாமல், ராமன், பிள்ளையார் போன்றவைகளை நம்பி வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

சா ராமர் பாலம் கடலுக்குள்ளே போகாம இருந்தா எவளவு சனம் போட்டில் போய் இறந்து இருக்க மாட்டார்கள்............. சரி பொனது போகட்டும் இப்பவாது அதை உடக்காம பத்திரப்படுத்தினா இலங்கையை விட்டு தமிழரை அடிச்சு விரட்டும் போது சிறுவர்களை தோளில் தூக்கி கொண்டு பெரியவர்கள் நெஞ்சளவு தண்ணீ தானே என்று நடந்து இந்தியா போகலாம் பலத்துக்கு மேலாக...............................

:lol: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மிட்சுகோ டோட்டோரி கட்டுரை தகவல் எழுதியவர், மரிகோ ஓய் பதவி, வணிகச் செய்தியாளர் 33 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸின் (JAL) புதிய தலைவராக மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்படார். அவரது நியமனம், அந்நாட்டின் பெருநிறுவனத் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஜப்பான் ஏர்லைன்ஸின் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டோட்டோரியின் வாழ்க்கைப் பயணம் உத்வேகமானது. ஆரம்பத்தில் ஒரு சிறிய அளவிலான விமான நிறுவனத்தில் கேபின் குழு உறுப்பினராக (விமானப் பணிப்பெண்ணாக) அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது ஜப்பான் ஊடகங்கள் டோட்டோரியின் நியமனம் பற்றி வெளியிட்டுள்ள தலைப்புச் செய்திகளில் 'முதல் பெண் தலைவர்' மற்றும் 'முதல் முன்னாள் விமானப் பணிப்பெண்' , 'அசாதாரண நியமனம்' என்று பலவாறு குறிப்பிட்டு வருகின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான மிகச் சிறிய விமான நிறுவனமான ஜப்பான் ஏர் சிஸ்டம் (JAS) என்னும் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக டோட்டோரி பணிபுரிந்தார். அதைக் குறிப்பிட்டு, 'இவரெல்லாம் ஒரு விமான நிறுவனத்தின் தலைவரா?' எனும் தொனியில் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ள ஒரு வலைதளம் அவரை 'ஒரு அந்நிய மூலக்கூறு' என்றும் 'ஒரு விகாரம்' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது. டோக்கியோவில் இருந்து பிபிசியிடம் உரையாடிய டோட்டோரி, "அந்நிய விவகாரம்’ பற்றியெல்லாம் தனக்குத் தெரியாது," என்று கூறி சிரிக்கிறார்.   இவ்வளவு விமர்சனங்கள் ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் விமான நிறுவனங்கள் வழக்கமாக உயர்மட்ட பதவிகளுக்கு வசதியான மேல்தட்டு பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும். டோட்டோரி இந்த ‘எலைட் (மேல்தட்டு)’ வரையறைக்குள் இல்லை. இதற்கு முன் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவர்களாகப் பதவி வகித்த 10 பேரில் ஏழு பேர் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். ஆனால், டோட்டோரி மிகவும் சாதரணமான பெண்கள் ஜூனியர் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஜப்பானை பொறுத்தவரையில், 1%-க்கும் குறைவான முன்னணி நிறுவனங்களில்தான் பெண்கள் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். டோட்டோரியின் நியமனத்தைத் தொடர்ந்து, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இந்த 1% நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. மேலும் பேசிய டோட்டோரி, "நான் என்னை முதல் பெண் தலைவர் என்றோ தலைவரான முதல் விமான பணிப்பெண் என்றோ முன்னிறுத்த விரும்பவில்லை. நான் ஒரு தனிநபராகப் பணியாற்ற விரும்புகிறேன். ஆனால் என் மீது இவ்வளவு பேர் இந்த அளவு கவனம் செலுத்துவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்கிறார். "மேலும், பெருநிறுவன பிரமுகர்கள் என்னை எப்படி நினைக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், பொதுமக்களும் சக ஊழியர்களும் என்னை அப்படிப் பார்க்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்," என்றும் கூறுகிறார்.   ஜப்பான் மக்களின் அன்பைப் பெற்ற விமானப் பணிப்பெண்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விபத்து அண்மையில், ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரையிறங்கும்போது கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. விமானத்தில் இருந்து பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியதற்காக ஜப்பான் ஏர்லைன்ஸின் விமானப் பணிப்பெண்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு டோட்டோரியின் நியமனம் அறிவிக்கப்பட்டது. டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் 516, ஓடுபாதையில் காவல்படை விமானம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஐந்து பேர் இறந்தனர் மற்றும் கேப்டன் படுகாயமடைந்தார். இருப்பினும், விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில், ஏர்பஸ் A350-900 விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர். விமானப் பணிப்பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த விபத்தில் இருந்து பயணிகள் காப்பாற்றப்படக் காரணம் என மக்கள் பாராட்டினர். முன்னாள் விமானப் பணிப்பெண்ணான, டோட்டோரி விமானப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர். ஆரம்பக் காலகட்டத்தில் அவர் பணியில் இணைந்ததும் முதலில் கற்றுக் கொண்டது விமானப் பாதுகாப்பு பற்றித்தான். கடந்த 1985ஆம் ஆண்டில், அவர் விமான பணிப்பெண்ணாகப் பணியில் சேர்ந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான வரலாற்றின் மிக மோசமான விமான விபத்தில் சிக்கியது. ஒசுடாகா மலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் 520 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பணியாற்றிய ஒவ்வொரு ஊழியருக்கும் ஒசுடாகா மலைக்குச் செல்லவும் அங்கு விபத்து நடந்ததை நேரில் பார்த்த மக்களிடம் பேசவும் வாய்ப்பளிக்கப்பட்டது." "நாங்கள் எங்கள் பாதுகாப்பு மேம்பாட்டு மையத்தில் விபத்துப் பகுதியில் கிடந்த விமானப் பாகங்களையும் காட்சிப்படுத்தினோம், ஒரு பெரிய விபத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் படிப்பதற்குப் பதிலாக எங்கள் சொந்தக் கண்களால் பார்த்தோம். விமான விபத்தின் நேரடிக் காட்சிகள், இழப்பு அனைத்தையும் எங்களால் அன்றைய தினத்தில் உணர முடிந்தது," என்று டோட்டோரி கூறினார்.   மாறிவரும் ஜப்பான் ஏர்லைன்ஸ்-இன் முகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2010ஆம் ஆண்டு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலாகும் நிலைமையில் இருந்தது. உயர் பதவியில் அவர் நியமனம் செய்யப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், 2010இல் ஜப்பான் ஏர்லைன்ஸ் திவாலானதில் இருந்து அதன் நிலைமை வேகமாக மாறி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியது அப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், அரசாங்கம் கொடுத்த நிதி ஆதரவின் காரணமாக விமான நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டது. ஒரு புதிய செயற்குழு மற்றும் நிர்வாகத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் பெரிய மறுசீரமைப்புக்கு உட்பட்டது. மேலும், அந்நிறுவனத்தின் அப்போதைய 77 வயதான ஓய்வு பெற்ற அதிகாரியும் புத்த துறவியுமான கசுவோ இனாமோரியின் (Kazuo Inamori) நடவடிக்கைகளால்தான் ஜப்பான் ஏர்லைன்ஸ் புத்தாக்கம் பெற்றது. நிறுவன ஊழியர்கள் அவரை ஒரு மீட்பராகப் பார்த்தனர். அவர் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அவரது புரட்சிகரமான நிர்வாகம் இல்லாமல் டோட்டோரி போன்ற ஒருவர் ஜப்பான் ஏர்லைன்ஸ் தலைவராகி இருக்க வாய்ப்பில்லை.   'இது பெண்களுக்கான நம்பிக்கை' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜப்பான் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைவரான கசுவோ இனாமோரி கடந்த 2012ஆம் ஆண்டு ஒரு நேர்காணலின் போது இனாமோரியிடம் நான் பேசினேன், மனதில் பட்டதைப் பேசினார். அவர் தன் வார்த்தைகளைத் துளியும் பொருட்படுத்தவில்லை. ஜப்பான் ஏர்லைன்ஸ் `தனது வாடிக்கையாளர்களைப் பற்றிக் கவலைப்படாத ஒரு திமிர்பிடித்த நிறுவனம்` என்று கூறினார். இனாமோரியின் தலைமையின் கீழ், நிறுவனம் அதிகாரத்துவ பதவிகளில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், விமானிகள், பொறியாளர்கள் போன்ற முன்னணி நடவடிக்கைகளில் இருக்கும் ஊழியர்களை உயர்த்தியது. "இந்த நிறுவனம் ஒரு தனியார் நிறுவனம் போன்று உணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால், நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். முன்னாள் அரசு அதிகாரிகள் பலர் சுலபமான அதிகார பலத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தில் உயர் பதவிகளில் அமர்ந்திருந்தனர்," என்று 2022இல் இனாமோரி என்னிடம் குறிப்பிட்டார். அதன்பிறகு ஜப்பான் ஏர்லைன்ஸ் நீண்ட தூரத்தைக் கடந்து வந்திருக்கிறது. தற்போது அதற்கு முதல் பெண் தலைவரும் கிடைத்துவிட்டார். நாட்டில் பெண் தலைமை நிர்வாகிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டளவில் நிர்ணயித்த இலக்கை அடையத் தவறிய பின்னர், எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் முக்கிய வணிகங்களில் மூன்றில் ஒரு பங்கு தலைமைப் பதவிகள் பெண்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவித்துள்ளது. "இது கார்ப்பரேட் தலைமை நிர்வாகிகளின் மனநிலையைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு மேலாளராக ஆவதற்கு பெண்களுக்கு நம்பிக்கை இருப்பதும் முக்கியம். யார் என்ன நினைத்தால் நமக்கென்ன?" என்கிறார் டோட்டோரி. "எனது நியமனம், மற்ற பெண்கள் முன்பு முயற்சி செய்யப் பயந்த விஷயங்களை முயல ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன்," என்கிறார் டோட்டோரி நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/cq5ner5wr8wo
    • 26 APR, 2024 | 07:19 PM   கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கென சகல வசதிகளும் கொண்ட புதிய கட்டடத் தொகுதி இன்று (26) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டு, அரச உத்தியோகத்தர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.  இந்த கட்டடம் செந்தில் தொண்டமானின் 241 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் தங்களின் பணிகளை உரிய முறையில் முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லை எனவும், தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடியதொரு கட்டடத்தொகுதியை கட்டமைக்கும் பணிகள் பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால்  அக்கட்டடத்தை நிர்மாணித்துத் தருமாறு  ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அக்கோரிக்கையின் பிரகாரம், ஆளுநர் செந்தில் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டில் இந்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/182051
    • 26 APR, 2024 | 05:13 PM     சுமார் 300 பேரைப் பலியெடுத்து மேலும் 500க்கும் அதிகமானவர்களை படுகாயங்களுக்குள்ளாக்கிய அனர்த்தமிகு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது வருட நினைவுகூரலை கடந்த ஏப்ரல் 21இல் இலங்கை அனுஷ்டித்தது. நீடித்து நிற்கும் அதன் விளைவுகளை நாம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும். வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியின் விளைவான பொருளாதார தாக்கங்கள் நாட்டை தொடர்ந்து அச்சுறுத்திக்கொண்டேயிருக்கின்றன. மக்கள் இன்று பெரும் பொருளாதாரச் சவால்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  மக்களின் அக்கறைக்குரியவையாக இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் விளைவாக அரசாங்க தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை சிதைவடைந்திருப்பது குறித்து தேசிய சமாதானப் பேரவை கவலையடைகிறது.  இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமாக ஆட்சி முறைமையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விரக்தியடையவும் மேலும் அநீதிகளுக்கும்  வழிவகுத்திருக்கிறது.  உத்தியோகபூர்வமான பல விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் தொடர்பிலான கேள்விகள் தொடரவே செய்கின்றன. பொறுப்பற்ற முறையில் தங்களது கடமையை செய்யத் தவறியவர்களில் சிலர் அதற்கான விளைவுகளைச் சந்தித்தபோதிலும், மூடிமறைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற உணர்வு மக்கள் மத்தியில் தொடரவே செய்கிறது. தகவல்கள் மறைத்து வைக்கப்பட்டதாக வெளிவருகின்ற கதைகள் உண்மையைக் கண்டறிவதற்கு புதிய உறுதிப்பாட்டுக்கான தேவையை மேலும் வலியுறுத்துகின்றன.  அடுத்தடுத்து பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் உண்மையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியதன் காரணமாகவே ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சான்றுகளைச் சேகரிக்கும் அதன் பிரிவை தொடர்ந்து செயற்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாடு நியாயப்படுத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களை புனிதர்களாக அல்லது தியாகிகளாக திருநிலைப்படுத்துவதற்கு நாட்டின் கத்தோலிக்க திருச்சபை மேற்கொள்கின்ற முயற்சியின் நோக்கம் படுகொலைகள் பற்றிய நினைவை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் உயிர்த்துடிப்புடன் வைத்திருப்பதேயாகும். இதற்கு சர்வதேச முன்னுதாரணங்கள் இருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் நிகழ்வுகளை நாம் சிந்தித்துப் பார்க்கின்றபோது இலங்கையின் வரலாற்றை கறைபடுத்திய வன்செயல் மற்றும் அநீதியின் பரந்த பின்புலத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 1989ஆம் ஆண்டில் உச்சநிலைக்குச் சென்ற ஜே.வி.பி.யின் கிளர்ச்சி தொடக்கம் 2009 மே மாதம் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப்போர் வரை மோதல்களினதும் வன்முறைகளினதும் காயங்கள் ஆழமானவையாக இருக்கின்றன. நல்லிணக்கத்துக்கான எமது தேடலில் எமது கடந்த காலத்தின் வேதனைமிகு உண்மைகளுக்கு முகங்கொடுத்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும்  குணப்படுத்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கட்டியெழுப்பப் பாடுபடவேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால், நீதிக்கான தேடுதல் பக்கச்சார்பான நலன்களையும் தேர்தல் ஆணைகளையும் கடந்தவையாக இருக்கவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் தேர்தல்களும் அரசாங்க மாற்றமும் பொறுப்புக்கூறல் மற்றும்  நல்லிணக்கத்தை நோக்கிய முயற்சிகளுக்கு புதுச்சக்தியை கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தற்போதைய அரசாங்கத்தின் தலைமைத்துவமும் எதிர்கால அரசாங்கத்தின் தலைமைத்துவமும் சுயநலன்களின் நெருக்குதல்களில் இருந்து விடுபட்டு நீதிக்கும் வெளிப்படைத்தன்மைக்குமான தேடலுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். https://www.virakesari.lk/article/182046
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 05:02 PM   கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும்  இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.  தொடர்ந்து பொலிசார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு  கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.  இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182042
    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.