Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிச்சிங்கள சட்டம் நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது – எனது தந்தை சந்தர்ப்பவாத நோக்கில் செயற்பட்டிருக்காலம் - சுனேத்திரா பண்டாரநாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

17 JUN, 2023 | 03:19 PM
image
 

தனது தந்தை கொண்டுவந்த தனிச்சிங்கள சட்டத்தினால் நாடு பெரும்பாதிப்பை எதிர்கொண்டது என்பதை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் பிரதமர்  எஸ்டபியுஆர்டி பண்டாரநாயக்கவின் மகள் சுனேத்திரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கருத்துப்பரிமாறல் நிகழ்வில் கலந்துகொண்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உங்களது தந்தை தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்திருக்காவிட்டால் நாடு தற்போது மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருந்திருக்கும். இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என நேயர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சுனேத்திரா பண்டாரநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஆம், நான் இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன். அவர் எனது தந்தை, ஆனால் இந்த நேயர் அல்லது நபர் ஒருவர் தெரிவித்ததை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் என எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வியான சுனேத்திரா தெரிவித்துள்ளார்.

நான் இதனை எப்போதும் தெரிவித்திருக்கின்றேன்.

உண்மையை சொல்லியாகவேண்டும்.

ஆம், ஏன் அவர் தனிச்சிங்கள சட்டத்தை  கொண்டுவந்தார்? அரசியல் சந்தர்ப்பவாதம் அரசியல் ரீதியில் பிரபலமாவது -  உண்மையில் எனக்கு தெரியாது.

ஆனால் இந்த நபர் தெரிவிப்பது உண்மை.

அது எனக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என சுனேத்திரா தெரிவித்துள்ளார்.

இதற்கு சமூக ஊடகங்களில் பராட்டுக்கள் வெளியாகியுள்ளன.

உண்மையை சொன்னதற்கு நன்றி  சுனேத்திரா என பதிவிட்டுள்ள ஒருவர் குறுகிய அரசியல் இலாபங்களிற்காக மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் கதையாடல்களிற்கு  பதில் பதில் நாட்டின் அரசியல்வாதிகள் நேர்மையானவர்களாக செயற்பட்டால் நாங்கள் எவரும் தடுத்துநிறுத்த முடியாத தேசமாக காணப்பட்டிருப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/157913

  • கருத்துக்கள உறவுகள்

இது காலங்கடந்த ஞானம். இதிலிருந்து யாரும் வெளிவரப்போவதுமில்லை, வெளிவர விரும்புவோரையும்  விடப்போவதுமில்லை. இது திருப்பி சிங்களத்தை தாக்கி இல்லாதொழியும் வரை.

அந்த நேயரின் கருத்துக்களுக்கு பாராட்டு.           

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2023 at 14:48, ஏராளன் said:

ஆம், நான் இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன். அவர் எனது தந்தை, ஆனால் இந்த நேயர் அல்லது நபர் ஒருவர் தெரிவித்ததை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் என எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வியான சுனேத்திரா தெரிவித்துள்ளார்.

நான் இதனை எப்போதும் தெரிவித்திருக்கின்றேன்.

உண்மையை சொல்லியாகவேண்டும்.

இப்படியாக உண்மையை ஏற்றுகொள்ளும் பக்குவமும் துணிச்சலும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல தனிப்பட்ட மக்களுக்கும் கிடையாது. இது சிங்களவர் தமிழர் ஆகிய இரு பகுதிக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

பதிலில் தெளிவில்லை

தவறை உணர்ந்த மாதிரியும் அதே நேரம் தகப்பனையும் காப்பாற்றிக்கொள்ளும் அரசியல். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

பதிலில் தெளிவில்லை

தவறை உணர்ந்த மாதிரியும் அதே நேரம் தகப்பனையும் காப்பாற்றிக்கொள்ளும் அரசியல். 

தகப்பன் தனி சிங்கள சட்டத்தை கொண்டுவந்தது அரசியல் சந்தர்பபவாதம் என்று தகப்பனின் தவறான செயலை  வெளிப்படையாக கூறியுள்ளார். இதில் தகப்பனை காப்பாற்றும் கூற்றைத் தேடினேன் காணவில்லை விசுகர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இப்படியாக உண்மையை ஏற்றுகொள்ளும் பக்குவமும் துணிச்சலும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல தனிப்பட்ட மக்களுக்கும் கிடையாது. இது சிங்களவர் தமிழர் ஆகிய இரு பகுதிக்கும் பொருந்தும்.

உண்மையைச் சொன்னதற்காகவே இவர் குறிவைக்கப்படுகிறாரோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, island said:

தகப்பன் தனி சிங்கள சட்டத்தை கொண்டுவந்தது அரசியல் சந்தர்பபவாதம் என்று தகப்பனின் தவறான செயலை  வெளிப்படையாக கூறியுள்ளார். இதில் தகப்பனை காப்பாற்றும் கூற்றைத் தேடினேன் காணவில்லை விசுகர். 

 உண்மையில் எனக்கு தெரியாது.

இதை சொல்லாமல் அவரால் முடிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

 உண்மையில் எனக்கு தெரியாது.

இதை சொல்லாமல் அவரால் முடிக்க முடியவில்லை.

தனி சிங்கள சட்டம்  கொண்டுவந்த போது அவருக்கு வயது 13- 14 வயது. அந்த நேரத்தில் தந்தையின் அரசியல் சந்தர்பவாதத்தை பற்றி தெரிந்திருக்கவில்லை என்றே கூறியுள்ளார். இதில் தகப்பனைக் காப்பாற்றும் வசனம் எங்கு வந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதை பல வருடங்களுக்கு முன்பும் இவர் கூறி இருக்கிறார் 

சிங்கள இன துவேசம் என்பது தேர்தல் வெற்றியின் ரகசியம் எனில் 
பெரும்பான்மை சிங்காவர்கள் இன துவேஷிகள் என்பதுதான் 
தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டியது .

மற்றையபடி சந்திரிக்கா பறக்க விடாத சமாதான புறாக்களையா 
இவர்கள் பறக்க விட போகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

தனி சிங்கள சட்டம்  கொண்டுவந்த போது அவருக்கு வயது 13- 14 வயது. அந்த நேரத்தில் தந்தையின் அரசியல் சந்தர்பவாதத்தை பற்றி தெரிந்திருக்கவில்லை என்றே கூறியுள்ளார். இதில் தகப்பனைக் காப்பாற்றும் வசனம் எங்கு வந்தது. 

அது நீங்கள் எடுக்கும் முறை. சிங்களத்தின் கோர கொடிய நயவஞ்சக புத்தியை பட்டறிந்த என் போன்றவர்களின் பார்வை வேறு.  

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது, கோத்தா வெற்றிக்கு பாவித்த அதேவழியை, இனத்துவேச வழியை, மிஞ்சியிருக்கும் மொட்டுக் கோஸ்டி முயல்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/6/2023 at 14:48, ஏராளன் said:

உங்களது தந்தை தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்திருக்காவிட்டால் நாடு தற்போது மிகவும் முன்னேற்றகரமான நிலையில் இருந்திருக்கும். இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என நேயர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சுனேத்திரா பண்டாரநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஆம், நான் இதற்கு பதிலளிக்க விரும்புகின்றேன். அவர் எனது தந்தை, ஆனால் இந்த நேயர் அல்லது நபர் ஒருவர் தெரிவித்ததை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன் என எஸ்டபில்யூஆர்டி பண்டாரநாயக்கவின் மூத்த புதல்வியான சுனேத்திரா தெரிவித்துள்ளார்.

கேள்வி கேட்ட நேயர் தமிழராக இருப்பார் என நான் நினைக்கின்றேன்.😎

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் செய்தபின்னர் பாவசங்கீர்த்தனம் confession செய்து என்ன பிரயோசனம்? 

சிங்களம் தனது இலக்கை அடைந்துகொண்டது.

இனிமேல் எல்லோரும் பாவமன்னிப்புக் கேட்பார்கள். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

தனி சிங்கள சட்டம்  கொண்டுவந்த போது அவருக்கு வயது 13- 14 வயது. அந்த நேரத்தில் தந்தையின் அரசியல் சந்தர்பவாதத்தை பற்றி தெரிந்திருக்கவில்லை என்றே கூறியுள்ளார். இதில் தகப்பனைக் காப்பாற்றும் வசனம் எங்கு வந்தது. 

அப்போது தெரிந்திருக்காவிட்டாலும் தாயார், தங்கையார் அரசியலில் இருக்கும்போது கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால் அரசியல் சுகபோகம் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, இனிமேல் அதை வைத்து மற்றவர் சுகம் அனுபவிப்பதை விரும்பாமல் இருக்கலாம். உண்மை வெளிப்பட்டபின் மறைப்பதில் பிரயோசனம் இல்லை என உணர்ந்திருக்கலாம். ஆனால் அவரது சுயநலத்திற்கு அப்பாவி தமிழ் மக்கள் பலியானார்கள் அது தொடர்கிறது. சிங்கள மக்களை கவர்வதற்க்கும், அவர்களின் கதாநாயகர்களாக தங்களை காட்டிக்கொள்வதற்கும் முனைந்தவர்களை, அந்த மக்கள் உண்மை அறியும் போது நாட்டை சீரழித்த வன்முறையாளர்களாகவே எதிர்கால சந்ததி முன்னிலைப்படுத்தும் இவர்களை. சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி  இவர்களை  எப்படி உலகம் பார்க்கிறதோ அவ்வாறே இலங்கைச்சரித்திரம் இவர்களை குறிப்பிடும். இவர்கள் கண்முன்னே எதை நினைத்து செய்யக்கூடாததை செய்து பாராட்டு பெற்றார்களோ, அவர்களாலேயே துரத்தியடிக்கப்பட்டதும் கண்முன் நடந்து முடிந்த வரலாறு. சுயநலத்தோடு தவறாக செய்யும் எதுவும் நீண்டகாலம் பாராட்டப்படாது. அவர்கள் சந்ததி அதற்காக அந்த சமூகத்தால்  தண்டிக்கப்படுவதோடு, அவர்களே அதற்காக வெட்கப்படவும் குறை சொல்லவும் நேரிடும்.    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.