Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்று அரபு நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் ஆண்கள் சிங்கள பெண்களையே திருமணம் செய்தனர் - நீங்கள் எங்களில் ஒருவர், வீழ்ச்சியுற்ற நாட்டை கட்டி எழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிக்கு முஸ்லிம்கள் பங்களிப்பு செய்வது அவசியம் ; அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1687675145320.jpg

 

ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்கள் வீழ்ச்சியுற்ற நாட்டை மீளவும் கட்டியெழுப்புகின்ற முயற்சிகளுக்கு முஸ்லிம் இளைஞர்களது பங்களிப்பு மிக அவசியமாகும்.
 
 
முஸ்லிம் இளைஞர் சமூகம் இந்த நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ள அதேவேளை தற்காலத்தில் கல்வி மேம்பாட்டுக்காக பாரிய பங்களிப்பை ஆற்றி வருகின்றனர்.
 
அதற்காக நான் பெருமைப்படுகின்றேன்
 
என்று நிமல் சிறிபால டி சில்வா, (துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்) தெரிவித்தார்.
அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 73 ஆவது வருடாந்த தேசிய மாநாடு அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 73 ஆவது வருடாந்த தேசிய மாநாடு 24-06-2023 பதுளை கெப்பிட்டல் சிட்டி ஹோட்டலில் தேசிய தலைவர் இஹ்சான் ஏ. ஹமீட் தலைமையில் இடம்பெற்றது.
 
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தபால் மற்றும் முறைமுக அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா அவர்களும், கௌவர அதிதியாக ஊவா மாகாண ஆளுநர் எம். ஜே. எம். முஸம்மில், சிறப்பு விருந்தினராக பங்களதேஸ் நாட்டின் உயர் ஸ்தானிகர் தாரிக் எம்டி அரிபுல் இஸ்லாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
 
முஸ்லிம் மக்கள் எங்களுக்கு முன்மாதரிமிக்கவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
 
அன்று வெளிநாட்டர்கள் கடல் மார்க்கமாக வருகை தந்த போது சிங்கள அரசர்கள் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அப்பொழுது அரபு நாடுகளில் இருந்து வியாபாரம் செய்வதற்காக ஆண்களே வந்தனர்.
 
இந்நாட்டிலுள்ள சிங்கள பெண்களையே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
 
உங்களை எங்களில் ஒருவராகவே நாங்கள் மதிக்கின்றோம். அதே போன்று முஸ்லிம் மக்கள் மூலம் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளின் போது இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வலுவேர்ப்பவர்களாக இருந்து வருகிறார்கள்.
 
 
நாங்கள் அதற்காக மிகவும் பெருமைப்படுகின்றேன்.
முஸ்லிம் மக்கள் வர்த்தக தொழில் துறைசார்ந்தவர்கள் என்ற எண்ணக்கரு மாற்றம் பெற்று இன்று அறிவு ரீதியிலான பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
 
சட்டத்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி கல்வித்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி வைத்தியத் துறையிலும் சரி எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
 
விசேடமாக திறன்மிக்க சட்டத்தரணிகள், வைத்திய நிபுணர்கள், கணக்காளர்கள் புத்தி சாதுரிமானவர்கள் காணப்படுகின்றனர். நான் அதற்காகப் பெருமைப்படுகின்றேன. அது இன்னும் அதிகம் அதிகம் இளைஞர்கள் அறிவியல் ரீதியாக அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்காக அறிவியல் ரீதியாக கல்வி ரீதியாக சந்தர்ப்பம் வழங்கப்படுதல் வேண்டும். முஸ்லிம் பெண் பாடசாலை ஒன்றை இந்த மாவட்டத்தில் உருவாக்கியுள்ளேன் என்ற அடிப்படையில் நான் பெருமைப்படுகின்றேன்.
 
அல் அதான் மகா வித்தியாலயத்திற்கு இடைக்கிடையே என்னுடைய பங்களிப்பை நல்கி வருகின்றேன். அப்பாடசாலைக்குத் தேவையான பௌதீக வளங்களை பெற்றுக் கொடுத்து வருகின்றேன்.
 
 
அதே போன்று உங்களது சமூக அமைப்பு விசேடமாக இந்த நாட்டுக்குத் தேவையான இனங்களுக்கிடையே சமாதான சகவாழ்வு தொடர்பில் தெளிவூட்டல்களை ஏற்படுத்த வேண்டும்.
 
 
அதன் காரணமாக வ இளைஞர்களை முன்மாதரியாகவும் கொண்டு உங்கள் சங்கங்களில் நல்ல பதவிகள் வழங்கி நாட்டில் காணப்படும் பிரச்சினைகளையும் கவனத்திற் கொண்டு நடவடிக்கைகளை அதிகரித்தல் வேண்டும்.
 
 
ஒரு நிலையான பயணத்திற்கு இந்நாட்டில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுடைய நம்பிக்கையினை மேலும் வெற்றிகொள்வராக இருத்தல் வேண்டும்.
உலகிலே காணப்படும் மாற்றங்கள் எல்லாவற்றையும் உங்களால் செய்ய முடியாது. எனினும் எங்களுடைய சமூகத்தில் சாதாரண முறையில் சமூக மாற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். விசேடமாக அரசியலுக்குள் சமய ரிதியிலானன பிளவுகளை ஏற்படுத்துவதை விட அவற்றை ஒருமுகப்படுத்தி அரசியல் பயணத்தை மேற்கொள்ளுகின்ற நிலையில் முஸ்லிம் மக்களும் முன்வருதல் வேண்டும்.
அதிகளவு சமூக ரீதியாக பிளவுபட்டிருக்கிறார்கள், சமய ரீதியாகப் பிளவுபட்டு இருக்கிறார்கள்.
 
 
அரசியல் கட்சிகள் தங்களுடைய சமூகம் சமயத்திற்காக உருவாக்குப்படுவதில்லை. தங்களுடைய கொள்கை வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்படுவதாகும்.
 
இந்நாடு பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியுற்ற நிலையில் இருந்து ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்னெடுக்கப்படும் சவால்களுக்கு உங்களது பங்களிப்பு அவசியமாகும்.
 
 
நாட்டைக் கட்டி எழுப்புகின்ற பங்களிப்பு மிக அவசியம் ஆகும். அதுதான் உண்மையான உள்ளார்ந்த பங்களிப்பாக அமையும்.
நான் சமீபத்தில் பங்களதேஸ் நாட்டுக்கு விஜயம் செய்தேன். அங்கு கடற்துறை அமைச்சருடன் இந்து கடல் சமுத்திரம் தொடர்பில் கலந்துரையாடி பின்னர் நாட்டின் பிரதமர் சேஹ் ஹசீனா அவர்களை நேரில் சந்தித்து உரையாடக் கிடைத்தது. இதன் மூலம் இலங்கை பங்களதேஸ் இரு நாடுகளுடைக்கிலான நட்புறரீதியிலான உறவ மேலும் வலுப்பெறவுள்ளமை முக்கிய அம்சமாகும்.
 
 
அதேவேளையில் பெண்கள் மத்தியிலும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து அவர்களுக்கிடையே போட்டிகளை ஏற்படுத்தி பரிசில்களை வழங்க முன்வருதல் வேண்டும் என்று அவர்மேலும் தெரிவித்தார்.
 
இக்பால் அலி
  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம் ஆண்கள், சிங்களப் பெண்களை திருமணம் செய்திருந்தால்…
ஓன்றில் அவர்கள் அரபு பேச வேண்டும் அல்லது சிங்களம் பேச வேண்டும்.
இரண்டும் இல்லாமல் அவர்கள் ஏன்  தமிழ்மொழி பேசும் முஸ்லீமாக வாழ்கின்றனர்.
வரலாற்றை திரிப்பதில்… சிங்களவனும், முஸ்லீமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தோசையை மறுபக்கம் புரட்டிப் போட்டிருக்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அரபு நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம் ஆண்கள், சிங்களப் பெண்களை திருமணம் செய்திருந்தால்…
ஓன்றில் அவர்கள் அரபு பேச வேண்டும் அல்லது சிங்களம் பேச வேண்டும்.
இரண்டும் இல்லாமல் அவர்கள் ஏன்  தமிழ்மொழி பேசும் முஸ்லீமாக வாழ்கின்றனர்.
வரலாற்றை திரிப்பதில்… சிங்களவனும், முஸ்லீமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

சிங்களவனுக்கு மான ரோச உணர்வே இல்லையென்பதையும் பொய்களை கட்டவிழ்த்துவிடும் பொய்யர்கள் என்பதையும் அடிக்கடி நினைவூட்டுகிறார்கள். பாவம் மக்கள் பசிவந்ததும் போராடி, பாண் வந்ததும் மறந்துவிடுவதால் இவர்கள் அரசியல் செய்ய முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அரபு நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம் ஆண்கள், சிங்களப் பெண்களை திருமணம் செய்திருந்தால்…
ஓன்றில் அவர்கள் அரபு பேச வேண்டும் அல்லது சிங்களம் பேச வேண்டும்.
இரண்டும் இல்லாமல் அவர்கள் ஏன்  தமிழ்மொழி பேசும் முஸ்லீமாக வாழ்கின்றனர்.
வரலாற்றை திரிப்பதில்… சிங்களவனும், முஸ்லீமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

அதானே...வந்தது தமிழ் அரபிகளோ?

  • கருத்துக்கள உறவுகள்

அரபிகள் சிங்களப் பெண்களைக் கண்ணாளம் கட்டி தமிழ் பேசுகிறார்கள். அப்படியானால் அரபிகளின் மொழி தமிழாயிருந்திருக்க வேண்டும் அல்லது சிங்களப் பெண்கள் தமிழ் பேசியிருக்க வேண்டும். 

ஆமாஞ்சாமி, உதில எது சரி? 

ஆனால் ஒன்று, உவர் தொப்பி புரட்டுற வேகத்தைப் பார்த்தால் உவரின் முன்னோர்கள் அரபிகளாயிருக்க வாய்ப்பு அதிகம். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

அரபு நாடுகளில் இருந்து வந்த முஸ்லீம் ஆண்கள், சிங்களப் பெண்களை திருமணம் செய்திருந்தால்…
ஓன்றில் அவர்கள் அரபு பேச வேண்டும் அல்லது சிங்களம் பேச வேண்டும்.
இரண்டும் இல்லாமல் அவர்கள் ஏன்  தமிழ்மொழி பேசும் முஸ்லீமாக வாழ்கின்றனர்.
வரலாற்றை திரிப்பதில்… சிங்களவனும், முஸ்லீமும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

பிராமணிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்......
எந்த இடத்திலும் மொழியை தமக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

பிராமணிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்......
எந்த இடத்திலும் மொழியை தமக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்வர்.

வியாபாரத் தந்திரமோ ? 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, colomban said:
அன்று வெளிநாட்டர்கள் கடல் மார்க்கமாக வருகை தந்த போது சிங்கள அரசர்கள் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள். அப்பொழுது அரபு நாடுகளில் இருந்து வியாபாரம் செய்வதற்காக ஆண்களே வந்தனர்.
 
இந்நாட்டிலுள்ள சிங்கள பெண்களையே அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இது பொய்யான வரலாறு என்பதை எந்தவொரு இலங்கை முஸ்லிமும் சொல்வானா? இல்லவே இல்லை. எப்பவுமே இலங்கை முஸ்லிம்கள் தமிழருக்கு எதிராகவும் சிங்களவர்களுக்கு ஆதரவானவர்களாகவுமே இருந்துவந்திருக்கிறார்கள். இவர்கள் இன்னொரு ‘வாக்னர் குறூப்’ என்பதை சிங்களம் விரைவில் அறியும். ஏற்கனவே சஹ்ரான் குழு தாங்கள் யார் என்பதை தெளிவாக காட்டி இருக்கிறார்கள். அது சரியாக இன்னும் சிங்களத்துக்கு விளங்கவில்லை என நினைக்கின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

உங்களை எங்களில் ஒருவராகவே நாங்கள் மதிக்கின்றோம்.

அப்பாடா.... ஒரு குடைச்சல் தீர்ந்தது! இனி, தங்கள் கொடுக்கல் வாங்கல்களை சிங்களத்தோடு ஒருமித்து பேசி தங்கள் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளட்டும் தமிழரோடு சொறியாமல். அதுதானே பாத்தேன்!  சிவப்புதொப்பிக்காரன் எங்களுக்கும் சிங்களத்துக்கும் 98%   உடன்பாடுண்டு இருக்கென்று சொல்லும்போதே யோசிச்சேன். அடாவடி, மதத்தை முன்னிறுத்தி கலவரம், கொலை செய்தல், நிலம் பறித்தல்  அப்படியே சரிவருகுதே இரு இனத்துக்கும். இருக்கும் இருக்கும். கலியாணம் செய்ததால் பரவியிருக்கு இந்த பரவணி நோய்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிபால ஐயா முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க பார்க்கிறார். அவருக்கே தெரியாது அவர் என்ன பேசுகிறார் என்று. 

இந்த இனம் தமிழ் நாட்டில் தமிழர்கள் எண்டு சொல்லும், கேரளாவில் மலையாளி எண்டு சொல்லும், இன்னும் இந்தியாவில் பொதுவாக அந்தந்த மாநில மொழியை பேசுவதால் அந்த இனமாகவே காட்டிக்கொள்ளுவார்கள். அங்கு மாநில ஆட்சி இருப்பதால் ,அவர்களிடம் அதிகாரம் இருப்பதால் அப்படி சொல்லுகிறார்கள், இல்லாவிட்ட்தால் இலங்கையில்  உள்ளவர்கள்போல இஸ்லாமியர்கள் என்றே சொல்லுவார்கள்.

ஆனாலும் பிரச்சினை வரும்போது தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்ளுவார்கள். உதாரணமாக ரிஷாட் பதியுதீனை போலீசார் கைது செய்து அடைத்தபோது அவருக்கு அப்போதுதான் தமிழ் தாய் மொழி என்று தெரிய வந்தது. தனது வழக்கு சம்பந்தமான எல்லா தகவல்களையும் தமிழ் மொழியில் தரும்படியும் தனது தாய் மொழி தமிழ் என்றும் பாராளுமன்றில் கூறி இருந்தார். 


ஒரு கடடத்தில் முஸ்லிம்கள் சிங்கள மொழியில் கட்பதட்கு தீர்மானிக்கப்பட்டு இதட்கான புத்திஜீவிகளின் ஆலோசனை கூடடமும் நடத்தினார்கள். இருந்தாலும் சிங்களத்துக்கு மாறினால் தங்களுடைய அரச தொழில்வாய்ப்புகளில் விகிதம் குறைந்த விடுமென்றும், தமிழ் மொழியில் கட்கும்போது கூடுதலான வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டு அந்த தீர்மானம் கைவிடப்பட்ட்து. 

மற்றப்படி இந்த இனத்துக்கு மொழிப்பற்று, தேசப்பற்று என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. தங்கள் சுய நலத்துக்காக மதப்பற்றை மட்டும் தூக்கிப்பிடிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, colomban said:

விசேடமாக அரசியலுக்குள் சமய ரிதியிலானன பிளவுகளை ஏற்படுத்துவதை விட அவற்றை ஒருமுகப்படுத்தி அரசியல் பயணத்தை மேற்கொள்ளுகின்ற நிலையில் முஸ்லிம் மக்களும் முன்வருதல் வேண்டும்.

 

8 hours ago, colomban said:
அரசியல் கட்சிகள் தங்களுடைய சமூகம் சமயத்திற்காக உருவாக்குப்படுவதில்லை. தங்களுடைய கொள்கை வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்படுவதாகும்.
 

ஒரு இனத்துக்கு எதிராக சமய சமூக முரண்பாடுகளை தாங்களே வளர்த்து அவர்களை அழித்துக்கொண்டு இன்னொரு புறம் உபதேசம் காரணம்;

8 hours ago, colomban said:

சட்டத்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி கல்வித்துறையை எடுத்துக் கொண்டாலும் சரி வைத்தியத் துறையிலும் சரி எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

இப்படித்தான் அன்று எங்கள் தலைவர்களுக்கும் சொல்லி காரியம் சாதித்திருப்பார்களோ? என்னவோ... பழைய வரலாறு வந்து நிழலாடுது, அவர்கள் பொருளாதாரத்தை ஒப்பிட்டு தங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரவணைப்பதால். எப்படியிருந்தாலும் எங்கள் முறை கடந்துவிட்டது. நாங்கள் எங்கள்  உயிரை உடமையை இழந்ததால் அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.