Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா

ஈ.பி.டி.பியின் நிலைப்பாட்டை உறுதி செய்தது அமெரிக்கா

எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளைக்  காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்கத்  தூதுவர் தமிழ் தரப்பினருக்கு எடுத்துக் கூறி அதை முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தியிருப்பதானது எமது கட்சியின் நிலைப்பாடுகளே சரியானது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடந்த 33 வருடங்களாக 13ஆவது சீர் திருத்தத்தின்  இன் அவசியத்தை குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறிவந்த நிலையில் தற்போது தமிழ் கட்சிகள் காலங்கடந்தாவது அதனை ஏற்று இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியமை வரவேற்கத்தக்க விடயம்.

இதேநேரம் இந்த 13 வது திருத்தம் உள்ளிட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளி மட்டும் தான் என எமது கட்சியின் செயலாளர் ஜனநாயக கட்சியின் செயலளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அக்கால பகுதியில் சில தமிழ் அரசியல் தலைமைகள் 13 ஆவது திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான ஆரம்ப புள்ளியாக ஏற்காவிட்டாலும் தற்போது அதன் தாற்பரியத்தை அவர்களுக்கு காலம் உணர்த்தியுள்ளது.

இதை இவர்கள் கடந்தகாலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களின்போது ஏற்றிருந்தால் இன்று புலிகளின் தலைவர் பிரபாகரனும் உயிரோடு இருந்து ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் ஈடுபட்டிருப்பதற்கான சந்தர்ப்பமும் இருந்திருக்கும்.

இதேநேரம் இன்று 13 ஆவது திருத்தத்தை ஆரம்பப்  புள்ளியாக கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகாரங்களை முன்னெடுப்பதற்கு தமிழ் கட்சிகள் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள நிலையில் யாழ் மாவட்ட சிவில் அமைப்பினரும் கடிதத்தை யாழ் இந்தியத் துணை தூதரகத்தில் கையளித்துள்ளனர்.

ஆகவே 13 தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தீர்க்கதரிசனமான கருத்தை தமிழ் கட்சிகளும்  சிவில் சமூகத்தினரும் ஏற்றுக்கொண்டமை வரவேற்கத்தக்க விடயம் என மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2023/1340318

  • கருத்துக்கள உறவுகள்

ஈ, எந்த பீயிலும் ஒட்டிக்கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா பல்வேறு விதமான பயங்கரவாத அமைப்புக்களுக்கும் பயங்கரவாத அரசுகளுக்கும் தனது இராணுவ பூகோள நலன்கருதி ஆலோசனையும் ஆதரவும் தருவது ஒன்றும் புதிய விடயமே அல்ல.

அமெரிக்காவிடம் தமிழர்கள் எந்தக் காலத்திலும் தீர்வு வேண்டித் தரச் சொல்லிக் கோரியதில்லை. அமெரிக்கா தானாக இணைத்தலைமை நாடுகள் என்று வந்து.. தமிழினப் பேரழிவுக்கு துணை நின்றதும்.. தமிழர் இன விடுதலை தேச விடுதலைப் போராட்டத்தை ஆரம்பம் முதல் பயங்கரவாத முத்திரை குத்தி வந்திருக்கிறது.

மேலும் அமெரிக்க அலன் தம்பதிகளை கடத்தி கம்பம் கோரியவரின் கட்சிக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கும் அளவுக்கு அமெரிக்காவின் நிலை இந்து - பசுபிக் பிராந்தியத்தில் மோசமாக உள்ளது.

இது பல்கன் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் அல்ல... அமெரிக்காவின் சொல்லுக்கு தலையாட்ட.

தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தான் தீர்மானிக்க வேண்டும். இதே தான் புலிகள் உட்பட எல்லோரினதும் நிலைப்பாடு.

ஈபிடிபியின் நிலைப்பாடு..சாரி.. கூச்சல் கோசம்.. மத்தியில் கூட்டாட்சி.. மாநிலத்தில் சுயாட்சி. அதற்கு என்னானது என்று தாடிக்கார மாமாவிடம் கேட்டுச் சொல்லவும். 

Edited by nedukkalapoovan

55 minutes ago, nedukkalapoovan said:

தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தான் தீர்மானிக்க வேண்டும்.

இன்று தலைவிதியைத் தீர்மானிக்கக் கூடிய அந்தத் தமிழர்கள் யார் ?

சர்வதேசத்தை நாட வேண்டாம் என்று கூறும் ஐயாத்துரை, தமிழ்க் கட்சிகள் 13 இனைப் பெற்றுத் தருவதற்கு இந்தியாவை வேண்டி கடிதம் கொடுத்ததை வரவேற்றுள்ளதையும் கவனியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு

சொல்லி வேலையில்லை

சும்மா அதிருதில்ல 

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபியே காறி உமிழுகிற வகையில் தமிழ்கட்சிகள் 13 ஐ அமுல்படுத்தச் சொல்லி இந்தியாவுக்கு கடிதம் எழுதிய செயற்பாடு அமைந்துள்ளது. எத்தனை கடிதம் எழுதிவிட்டார்கள். போனதடவை எழுதிய கடிதத்திற்குப் பதில் வந்ததா?. இந்த இலட்சணத்தில் 13 ஐ எதிர்க்கின்ற தமிழ்த்தேசிய முன்னணியை ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கிறார்கள் என்று குற்றங்சாட்டுகிறார்கள். ஈபிடிபியின் இந்தக் கருத்து இன்றைய தமிழ்த்தலைமைகளைப் பொறுத்தவரை பிழையான கருத்து அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்கத்  தூதுவர் தமிழ் தரப்பினருக்கு எடுத்துக் கூறி அதை முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தியிருப்பதானது

சர்வதேசத்தை நம்பி பயனில்லை என்று ஆரம்பதிலேயே தெரிந்து தானே எமது தேசியத்தலைவர் இறுதியாக ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார். இதே சர்வதேசம் இடையில் வந்து நயவஞ்சகத்தால் எங்கள் போராட்டத்தை நசுக்கி தமிழினத்தை நிர்க்கதியாக்கிய வரலாற்றை மறந்துவிட்டுப் பேசினால் மனிததன்மை இல்லாதவர்களால் தான் அது முடியும்!

இதே சர்வதேசம் ஆயுதப்போராட்டம் கூடாது பேச்சுவார்தையால் பிரச்சனையை தீருங்கள் என்று உபதேசம் செய்ய வருவார்கள். அப்படியென்றால் உக்கிரேன் நாட்டு நெருக்கடியிலும் அதே கொள்கையைக்  கடைப்பிடித்து ரசியாவுடன் பிரச்சனையை பேசி தீர்க்க ஏன் சர்வதேசத்தால் முடியவில்லை. சர்வதேச நாடுகளின் குறிப்பாக நேட்டோ முண்டுகோடுக்க அமெரிக்காவின் தலைமையில் ஐரோப்பிய   நாடுகள் கொண்டுள்ள  போர் ஆர்வத்தால்  உலக யுத்தம் ஒன்று மூளுமோ என்ற ஏக்கத்துடன் எப்போது வாழ்க்கை செலவுகள் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் எத்தனையோ வறிய நாடுகள் இப்போது திண்டாடுகின்றன.

இப்போது அமெரிக்கனுக்காக டக்கியரின் ஊதுகுழல் பறைதட்ட புறப்பட்டது சந்தர்ப்பவாதம். போதாக்குறைக்கு தமது கட்சித்தலைவரை தீர்க்கதரிசி என்றும் அவரின் கட்சிதான் ஜன நாயக பாரம்பரியத்தை நடைமுறப்படுத்துவதில் தமிழ் கட்சிகளில் முதன்மையானது என்ற தொனியில்  சொல்ல வந்தததும் நகைப்பிற்கிடமானது. சிங்கள இனவாத அரசு விட்டெறியும் எலும்புத்துண்டை பொறுக்கும் வேலையில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்படும்  இணக்க அரசியலைப் போதிக்கும் இவர் இனவாத அரசுடன்  கைகோர்த்து இனப்பிரச்சனைக்கு தீர்வாக இதுவரை என்னத்தை சாதித்தார்.

13-ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தல் விவகாரத்தில் சந்தர்ப்பவாதமாக இந்தியாவின் பங்கை வரவேற்கும் டக்கியர் இந்தியாவும் ஒரு அன்னிய நாடு என்பதை மறந்துவிட்டார். உண்மையில் எங்கள் பிரச்சனையை  நாமே தீர்க்க புறப்பட்டால் இந்தியா கூட எமக்குத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

டக்ளஸ் தேவானந்தா கடந்த 33 வருடங்களாக 13ஆவது சீர் திருத்தத்தின்  இன் அவசியத்தை குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறிவந்த நிலையில்

ஹஹ்ஹா....முப்பத்து மூன்று வருடங்களாக தொடர்ந்து இன்றுவரை  கூறி வருகிறார். இது ஐயாத்துரையின் மொழிபெயர்ப்பில் தீர்க்கதரிசனம். இதில இவருக்கு ஊடகப்பேச்சாளர் பதவி வேற! யாராலும் கூறமுடியும், அதுக்கு இவர் எதற்கு? எந்த ஆசனத்திலும் உரிமை கோரமுடியாதவர், எந்த கட்சியிலும் நிலையாய் இருக்கமுடியாதவர், தன்கட்சி சின்னத்திலேயே போட்டியிட முடியாமல் புலம்பியவர், எந்தக்கட்சியில் சேர்ந்தாலும் சாதிக்க முடியாதவர், இனவாத அரசுக்கு முண்டு  கொடுப்பவர், லட்சியமேதுமில்லாமல் அலம்பிக்கொண்டும் இனவாதத்தை புகழ்ந்து வயிறு வளர்க்கவுமே லாயக்கு. அமெரிக்க தூதுவர் சொன்னது இவரின் தீர்க்கதரிசனமாம்! ஆம், எங்கள் பிரச்சனையை நாங்களே தீர்க்க வேண்டும் என்பதில் எப்போதும் உறுதியாகவே இருந்தோம் இருக்கிறோம். இவர்கள் ஏன் இடையில் வந்தார்கள்? எங்கள் போராட்டத்தை முறியடித்தார்கள்? ஏன் எங்கள் தலைவர்களை சந்திக்கிறார்கள்? ஏன் மற்றைய நாடுகளின் பிரச்சனைகளில் மூக்கை  நுழைக்கிறார்கள்?

17 hours ago, தமிழ் சிறி said:

எமது பிரச்சினைகளுக்கு நாமே தீர்வுகளைக்  காணவேண்டும். எதற்கெடுத்தாலும் சர்வதேசத்தை நாடுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற கருத்தை அமெரிக்கத்  தூதுவர் தமிழ் தரப்பினருக்கு எடுத்துக் கூறி அதை முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தியிருப்பதானது எமது கட்சியின் நிலைப்பாடுகளே சரியானது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளதாக

   ஆமா.... இதுவரையில் எமது பிரச்சனைகளை தீர்க்க இவர் எந்த முயற்சி எடுத்தார்? அதை யார் தடுத்தார்?  எதற்கெடுத்தாலும் இதுவே எமது தீர்க்கதரிசனம் என்று சொல்வதையும், அடுத்தவரின் தெரிவுக்கு இதுவே எமது நிலைப்பாடும் என தான்  உரிமை கோருவதையும் தவிர. இவரால் நமது உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது,, அதற்கு முட்டுக்கட்டையாக சிங்களத்துக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டு உபதேசம் வேறை. சிங்களத்தின் கொலையில் சமபங்கு இவருக்கு உண்டு. அதனாலேயே இவரை  ஆமா போடும் சாமியாக சிங்களம் எப்போதும் தனக்குப்   பக்கத்தில் வைத்திருக்கிறது. இவருக்கு தான் ஏதோ சாதனையாளன், திறமையானவர் என ஒரு நினைப்பு! இதன் கணிப்பு தன்னை யாரென இவர் இன்னும் அறியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எந்த அதிகாரப்பகிர்விட்கும் அனுமதிக்கமாட்டொம் என்றும் சிங்கள மக்களை ஒன்று திரட்டி போராடப்போவதாகவும் நேற்று நடந்த எதிர்ப்பு கூடத்தில் சரத் வீரசேகரா தெரிவித்திருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பின்னால் திரள்பவர் திருடராகவே இருப்பர். நாள் ஒரு பொய்யும், புழுகும். வாங்கி முறியப்போகிறாரென நினைக்கிறன். சிங்கள அரசியல் வாதிகள் வெளிப்படையாகவே விமர்சிக்கின்றனர் இவரை.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றக் கட்ச்சிகள் மந்திரிப் பதவிகனை ஏற்று அடிப்படை திட்டங்களையாவது நிறைவெற்ற தவறியதன் விளைவு தான் இது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ தமிழர் தரப்பு அமெரிக்காவையும் இந்தியாவையும் மறுதலித்து சீனாவுடன் நல்ல உறவு கொள்ளலாம் வேண்டுமென்றால் திருகோணமலையில் தெற்காசியப்பிராந்தியத்துக்கான பாதுகாப்பு ஆய்வுத்தளத்தை அமைக்க நாம் அனுமதிக்கிறோம் என உத்தரவாதம் அளிக்கலாம். சிறிது சிறிதாக எமது இனம் தாயகத்திலிருந்து இல்லாமல் போவதைவிட ஒரு துணிவான முடிவெடுத்து வாழ்வா சாவா எதுவென்றாலும் வரட்டும் என முடிவெடுக்கலாம் 

வசதி எப்படி?  

ஆனால் யார் இதைச் செய்வது தொடை நடுங்கித் தமிழ்த்தலைமைகளா இல்லையேல் புலம்பெயர் தேசியச் செயற்பாட்டாளர்களா?

எவராலும் முடியாது தமிழ்த் தலைமை என்றால் அவர்கள் இந்தியக் கனவு காண்பதைவிட்டு வெளிவரமாட்டார்கள்

புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் என்றால் மேற்குலகம் தங்களைக் காயடித்துவிட்டு சொத்துக்களை எல்லாம் புடுங்கி பின்பு சிறையில் தள்ளிவிடும் 

இதை எல்லாம் இவர்கள் அறிந்தே கதையளக்கிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.