Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நிச்சயமாக. முஸ்லிம்கள் நாடுகள் எல்லாம் தராள உதவிகள்  செய்ய, வெளிநாடுகளில் உள்ள ஈழதமிழர்களும் தமிழ்நாட்டு திராவிட கட்சிகள், காங்கிரஸ்சும் யூதர்களுக்காக  அவர்கள் தான்  அந்த மண்ணின் பூர்வீககுடிகள் என்று  தீவிரமான பிரசாரங்கள் செய்வார்கள்.

யூதர்கள்தான் அந்த மண்ணிண் பூர்வீகக்குடிகள். சாட்டோட சாட்டா வரலாற்றை அடித்துவிடப் பார்க்கிறீர்கள்!

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2023 at 07:53, Sasi_varnam said:

ம்ம்ம் அந்த சப்பிளை
அனைத்தையும் ஷாப்பிங் பேக்கில் போட்டு அதை சொறிலங்கா ராணுவ முகாமுக்கு தவணைமுறையில் அனுப்பி வைத்ததே

On 12/10/2023 at 09:00, ரஞ்சித் said:

இலங்கைக்கு கொத்தணிக்குண்டுகளை வழங்கியது ரஸ்ஸியாவே.  

சரியான தகவல்களை தந்ததிற்கு நன்றி அண்ணாக்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

 

சீமட்டிக் மக்கள்-எதிர் நடவடிக்கையில் ஈடுபடும், அல்லது ஹமாசை புகழும் வெளிநாட்டவர் (மாணவர், வேலையாட்கள், அறிவுசார் சமூகத்தினர்) நாட்டில் இருந்து வெளித்தள்ளப்படுவார்கள் என்பதாக சட்டத்தை மாற்றும் திட்டம் யூகேயில் தயாராகிறதாம்.

கமாஸை பயங்கரவாதின்னு சொல்லாத பிபிசியையும் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படும் இஸ்ரேலின் கொடுமைகளை காட்டுவதாலும்.. அதையும் தூக்கி வெளில போட்டிட்டு.. மொக்குகளையும்.. இஸ்ரேலையும் வைச்சு... நாட்டை ஆள வேண்டியான். 

அதோடு ரஷ்சியாவை திட்டாதவர்களையும் உக்ரைனை புகழாதவர்களையும்.. சேர்த்துக் குற்றவாளி ஆக்கினால்.. இன்னும் சிறப்பு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

முழு அளவிலான தரை வழி படை எடுப்புக்கு முன்னோட்டமாக இஸ்ரேலின் விசேட படைகள் காஸாவில் நுழைந்துள்ளனவாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, வாலி said:

யூதர்கள்தான் அந்த மண்ணிண் பூர்வீகக்குடிகள்.

யூதர்கள் தான் அந்த பூர்வீககுடிகள் என்றால் ஏன் இவ்வளவு காலமும் பலஸ்தினிய தரப்புகளுடன் இஸ்ரேல் தரப்பும் மேற்குலக வாசிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லாந்து முதல் மந்திரியின் மாமியாரும் காசாவில் சிக்கியுள்ளார். அவரும் காசா அப்பாவி மக்களின் வேதனைகளை வெளிக்கொணர்ந்துள்ளதோடு.. மக்களை வெளியேறச் சொல்லிவிட்டு.. இஸ்ரேல் குண்டு வீசி வருவதாகவும் காணொளியூடாக தகவல் அனுப்பி உள்ளார். இந்த மக்களில் எவரும் ஹமாஸுடன் தொடர்பற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Humza Yousaf says Israel is 'going too far' in Gaza

Scotland's first minister has said Israel is "going too far" and that innocent civilians in Gaza can not simply be "collateral damage".

Scotland's FM Humza Yousaf says the situation in Gaza, where he has family, is "a human catastrophe".

Ms El-Nakla's mother, Elizabeth, with her twin grandsons, who had their ninth birthday on Wednesday

 

Earlier this week Mr Yousaf's wife, Nadia El-Nakla, told BBC News her family were "terrified" and some of her relatives' homes have already been destroyed.

Elizabeth El-Nakla and her husband, Maged, had travelled to the south of the Palestinian enclave last week to see a sick relative.

https://www.bbc.co.uk/news/uk-scotland-67100374

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

கமாஸை பயங்கரவாதின்னு சொல்லாத பிபிசியையும் பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்படும் இஸ்ரேலின் கொடுமைகளை காட்டுவதாலும்.. அதையும் தூக்கி வெளில போட்டிட்டு.. மொக்குகளையும்.. இஸ்ரேலையும் வைச்சு... நாட்டை ஆள வேண்டியான். 

அதோடு ரஷ்சியாவை திட்டாதவர்களையும் உக்ரைனை புகழாதவர்களையும்.. சேர்ந்துக் குற்றவாளி ஆக்கினால்.. இன்னும் சிறப்பு. 

முன்னரும் யாழில் இதை நான் எழுதினேன்.

அடுத்த உலக யுத்தம் மத அடிப்படையில்தான் அமையும். 

அதாவது இஸ்லாமியர் எதிர் ஏனையோர் என்பதாக.

அண்மையில் பேகம் வழக்கில் இங்கே பிறந்து வளர்ந்த ஒரு பங்களாதேச பெண்ணை - இந்த நாட்டின் குடி இல்லை என ஆக்கினார்கள். ஐசில் உடன் போய் சேர்ந்தார் என. ஹை கோர்ட்டும் கை விரித்து விட்டது.

இப்படியான நிலை எல்லாம் 10 வருடம் முன்பு கூட நினைத்து பார்க்கவியலாதது.

கொஞ்சம் கொஞ்சமாக மேற்கில் இஸ்லாமியரின் மீதான பிடி இறுகிறது.

சட்டம் என்பது பாராளுமன்று நினைப்பதுதான். மிக இலகுவாக மாற்றலாம். பாராளுமன்றும், பெரும்பான்மையும் விரும்பினால்.

எமது வாழ்நாளில் இந்த போரை நாம் சிலவேளை காணாமல் போகலாம்…ஆனால் மேற்கை பொறுத்தவரை இந்த நிலை எடுப்புக்கு மாறான ஆட்கள் இந்த நாடுகளில் இருந்து வெளியேற்றபடுவது கட்டம் கட்டமாக ஆரம்பித்து விட்டது.

ஒரு கட்டம் வரை சட்டப்படி இது நடக்கும். போர் காலம் நெருங்க இது சட்டத்துக்கு புறம்பான வழிகளிலும் நடக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

முன்னரும் யாழில் இதை நான் எழுதினேன்.

அடுத்த உலக யுத்தம் மத அடிப்படையில்தான் அமையும். 

அதாவது இஸ்லாமியர் எதிர் ஏனையோர் என்பதாக.

அண்மையில் பேகம் வழக்கில் இங்கே பிறந்து வளர்ந்த ஒரு பங்களாதேச பெண்ணை - இந்த நாட்டின் குடி இல்லை என ஆக்கினார்கள். ஐசில் உடன் போய் சேர்ந்தார் என. ஹை கோர்ட்டும் கை விரித்து விட்டது.

இப்படியான நிலை எல்லாம் 10 வருடம் முன்பு கூட நினைத்து பார்க்கவியலாதது.

கொஞ்சம் கொஞ்சமாக மேற்கில் இஸ்லாமியரின் மீதான பிடி இறுகிறது.

சட்டம் என்பது பாராளுமன்று நினைப்பதுதான். மிக இலகுவாக மாற்றலாம். பாராளுமன்றும், பெரும்பான்மையும் விரும்பினால்.

எமது வாழ்நாளில் இந்த போரை நாம் சிலவேளை காணாமல் போகலாம்…ஆனால் மேற்கை பொறுத்தவரை இந்த நிலை எடுப்புக்கு மாறான ஆட்கள் இந்த நாடுகளில் இருந்து வெளியேற்றபடுவது கட்டம் கட்டமாக ஆரம்பித்து விட்டது.

ஒரு கட்டம் வரை சட்டப்படி இது நடக்கும். போர் காலம் நெருங்க இது சட்டத்துக்கு புறம்பான வழிகளிலும் நடக்கும்.

 

சட்டத்தை இயற்றிவிட்டு சர்வாதிகார ஆட்சி செய்தால் அன்றி.. பெருகிவிட்ட முஸ்லிம் சனத்தொகை மற்றும் அவர்களின் வாக்குகள் இன்றி இவர்களால் இயற்றிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அதனை யூதப் பாடசாலைகளை இழுத்து மூடியதில் இருந்து காணலாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Gaza1-1697225080.jpg?w=770&resize=770%2C

A Palestinian family flees with hundreds of others following the Israeli army’s warning to leave their homes in Gaza City (AFP)

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nedukkalapoovan said:

சட்டத்தை இயற்றிவிட்டு சர்வாதிகார ஆட்சி செய்தால் அன்றி.. பெருகிவிட்ட முஸ்லிம் சனத்தொகை மற்றும் அவர்களின் வாக்குகள் இன்றி இவர்களால் இயற்றிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அதனை யூதப் பாடசாலைகளை இழுத்து மூடியதில் இருந்து காணலாம். 

யூகே யின் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையே 4.5 % க்கும் குறைவு.

ஆகவே முஸ்லிம் அல்லாத வாக்காளர் “பதப்படுத்த” படும் போது இதை ஜனநாயகத்திலேயே செய்யலாம்.

இது கட்டம் கட்டமாக நடக்கும். ஆரம்பத்தில் ஒரு குழுவை தனியே அடையாளப்படுத்தி நடக்காது. ஆனால் பின்பு நடக்கும்.

ஜேர்மனியில் யூதர்கள் நாட்டின் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்கும் பிரஜைகள் என்ற நிலையில் இருந்து வதைமுகாம்களுக்கு அனுப்பபடும் நிலை வந்தது சில வருடங்களில்.

இப்போ இதை வாசிக்க ஏதோ தீர்கதரிசன வாக்கு போல தெரியலாம்…ஆனால் the tends are already showing. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nedukkalapoovan said:

ஸ்கொட்லாந்து முதல் மந்திரியின் மாமியாரும் காசாவில் சிக்கியுள்ளார். அவரும் காசா அப்பாவி மக்களின் வேதனைகளை வெளிக்கொணர்ந்துள்ளதோடு.. மக்களை வெளியேறச் சொல்லிவிட்டு.. இஸ்ரேல் குண்டு வீசி வருவதாகவும் காணொளியூடாக தகவல் அனுப்பி உள்ளார். இந்த மக்களில் எவரும் ஹமாஸுடன் தொடர்பற்றவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Humza Yousaf says Israel is 'going too far' in Gaza

Scotland's first minister has said Israel is "going too far" and that innocent civilians in Gaza can not simply be "collateral damage".

Scotland's FM Humza Yousaf says the situation in Gaza, where he has family, is "a human catastrophe".

Ms El-Nakla's mother, Elizabeth, with her twin grandsons, who had their ninth birthday on Wednesday

 

Earlier this week Mr Yousaf's wife, Nadia El-Nakla, told BBC News her family were "terrified" and some of her relatives' homes have already been destroyed.

Elizabeth El-Nakla and her husband, Maged, had travelled to the south of the Palestinian enclave last week to see a sick relative.

https://www.bbc.co.uk/news/uk-scotland-67100374

ஹம்சா யூசூபின் மாமியாரின் செய்தி.

இவர் ஒரு ஓய்வு பெற்ற தாதி, டண்டி யை சேர்ந்தவர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

யூகே யின் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையே 4.5 % க்கும் குறைவு.

ஆகவே முஸ்லிம் அல்லாத வாக்காளர் “பதப்படுத்த” படும் போது இதை ஜனநாயகத்திலேயே செய்யலாம்.

இருந்தும்.. லண்டனில் மேஜர் பதவியில் இருந்து பல கவுன்சில்களையும் முஸ்லிம்களே கட்டுப்படுத்துகின்றனர். காரணம்.. அவர்கள் வாக்களிப்பதில் காட்டும் ஆர்வத்தை மற்றவர்கள் காட்டுவதில்லை. இந்த நிலை பிற கவுன்டிகளிலும் நிலவுகிறது. பிரித்தானியர்கள் வாக்கு சனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து வருவது அதிகரிக்கிறது. குறிப்பாக இளம் சமூகத்தினரிடம். இந்த நிலை தொடர்ந்தால்.. முஸ்லிம்கள் சில ஆயிரம் வாக்குகளால் கூட ஆட்சியில் செல்வாக்குச் செய்ய கூடிய நிலை உருவாகும். இதுதான் தற்போதைய நிலை.. பிரித்தானிய பிரதான நகரங்களில். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nedukkalapoovan said:

இருந்தும்.. லண்டனில் மேஜர் பதவியில் இருந்து பல கவுன்சில்களையும் முஸ்லிம்களே கட்டுப்படுத்துகின்றனர். காரணம்.. அவர்கள் வாக்களிப்பதில் காட்டும் ஆர்வத்தை மற்றவர்கள் காட்டுவதில்லை. இந்த நிலை பிற கவுன்டிகளிலும் நிலவுகிறது. பிரித்தானியர்கள் வாக்கு சனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்து வருவது அதிகரிக்கிறது. குறிப்பாக இளம் சமூகத்தினரிடம். இந்த நிலை தொடர்ந்தால்.. முஸ்லிம்கள் சில ஆயிரம் வாக்குகளால் கூட ஆட்சியில் செல்வாக்குச் செய்ய கூடிய நிலை உருவாகும். இதுதான் தற்போதைய நிலை.. பிரித்தானிய பிரதான நகரங்களில். 

இதை மிக இலகுவாக ஏனையோரை பதப்படுத்தல் மூலம் மாற்றலாம். வேறு ஒரு விடயத்துக்காக இப்படியான பதப்படுத்தல் பிரெக்சிற்றில் வெற்றி பெற்றது.

இந்த டிவீட்டில் உள்ளது ஒரு சின்ன  non scientific பரிசோதனை. ஆனால் இது வரலாற்றில் அடிக்கடி நடக்கும் ஒன்றே.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

யூதர்கள்தான் அந்த மண்ணிண் பூர்வீகக்குடிகள். சாட்டோட சாட்டா வரலாற்றை அடித்துவிடப் பார்க்கிறீர்கள்!

😄

யூதர்கள் முஸ்லிம் மதத்தவர்களாக இருந்திருந்தால் அப்போது ஹம்சா யூசூபின் மாமியார் வெயர் இஸ் த மனதாபிமானம் என்று கேட்டு யூதர்களுக்காக கண்ணீர் சிந்துவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

கனடாவில் இருந்து ஆய்வாளர் நேரு குணரட்ணம்.

பல விடயங்களை தொட்டுச் செல்கிறார்.சிலதுகளில் தடக்கினாலும் சில விடயங்கள் சிந்திக்க வைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ, காலப்போக்கில்  எங்களின் அடுத்த, அதற்கடுத்த தலைமுறைகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மீண்டும்  புலம்பெயர வேண்டி ஏற்படுமோ என்று தோன்றுகிறது.

🤨

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

4 hours ago, Kapithan said:

எனக்கென்னமோ, காலப்போக்கில்  எங்களின் அடுத்த, அதற்கடுத்த தலைமுறைகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மீண்டும்  புலம்பெயர வேண்டி ஏற்படுமோ என்று தோன்றுகிறது.

🤨

 

May be an image of text

 

May be a doodle of text

 

 

May be an image of text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலிய படையினர் காசாவில் மேற்கொண்ட தாக்குதலில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களின் உடல்கள் மீட்பு- இஸ்ரேல் செய்தித்தாள்கள்

Published By: RAJEEBAN

14 OCT, 2023 | 10:01 AM
image
 

இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலின் போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் காசாவில் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காசாவில் இஸ்ரேலிய  இராணுவத்தினர் மேற்கொண்ட தரைநடவடிக்கையின் போது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஹரேட்சும் ஜெரூசலேம்போஸ்ட்டும் தெரிவித்துள்ளன.

 

பெருமளவு உடல்களை மீட்ட இஸ்ரேலிய படையினர் அவற்றை இஸ்ரேலிற்கு கொண்டுவந்தனர். அவற்றில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளமை தெரியவந்துள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன

 

காசா மீதான பாரிய தரைத்தாக்குதலிற்கு முன்னதாக சிறிய தரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளை அந்த இடத்திலிருந்து வெளியேற்றி ஆயுதங்களை அகற்றும் நோக்கத்துடனும் பணயக்கைதிகளை மீட்கும் நோக்கத்துடனும் இந்த தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பணயக்கைதிகளை மீட்பதற்கு உதவக்கூடிய ஆதாரங்களை படையினர் சேகரித்துள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய விமானங்கள் தொடர்ந்தும் காசவில் உள்ள ஹமாஸ் நிலைகள் மீது  தாக்குதல்களை மேற்கொள்கின்றன.

https://www.virakesari.lk/article/166819

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

யூகே யின் மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையே 4.5 % க்கும் குறைவு.

ஆகவே முஸ்லிம் அல்லாத வாக்காளர் “பதப்படுத்த” படும் போது இதை ஜனநாயகத்திலேயே செய்யலாம்.

இது கட்டம் கட்டமாக நடக்கும். ஆரம்பத்தில் ஒரு குழுவை தனியே அடையாளப்படுத்தி நடக்காது. ஆனால் பின்பு நடக்கும்.

ஜேர்மனியில் யூதர்கள் நாட்டின் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்கும் பிரஜைகள் என்ற நிலையில் இருந்து வதைமுகாம்களுக்கு அனுப்பபடும் நிலை வந்தது சில வருடங்களில்.

இப்போ இதை வாசிக்க ஏதோ தீர்கதரிசன வாக்கு போல தெரியலாம்…ஆனால் the tends are already showing. 

பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்களின் வாக்கு உரிமை திரும்ப பெற முடியாத  ?? அதாவது பறிக்க முடியாத  ?? குடியேறியவர்கள் பிரச்சனை கொடுக்கும் போது   அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று நினைக்கிறேன்  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதல்

Published By: RAJEEBAN

14 OCT, 2023 | 10:20 AM
image
 

இஸ்ரேலின் டெல்அவிவில் பிபிசி ஊடகவியலாளர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

பிபிசியின் செய்தியாளர்களும் அவர்களது அராபிய பிரிவின் குழுவினரும் ஹோட்டலிற்கு சென்று கொண்டிருந்த வேளை அவர்களது வாகனத்தை மறித்த இஸ்ரேலிய பொலிஸார் ஊடகவியலாளர்களை வாகனத்திலிருந்து பலவந்தமாக இறக்கி அவர்களை சோதனையிட்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர்கள் தாங்கள் யார் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் இந்த சம்பவத்தை படம்பிடிக்க முயன்றவேளை பொலிஸார் கையடக்கதொலைபேசிகளை பறித்து நிலத்தில் வீசியதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.

டெல்அவிவிலிருந்து செயற்படும் எங்கள் அராபிய பிரிவினர் ஊடகம் என தெளிவாக குறியிடப்பட்ட வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை இஸ்ரேலிய பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். காசா இஸ்ரேல் மோதல்கள் குறித்து செய்தியாளர்கள் சுதந்திரமாக செய்திகளை வெளியிடும் சூழல் அவசியம் என பிபிசியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166823

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் வெள்ளை பொஸ்பரஸ் எறிகணையை பயன்படுத்துகின்றது- சர்வதேச மன்னிப்புச்சபை

Published By: RAJEEBAN

14 OCT, 2023 | 01:13 PM
image
 

இஸ்ரேல் காசாமீது வெள்ளை பொஸ்பரசினை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை உறுதி செய்துள்ளது.

வெள்ளை பொஸ்பரஸ் ஆட்டிலறி எறிகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலிய இராணுவம் காசா மீது தாக்குதலை மேற்கொள்கின்றது என உறுதிசெய்ய முடிந்துள்ளது என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

காசாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீதான தாக்குதலிற்கு வெள்ளை பொஸ்பரஸ் ஆயுதம் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணை செய்துவருகின்றோம் என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இஸ்ரேல் காசாவிற்கு மின்சாரத்தை வழங்கவேண்டும் 16 வருட முற்றுகையை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காசா மக்களிற்கு எதிரான கூட்டுதண்டனை சட்டவிரோதமானது யுத்த குற்றம் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166848

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்களின் வாக்கு உரிமை திரும்ப பெற முடியாத  ?? அதாவது பறிக்க முடியாத  ?? குடியேறியவர்கள் பிரச்சனை கொடுக்கும் போது   அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்று நினைக்கிறேன்  

பிரித்தானியாவில் வாக்குரிமை தனியே பிரித்தானிய பிரஜைகளுக்கு மட்டும் அல்ல, சகல பொதுநலவாய நாட்டு பிரசைகளுக்கும் உண்டு. பிரித்தானியாவில் வாழும் ஒரு பொது நலவாய பிரசையும் தேர்தலில் வாக்களிக்கலாம்.

நிற்க,

இது இன்றைய நிலை.

போன வருடம் வரை பிரித்தானியாவில் வாக்களிக்க போகும் போது வாக்காளர் அடையாளம் காட்டும் தேவையில்லை.

வாக்காளர் டாப்பில் பெயர் இருந்தால் - கையை விசுக்கி கொண்டு போய் தரும் சீட்டை வாக்கி, பென்சிலால் ஒரு கீறை போட்டு போய்கொண்டே இருக்கலாம்.

இப்போ சட்டத்தை மாற்றி இது கட்டாயம் என ஆக்கி உள்ளார்கள்.

இதை செய்யும் அளவுக்கு வாக்கு களவு ஒண்டும் நடக்கவில்லை.  

ஆனால் அடையாள ஆவணங்களை வைத்திராமல் இருப்போர் யார்? அடிமட்டத்தில் இருப்போர், சிறுபான்மையினர், பொருளாதார ரீதியில் நலிவுற்றோர், மற்றும் ஏற்கனவே வாக்கு போட பஞ்சிபடும் இளையோர் - இவர்கள் அட்டை இருந்தாலும் அதை எடுத்து போகும் அலுப்பில் போகாமலே விட கூடிய ஆட்கள்.

இப்படியானவர்களின் வாக்கு தொழிற்கட்சிக்கே கிடைக்கும் (அநேகம்).

இதை குறைக்க பழமைவாதிகள் கொண்டு வந்த சட்டம்தான் இந்த கட்டாய அடையாள ஆவணம் கோரும் சட்டம்.

ஒரு கோழியை உரிக்க பல வழிகளுண்டு

(ஆங்கில பழமொழி there are many ways to skin a cat - அப்படியே எழுதினால் @Eppothum Thamizhanடென்சன் ஆகி விடுவார்😝). 

வெளிப்படையாக இன்ன இனம் அல்லது மதம் சார்ந்தோருக்கு வாக்குரிமை இல்லை என ஆக்க தேவையே இல்லை. 

பயங்கரவாதத்தை பெருமையாக கூறல் (glorifying terrorism) எனும் குற்றத்தை செய்வோருக்கு வாக்குரிமை இல்லை என ஒரு சட்டம் கொண்டு வந்தாலே போதும்.

தவிரவும் ஒரு சில கவின்சில் வார்டுகளை தவிர - லண்டன் மேயர் கான், ஸ்காட்லாந்து முதல் மந்திரி யூசூப், முன்னாள் நிதி மந்திரி ஜாவிட் போன்றோர் முஸ்லிம் வாக்குகளாலேயே வென்றனர் என்பது தவறு.

இவர்களுக்கு வாக்களித்தோரில் அறுதி பெரும்பான்மையினர் முஸ்லிம் அல்லாதோரே.

ஜாவிட்டின் பொம்ஸ்குரொவ் மத்திய இங்கிலாந்தில் இருக்கும் வசதியான வெள்ளையர் அதிகம் இருக்கும் தொகுதி.

அதேபோல சுனாக்கின் ரிச்மண்ட் தொகுதி வட இங்கிலாந்தில் உள்ள இன்னுமொரு வசதி படைத்த வெள்ளையர் வாழும் தொகுதி.

ஆகவே இப்போதும் கூட வெள்ளை இனத்தவர் அல்லாதோர் வெல்வது வெள்ளை இனத்தவர் வாக்கு போடுவதாலே.

நான் எதிர்வு கூறும் நிலை வரின், இப்படி நடவாது. அதாவது ரிசிக்களும், சுவேலாக்களும், பிரீதிகளுக்கும் தொடர்ந்து போடுவார்கள் - ஆனால் ஜாவிட்களையும், கான்களையும் ஒதுக்கி விடுவார்கள்.

இன்னொரு விடயம் இங்கே இப்போ உள்த்துறை அமைச்சர் ஒரு ஆசியர். அதாவது தமிழ் தாய்+கோவா தந்தை. பிறப்பு இங்கே. மிக கடுமையான வலதுசாரி, இஸ்ரேலிய ஆதரவாளர். குடியேற்றவாசிகள் தொடர்ந்தும் வருவதை எதிர்ப்பவர். நான் மேலே வரவிருப்பதாக சொல்லிய சட்ட மாற்றங்கள் இவர் சொல்லியே ஆலோசிக்கப்படும்.

ஆகவே எல்லா வெள்ளை இல்லாதவரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க மாட்டார்கள்.

எல்லா இஸ்லாமியரையும் கூட இல்லை.

ஆனால் ஆய் ஊய் என கத்துபவர்கள், போராடுபவர்கள், யூதரை தொந்தரவு செய்வோர், பலஸ்தீனுக்கு நிதி சேகரிப்போர், சமூக வலைதளங்களில் எழுதுவோர் - கண்காணிக்கப்படுவாகள்.

இப்படியான சிலரை காத்திருந்து வெளிநாடு போன பின், பாஸ்போர்ட்டை பறித்து நடு தெருவில் விட்ட சம்பவங்கள் ஏலவே நடந்துள்ளன.

இங்கே மதத்தை விட ideology தான் முக்கியம்.

ஜனநாயக தாராளவாதமா அல்லது அடிப்படை இஸ்லாமியவாதமா என்பதே கேள்வி.

இந்த மோதலில் ஆரம்ப கட்டம் இப்போ.

காலம் போக போக இது வலுப்பெறும்.

அப்போ ஜனநாயக சிஸ்டத்தில் இருந்து கொண்டு, அது கொடுக்கும் மட்டுபட்ட சுதந்திரம், மனித உரிமையை பயன்படுத்தி, அதையே தாக்க விடமாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

1. காஸாவில் இருந்து வெளியேறி கொண்டிருந்த சிவிலியன் வாகன தொடரை இஸ்ரேல் தாக்கி குறைந்தது 12 பேர் பலி

2. துருக்கி தொலைகாட்சியில் பேசிய முன்னாள் ஹமாஸ் தலைவர் “எமக்கு சிவிலியன்களும், ஆமியும் ஒன்றுதான்” என கூறி ஹாமாசின் அண்மைய தாக்குதல் நியாயப்படுத்தியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

2. துருக்கி தொலைகாட்சியில் பேசிய முன்னாள் ஹமாஸ் தலைவர் “எமக்கு சிவிலியன்களும், ஆமியும் ஒன்றுதான்” என கூறி ஹாமாசின் அண்மைய தாக்குதல் நியாயப்படுத்தியுள்ளார்.

அருமையான கொள்கை...இக் கொள்கையின் படி  பாலஸ்தீனர்களை. இஸ்ரேல் குண்டுகள் போட்டு கொல்கிறது என்று எடுத்து கொள்ளலாம்    இந்த கொள்கையை பாலஸ்தீன  ஆதரவாளர்கள் அறிவார்களா.  ??? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.