Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Xiang-Yang-Hong-03.jpg?resize=700,375&ss

இலங்கைக்கு வரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்தியா.

அடுத்தாண்டு ஜனவரியில் சீனாவின் மற்றுமொரு ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான கோரிக்கையை சீன அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிங் யாங் ஹாங் 03 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்படும் என்றும் அதற்காக இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த கப்பலுக்கு கடல் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்திய அரசாங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2023/1363246

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கரிசனைகளிற்கு மத்தியில் ஜனவரியில் மற்றுமொரு சீன கப்பல் கொழும்பு வருகின்றது ? - இந்திய ஊடகம்

Published By: RAJEEBAN    15 DEC, 2023 | 03:25 PM

image
 

Hindustan Times

சீனாவின் சியான்6 ஆராய்ச்சி  கப்பல் தனது ஆராய்ச்சிகளை முடித்துக்கொண்டு  டிசம்பர் 2ம் திகதி சிங்கப்பூர் திரும்பிய பின்னர் இலங்கையின்  துறைமுகத்திலும் மாலைதீவிலும்  தனது மற்றுமொரு கப்பல் தரித்து நிற்பதற்கு அனுமதிக்குமாறு  சீனா கொழும்பிடம் வேண்டுகோள் விடுத்தது.

2024 ஜனவரி ஐந்தாம் திகதிமுதல் மே மாதம் வரை தனது கப்பல் தென்னிந்திய சமுத்திரத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.

இந்தியா ஏற்கனவே தனது எதிர்ப்பை இலங்கைக்கும் மாலைதீவிற்கும் தெரிவித்துள்ளதுடன் சீன கப்பல் இனிமேல் இந்து சமுத்திரத்தில் இராணுவ நோக்கங்களிற்காக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்ககூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜியாங் யாங் கொங்3 என்றகப்பல் தென்சீனாவின் சியாமென் கரையோர பகுதியில் தரித்து நிற்கின்றது. இந்த நாடுகளிடம் அனுமதியை பெற்ற பின்னர் மலாக்கா நீரிணை ஊடாக பயணிக்கும்.

2016 தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் நவீன கண்காணிப்பு ஆராய்ச்சி சாதனங்களை தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

இந்தியாவின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கிய சீனாவின்  சியான்6 கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திலும் தென்னிந்திய சமுத்திரத்திலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட பின்னர் நவம்பர் 20 ம் திகதி மலாக்கா நீரிணையிலிருந்து வெளியேறியது.

கொழும்பு துறைமுகத்திற்குள் ஒக்டோபர் 25 ம் திகதி நுழைவதற்கு முன்னர் சென்னையிலிருந்து 500 கடல்மைல் தொலைவில் இந்த கப்பல்காணப்பட்டது.

சீனாவின் ஏவுகணை கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பல்களிற்கு இலங்கை அனுமதி வழங்குவது குறித்தும், தற்போது மாலைதீவில் உள்ள சீனா சார்பு அரசாங்கம் குறித்தும் இந்தியா கரிசனைகளை கொண்டுள்ளது.

கடல்சார் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த கப்பல்கள் இந்தியாவை வேவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக இந்தியா கரிசனை கொண்டுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 21ம் திகதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டவேளை இந்திய பிரதமர் இது குறித்த தனது கரிசனைகளை பகிர்ந்துகொண்டார். இந்தியாவின் மூலோபாய கரிசனைகளிற்கு இலங்கை மதிப்பளிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சீன கடற்படை மூன்று விமானம்தாங்கி கப்பல்கள் அணுவாயுத நீர்மூழ்கிகள் ஏவுகணைகளை அழிக்கும் நாசகாரிகள் போன்றவற்றை கொண்டு தனது கடல்சார் வளங்களை வேகமாக  அதிகரித்து செய்துவருகின்றது.

 கம்போடியா முதல் செங்கடல் வரை பல கடற்படை தளங்களை அமைப்பதன் மூலம் சீனா இந்து சமுத்திரத்தில் தனது காலடியை விரிவுபடுத்துகின்றது.

https://www.virakesari.lk/article/171779

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இப்படி சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். ஒன்றுமே நடக்கப்போவதில்லை. மாலைதீவில் இருந்து இந்தியாவை வெளியற்றி விடடார்கள். இங்கிருந்து எப்போது வெளியற்ற படுவார்கள் என்று சொல்ல முடியாது எனவேதான் நிறைய முதலீடுகள் செய்கிறார்கள்.

இருந்தாலும் இலங்கை இறைமை உள்ள நாடு என்று உரக்க கூறி கொண்டிருக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருட ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிறைய மாற்றங்கள் வரலாம்.

இந்தியாவிடம் கடன் வாங்கி , பழைய கடன்களை தாமதமாக செலுத்துவதட்கு நேரத்தையும் வாங்கி முடித்தாயிற்றுது.

எனவே இந்தியா எதை சொன்னாலும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. சீன கப்பல் வரத்தான் போகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை!

adminDecember 17, 2023
China-Xiang-Yang-Hong.jpg?fit=1170%2C439

இலங்கை கடற்பிராந்தியத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள செல்லும்  சீன கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சீன ஆய்வுக் கப்பலான Xiang Yang Hong 03 கப்பல் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை தென்னிந்திய கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளின் கடற்பரப்புகளும் அதில் அடங்குகின்றன.

இலங்கையிடமும் மாலைத்தீவுகளிடமும் தமது கப்பலின் ஆய்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இதற்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக Hindustan Times பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என இந்தியா இலங்கையிடமும் மாலைத்தீவுகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

Xiang Yang Hong 03 கப்பல் தற்போது தென் சீனக் கடலில் Xiamen கரைக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன், அனுமதி கிடைத்த பின்னர் மலாக்கா ஊடாக பயணிக்கவுள்ளதாக Hindustan Times செய்தி வெளியிட்டுள்ளது.

ஆய்வு நடவடிக்கை எனும் போர்வையில் சீனா இந்தியாவை உளவு பார்ப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைத்தீவில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முய்ஸூ (Mohamed Muizzu) இந்திய இராணுவத்தினரை தமது நாட்டிலிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ள பின்புலத்தில் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.

 

https://globaltamilnews.net/2023/198694/

  • கருத்துக்கள உறவுகள்

கல்லோ இந்தியா

ஏன் பிராந்தியத்துக்கு அச்சுறுத்தல் என்று அழுது குளறுவான்?

நேரடியாகவே இது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என்று கூறலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஜெயசங்கர் ..வெளிக்கிடுவார்...வந்து ஆழ்ந்தகவலையை வெளியிடுவார்...அப்புறம் ..பழைய பிளேன்..அல்லது கப்பலை அன்பளிப்புச் செய்துவிட்டு...அப்பம் சாப்பிட்டுவிட்டு ..அதன் ருசியை பாராட்டிவிட்டுப் போய் விடுவார்....பின்னர் அடுத்த கப்பல் வர...

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயம், அக்கிரமம்...

குய்யோ, முறையோ...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 15/12/2023 at 12:44, தமிழ் சிறி said:

சிங் யாங் ஹாங் 03 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கப்பல் ஜனவரி 5ஆம் திகதி முதல் மே மாதம் வரை இந்தியப் பெருங்கடலில் ஆய்வுப் பணியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவு துறைமுகங்களில் சீனக்கப்பல் நங்கூரமிடப்படும் என்றும் அதற்காக இலங்கை மற்றும் மாலைதீவு அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோசம்.
70,60 வருட இந்திய அரசியலில் ஈழத்தமிழர்கள் அழிவுகளை கண்டதுதான் மிச்சம்..

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அந்த ----- இரண்டு கண்ணும் போகட்டும். இதற்கு சீனா பக்கம் நாம் நிற்கலாம். சிங்களத்துடன் பேசி நாம் ஒரு முடிவிற்கு வரலாம். இதைத்தான் விடுதலைப்புலிகளும் கடைப்பிடித்து வெற்றி வாகை சூடினார்கள்.


சிங்களவனை நம்பினாலும் கிந்தியனை நம்பாதே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சந்தோசம்.
70,60 வருட இந்திய அரசியலில் ஈழத்தமிழர்கள் அழிவுகளை கண்டதுதான் மிச்சம்..

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அந்த ----- இரண்டு கண்ணும் போகட்டும். இதற்கு சீனா பக்கம் நாம் நிற்கலாம். சிங்களத்துடன் பேசி நாம் ஒரு முடிவிற்கு வரலாம். இதைத்தான் விடுதலைப்புலிகளும் கடைப்பிடித்து வெற்றி வாகை சூடினார்கள்.


சிங்களவனை நம்பினாலும் கிந்தியனை நம்பாதே.

1400 மைல் தொலைவில் இருந்த அந்தமான், நிக்கோபார் தீவுகளையும், பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மாவையும் இந்தியாவுடன் இணைத்த பிரிட்டிஷ்காரன், பக்கத்தில், 18 மைல் தொலைவில் இருந்த, இந்த சின்ன தீவினை, தனியே ஆண்டான்.

இந்தியாவுடன் சேர்த்து ஆளவில்லை.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், பிரிட்டிஷ்காரனுக்கே தெரிந்திருக்கிறது, இந்தியனை நம்பினால், கந்தருந்து போவீர்கள் எண்டு. 🤪🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Nathamuni said:

1400 மைல் தொலைவில் இருந்த அந்தமான், நிக்கோபார் தீவுகளையும், பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மாவையும் இந்தியாவுடன் இணைத்த பிரிட்டிஷ்காரன், பக்கத்தில், 18 மைல் தொலைவில் இருந்த, இந்த சின்ன தீவினை, தனியே ஆண்டான்.

இந்தியாவுடன் சேர்த்து ஆளவில்லை.

இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், பிரிட்டிஷ்காரனுக்கே தெரிந்திருக்கிறது, இந்தியனை நம்பினால், கந்தருந்து போவீர்கள் எண்டு. 🤪🤣

தரமான கருத்து. 👍🏼

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிங்களத்துடன் பேசி நாம் ஒரு முடிவிற்கு வரலாம்.

🤣 இதைத்தான் பாருங்கோ பொன்னம்பலம் இராமநாதன் அப்ப சொல்லி, நம்பிப்போய் சிங்களவன் தீத்துனவன்🤣.

எல்லாம் முடிஞ்சபின், ஏமாந்த சோணகிரியாக இலங்கை தேசிய காங்கிரசை விட்டு வெளியே வந்து தமிழர் மஹாஜன சபையை உருவாக்கினார்.

பிறகு செல்வாவுக்கு ஒண்டுக்கு இரெண்டு தரம் தீத்தினவங்கள்🤣. அவர் கடவுள் மேல் பாரத்தை போட்டு கண்மூடினார்.

இப்ப 15 வருசமா சம்பந்தர் சொன்னதும், சிங்க கொடியை ஆட்டுனதும் இதை சொல்லியே தான். அவருக்கும் சுமந்திரனுக்கும் நல்லாட்சியில் ரணில் தீத்துனார் புதிய அரசியலமைப்பு தீத்தல்.

அடுத்து சுரேன் - இமாலய தீத்தலுக்கு ரெடி ஆகியுள்ளார்.

யாழில் அண்ணளவாக 25 வருடமாய் இராமநாதன் அரசியலை வகை வகையாக விமர்சித்த நீங்கள்………

இதையே செய்ய விழைந்த சம், சும், அவர்கள் முயலுட்டுமே என எழுதிய என் போன்றோர் உங்களிடம் வாங்கிய வசவுகள் ஏராளம்.

இன்று….85 ஆண்டுக்கு முன் இராமநாதன் செய்த அதே அரசியலை நீங்கள்  முன்மொழிகிறீர்கள்🤣.

விதி வலியது 

# கொள்கை குத்துக்கரணம்

 

1 hour ago, குமாரசாமி said:

இதைத்தான் விடுதலைப்புலிகளும் கடைப்பிடித்து வெற்றி வாகை சூடினார்கள்

எங்கே?

90களின் பிற்பகுதியில் இருந்து ஒவ்வொரு மாவீரர் உரையிலும் தலைவர் மறக்காமல் வலியுறுத்திய விடயம்….

சிங்கள தரப்பை நம்பி ஏமாற நாம் தயாரில்லை.

மூன்றாம் தரப்பு மத்யஸ்தம், உத்தரவாதம் அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

1400 மைல் தொலைவில் இருந்த அந்தமான், நிக்கோபார் தீவுகளையும், பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மாவையும் இந்தியாவுடன் இணைத்த பிரிட்டிஷ்காரன், பக்கத்தில், 18 மைல் தொலைவில் இருந்த, இந்த சின்ன தீவினை, தனியே ஆண்டான்.

இந்தியாவுடன் சேர்த்து ஆளவில்லை.

 

இது ஒரு மிகவும் முக்கியமான விடயம். இதனைப் பலர் கவனத்திற் கொள்வதில்லை. 

"இந்த சின்ன தீவினை, ஏன் தனியே ஆண்டான் ? "

இந்தியாவிற்கு கடுக்காய் கொடுப்பதற்கு இலங்கை என்கிற நாட்டைத் தனியாக வைத்திருக்க வேண்டும் என்று 200 300 வருடங்களுக்கு முன்பே பிரித்தானியர்கள் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதை எத்தனை பேர் விளங்கிக்கொண்டிருக்கிறார்கள் ? 

படித்த, கல்விஅறிவு கூடிய நாட்டின்  சிறுபான்மையினர் பல நாடுகளை தங்கள்க ட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் வரலாற்றில் அதிகம்.  ஆனால் நாமோ  நேரெதிர,..☹️

புதிய சிந்தனைகள் அவசியம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

இன்று….85 ஆண்டுக்கு முன் இராமநாதன் செய்த அதே அரசியலை நீங்கள்  முன்மொழிகிறீர்கள்🤣.

இராமநாதன் காலத்தில் இனவாத பிரச்சனை இருந்ததா? மறந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சந்தோசம்.
70,60 வருட இந்திய அரசியலில் ஈழத்தமிழர்கள் அழிவுகளை கண்டதுதான் மிச்சம்..

எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை அந்த ----- இரண்டு கண்ணும் போகட்டும். இதற்கு சீனா பக்கம் நாம் நிற்கலாம். சிங்களத்துடன் பேசி நாம் ஒரு முடிவிற்கு வரலாம். இதைத்தான் விடுதலைப்புலிகளும் கடைப்பிடித்து வெற்றி வாகை சூடினார்கள்.


சிங்களவனை நம்பினாலும் கிந்தியனை நம்பாதே.

இதனை தாங்கள், இந்தியாவைவிட சிங்களம் மேல்  எனும் அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என ஊகிக்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

எங்கே?

பிரேமதாச காலத்தில்....

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இராமநாதன் காலத்தில் இனவாத பிரச்சனை இருந்ததா? மறந்து விட்டேன்.

மேல் மாகாணத்தில் படித்த இலங்கையர் கோட்டாவில் தமிழருக்கு ஒரு இடம் தருவதாக சிங்களவர் எழுத்தில் கொடுத்து விட்டு….

சில காலம் போக….

சும்மா…லுலுலுலா என சொல்லி விட்டார்களாம்🤣

4 minutes ago, குமாரசாமி said:

பிரேமதாச காலத்தில்....

புலிகளை வைத்து இலங்கயில் சிங்கள இருப்புக்கு 1000 ஆண்டுகளில் வந்த மிக பெரும் ஆபத்தான இந்திய படைகளை சிங்களவர் தந்திரமாக வெளியேற்றியபின், 3 மதத்தில் போரை தொடங்கி, இந்திய படை இருக்கும் போது செய்ய முடியாத குடியேற்ற நகர்வுகளை, அம்பாறை, வவுனியா தெற்கு, மணலாறு, திருமலையில் செய்து முடித்து, கிழக்கில் தமிழர்கள் மீது ஒரு மினி இன அழிப்பை நடத்தி, கிழக்கின் தமிழர் இருப்பை கேள்விகுறியாக்கிய அந்த நிகழ்வையா சொல்கிறீர்கள்?

சிங்களவரை தனியே நம்பி எந்த தமிழன் எந்த வலுவான நிலையில் போனாலும் ஆப்புத்தான் என்பதற்கு உண்மையில் இதுதான் சிறந்த உதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சிங்கள தரப்பை நம்பி ஏமாற நாம் தயாரில்லை.

மூன்றாம் தரப்பு மத்யஸ்தம், உத்தரவாதம் அவசியம். 

இனி மூன்றாம் தரப்பாக வர யாரும் தயாராக இல்லய் . நோர்வே இதில் ஈடுபட்டு களைத்துப்போய் அவர்களது தூதுவராலயத்தே மூடிவிட்டு பொய் விடடார்கள். இந்தியா இலங்கையை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. எனவேதான் படும் படாமலும் இதனைகையாளுகின்றது. இது உள்ளூர் விவகாரம் நீங்கள் பேசி தீருங்கள் என்று மற்ற நாடுகள் சொல்லாமல் சொல்லுகின்றன. எனவே மூன்றாம் தர்ப்பை எதிர்பார்ப்பது புத்திசாலி  தனமாக இருக்குமோ தெரியவில்லை. இங்குள்ள தமிழர் காட்சிகள் ஒற்றுமையாக எதாவது சரியான தீர்மானம் எடுத்தாலொழிய மீட்சியில்லை

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

இனி மூன்றாம் தரப்பாக வர யாரும் தயாராக இல்லய் . நோர்வே இதில் ஈடுபட்டு களைத்துப்போய் அவர்களது தூதுவராலயத்தே மூடிவிட்டு பொய் விடடார்கள். இந்தியா இலங்கையை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. எனவேதான் படும் படாமலும் இதனைகையாளுகின்றது. இது உள்ளூர் விவகாரம் நீங்கள் பேசி தீருங்கள் என்று மற்ற நாடுகள் சொல்லாமல் சொல்லுகின்றன. எனவே மூன்றாம் தர்ப்பை எதிர்பார்ப்பது புத்திசாலி  தனமாக இருக்குமோ தெரியவில்லை. இங்குள்ள தமிழர் காட்சிகள் ஒற்றுமையாக எதாவது சரியான தீர்மானம் எடுத்தாலொழிய மீட்சியில்லை

தீர்வும், உத்தரவாதமும் மூன்றாம் தரப்புக்கு அல்ல, எமக்குத்தான் தேவை. ஆகவே அவர்கள் மூடி விட்டு போனாலும் நாம் முயன்று இழுத்து வந்தே ஆக வேண்டும்.

சிங்களவனிடம்ன் நேரில் போனால்…கட்டாயம் தீர்வு தருவான்….

எப்படி….நீர்கொழும்பு-சிலாவத்துறை வரை (முந்தல் நீங்கலாக) உள்ள முன்னைய தமிழர் நிலத்துக்கு என்ன தீர்வு கொடுத்தானோ, அதே தீர்வை.

அதுதான் உங்கள் இஸ்டம் எண்டால்….

எண்ட…சகோதரயா…அபி எக்கத்து வெலா, ரட்ட கொட கமு🤣

இந்தியனை விட சிங்களவன் மேல்…

சிங்களவனை விட இந்தியன் மேல்….

இவர்கள் இருவருக்கும் பெப்சிக்கும், கொக்கோகோலாவுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

இந்தியாவின் நஞ்சை புரிந்து கொண்டதால்….சிங்களவனை நம்பி தனியே பேசப்போனால்….நாமம் கரண்டீட்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் இந்தியனை வைச்சுக்கொண்டு சிங்கவனிட்டை போனால்...சிங்களவன் சீனனிட்ட போவான்....சீனனிட்ட சிங்களவன் போனதை இந்தியன் கண்டால் அவன் சிங்களவனிட்ட ஓடுவான்...மேற்குலகம் இந்தியனை பகைக்க தயாரில்லை....
இப்ப ஆர் நடுத்தெருவிலை?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

தீர்வும், உத்தரவாதமும் மூன்றாம் தரப்புக்கு அல்ல, எமக்குத்தான் தேவை. ஆகவே அவர்கள் மூடி விட்டு போனாலும் நாம் முயன்று இழுத்து வந்தே ஆக வேண்டும்.

சிங்களவனிடம்ன் நேரில் போனால்…கட்டாயம் தீர்வு தருவான்….

எப்படி….நீர்கொழும்பு-சிலாவத்துறை வரை (முந்தல் நீங்கலாக) உள்ள முன்னைய தமிழர் நிலத்துக்கு என்ன தீர்வு கொடுத்தானோ, அதே தீர்வை.

அதுதான் உங்கள் இஸ்டம் எண்டால்….

எண்ட…சகோதரயா…அபி எக்கத்து வெலா, ரட்ட கொட கமு🤣

இந்தியனை விட சிங்களவன் மேல்…

சிங்களவனை விட இந்தியன் மேல்….

இவர்கள் இருவருக்கும் பெப்சிக்கும், கொக்கோகோலாவுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

இந்தியாவின் நஞ்சை புரிந்து கொண்டதால்….சிங்களவனை நம்பி தனியே பேசப்போனால்….நாமம் கரண்டீட்.

மூன்றாம் தரப்பை இழுத்து வர முன்னர் இங்குள்ள தமிழர் , தமிழர் கட்சிகள் நாங்கள் மூன்றாம் தரப்பனார்  இல்லை என்பதை காண்பிக்க வேண்டும். நாங்களே மூன்றாம் தரப்பினர்போல இருக்கும்போது எப்படி ...............

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

மூன்றாம் தரப்பை இழுத்து வர முன்னர் இங்குள்ள தமிழர் , தமிழர் கட்சிகள் நாங்கள் மூன்றாம் தரப்பனார்  இல்லை என்பதை காண்பிக்க வேண்டும். நாங்களே மூன்றாம் தரப்பினர்போல இருக்கும்போது எப்படி ...............

100% இக்கருத்துடன் உடன்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தமிழன் இந்தியனை வைச்சுக்கொண்டு சிங்கவனிட்டை போனால்...சிங்களவன் சீனனிட்ட போவான்....சீனனிட்ட சிங்களவன் போனதை இந்தியன் கண்டால் அவன் சிங்களவனிட்ட ஓடுவான்...மேற்குலகம் இந்தியனை பகைக்க தயாரில்லை....
இப்ப ஆர் நடுத்தெருவிலை?

இப்ப மட்டும் இல்லை எப்பவும் நாம்தான் நடுத்தெருவில்.

ஏன்?

ஒரு இனமாக நாம் சுத்த மொக்கு கேசுகளாக இருப்பதால்.

முதலில் நமது வரலாறை நாம் அறிய வேண்டும்.

1796 வந்து, 1948 இல் போன பிரித்தானியரை 400 வருடம் ஆண்டார்கள் என்றும், இராமநாதன் காலத்தில் இனவாதம் இருந்ததா என்றும், இலங்கை மட்டும் அல்ல, அதைவிட சிறிய மாலைதீவை தனித்த British Protectorate ஆகவும், நேபாளுடன் ஒப்பந்தம் மூலமும் பிரிட்டிசார் கட்டுப்படுத்தினர் என்பதை ஒப்பு நோக்காமலும்….

விழிப்புலனற்றவர் யானை பார்த்ததை போல தரவுகளை அணுகி, இந்தியன் கெட்டவன் ஆகவே சிங்களவன் நல்லவன் என்று பொய் சமன்பாடுகளை போடும் அளவில்தான் இருக்கிறது எமது கூட்டு கெட்டித்தனம்.

பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும்….அப்படித்தான் எம் தலைவர்களும்.

இந்த இலட்சணத்தில் செலன்ஸ்கியை கோமாளி, பிச்சைக்காரன் என நக்கல் வேறு அடிப்போம்.

அரைநிர்வாணப் பக்கிரி என கேலி செய்யப்பட்ட காந்தி, கிழக்கு இலண்டன், மான்செஸ்டர் போய் உழைக்கும் ஆங்கிலேயர் ஆதரவை திரட்டி, இந்திய விடுதலையை விரைவாக்கினார்.

மண்டேலா சிறையில், மேற்கு நாட்டு அரசுகள் ஆதரவில்லை எனும் போதும் அதே நாட்டில் ஒவ்வொரு முற்போக்கு சக்தியுடனும் கைகோர்த்து வேலை செய்தது ஆ.தே.கா.

ஒவ்வொரு ஐரிஷ் வம்சாவழி அமெரிக்க அரசியல்வாதியின் கதவையும் தட்டியது சின்பெயின்.

ஒட்டாவாவில் படம் போடுவது, மயிலத்தமடுவில் ஜீப்பில் இருந்து பேட்டி கொடுத்து படம் காட்டுவது இதை தவிர நம் அரசியல்வாதிகள் சாதித்தது என்ன?

நமக்காகவும் அமேரிக்காவிடம் நேரில் போய் பிச்சை எடுக்க ஒரு தலைவன் இருந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும்.

மக்களிடமும், கருத்தாளரிடமும், தலைவர்களிடமும் இருப்பது இந்த அரைகுறை புரிதலுடன் கூடிய நக்கல், வெத்து பந்தா, வீராப்பு அரசியல்தான். இதை ஒழிக்கும் வரை விடிவு கானல் நீர்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, goshan_che said:

இப்ப மட்டும் இல்லை எப்பவும் நாம்தான் நடுத்தெருவில்.

ஏன்?

ஒரு இனமாக நாம் சுத்த மொக்கு கேசுகளாக இருப்பதால்.

முதலில் நமது வரலாறை நாம் அறிய வேண்டும்.

1796 வந்து, 1948 இல் போன பிரித்தானியரை 400 வருடம் ஆண்டார்கள் என்றும், இராமநாதன் காலத்தில் இனவாதம் இருந்ததா என்றும், இலங்கை மட்டும் அல்ல, அதைவிட சிறிய மாலைதீவை தனித்த British Protectorate ஆகவும், நேபாளுடன் ஒப்பந்தம் மூலமும் பிரிட்டிசார் கட்டுப்படுத்தினர் என்பதை ஒப்பு நோக்காமலும்….

விழிப்புலனற்றவர் யானை பார்த்ததை போல தரவுகளை அணுகி, இந்தியன் கெட்டவன் ஆகவே சிங்களவன் நல்லவன் என்று பொய் சமன்பாடுகளை போடும் அளவில்தான் இருக்கிறது எமது கூட்டு கெட்டித்தனம்.

பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும்….அப்படித்தான் எம் தலைவர்களும்.

இந்த இலட்சணத்தில் செலன்ஸ்கியை கோமாளி, பிச்சைக்காரன் என நக்கல் வேறு அடிப்போம்.

அரைநிர்வாணப் பக்கிரி என கேலி செய்யப்பட்ட காந்தி, கிழக்கு இலண்டன், மான்செஸ்டர் போய் உழைக்கும் ஆங்கிலேயர் ஆதரவை திரட்டி, இந்திய விடுதலையை விரைவாக்கினார்.

மண்டேலா சிறையில், மேற்கு நாட்டு அரசுகள் ஆதரவில்லை எனும் போதும் அதே நாட்டில் ஒவ்வொரு முற்போக்கு சக்தியுடனும் கைகோர்த்து வேலை செய்தது ஆ.தே.கா.

ஒவ்வொரு ஐரிஷ் வம்சாவழி அமெரிக்க அரசியல்வாதியின் கதவையும் தட்டியது சின்பெயின்.

ஒட்டாவாவில் படம் போடுவது, மயிலத்தமடுவில் ஜீப்பில் இருந்து பேட்டி கொடுத்து படம் காட்டுவது இதை தவிர நம் அரசியல்வாதிகள் சாதித்தது என்ன?

நமக்காகவும் அமேரிக்காவிடம் நேரில் போய் பிச்சை எடுக்க ஒரு தலைவன் இருந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும்.

மக்களிடமும், கருத்தாளரிடமும், தலைவர்களிடமும் இருப்பது இந்த அரைகுறை புரிதலுடன் கூடிய நக்கல், வெத்து பந்தா, வீராப்பு அரசியல்தான். இதை ஒழிக்கும் வரை விடிவு கானல் நீர்தான்.

 உண்மையிலையே தமிழினம் மொக்குக்கூட்டங்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 உண்மையிலையே தமிழினம் மொக்குக்கூட்டங்கள் தான்.

கறி, போர்த்துக்கேய மொழி மூலமாக, 16ம் நூறாண்டில் ஆங்கில மொழியினை வந்தடைந்த தமிழ் சொல் என்று போட்டிருந்த ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி, இப்ப, அது திராவிட மொழி சொல். கர்நாடக மொழியிலும் உள்ளது என்கிறது.

திராவிடம் என்ன செய்கிறது என்று யாராவது கவனம் எடுத்தார்களா? ரிஷி சுணக்கின் மனைவி, கர்நாடகா. ஆனால் அவர் செல்வாக்கு செலுத்தி இருக்க மாட்டார். ஆனால், அதை சொல்லி, யாரோ ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதிக்கு சொல்லி இருக்க கூடும்.

போர்த்துக்கேயர், யாழ்ப்பாணத்தினை பிடித்த வரலாறு, அங்கிருந்தே, ஆங்கிலத்துக்கு, கறி, மிளகுத்தண்ணி, கஞ்சி, ரசம், மாங்கா போனது என்று அடித்து சொல்ல, தமிழனுக்கு மூளை இல்லை. 17ம் நூறாண்டில் வந்த பிரிட்டிஷ்காரன் கர்நாடகாவை பிடித்ததே, 18ம் நூறாண்டில். 

இதுதான் நமது, தமிழர்களது, கவலையீனம். எழுதி இருக்கிறேன், பார்ப்போம்.

@goshan_che

நீங்களும், எழுதுங்கள். முடிந்ததை செய்வோம். போர்த்துக்கேயருக்கும், இந்திய துணைக்கண்டத்து தமிழருக்கும், கன்னடர்களுக்கும் எந்த காலனி தொடர்பும் இல்லை. கோவா மட்டுமே அவர்களது காலனி, அது தமிழர்களது அல்ல.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு

Xiang-Yang-Hong-3.jpg

இலங்கை கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அரச உயர் மட்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.

முன்னதாக சீன அதிநவீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang Hong – 3 இலங்கை மற்றும் மாலைத்தீவு உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆய்வுக் கப்பலுக்கான அனுமதியை இலங்கை மற்றும் மாலைத்தீவுகளிடம் இருந்து சீனா உத்தியோகப்பூர்வமாக கோரியிருந்தது. இருப்பினும், சீன கப்பலின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

விஞ்ஞான ஆய்வு என்ற போர்வையில் உளவுத்துறை தரவுகளை சேகரிக்கும் நோக்கில் இந்த ஆராய்ச்சி பணியை சீனா முன்னெடுப்பதாக இந்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டியிருந்தன.

அதேநேரம் மாலைத்தீவில் புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி, சீனாவின் சார்புடையவர் என்ற அடிப்படையில், அவர் இந்த கப்பலுக்கு அனுமதியை வழங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அவர் மாலைத்தீவில் நிலைக்கொண்டுள்ள இந்திய படையினரை மீளப்பெறுமாறு கோரியிருந்த நிலையில், இந்த சீனக்கப்பலுக்கான அனுமதியை வழங்கினால், அது இந்தியாவுக்கும் மாலைத்தீவுக்கும் இடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

https://thinakkural.lk/article/285135

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.