Jump to content

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு; திருக்கோவில் வைத்தியசாலையின் முன் பதற்றம்

Published By: DIGITAL DESK 3    11 MAR, 2024 | 03:51 PM

image

திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இன்றைய தினம் காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சிகிச்சைக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவருக்கான சி.பி.ஆர் சிகிச்சை உட்பட போதியளவான சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டதாகவும் எனினும்; போதிய வைத்திய உபகரணங்களைக் கொண்ட அம்பியூலன் வண்டி இல்லாததன் காரணமாக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்ற முடியாமல் போனதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த மாணவனின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வான நிலையில் மாணவனின் உயிரிழப்புக்கு வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என மாணவர்களும், இளைஞர்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்பட படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

431876205_446265171096676_41562772758911

431810923_1176453556673117_7722880029904

429559213_1464632500845032_1116211136890

https://www.virakesari.lk/article/178439

போதிய பயிற்சிகள் எடுக்காது போட்டியில் கலந்து கொண்டாரோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையான செய்தி. 😥
விதுர்ஷனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2024-03-11-at-03.41.57-75

மாணவன் மரணம்: வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் போராட்டம்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலய மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

திருக்கோவில் மெதடிஸ்த தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை விளையாட்டு போட்டியின் போது மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற மாணவன் திடிரென மயக்கமுற்ற நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யபட்ட நிலையில் அங்கு அம்மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலை சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன் எனும் மாணவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த மாணவன் உயிரிழந்த சம்பவத்தை அறிந்த பாடசாலை மாணவரகள் பொதுமக்கள் மரணமடைந்த மாணவனுக்கு சிகிச்சை அளிக்க தவறிய திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி, மாணவனின் மரணத்திற்கு வைத்தியர்களின் அலட்சிய போக்கே காரணம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரிழந்த மாணவன் எந்தவொரு சிகிச்சையுமின்றி மூன்று மணித்தியாலங்கள் இருந்ததாகத் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டமையால் அங்கு பதற்றமானதொரு சூழலும் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2024/1373099

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

போதிய பயிற்சிகள் எடுக்காது போட்டியில் கலந்து கொண்டாரோ?!

சென்றகிழமை லிவமோர் (Livermore)என்ற இடத்தில் நடந்த அரைமரதான்(13 மைல்கள் 21 கிலோமீட்டர்கள்)ஓடி முடித்தார்கள்.

இவர்களும் கூடுதலான தூரம் ஓடி பயிற்சி எடுப்பதில்லை.கிழமையில் 2-3 நாட்களுக்கு 1 1/2-2 மைல்கள் தான் ஓடுவார்கள்.

@இணையவன் மரதன் ஓடுவதால் இதுகள் பற்றி கூடுதலான விளக்கம் அளிக்கலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கனியுப்புக்களின் அசம நிலை (electrolyte imbalance), முக்கியமாக சோடியம், பொட்டாசியம் அசம நிலை காரணமாக நிகழ்ந்த  மரணமாக இருக்குமென ஊகிக்கிறேன்.

இலங்கையில் அதிக வெப்ப நிலை கொண்ட வானிலை நிலவுகிறது என்கிறார்கள். மரதன் ஓடி, சோடியத்தை வியர்வை மூலம் நிறைய இழந்த பின்னர், சாதாரண தண்ணீரைக் குடித்தால் மூளை வீக்கம், இதய தொழில்பாட்டில் பாதிப்பு என்பன எந்த வயதினருக்கும் ஏற்படலாம்.

இதற்கு உடனடி சிகிச்சையாக சுவாச உதவியோடு, குறைந்தது சாதாரண சேலைனாவது ஏற்றியிருக்க வேண்டும். 3 மணி நேரம் இவையெதுவும் செய்யாமல் சும்மா வைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அது தீவிரமான அலட்சியம்.

மரதன் ஓடுவோர், வியர்வை சிந்தி உழைப்போர் எப்படி சோடிய இழப்பை மரணம் வரை கொண்டு போகாமல் காக்க வேண்டுமென அறிந்திருக்க வேண்டும். Gatorade போன்ற கனிய உப்புக்கள் கொண்ட பானங்களை அருந்துவது மிக எளிமையான ஒரு வழி.

  • Like 6
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

இது கனியுப்புக்களின் அசம நிலை (electrolyte imbalance), முக்கியமாக சோடியம், பொட்டாசியம் அசம நிலை காரணமாக நிகழ்ந்த  மரணமாக இருக்குமென ஊகிக்கிறேன்.

இலங்கையில் அதிக வெப்ப நிலை கொண்ட வானிலை நிலவுகிறது என்கிறார்கள். மரதன் ஓடி, சோடியத்தை வியர்வை மூலம் நிறைய இழந்த பின்னர், சாதாரண தண்ணீரைக் குடித்தால் மூளை வீக்கம், இதய தொழில்பாட்டில் பாதிப்பு என்பன எந்த வயதினருக்கும் ஏற்படலாம்.

இதற்கு உடனடி சிகிச்சையாக சுவாச உதவியோடு, குறைந்தது சாதாரண சேலைனாவது ஏற்றியிருக்க வேண்டும். 3 மணி நேரம் இவையெதுவும் செய்யாமல் சும்மா வைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அது தீவிரமான அலட்சியம்.

மரதன் ஓடுவோர், வியர்வை சிந்தி உழைப்போர் எப்படி சோடிய இழப்பை மரணம் வரை கொண்டு போகாமல் காக்க வேண்டுமென அறிந்திருக்க வேண்டும். Gatorade போன்ற கனிய உப்புக்கள் கொண்ட பானங்களை அருந்துவது மிக எளிமையான ஒரு வழி.

உப்புப் போட்டு தேசிப்பழச் சாறு குடிக்கச் சொல்வதும் இதற்காக தானோ அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

உப்புப் போட்டு தேசிப்பழச் சாறு குடிக்கச் சொல்வதும் இதற்காக தானோ அண்ணை?

ஓம், ஒரு சிட்டிகை உப்பைப் போட்டுக் கரைத்து தண்ணீரைக் கூடக் குடிக்கலாம். Gatorade தான் குடிக்க வேண்டுமென்றில்லை. தேசிப்பழச்சாறும் நல்லது.

முக்கியமாக, மரதன் போன்ற அதிக வியர்வை சிந்திய உழைப்பிற்குப் பின்னர் இவற்றைக் குடித்து தண்ணீர் இழப்பையும் கனியுப்பு இழப்பையும் ஈடு செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சென்றகிழமை லிவமோர் (Livermore)என்ற இடத்தில் நடந்த அரைமரதான்(13 மைல்கள் 21 கிலோமீட்டர்கள்)ஓடி முடித்தார்கள்.

இவர்களும் கூடுதலான தூரம் ஓடி பயிற்சி எடுப்பதில்லை.கிழமையில் 2-3 நாட்களுக்கு 1 1/2-2 மைல்கள் தான் ஓடுவார்கள்.

@இணையவன் மரதன் ஓடுவதால் இதுகள் பற்றி கூடுதலான விளக்கம் அளிக்கலாம்.

நீண்ட நாட்களின் முன்னர் ஒரு மரதன் வீரர் தாங்கள் ஒரு போதும் முழுத் தூரத்தையும் பயிற்சியில் ஓடுவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஒரு ஞாபகம்.
 
நான் இங்கு இருக்கும் இடம் வருடத்தில் பல மாதங்கள் வெக்கையானது. பல வருடங்கள் சிறிவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருந்துள்ளேன். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு தடவை பிள்ளைகளுக்கு சிறிய இடைவேளைகள் விட்டு, அவர்கள் ஏதாவது நீராகாரம் எடுக்கின்றார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்திருந்தனர்.
 
வெப்பநிலை ஒரு அளவிற்கு மேல் போனால், அந்த அளவு மறந்து விட்டது, பயிற்சியை அத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருந்தனர்.
 
   
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரசோதரன் said:
நீண்ட நாட்களின் முன்னர் ஒரு மரதன் வீரர் தாங்கள் ஒரு போதும் முழுத் தூரத்தையும் பயிற்சியில் ஓடுவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஒரு ஞாபகம்.
 
நான் இங்கு இருக்கும் இடம் வருடத்தில் பல மாதங்கள் வெக்கையானது. பல வருடங்கள் சிறிவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருந்துள்ளேன். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு தடவை பிள்ளைகளுக்கு சிறிய இடைவேளைகள் விட்டு, அவர்கள் ஏதாவது நீராகாரம் எடுக்கின்றார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்திருந்தனர்.
 
வெப்பநிலை ஒரு அளவிற்கு மேல் போனால், அந்த அளவு மறந்து விட்டது, பயிற்சியை அத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருந்தனர்.
 
   

இப்போது இலங்கையிலும் தண்ணீரைக் குடியுங்கோ குளிக்கும் போது வழமையைவிட கூடுதலான நேரம் குளியுங்கோ என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Justin said:

முக்கியமாக, மரதன் போன்ற அதிக வியர்வை சிந்திய உழைப்பிற்குப் பின்னர் இவற்றைக் குடித்து தண்ணீர் இழப்பையும் கனியுப்பு இழப்பையும் ஈடு செய்யலாம்.

பணக்கார நாடுகளில் மரதன் ஓடும்போது இடைஇடை தேவையான தண்ணீர் சிறிய பைக்கற்றுக்குள் தேவையான எனேர்ஜி இனிப்பு போன்றவை முடியும் போது வாழைப்பழம் இளநீர் என்று கொடுப்பார்கள்.

எமது ஊரில் எதுவுமே இருக்காது.

யாராவது வீதிகளில் தண்ணீர் வைத்திருப்பார்கள்.

முடிவிலும் ஏதும் கொடுத்ததாக தெரியவில்லை.

பாவம் பையன் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பாவம் அந்த மாணவன். ஆழ்ந்த அனுதாபங்கள். மாணவனின் வகுப்பினர், நட்பு வட்டம், பெற்றோர், பாடசாலை சமூகம், ஊரவர்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஊட்டும் சம்பவம் இது. 

இப்போது பல்வேறு பாடசாலைகளில் தட, கள/மெய்வல்லுனர் போட்டி நடைபெறும் காலம். அதேசமயம் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெப்பநிலை/காலநிலை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு வருகின்றது. வெளியில் செல்லும்போது தற்போதைய காலநிலைக்குரிய எடுக்கவேண்டிய பாதுகாப்பு முன் எச்சரிக்கைகள்/நடைமுறைகள் பற்றி சுகாதார/மருத்துவ பிரிவினால் விழிப்புணர்வு கொடுக்கப்படுகின்றது. 

பொதுவாக காலை எட்டு மணிக்கு முன்னதாக மரதன் ஓட்ட போட்டி நிறைவடையும் வகையில் பாடசாலைகள் நிகழ்ச்சியை ஒழுங்கமைக்கின்றன. அத்துடன் மாணவர் ஒருவர் மரதன் ஓட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். 

முதலில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற பாடசாலை மரதன் ஓட்டப்போட்டியை எப்படி ஒழுங்கமைத்தது என அறியப்பட வேண்டும். 

பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்றும் வரக்கூடாது தானே. 

Edited by நியாயம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரதன் ஓடிய மாணவன் உயிரிழப்பு – கல்வி திணைக்களத்தின் அறிவிப்பு

news-02-6.jpg

அம்பாறை  திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இன்றைய தினம் அதிகாரிகளை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக நேற்று காலை இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த குறித்த மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

வைத்தியசாலை  நிர்வாகத்தின் அசமந்தபோக்கு காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியை மறித்து நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பெருந்திரளானோர் வைத்தியசாலையின் பிரதான நுழைவாயில் வழியாக வைத்தியசாலைக்குள் பிரவேசித்தனர்.

எவ்வாறாயினும், சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

https://thinakkural.lk/article/295269

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்.

இங்கே மரதன் என்று குறிப்பிடப்படுவது 42 கிலோமீட்டர் தூர ஓட்டப் போட்டியாக இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. விதுர்ஷனின் வயது 16 ஆக இருப்பதும் ஓடி முடிந்ததும் பாடசாலை வகுப்புக்குச் சென்றதும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இலங்கை இந்தியாவில் 10 கிலோமீற்றர் ஓட்டப் போட்டியையும் மரதன் என்று சொல்வார்கள். இந்தியாவில் 5 கிலோமீட்டரை மினி மரதன் என்று சொல்லக் கேட்டுள்ளேன். எதுவாயினும் தற்போதுள்ள வெக்கை காலத்தில் 10 கிமீ ஓடினாலும் அதிகமான வியர்வையுடன் பெருமளவு உப்புகள் உடலிலிருந்து வெளியேறும். சிறிய தூரமாக இருந்தாலும் வெக்கை காலத்தில் இவ்வாறான போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். அல்லது அதற்கேற்ற மருத்துவ முன்னேற்பாடுகளும் போட்டியாளர்களுக்குப் போதுமான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

18 hours ago, ஈழப்பிரியன் said:

@இணையவன் மரதன் ஓடுவதால் இதுகள் பற்றி கூடுதலான விளக்கம் அளிக்கலாம்.

மரதன் ஓடுவதற்குப் பொதுவாக 3 அல்லது 4 மாத பயிற்சி தேவைப்படும். பயிற்சியின் போது ஒருபோதும் 42 கிமீ ஓடுவதில்லை. 8 முதல் 20 கிமீ தான் ஒவ்வொரு பயிற்சியின்போதும் ஓடுவது வழக்கம்.

வாரத்தில் 3 நாள் தொடங்கி போட்டி நெருங்கும்போது 5 நாட்கள் வரை ஓட வேண்டும். இதன்போது மெதுவான ஓட்டம், வேகம் கலந்த ஓட்டம் (interval training) மேடு பள்ளமான பாதை வழிவே ஓடுதல் போன்ற எல்லா விதமான இடையூறுகளையும் உடலுக்குப் பழக்கப் படுத்தப்படும். வாரத்தில் ஒரு தடவை தூர ஓட்டம் 20 கிமீ ஓட வேண்டும்.

போட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு தடவை மட்டும் 25 கிமீ ஓடலாம். இது இறுதிப் போட்டியின்போது என்ன வேகத்தில் ஆரம்பிப்பது ஓடி முடிப்பது போன்றவற்றைக் கணிப்பிட உதவும். நான் 30 கிமீ ஓடியிருந்தேன். இவ்வாறான பயிற்சிகள் சாதாரண மரதன் போட்டியாளர்களுக்கானதே. இரண்டு இரண்டரை மணி நேரத்தில் மரதன் ஓடுபவர்களுக்கான பயிற்சி முற்றிலும் வேறானது.

விதுர்ஷனின் துரதிஷ்டமான மரணம் ஓட்டப் பயிற்சி செய்பவர்கள் மீதான பயத்தை ஏற்படுத்தக் கூடாது. மாறாக பயிற்சியாளர்களும் ஏற்பாட்டாளர்களும் மருத்துவர்களும் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து வரும்காலத்தில் இவ்வாறான தவறுகள் நடக்காமல் பார்க்க வேண்டும். பயிற்சிகளும் போட்டிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

  • Like 5
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரணம் தொடர்பில் கடிதம்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பிலான பூரண அறிக்கையுடனனான கடிதம் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த பாடசாலை மாணவன் கடந்த 11ஆம் திகதி திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மரணம் குறித்த பூரண அறிக்கை

இது தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மாணவனின் மரணம் குறித்த பூரண அறிக்கையே இவ்வாறு திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரணம் தொடர்பில் கடிதம் | Thirukkovil Hospital Development Committee

மேலும் கடிதத்தில் , மாணவனின் மரணத்திற்கு தீர்வினை பெற்றுத்தருமாறு பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறந்த மாணவனின் உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியசாலை அபிவிருத்தி குழு  இந்த கடித்தை அனுப்பி வைக்கும் செயற்பாட்டில் ஈப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/thirukkovil-hospital-development-committee-1710239822

Link to comment
Share on other sites

On 11/3/2024 at 12:15, Justin said:

ஓம், ஒரு சிட்டிகை உப்பைப் போட்டுக் கரைத்து தண்ணீரைக் கூடக் குடிக்கலாம். Gatorade தான் குடிக்க வேண்டுமென்றில்லை. தேசிப்பழச்சாறும் நல்லது.

முக்கியமாக, மரதன் போன்ற அதிக வியர்வை சிந்திய உழைப்பிற்குப் பின்னர் இவற்றைக் குடித்து தண்ணீர் இழப்பையும் கனியுப்பு இழப்பையும் ஈடு செய்யலாம்.

கடந்த பெப் 21 இல் இருந்து நிமோனியா வந்து இரண்டு கிழமைகள் படுத்தி எடுத்து விட்டது என்னை. இதன் போது, எந்த உணவையும் உண்ண முடியாமல், நாக்கில் எந்த சுவையும் இல்லாமல், போதாக்குறைக்கு வாந்தி பேதியும் சேர்த்து ஒரு வழி பண்ணியது. நிமோனியா வந்த இரண்டு கிழமையும் நான் உப்பு போட்ட தேசிக்காய் சாறும் (25 தேசிக்காய்களையாவது முடித்து இருப்பேன்), தோடம்பழச் சாறும். போத்தல் போத்தலாக Gatorade தான் குடித்துக் கொண்டு இருந்தேன். 

உப்பு போட்ட தேசிக்காய் சாறும், Gatorade உடம்பு dehydrate ஆகாமல் தொடர்ந்து வைத்து இருந்தது.

  • Like 3
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

கடந்த பெப் 21 இல் இருந்து நிமோனியா வந்து இரண்டு கிழமைகள் படுத்தி எடுத்து விட்டது என்னை. இதன் போது, எந்த உணவையும் உண்ண முடியாமல், நாக்கில் எந்த சுவையும் இல்லாமல், போதாக்குறைக்கு வாந்தி பேதியும் சேர்த்து ஒரு வழி பண்ணியது. நிமோனியா வந்த இரண்டு கிழமையும் நான் உப்பு போட்ட தேசிக்காய் சாறும் (25 தேசிக்காய்களையாவது முடித்து இருப்பேன்), தோடம்பழச் சாறும். போத்தல் போத்தலாக Gatorade தான் குடித்துக் கொண்டு இருந்தேன். 

உப்பு போட்ட தேசிக்காய் சாறும், Gatorade உடம்பு dehydrate ஆகாமல் தொடர்ந்து வைத்து இருந்தது.

இப்போது முடியும் இந்த வட அமெரிக்க குளிர் கால சீசனில், இன்புழுவன்சா வைரஸ் கொஞ்சம் கூடுதலாக ஆட்களைத் தாக்கியிருக்கிறது, பல இளம் வயதினருக்கு நுரையீரல் அழற்சி வந்திருக்கிறது. எனக்கு, post-viral cough என்ற தொண்டை அழற்சி ஒரு மாதம் வரை இருந்தது. உங்களுக்கும் இன்புழுவன்சா தான் படுத்தியிருக்கிறதென நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இப்போது முடியும் இந்த வட அமெரிக்க குளிர் கால சீசனில், இன்புழுவன்சா வைரஸ் கொஞ்சம் கூடுதலாக ஆட்களைத் தாக்கியிருக்கிறது, பல இளம் வயதினருக்கு நுரையீரல் அழற்சி வந்திருக்கிறது. எனக்கு, post-viral cough என்ற தொண்டை அழற்சி ஒரு மாதம் வரை இருந்தது. உங்களுக்கும் இன்புழுவன்சா தான் படுத்தியிருக்கிறதென நினைக்கிறேன்.

இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசிகள் இல்லை தானே அண்ணை?
எனக்கும் தம்பிக்கும் நிமோனியா வராதிருக்க தடுப்பூசி போடவேணும் என எமது வைத்தியர் கூறியிருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

இன்புளுவன்சா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசிகள் இல்லை தானே அண்ணை?
எனக்கும் தம்பிக்கும் நிமோனியா வராதிருக்க தடுப்பூசி போடவேணும் என எமது வைத்தியர் கூறியிருந்தார். 

ஏராளன், இன்புழுவன்சா வைரசுக்கெதிராக தடுப்பூசி (flu shot) இருக்கிறது, மேற்கு நாடுகளில் ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்க முதல் இலவசமாக எடுத்துக் கொள்ள விரும்புவோருக்கு வழங்குவர். தொற்றிலிருந்து 50% பாதுகாப்புக் கிடைக்கும் இந்த தடுப்பூசியால். மிச்ச 50% பேருக்கு தீவிரம் குறைந்த தொற்று ஏற்படும், எனவே உயிர்காக்கும், நோய்த்தீவிரம் குறைக்கும் தடுப்பூசியாக இன்புழுவன்சா தடுப்பூசி விளங்குகிறது. இலங்கையில் இது பயன்படுத்தப் படுகிறதா எனத் தெரியவில்லை.

உங்கள் மருத்துவர் சொன்ன தடுப்பூசி Streptococcus pneumoniae என்ற பக்ரீரியாவின் தொற்றினால் ஏற்படும் நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசியாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். இதுவா எனக் கேட்டுப் பாருங்கள்.

https://www.cdc.gov/pneumococcal/index.html

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

P.E. Teacher, 23, 'Felt Something Was Wrong' After First Marathon, Learns He Has Heart Disease a Week Later.
 

நேற்று இந்த செய்தியை யாஹூவில் பார்த்தேன். மரதன் ஓட்டம் பற்றி இணையத்தில் தேடியிருப்பேன் போல, ஒரேயடியாக மரதன் ஓட்டம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன....😀

 
வைத்திய உதவி உடனே கிடைத்தால், ஓரளவிற்கு எவரும் தப்பிவிடலாம்.
 
சில மாதங்களின் முன், இங்கு கூடைப்பந்தாட்ட வீரர்  LeBron James இன் மகன் Bronny James க்கு கல்லூரி (University of Southern California) கூடைப்பந்தாட்ட பயிற்சியின் போது Cardiac Arrest ஏற்பட்டது. ஆனால், உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதால், அனர்த்தம் தவிர்க்கப்பட்டு, அவர் இப்பொழுது மீண்டும் கல்லூரிக்காக விளையாட ஆரம்பித்துள்ளார்.
 
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

P.E. Teacher, 23, 'Felt Something Was Wrong' After First Marathon, Learns He Has Heart Disease a Week Later.
 

நேற்று இந்த செய்தியை யாஹூவில் பார்த்தேன். மரதன் ஓட்டம் பற்றி இணையத்தில் தேடியிருப்பேன் போல, ஒரேயடியாக மரதன் ஓட்டம் பற்றிய செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன....😀

 
வைத்திய உதவி உடனே கிடைத்தால், ஓரளவிற்கு எவரும் தப்பிவிடலாம்.
 
சில மாதங்களின் முன், இங்கு கூடைப்பந்தாட்ட வீரர்  LeBron James இன் மகன் Bronny James க்கு கல்லூரி (University of Southern California) கூடைப்பந்தாட்ட பயிற்சியின் போது Cardiac Arrest ஏற்பட்டது. ஆனால், உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதால், அனர்த்தம் தவிர்க்கப்பட்டு, அவர் இப்பொழுது மீண்டும் கல்லூரிக்காக விளையாட ஆரம்பித்துள்ளார்.
 

வெளித்தெரியாமல் இருக்கும் இதயக் கோளாறுகள் சிலரில் உடற்பயிற்சி, உடல் உழைப்பின் போது வெளிப்படுவதுண்டு. இந்தக் காரணத்தினால் தான், முதல் எப்பொழுதும் கடின உடற்பயிற்சி செய்யாதோர், ஒரு மருத்துவ பரிசோதனை , இதய பரிசோதனை செய்த பின்னர் கடின உடற்பயிற்சியை ஆரம்பிக்க வேண்டுமென்று மருத்துவ ஆலோசனை இருக்கிறது. சாதாரணமாக இதயத்தின் இரத்தக் கலன்களில் இருக்கும் அடைப்புக் (atheroma) கூட, உடற்பயிற்சி கடினமாகும் வரை வெளித்தெரியாமல் இருக்கலாம். இதற்கு ஒரு வழி, stress test செய்து இதய இயக்கம் சரியாக இருக்கிறதா என்று கண்டறிவது.

மேல் செய்தியில் இருப்பது, atrial flutter எனப்படும் பிறப்பிலேயே இருக்கக் கூடிய ஒரு நிலை. இதயப் பரிசோதனையில் கண்டறியலாம். சிகிச்சைகள் இருக்கின்றன.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனையை குற்றம் சாட்டும் தாயார் - என்ன நடந்தது?

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், யூ.எல். மப்றூக்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

மறுபுறம், அந்த மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியமையினை அடுத்து, குறித்த வைத்தியசாலை இம்மாதம் 11ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளது.

இதனால், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி மாணவர் மரணித்த தினத்தன்று வைத்தியசாலையின் உள்ளே சிலர் உட்புகுந்து - அங்கிருந்த வைத்தியர்களை அச்சுறுத்தியதாக வைத்தியசாலை தரப்பு கூறுகிறது.

எனவே, அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரை வைத்தியசாலையைத் திறக்க முடியாது என வைத்தியசாலை நிர்வாகமும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் கூறுகின்றன.

இது இவ்வாறிருக்க, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அலட்சியமே தனது மகனின் மரணத்துக்குக் காரணம் என பிபிசி தமிழிடம் உயிரிழந்த மாணவரின் தாய் கவிதா கூறுகின்றார்.

 
இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?

இலங்கையில் நிலவும் கடும் வெப்பத்துடனான காலநிலையைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டதாகவும், அதில் கலந்துகொண்ட மாணவரே உயிரிழந்தாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இன்னொருபுறம், மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கான மருத்துவச் சான்றிதழ் – உயிரிழந்த மாணவரிடம் பெறப்படவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், மாணவரின் மரணத்துடன் தொடர்பான விஷயங்களை ஆராயும் பொருட்டு பிபிசி தமிழ் களத்தில் இறங்கி, அந்த விஷயத்துடன் தொடர்பான தரப்பினரைச் சந்தித்து தகவல்களைத் திரட்டியது.

 

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட விதுஜன்

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?

திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே. விதுஜன் 2007ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் தனது ஊரிலுள்ள மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயதிலிருந்தே விதுஜன் விளையாட்டில் ஆர்வமுள்ளவர் என்று அவரின் அம்மா கூறுகின்றார்.

திருக்கோவிலில் உள்ள பிரபல விளையாட்டுக்கழகம் ஒன்றின் கிரிக்கெட் அணியில் விளையாடும் விதுஜன், தினமும் மைதானத்தில் அதிக தூரம் ஓடுவதை வழக்கமாகக் கொண்டவர் என அறிய முடிகிறது. மேலும், விதுஜனுக்கு எந்தவிதமான நோய்களும் இருக்கவில்லை என்றும் அவரின் தாயார் கூறுகின்றார்.

இந்த நிலையில்தான் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடைபெறும் ‘இல்ல விளையாட்டுப் போட்டிகள்’ கடந்த 11ஆம் தேதி நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்தன.

அதன் ஆரம்பப் போட்டியாக காலை 6.50 மணியளவில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதில் 33 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும், 6.5 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டதாக இந்தப் போட்டி அமைந்திருந்ததாகவும் பாடசாலையின் அதிபர் திருமதி ஜி.கே. தட்சணாமூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதில் ஓடிய விதுஜன் 6ஆம் இடத்தைப் பெற்றார்.

மேற்படி மாரத்தான் போட்டி ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை, அதில் கலந்துகொண்ட தனது மகனைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டியவாறே தான் சென்றதாக விதுஜனின் தாய் கூறினார்.

 

'மருத்துவச் சான்றிதழ் பெற்றோம்'

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?

குறித்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவச் சான்றிதழ்கள் பெற்றுக்கொண்ட பின்னரே, அவர்களைப் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதித்ததாக, விதுஜனின் பாடசாலை அதிபர் தட்சணாமூர்த்தி பிபிசி தமிழிடம் கூறியதோடு, விதுஜன் பெற்றுக் கொண்டதாகக் தெரிவித்த மருத்துவச் சான்றிதழையும் காட்டினார்.

குறித்த மாரத்தான் போட்டியின் தூரத்தை முழுவதுமாக ஓடி முடித்த விதுஜன், அசாதாரண உடல் நிலையை உணர்ந்தாகவும், அவர் பாடசாலையில் இருந்து நபர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்குச் சென்றதாகவும் அவரின் பாடசாலை பிரதியதிபர் எஸ். உதய தர்ஷன் கூறுகின்றார்.

மேலும், மேற்படி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகப் பதிவு செய்திருந்த மாணவர்கள் இருவர் மருத்துவச் சான்றிதழ்களின் படி, அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்றும், அதனால் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை எனவும் பிரதியதிபர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, ‘அதிக வெப்பம் நிலவுகின்றமையால் வெளி நிகழ்வுகளை நடத்த வேண்டாம்’ என அறிவுறுத்தும் வகையில், கல்வியமைச்சின் அறிவித்தல் எவையும் தமக்குக் கிடைக்கவில்லை என்று கூறிய அதிபர், வெயில் நேரத்துக்கு முன்னதாக காலை வேளையிலேயே மாரத்தான் போட்டியைத் தாங்கள் நடத்தி முடித்து விட்டதாகவும் குறிப்பிட்டார்.

 

மருத்துவமனையில் என்ன நடந்தது?

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?

இந்த நிலையில், திருக்கோவில் வைத்தியசாலை தரப்பினரின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் உயிரிழந்தாக விதுஜனின் தாய் கவிதா பிபிசி தமிழிடம் கூறினார்.

”எனது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 10 நிமிடங்களில் நான் அங்கு சென்றுவிட்டேன். ஆனால் எனது மகனைப் பார்ப்பதற்கு முக்கால் மணிநேரம் வரை என்னை அனுமதிக்கவில்லை. அதன் பிறகு பலவந்தமாக நான் உள்ளே சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி அதிர்ச்சியளித்தது.

எனது மகன் கட்டிலில் படுத்திருந்தார், ஒரு வைத்தியர் தனது இரண்டு முழங்கால்களையும் எனது மகனின் நெஞ்சில் வைத்துக்கொண்டு அவரின் கைகளால் எனது மகனின் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தார்.

‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்’ என்று கேட்டேன். உங்கள் பிள்ளையின் உயிருக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று கூறிவிட்டு என்னை வெளியில் அனுப்பி விட்டார்கள்,” என்று கூறினார் விதுஜனின் தாய்.

மேலும், “எனது மகனின் உயிர் அந்த வைத்தியசாலையிலேயே பிரிந்து விட்டது. ஆனாலும், அதைக் கூறாமல், மேலதிக சிகிச்சைக்காக எனக் கூறி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டார்கள்,” என்றார்.

வைத்தியசாலையிலுள்ள ஆக்சிஜன் இயந்திரத்துக்கு மின்சாரத்தை வழங்குவதற்குப் பொருத்தமான வட்ட வடிவ ‘பிளக்’ (plug) வைத்தியசாலையில் இருக்கவில்லை என்றும், அதனால் அருகிலிருந்த பாடசாலையில் இருந்து அதைக் கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறிய விதுஜனின் தாய், “அதன் பின்னரே எனது மகனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது” என்றார்.

இப்படி 3 மணிநேரத்துக்கும் அதிகமாகத் தனது மகனை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திருந்ததாகவும், அவர் மரணித்துவிட்ட பிறகுதான் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு, மேலதிக சிகிச்சைக்கு எனக் கூறி, திருக்கோவில் வைத்தியசாலையினர் உடலை அனுப்பி வைத்ததாகவும் விதுஜனின் தாய் குறிப்பிட்டார்.

”திருக்கோவில் வைத்தியசாலையில் ஆம்பியுலன்ஸ் இருக்கிறது. ஆனால் அதனை ஓட்டுவதற்கான சாரதி இல்லை என்றும், நோயாளியை கொண்டு செல்வதற்காக வசதிகள் ஆம்புலன்ஸில் இல்லை என்றும் கூறினார்கள். அதன் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இருந்து ஆம்புலன்ஸை அழைத்து, அதில்தான் எனது மகனைக் கொண்டு சென்றார்கள்,” எனவும் கவிதா கூறினார்.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு தனது மகன் அனுப்பப்பட்ட பின்னர் தாம் அங்கு சென்றதாகவும், அங்குள்ள வைத்தியர் ஒருவர் தனது மகன் ஒரு மணிநேரம் முன்பாகவே இறந்துவிட்டார் என்று கூறியதாகவும் விதுஜனின் தாய் பிசிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

 

வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?
படக்குறிப்பு,

டாக்டர் அன்பாஸ் பாறூக்

விதுஜன் இறந்த செய்தியை அடுத்து, அவர் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக அன்றைய தினம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வைத்தியசாலையின் வெளியில் இருந்த பெயர் பதாகை உடைக்கப்பட்டதோடு, வைத்தியசாலை மீது கற்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விதுஜன் படித்த பாடசாலையின் மாணவர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் சீருடைகளுடன் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அங்கு போலீசாரும் அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

வைத்தியசாலை நிர்வாகம் கூறுவது என்ன?

இந்த நிலையில், விதுஜனின் மரணம் தொடர்பில் தங்களுக்கு எதிராகக் கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை தரப்பு மறுக்கிறது. விதுஜன் வைத்தியசாலைக்கு வரும்போதே அவரின் இதயத்துடிப்பு மிகவும் குறைந்திருந்ததாக அந்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

பின்னர் அவருக்குப் பல தடவை இதயச் செயலிழப்பு (cardiac arrest) ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஒருவர் தாங்கக் கூடிய அளவை விடவும் அதிகளவான உடல் வேலையில் ஈடுபடும்போது இவ்வாறு ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விதுஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வைத்தியசாலையில் இருந்த அனைத்துத் தரப்பினரும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, விதுஜன் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் மருத்துவ சான்றிதழ், சாதாரண உடல் ஆரோக்கியம் தொடர்பில் வழங்கப்படும் மருத்துவச் சான்றிதழ் என்றும், மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வோருக்கென தனியான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்காக விதுஜனின் பாடசாலை நிர்வாகத்தினர் தம்மிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் வைத்தியசாலை தரப்பு கூறுகிறது.

இதன் காரணமாக, திட்டமிட்டிருந்த தேதியில் மாரத்தான் போட்டியை நடத்த வேண்டாம் என திருக்கோவில் வயலக் கல்வி அலுவலகத்தின் அதிகாரி ஒருவருக்கு திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியசட்சகர் தொலைபேசி ஊடாக அறிவித்ததாகவும் பிபிசி தமிழிடம் வைத்தியசாலை தரப்பு கூறுகிறது.

 
இலங்கையில் மாரத்தான் ஓடிய மாணவர் மரணம்: மருத்துவமனை அலட்சியம் காரணமா?

இந்நிலையிலேயே திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாகவும், இதன்போது சிலர் வைத்தியசாலையின் அவசர சிசிச்சைப் பிரிவுக்குள் புகுந்து அங்கிருந்த வைத்தியர்களை அச்சுறுத்தியதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பிரிவு உறுப்பினர் டாக்டர் அன்பாஸ் பாறூக் பிபிசிக்கு தெரிவித்தார். இதை நிரூபிப்பதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே வைத்தியசாலை மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எனவே, "வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள், வைத்தியர்களை அச்சுறுத்தியவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நிபந்தனை விதித்துள்ளனர்," எனக் கூறும் டாக்டர் அன்பாஸ் அவை நடந்தால் மட்டுமே அங்கு வைத்தியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், நாட்டில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை மாணவர்களை வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையிலேயே, மேற்படி பாடசாலையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டதாக டாக்டர் அன்பாஸ் சுட்டிக்காட்டினார்.

காலையிலும் இரவு வேளையிலும்கூட, தற்காலத்தில் அதிக வெப்பம் நிலவுவதாகவும் கூறினார். எனவே, கல்வி அமைச்சின் அறிவிப்புக்கு மாற்றாக அந்தப் பாடசாலை நடந்துள்ளதாகவும் அன்பாஸ் குற்றஞ்சாட்டினார்.

அதிக வெப்பம் நாட்டில் நிலவுகின்றமையால் மாணவர்களை வெளிக்களச் செயற்பாடு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என்று கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியில் இருந்தே கல்வியமைச்சு பல தடவை அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/articles/cp307nyrnv4o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 22     சோழ நாட்டிலிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, இங்கு வந்த, உயர்குடியில் பிறந்த, தமிழன் எல்லாளன் என்று [A Damila of noble descent, named ELARA, who came hither from the Cola-country to seize on the kingdom], அதாவது வெளியில் இருந்து வந்தான் என்று குறிப்பிட்டு கூறும் மகாவம்சம், அவனுக்கு முதல் ஆட்சி செய்த இரு தமிழரை அப்படி குறிப்பிட்டு கூறவில்லை, அவர்களை "குதிரைகளை இங்கு கொண்டு வந்து வாணிகம் செய்த ஒருவரது பிள்ளைகளான சேனன் மற்றும் குத்திகன் ஆகிய இரண்டு தமிழர்கள் சூரதீசனை வெற்றி கொண்டார்கள். பெரும் படையொன்றைத் திரட்டிக்கொண்டு, இந்த இருவரும் சேர்ந்து இருபத்திரண்டு வருட காலம், கி மு 237 இல் இருந்து கி மு 215 வரை நீதி தவருமல் ஆட்சி செய்தனர் [Two Damilas, SENA and GUTTAKA, sons of a freighter who brought horses hither/ conquered the king Suratissa, at the head of a great army and reigned both (together) twenty-two years justly.] என்று மட்டும் கூறுகிறது.   மகாவம்சத்தின் முக்கிய பிரச்சனை என்னவென்றால், இலங்கையில் வாழும் சிங்களவர்கள் புத்தரால் தன் கொள்கைகளை பரப்ப தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் [chosen people] என்ற நம்பிக்கையே ஆகும். புத்தர் காலத்தில் உலகில் எங்கும் சிங்களவர் என்ற ஒரு இனமே இல்லை, சிங்களம் என்ற ஒரு மொழியும் இல்லை. அவர் இறந்து கிட்ட தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தான், மகாவம்சம் கதையும் அத்துடன் சிங்கள இனம் ஒன்றும் தோன்றத் தொடங்கியது என்பது வரலாற்று உண்மையாகும்.   எனவே தான் சாதாரண சிங்கள மக்கள், வரலாற்றை, கல்வெட்டு ஆதாரங்களை, மரபணு ஆய்வுகளை மற்றும் சிங்கள மொழியில் ஏராளமாக காணப்படும் தமிழ் சொற்களை கவனத்தில் எடுக்காமல், இன்றைய தமிழர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்ற தப்பெண்ணம் கொண்டு உள்ளார்கள்.   1956 இல் சிங்களம் மட்டும் [sinhala only act] என்ற சட்டம் கொண்டு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா [S.W.R.D. Bandaranaike] உண்மையில் அவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர் ஆகும். பதினாறாம் நூறாண்டில் தென் இந்தியாவில் இருந்து வந்த நீல பெருமாள் [Neela-Perumal], “சமன்” எனும் பௌத்தக் கடவுளின் [God Saman] பிரதம குருவாக நியமிக்கப்பட்டு ‘நாயக்க பண்டாரம்’ [‘Nayaka Pandaram’ ] என்ற பெயரை 1454 இல் பெற்றார். அவர்களின் வாரிசே இவர் ஆவார்.   அதே போல, 1977, 1981,1983 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் மற்றும் யாழ் நூலக எரிப்பு [anti-Tamil pogroms of 1977, 1981 and 1983 , the burning of the Jaffna public Library] போன்றவற்றின் நாயகன் ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனாவின் [Junius Richard Jayewardene] முப் பாட்டனார் [great-grandfather was called Tambi Mudaliyar] தம்பி முதலியார் ஆகும். இவை சில உதாரணங்களே. இவ்வாறு பிற்காலத்திலும் பல தென் இந்தியர்கள் பல பல சந்தர்ப்பங்களில் இங்கு அழைக்கப்பட்டு அல்லது வந்து சிங்களவர்களுடன் ஒன்றிணைந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது [Many South Indians, not just Tamils but also Telugus and Malayalis, migrated to southern Sri Lanka and assimilated with the Sinhalese]   உதாரணமாக, டச்சு [Dutch] அரசாங்கம் இலங்கையை ஆளும் பொழுது, புகையிலை சாகுபடிக்கு தமிழ் நாட்டில் இருந்து பெருவாரியான தமிழர்களை கொண்டு வந்து இலங்கையின் தென்மாகாணத்தில், மாத்தறையில் குடியேற்றினார்கள். அதே மாதிரி ஒரு 2017 அறிக்கையின் படி, 4,000 ஜிப்சிகள் தீவு முழுவதும் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தென் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். கிட்டத் தட்ட அனைவரும் இப்போது சிங்கள மொழி பேசுபவர்களாக மாறி விட்டார்கள். [The Dutch brought South Indian people in large numbers for tobacco cultivation. They were settled mostly in Matara. According to a 2017 government report, Sri Lanka has nearly 4,000 gypsies scattered across the island. Many of their origins can be traced to south India. While almost all of them are now Sinhala speakers] விஜயனும் அவனது கூட்டாளிகளும் மதுரை பாண்டிய மகளீரை திருமணம் செய்ததுடன் ஆரம்பமாகிய தென் இந்தியர் மதம் - இனம் மாற்றம், கடைசியாக அண்மைய வரலாற்றில் வத்தளை, நீர்கொழும்பு முதல் சிலாபம், புத்தளம் வரை தமிழர்கள் "மதம் - இனம்" மாற்றம் வரை நடை பெற்றதை வரலாறு சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் முதலில் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப் பட்டார்கள். எனவே அவர்களது பிள்ளைகள் கத்தோலிக்க பாடசாலைகளில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும்.   வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம் மற்றும் தொழில் நுட்பப்பயன்பாட்டினால், வரலாறு மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே சேர்த்து, ஆயிரம் ஆண்டுகளின் பின், இலங்கையின் பூர்வீக வரலாற்றை எழுதியவர் தான் இந்த மகாநாம தேரர். ஆகவே தான் எமக்கு கிடைத்த வரலாற்று சான்றுகளுடன் ஒப்பிட்டு, இந்த மகாவம்சம் என்ற அறிவு வயலில் இருந்து களைகளை, தக்க காரணங்களை சான்றுகளுடன் காட்டி இன்று அகற்ற வேண்டியுள்ளது.   [படம் : 01 அல்லது Table 10:  Table 10, depicts the signatures of the Dissawes and Adigars who were a party to the March’ 1815 Kandyan convention. The mixture of Tamil and yet evolving Sinhala alphabets used by many may depict a period in our history (especially in the Kandyan Kingdom) when a combination of Sinhala and Tamil alphbets were used.  The fact that the Sinhala and Tamil languages share in common 4000+ words also may point to a time where both languages were less divergent. (Please note that the table numbers are as denoted in the original document.)]     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   [Are converted Sinhalas responsible for Srilankan Tamil problem? https://www.facebook.com/groups/978753388866632/posts/5137468916328371/?]   பகுதி: 23 தொடரும்         
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"     தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!   “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.   உதாரணமாக ,சோதிடர் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்று வைப்போம். அதனால் என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். சோதிடத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம் - இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியும். வழியில் குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம். அப்படி எல்லாத் தடங்கல் களையும் சோதிடம் மூலம் தாண்டி விடலாம் என்று. அப்படி என்றால் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது?   இதற்கு அவர்கள் பொதுவாக சொல்லும் பதில், சோதிடன் சொன்ன பரிகாரத்தை சரியாகச் செய்யவில்லை என்பதாகும். சோதிடம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கி விட முடியும் என்றால் அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?சோதிடம் சொல்லுகிறவன் உட்பட? சோதிடத்தை பிறருக்கு சொல்லி அன்றாடம் தன் வயிரையும் குடும்பத்தின் வயிரையும் நிரப்புகிறவன், அதில் இருந்து தான் மீள ஏன் தன் சோதிடத்தைப் பார்ப்பதில்லை?   இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பார்களை சோதிடம் ஏமாற்ற முடியாது. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்று கோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் மட்டும் இந்த ஏமாற்றுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.   தமிழன் சங்க காலத்திலேயே இதை நம்ப தொடங்கி விட்டான். சங்கத் தமிழ் நூல்களில் அக்காலத் தமிழரின் மாறு பட்ட நம்பிக்கைகள் பரவிக்கிடக்கின்றன. இடி ஓசை கேட்டால் பாம்பு நடுங்கும் அல்லது இறந்துவிடும் என்றும், மயிரை இழந்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்றும், புலி வேட்டையாடுகையில் இடப்பக்கம் விழும் இரையை உண்ணாது என்றும் சங்கத் தமிழ் நூல்களிலும் தொல்காப்பியத்திலும் இது போல எண்ணற்ற குறிப்புக்களைக் காண முடியும்.   மேலும் சங்ககாலத் தமிழர்கள் பறவைகள் பறக்கும் திசை, எழுப்பும் ஒலி ஆகியவற்றைக் கொண்டு ஆருடம் கூறினார்கள். பல்லி சொல்லுக்குப் பலன் கண்டனர். இடது கண் துடிப்பதைக் கொண்டு சகுனம் பாரத்தனர். பெண்ணின் மனநோயைக் (உண்மையில் காதல் நோய்) குணப்படுத்த கட்டுச்சிவியைக் கொண்டு “விரிச்சி” கேட்டனர். வேலனைக் கொண்டு வெறியாடினர். நல்லநாள் பார்த்துத் திருமணம் செய்தனர். சில பெண் சோதிடர்கள், அவர்கள் பையிலுள்ள கழங்கு என்னும் காய்களைக் கொண்டு வருங்காலம் உரைத்தனர்.   கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்றது. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல. பெண்ணின் இடது புருவமும், ஆணின் வலது புருவமும் துடிக்குமானால் நல்லது நடக்கும் என்றும், பெண்ணிற்கு வலது புருவமும், ஆணிற்கு இடது புருவமும் துடித்தால் ஏதோ துன்பத்திற்கு அறிகுறி என்றும் நம்பி வருகின்றனர்.   ”கண்ணகி கருக்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்து அகத்து ஒளித்து நீர் உகுத்தன எண்ணும் முறை இடத்திலும் வலத்திலும் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்தென”   என்று இளங்கோவடிகள் இந்திரவிழா நாளில் கண்ணகி கருங் கண் இடத்திலும், மாதவி செங்கண் வலத்திலும் துடித்தன என்கிறார். கண்ணகி தன் கணவனை, மாதவியிடமிருந்து பெறப் போகின்றாள், மாதவி கோவலனின் நட்பை இழக்கிறாள் என்பதையே இவ்விரு பெண்களின் கண்துடிப்புகளும் இங்கு குறிப்பிடுகின்றன?   எந்த பத்துப் பொருத்தங்களை பார்த்தார்கள் என்பதில் தான் திருமணத்தின் மகிமை தங்கி உள்ளது என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது.   "பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு உருவு, நிறுத்த, காம வாயில் நிறையே, அருளே, உணர்வொடு திருவென முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே"   குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந் திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது.   "நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை என்றிவை இன்மை என்மனார் புலவர்."   தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது. ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.   திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும். ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது. எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில் முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும். அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும்.  திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம். ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே. இதை குறுந்தொகையில் 40 இப்படி கூறுகிறது.   "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."   இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும், கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை. மேலே கூறிய வாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர், பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் - தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது. கணித்துக் கூறுபவன் ஜோசியன்.  ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன். கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!!   ஒருவர் எந்த நட்சத்திரத்தின் கீழ்ப் பிறந்தாரோ அதைக் கொண்டு அவருக்கு ஜாதகம் கணிக்கும் வழக்கம் பழந் தமிழகத்திலும் இருந்தது; புறம் 24-ம் பாடலில் பிறந்த நாள் நட்சத்திரம் பற்றிய குறிப்பு உள்ளது. திரண்ட நெல் விளையும் முத்தூர்க் கூற்றத்தையும் வென்ற வெற்றி பொருந்திய உயர்ந்த குடையும், கொடியாற் பொலிந்த தேரினையும் உடைய செழிய! உனது நட்சத்திரங்கள் நிலைத்து வளரட்டும்! என்று அந்த பாடல் அவனை வாழ்த்துகிறது.   "குப்பை நெல்லின், முத்தூறு தந்த கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! நின்று நிலைஇயர் நின் நாள்மீன்;"   இடைக்காட்டுச் சித்தர் வறட்சி ஏற்படப்போவதை அறிந்துகொண்டு ஆடு மாடுகளுக்கு எருக்க இலைகளைத் தின்பதற்குப் பழக்கியதாக ஒரு வரலாறு உண்டு. இவர் 60 தமிழ் ஆண்டுகளின் பலன்களையும் பா வடிவில் தந்துள்ளார்.   மழைக்கும் வெள்ளி கிரகத்திற்கும் உள்ள தொடர்பைச் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். வெள்ளி எனப்படும் சுக்கிரன் தெற்குத் திசைக்குச் சென்றால் பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் என்று பழந்தமிழர்கள் கருதினர்.   "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி" [பட்டினப்பாலை]   இப்படியாக கண்களை மூடியபடி எல்லாவிதமான அசட்டு நம்பிக்கைகளுடனும் மனிதன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்?     கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  அத்தியடி, யாழ்ப்பாணம்         
    • 🤣...... இதே போன்ற ஒரு கற்பனை என்னுடன் கூட வந்த ஒருவருக்கும் வந்திருந்தது...........😀
    • நீங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதை யாராவது படமெடுத்து போட்டு அமெரிக்காவிலிருந்து வந்தவர் விமானநிலைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்டார் என்று தொலைக்காட்சியில் உங்களைக் காட்ட இப்படி எனது கற்பனை போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.