-
Tell a friend
-
Topics
-
Posts
-
உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள்.
-
By ஏராளன் · பதியப்பட்டது
06 JUL, 2024 | 02:32 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் பங்குபற்றும் மெய்வல்லுநர் (ஆண்கள்) என்ற அரிய சாதனை 16 வயதான குவின்சி வில்சனுக்கு சொந்தமாகிறது. ஒரிகொன், இயூஜினில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான ஒலிம்பிக் திறன்காண் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், அதீத ஆற்றலை வெளிப்படுத்தி சாதனைமிகு நேரப்பெறுதியைப் பதிவுசெய்ததன் மூலம் பாரிஸ் செல்லும் அமெரிக்க ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆண்களுக்கான 400 மீற்றர் திறன்காண் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக்கில் தனிநபராக பங்குபற்ற தகுதிபெறவில்லை. ஆனால், இளம் குறுந்தூர ஓட்ட வீரரான குவின்சி வில்சன், அமெரிக்க 4 x 400 மீற்றர் தொடர் அணியில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க மெய்வல்லுநர் குழாத்தில் இளம் வீரர் வில்சன் பெயரிடப்பட்டுள்ளதை அவரது பயிற்றுநர் ஜோ லீ உறுதிசெய்தார். இதனை வில்சனும் உறுதிசெய்துள்ளார். 'ஒலிம்பிக்கிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளேன் என அறியக்கிடைத்ததும் நான் பேரானந்தம் அடைந்தேன்' என சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வில்சன் தெரிவித்தார். 'ஒலிம்பிக் அணியில் பெயரிடப்பட்டுள்ளேன் என அறிந்ததும் நான் பரவசமடைந்தேன். மகிழ்ச்சி வெள்ளத்தில் வீட்டைச் சுற்றி ஓட ஆரம்பித்தேன். இளம் பராயத்தில் ஒவ்வொருவரும் ஒலிம்பிக்கிற்குச் செல்ல வேண்டும் என கனவு காண்கிறார்கள். அந்த வகையில் என்னைப் பொறுத்த மட்டில் இது பொன்னான தருணமாகும்' என்றார் அவர். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவுள்ள வீரர் என்ற பெருமையை மேரிலாண்ட், பொட்டோமக் புல்லிஸ் பாடசாலையில் கல்வி பயிலும் கனிஷ்ட மாணவரான குவின்சி வில்சன் பெறுகிறார். ஒலிம்பிக்கில் பங்குபற்றவேண்டும் என்ற ஆர்வம் ரியோ 2016 விளையாட்டுப் போட்டியின் போது வில்சனுக்கு ஏற்பட்டது. மேலும் அவர் தனது 8ஆவது வயதில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. 'ஜஸ்டின் கெட்லினும் யுசெய்ன் போல்ட்டும் நேருக்கு நேர் போட்டியிட்டதை நான் பார்த்தபோது நானும் ஒரு நாள் அதில் (ஒலிம்பிக்) பங்குபற்றுவேன் என்று எண்ணியதை நான் நினைவில் வைத்திருக்கிறேன்' என வில்சன் கூறினார். 'அதைப்பற்றி நான் எனது அம்மாவிடமும் அப்பாவிடமும் கூறினேன். இப்போது அந்த கனவு நனவாகியுள்ளது' என அவர் குறிப்பிட்டார். கடந்த வாரம் நடைபெற்ற மூன்று வெவ்வேறு 400 மீற்றர் திறன்காண் போட்டிகளை 45 செக்கன்களுக்குள் பதிவுசெய்த குவின்டன் வில்சன், 42 வருடங்கள் நீடித்த 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான சாதனையை முறியடித்தார். 400 மீற்றர் அரை இறுதிப் போட்டியை 44.59 செக்கன்களில் ஓடி முடித்தன் மூலம் வில்சன் புதிய சாதனையை நிலைநாட்டினார். 1982இல் டெரல் ரொபின்சனால் நிலைநாட்டப்பட்ட சாதனையை முயறிடித்தே புதிய சாதனையை வில்சன் நிலைநாட்டினார். 'நான் எனது மெய்வல்லுநர் வாழ்க்கையில் இந்தளவு மகிழ்ச்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. இதற்காக நான் கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் உழைத்தேன். இந்த சாதனையை முறியடிக்க 42 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. நான் அந்த சாதனையை 3 தினங்களுக்குள் இரண்டு தடவைகள் முறியடித்ததையிட்டு பெருமை அடைகிறேன்' என அவர் மேலும் கூறினார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடர்ச்சியான பயிற்சிகளில் குவின்சி வில்சன் ஈடுபடவுள்ளார். அத்துடன் லண்டனில் அல்லது மியாமியில் நடைபெறவுள்ள 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்ற திட்டமிட்டுள்ளார். 'எனது ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதற்காக நான் கடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன். மைதானத்தில் உள்ள ஒவ்வொரு சுவடுகளிலும் ஓடிப் பழகவுள்ளேன். நான் எந்த சுவட்டில் ஓடுவேன் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாது. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது சுவடுகளிலா ஓடுவேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் எதற்கும் தயாராகவே இருக்கிறேன்' என வில்சன் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார். அமெரிக்காவின் 4 x 400 மீற்றர் தொடர் ஓட்ட அணியில் இடம்பெறுவதன் மூலம் மிகக் குறைந்த வயதில் அமெரிக்க அணியில் இடம்பிடித்த வீரர் என்ற சாதனையை 16 வயதான வில்சன் நிலைநாட்டியுள்ளார். பாரிஸில் 124 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழா அத்தியாயத்தில் அமெரிக்க அணியில் தனது 17ஆவது வயதில் பங்குபற்றிய ஆர்த்தர் நியூட்டனை விஞ்சி மிக இளவயதில் ஒலிம்பிக்கில் பங்குபற்றும் அமெரிக்க வீரர் என்ற சாதனையை குவின்சி வில்சன் தனதாக்கிக்கொண்டுள்ளார். குவின்சி வில்சன் ரூபத்தில் புதிய போல்ட் வந்துவிட்டாரா என்பதற்கு பாரிஸ் ஒலிம்பிக்தான் பதில் கூறப்போகிறது. ஆனால், அவரது பிரசன்னம் அமெரிக்க மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் குவின்சி வில்சன் தனக்கென ஒரு பெயரைப் பொறிப்பார் என நம்புவோமாக! https://www.virakesari.lk/article/187828 -
தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்ற விடும் புலுடாவாக இருக்கலாம். அல்லது சம்பந்தர் இனி இலையென்பதால் அடுத்த ஏமாந்த சம்பந்தர் என்று நினைத்து அழைக்கலாம் பொறுத்திருந்து பாப்போம்!
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 0 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts