-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
05 JUL, 2024 | 06:33 PM (நா.தனுஜா) பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்ததை அடுத்து சர்வதேச நாடுகளோ, அமைப்புக்களோ நிதியுதவி வழங்காததன் காரணமாக உள்நாட்டில் நெடுஞ்சாலை நிர்மாணம் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்க இயலவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, ஜப்பானின் உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக இலங்கையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை தொடர்பில் ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: கடன்களை மீள்செலுத்த முடியாத நிலை உள்ளடங்கலாக நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முன்னரான பல தசாப்த காலமாக இலங்கை வரவு -செலவுத்திட்டப் பற்றாக்குறையையும், வர்த்தகப் பற்றாக்குறையையும் எதிர்கொண்டுவருகின்றது. அதன் நீட்சியாகக் கடந்த சில வருடங்களாக செலவினங்களை ஈடுசெய்வதற்குப் போதுமான வருமானம் இலங்கையிடம் இருக்கவில்லை. குறிப்பாக அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி, ஏனைய உதவிக் கொடுப்பனவுகள் என்பன உள்ளிட்ட சகல செலவுகளுக்கும் சுமார் 4.4 ட்ரில்லியன் ரூபா செலவிடப்பட்ட அதேவேளை, அப்போது அரசின் வருமானம் 3 ட்ரில்லியன் ரூபாவாகவே காணப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே 69 இலட்சம் மக்களின் வாக்குகளுடன் ஜனாதிபதியாகத் தெரிவான கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான ஆலோசனையை சர்வதேச அங்கீகாரமுடைய கட்டமைப்புக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை அமைச்சரவையின் ஊடாக முன்னெடுத்தார். அதன் பிரகாரமே க்ளிஃபோர்ட் சான்ஸ் மற்றும் லிஸார்ட் ஆகிய நிறுவனங்கள் தெரிவுசெய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய தேவை ஏற்பட்டபோது, அதுகுறித்து அமைச்சரவைக்குள் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்பட்டன. அதன் காரணமாக நாணய நிதியத்தை நாடு செயன்முறை தாமதமடைந்தது. அதனையடுத்து நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் எழுச்சி தோற்றம் பெற்று, பேரழிவு இடம்பெற்றதன் பின்னர், சவால் மிகுந்ததொரு தருணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்வந்தார். அவரது தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தை நாடி, இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் தொடர்பில் இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டியதன் ஊடாக, தற்போது நாடு மீண்டும் மூச்சுவிட ஆரம்பித்திருக்கின்றது. இது இவ்வாறிருக்க நாடு வங்குரோத்து நிலையடைந்திருந்த காலப்பகுதியில் சர்வதேச நாடுகளோ அல்லது அமைப்புக்களோ எமக்கு எவ்வித நிதியுதவியையும் வழங்கவில்லை. அதன் காரணமாக உள்நாட்டில் நெடுஞ்சாலை கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க இயலவில்லை. இருப்பினும் தற்போது ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கையில் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஏற்கனவே உத்தியோகபூர்வ இருதரப்புக் கடன்வழங்குனர்களுடனான கடன்மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்டுவதில் விசேட ஒத்துழைப்பை வழங்கிய ஜப்பானின் உதவிகள் கிட்டும் பட்சத்தில், இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும். இருப்பினும் அதற்கு நாம் தற்போதைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். அவற்றை இடைநிறுத்தும் பட்சத்தில் மீண்டும் பின்னடைவு நிலைக்குச் சென்றுவிடுவோம் என்றார். https://www.virakesari.lk/article/187784 -
TIN வருமான வரி செலுத்தக் கோரி குறுந்தகவல் – இராஜாங்க அமைச்சர் விளக்கம்! மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறுகின்ற எவரும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விளக்கமளித்துள்ளார். வருமான வரி அடையாளக் குறியீட்டு எண்ணான ‘டின்’ இலக்கத்தை குறிப்பிட்டு வருமான வரியைச் செலுத்துமாறு பலருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்கள் இறைவரித் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள இராஜாங்க அமைச்சர், மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டாதவர்கள், இந்தத் தகவல் குறித்து அவதானம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானம் பெறுகின்றவர்கள், தங்களது வருமான வரியை உரிய கணக்கிற்குச் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/305331
-
By தமிழ் சிறி · Posted
ஐரோப்பிய நேரம் மாலை ஆறு மணிக்கு... ஜேர்மனியும், ஸ்பெயினும் ஸ்ருட்கார்ட் (Stuttgart) விளையாட்டு மைதானத்தில்... கால் இறுதி ஆட்டம் விளையாட இருக்கின்றது. ஜேர்மனி வெற்றி பெற, முற்கூட்டிய ❤️ வாழ்த்துக்கள். -
By ஈழப்பிரியன் · Posted
உமாகுமாரனுக்கு வாழ்த்துக்கள். இவர்கள் யாருமே வெற்றி பெறமாட்டார்கள் @கிருபன் என்று சொன்னாரே? -
👍....... முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள். ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 0 replies
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 1 reply
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts