Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

அங்கு நான் படித்த காலம். ஐந்து வருடங்கள் அவர்களுடன் இருந்திருக்கின்றேன். காலையில் பாணும், பருப்பும். அதில் பருப்பு இருக்காது, தட்டில் நீரோடும். இரவிலும் இதுவே இருக்கும். மத்தியானம் சோறு. ஜெயில் சாப்பாடே பல மடங்கு திறம் என்பது போல இருக்கும்.

ஆனால் அவர்கள் எந்த குறையும் சொல்வதில்லை. மிக ஒழுங்காக சாப்பிட்டு விட்டு போய் விடுவார்கள். தமிழர்களில் வசதி உள்ளோர், பலரிடம் வசதி இருந்தது, வெளியே போய் நகரத்தில் சாப்பிட்டுக் கொள்வார்கள். வெளியே போக முடியாதோரில் சிலர் குமட்டிக் கொண்டே கிடப்பார்கள்.

ஒரு தடவை அங்கிருக்கும் சில தமிழர்கள் ஒன்று சேர்ந்து அந்த விடுதி உணவுச்சாலையில் கதைத்து, கொஞ்சம் நல்ல சாப்பாடு, கொஞ்சம் அதிகமான விலையில் தயாரிக்கச் சொன்னார்கள். சில நாட்கள் இது போனது.

திடீரென்று ஒரு நாள் அன்றைய அநுரகுமார திசாநாயாக்காவின் ஆட்கள் உணவுச்சாலைக்குள் புகுந்து எல்லாவறையும் நிற்பாட்டி விட்டார்கள். எல்லோருக்கும் ஒரே பாண், ஒரே பருப்பு, அதே சோறு, ஒரு புல்லுச் சுண்டல்,............ என்று சொல்லிவிட்டனர். அவர்களை மீறமுடியாது.

இதே அநுரகுமார இன்று அதிபர் பதவிக்கு வந்தால், நாடு முழுவதும் பாலும் தேனும் ஓடுகின்றது என்று சொலவது போல பாணும் பருப்பும் ஓடும் போல............  

  

தொட‌ர்ந்து ஒரே சாப்பாட்டை எவ‌ள‌வு நாளுக்கு சாப்பிடுவின‌ம் அண்ணா😉................

 

நான் ஒரு சில‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் கூட‌ தான் ப‌ழ‌கி இருக்கிறேன்

 

உதார‌ன‌த்துக்கு சிங்க‌ள‌வ‌ன் ஆமியில் சேர்ந்து போர்க‌ள‌த்தில் ப‌லி ஆனால் மாத‌ம் மாத‌ம் சிங்க‌ள‌ அர‌சு அந்த‌ ஆமியின் குடும்ப‌த்துக்கு காசு கொடுப்பின‌மா......................இதில‌ என‌க்கு ப‌ல‌ குழ‌ப்ப‌ங்க‌ள் 1996 முல்லைத்தீவு ச‌ம‌ரின் போது 1000க்கு மேல் ப‌ட்ட‌ சிங்க‌ள‌ ஆமி இற‌ந்து போனார்ள்................இல‌ங்கை அர‌சு ஏதோ 100க்கு குறைவான‌ ஆமியின் உட‌லை வாங்கி விட்டு மீத‌ம் த‌ங்க‌ட‌ இராணுவ‌த்தின் உட‌ல் இல்லை என்று வாங்க‌ ம‌றுத்து விட்டின‌ம்................அர‌சு வாங்க‌ ம‌றுத்த‌ உட‌ல்க‌ளை வ‌ன்னி காட்டுக்குள் வைச்சு எம்ம‌வ‌ர்க‌ள் எரிச்ச‌வை

 

கிட்ட‌ த‌ட்ட‌ 900ஆமியின் பெற்றோர்க‌ள் அர‌சிட‌ம் கேட்ப்ப‌தில்லையா ஆமியில் சேர்ந்த‌ எங்க‌ட‌ பிள்ளைக‌ள் எங்கை என்று😮

 

எங்க‌ட‌ போராட்ட‌த்தில் போராளிக‌ள் வீர‌ச்சாவு அடைஞ்சா அடுத்த‌ நாளே உற‌வின‌ர்க‌ளுக்கு அறிவிப்பின‌ம் ஒரு போதும் மூடி ம‌றைச்ச‌து கிடையாது........................1991ம் ஆண்டு ஆனையிற‌வு ச‌ம‌ரில் என்ர‌ ம‌ச்சானோட‌ சேர்த்து 800 மாவீர‌ர்க‌ளுக்கு மேல் வீர‌ச்சாவு😥☹️

 

வீர‌ச்சாவு அடைந்த‌  அத்த‌னை மாவீர‌ர்க‌ளின்  பெற்றோருக்கு அறிவிப்பின‌ம்🙏🙏🙏.......................

 

இது தான் எங்க‌ட‌ போராட்ட‌த்தின் புனித‌ம்🙏🙏🙏 . ஒன்றையும் மூடி ம‌றைக்க‌ மாட்டின‌ம் எங்க‌ளுக்கு கிடைச்ச‌ த‌லைவ‌ர் அப்ப‌டி...................2009க‌ளில் வீர‌ச்சாவு அடைஞ்ச‌ போராளிக‌ளின் புள்ளி விப‌ர‌ம் தான் ச‌ரியா தெரியாது அதுக்கு முத‌ல் வீர‌ச்சாவு அடைந்த‌ போராளிக‌ளின் புள்ளி விப‌ர‌ங்க‌ள் தெரிய‌ப் ப‌டுத்துவின‌ம்🙏🙏🙏..........................

 

எம்ம‌வ‌ர்க‌ளோடு ச‌ண்டையிட்டு போர் க‌ள‌த்தில் ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் கொல்ல‌ ப‌ட்ட‌ வ‌ர‌லாறு ப‌ல‌ உண்டு....................அவ‌ர்க‌ளின் உற‌வின‌ர்க‌ளுக்கு சிங்க‌ள‌ அர‌சு அறிவித்து இருக்குமா என்ற‌து தான் பெரிய‌ ச‌ந்தேக‌ம்

 

ஒரு க‌ட்ட‌த்தில் காணாம‌ல் போன‌ லிஸ்ட்ட‌ காட்டி த‌ப்பிச்ச‌வை சிங்க‌ள‌ அர‌சு

 

ப‌ல‌ ஆயிர‌ம் இராணுவ‌ம் போர்க‌ள‌த்தில் கொல்ல‌  ப‌டும் போது எப்ப‌டி இத்த‌ன‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம்  காணாம‌ல் போனார்க‌ள் என்று சொல்ல‌ முடியும்

 

குறைந்த‌து 5 . அல்ல‌து 10 இராணுவ‌ம் காணாம‌ல் போனால் ஒத்துக் கொள்ள‌லாம் 

 

ப‌ல‌ ஆயிர‌ம் பேர் இராணுவ‌த்தில் சேர்ந்து ப‌ல‌ வ‌ருட‌மாய் வீடு திரும்பாட்டி சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அர‌சு மீது கோவ‌ம் அடைந்து கேள்வி கேட்க்க‌ மாட்டின‌மா............................

  • Replies 59
  • Views 4.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஒருவரும் சேர்க்கவில்லை. 😂 போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣

  • புலவர்
    புலவர்

    எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணன

  • நிழலி
    நிழலி

    வேறு எப்படிப் போகும் என நினைக்கின்றீற்கள்? பொது வேட்பாளர் என்பது மொக்குத்தனமானது மட்டுமல்ல, எமக்கிடையே இருக்கும் ஒற்றுமையின்மையையும், வடக்கு கிழக்கு, மற்றும் மலையக தமிழ் மக்களிற்கிடையே உள்ள அரசிய

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌ல‌ ஆயிர‌ம் பேர் இராணுவ‌த்தில் சேர்ந்து ப‌ல‌ வ‌ருட‌மாய் வீடு திரும்பாட்டி சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அர‌சு மீது கோவ‌ம் அடைந்து கேள்வி கேட்க்க‌ மாட்டின‌மா............................

கேள்விகள் கேட்பார்கள் தான், ஆனால் தனித்தனியாகவே, அவர்களின் வீட்டிலே நின்று கேட்டுக் கொண்டிருப்பார்கள் போல. கூட்டமாக, பொதுவெளியில் நின்று கேட்டால் தான் பிறர் காதுகளில் விழும். ஜேவிபியால் கேட்க முடியும், ஆனால் அவர்கள் கொன்றது, கொல்லப்பட்டதே பெரிய தனிக் கணக்கே............ 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kandiah57 said:

எனது அப்பா  நன்றாக சிங்களம் கதைப்பார்.

👍...........

சிங்கள மொழி ஒரு செப்பனிடப்பட்ட மொழி. நல்ல அழகான ஓசை, தமிழ் போலவே, அங்கேயும் இருக்கின்றது. வன்மம் வெல்ல, மொழியும் மனிதனும் தோற்றன இலங்கையில்.

பாண் அருமையான சாப்பாடு. ஆனால் தினமும் எதையும் சாப்பிட முடியாது, அதுவும் சகிக்க முடியாத கூட்டுடன்.......😃.

அவர்கள் பாண்கள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள். வட பகுதியில் அவர்கள் பல பேக்கரிகளில் ஆரம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல சிறுகதையும் இருக்கின்றது. அந்தக் கதையில் அப்படியான ஒருவர் காணாமல் போகின்றார்............. 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

👍...........

சிங்களம் மொழி ஒரு செப்பனிடப்பட்ட மொழி. நல்ல அழகான ஓசை, தமிழ் போலவே, அங்கேயும் இருக்கின்றது. வன்மம் வெல்ல, மொழியும் மனிதனும் தோற்றன இலங்கையில்.

பாண் அருமையான சாப்பாடு. ஆனால் தினமும் எதையும் சாப்பிட முடியாது, அதுவும் சகிக்க முடியாத கூட்டுடன்.......😃.

அவர்கள் பாண்கள் தயாரிப்பதில் கைதேர்ந்தவர்கள். வட பகுதியில் அவர்கள் பல பேக்கரிகளில் ஆரம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல சிறுகதையும் இருக்கின்றது. அந்தக் கதையில் அப்படியான ஒருவர் காணாமல் போகின்றார்............. 

சிங்க‌ள‌ இன‌த்திலும் சாதி பேதி பார்க்கிற‌வையா

அல்ல‌து த‌மிழ் இன‌த்தில் ம‌ட்டும் தான் இந்த‌ கொடுமையோ..................................................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

சிங்க‌ள‌ இன‌த்திலும் சாதி பேதி பார்க்கிற‌வையா

அல்ல‌து த‌மிழ் இன‌த்தில் ம‌ட்டும் தான் இந்த‌ கொடுமையோ..................................................

உண்டு”    ரணிலுக்கு அந்த தடிப்பு உண்டு”    பிரேமதாச நல்ல ஆளுமை.  மற்றும் நிர்வாகி       ஆதனால்.   பிரதமர்   ஐனதிபதி  பதவிகளைப். பெற்றார்.     இல்லாவிட்டால்    சாதி வெறியர்களின் ஆட்டம்    சொல்லி முடியாது   சஜித்   மாட்டிக்கொண்டார்.   ஐக்கிய தேசிய கட்சி உடைய அவரின் சாதியும். காரணம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Kandiah57 said:

ஐக்கிய தேசிய கட்சி உடைய அவரின் சாதியும். காரணம் 

அட சிங்களவருக்குள்ளையும் சாதி இருக்கு.😎
நான் இவ்வளவு நாளும் யாழ்ப்பாணத்தானை கண்டபடி திட்டிப்போட்டன். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

சிங்க‌ள‌ இன‌த்திலும் சாதி பேதி பார்க்கிற‌வையா

அல்ல‌து த‌மிழ் இன‌த்தில் ம‌ட்டும் தான் இந்த‌ கொடுமையோ..................................................

அவர்களுக்குள் 13 சமூகங்கள் இருக்கின்றன என்று சொல்வார்கள். சில 'அடுக்கு வரிசைகள்' கூட யாழ் மாவட்ட மக்களின் அடுக்கு, வரிசை போன்றே இருக்கும். அதை விட இடம் காரணமாகவும் ஏற்றத் தாழ்வுகள் உண்டு. கண்டி எதிர் கரையோரம் என்று சொல்வார்கள்.

ஆனால் பௌத்த மதம் இவை எல்லாவற்றுக்கும் எதிரானது. அதனாலேயே இந்தியாவில் அம்பேத்காரும், பட்டியலின மக்களும் பௌத்த மதம் நோக்கி பயணித்தனர், இன்றும் பயணிக்கின்றனர். இந்த ஒரு காரணத்தால் தான் சிங்கள மக்களிடையே சமூக அடையாளங்களால் வரும் வேறுபாடுகள், தமிழ் மக்களுடன் ஒப்பிடும் போது, குறைவாகவே என்றும் இருக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரசோதரன் said:

அவர்களுக்குள் 13 சமூகங்கள் இருக்கின்றன என்று சொல்வார்கள். சில 'அடுக்கு வரிசைகள்' கூட யாழ் மாவட்ட மக்களின் அடுக்கு, வரிசை போன்றே இருக்கும். அதை விட இடம் காரணமாகவும் ஏற்றத் தாழ்வுகள் உண்டு. கண்டி எதிர் கரையோரம் என்று சொல்வார்கள்.

ஆனால் பௌத்த மதம் இவை எல்லாவற்றுக்கும் எதிரானது. அதனாலேயே இந்தியாவில் அம்பேத்காரும், பட்டியலின மக்களும் பௌத்த மதம் நோக்கி பயணித்தனர், இன்றும் பயணிக்கின்றனர். இந்த ஒரு காரணத்தால் தான் சிங்கள மக்களிடையே சமூக அடையாளங்களால் வரும் வேறுபாடுகள், தமிழ் மக்களுடன் ஒப்பிடும் போது, குறைவாகவே என்றும் இருக்கின்றன. 

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி அண்ணா

நான் நினைச்சேன் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குள் சாதிக‌ள் இல்லை என்று

 

 

த‌மிழ் நாட்டுட‌ன் ஒப்பிடும் போது ஈழ‌ ம‌ண்ணில் சாதி மிக‌ மிக‌ குறைவு...............இது த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில்..........................

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வீரப் பையன்26 said:

நான் நினைச்சேன் சிங்க‌ள‌வ‌ர்க‌ளுக்குள் சாதிக‌ள் இல்லை என்று

அவர்களில் சாதி ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல,  ஒவ்வொரு சாதியினரின் வாழ்க்கை முறையிலும் வேறுபாடுகள் உண்டு. நான் வேலைபார்த்த ஆலையில் அப்புகாமி என்ற குள்ளமான கரையோரச் சிங்களவன், ஆலையின் பிரதான இயந்திரத்தை இயக்குபவர்களின் உதவியாளன் பதவி, பள்ளிக்கூடப் படியேறி அறியாதவன், ஆனாலும் எங்கள் இரண்டாவது பெரிய சிங்கள அதிகாரியின் செல்லப் பிள்ளை ஆதலால் அவன் குறைகள் தவறுகள் கணக்கில் வருவதில்லை. அவன் எடுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதி அந்த அதிகாரியின் பைக்குள் போய்விடுவது அரசல் புரசலாகத் தெரியும். ஒரு அடிமையைவிடக் கேவலமாக அவருக்குத் தொண்டுகள் செய்வான். நாங்கள் அவனைப் பரிகாசம் செய்தால் பற்கள் முழுவதும் காட்டிச் சிரிப்பான் அவ்வளவுதான்.

பாவம் அவன் குடும்பகாரன், மனைவி ஊரில். தன்செலவு போக மிகுதிச் சம்பளத்தை அவன் அண்ணனுக்குத்தான் அனுப்புவான். ஏனெனில் அவன் ஊரில், அவர்கள் குல வழக்கப்படி கணவன் வெளியூரில் வேலை பார்த்தால் மனைவியைக் கணவனின் அண்ணன் தன் மனைவியைப்போல் பராமரிப்பாராம் என்று அறிந்தேன்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

11 ஆவது வாய்ப்பாக என்னண்ணை?! என்னவோ lot என்று எழுதியிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஏராளன் said:

ஆவது வாய்ப்பாக என்னண்ணை?! என்னவோ lot என்று எழுதியிருக்கு!

Lotto.

  • கருத்துக்கள உறவுகள்

453004841_891756849655955_61712330514816

 

 

453004778_891817746316532_37631551013797

 

453490787_892287766269530_15182280426807

😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

அவர்களில் சாதி ஏற்றத்தாழ்வு மட்டுமல்ல,  ஒவ்வொரு சாதியினரின் வாழ்க்கை முறையிலும் வேறுபாடுகள் உண்டு. நான் வேலைபார்த்த ஆலையில் அப்புகாமி என்ற குள்ளமான கரையோரச் சிங்களவன், ஆலையின் பிரதான இயந்திரத்தை இயக்குபவர்களின் உதவியாளன் பதவி, பள்ளிக்கூடப் படியேறி அறியாதவன், ஆனாலும் எங்கள் இரண்டாவது பெரிய சிங்கள அதிகாரியின் செல்லப் பிள்ளை ஆதலால் அவன் குறைகள் தவறுகள் கணக்கில் வருவதில்லை. அவன் எடுக்கும் சம்பளத்தில் ஒரு பகுதி அந்த அதிகாரியின் பைக்குள் போய்விடுவது அரசல் புரசலாகத் தெரியும். ஒரு அடிமையைவிடக் கேவலமாக அவருக்குத் தொண்டுகள் செய்வான். நாங்கள் அவனைப் பரிகாசம் செய்தால் பற்கள் முழுவதும் காட்டிச் சிரிப்பான் அவ்வளவுதான்.

பாவம் அவன் குடும்பகாரன், மனைவி ஊரில். தன்செலவு போக மிகுதிச் சம்பளத்தை அவன் அண்ணனுக்குத்தான் அனுப்புவான். ஏனெனில் அவன் ஊரில், அவர்கள் குல வழக்கப்படி கணவன் வெளியூரில் வேலை பார்த்தால் மனைவியைக் கணவனின் அண்ணன் தன் மனைவியைப்போல் பராமரிப்பாராம் என்று அறிந்தேன்.

 

தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ப‌ஞ் ஜ‌யா🙏.........................

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி சிங்களவர்கள் தான் சிங்களத்தில் முதன்மை சாதி🤣

14 hours ago, வீரப் பையன்26 said:

ப‌ல‌ ஆயிர‌ம் பேர் இராணுவ‌த்தில் சேர்ந்து ப‌ல‌ வ‌ருட‌மாய் வீடு திரும்பாட்டி சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அர‌சு மீது கோவ‌ம் அடைந்து கேள்வி கேட்க்க‌ மாட்டின‌மா............................

இல்லை, எல்லாருக்கும் அறிவிப்பார்கள். ஆனால், தனித்தனியாக அறிவிப்பதால், எத்தனை பேரிற்கு அறிவித்தார்கள் என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சமர்களில் மொத்தமாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எவராலும் அறிய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

Lotto.

👍....

9 hours ago, ஏராளன் said:

11 ஆவது வாய்ப்பாக என்னண்ணை?! என்னவோ lot என்று எழுதியிருக்கு!

குலுக்கல் தெரிவு.......🤣.

_______________________________________________________________

இங்கு சில நாட்களில் திடீரென்று ஒரு ஒருநாள் கரப்பந்தாட்டப் போட்டியை ஒழுங்கு செய்வோம். பெரும்பாலும் இந்தியர்கள் தான். எல்லோரும் காலையில் வந்தவுடன், ஒரு எழுபது அல்லது எண்பது பேர்கள் வரை, ஆட்களை திறமை அடிப்படையில் சிறு சிறு குழுக்களாக்கி, பின்னர் இந்த 'லொட்' முறையில் அணிகளை பிரித்துக் கொள்வோம்.......... சில அணிகள் இடையிலேயே சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடுவார்கள்................🤣.

 

இந்தத் தேர்தல், மகிந்த குடும்பத்துக்கு சாவா வாழ்வா எனும் தேர்தல். ரணில் வந்தால் மட்டுமே அவர்களால் தப்பி பிழைக்கலாம். ரணிலுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதற்காகவே ஒரு பொதுசனப் பெரமுன ஒரு வேட்பாளரை களமிறக்குகின்றனர்.

முஸ்லிம், மலையக மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முதலாவது  இரண்டாவது விருப்பு வாக்கில் ரணில் சனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் தான் இப்போதைக்கு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

image_whatsapp.jpg?fit=639,630

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் தம்மிக்க பெரேரா!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா களமிறங்கவுள்ளார் என்றும் நாளைய தினம் இதுதொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும்  ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மொட்டுக் கட்சியின் உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாளைய தினம் மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். அந்தவகையில், வர்த்தகர் தம்மிக்க பெரேரா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்திக் கூர்மையான அரசியல் தலைவர் என்று பலரும் இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரைவிட பசில் ராஜபக்ஷ சிறந்ததொரு தலைவராவார்.

ரணிலைவிட பசிலுக்கு அரசியல் தொடர்பாக நன்றாகத் தெரியும். இதனால்தான் நேற்று மொட்டுக் கட்சி அப்படியானதொரு விசேட தீர்மானத்தை எடுத்தது. நாம் நிச்சயமாக தம்மிக்க பெரேராவை களமிறங்குவோம்.

அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்த பின்னர்தான் பசில் ராஜபக்ஷ ஓய்வார். ஏனெனில், மொட்டுக் கட்சிதான் நாடளாவிய ரீதியாக பலமானதொரு கட்சியாக இன்னமும் இருந்து வருகின்றது.

ஒகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து நாம் எமது அரசியல் செயற்பாட்டை மேற்கொள்வோம்;.
நாம் ஸ்தாபிக்கவுள்ள அரசாங்கத்தில் நாமல் ராஜபக்ஷ தான் பிரதமராக பதவியேற்பார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னும் 51 நாட்கள்தான் உள்ளன.அவரால் தொடர்ந்தும் ராஜபக்ஷவினரை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

அமைச்சர் கஞ்சன விஜேயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தற்போது ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்கினாலும், விரைவிலேயே தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு எமது தரப்பில் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1394192

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

முஸ்லிம், மலையக மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் முதலாவது  இரண்டாவது விருப்பு வாக்கில் ரணில் சனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் தான் இப்போதைக்கு அதிகம்.

இங்கே சுமந்திரன் சொல்வதப் போல பொது வேட்பாளரின் வாக்கு அடிபட்டுப் போகிறதே?

  • கருத்துக்கள உறவுகள்

namal.jpg?resize=650,375

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளைத் தோற்கடிப்போம்! -நாமல்.

”ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன், ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்தும் செயற்படுவோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனுவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  ஜனாதிபதித் தேர்தலின்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை தோற்கடிக்க நாம் செயற்படுவோம். தேசிய வேலைத்திட்டமொன்றுடன் பயணித்த தலைவர்தான் ஜனாதிபதியாக இவ்வளவு காலத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்களில் சிலர் நேற்று இரவும் எமது வீடுகளுக்கு வந்தார்கள். சிலர் காலையிலும் வந்தார்கள்.

இவர்கள் எல்லாம் குழப்பமானதொரு மனநிலையில்தான் தற்போதும் உள்ளார்கள். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது ஒன்றும் புதிது கிடையாது. மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பாக நாம் இன்னும் கலந்துரையாட வேண்டியுள்ளது.

 

நாம் நபரை இலக்குவைத்து அரசியல் செய்யப்போவதில்லை. எமக்கு அரசியல் கொள்கைகளே முக்கியமாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் வந்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், அவர் சிரேஷ்ட அரசியல்தலைவர் என்றவகையில், நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவார் என்றே நம்புகிறோம்” இவ்வாறு நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1394190

Edited by தமிழ் சிறி

10 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கே சுமந்திரன் சொல்வதப் போல பொது வேட்பாளரின் வாக்கு அடிபட்டுப் போகிறதே?

வேறு எப்படிப் போகும் என நினைக்கின்றீற்கள்?

பொது வேட்பாளர் என்பது மொக்குத்தனமானது மட்டுமல்ல, எமக்கிடையே இருக்கும் ஒற்றுமையின்மையையும், வடக்கு கிழக்கு, மற்றும் மலையக தமிழ் மக்களிற்கிடையே உள்ள அரசியல் வேறுபாடுகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு முயற்சி என்பதே என் உறுதியான அபிப்பிராயம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

வேறு எப்படிப் போகும் என நினைக்கின்றீற்கள்?

பொது வேட்பாளர் என்பது மொக்குத்தனமானது மட்டுமல்ல, எமக்கிடையே இருக்கும் ஒற்றுமையின்மையையும், வடக்கு கிழக்கு, மற்றும் மலையக தமிழ் மக்களிற்கிடையே உள்ள அரசியல் வேறுபாடுகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு முயற்சி என்பதே என் உறுதியான அபிப்பிராயம். 

இதுவரை தவறாக எண்ணியிருந்ததை நேற்றை டெய்லிமிரர் பதிவு தான் தெளிவுபடுத்தியது.

முதலாம் இரண்டாம் எண்ணிக்கையில் 50 வீடமான வாக்குகள் கிடைக்வில்லை என்றால் மறுபடியும்தேர்தல் வைப்பார்கள் என்றே எண்ணினேன்.

ஆனால் இரண்டாவது எண்ணிக்கையில் 50 வீதம் கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை வைத்து ஒரு ஜனாதிபதி வருவார் என்றால் பொது வேட்பாளர் பிரயோசனமில்லாத வேலையாகவே இப்போது தெரிகிறது.

நம்மவர்கள் இரண்டாவது வேட்பாளராக ரணிலையே போடுவார்கள் போல உள்ளது.

ஐயா விக்னேஸ்வரனும் நாசூக்காக இதை அடிக்கடி சொல்கிறார்.

இவற்றைவிட கஜேகுழு சொல்வது போல பேசாமல் பகிஸ்கரித்து விட்டே இருக்கலாம்.வாக்குப் போடவும் துரோகி என்பார்களே என்று கிட்டவே போகமாட்டார்கள்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகப் போகுது.

20 minutes ago, தமிழ் சிறி said:

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டுடன், ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்தும் செயற்படுவோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனுவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்பி இதை முதலில் உங்க கட்சிக்காரருக்கு சொல்லுங்க.

அவங்க தான் ரணிலை ஜனாதிபதியாக்க ரொம்பவும் ஆவலாக நிற்கிறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

449105662_26301906752756412_3125866488093823382_n.jpg?_nc_cat=109&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=j6D3rXcJEmUQ7kNvgF42liV&_nc_ht=scontent-fra5-2.xx&gid=AfctNcTDVqjeEzu8dRp81rM&oh=00_AYCUQI_vgRYX0klyaeROYd80uMiKa50xMtJUAVOibKxXbg&oe=66AEF348

449033383_26301906639423090_599039792148774919_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=833d8c&_nc_ohc=trFgQuMixWEQ7kNvgHRX-uS&_nc_ht=scontent-fra5-2.xx&gid=AfctNcTDVqjeEzu8dRp81rM&oh=00_AYAQG0cwEdIhsKIdwVbiCXWM0WGgIEVNSYheyxr4Ot2RCQ&oe=66AF019F

 

கடந்த 2019 ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயவுக்கு வாக்களித்த 69லட்சம் போரில் 39-42லட்சம் பேர் இந்த தடவை ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு வாக்களிப்பார்கள். இது100% உறுதியானது.
மிகுதி18-20லட்சம் வாக்காளர்கள் சிங்கள தேசியவாதிகள் இவர்கள்தான் மகிந்தவின் உண்மையான வாக்கு வங்கி. 

ஆனால் கடந்த அரகலயவுக்கு பின் கிட்டதட்ட 8லட்சம் பேர் ( மிதவாத சிங்கள தேசியவாதிகள்) மகிந்த தரப்பை விட்டு விலகி JVP  பக்கம் சாய்ந்துள்ளனர். இவர்களே இப்போது அநுரவுக்கு கூடும் கூட்டடத்தினர். இவர்கள்தான்  அநுரவின் வாக்கு சதவிதத்தை 300% தால் அதிகரிக்க செய்யப்போகின்றனர்.
மகிந்த வாக்கு வங்கியாக இருந்தவர்களில் கடைசியான மிகுதி  8-12லட்சம் பேர் கடும் சிங்கள தேசியவாதிகள்/ பேரினவாதிகள்.  துட்டகைமுனு கோஷ்டியினர். இவர்கள் உயிரே போனாலும் ரணிலுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இவர்களின் பிரதான எதிரியே ரணில்தான். அதே நேரம் இன்றுவரை இவர்களின் ஒரே தலைவன் மகிந்த ராஜபக்ச தான்.

தனது மகனின் எதிர்கால அரசியல் கருதி இந்த வாக்கு வங்கியை தக்கவைத்துக்கொள்ள மகிந்த தரப்பு தமது விசுவாசி யாரேனும் ஒருவரை வேட்பாளராக்க முயற்சிப்பார்கள்.  அதே வேளை அந்த வேட்பாளர் இந்த வாக்குகளை முழுமையாக அறுவடைசெய்து விடாமலும் பார்த்தும் கொள்வார்கள். ஒருவேளை அவர் மகிந்தவை அகற்றிவிட்டு இந்த கடும் சிங்கள தேசியவாதிகளின் தலைவனாகிவிட்டால் நாமலின் எதிர்காலம் சூனியமாகிவிடும்.

இவ்வாறு மகிந்தவை  அகற்றி இந்த வாக்குகளை தம்வசப்படுத்தகூடிய  வல்லமையுள்ள மகிந்தவின் விசுவாசிகளில் முதன்மையானவர் விமல் வீரவன்ச. எனவே மகிந்த தரப்பு இவரை தவிர்த்து சரத் வீரசேகர, உதய கமன்பில போன்ற பலவீனமான ஒரு கடும்சிங்கள தேசியவாதியை முன்னிறுத்தவே விரும்புவார்கள்.  
இந்த நபரே வேட்பாளர் No 4.

ஜனாதிபதி ரணில் சஜித்துக்கு  செக் வைக்க அநுரவை பயன்படுத்துவது போன்று அநுரவுக்கு செக் வைக்க மகிந்த ஊடாக விமலை பயன்படுத்த முயற்சிப்பார். விமல் என்னும் கல்லின் மூலம், மகிந்த, நாமல், அநுர என்னும் மூன்று மாங்காய்களை அடிக்க பார்க்கின்றார் ரணில். இது மகிந்தவுக்கும் தெரியும்.
எல்லாம் ரணில் செயல்.
(ஜெய் பூரிஜெகநாதர் ) 

Rajh Selvapathi

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பிரான்சில் நடக்கும் அதிபர் தெரிவுதான் மிகச்சரியான ஜனநாயகத்தை வெளிப்படுத்துகிறது.சிறிலங்கா ஜனாதிபதித் தெரிவில் செலவைக்குறைக்கும் முகமாக இப்படி விதிகளை அமைத்தார்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஒரு குள்ள நரி என்பதை மீண்டும் காட்டி விட்டார். கட்சி சின்னத்தில் இல்லாதுசுயேச்சையாக புதிய சின்னத்தில் நிற்பது சஜித்தின் கட்சியில் இருப்பவர்களையும் மகிந்தவின் கட்சியில் உள்ளவர்களையும் தான் ஐதேகட்சியின் வேட்பாளர் இலலை பொது வேட்பாளர் என்று மாயையக் காட்டி அவர்களை இழுக்கப் பார்க்கிறார்.என்னைப் பொறுத்தவரையில் ரணில் ஸனாதிபதியாவதை விரும்பவில்i. உடனே ராஜபக்சேக்களுக்கு கருத்து எழுதுவதாக நினைக்கக் கூடாது.மகிந்த தரப்பு ஜனாதிபதியானால் கோத்தாவின் காம் போல மீண்டும் ஒரு அரகல வரும்.மேற்குலகம் அதனை சில தந்திரங்களைக் கையாண்டு ஊக்கவிக்கும்.ஏனெ;னறால் மகிந்த தரப்பு நேரடியாக சீனாவை ஆதரிக்கும். ஆனால் ரணில் சீனாவை எதிர்க்கமாட்டார் ஆனார் எதிர்பது போல பாவனை காட்டி மேற்குலகை ஏமாற்றுவார். சிங்களவர்களுக்கு பரும்பும்>பாணும்>மின்சாரமும்>எண்ணெையும் கொடுத்தால் அவர்கள் பேசாமல் இருப்பார்கள்.தமிழர்களுக்கு ஒரு மண்ணும் கிடைக்காது. தமிழர்கள் அனைத்து கட்சிகளும் ஒருமித்து பொது வேட்பாளருக்கு ஒரு வாக்கை மட்டும் போடவேண்டும். அன்றேல் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.ரணிலை இந்தத் தேர்தலோடு வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் அந்தக் குள்ள நரிதேர்தலில் தோற்றும் ஜனாதிபதியான குள்ளநரி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.