Jump to content

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, பெருமாள் said:

ஏன்யா உங்களுக்கு  வேறு ஒரு உவமையும் கிடைக்கவில்லையா ?

 

புலம்பெயர் தமிழர்களின் ஒரு முக்கியமான நிகழ்வைக் குழப்பும்போது வராத வெட்கம் உந்த உவமைக்கு வருகிறதோ? 

வித்தியாசமான ஆட்களய்யா நீங்கள் !!!!!!!!!!! 😏

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அற

ரசோதரன்

👍........... எல்லோர் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை இருக்கின்றது என்பது உண்மையே. உதாரணமாக, தெலுங்கு மக்கள் எல்லோரும் மிக ஒற்றுமையானவர்கள் என்று ஒரு காலத்தில் தமிழர்கள் சொன்னார்கள். தமிழர்கள்

ஈழப்பிரியன்

ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

புலம்பெயர் தமிழர்களின் ஒரு முக்கியமான நிகழ்வைக் குழப்பும்போது வராத வெட்கம் உந்த உவமைக்கு வருகிறதோ? 

வித்தியாசமான ஆட்களய்யா நீங்கள் !!!!!!!!!!! 😏

 

கதைத்து பேசி தீர்வு காண வேண்டிய விடயத்துக்கு இரு பகுதியும் சேர்ந்து ஈழ தமிழர் மானத்தை வாங்கியிருக்கிறார்கள் .

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

கதைத்து பேசி தீர்வு காண வேண்டிய விடயத்துக்கு இரு பகுதியும் சேர்ந்து ஈழ தமிழர் மானத்தை வாங்கியிருக்கிறார்கள் .

இவ்வகையான செயற்பாடுகளை வரவேற்க அல்லது ஊக்கப்படுத்த   முடியாது என்பதை உரத்துச் சொல்லுங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கதைத்து பேசி தீர்வு காண வேண்டிய விடயத்துக்கு இரு பகுதியும் சேர்ந்து ஈழ தமிழர் மானத்தை வாங்கியிருக்கிறார்கள் .

இறுதிக்கணங்களில் முள்ளிவாய்க்காலில் மக்களின் கால்களில் விழுந்து வணங்கி கெஞ்சிய போராளிகள் அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த சம்பவங்கள் தான் இவற்றை பார்க்கும் போது எனக்கு வந்து போகின்றன ... 

கடைசி கெஞ்சல்கள் அழுகை ஆத்திரம் கடினமான வார்த்தைகள்.....???😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

புலம்பெயர் தமிழர்களின் ஒரு முக்கியமான நிகழ்வைக் குழப்பும்போது வராத வெட்கம் உந்த உவமைக்கு வருகிறதோ? 

வித்தியாசமான ஆட்களய்யா நீங்கள் !!!!!!!!!!! 😏

 

இப்படி சொல்லி சொல்லியோ  பிழைகளை. தொடர்ந்தும் செய்யலாமா?? 

தெருவிழாவை   குழப்பியவார்களும். கேட்கலாம்    

பௌத்த பிக்குகளின். காலில் விழுந்த போது வராத வெட்கம்   தெருவிழா குழப்பும்போது   வருகிறதா ??  

இதுவரை தெருவிழா குழப்பாமல் நடந்துள்ளது 

இந்த வருடம் ஏன் குழப்ப வேண்டும்  ??. தற்போது உள்ள கனடா தமிழ் பேரவை உறுப்பினர்கள் பதவிகளை துறந்து  வீடுகளில் இருப்பது நல்லது   புதியவர்கள்.  பதவியேற்று   இயங்குகிறது சிறப்பு      தற்போது உள்ளவர்கள் இலங்கை அரசின் கைகூலிகள்.    இவர்களுக்கு தமிழர்கள் தெருவிழா   நடத்த உரிமையும். தகுதியும்  இல்லை    பௌத்த பிக்குமாரின்.  காலில்   இழந்து விட்டார்கள்   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இப்படி சொல்லி சொல்லியோ  பிழைகளை. தொடர்ந்தும் செய்யலாமா?? 

தெருவிழாவை   குழப்பியவார்களும். கேட்கலாம்    

பௌத்த பிக்குகளின். காலில் விழுந்த போது வராத வெட்கம்   தெருவிழா குழப்பும்போது   வருகிறதா ??  

இதுவரை தெருவிழா குழப்பாமல் நடந்துள்ளது 

இந்த வருடம் ஏன் குழப்ப வேண்டும்  ??. தற்போது உள்ள கனடா தமிழ் பேரவை உறுப்பினர்கள் பதவிகளை துறந்து  வீடுகளில் இருப்பது நல்லது   புதியவர்கள்.  பதவியேற்று   இயங்குகிறது சிறப்பு      தற்போது உள்ளவர்கள் இலங்கை அரசின் கைகூலிகள்.    இவர்களுக்கு தமிழர்கள் தெருவிழா   நடத்த உரிமையும். தகுதியும்  இல்லை    பௌத்த பிக்குமாரின்.  காலில்   இழந்து விட்டார்கள்   

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,...ஐயோ அம்மா,...என்னால் முடியவில்லை,.கந்தையர்,🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,...ஐயோ அம்மா,...என்னால் முடியவில்லை,.கந்தையர்,🤦🏼‍♂️

உங்களுக்கு அம்மா இருக்கிறாரா??    எனக்கு சமயம் படித்த ஆசிரியை    ஐயோ என்று சொல்ல கூடாது என்று சொல்லி தந்தார்கள்   ஏனென்றால்  ஐயோ என்பது இயமனின். தாய்யின் பெயர் என்பதால் 🤣😂

Link to comment
Share on other sites

 
 
உண்மையும்..!!! புரளியும்...!!!
CTC அமைப்பினால் நடாத்தப்பட்ட TAMIL FEST நிகழ்ச்சியின் எதிரொலியாக, Tamil ONE தொலைக்காட்சி ஊடக நிறுவனத்தின் வாகனம் எரியூட்டப்பட்டதான செய்தி வன்மையான கண்டனத்துக்குரியது என்பதை ஒரு ஊடகவியலாளனாகவும், பொதுமகனாகவும் பதிவு செய்கிறேன். எனினும், TAMIL ONE நிறுவனத்தின் அலுலக வளாகத்தில் வைத்து வாகனம் எரியூட்டப்பட்டமைக்கும், TAMIL FEST நிகழ்வுக்கும், முடிச்சுப்போடும் ஆதாரங்கள் உள்ளனவா ? அல்லது ஊகங்களின் அடிப்படையில் வதந்திகள் பரப்பப்படுகின்றனவா? என்ற மூலங்கள் ஆராயப்படவேண்டும். அத்துடன், TAMIL ONE நிறுவனம் அல்லது காவற்துறைத் தரப்புக்கள் தமது சந்தேகங்கள் விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
மேலும், TAMIL FEST நிகழ்வை ஒட்டியதாக இடம்பெற்ற, முட்டைகள் வீசப்பட்டமை, பதாகைகளை எரித்தமை, தகாத வார்த்தைப் பிரயோகங்கள், மதிப்பிற்குரிய பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களை அவமரியாதை செய்தமை போன்ற சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை மட்டுமல்ல; கவலைக்குரியதுமாகும்.
எனினும், சமூக அக்கறையோடும், ஆதங்கங்களின் எதிரொலியாகவும், மக்கள் தமது ஜனநாயக உரிமைகளின் பிரகாரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையோ? புறக்கணிப்பில் ஈடுபட்டதையோ ? கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் எனக்கு இல்லை. பேச்சுரிமை, கருத்துரிமை, உணர்வு வெளிப்பாட்டுரிமை கொண்ட நாடு, கனடா. ஒரு பொது அமைப்பிடம் கேள்வி கேட்கும் அனைத்து உரிமையும் மக்களுக்கு உண்டு. அந்த உரிமைகளை மதிக்கவேண்டிய கடப்பாடும் அந்த அமைப்புக்கு உண்டு. ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைகளையோ, புறக்கணிப்புச் செய்யும் உரிமைகளையோ கனடாவின் சட்டங்கள் மறுக்கவில்லை. அவ்வாறு மறுப்பதும், அவற்றுக்குத் தடை ஏற்படுத்துவது உரிமை மீறலாகும். காவற்துறையின் கண்காணிப்பு மற்றும் பிரசன்னத்துடன் மக்களின் உணர்வு வெளிப்பாடுகள் எதிரொலித்ததை நேரிலும், காணொளிகள் ஊடாகவும் பலரும் கண்ணுற்றனர்.
ஆயினும், மக்களின் உணர்வு வெளிப்பாடுகளின் அபாயங்கள் குறித்து ஒரு ஊடகவியலாளனாக அதனைத் தவிர்ப்பதற்கான அவசர வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தேன். சமூக அமைப்புக்களாலும், குழுக்களாலும் விடுக்கப்பட்ட தெருவிழா புறக்கணிப்பு, மற்றும் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆகிய அறிவிப்புக்களை அவதானித்த பின்னர், அத்தெரிவுகளில் அபாயங்கள் அற்ற, அதேவேளை அசம்பாவிதங்களைத் தவிர்க்கக்கூடிய தெரிவு, புறக்கணிப்பு என்பதை கனேடியத் தமிழர் கூட்டு பரிந்துரை செய்திருந்தது. அத்தெரிவு, அபாயங்கள் அற்ற அதேவேளை, கனதியான செய்தியைப் பிரதிபலிக்கும் ஒரு தெரிவாக நானும் கருதினேன். ஆகவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, புறக்கணிப்பு என்ற சமுகத்தின் தெரிவை ஜனநாயகத் தெரிவாகப் பரிந்துரைத்திருந்தேன்.
எனினும், கருத்துக்களை, செய்திகளை மக்களிடம் நாம் தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் தான் முடிவெடுக்கும் சக்தி. அந்த மகா சக்தியை முடக்கும் வல்லமை உலகில் எந்த அரசுகளிடமும் இல்லை. அதனால் தான், ஜனநாயகக் கோட்பாடு (Democratic Theory) மக்களின் உரிமைகளை மதிக்கும் உயரிய கோட்பாக உலகில் போற்றப்படுகிறது.
எனினும், கனடாவில் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதாக தன்னை அடையாளப்படுத்தும் CTC, அந்த மக்களின் கருத்துக்களை, உணர்வுகளை மதிக்காமல் பல்லாண்டுகளாகப் புறக்கணிப்புச் செய்துவந்ததன் கூட்டு எதிரொலியின் பிரதிபலிப்பே இது. இது இன்றோ ? நேற்றோ ? திடீரென்று ஏற்பட்ட உணர்வு வெளிப்பாடு அல்ல. நீண்டகாலமாக புகைந்துகொண்டிருந்த மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. எனினும், தம் மீதான விமர்சனங்கள் மற்றும் குற்றச் சாட்டுக்களை புறம்தள்ளி TAMIL FEST ஐ நடாத்த CTC எடுத்த மூடத்தனமான முயற்சி, மக்கள் தம்பக்கம் என்ற அவர்களின் விம்பத்தை முதன்முறையாக உடைத்துவிட்டது. பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றகும் மக்கள் தொகையே, தமக்கான ஆதரவுத் தளம் என்று காண்பிக்க CTC கையாண்ட மூலோபாயம், முட்டுச் சந்தியில் முடங்கிப்போனது.
கடந்த பல வருடங்களாக, கருத்தியற் தளத்தில் மக்களையும், ஊடகங்களையும் சந்திக்க CTC மறுத்து வந்ததன் விளைவே இது. தமிழினப்படுகொலையை பகிரங்கவெளியில் ஒப்புக்கொள்வதற்கே 15 ஆண்டுகள் CTC குத் தேவைப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வாண்டு இடப்பெற்ற தமிழினப்படுகொலை நினைவு வணக்க நிகழ்வைக் கூட ஒரு பொது நிகழ்வாக நடத்தாமல், மூடிய அறைகளுக்குள் தமது குறிப்பிட்ட ஆதரவாளர்களுடன் மட்டும் நடத்தும் அளவுக்கு, CTC க்கும் மக்களுக்குமான இடைவெளி பேணப்பட்டது என்பது எவ்வளவு பெரிய இழுக்கு.
ஒரு ஊடகவியலாளனாக, CTC யின் நிர்வாகப் பிறழ்வுகள், இமாலயப்பிரகடன விவகாரங்கள், இலங்கை அரசுக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், CTC யால் நடாத்தப்படும் TAMIL FEST சார்ந்தும் உள்ள சர்ச்சைகள், குறித்தும் என்னால் இயன்றளவு சமூகத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கான பங்களிப்பை நான் ஆற்றியுள்ளேன். எனது, கடந்த 8 மாதகால Facebook பதிவுகளை பின்னோக்கிப் பார்ப்பதன் ஊடாக இவற்றின் பின்னணி குறித்த அனைத்துத் தரவுகளையும் நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொள்ளலாம்.
மேலும், சக ஊடகவியலாளரான Lankathas Pathmanathan அவர்களின் பதிவுகள் மற்றும் அவரது 'தேசியம்' இணையப் பதிவுகள் ஊடாகவும், அனைத்துத் தரவுகள், தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். கனேடியத் தமிழ் வாசகர்களுக்காக பிரத்தியேகமாக கனடாவின் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் தகவல்கள் பலவற்றையும் அவரது இணைய, மற்றும் சமூகவலைத் தளங்கள் வழங்கி வருகின்றன.
மேலும், சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக, கடந்த வாரம் August 20 ஆம் திகதி பிரத்தியேக நேரலை ஊடாக, பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ‘கருத்தாடல்’ நிகழ்ச்சி ஒன்றை நான் நெறிப்படுத்தியிருந்தேன். 2 மணிநேரம் 45 நிமிடம் இடம்பெற்ற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது தரப்புக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்களுக்கு CTC தரப்பில் இருந்து சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், இவ்வாறான அசம்பாவிதங்கள் அனைத்தையும், தவிர்ப்பதற்கான அத்தனை சந்தர்ப்பங்களும், கனேடியத் தமிழர் பேரவையிடம் இருந்தது. எனினும், சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து, சமரசம் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. சமூக உணர்வுகள் கொந்தளிப்பாக இருப்பதை உணர்ந்தும், அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க CTC கடைசிவரை தயாராக இருக்கவில்லை. ஒரு குருட்டு நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில், TAMIL FEST க்கு அனுசரணை வழங்கும் வணிக நிறுவனங்கள், நிகழ்ச்சிகளை வழங்கும் கலைஞர்கள் எனப் பலரும் நிகழ்ச்சி இடம்பெறும் நாளுக்கு முன்பாகவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர்.
கனடாவில் தமிழ் சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் ஒருவரைத் தவிர, வேறு எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை எனது முன்னைய பதிவிலேயே தெளிவாகத் தெரிவித்திருந்தேன். அத்துடன், கனேடியப் பிரதமர், எதிக்கட்சித் தலைவர், மற்றும் மூன்றாம் நிலை எதிர்கட்சித் தலைவர் உட்பட வழமையாக திருவிழாவில் பிரசன்னமாகும் கனேடிய அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்பதையும் எனது முன்னைய பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன். இவை அனைத்தும் நான் வானத்தை அண்ணாந்து பார்த்து அறிந்துகொண்டவை அல்ல. CTC எதிர்கொண்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு அவர்கள் ஆற்றிய எதிர்வினைகளை அவதானித்த அனைவருக்கும் தெரிந்த விடயம்.
எனவே, இந்த இக்கட்டான சூழலை, தமது ஆக்கபூர்வமான நகர்வுகள் ஊடாக எதிர்கொள்ளக்கூடிய பந்து CTC தரப்பிடமே இருந்தது. எனவே, போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை மொக்குத்தனமாக அனுமதித்து, அவற்றின் ஊடாக அனுதாபத்தைப் பெற்று, தமது தவறுகளை மூடிமறைக்க CTC தரப்பு முயன்றுள்ளது என்ற சமூகத்தின் சந்தேகம் இங்கே வலுப்பெறுகிறது.
இந்நிலையில், தெருவிழாவின் முதல்நாளில், தமது தவறுகளுக்கு மன்னிப்புகோருவதாக CTC யின் தற்போதைய தலைவர் குமார் (இ)ரட்ணம் அவர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டபோதிலும், அவை மக்களின் நன்மதிப்பை அறுவடை செய்யவில்லை. நமது சமூகம், CTC யின் அறிக்கைகளில் நம்பிக்கை இழந்து பலகாலம் ஆகிவிட்டது. நம்பிக்கையைக் கட்டியெழுப்ப செயல்களே அவசியம்.
அந்த மன்னிப்புக்களுக்குப் பின்னரும் கூட, மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குத் தீர்வுகாண CTC தரப்பு தயாரில்லை என்பதை அதன் நிர்வாகசபை இயக்குனர், சமூக வெளியில் இன்று வெளியிட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன. எதேச்சாதிகாரத் தன்மை கொண்டவராக, பிரச்சனைகளின் நாயகனாக மக்களாலும், அமைப்புக்களாலும் விமர்சிக்கப்படும், “…CTC யின் நிறைவேற்று இயக்குனர் டான்ரன் துரைராஜா பதவியில் இருந்து விலகமாட்டார். அவ்வாறு அவர் விலக்கப்படும் நிலைவந்தால் CTCயை மூடிவிடுவோம்….” என்று இயக்குனர்களில் ஒருவரான டில்ஷான் நவரட்ணராஜா இன்று சமூகவலைத்தள பதிவு ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
இலாப நோக்கற்ற மக்கள் அமைப்பு ஒன்றை ஒரு எதேச்சாதிகார நிறுவனம்போல் நடத்தும் உரிமையை யார் கொடுத்தது. அந்நிறுவனத்தை ஒரு தனிநபருக்காக நடத்துவோம் அல்லது மூடிவிடுவோம் என்று எச்சரிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது..?
மக்களே சிந்தியுங்கள். பொதுவெளியில் பேசும்போது, தரவுகளும் தகவல்களும் சரியா என்று பகுத்தறிந்து பேசுங்கள்.
நிறைவாக ஒன்று, போராட்டக் காரர்களைத் தூண்டிவிட்டதாக என் மீது சில தரப்புக்களால் முன்வைக்கப்படும் விசமத்தனமான பிரச்சாரங்களை முற்றாக நிராகரிப்பதோடு, அவ்வாறு வீண் பழி சுமத்தும் தரப்புக்களின் அணுகுமுறைகள் ஜனநாயக வரைமுறைகளின் பிரகாரம் அணுகப்படும் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன்.
நன்றியுடன்,
உதயன் S. பிள்ளை
May be an image of text
 
 
 
 
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:
 
 
 
உண்மையும்..!!! புரளியும்...!!!
CTC அமைப்பினால் நடாத்தப்பட்ட TAMIL FEST நிகழ்ச்சியின் எதிரொலியாக, Tamil ONE தொலைக்காட்சி ஊடக நிறுவனத்தின் வாகனம் எரியூட்டப்பட்டதான செய்தி வன்மையான கண்டனத்துக்குரியது என்பதை ஒரு ஊடகவியலாளனாகவும், பொதுமகனாகவும் பதிவு செய்கிறேன். எனினும், TAMIL ONE நிறுவனத்தின் அலுலக வளாகத்தில் வைத்து வாகனம் எரியூட்டப்பட்டமைக்கும், TAMIL FEST நிகழ்வுக்கும், முடிச்சுப்போடும் ஆதாரங்கள் உள்ளனவா ? அல்லது ஊகங்களின் அடிப்படையில் வதந்திகள் பரப்பப்படுகின்றனவா? என்ற மூலங்கள் ஆராயப்படவேண்டும். அத்துடன், TAMIL ONE நிறுவனம் அல்லது காவற்துறைத் தரப்புக்கள் தமது சந்தேகங்கள் விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
மேலும், TAMIL FEST நிகழ்வை ஒட்டியதாக இடம்பெற்ற, முட்டைகள் வீசப்பட்டமை, பதாகைகளை எரித்தமை, தகாத வார்த்தைப் பிரயோகங்கள், மதிப்பிற்குரிய பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களை அவமரியாதை செய்தமை போன்ற சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை மட்டுமல்ல; கவலைக்குரியதுமாகும்.
எனினும், சமூக அக்கறையோடும், ஆதங்கங்களின் எதிரொலியாகவும், மக்கள் தமது ஜனநாயக உரிமைகளின் பிரகாரம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையோ? புறக்கணிப்பில் ஈடுபட்டதையோ ? கேள்விக்குட்படுத்தும் அதிகாரம் எனக்கு இல்லை. பேச்சுரிமை, கருத்துரிமை, உணர்வு வெளிப்பாட்டுரிமை கொண்ட நாடு, கனடா. ஒரு பொது அமைப்பிடம் கேள்வி கேட்கும் அனைத்து உரிமையும் மக்களுக்கு உண்டு. அந்த உரிமைகளை மதிக்கவேண்டிய கடப்பாடும் அந்த அமைப்புக்கு உண்டு. ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமைகளையோ, புறக்கணிப்புச் செய்யும் உரிமைகளையோ கனடாவின் சட்டங்கள் மறுக்கவில்லை. அவ்வாறு மறுப்பதும், அவற்றுக்குத் தடை ஏற்படுத்துவது உரிமை மீறலாகும். காவற்துறையின் கண்காணிப்பு மற்றும் பிரசன்னத்துடன் மக்களின் உணர்வு வெளிப்பாடுகள் எதிரொலித்ததை நேரிலும், காணொளிகள் ஊடாகவும் பலரும் கண்ணுற்றனர்.
ஆயினும், மக்களின் உணர்வு வெளிப்பாடுகளின் அபாயங்கள் குறித்து ஒரு ஊடகவியலாளனாக அதனைத் தவிர்ப்பதற்கான அவசர வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தேன். சமூக அமைப்புக்களாலும், குழுக்களாலும் விடுக்கப்பட்ட தெருவிழா புறக்கணிப்பு, மற்றும் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆகிய அறிவிப்புக்களை அவதானித்த பின்னர், அத்தெரிவுகளில் அபாயங்கள் அற்ற, அதேவேளை அசம்பாவிதங்களைத் தவிர்க்கக்கூடிய தெரிவு, புறக்கணிப்பு என்பதை கனேடியத் தமிழர் கூட்டு பரிந்துரை செய்திருந்தது. அத்தெரிவு, அபாயங்கள் அற்ற அதேவேளை, கனதியான செய்தியைப் பிரதிபலிக்கும் ஒரு தெரிவாக நானும் கருதினேன். ஆகவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, புறக்கணிப்பு என்ற சமுகத்தின் தெரிவை ஜனநாயகத் தெரிவாகப் பரிந்துரைத்திருந்தேன்.
எனினும், கருத்துக்களை, செய்திகளை மக்களிடம் நாம் தெரிவிக்கலாம். ஆனால், அவர்கள் தான் முடிவெடுக்கும் சக்தி. அந்த மகா சக்தியை முடக்கும் வல்லமை உலகில் எந்த அரசுகளிடமும் இல்லை. அதனால் தான், ஜனநாயகக் கோட்பாடு (Democratic Theory) மக்களின் உரிமைகளை மதிக்கும் உயரிய கோட்பாக உலகில் போற்றப்படுகிறது.
எனினும், கனடாவில் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதாக தன்னை அடையாளப்படுத்தும் CTC, அந்த மக்களின் கருத்துக்களை, உணர்வுகளை மதிக்காமல் பல்லாண்டுகளாகப் புறக்கணிப்புச் செய்துவந்ததன் கூட்டு எதிரொலியின் பிரதிபலிப்பே இது. இது இன்றோ ? நேற்றோ ? திடீரென்று ஏற்பட்ட உணர்வு வெளிப்பாடு அல்ல. நீண்டகாலமாக புகைந்துகொண்டிருந்த மக்கள் கோபத்தின் வெளிப்பாடு. எனினும், தம் மீதான விமர்சனங்கள் மற்றும் குற்றச் சாட்டுக்களை புறம்தள்ளி TAMIL FEST ஐ நடாத்த CTC எடுத்த மூடத்தனமான முயற்சி, மக்கள் தம்பக்கம் என்ற அவர்களின் விம்பத்தை முதன்முறையாக உடைத்துவிட்டது. பொழுதுபோக்கு மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்றகும் மக்கள் தொகையே, தமக்கான ஆதரவுத் தளம் என்று காண்பிக்க CTC கையாண்ட மூலோபாயம், முட்டுச் சந்தியில் முடங்கிப்போனது.
கடந்த பல வருடங்களாக, கருத்தியற் தளத்தில் மக்களையும், ஊடகங்களையும் சந்திக்க CTC மறுத்து வந்ததன் விளைவே இது. தமிழினப்படுகொலையை பகிரங்கவெளியில் ஒப்புக்கொள்வதற்கே 15 ஆண்டுகள் CTC குத் தேவைப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வாண்டு இடப்பெற்ற தமிழினப்படுகொலை நினைவு வணக்க நிகழ்வைக் கூட ஒரு பொது நிகழ்வாக நடத்தாமல், மூடிய அறைகளுக்குள் தமது குறிப்பிட்ட ஆதரவாளர்களுடன் மட்டும் நடத்தும் அளவுக்கு, CTC க்கும் மக்களுக்குமான இடைவெளி பேணப்பட்டது என்பது எவ்வளவு பெரிய இழுக்கு.
ஒரு ஊடகவியலாளனாக, CTC யின் நிர்வாகப் பிறழ்வுகள், இமாலயப்பிரகடன விவகாரங்கள், இலங்கை அரசுக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும், CTC யால் நடாத்தப்படும் TAMIL FEST சார்ந்தும் உள்ள சர்ச்சைகள், குறித்தும் என்னால் இயன்றளவு சமூகத்திற்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கான பங்களிப்பை நான் ஆற்றியுள்ளேன். எனது, கடந்த 8 மாதகால Facebook பதிவுகளை பின்னோக்கிப் பார்ப்பதன் ஊடாக இவற்றின் பின்னணி குறித்த அனைத்துத் தரவுகளையும் நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொள்ளலாம்.
மேலும், சக ஊடகவியலாளரான Lankathas Pathmanathan அவர்களின் பதிவுகள் மற்றும் அவரது 'தேசியம்' இணையப் பதிவுகள் ஊடாகவும், அனைத்துத் தரவுகள், தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். கனேடியத் தமிழ் வாசகர்களுக்காக பிரத்தியேகமாக கனடாவின் அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் தகவல்கள் பலவற்றையும் அவரது இணைய, மற்றும் சமூகவலைத் தளங்கள் வழங்கி வருகின்றன.
மேலும், சமூகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக, கடந்த வாரம் August 20 ஆம் திகதி பிரத்தியேக நேரலை ஊடாக, பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் ‘கருத்தாடல்’ நிகழ்ச்சி ஒன்றை நான் நெறிப்படுத்தியிருந்தேன். 2 மணிநேரம் 45 நிமிடம் இடம்பெற்ற அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது தரப்புக் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புக்களுக்கு CTC தரப்பில் இருந்து சாதகமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால், இவ்வாறான அசம்பாவிதங்கள் அனைத்தையும், தவிர்ப்பதற்கான அத்தனை சந்தர்ப்பங்களும், கனேடியத் தமிழர் பேரவையிடம் இருந்தது. எனினும், சமூகத்தின் கோரிக்கைகளை செவிமடுத்து, சமரசம் செய்வதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. சமூக உணர்வுகள் கொந்தளிப்பாக இருப்பதை உணர்ந்தும், அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க CTC கடைசிவரை தயாராக இருக்கவில்லை. ஒரு குருட்டு நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில், TAMIL FEST க்கு அனுசரணை வழங்கும் வணிக நிறுவனங்கள், நிகழ்ச்சிகளை வழங்கும் கலைஞர்கள் எனப் பலரும் நிகழ்ச்சி இடம்பெறும் நாளுக்கு முன்பாகவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர்.
கனடாவில் தமிழ் சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் ஒருவரைத் தவிர, வேறு எவரும் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதை எனது முன்னைய பதிவிலேயே தெளிவாகத் தெரிவித்திருந்தேன். அத்துடன், கனேடியப் பிரதமர், எதிக்கட்சித் தலைவர், மற்றும் மூன்றாம் நிலை எதிர்கட்சித் தலைவர் உட்பட வழமையாக திருவிழாவில் பிரசன்னமாகும் கனேடிய அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்பதையும் எனது முன்னைய பதிவில் சுட்டிக்காட்டி இருந்தேன். இவை அனைத்தும் நான் வானத்தை அண்ணாந்து பார்த்து அறிந்துகொண்டவை அல்ல. CTC எதிர்கொண்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு அவர்கள் ஆற்றிய எதிர்வினைகளை அவதானித்த அனைவருக்கும் தெரிந்த விடயம்.
எனவே, இந்த இக்கட்டான சூழலை, தமது ஆக்கபூர்வமான நகர்வுகள் ஊடாக எதிர்கொள்ளக்கூடிய பந்து CTC தரப்பிடமே இருந்தது. எனவே, போராட்டங்கள் மற்றும் வன்முறைகளை மொக்குத்தனமாக அனுமதித்து, அவற்றின் ஊடாக அனுதாபத்தைப் பெற்று, தமது தவறுகளை மூடிமறைக்க CTC தரப்பு முயன்றுள்ளது என்ற சமூகத்தின் சந்தேகம் இங்கே வலுப்பெறுகிறது.
இந்நிலையில், தெருவிழாவின் முதல்நாளில், தமது தவறுகளுக்கு மன்னிப்புகோருவதாக CTC யின் தற்போதைய தலைவர் குமார் (இ)ரட்ணம் அவர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டபோதிலும், அவை மக்களின் நன்மதிப்பை அறுவடை செய்யவில்லை. நமது சமூகம், CTC யின் அறிக்கைகளில் நம்பிக்கை இழந்து பலகாலம் ஆகிவிட்டது. நம்பிக்கையைக் கட்டியெழுப்ப செயல்களே அவசியம்.
அந்த மன்னிப்புக்களுக்குப் பின்னரும் கூட, மக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்குத் தீர்வுகாண CTC தரப்பு தயாரில்லை என்பதை அதன் நிர்வாகசபை இயக்குனர், சமூக வெளியில் இன்று வெளியிட்ட கருத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன. எதேச்சாதிகாரத் தன்மை கொண்டவராக, பிரச்சனைகளின் நாயகனாக மக்களாலும், அமைப்புக்களாலும் விமர்சிக்கப்படும், “…CTC யின் நிறைவேற்று இயக்குனர் டான்ரன் துரைராஜா பதவியில் இருந்து விலகமாட்டார். அவ்வாறு அவர் விலக்கப்படும் நிலைவந்தால் CTCயை மூடிவிடுவோம்….” என்று இயக்குனர்களில் ஒருவரான டில்ஷான் நவரட்ணராஜா இன்று சமூகவலைத்தள பதிவு ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
இலாப நோக்கற்ற மக்கள் அமைப்பு ஒன்றை ஒரு எதேச்சாதிகார நிறுவனம்போல் நடத்தும் உரிமையை யார் கொடுத்தது. அந்நிறுவனத்தை ஒரு தனிநபருக்காக நடத்துவோம் அல்லது மூடிவிடுவோம் என்று எச்சரிக்கும் அதிகாரத்தை யார் கொடுத்தது..?
மக்களே சிந்தியுங்கள். பொதுவெளியில் பேசும்போது, தரவுகளும் தகவல்களும் சரியா என்று பகுத்தறிந்து பேசுங்கள்.
நிறைவாக ஒன்று, போராட்டக் காரர்களைத் தூண்டிவிட்டதாக என் மீது சில தரப்புக்களால் முன்வைக்கப்படும் விசமத்தனமான பிரச்சாரங்களை முற்றாக நிராகரிப்பதோடு, அவ்வாறு வீண் பழி சுமத்தும் தரப்புக்களின் அணுகுமுறைகள் ஜனநாயக வரைமுறைகளின் பிரகாரம் அணுகப்படும் என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன்.
நன்றியுடன்,
உதயன் S. பிள்ளை
May be an image of text
 
 
 
 

ஒரு ஊடகவியலாளாரின்? பொறுப்பற்ற கருத்து.

ஊடகங்களால் மக்களினை தம் விருப்பத்திற்கேற்ப திருப்ப முடியும் இதனைதான் த்ற்போதய ஊடகத்துறை உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலிலும் செய்கிறார்கள், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க தயாராக இருந்த வண்ணம் இதனை செய்யவேண்டும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

இவ்வகையான செயற்பாடுகளை வரவேற்க அல்லது ஊக்கப்படுத்த   முடியாது என்பதை உரத்துச் சொல்லுங்கள். 

 

இரு பகுதியுமே இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லை இனியும் திருந்தி நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, பெருமாள் said:

இரு பகுதியுமே இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லை இனியும் திருந்தி நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது .

வன்முறையையும் அச்சுறுத்துதலையும் ஆதரிக்க முடியாது என்பதை உரத்துச் சொல்வதற்கு என்ன பயம் உங்களுக்கு. 

கொள்கை ரீதியாக உள்ள முரண்பாட்டை பேசித் தீர்க்க முடியாத முட்டாள்கள் நிறைந்ததா தமிழினம்? 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

வன்முறையையும் அச்சுறுத்துதலையும் ஆதரிக்க முடியாது என்பதை உரத்துச் சொல்வதற்கு என்ன பயம் உங்களுக்கு. 

கொள்கை ரீதியாக உள்ள முரண்பாட்டை பேசித் தீர்க்க முடியாத முட்டாள்கள் நிறைந்ததா தமிழினம்? 

வன்முறையும் அச்சுறுத்தல் கண்டிக்கபடவேண்டியது அதற்கு ஏன் பயப்பிட வேணும் முதலில் இனவாத புத்த பிக்குகளின் காலில் விழுந்தவர்கள் அதற்கான காரணத்தை விளக்க முடியுமா ?அல்லது உங்களால் விளக்க முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

கொள்கை ரீதியாக உள்ள முரண்பாட்டை பேசித் தீர்க்க முடியாத முட்டாள்கள் நிறைந்ததா தமிழினம்? 

ஆம் 

நீங்கள் தான் முதலாவது முட்டாள். 

யாழ் களத்தில் நீவீர் கொள்கை ரீதியில் முரண்பாடு அற்ற எத்தனை நண்பர்களை சேர்த்துள்ளீர்கள்??

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

யாழ் களத்தில் நீவீர்

வேதாளத்தை மறுபடி, மறுபடி இறக்கித் தோளில் சுமப்பது போன்ற விக்கிரமாதித்தன் கதைபோல்… யாழ்களத்தில் வரும் நாய்வால்களை மறுபடி, மறுபடி நிமிர்த்த முயல்வதும் ஒரு சுவாரசியமான கதைதான்.🤪

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

ஒரு ஊடகவியலாளாரின்? பொறுப்பற்ற கருத்து.

குழப்பம் செய்ததை வன்முறைகளை மொக்குத்தனமா நியாயபடுத்தும் தமிழ் ஊடகவியலாளர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வன்முறையும் அச்சுறுத்தல் கண்டிக்கபடவேண்டியது அதற்கு ஏன் பயப்பிட வேணும் முதலில் இனவாத புத்த பிக்குகளின் காலில் விழுந்தவர்கள் அதற்கான காரணத்தை விளக்க முடியுமா ?அல்லது உங்களால் விளக்க முடியுமா ?

 

அவன் பிக்குகளின்  காலில் விழுவதை நிறுத்தட்டும,  நான்  எனது ரெளடித் தனத்தையும் காவாலித்தனத்தையும் நிறுத்துகிறேன்  என்கிறீர்கள்,......

உங்கள் நேர்மை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது பெருமாள். 

🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Paanch said:

வேதாளத்தை மறுபடி, மறுபடி இறக்கித் தோளில் சுமப்பது போன்ற விக்கிரமாதித்தன் கதைபோல்… யாழ்களத்தில் வரும் நாய்வால்களை மறுபடி, மறுபடி நிமிர்த்த முயல்வதும் ஒரு சுவாரசியமான கதைதான்.🤪

என்ன செய்வது பாஞ்,.

விக்கிரமாதித்தன் தனது தோளில் சுமக்கும்  சிந்திக்கத் தெரியாத, நாகரீகம் அடையாத, அழுகும்  பிணங்களைப் போன்று துர்நாற்றம் வீசும் சில புலம்பெயர்ஸ் இருக்கும்போது சுவாரசியமான  விக்கிரமாதித்தன் கதைகள் ஆயிரம் ஆயிரம் எழுதலாம்தான். 

அந்த விக்கிரமாதித்தன் சுமக்கும் அழுகிய பிணங்களின் latest பிணம்தான் கனடாத் தமிழர்களின் திருவிழாவை குழப்பிய செயல்.

உந்த மட்டி, மோடன், முட்டாள் பீசுகள் இருக்கும்வரை யாழ் கள விக்கிரமாதித்தன் தனித்து நின்று பிணங்களைச் சுமக்க வேண்டியதுதான் அவன் விதி,..

😁

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

குழப்பம் செய்ததை வன்முறைகளை மொக்குத்தனமா நியாயபடுத்தும் தமிழ் ஊடகவியலாளர்

வேறு சாதிக்காரன்   தண்ணீர் மொள்ளுவான் என்கிற பயத்தில் பொதுக்கிணற்றில் ஒயிலை ஊற்றிவிட்டு அதைப் பெருமையாகப் பேசும்  புத்திசாலிகள் அல்லவா நாம்,..

🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

 

அவன் பிக்குகளின்  காலில் விழுவதை நிறுத்தட்டும,  நான்  எனது ரெளடித் தனத்தையும் காவாலித்தனத்தையும் நிறுத்துகிறேன்  என்கிறீர்கள்,......

உங்கள் நேர்மை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது பெருமாள். 

🤣

 

லூசுத்தனமான ஒரு கற்பனை எந்த இடத்தில் அவ்வாறு கூறினேன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை அந்த மார்க்கம் பகுதிக்கு கூட்டி சென்ற நண்பர் பிறவியிலே புலி எதிர்ப்பாளர் அவர் சொன்ன வாக்கியம் ஒரு குரூப் புலிகள் காலத்தில் உருவாக்கியது அவர்கள்தான் விழா வைக்கிறார்கள் அடுத்ததும் புலிகள் அனுதாபிகள் உம்மை போல் கட்டாயம் சண்டை வரும் இந்த இரண்டு கூட்டத்தால் கனடா வாழ் தமிழர்களுக்கு கெட்ட பெயர் வரபோவுது போன இடத்தில் அரசியல் கதைக்க வேணாம் ஒரு முறை அரசியல் கதைக்க போய் கழுத்தில் பேனையால் குத்தினவன் பேசாமல் மார்டின் பேக்கரி ரோலை சுவைத்து சாப்பிட்டு கொண்டே அமைதி ஆகி  விட்டேன் .

ஆக மொத்தம் இரண்டு குழுவும் எந்தவிதமான விட்டுகொடுப்புக்கும் வர முடியாத நிலையை சிங்களவன் உருவாக்கி அங்கும் வென்று விட்டான் .

சம்பவம் நடைபெறும் முன் கதைத்து பேசி இருக்கணும் இனி டொராண்டோ போலிஸ் இவ்வாறான விழாவுக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று குழப்பம் விளைவித்து உள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

இரு பகுதியுமே இதய சுத்தியுடன் நடந்து கொள்ளவில்லை இனியும் திருந்தி நடப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது .

இங்கே இரு பகுதி என்பது பிழையாகும்   

கனடா தமிழ் பேரவை கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களையும். உள்ளடக்கியது ஆகும் 

ஆர்ப்பாட்டம் செய்தவர்களும்  கனடா தமிழ் பேரவையை சேர்ந்தவர்கள் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, பெருமாள் said:

லூசுத்தனமான ஒரு கற்பனை எந்த இடத்தில் அவ்வாறு கூறினேன் ?

தமிழ் திருவிழாவில் இடம்பெற்ற வன்முறையும் அச்சுறுத்தலையும்  கண்டிக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா? 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kandiah57 said:

இங்கே இரு பகுதி என்பது பிழையாகும்   

கனடா தமிழ் பேரவை கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களையும். உள்ளடக்கியது ஆகும் 

ஆர்ப்பாட்டம் செய்தவர்களும்  கனடா தமிழ் பேரவையை சேர்ந்தவர்கள் தான் 

ஐயோ கந்தையர்,...🤦🏼‍♂️

உங்களுக்கு ஒரு விடயம் தெரியாவிட்டால் அதைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். 

நிகழ்வைக் குழப்பியவர்கள் CTC யினர் அல்ல. 

எங்கள் சொற்படி நடக்காவிட்டால் எக்லவற்றையும் குழப்புவோம் என்று பயமுறுத்தும் முட்டாள் வன்முறைக் கூட்டம்தான் நிகழ்வைக் குழப்பியது. 

பாடகர் சிறீநிவாஸ் நிகழ்வைக் குழப்பியவர்களிடம் "உங்களுக்காகத்தானே பாட வந்திருக்கிறேன்… என்று கூறியபோது ஒரு முட்டாள் ""நீ காசுக்காகத்தானே பாட வந்திருக்கிறாய். நீ எத்தனை இயக்கப்பாடல்களைப் பாடினாய்?"" என்று கூக்குரல் இட்டதாம். 

இந்த முட்டாள் பீசுகளை நம்பித்தான் போராட்டம் தொடர வேண்டுமா? 

😏

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

ஐயோ கந்தையர்,...🤦🏼‍♂️

உங்களுக்கு ஒரு விடயம் தெரியாவிட்டால் அதைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். 

நிகழ்வைக் குழப்பியவர்கள் CTC யினர் அல்ல. 

எங்கள் சொற்படி நடக்காவிட்டால் எக்லவற்றையும் குழப்புவோம் என்று பயமுறுத்தும் முட்டாள் வன்முறைக் கூட்டம்தான் நிகழ்வைக் குழப்பியது. 

பாடகர் சிறீநிவாஸ் நிகழ்வைக் குழப்பியவர்களிடம் "உங்களுக்காகத்தானே பாட வந்திருக்கிறேன்… என்று கூறியபோது ஒரு முட்டாள் ""நீ காசுக்காகத்தானே பாட வந்திருக்கிறாய். நீ எத்தனை இயக்கப்பாடல்களைப் பாடினாய்?"" என்று கூக்குரல் இட்டதாம். 

இந்த முட்டாள் பீசுகளை நம்பித்தான் போராட்டம் தொடர வேண்டுமா? 

😏

 

கனடா தமிழ் பேரவை என்றால் என்ன??? யாருடைய அமைப்பு??   பௌத்த பிக்குமாரின். அமைப்பா?? 

என்னைப் பொறுத்தவரை கனடா தமிழ் பேரவை என்பது  கனடாவில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும். சொந்தமானது 

அங்கே வாழும் தமிழர்கள்  நீங்கள் உட்பட   கனடா தமிழ் பேரவையை  

கேள்விகள் கேட்க முடியும் 

ஆதரவு வழங்க முடியும் 

எதிர்க்க முடியும்   

கலைக்க முடியும் 

புதிய நிர்வாகம் உருவாக்க முடியும்  

எந்தவொரு குறிப்பிட்ட தமிழனும்  அல்லது  தமிழ் குழுக்கள்  கனடா தமிழ் பேரவையை  உரிமை கோர முடியாது 

இன்னும் எழுதலாம்  உங்களுக்கு விளங்காது   தலையை சுற்றும்  

எனவே… இத்துடன் நிறுத்துகிறேன் 🤣🤣😂🙏

Link to comment
Share on other sites

50 minutes ago, Kandiah57 said:

கனடா தமிழ் பேரவை என்றால் என்ன??? யாருடைய அமைப்பு??   பௌத்த பிக்குமாரின். அமைப்பா?? 

என்னைப் பொறுத்தவரை கனடா தமிழ் பேரவை என்பது  கனடாவில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும். சொந்தமானது 

அங்கே வாழும் தமிழர்கள்  நீங்கள் உட்பட   கனடா தமிழ் பேரவையை  

கேள்விகள் கேட்க முடியும் 

ஆதரவு வழங்க முடியும் 

எதிர்க்க முடியும்   

கலைக்க முடியும் 

புதிய நிர்வாகம் உருவாக்க முடியும்  

எந்தவொரு குறிப்பிட்ட தமிழனும்  அல்லது  தமிழ் குழுக்கள்  கனடா தமிழ் பேரவையை  உரிமை கோர முடியாது 

இன்னும் எழுதலாம்  உங்களுக்கு விளங்காது   தலையை சுற்றும்  

எனவே… இத்துடன் நிறுத்துகிறேன் 🤣🤣😂🙏

அது ஒரு நிறுவனம் / அமைப்பு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட, மக்களின் வாக்குகளால் தெரிவானர்வர்கள் இல்லை, எனவே அந்த அமைப்பில் உள்ளவர்களால் மட்டுமே கேள்வி கேட்க முடியும். கனடா வாழ் தமிழர்களின் ஒட்டு மொத்த பிரதிநிதிகளாக இங்கு எவரும் இல்லை. 

உதாரணத்துக்கு கரி சங்கரியை, அவரிற்கு வாக்களித்த மக்கள் கேள்வி கேட்க முடியும். ஒரு அமைப்பில் உள்ளவர்களை விமர்சிக்கலாமே தவிர, கண்டிப்பாக அவர்கள் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடப்பாடு உடையவர்கள் அல்ல.

CTC இற்கும் இது பொருந்தும்

இது சீரணிக்க கடினமான, ஆனால் உண்மை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

கனடா தமிழ் பேரவை என்றால் என்ன??? யாருடைய அமைப்பு??   பௌத்த பிக்குமாரின். அமைப்பா?? 

என்னைப் பொறுத்தவரை கனடா தமிழ் பேரவை என்பது  கனடாவில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும். சொந்தமானது 

அங்கே வாழும் தமிழர்கள்  நீங்கள் உட்பட   கனடா தமிழ் பேரவையை  

கேள்விகள் கேட்க முடியும் 

ஆதரவு வழங்க முடியும் 

எதிர்க்க முடியும்   

கலைக்க முடியும் 

புதிய நிர்வாகம் உருவாக்க முடியும்  

எந்தவொரு குறிப்பிட்ட தமிழனும்  அல்லது  தமிழ் குழுக்கள்  கனடா தமிழ் பேரவையை  உரிமை கோர முடியாது 

இன்னும் எழுதலாம்  உங்களுக்கு விளங்காது   தலையை சுற்றும்  

எனவே… இத்துடன் நிறுத்துகிறேன் 🤣🤣😂🙏

கந்தையர், 

உங்களுக்கு ஒன்றுதான் என்னால் கூற முடியும். 

தயவுசெய்து உங்களுக்குப் புரியாத விடயங்களில் தயவுசெய்து மூக்கை நுழைக்காதீர்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். 

🙏

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   18 SEP, 2024 | 08:47 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கையாக உளள்ளது. எனவே முதலில் பாராளுமன்ற தேர்தலும் அடுத்தப்படியாக  மாகாண சபை தேர்தலும் நடைப்பெறும். இலங்கையின் தேர்தல் குறித்து இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. ஏனெனில் பங்களதேசத்தின் நிலைமைகளின் பின்னர் இலங்கையின் அரசியல் ஸ்தீர நிலைமை குறித்து டெல்லி அக்கறையுடன் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிப்பெறுவது உறுதியான விடயமாகும். எனவே பிளான் ' பி ' குறித்து பேச வேண்டிய தேவையில்லை.  சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் எதிர்காலத்தில் என்றோவொரு நாள் ஜனாதிபதியாவார்கள். ஆனால் இம்முறை சாத்தியமில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஊடகவியலாளர்களை சந்தித்து எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்தினார். இதன் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், ஜனாதிபதி முறைமை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்வது மற்றும் 13 ஆவது திருத்தம் போன்றவை குறித்து பேசி காலத்தை வீணடித்துள்ளோமே தவிர நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து யாரும் அவதானம் செலுத்த வில்லை. எனவே தான் எனது இலக்கை பொருளாதாரத்திற்குள் வைத்துள்ளேன். அதனை மையமாக கொண்டே கொள்கைகளை வகுத்துள்ளேன். குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த யாரும் அதனை செய்ய வில்லை. இந்த கதிரையில் அமர்ந்த யாரும் அதனை செய்ய மாட்டார்கள் என்று ஜே.ஆர். ஜயவர்தன அன்று எனக்கு கூறியமை இன்றும் நினைவில் உள்ளது. சர்வதேச நாணய நிதியம் நாட்டின் பொருளாதாரத்தை மையப்படுத்திய தேர்தலாகவே சனிக்கிழமை இடம்பெற கூடிய ஜனாதிபதி தேர்தல் அமைகின்றது. சிறந்த பொருளாதார கொள்கையுடன் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதன் அவசியம் குறித்து சிந்திக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பது எனது நிலைப்பாடாகும். ஆனால் ஏனைய வேட்பாளர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒன்றிணைந்து பயணிப்பதா ? இல்லையா ? என்பதை தீர்மானிக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட வரைபுக்குள் உட்பட்டதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவு இடைவெளியை எடுத்துக்கொண்டால் ஆயிரம் பில்லியனாகும். இதனை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் எமது மொத்த தேசிய வருமானத்திற்கு அமைவாக 5 வீதத்தை கடனாக பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியம் அனுமதியளிக்கிறது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வரவு - செலவு திட்டம் குறித்து பேச வில்லை. இருப்பினும் அவர்களது தேர்தல் வி ஞ்ஞாபணத்தை அடிப்படையாக கொண்டு ஜே.வி.பியின் வரவு - செலவு திட்டத்தை கணிப்பிட்டால் வரவு - செலுவு திட்ட இடைவெளி 4 பில்லியன் டொலர்களாகும். இத்தொகையினை மொத்த தேசிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், 11.2 வீதமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறும் வகையிலேயே இந்த எண்ணிக்கை உள்ளது. மீறி செயல்பட்டால் நாணய நிதியத்திலிருந்து வெளியேறும் நிலை உருவாகும். இதன் பின்னர் ஏற்பட கூடிய நாட்டின் பொருளாதார நிலைகள் டொலர் ஒன்றின் பெறுமதியை 500 ரூபாவுக்கு கொண்டு செல்லும். எனவே இது குறித்து விவாதத்திற்கு அழைத்தால் அவர்கள் யாரும் வருவதில்லை.   ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் அமையப்பெறும் புதிய ஆட்சி இதுவரையில் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் தெளிவாக கூறியுள்ளது. அனுரகுமார திசாநாயக்கவோ சஜித் பிரேமதாசவோ சர்வதேச நாணய நிதியத்துடன் தேர்தல் விஞ்ஞாபணத்தில் குறிப்பிட்டுள்ள விடங்கள் குறித்து பேச வில்லை என்பதே உண்மை. மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். பெறுமதி வரிசேர் வரியை இரத்து செய்வதாக அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார் என்றால், இன்றிலிருந்தே மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றை சேமித்து வைக்க வேண்டும். எனவே தற்போதைய பொருளாதார திட்டங்களில் இருந்து விலக இயலாது. இன்னும் இரு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளனர். ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை அவர்களுக்கு கூற வேண்டும். ஊழல் ஒழிப்பு திட்டம் ஊழலை ஒழிக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊழல் மோசடி குறித்து 400 கோப்புகள் உள்ளன. அவற்றை விசாரிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதே போன்று மோடிகள் ஊடாக சம்பாதித்த சொத்துக்களை அரச உடைமையாக்குவதற்கு சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் ஊழல் மற்றும் மோசடி ஒழிப்புக்கான 5 ஆண்டுகால திட்டத்தை தயாரித்து வருகின்றோம். இவற்றை புதிய சட்டங்கள் ஊடாகவே முன்னெடுக்க வேண்டும். எனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். அப்போது தான் ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், புதிய சட்டங்களை நடைமுறைபடுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் தேவைப்படுகின்றது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானித்துள்ளோம். ஆனால் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் சட்டங்கள் குறித்து பேசாது திருடர்களை பிடிப்பதாக கூறுகின்றனர். வரவு - செலவு திட்டத்திற்கு தேவையான நிதியை திருடர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் பெற்றுக்கொள்வதாக இருவருமே கூறுகின்றனர். அது சாத்தியமான விடயமல்ல. ஏனெனில்  சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழங்கு தொடர்ந்து அவர்களிடம் மோடி செய்து பெற்றக்கொண்ட சொத்துக்களை பெற்றுக்கொள்ள குறைந்தது நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் சுமார் 10 வருடம் ஆகலாம். அது வரைக்கும் வரவு - செலவு திட்டம் இல்லாது எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும். மக்களை ஏமாற்ற கற்பணை கதைகளை கூறலாம். நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை அவர்கள் பேசுவதில்லை. புதிய சட்டங்களை நிறைவேற்றி திருடர்களை பிடிக்க யதார்த்தமான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்கள் சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுவதாக அனுரகுமார திசாநாயக்க கூறுகின்றார். அவ்வாறு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்க முடியாது. உதாரணமாக இந்தியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து வெளியில் வந்தால், அந்த நாடு இலங்கையுடன் சினம் கொள்ளும். நாடு  அநாவசியமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதில் சிறந்த விடயம் யாதெனில் அனுரவோ சஜித்தோ அதிகாரத்திற்கு வர போவதில்லை. குறைப்பாடுகள் இருந்தால் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் ஊடாக தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்களில் தனித்து தீர்மானங்களை எடுக்க கூடாது.  கோட்டாபய ராஜபக்ஷ தன்னிச்சையாக ஒப்பந்தங்களை இரத்து செய்து நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பை நினைவுப்படுத்த விரும்புகின்றேன். ஜப்பான் இலகு ரயில் திட்டத்திற்கான நிதி இலங்கைக்கு கிடைக்காமல் போனது. சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான திட்டங்களை நிறுத்தினால் பாதிக்கப்பட போவது நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  நட்பு நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் இலங்கைக்கு இல்லை. இந்தியாவுடனும் சீனாவுடனும் புதிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட உத்தேசித்துள்ளோம். மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கை கடற்பரப்பிற்குள் இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் இடையில் எவ்விதமான மோதலும் ஏற்பட்டதில்லை. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில அதிகார போட்டி நிலை பிராந்தியத்தில் உள்ளது. எவ்வாறாயினும் அந்த நாடுகளுடன் நீண்ட காலமாக இராஜதந்திர நிலையில் தொடர்புகளை பேணி வருகின்றோம். இலங்கையின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்  சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படுகிறோம். https://www.virakesari.lk/article/193977
    • குழப்பி அடிக்க தானே தமிழ் பொது வேட்பாளர் இறங்கி உள்ளார்.அவருக்கு போடுகின்ற  ஒவ்வொரு  வாக்குகளும் வீணாணவை
    • Published By: DIGITAL DESK 7   18 SEP, 2024 | 08:46 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளமையானது, வடக்கு கிழக்கு மக்களின் என்மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தை ஏற்காத நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் விடுக்க வில்லை என்பதை நினைவில் கொள்ளுமாறு சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகவியலாளர்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17) சந்தித்த ஜனாதிபதி ரணில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இன மற்றும் மதவாத பிரச்சினைகள் இல்லாத சூழல் ஒன்றில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுகின்றது. 13 ஆவது அரசியலமைப்பில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. மாறாக அதன் அமுலாக்கம் குறித்தே சில சிக்கல்கள் உள்ளன. எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். எனவே எதிர்வரும் நாட்களில் 13 ஆவது அரசியலமைப்பு அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரையும் ஆதரிப்பதாக இதுவரையில் அறிவிக்கவில்லை. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தமிழரசுக் கட்சி. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக சுமந்திரன் மாத்திரம் கூறியுள்ளார். ஆனால் ஏனையவர்கள் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார பிரச்சினையை கருத்தில் கொண்டே தமிழரசுக் கட்சியின் பெரும்பாலானவர்கள் நடுநிலையாக உள்ளனர். எவ்வாறாயினும் சுமந்திரனின் தீர்மானம் எந்த வகையிலும் வடக்கு கிழக்கு மக்களின் என் மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது. அந்த மக்கள் ஏற்கனவே எனக்கு வாக்களிக்க தீர்மானித்து விட்டனர் என்றார். https://www.virakesari.lk/article/193976
    • படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்? இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இவர்கள் தவிர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.   2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை (எஸ்எல்பிபி) சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஸ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். ஆனால், 2022ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் (ஜனதா அரகலய) இறங்கினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியையடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகிக் கொள்ள, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 9வது ஜனாதிபதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி பதவியேற்றார்.   இலங்கையின் அரசமைப்புச் சட்டப் பிரிவு நாற்பதின் படி, இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பதவியேற்பவர் அந்தப் பதவிக் காலம் முடியும் வரைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த நிலையில்தான் புதிய ஜனாபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடக்கவிருக்கிறது. இலங்கையைப் பொருத்தவரை பலவிதங்களில் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. கடந்த சில தசாப்தங்களோடு ஒப்பிட்டால், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி ராஜபக்ஸ சகோதரர்கள் இந்தத் தேர்தலில் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர். அதேபோல, இலங்கையின் பாரம்பரிய கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பி) கிட்டத்தட்ட சிதைந்துபோய்விட்டன. ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி (என்பிபி) ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் 39 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஏ. முகமது இலியாஸ் என்பவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி மரணமடைந்தார். ஆகவே தற்போது 38 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பிரதான போட்டியென்பது எதிர்க் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸவுக்கும் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான அனுரகுமார திஸநயகேவுக்கும் தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 20 ஆண்டுகளாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஸ சகோதரர்கள் இந்தத் தேர்தலில் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவர்கள் யார்? தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜபக்ஸவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து ராஜபக்ஷ உருவாக்கிய கட்சி) அவருக்கு நாடாளுமன்றத்தில் பக்கபலமாக நின்றது. இப்போது ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தங்கள் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவைக் களத்தில் இறக்கியிருக்கிறது. ரணிலைப் பொருத்தவரை இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தாலும், சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார். அவருக்கு பொதுஜன பெரமுனவின் சிலரும் ஆதரவளித்துள்ளனர். டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவையும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைப் பொறுத்தவரை, சமாகி ஜன பலவெகய (Samagi Jana Balawegaya) என்ற ஐக்கிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பில் போட்டியிடுகிறார். இஸ்லாமியக் கட்சிகளான ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகியவை சஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவரான அனுரகுமார திஸநாயக்கே தேசிய மக்கள் சக்தி என்ற முன்னணியின் சார்பில் களத்தில் நிற்கிறார். பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த முன்னணியில் மார்க்ஸிய - லெனினிய சார்பு கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன முக்கியமான கட்சியாக இருக்கிறது. 1970களிலும் 80களிலும் அரசுக்கு எதிராக உருவான சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சிகளின் பின்னணியில் இந்தக் கட்சியே இருந்தது. தற்போதைய நாடாளுமன்றத்தில் இந்தக் கட்சிக்கு மூன்று இடங்களே இருந்தாலும், இந்த தேர்தலில் ஒரு வலுவான வேட்பாளராக உருவெடுத்திருக்கிறார் அனுரகுமார திஸநாயக்கே. மகிந்த ராஜபக்ஸவின் மகனும் ஹம்பந்தோட்டா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். தங்கள் கட்சியில் பலர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கப் போவதாகச் சொன்னதும், தங்களுடைய வாக்கு வங்கியை மொத்தமாக இழந்துவிடாமல் இருக்க கடைசித் தருணத்தில் களமிறங்கியிருக்கிறார் அவர். இவர்கள் தவிர, தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில் சில தமிழ் அமைப்புகளும் சிவில் குழுக்களும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழர்களுக்கான பொது வேட்பாளராக களத்தில் இறக்கியுள்ளனர். இவருக்கு டெலோ, ஈபிஆர்எல்எப் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி, அதிகாரப் பகிர்வு போன்ற எதிலுமே தங்களுக்கு எவ்வித பங்களிப்பையும் தராத தென்பகுதி அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவை களம் இறக்கியுள்ளது எதைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள்? ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை, 'We can Srilanka' என்ற கோஷத்துடன், ஸ்திரத்தன்மையை முன்னிறுத்தி வாக்குகளை கோரி வருகிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்த நாட்டை, கடந்த இரு ஆண்டுகளில் மீட்சியை நோக்கி வழிநடத்தியதாகச் சொல்லி, தனக்கே மீண்டும் வாக்களிக்கும்படி கோருகிறார். எதிர்க்கட்சித் தலைவரான சஜித்தைப் பொருத்தவரை, எல்லோருக்குமான வளர்ச்சியைத் தருவேன் என்றும் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றும் கூறி வாக்குகளை சேகரிக்கிறார். தான் வெற்றிபெற்றால், தன்னுடைய அரசு எல்லோருக்குமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார். அனுரகுமார திஸாநாயக்கவைப் பொறுத்தவரை, ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்கப் போவதாகக் சொல்கிறார். இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்தவர்கள்தான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணம் எனக் குறிப்பிடும் அனுரகுமார, மக்களை வைத்து தேச விடுதலை இயக்கத்தை உருவாக்கப்போவதாகவும் சொல்லியிருக்கிறார். இலங்கை தேர்தல் எப்படி நடக்கும்? இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதாவது, வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் 50 சதவிகித்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும். ஒரு கோடியே 70 லட்சம் பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றனர். இதில் சிங்களம் பேசும் மக்களின் வாக்குகள் 75 சதவிகிதம். வடக்கில் உள்ள தமிழர்கள், கிழக்கில் உள்ள இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய சிறுபான்மையினரின் வாக்குகள் மீதமுள்ள 25 சதவீதம். "இந்த முறை ரணில் விக்ரமசிங்க - சஜித் பிரேமதாஸ - அனுரகுமார திஸநாயகே என மும்முனைப் போட்டி நிலவுவதால் ஒருவருக்கும் 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்றுதான் கருதுகிறேன். ஆகவே, விருப்ப வாக்குகளை எண்ண வேண்டியிருக்கும். இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான ஜனாதிபதி தேர்தலாக இது இருக்கும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான வீரகத்தி தனபாலசிங்கம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான ஜனாதிபதி தேர்தலாக இது இருக்கும் தாக்கம் செலுத்தும் பிரச்னைகள் என்னென்ன? 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்னை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு விலைவாசி வெகுவாக அதிகரித்திருப்பதால், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கின்றது. வாழ்க்கைத் தரம் மோசமடைந்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. "இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பொருளாதார நெருக்கடிதான் வாக்குகளை முடிவு செய்யக்கூடிய முக்கியப் பிரச்னையாக இருக்கும். புதிதாக வரும் ஜனாதிபதி இலங்கைக்கும் சர்வதேச நிதியத்திற்கும் இடையில் உள்ள ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. தமிழர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மக்களைப் பொருத்தவரை எதிர்காலத்தில் அவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுமா, அதிகாரப்பகிர்வு கிடைக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றன. மேலும், யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் வடகிழக்கில் ராணுவம் மற்றும் தொல்பொருள்துறையின் காணி அபகரிப்பு காணப்படுகிறது. ஆனால், புதிய அரசு இவ்வாறான விஷயங்களைத் தீர்த்துவைக்குமா என்ற கேள்வியும் இருக்கவே செய்கிறது." என்கிறார், அரசியல் பொருளாதார ஆய்வாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்சனை இதே கருத்தையே எதிரொலிக்கிறார் தனபாலசிங்கம். "எல்லோருமே சர்வதேச நிதியம் வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை சீர்செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். அந்த சீர்திருத்தங்களை தான் மட்டுமே செய்ய முடியும் என்கிறார் ரணில். அனுரவும் சஜித்தும் சில மாற்றங்களுடன் அவற்றைச் செய்வோம் என்கிறார்கள். ஆனால், எல்லோருமே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊதியத்தைக் கூட்டுவோம் என்கிறார்கள். பாட சாலைகளில் மாணவர்களை அடிப்பதை நிறுத்துவோம் என்கிறார் ரணில். வறுமை ஒழிப்புக்கு பணம் கொடுப்போம் என்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமே இல்லாத வாக்குறுதிகள்" என்கிறார் அவர். இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவினாலும், அனுரகுமார திஸநாயகேவுக்கும் சஜித்திற்கும் இடையில்தான் உண்மையான போட்டி நிலவுகிறது என்கிறார் அகிலன் கதிர்காமர். "ரணில் ஏற்கனவே மக்கள் ஆதரவை இழந்துவிட்டார். மக்களிடம் ரணிலுக்கு எதிரான மனப்போக்குதான் இருக்கிறது. ஆகவே, அவருடைய ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பகுதி வாக்குகள் இந்த முறை சஜித்திற்குத்தான் செல்லும். மற்றொரு பக்கம், ராஜபக்ஷேக்களின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பகுதி வாக்குகள் அனுரகுமார திஸநாயக்கேவுக்கு செல்லும். இந்தத் தேர்தலில் அனுரகுமார திஸநாயக்கேவை நோக்கிய அலை ஒன்று காணப்படுகிறது. இளைஞர்கள், கிராமப்புறத்தினர் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவு தென்படுகிறது" என்கிறார் அகிலன். ரணிலுக்கு ஆதரவு கிடைக்காமல் போக காரணம் என்ன? ஆனால், இந்தக் கருத்தில் மாறுபடுகிறார் தனபாலசிங்கம். கடந்த தேர்தலில் 3 சதவீத வாக்குகளையே பெற்ற அனுரகுமார, எப்படி 50 சதவீத வாக்குகளை நெருங்க முடியும் என்கிறார் அவர். "மக்கள் போராட்டத்திற்குப் பிறகு அவருக்கான செல்வாக்கு அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால், அது வெற்றியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார் தனபாலசிங்கம். இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. மிக நெருக்கடியான தருணத்தில் ஜனாதிபதி பொறுப்பை ஏற்று நடத்திய ரணிலுக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கருதுவது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ரணில் சிக்கலான நேரத்தில் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்றாலும் அவருடைய பொருளாதார கொள்கைகள் எல்லாம் கொழும்பு நகரை மையமாகக் கொண்ட மேட்டுக் குடியினருக்குத்தான் சாதகமாக இருந்தன. ரணில் மின்சாரக் கட்டணத்தைக் கடுமையாக அதிகரித்தார். இதனால் 65 லட்சம் குடும்பங்களில் 13 லட்சம் குடும்பங்களால் மின் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. அவர்களது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தவிர, வறுமையும் அதிகரித்திருக்கிறது. எனவே பொருளாதார சிக்கலை அவர் சிறப்பாக கையாண்டார் எனக் கூற முடியாது. ஆதரவு குறைந்ததற்குக் காரணம் அதுதான்" என்கிறார் அகிலன். ராஜபக்ஷேக்களைப் பாதுகாக்கிறார், மேட்டுக்குடிகளுக்கான ஆட்சி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமடைந்திருப்பதும் ரணிலுக்கு எதிராக இருக்கிறது என்கிறார் தனபாலசிங்கம். "ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை, ராஜபக்ஸ ஆட்களுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறார். பொருளாதார நெருக்கடிக்கு அவர்களை பொறுப்புக்கூற வைக்காமல் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வலுவாக இருக்கிறது. அதேபோல, அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது. ஆகவே, தன்னுடைய கட்சியை நம்பி தேர்தலில் நிற்பது சரியல்ல என்பதை அவர் புரிந்துகொண்டிருக்கிறார். தற்போது பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தாலும் தட்டுப்பாடு ஏதும் இல்லை. ஆகவே, மேல் நடுத்தர வர்க்கம் திருப்தியடைந்திருக்கிறது. ஆனால், விலை உயர்வினால் கீழ்தட்டு மக்களுக்கு பிரச்னைதான். ஆகவே அவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்" என்கிறார் தனபாலசிங்கம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஜபக்ஸக்களைப் பாதுகாக்கிறார், மேட்டுக்குடிகளுக்கான ஆட்சி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் ரணிலுக்கு எதிராக இருக்கிறது சிறுபான்மையினரின் வாக்குகள் யாருக்கு? சிறுபான்மையினரைப் பொருத்தவரை, எல்லாப் பிரிவினருமே பிரிந்துகிடப்பதால் அவர்களது வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என கணிப்பது கடினம். இந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழர் அரசியல் சிதறும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார் அகிலன் கதிர்காமர். "இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழர் அரசியல் குழப்பமான நிலையில் இருக்கிறது. சில தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டில் இருக்கும் சக்திகளின் நிதியுதவியுடன் ஒரு பொது தமிழ் வேட்பாளரை முன்வைத்துள்ளனர். தெற்குடன் இணைந்து போகாமல் பிளவுபடுத்தும் அரசியலை முன்வைப்பதுதான் அதன் நோக்கம். என்னைப் பொருத்தவரை, ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசும் சக்தியாக தமிழர் அரசியல் உருப்பெற வேண்டும். ஆனால், தற்போதுள்ள தமிழ் அரசியல் சக்திகள் தமிழர்களுக்கு என ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்துவது அல்லது தேர்தலைப் புறக்கணிப்பது ஆகிய இரு வாய்ப்புகளையே முன்வைக்கின்றனர். வடக்கில் தமிழ் தேசியவாதத்தையும் தெற்கில் சிங்கள பௌத்தவாதத்தையும் இவர்கள் உருவாக்க நினைக்கிறார்கள்." என்கிறார் அவர். மேலும் தொடர்ந்த அவர், "சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த தேசியம் பெரிய அளவில் தாக்கம் செலுத்தப் போவதில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது வடக்கில் இவ்வாறான தேசியவாதத்தை முன்னெடுப்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தைத் தூண்டிவிடும் செயலாகத்தான் இருக்கும். தமிழர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் சஜித்திற்கும் அனுரகுமார திஸநாயகேவுக்கும்தான் வாக்களிப்பார்கள் என்று கருதுகிறேன். யாழ்ப்பாணத்தில் இருக்கும் சில நடுத்தர வர்க்கத்தினர் மட்டும் பொது வேட்பாளர் குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், பொதுவாகவே இலங்கை தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்பம் இருக்கிறது. இதனால், தேர்தலுக்குப் பிறகு தமிழர் அரசியல் சிதறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இஸ்லாமியர்களைப் பொருத்தவரை பல முஸ்லிம் கட்சிகளும் மலையக கட்சிகளும் சஜித்திற்கு ஆதரவாக இருக்கின்றன." என்கிறார் அகிலன் கதிர்காமர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த தேசியம் பெரிய அளவில் தாக்கம் செலுத்தப்போவதில்லை தமிழர் அரசியல் இப்போதே சிதறிப் போய்தான் கிடக்கிறது என்கிறார் தனபாலசிங்கம். "கடந்த மூன்று தேர்தல்களாக தமிழர்கள் பொதுவாக ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்தார்கள். இந்த முறை தமிழ் பொது வேட்பாளர் என ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தாலும், கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற 3,30,000 வாக்குகளை இவர் பெற்றாலே அதிகம். தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்கிறது. அதே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான மாவை சேனாதிராஜாவும் ஸ்ரீதரனும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது? ஆகவே, தமிழரசுக் கட்சி சொல்வதை மக்கள் கேட்க மாட்டார்கள். தங்கள் விருப்பத்தின்படியே வாக்களிப்பார்கள்" என்கிறார் அவர். ஆனால், இந்தத் தேர்தலில் இனவாதப் பிரசாரம் சுத்தமாக இல்லை என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது என்கிறார் அவர். "மூன்று பிரதான வேட்பாளர்கள் இருப்பதால், தென்னிலங்கையின் வாக்குகள் மூன்றாகப் பிரியும். ஆகவே வெற்றிபெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் மிக முக்கியம். ஆகவே, எந்த பிரதான வேட்பாளரும் இனவாதப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. நாமல் ராஜபக்ஸ மட்டும் வடக்கிற்கு அதிகாரத்தை பகிர மாட்டோம் எனப் பேசுகிறார். மற்றவர்கள் அப்படி எதுவும் பேசுவதில்லை" என்கிறார் தனபாலசிங்கம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு புதிதாக வரும் ஜனாதிபதிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சில தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி சபை தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. அதேபோல, மாகாண சபை தேர்தல்களும் காலவரையின்றி ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியாக வேண்டும். வேறு சில சவால்களும் இருக்கின்றன. "பொருளாதார நெருக்கடியின்போது வாங்கிய கடனை இன்னும் திருப்பிக் கட்டத் துவங்கவில்லை. 2028க்குப் பிறகு கடனைக் கட்ட ஆரம்பிக்கும்போது நெருக்கடி ஆரம்பிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதையெல்லாம் புதிய ஜனாதிபதி சமாளித்தாக வேண்டும்" என்கிறார் தனபாலசிங்கம். இந்தத் தேர்தலில் ராஜபக்ஷேக்களின் சார்பில் நாமல் ராஜபக்ஸ போட்டியிடுகிறார். தேர்தலுக்குப் பிறகு, ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்விக்கு, "ராஜபக்ஸக்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு. ஆனால், புதிதாக வரும் ஆட்சி பொருளாதார நிலையை சரியாகக் கையாளாவிட்டால், அவர்கள் மீண்டும் செல்வாக்குப் பெறலாம். பிலிப்பைன்ஸில் இமெல்டா மார்கோஸின் மகன் மீண்டும் அதிபராகியிருப்பதைப் போல இங்கேயும் நடக்கலாம். அவர்களைப் பொருத்தவரை அரசியலுக்குள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே கருதுகிறார்கள்" என்கிறார் அகிலன் கதிர்காமர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2546j35zqo
    • இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; தேசிய அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைப் பகுத்தாராய்ந்து வாக்களியுங்கள் - 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தல் Published By: VISHNU  18 SEP, 2024 | 07:21 AM   நாம் எமது ஜனாதிபதித்தெரிவினை மேற்கொள்ளும்போது தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார சூழ்நிலை குறித்துப் பகுத்து ஆராய்வது அவசியமாகும். தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலாநிதி ஏ.அந்தோனிராஜன், கலாநிதி எஸ்.அறிவழகன், பேராசிரியர் பி.ஐங்கரன், கலாநிதி எஸ்.ஜீவசுதன், கலாநிதி ஏ.கதிர்காமர், பேராசிரியர் ஆர்.கபிலன், கலாநிதி என்.ராமரூபன், கலாநிதி எம்.சர்வானந்தன், என்.சிவகரன், பேராசிரியர் ஆர்.ஸ்ரீகரன், கலாநிதி ஆர்.தர்ஷன், கலாநிதி எம்.திருவரங்கன், கலாநிதி என்.வரதன், பேராசிரியர் கே.விக்னரூபன் மற்றும் எஸ்.விமல் ஆகிய 15 புத்திஜீவிகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக உருவான மக்கள் எழுச்சிப்போராட்டங்களின் பின்னர் நாடு சந்திக்கும் முதலாவது மிகமுக்கிய தேர்தல் இதுவாகும்.  கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இந்நாட்டில் வாழ்க்கைச்செலவு கடந்த இரு வருடங்களில் பன்மடங்காக உயர்வடைந்திருக்கிறது. வறுமையும், வேலையின்மையும் மக்களை வாட்டுகிறது. உரம் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான மானியக்குறைப்பின் காரணமாக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வட்டிவீத அதிகரிப்பு சிறு முயற்சியாளர்களின் வருமானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.  கட்டடத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியினால் நகர்ப்புற முறைசாரா மற்றும் கிராமப்புற மக்களின் தொழில்வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து, எரிபொருள், மின்கட்டண அதிகரிப்பினால் சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகளை நாம் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான வாழும் நாட்டின் வட, கிழக்குப் பகுதிகளிலும் அவதானிக்கிறோம். போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆயுதக்கலாசாரம், வன்முறைகள், இந்திய இழுவைப்படகுப் பிரச்சினை போன்றனவும் வடக்கை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. இவ்வாறு நிலைமை மோசமடைந்து செல்கையில் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஊழலில் ஈடுபட்டு நாட்டின் வளங்களையும், செல்வத்தையும் கொள்ளையிட்டவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றால் மக்கள் வெகுவாக அதிருப்தியுற்றிருக்கிறார்கள். இத்தகு பின்னணியில் 2022 இல் மக்கள் எழுச்சியின் அடிப்படையாகக் காணப்பட்ட 'கட்டமைப்பு மாற்றம்' என்ற கோஷம் தற்போது குறிப்பாக தென்னிலங்கையில் ஓங்கி ஒலிப்பதனைக் காணமுடிகிறது. போராட்டத்தின் மூலம் ஏற்படாத மாற்றங்களைத் தேர்தலின் மூலமாகவேனும் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தெற்கு மக்கள் ஆர்வமாக இருப்பதை உணரமுடிகிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் மிகக்கவனமாகவும், புத்திசாதுரியமாகவும் கையாளவேண்டியது அவசியமாகும். தென்னிலங்கையில் பல தசாப்தங்களின் பின்னர் இனவாதத்தினை முன்னிறுத்தாத தேர்தல் பிரசாரத்தினை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்துவருவதாக அறிகிறோம். மக்களின் நலனை முன்னிறுத்தும் பொருளாதார ரீதியான மாற்றங்கள், ஆட்சி முறைமையில் மாற்றம், ஊழல் ஒழிப்பு போன்ற கோஷங்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் பின்னால் தென்னிலங்கை மக்கள் பெருமளவில் திரள்வதையும் நாம் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பார்க்கிறோம்.  எனவே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் மாற்றத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் மக்களுடன் இம்முறைத்தேர்தலில் பயணிப்பது குறித்து ஆராயவேண்டும். அதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளியவர்களைத் தோற்கடிப்பதும் அவசியம்.  இனப்பிரச்சினைக்கான தீர்வு, மதச்சார்பற்ற அரசினை உருவாக்குதல், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் பிரதான வேட்பாளர்கள் முற்போக்கான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாமை குறித்து நாம் சுட்டிக்காட்டுகின்றோம். அதேவேளை பொருளாதார நெருக்கடியும், ஊழலினால் ஏற்படும் பொருளாதார, அரசியல் சீர்கேடுகளும் சிறுபான்மை சமூகங்களையும் மோசமாகப் பாதித்துள்ளன என்பதை மனதிலிருத்தி இம்முறைத் தேர்தலில் நாம் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது அவசியம். சர்வதேசத்தினால் தான் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை குறித்து நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் நாம் எமது தேர்தல் தெரிவுகளை மேற்கொள்வது அரசியல் ரீதியாக உள்நாட்டில் எம்மை மேலும் பலவீனப்படுத்தக்கூடும். இவ்வாறான காரணங்களால் தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். பொருளாதார ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எமது சமூகங்களும், ஊழல் மற்றும் ஏனைய சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள எமது பொது நிறுவனங்களும் முன்னேறுவதற்கு இந்தத் தேர்தல் ஏதாவதொரு வழியில் சந்தர்ப்பங்களைத் திறக்குமா என நாம் சிந்திக்கவேண்டியது அவசியம். தென்னிலங்கையில் இனவாதம் சற்று அடங்கியிருக்கும் இவ்வேளையிலே, ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனநாயகத்தன்மை மிக்க, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இந்தத் தேர்தலை நோக்குவது பொருத்தமானதாக இருக்கும் என நாம் கருதுகின்றோம்.  அதன்படி தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, முற்போக்கானதும், ஊழலுக்கு எதிரானதும், பொருளாதார மீட்சியில் அக்கறை கொண்டதும், முற்போக்கான அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கான கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியதும், நம்பகத்தன்மை வாய்ந்ததும், இனங்களை ஒற்றுமைப்படுத்தக்கூடியதுமான ஒரு வேட்பாளருக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/193969
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.