Jump to content

"சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கன்ட கந்தரை சிட்னி முருகனின்ட வசந்த மாளிகையில்

சந்திக்க முடிஞ்சுது.மனுசனுக்கு நல்லா வயசு போய்விட்டது பஞ்சு மெத்தை தலைமுடியுடன் முதியோருக்கு ஒதுக்கப்பட்ட கதிரையில் அமர்ந்திருந்தார்.

அருகில் சென்று

" எப்படி சுகம் அண்ணே ,என்னை தெரியுதோ"

என்னை நன்றாக சில நிமிடங்கள் உற்றுப்பார்த்தவர்

"அட நீயே உலக தமிழரின் கருத்துக்களத்தில் கிறுக்கி கொண்டிருந்த கிறுக்கன் தானே உன்ட புனை பெயர் புத்....தானே"

"கி.. கி.. .ஒம் அண்ணே"

"நல்லா மெலிந்து போனா ஏதாவது வருத்தம் கிருத்தமே "

"சீ சீ  டயபட்டிக்கு மருந்து எடுக்கிறன் அது தானோ தெரியவில்லை"

 "நீ இங்கிலிஸ் மருந்தே எடுக்கிறாய் "

"ஒம் "

"அடே விசரா! நானும் அதை தான் எடுத்துக் கொண்டு வந்தனான் இப்ப இரண்டு வருசமா சாப்பாட்டில கவனமாக இருக்கிறன், நீ காய்கறிகளை,பழங்களை சாப்பிடு எல்லாம் பறந்து விடும்"

"அப்ப நீங்கள் சோறு  சாப்பிடுவதில்லையே "

"ஏன் இல்லை! சனி ஞாயிறுகளில் நல்லா சாப்பிட்டு விட்டு இரண்டு குளிசையை போட்டுவிட்டு படுத்திடுவேன்"

 

"என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல"

"வயசு போகவில்லை , உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்"

"அட கடவுளே பிறகு "

"பிறகு  மகளும், பேரப்பிள்ளைகளும் முதலுதவி  செய்து கொண்டு அம்புலண்சுக்கு கொல்பண்ணி,அவன்களும் வர நானும் முழிச்சிட்டேன் ,அன்றைக்கு பூசாமல் விட்ட 'டையை'இன்னும் தொடவில்லை"

"வழமையா பாவிக்கிற பிரான்ட் தானே பாவிச்சனீங்கள்"

"இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை"

"சன் இன் லோவும் 'டை' பூசுறவறே"

"ஒம் இரண்டு பேரும் ஒரே பிராண்ட் தான் பாவிச்சனாங்கள் "

"புது பிராண்டுக்கு 'ஹினி பிக்' நீங்கள் போல ,இப்ப சன் இன் லோ பழைய பிரான்ட் பாவிக்கிறாரோ புது பிராண்டோ"

"புதுசெல்லாம் இப்ப குப்பைக்குள்ள போய்விட்டது,அவர் பழைய பிராண்ட் தான் பாவிக்கிறார்"

"அண்ணே உது 'சண் இன் லோ' வின் திட்டமிட்ட பிளான் போல இருக்கு ஹி ஹி"

அவரும் சிரித்தபடி எழுந்தார் ,

"இருக்குமடா இருக்கும் ஹி ஹீ...சில அண்ரிமார் நக்கலடிக்கிறவையல் மாமனையும் மருமகனையும் பார்த்தா அண்ணன் தம்பி மாதிரி இருக்கு எண்டு,ஹி ஹி"

"உங்களுக்கு இந்த வயசிலயும் அண்ரிமாரின் நினைப்பு"

"  சும்மா கதைக்கிறதுக்கு கதைக்கிறன் ,எதோ அண்ரிமாரின் பின்னால போன மாதிரி கோவிக்கிறாய்! டாக்குத்தர்மார் சொல்லுயினம் இளமையாக இருக்க இளமை நினைவுகளை மீட்க சொல்லி"

"எந்த டாக்குத்தர்"

"யூ டியுப் டாக்குத்தர்மார்,சரி அதை விடு வா சுற்றி கூம்பிடுவோம் ,பிறகு பின் மண்டபத்தில அந்தியேட்டி நடக்குதுபோக வேணும்"

"வாங்கோ போவம் நானும் அந்த அந்தியேட்டிக்கு தான் வந்தனான் "

இருவருமாக சுற்றி கும்பிட்டு கொண்டு வரும் பொழுது

"டேய் இதில இருந்த நாயன்மாரின் சிலைகள் எங்கே "

அவையளுக்கும்  நடேசருக்கும் அட்டாஜ்  கிரனி கட்டி அதில குடியேற்றியிருக்கினம்"

"ஏன்டா?,"

"நான் நினைக்கிறன் நீங்கள் எல்லாம் தொட்டு கும்பிடுறதால நாயன்மாரின் புனித தன்மை இல்லாமல் போய்விடுகிறது என மாத்திரியிருப்பினம்"

" குரு பூஜை நாட்களில் நாங்கள் தானே நாயன்மாரின் படங்களை தூக்கி கொண்டு போய் அலங்கரிச்சு பூஜை செய்யிறம் அப்ப புனித தன்மை கெடாதோ?

எப்ப மாத்தினவங்கள் ,இப்ப எங்கே வைச்சிருக்கிறாங்கள்"

"போன கும்பாபிசேகத்துக்கு பிறகு நடேசருக்கு வசந்த மணடபம் கட்டி அவருடன் இவையளையும்  வைச்சிருக்கினம் அந்த பக்கம் வாங்கோ காட்டுறன்"

அப்படியே நடந்து வந்தவர்  மூலஸ்தான பின் சுவரை பார்த்து

"இவையள் எப்ப இங்க குடி வந்தவையல்,"

"விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு"

"இப்படியான விசர் கேள்விகளை கேட்டு என்னையும் குழப்பி, சனத்தையும் குழப்பாதே...எல்லாம் அவன் செயல் எண்டு கும்பிட்டு கொண்டு போ ,நானும் அந்த காலத்தில் இப்படி இடக்குமடக்கா சிந்திச்ச‌னான் இப்ப தெளிந்திட்டன்"

"வயசு போக போக தெளிவடையலாம் எண்டு சொல்லுறீயலோ"

"நீ தெளிவடைய தேவையில்லை ஏதோ ஒர் சக்தி தெளிவடைய வைக்கும்"

"இறைசக்தியோ"

"அப்படி சொல்ல வில்லை உன் அடையாளங்களை இழக்க பண்ண பல சக்திகள் செயல் படும் ,அந்த சக்தி நீயாகவோ அல்லது உனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாகவோ கூட இருக்கலாம்...."

"என்ன அண்ணே சொல்லுறீயல்"

"நான் இங்க வந்து 40 வருடமாகிறது ,நீ வந்தும் 25 வருசத்திற்கு மேலாகிறது என நினைக்கிறேன்.. ஆறுமுகத்தான் என் பெருமன் சிட்னி முருகன் மேற்கு குன்றில் குடியேறியும் 25 வருசத்திற்கு மேலாகிறது.. இந்த  முருகனை இங்க கொண்டு வந்து குடியேற்றி சைவத்தையும் தமிழையும் நிலை நாட்டலாம் என நினைத்தோம்"

"அது நடக்குது தானே"

"அது நடக்குதோ!! வெளியில போய் பார் எப்படி போர்ட் போட்டிருக்கிறாங்கள் எண்டு"

" இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு"

"உனக்கு இது சின்ன விசயமா தான் இருக்கும் காரணம் நீ யாழ்ப்பாணத்தில் உள்ள ஒர் இந்து பாடசாலையில் தான் படிச்சிருப்பாய் "

"அதுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு"

"இருக்குதடா இருக்கு ,என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது

என கூறி ஒர் பெருமூச்சு விட்டார் கந்தர்.

"என்ன இன்றைக்கு சனம் அதிகமாக இருக்கு விசேமான நாளே அண்ண?"

"உவன்கள் பக்கத்து நாட்டுக்காரனுக்கு கண்டபடி விசாவை கொடுத்து அவன்கள் வந்து குமிச்சிட்டாங்கள்

அவங்களுக்கு வருசம் முழுவதும் விசே நாள் தான்"

"யார் நியுசிலாந்துக்காரன்களே"

"உந்த நக்கல் தானே கூடாது"

"ஓ நீங்கள் தாயத்து பக்கத்து நாட்டுகாரர்களை சொல்லுறீயல்.. ஹி ...சும்மா சொல்லக்கூடாது அவங்களால கோவிலுக்கு நல்ல வருமானம்"

"ஒம் நல்ல‌ வருமானம்...அந்த வருமானத்திற்காகவும் ....  நாம் எமது அடையாளங்களை இழக்கின்றோம் ... அங்கு எத்தனை மாநிலம், ஓவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கடவுள் அவர்களுக்காக அவர்களின் கடவுள்களை உள்வாங்குகின்றோம் காலப்போக்கில் அந்த மாநில கடவுளும்  நம்ம ஆளாகி எமது அடையாளத்தை இழக்கின்றோம்"

"இப்படி கதைச்சு கொண்டிந்தோம் இன்றைக்கு அந்தியெட்டி போனமாதிரி தான்"

"ஒமடா வா வா நானும் மறந்து போனேன். அங்க வா அடையாள இழப்புக்கள் எப்படி எங்கன்ட அடுத்த சந்ததிக்கு புகுத்தப்பட்டுள்ளது என காட்டுகிறேன்"

"சரி சரி வாங்கோ"

"உங்க ஒரு இலைட் குறூப் நிற்கும் அங்க கொஞ்சம் அடக்கி வாசி என்னோட கதைக்கிறமாதிரி கதைச்சுபோடாத‌"

"யார் அந்த இலைட் குறூப் அண்ண"

"அறுபது வயசுக்கு பிறகு ஆத்மீகம் ,அரசியல் பேசுகிற கோஸ்டிகள்

இவ்வளவு காலமும் நித்திரை கொண்டிருந்தவங்கள் இப்ப முழிச்சிட்டாங்களாம்" ...

Edited by putthan
தலையங்கம் மாற்றுவதற்காக எடிட் செய்யப்பட்டது
  • Like 13
Link to comment
Share on other sites

  • putthan changed the title to "சிட்னி சிங்கனும் கருத்து கந்தரும் 1"
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, putthan said:

"விஸ்ணுவும்,சரஸ்வதியுமோ அவையளும் கும்பாபிசேகத்துக்கு பிறகு தான் ,அது சரி அண்ணே இவைக்கும் சைவத்துக்கும் என்ன தொடர்பு"

 

34 minutes ago, putthan said:

" இங்கிலிசில 'ஹிந்து டெம்பில் '...எண்டு..இதெல்லாம் சின்ன விசயம் இதை பெரிது படுத்திக்கொண்டு"

 

35 minutes ago, putthan said:

என்ட அப்பரின் காலத்தில் சைவம் தான் அடையாளம் என்ட காலத்தில் இந்து அடையாளம் வரதொடங்கிட்டுது

புலத்திலே ஆலயங்களில் ஏற்பட்டுவரும் மடைமாற்றத்தை உரையாடலாகப் பதிவுசெய்துள்ளமை சிறப்பு. நானும் அண்மையில் ஒரு ஆலயத்துக்கு நெய்விளக்கேற்றுவமென்று போனா அம்பாள் ஆலயம் 'தேவஸ்தானம்' ஆக மாறி ஐயப்பர் வரை குடியேறியுள்ளார். திருத்தவேலைக்காக எல்லாத் தெய்வங்களையும் வரிசையாக வைத்துள்ளார்கள். திருத்திமுடிய என்பெயரிலை வருமென்று பார்ப்பம்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nochchi said:

 

 

புலத்திலே ஆலயங்களில் ஏற்பட்டுவரும் மடைமாற்றத்தை உரையாடலாகப் பதிவுசெய்துள்ளமை சிறப்பு. நானும் அண்மையில் ஒரு ஆலயத்துக்கு நெய்விளக்கேற்றுவமென்று போனா அம்பாள் ஆலயம் 'தேவஸ்தானம்' ஆக மாறி ஐயப்பர் வரை குடியேறியுள்ளார். திருத்தவேலைக்காக எல்லாத் தெய்வங்களையும் வரிசையாக வைத்துள்ளார்கள். திருத்திமுடிய என்பெயரிலை வருமென்று பார்ப்பம்.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி
 

தாயகத்திலயும் ஆலயங்களில் பல மாற்றங்கள் நடை பெறுகின்றன...திட்டமிட்ட செயலா யான் அறியேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மடையர்களின் சமஸ்கிருத மோகமும் ஒரு காரணம்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஒரு கோவிலில்  பூசகரே...  மக்களின் ஆதரவுடன்   தமிழில் பூசை செய்வோம் என முன் வந்த போது, கோவில் நிர்வாகத்தின் ஒரு பகுதி கோவிலை பூட்டி, திருவிழாவும் செய்ய விடாமல் பண்ணி விட்டார்கள். இவ்வளவிற்கும் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தமிழ் என்றவுடன்  இவர்களுக்கு ஏன்... கசக்கின்றது என்று தெரியவில்லை.

நல்லதொரு கட்டுரைக்கு நன்றி புத்தன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம்போல் நாசூக்கான நையாண்டியுடன் உங்களின் கட்டுரை அருமை புத்ஸ் ........... அப்பப்ப வந்து எழுதவும் . ......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, putthan said:

"என்ன முடி எல்லாம் திடிரேன நரைச்சு போய்விட்டது உங்களுக்கும் வயசு போகுது போல"

"வயசு போகவில்லை , உவங்கன்ட "டை" ஒத்து கொள்ளுதில்லை ,ஒரு வருசத்திற்கு முதல் உப்படித்தான் சாயத்தை பூசிபோட்டு பார்த் ரூமில் இருந்து வட்சப் பார்த்து கொண்டிருந்தனான் அப்படியே மயங்கி போனான்"

இப்பவெல்லாம் நரை முடிக்காரரை பாக்கிறதே பெரிய கஷ்டமாய் கிடக்கு......தலைக்குத்தான் அடிக்கினம் எண்டு பார்த்தால் மீசைக்கும் சேர்த்து எல்லே அடிக்கினம். 🤣

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2024 at 20:02, ஏராளன் said:

நம்மடையர்களின் சமஸ்கிருத மோகமும் ஒரு காரணம்!

சாமி கும்பிடுவதற்கு  தமிழை தவிர வேறெந்த மொழி என்றாலும் டமிழன்  ஏற்றுக்கொள்வான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2024 at 20:13, தமிழ் சிறி said:

இங்கு ஒரு கோவிலில்  பூசகரே...  மக்களின் ஆதரவுடன்   தமிழில் பூசை செய்வோம் என முன் வந்த போது, கோவில் நிர்வாகத்தின் ஒரு பகுதி கோவிலை பூட்டி, திருவிழாவும் செய்ய விடாமல் பண்ணி விட்டார்கள். இவ்வளவிற்கும் அவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். தமிழ் என்றவுடன்  இவர்களுக்கு ஏன்... கசக்கின்றது என்று தெரியவில்லை.

நல்லதொரு கட்டுரைக்கு நன்றி புத்தன்.

கோவில் நிர்வாகத்தில் இருக்கினமே அவையளுக்கு நினைப்பு அவையள் தான் கடவுளுக்கு அடுத்த ஆட்கள் தாங்கள் எண்டு

On 10/9/2024 at 20:57, suvy said:

வழக்கம்போல் நாசூக்கான நையாண்டியுடன் உங்களின் கட்டுரை அருமை புத்ஸ் ........... அப்பப்ப வந்து எழுதவும் . ......!   😁

நிச்சயமாக வந்து எழுதுவேன்...உறவுகள்வாசித்து ஊக்கப்படுத்தும்  வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2024 at 01:52, குமாரசாமி said:

இப்பவெல்லாம் நரை முடிக்காரரை பாக்கிறதே பெரிய கஷ்டமாய் கிடக்கு......தலைக்குத்தான் அடிக்கினம் எண்டு பார்த்தால் மீசைக்கும் சேர்த்து எல்லே அடிக்கினம். 🤣

என்னத்தை அடிச்சாலும் முகத்தில .தோலில் விழுகின்ற சுருக்கங்களை மறைக்க முடியாது அதை போக்க கூடிய வச்தி இன்னும் இந்த சாதாரண குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை 😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2024 at 03:37, putthan said:

"இல்லையடா எதோ புது பிரான்ட் என மருமகன் வாங்கி கொண்டு வந்தவர் ,அது எனக்கு ஒத்துகொள்ளவில்லை"

எனக்குத் தெரிந்த பலர் தலைக்கு வர்ணம் பூசபோய் வைத்தியர்வரை போய் வந்தார்கள்.

கதை சூப்பர்.

அடிக்கடி எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

எனக்குத் தெரிந்த பலர் தலைக்கு வர்ணம் பூசபோய் வைத்தியர்வரை போய் வந்தார்கள்.

கதை சூப்பர்.

அடிக்கடி எழுதுங்கோ.

இங்கும் அப்படித்தான் ....அமோனியா கலந்த டை கூடாதாம் எண்டு சொல்லி... இப்ப புதுசா ஒன்று உலா வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, putthan said:

அமோனியா கலந்த டை கூடாதாம் எண்டு சொல்லி... இப்ப புதுசா ஒன்று உலா வருகிறது

பாவித்து விட்டு எப்பிடியிருக்கெண்டு சொல்லவும். 
இஞ்சை பக்கத்து வீட்டு ஜேர்மன்காரனால பெரிய கரைச்சலாய் கிடக்கு 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பாவித்து விட்டு எப்பிடியிருக்கெண்டு சொல்லவும். 
இஞ்சை பக்கத்து வீட்டு ஜேர்மன்காரனால பெரிய கரைச்சலாய் கிடக்கு 

ஜெர்மன்காரி எண்டால் ஒருபக்கட் அனுப்பிவிடுகிறேன் .....டை போட்டுவிட்டு விஜய் ஸ்டைலில் கெத்தா நடவுங்கோ பிறகு ஆள் உங்கன்ட கைக்குள்ள தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

என்னத்தை அடிச்சாலும் முகத்தில .தோலில் விழுகின்ற சுருக்கங்களை மறைக்க முடியாது அதை போக்க கூடிய வச்தி இன்னும் இந்த சாதாரண குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை 😅

யோகாசனம் செய்தால் கொஞ்ச சுருக்கு எடுபடும். 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

யோகாசனம் செய்தால் கொஞ்ச சுருக்கு எடுபடும். 😄

சுருக்கு எடுக்க போய் சுளுக்கு வந்தா அதுவும் கண்ட இடங்களில் வந்தா...தாங்கதடா சாமி இந்த பஞ்சு உடல்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

சுருக்கு எடுக்க போய் சுளுக்கு வந்தா அதுவும் கண்ட இடங்களில் வந்தா...தாங்கதடா சாமி இந்த பஞ்சு உடல்

 கொஞ்சம் கொஞ்சமாக உடம்புக்கு பழக்கப்படுத்தினால் எல்லாம் சரிவரும். 😀

16 minutes ago, putthan said:

ஜெர்மன்காரி எண்டால் ஒருபக்கட் அனுப்பிவிடுகிறேன் .....டை போட்டுவிட்டு விஜய் ஸ்டைலில் கெத்தா நடவுங்கோ பிறகு ஆள் உங்கன்ட கைக்குள்ள தான்

பிளீஸ் அனுப்பி விடவும் 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, putthan said:

ஜெர்மன்காரி எண்டால் ஒருபக்கட் அனுப்பிவிடுகிறேன் .....டை போட்டுவிட்டு விஜய் ஸ்டைலில் கெத்தா நடவுங்கோ பிறகு ஆள் உங்கன்ட கைக்குள்ள தான்

இப்பவும் அவருடைய கைக்குள். தான்    😂🤣.  ஜேர்மன்காரனுக்கு ஏன். கறுப்பு டை.   ?? இதை சாட்டாக. வைத்து   பக்கத்து வீட்டில் எல்லாவற்றையும்  வைத்து கொள்ள தான் 😂🙏

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், வழமை போல நையாண்டியுடன் கூடிய அனுபவப் பகிர்வு..!

எனக்கும் தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனதைக் கலக்குகின்றது.

போவதே கொஞ்சம் தமிழ் கதைக்கவும் கேட்கவும் தான். ஆனால் இப்போதெல்லாம் வட இந்தியர் தான் எல்லா இடமும்..! சிக்கின் கறி கேட்டால் சிக்கின் ரிக்கா தான் இருக்காம். பருப்புக்கறி கேட்டால் இந்தியன் ஸ்ரயில் தான் இருக்கு வேணுமோ எண்டு கேக்குதுகள்.

பாரதி சொன்னது போல, மெல்லத் தமிழ் இனிச் சாகும் போல தான் உள்ளது..! தமிழ் மட்டுமல்ல, சைவமும் தான்..

ஆக்குவதும் நாங்கள் தான்..! அதை அழிப்பதும் நாங்கள் தான்..!

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லோருக்கும் நன்றிகள்  
    • "பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]"     இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர்.   பறவைக்கு கூடு, மாட்டுக்குத் தொழுவம், சிலந்திக்கு வலை, மனிதனுக்கு நட்பு. அது இதயங்கள் இரண்டும் கலந்த ஆழமான உறவு! இயற்கைக் காற்று எந்த தடையும் இன்று சுவாசிக்கலாம். தாய் பிள்ளை, கணவன் மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாக கருதப்படும் மற்றும் ஒரு உறவு தான் நட்பு அல்லது நண்பர்கள். அதற்கு இந்த இனியாவும் ஓவியாவும் நல்லதொரு சான்றாகும். "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு" என்கிறார் வள்ளுவர். சங்ககாலம் முதல் இன்று வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள் ஆகும். நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். அந்த பாக்கியம் கொண்டவர்கள் தான் இந்த இனியா ஓவியா என்றால் மிகையாகாது!   இனியா ஒரு கலகலப்பான மற்றும் உற்சாகமான பெண்ணாக, மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் புன்னகையையும் கொண்டு இருந்தார், அதே நேரத்தில் ஓவியா கனிவான இதயத்துடன் அமைதியான இருப்பைக் கொண்டிருந்தார். அவர்கள் எப்போதும் துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர், தங்கள் தங்கள் முயற்சிகளில், படிப்புகளில் ஒருவரையொருவர் ஆதரித்ததுடன் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உதவியும் செய்தனர்.   “கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாகும் நட்பாரும் இல்” (நாலடியார் 215)   கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும்” என்று நட்பின் பெருமையின் படி இனியா ஓவியா வெள்ளவத்தையை கலக்கிய இரு அழகிய மலர்கள் என்று கூட கூறலாம். இந்த அவர்களின் நட்பு, இனம், மதம், சமயம், மொழி, நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி உள்ளப்புணர்ச்சி கொண்டு பழகும் உறவாகும்.   ஒரு வெயில் நாளில், அவர்கள் தங்களுக்குப் பிடித்த வெள்ளவத்தை கடற்கரை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் அமர்ந்திருந்தபோது, ஓவியாவின் கண்களில் ஒரு மின்னல் ஏற்பட்டது போல, இனியா சடுதியாக எதோ ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து திரும்பினார். அழகாகச் சுற்றப்பட்ட அந்த பொட்டலத்தை தன் இரு கைகளாலும் பிடித்து "அன்புள்ள பிரியமான தோழிக்கு, ஓவியாவுக்கு," என்று ஒரு ஒளிரும் புன்னகையுடன், ஓவியாவிடம் கொடுத்தாள்.   கவனமாகப் பொட்டலத்தைப் பிரித்த ஓவியாவின் கண்களில் ஆர்வம் மிளிர்ந்தது. ஆனால் உள்ளே, அவள் ஒரு குறிப்பு புத்தகத்தை மட்டுமே கண்டாள், அதன் பக்கங்கள் காலியாகவும், ஒன்றும் எழுதாமலும் இருந்தன. அது அவளை ஆச்சிரியத்திலும் அதே நேரம் வெறும் தாள்களைக் கொண்ட பரிசைக் கண்டு ஓவியாவின் மனம் வெதும்பியது.   இனியா ஓவியா வெதும்பியது கண்டதும், தன் பரிசுவின் நோக்கம் என்ன என்று உடனடியாக விளக்கினார், "இந்தப் குறிப்பு புத்தகம் சாதாரணப் தாள்கள் அல்ல, என் பிரியமான தோழியே. இது நமது கனவுகள், அபிலாஷைகள் மற்றும் சாகசங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு புத்தகம். நமது ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகளைப் படம்பிடித்து ஒருவருக்கொருவர் எழுதுவோம். அது எங்கள் நட்பின் பொக்கிஷம் என்றும் இருக்கும்" என்று கூறி முடித்தாள்.   "இந்த நட்பை நாங்கள் முறிக்க மாட்டோம் என் வலிமையே உடைந்தாலும் உன் நட்பை உடையவிட மாட்டேன் என்னுடைய வெற்றி உன்னுடைய வெற்றி உன் தோல்வி என்னுடைய தோல்வி கேள் இதை என் நண்பனே உன் துக்கம் என் துக்கம் என் உயிர் உன் உயிர் (போன்றது) அப்படிப்பட்டது நம்முடைய நட்பு உயிருடன்கூட விளையாடுவேன் உனக்காக எதிர்கொள்வேன் உலகத்தின் அனைத்து எதிர்ப்பையும் மற்றவர்களுக்கு நாம் இருவராகத் தோன்றலாம் ஆனால் நாம் இருவர் அல்ல நமக்குள் பிரிவோ சினமோ இல்லை" [படம் தளபதி. பாடல் வரிகள் வாலி.]   அதை கேட்டு மகிழ்ச்சியில் மூழ்கிய ஓவியா, இனியாவை இறுகத் தழுவினாள். அவர்கள் இருவரும் தம் நேரத்தை வீணடிக்கவில்லை, உடனடியாக குறிப்பு புத்தகத்தின் வெற்று பக்கங்களில் தங்கள் இதயங்களை பிழிந்து எடுத்து ஊற்றத் தொடங்கினர். உலகத்தை ஆராய்வது, நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவது மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவது போன்ற அவர்களின் கனவுகளைப் பற்றி அவர்கள் இருவரும் மாறி மாறி எழுதினார்கள்.   காலப்போக்கில், இருவரும் தம் தம் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் செய்து, ஓவியா தன் கணவருடன் லண்டன் நிரந்தரமாக போய்விட்டார். ஆனால் இனியா வெள்ளவத்தையிலேயே தங்கி, அங்கேயே வேறு ஒரு வீட்டில் தன் கணவருடன் தனிக்குடித்தனம் போய்விட்டார். என்றாலும் ஓவியா லண்டனுக்கு போகமுன்பு, முன்னையது போலவே, ஒரு குறிப்பு புத்தகம் வாங்கி, இனியாவுக்கு கொடுத்து விட்டுத்தான் போனார். அதில் இனியா தொடரவேண்டும் என்ற வேண்டுகோளுடன்.   இப்ப ஓவியா லண்டனில் இருந்தாலும் , அந்த குறிப்பு புத்தகம் அவளின் நிலையான இன்னும் ஒரு துணையாக மாறியது. இனியாவும் ஓவியாவும் தம் தம் குறிப்பு புத்தகங்களில் வெற்றிகள், சவால்கள் மற்றும் இடையில் அனுபவித்த, கண்ட அனைத்தையும் சிரிப்பு மற்றும் கண்ணீரின் மூலம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் உடல் ரீதியாக இப்ப பிரிந்திருந்தாலும் அவர்களை இணைக்கும் எழுத்து வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர்.   ஆண்டுகள் பறந்தன, இரண்டு நண்பர்களும் வயதாகினர். அவர்களின் கனவுகள் மற்றும் பொறுப்புகளைத் தொடர வாழ்க்கை அவர்களை தனி பாதையில் அழைத்துச் சென்றது. ஆயினும்கூட, அவர்கள் உருவாக்கிய பிணைப்பு பிரிக்க முடியாததாக இருந்தது, நேசத்துக்குரிய குறிப்பு புத்தக தாள்களால் அது தொடர்ந்து தொகுக்கப் பட்டுக் கொண்டே இருந்தது.   ஒரு நாள், ஓவியா பழைய சாமான்களுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த குறிப்பு புத்தகத்தின் தாள்களில் தடுமாறினாள். அவளுக்கு நினைவுகள் வெள்ளமாகத் திரும்பியது, அவள் இனியாவை எவ்வளவு தவறவிட்டாள் என்பதை உணர்ந்தாள். தன் அன்பான தோழியுடன் மீண்டும் ஒரு முறையாவது இணைய வேண்டும் என்று முடிவு செய்தாள்.   நடுங்கும் கைகளுடன் ஓவியா, இனியாவுக்கு ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை வரைந்தார். அவளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பழக்கமான அந்த தாள்களில் கொட்டினாள். தனது வெற்றிகள் மற்றும் சவால்கள், தான் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கதைகளைப் பக்கம் பக்கமாக வடித்தாள். அதை பிரதியெடுத்து "பிரியமான தோழிக்கு" என்ற தலைப்புடன் இ மெயில் இல் அணுப்பினாள்.   நாட்கள் வாரங்களாக மாறியது, ஓவியா பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். பின்னர், ஒரு அழகிய மாலை பொழுது , மின்னஞ்சலில் இனியா விடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தன் அருமை தோழி எழுதிய வார்த்தைகளை படித்த சாராவின் கண்களில் கண்ணீர் பெருகியது. இனியா புற்றுநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு, எந்தநேரமும் தன் உலக வாழ்வை முடிக்கும் நிலையில் இருப்பதாய் அறிந்தாள்.   ஏக்கத்தால் துக்கத்தால் நிரப்பப்பட்ட ஓவியா மூன்று மாத லீவில், இனியாவுடன் மீண்டும் இணைய முடிவு செய்தாள். அவர்கள் இருவரும் அந்த பழைய வெள்ளவத்தையின் பெரிய மரத்தின் கீழ் அவர்களுக்கு பிடித்த இடத்தில் தொடர்ந்து சந்தித்தனர், அவர்கள் தாம் தாம் பகிர்ந்துகொண்ட , தம் பயணக் குறிப்புகளை ஆளுக்கு ஆள் நினைவுகூர்ந்தபோது அவர்களின் சிரிப்பு காற்றில் எதிரொலித்தது. கடலின் அலைகளின் ஓசையையும் அது வென்றது.   அந்த நாளிலிருந்து, இனியாவும் ஓவியாவும் தங்கள் நட்பை ஒரு முன்னுரிமையாக மாற்ற சபதம் செய்தனர், தூரம் அல்லது கடந்து செல்லும் ஆண்டுகள் எதுவாக இருந்தாலும் சரி. அவர்களின் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத நட்பின் அடையாளமாக இந்த குறிப்பு புத்தகம் என்றும் இருக்க வேண்டும் என்று இருவரும் நினைத்தனர்.   ஆனால், ஓவியா லண்டன் திரும்பி, ஒரு சில கிழமையில் "பிரியமான தோழிக்கு" என்ற குறிப்புடன் இனியாவின் குறிப்பு புத்தகம் தபால் மூலம் அவளுக்கு வந்தது. அதனுடன் இருந்த செய்தி அவளை அப்படியே அதிர செய்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள் ஆவது இனியா இருப்பாள் என்று நினைத்தவளுக்கு இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓ .. அப்படியே கதறிவிட்டாள்.   பிரியமான, அன்பான தோழி, இந்த மண்ணை விட்டு போனாலும் அவர்களின் கதை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • கவி அருணாசலம், நீங்கள்.. சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பது எமக்கும் தெரிகின்றது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால்... தமிழரசுகட்சியின் முன்னணி அரசியல்வாதி எனப்படுபவர், தனது முதல் பத்திரிகையை சிங்களவராகிய சஜித்துக்கு கொடுத்து அறிமுகம் செய்தது பற்றியதுதான் இங்கு பேசு பொருள். முதல் பத்திரிகையை, முதலில் கொடுக்க ஒரு தமிழறிஞர் கூட கிடைக்கவில்லையா...? என்பதுதான் எமது ஆதங்கம். புரிந்தால் சரி.
    • நல்ல வரிகள். இதை வாசித்ததன் பின்னர் பாவை விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவியமா இல்லை ஓவியமா..’ பாடலை ஒருதரம் கேட்டுப் பார்த்தேன் என்னாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவதுண்மை காதலே காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
    • பனை ஏறும் தொழிலை இவ்வளவு விளக்கமாக வேறு யாரும் எழுதி நான் வாசித்ததில்லை. மிக அழகாக எழுதியிருக்கிறார்  Dr.T. கோபிசங்கர். ஒரு தொழிலைப் பற்றி விளக்கமாகச் சொல்லும் அதே வேளையில் கதயையும் மனதில் உறைக்கும் வகையில் சொல்லி முடித்திருக்கிறார்.  👏    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.