Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

😂

1 hour ago, nunavilan said:4343
 

43
 

23

சரி, 53% வரவு. எனவே கூட்டம் நடத்த quorum இருந்திருக்கிறது. அல்லது யாப்பில் quorum வர எத்தனை பேர் தேவையென்று இருக்கிறதாமா?

இந்த 23 பேரில் எத்தனை பேர் சஜித்தை ஆதரித்தார்களாம்? ஏதாது தகவல் அதைப் பற்றி?

  • Replies 131
  • Views 7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.  தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும்

  • சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பா

  • பிழம்பு
    பிழம்பு

    // 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவி

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nunavilan said:

ஒரு  கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியில் மத்திய குழுவுடன் ஆராயாமல் சுமந்திரனும் சாணக்கியனும் சஜித்துக்கு ஆதரவு வழங்கி விட்டு அரியநேந்திரன் கட்சி விதிகளை மீறி விட்டாராம்.  என்ன ஒரு  ரெளடிசம்.?

எந்தெந்தக் கட்சிகளுடன் என்னென்ன பேசினார்கள் என்று இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

எந்தெந்தக் கட்சிகளுடன் என்னென்ன பேசினார்கள் என்று இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

முதலில்... சுமந்திரன் அவர்களுடன் கதைத்தாரா? என்பதே சந்தேகத்துக்கு இடமானது.
ஏனென்றால்... சஜித்துக்கு, சுமந்திரன்  ஆதரவு கொடுத்ததை, பத்திரிகை வாயிலாகவே 
தான்  அறிந்து கொண்டதாக சஜித் தெரிவித்து இருந்தமை ஊர்ப்புதின செய்தியிலும் இங்கு இணைக்கப் பட்டு  இருந்தது. 

சுமந்திரன் வாயை திறந்தால், 90 வீதம்... பொய்யும், பிரட்டும், சுத்துமாத்தும்தான்.
உளறு வாயன், சொல்வதை எல்லாம்  சீரியஸாக எடுக்க  வேண்டிய அவசியம் இல்லை. வருகின்ற தேர்தலுடன் காணாமல் போகின்ற ஆள்தானே, அலட்டிப் போட்டு போகட்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஆம், இப்போது இங்கே சிலர் தம் தேவைக்காக வதந்திகளை வைத்து செய்கிற அரசியல் அப்போதும் நடந்தது.

 சம்பவம் நடந்து மறு நாள், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அங்கஜன் மூவரும் சசிகலாவை சந்தித்து "இதை நீங்கள் விடக் கூடாது, நாம் உயர் நீதிமன்றில் வழக்குப் போட உதவுகிறோம்" என்று உசுப்பேத்திய அரசியல் நடந்தது. இதில் வெட்கக் கேடான விடயம் என்னவென்றால், இந்த மூவரும் தேர்தல் வேட்பாளராக அனுபவம் கொண்டவர்கள். இந்த வாக்குகள் திருடிய விடயம் நடந்திருக்கவே முடியாது என்பது நன்கு தெரிந்த ஆட்கள். தங்கள் அனுபவ அறிவை ஓரமாய் சுருட்டி வைத்து விட்டு "சுமந்திரன் லவ்" காரணமாக சசிகலா அவர்களை மேலும் அசிங்கப் படுத்த முயற்சித்தார்கள்.

ஆமாம்

உங்களை விட இலங்கை அரச நிர்வாகத்தை ஒரு காலத்தில் அதிகம் நேசித்தவன் நம்பியவன் நான் என்ற முறையில்.

ஆனால் 6 மணித்தியாலங்களாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் நான் காத்துக்கிடக்க எனது நண்பன் 15 நிமிடத்திற்குள் விசாவுடன் வெளியே சென்றதை பார்த்து அவனிடம் கேட்டபோது இலங்கை நிர்வாகம் பணத்திற்கு எப்படி வாலாட்டுகிறது என்று தெரிந்தபோது.....??? 

நமக்கெல்லாம் ஒரு சூடு போதும் ....

31 minutes ago, ஈழப்பிரியன் said:

எந்தெந்தக் கட்சிகளுடன் என்னென்ன பேசினார்கள் என்று இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

இது ஒரு கட்சி?? அதற்கு மத்திய குழு வேற???

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

ஆமாம்

உங்களை விட இலங்கை அரச நிர்வாகத்தை ஒரு காலத்தில் அதிகம் நேசித்தவன் நம்பியவன் நான் என்ற முறையில்.

ஆனால் 6 மணித்தியாலங்களாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் நான் காத்துக்கிடக்க எனது நண்பன் 15 நிமிடத்திற்குள் விசாவுடன் வெளியே சென்றதை பார்த்து அவனிடம் கேட்டபோது இலங்கை நிர்வாகம் பணத்திற்கு எப்படி வாலாட்டுகிறது என்று தெரிந்தபோது.....??? 

நமக்கெல்லாம் ஒரு சூடு போதும் ....

இது ஒரு கட்சி?? அதற்கு மத்திய குழு வேற???

சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. அப்படியானால், அதே 2020 தேர்தலில் விக்கினேஸ்வரன் முதல், பொன்னம்பலம் வரை எல்லோரும் பெற்றவை ஊழல் சிறிலங்காவில் நிகழ்ந்த தேர்தலின் கள்ள வாக்குகள் என்று எல்லோரையும் "கள்ளா" என்று திட்டலாம் அல்லவா? அப்படி இங்கே யாரும் திட்டாமல் இருக்க என்ன காரணம்? அவர்களின் தேர்வு மட்டும் இன்னொரு நாட்டில், ஊழல் இல்லாமல் நடந்தமையாலா😂?

38 minutes ago, ஈழப்பிரியன் said:

எந்தெந்தக் கட்சிகளுடன் என்னென்ன பேசினார்கள் என்று இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? யார் அந்த 23 பேரும்? நுணாவுக்கும் தெரியாது போல இருக்கு, பேசாமல் இருக்கிறார்.

ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி  முறிகின்றனர்😂!

என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? 

தலைவருக்கே தெரியாதென்று தலைவரே சொல்லியிருந்தார்.

25 minutes ago, தமிழ் சிறி said:

முதலில்... சுமந்திரன் அவர்களுடன் கதைத்தாரா? என்பதே சந்தேகத்துக்கு இடமானது.
ஏனென்றால்... சஜித்துக்கு, சுமந்திரன்  ஆதரவு கொடுத்ததை, பத்திரிகை வாயிலாகவே 
தான்  அறிந்து கொண்டதாக சஜித் தெரிவித்து இருந்தமை ஊர்ப்புதின செய்தியிலும் இங்கு இணைக்கப் பட்டு  இருந்தது. 

சுமந்திரன் வாயை திறந்தால், 90 வீதம்... பொய்யும், பிரட்டும், சுத்துமாத்தும்தான்.
உளறு வாயன், சொல்வதை எல்லாம்  சீரியஸாக எடுக்க  வேண்டிய அவசியம் இல்லை. வருகின்ற தேர்தலுடன் காணாமல் போகின்ற ஆள்தானே, அலட்டிப் போட்டு போகட்டும். 🤣

ஆரம்பத்தில் ஒரு காணொளியில் மிகவும் நிதானமாகவும் நல்ல திட்டங்களோடும் பேசியிருந்தார்.

மிகவும் பாராட்டக் கூடிய மாதிரி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி  முறிகின்றனர்😂!

என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?

ஆமாம் இவர் போன்றவர்களால்த் தான் சிங்கள அரசை காப்பாற்ற முடியும்.

பொறுப்புக் கூறல் விடயத்தில் சிங்கள அரசைக் காப்பாற்றியதை மறந்துவிட்டீர்களா?

ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

தலைவருக்கே தெரியாதென்று தலைவரே சொல்லியிருந்தார்.

தலைவர் யார்? மாவையா சிறிதரனா? காலை, மதியம், மாலை என்று ஒவ்வொரு வேட்பாளர் பக்கம் நின்ற மாவை சொல்வதை நம்புகிறீர்கள்.  ஆனால் ஒரு முடிவெடுத்து அதன் படி நின்ற சும்மையும், சாணக்கியனையும் சந்தேகிக்கிறீர்கள்😂! அந்த முடிவெடுத்த கூட்டத்தில் இருந்தவர்கள் எதிர்த்திருந்தால், வாக்கெடுப்பு நடந்திருக்கும். அதன் படி தான் முடிவும் எடுக்கப் பட்டிருக்கும். ஆனால், இந்த நடைமுறைகள் பற்றி எதுவும் தெரியாமல் தான் எல்லோரும் ரொய்லெற் ஊடகங்களை நம்பிக் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்!

Just now, ஈழப்பிரியன் said:

ஆமாம் இவர் போன்றவர்களால்த் தான் சிங்கள அரசை காப்பாற்ற முடியும்.

பொறுப்புக் கூறல் விடயத்தில் சிங்கள அரசைக் காப்பாற்றியதை மறந்துவிட்டீர்களா?

ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்.

"காப்பாற்றி விட்டார்கள்" என்பது மனித உரிமைக் கூட்டத் தொடரில் நிகழ்ந்தவை பற்றி எதுவும் அறியாமல் தமிழ் வின் அவித்த பொங்கலை "அப்படியே சாப்பிட்டவர்களின்" நம்பிக்கை😂. இதைப் பற்றி ஏற்கனவே எழுதியாகி விட்டது, இனி மீண்டும் முதலில இருந்தா😅?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

😂

சரி, 53% வரவு. எனவே கூட்டம் நடத்த quorum இருந்திருக்கிறது. அல்லது யாப்பில் quorum வர எத்தனை பேர் தேவையென்று இருக்கிறதாமா?

இந்த 23 பேரில் எத்தனை பேர் சஜித்தை ஆதரித்தார்களாம்? ஏதாது தகவல் அதைப் பற்றி?

43 ல் 19 பேர் சஜித்தை ஆதரித்துள்ளார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

தலைவர் யார்? மாவையா சிறிதரனா? காலை, மதியம், மாலை என்று ஒவ்வொரு வேட்பாளர் பக்கம் நின்ற மாவை சொல்வதை நம்புகிறீர்கள்.  ஆனால் ஒரு முடிவெடுத்து அதன் படி நின்ற சும்மையும், சாணக்கியனையும் சந்தேகிக்கிறீர்கள்😂! அந்த முடிவெடுத்த கூட்டத்தில் இருந்தவர்கள் எதிர்த்திருந்தால், வாக்கெடுப்பு நடந்திருக்கும். அதன் படி தான் முடிவும் எடுக்கப் பட்டிருக்கும். ஆனால், இந்த நடைமுறைகள் பற்றி எதுவும் தெரியாமல் தான் எல்லோரும் ரொய்லெற் ஊடகங்களை நம்பிக் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்!

மாவையோ சிறிதரனோ இருவருக்குமே தெரியாது என்கின்றனர்.

இவர்கள் கதைத்தால் யாருக்காவது சொன்னார்கள் என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எந்தெந்தக் கட்சிகளுடன் என்னென்ன பேசினார்கள் என்று இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

சுமந்திரனுக்காக சிலுவை சுமக்கும் ஜஸ்டின் வகையறாக்களுக்கு தெரிந்திருக்க கூடும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

காப்பாற்றி விட்டார்கள்" என்பது மனித உரிமைக் கூட்டத் தொடரில் நிகழ்ந்தவை பற்றி எதுவும் அறியாமல் தமிழ் வின் அவித்த பொங்கலை "அப்படியே சாப்பிட்டவர்களின்" நம்பிக்கை😂. இதைப் பற்றி ஏற்கனவே எழுதியாகி விட்டது, இனி மீண்டும் முதலில இருந்தா😅?

தமிழ்வின் மட்டுமல்ல உலகமே சொன்ன விடயம் உங்களுக்க மட்டும் பொய்யா தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

43 ல் 19 பேர் சஜித்தை ஆதரித்துள்ளார்களாம்.

கூட்டத்திற்கு வராத 20 உறுப்பினர்களுக்கு வாக்கு இருந்திருக்காது. அப்ப வந்த 23 பேரில் 19 பேர் ஆதரித்திருக்கிறார்கள் என்கிறீர்கள்? "இருவர் மட்டும் எடுத்த முடிவு என்று மேலே நீங்கள் பரப்பியது " புரளி என்று புரிகிறதா?

 

10 hours ago, nunavilan said:

சுமந்திரனுக்காக சிலுவை சுமக்கும் ஜஸ்டின் வகையறாக்களுக்கு தெரிந்திருக்க கூடும்.🤣

நான் சிலுவை தான் சுமக்கிறேன், உங்கள் போன்ற தகவல்களின் தரக்கட்டுப் பாடு அறியாத "தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு😎" எதிராகத் தான் சிலுவையேயொழிய, எந்த அரசியவாதிக்காகவும் அல்ல!

 

10 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழ்வின் மட்டுமல்ல உலகமே சொன்ன விடயம் உங்களுக்க மட்டும் பொய்யா தெரிகிறது.

அப்படி உலகம் சொல்லி நான் காணவில்லை. உங்கள் உலகம் எது? ஆதவன், அக்கினிக்குஞ்சு, தமிழ்வின், முகநூல்?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. 

நன்றி வணக்கம் 

  • கருத்துக்கள உறவுகள்

 

2004 ம் ஆண்டு தேர்தலில் தானே பல கள்ள வாக்குகளை போட்டதாக சிறீதரன் வெளிப்படையாக கூறினார். அப்படி கள்ள வாக்கு போட்டதால் தான் 2004 ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் குடைத்ததாக கூறினார். அவ்வாறு வெளிப்படையாக அவர் தெரிவத்த விடயம் பற்றி யாரும் இங்கு உரையாடுவதில்லை. 
 

சிறீதரன் கூறுகிறார் அதை பற்றி பேசினால் அந்த காலத்தில் இருந்தவர்களை எல்லாம் பிழை சொல்ல வேண்டி வரும் என்று. அப்படியானால் அந்த காலத்தில் இவருடன் கிளிநொச்சியில் இருந்தவர்கள் பல கள்ள வாக்குகளை போட்டனர் என்ற உண்மையை கூறுகிறார். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

2004 ம் ஆண்டு தேர்தலில் தானே பல கள்ள வாக்குகளை போட்டதாக சிறீதரன் வெளிப்படையாக கூறினார். அப்படி கள்ள வாக்கு போட்டதால் தான் 2004 ம் ஆண்டு 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் குடைத்ததாக கூறினார். அவ்வாறு வெளிப்படையாக அவர் தெரிவத்த விடயம் பற்றி யாரும் இங்கு உரையாடுவதில்லை. 

2004 தேர்தலை மட்டுமா "கள்ள மௌனத்தோடு  கடந்து போயிருக்கின்றனர்?

இந்த திரி பொது வேட்பாளர் தொடர்பானது. பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்கள். அவரது முதல் பா. உ ஆசனம் கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தேர்தலில் நின்று வென்ற ஆசனம். அவரை "இனந்தெரியாதவர்கள்😎" கடத்திச் சென்று மிரட்டி பதவி விலக வைத்த இடத்திற்குத் தான் அரியநேத்திரன் அவர்கள் நியமிக்கப் பட்டார் (இதைப் பின்கதவு, கீழ் கதவு, கூரைக் கதவு வழி வந்த அரியநேத்திரன் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்).

இதையும் கூட செலக்ரிவாக மறந்து விட்டு, இரு தடவைகள் தேர்தலில் வாக்குகள் வென்ற சுமந்திரனை இன்னும் "பின்கதவு" என்பார்கள். சிரிக்காமலே ஜோக் அடிப்பதில் வல்லவர்கள் இவர்கள்😂!

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்கள். அவரது முதல் பா. உ ஆசனம் கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தேர்தலில் நின்று வென்ற ஆசனம். அவரை "இனந்தெரியாதவர்கள்😎" கடத்திச் சென்று மிரட்டி பதவி விலக வைத்த இடத்திற்குத் தான் அரியநேத்திரன் அவர்கள் நியமிக்கப் பட்டார் (இதைப் பின்கதவு, கீழ் கதவு, கூரைக் கதவு வழி வந்த அரியநேத்திரன் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்).

தமிழரசகட்சியின் கட்டுபாட்டை  மீறி கட்சியை விட்டு விலகவும் விரும்பாமல் தனது சுயநலத்திற்காக  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் தான் நேர்மையற்ற அரியநேத்திரன் என்றே அறிந்திருந்தேன்.இவர் கடந்தகாலம் இப்போ தான் அறிந்தேன் நன்றி ஜஸ்ரின் அண்ணா

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

2004 தேர்தலை மட்டுமா "கள்ள மௌனத்தோடு  கடந்து போயிருக்கின்றனர்?

இந்த திரி பொது வேட்பாளர் தொடர்பானது. பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்கள். அவரது முதல் பா. உ ஆசனம் கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தேர்தலில் நின்று வென்ற ஆசனம். அவரை "இனந்தெரியாதவர்கள்😎" கடத்திச் சென்று மிரட்டி பதவி விலக வைத்த இடத்திற்குத் தான் அரியநேத்திரன் அவர்கள் நியமிக்கப் பட்டார் (இதைப் பின்கதவு, கீழ் கதவு, கூரைக் கதவு வழி வந்த அரியநேத்திரன் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்).

இதையும் கூட செலக்ரிவாக மறந்து விட்டு, இரு தடவைகள் தேர்தலில் வாக்குகள் வென்ற சுமந்திரனை இன்னும் "பின்கதவு" என்பார்கள். சிரிக்காமலே ஜோக் அடிப்பதில் வல்லவர்கள் இவர்கள்😂!

 

அட!   இந்த அரியநேந்திரனே இனந்தெரியாத ரவுடிகளை  வைத்து வெற்றி பெற்ற வேட்பாளரை கடத்திச் சென்று  மிரட்டி அவரின் வெற்றியை தட்டிப்பறித்து பாராளுமன்றப்  பதவிக்கு வந்தவரா?  அது தெரிந்தும் அதைபற்றி இங்கு  அதைக் கண்டிக்கும் நேர்மை இங்கு எவருக்கும் இல்லை போல் இருக்கிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இந்த திரி பொது வேட்பாளர் தொடர்பானது. பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்கள். அவரது முதல் பா. உ ஆசனம் கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தேர்தலில் நின்று வென்ற ஆசனம். அவரை "இனந்தெரியாதவர்கள்😎" கடத்திச் சென்று மிரட்டி பதவி விலக வைத்த இடத்திற்குத் தான் அரியநேத்திரன் அவர்கள் நியமிக்கப் பட்டார் (இதைப் பின்கதவு, கீழ் கதவு, கூரைக் கதவு வழி வந்த அரியநேத்திரன் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்).

 

6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழரசகட்சியின் கட்டுபாட்டை  மீறி கட்சியை விட்டு விலகவும் விரும்பாமல் தனது சுயநலத்திற்காக  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர் தான் நேர்மையற்ற அரியநேத்திரன் என்றே அறிந்திருந்தேன்.இவர் கடந்தகாலம் இப்போ தான் அறிந்தேன் நன்றி ஜஸ்ரின் அண்ணா

 

 

அரியநேத்திரன் ஒன்றும் பின் கதவால் வரவில்லை.புலிகள் நடத்திய பத்திரிகை ஆசிரியராகவும் தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒருவராகவுமே இருந்ததாலேயே அவர் களமிறக்கப்பட்டார்.

அத்தோடு இன்றுவரை அரியநெத்திரனை எவருமே பின் கதவால் வந்தவரென்று சொல்லவில்லை.

ஆனால் சுமந்திரன் சாணக்கியனை தமிழரசுக் கட்சியிலிருந்த பல மூத்த உறுப்பினர்களே பின் கதவால் வந்தவரென்று பல தடவைகள் கூறிவிட்டனர்.

இது ஏதே நாங்கள் தான் இப்போ காவித்திரியும் செய்தி மாதிரி எங்களைச் சாடுகிறார்கள்.

2 minutes ago, island said:

அட!   இந்த அரியநேந்திரனே இனந்தெரியாத ரவுடிகளை  வைத்து வெற்றி பெற்ற வேட்பாளரை கடத்திச் சென்று  மிரட்டி அவரின் வெற்றியை தட்டிப்பறித்து பாராளுமன்றப்  பதவிக்கு வந்தவரா?  அது தெரிந்தும் அதைபற்றி இங்கு  அதைக் கண்டிக்கும் நேர்மை இங்கு எவருக்கும் இல்லை போல் இருக்கிறது.   

 

3 hours ago, Justin said:

2004 தேர்தலை மட்டுமா "கள்ள மௌனத்தோடு  கடந்து போயிருக்கின்றனர்?

இந்த திரி பொது வேட்பாளர் தொடர்பானது. பொது வேட்பாளர் அரியநேத்திரன் அவர்கள். அவரது முதல் பா. உ ஆசனம் கிங்ஸ்லி இராசநாயகம் என்பவர் தேர்தலில் நின்று வென்ற ஆசனம். அவரை "இனந்தெரியாதவர்கள்😎" கடத்திச் சென்று மிரட்டி பதவி விலக வைத்த இடத்திற்குத் தான் அரியநேத்திரன் அவர்கள் நியமிக்கப் பட்டார் (இதைப் பின்கதவு, கீழ் கதவு, கூரைக் கதவு வழி வந்த அரியநேத்திரன் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்).

இதையும் கூட செலக்ரிவாக மறந்து விட்டு, இரு தடவைகள் தேர்தலில் வாக்குகள் வென்ற சுமந்திரனை இன்னும் "பின்கதவு" என்பார்கள். சிரிக்காமலே ஜோக் அடிப்பதில் வல்லவர்கள் இவர்கள்😂!

 

படித்த வர்க்கத்தின் பட்டம் எப்படிப் பறக்கிறது பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

அரியநேத்திரன் ஒன்றும் பின் கதவால் வரவில்லை.புலிகள் நடத்திய பத்திரிகை ஆசிரியராகவும் தமிழ்தேசியத்தை நேசிக்கும் ஒருவராகவுமே இருந்ததாலேயே அவர் களமிறக்கப்பட்டார்.

அத்தோடு இன்றுவரை அரியநெத்திரனை எவருமே பின் கதவால் வந்தவரென்று சொல்லவில்லை.

 

//

2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவில்லை.

விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தேர்வான போதிலும், அவர் பதவிப் பிரமாணம் செய்யாமலே ஒரு சில நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.

விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் ராஜினாமா செய்து கொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திருந்த பா. அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 19-ஆம் தேதியன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2004-க்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்சிலி இராசநாயகம், தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.//

 

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை - BBC News தமிழ்

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிழம்பு said:

//

2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவில்லை.

விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தேர்வான போதிலும், அவர் பதவிப் பிரமாணம் செய்யாமலே ஒரு சில நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார்.

விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் ராஜினாமா செய்து கொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திருந்த பா. அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 19-ஆம் தேதியன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2004-க்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்சிலி இராசநாயகம், தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.//

 

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை - BBC News தமிழ்

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் ராஜினாமா செய்து கொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திருந்த பா. அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 19-ஆம் தேதியன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2004-க்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்சிலி இராசநாயகம், தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.//

2004  ஆம் ஆண்டையே தமிழர்கள் ஆகிய நாங்கள் கடந்து செல்லும் போது...... அந்த நாட்களில் .........
கிங்ஸ்லி மற்றும் ராஜன் ஆகியோர் யாருடைய ஆதரவாளர்கள்...... யாரால் அவர்கள் தேர்தலில் முன்னிறுத்தப்பட்டார்கள்......
ஏன்.... எதற்காக..... என்ன நடந்தது... என்பதை இப்போது அறிந்து யாருக்கும் இந்தப் பலனும் இல்லை
கடந்து செல்வோம்......

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி @பிழம்பு.

அப்பிடியே சுமந்திரன் பற்றிய தகவலையும் பகிரலாமே?

உள்ளக விசாரணை பற்றிய தகவல்களையும் பகிர்ந்தால் என்னிலிருந்து பலரும் தெளிவடையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி @பிழம்பு.

அப்பிடியே சுமந்திரன் பற்றிய தகவலையும் பகிரலாமே?

உள்ளக விசாரணை பற்றிய தகவல்களையும் பகிர்ந்தால் என்னிலிருந்து பலரும் தெளிவடையலாம்.

நாங்கள் தெரிந்தாலும் சிறிலங்கா தேசிய நலனுக்காகவும்,சிறிலங்காவில் மலரப்போகும் சோசலிச அரசுக்காகவும் மாறிதான் சொல்லுவோம்..எழுமென்றால் பண்ணிப்பாருன்கோவன் .. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நாங்கள் தெரிந்தாலும் சிறிலங்கா தேசிய நலனுக்காகவும்,சிறிலங்காவில் மலரப்போகும் சோசலிச அரசுக்காகவும் மாறிதான் சொல்லுவோம்..எழுமென்றால் பண்ணிப்பாருன்கோவன் .. 

இதைத் தான் நானும் யோசித்தேன்.

கேழாமலேயே ஓடிப்போய் 2004ம் ஆண்டு குப்பையைத் தட்டித்தூக்கி போட்டிருக்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.