Jump to content

கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

கிளிநொச்சி பரந்தன் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் அதன் பயனாளிகளிடம் இன்று (16) காலை கையளிக்கப்பட்டன.

கிளிநொச்சி கண்டாவளை  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் சிவபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த 05 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்காக  நிர்மாணிக்கப்பட்ட வீடு, அதன் உரிமையாளரிடம் இன்று காலை 9 மணிக்கு கையளிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராமத்தில் இராணுவத்தில் பணியாற்றும் கணவன் - மனைவி மற்றும் அவர்களுடன் சேர்ந்து வாழும் மாற்றுத்திறனாளியான தாய், தந்தையரை உள்ளடக்கிய குடும்பத்துக்கான வீடொன்றும் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்போது இராணுவ உயரதிகாரிகள், இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், வீடுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள், பொதுமக்கள் என பலர் இணைந்திருந்தனர்.

IMG_20241016_093020.jpg

IMG_20241016_100637.jpg

IMG_20241016_093134.jpg

IMG_20241016_093256.jpg

IMG_20241016_094139.jpg

IMG_20241016_101630.jpg

https://www.virakesari.lk/article/196440

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல், இப்படி இன்னும் பல பரிகாரங்கள் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்ய இருக்கு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

நல்ல செயல், இப்படி இன்னும் பல பரிகாரங்கள் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்ய இருக்கு👍

இதுவும் அரசாங்க காசு தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாதவூரான் said:

இதுவும் அரசாங்க காசு தானே

அப்படித்தான் நானும் நினைக்கிறேன், மேசன் தொழிலாளர்களுக்குப் பதில் இராணுவத்தினர் வேலை செய்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் அவர்கள் பிடித்திருக்கும் வீடுகள் காணிகளையும் மக்களிடம் ஒப்படைத்தால் வரவேற்புக்குரியது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.