Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

திங்கட்கிழமையோ செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் சந்திப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் கஜேந்திரகுமார், அவருடனும் இதுபற்றிக் கலந்துரையாடியதன் பின்னர், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து தீர்மானிக்கவிருக்கிறார்.

செல்வம் மற்றும் சுரேஸ் இவர்கள் இருவரையும் இயக்குவது இந்தியாவின் RAW என்று அழைக்கப்படும் வெளியகப் புலனாய்வு அமைப்பாகும்.  எனவே இங்கு நடைபெறும் அனைத்து உரையாடல்களும் அப்படியே கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள். எனவே கூடியவரை வெளிப்படைத்தன்மையோடு நடந்து ஊடகங்கள்வரை சென்றடைவது ஒன்றுபட முனையும் தமிழ்த் தரபு;புகளுக்குச் சாதகாமாக அமையும். இவர்கள் நாளை இந்தியாவின் சொல்கேட்டு குழப்பிவிடக்குகூடிய சூழலையும் கருத்திலே எடுக்க வேண்டும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    

  • Replies 103
  • Views 5.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • என்னைக் கேட்டால் (அவர் கேட்கப் போவதில்லை😂), சுமந்திரன் இவையெதுவும் செய்யாமல் விலகி இருப்பது தான் அவர் செய்ய வேண்டியதென்பேன். ஏனெனில், சுமந்திரனைக் கவனிக்காமல் விட்டிருந்தால் கூட பரவாயில்லை.  பொய்ச் செ

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நீங்கள், கண்ணாடிக்கு முன் நின்று பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள். 🤣

  • ஒட்டு மொத்த தேசியம் பேசிய கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளார்கள்.  அதிலும் வரட்டு தமிழ் தேசியம் பேசும் சைக்கிள் கட்சி  பெற்ற வாக்குகள் ஒட்டு மொத்தமாக அகில இலங்கை ரீதியாக 39894 மட்டுமே.  படு தோல்வி. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இலங்கையில் தமிழருக்கு தீர்வு திட்டங்கள் வரைய இவர்கள் தேவையா,......இல்லை தேவையில்லை    ஏனென்றால் 

சிறிமா அம்மையார்   குடியரசு யாப்பு வரைந்தார்.    முழுவதும் சிங்களவரால். வரையப்பட்டது 

ஜேஆர்.  ஒரு அரசியல் அமைப்பை எழுதினார்   அதுவும் முழுவதும் சிங்களவரின்.  பங்களிப்புடன்.  

ஏன் இவர்கள் தமிழருக்கு  ஒரு தீர்வை வரைய முடியாது??  

கண்டிப்பாக முடியும் ........ஆனால் அவர்கள் எழுதினால் நிறைவேற்றப்படவேண்டும்      

தமிழரை கொண்டு எழுதினால்   நிறைவேற்றமால். விடலாம்   

முதலில்  இலங்கை அரசாங்கம் ஒரு பகிங்கர  அறிவித்தல் செய்ய வேண்டும்   தமிழருக்கு நாங்கள் தீர்வு வழங்குவோம் என்று  இதுவரை எந்தவொரு அரசாங்கமும் அப்படி அறிவிக்கவில்லை  

இந்த தமிழர்கள் தான்  அந்த சட்டத்தரணி எழுதுவார் இந்த சட்டத்தரணி எழுதுவார் என்கிறார்கள்     யார் நிறைவேற்றுவார்.  அல்லது அமுல் செய்வார்கள் என்று சொல்லுவதில்லை   தமிழர்களின் பங்களிப்புகள் இல்லாமல் ஒவ்வொரு சிங்கள அரசாங்கமும் தீர்வு எழுதுவார்கள்    ஏன் எழுதவில்லை ?? விருப்பமில்லை

முதலில் அவர்களை விரும்ப.  செய்யுங்கள்   பிறகு தீர்வுகளை எழுதலாம் 🙏 

அண்ணை நீலன் தனியே எழுதவில்லை, எழுதுவதில் முதன்மையாய் இருந்தவர் பேரா ஜி எல் பீரிஸ்.

இதன் முதலாவது வரைபு ஒரு உன்னதமான வரைபு. ஆனால் அது வந்ததுமே பெளத்த இனவாதிகள் தாம் தூம் என குத்தித்து, அதை எதிர்த்தார்கள்.

அதன் பின் உப்பு சப்பில்லாத இன்னொரு வரைபு வந்தது. அதை அப்போ புலிகளின் ஹிட் லிஸ்டில் இருந்த கூட்டணி கூட ஏற்கவில்லை.

பின்னர் ஜீ எல் பீரிசும் பக்கா அரசியல்வாதியாகி இனவாதம் பேச தொடங்கி விட்டார்.

——

சுமந்திரனின் வரைபும் ஜெயம்பதி விக்ரமரட்ன என்ற சிங்களவர், இணைந்து, ரணில், சந்திரிகா, சம்பந்தர், ஆனுர போன்றோரின் ஆசியுடந்தான் எழுதப்பட்டது.

ஆக இங்கே எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் - அதிகாரம் தமிழருக்கு பகிரபடுவதே பிரச்சனையாகிறது.

13ம் திருத்தம், எழுதி, சட்டமாகி உள்ளது.

அதை அமல்படுத்த வேண்டியது தன் கடமை என்ற அளவுக்கு ரணில் வாயால் வடை சுட்டார்.

ஆனால் யாரும் அமல்படுத்தவில்லை.

2 hours ago, nochchi said:

ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) அரசியல் நிகழ் நிரலில் அவர்கள் முதலில் கையிலெடுப்பது 13ஆவது நீக்கமாகவே இருக்கும்.(இது ஏலவே கள உறவுகளால் யாழில் குறிப்பிடப்பட்டது) அவர்கள் அதனை ரில்வின் சில்வாவூடாக நூல்விட்டுப்பார்க்க, எங்கள் இந்திய முகவர்களான தமிழ்த்தலைமைகள் உட்படத் தமிழ்த் தேசியத் தலைமைகளும் வாய்விட்டு கொக்கரித்து நிற்கின்றார்கள். 13கிடையாது என்பதை இந்தியப் பயணத்தின் பின்னர் அனுர அரசு உறுதியாகக் கூறும். அதற்குப்பதிலாக நேரடியாக இந்தியாவோடு  பொருண்மிய மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து தமிழரது அரசியலை ஒடுக்கிவிடும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 

பாராளுமன்ற தேர்தல் நேரம் @ஈழப்பிரியன் அண்ணாவுக்கு ஒரு பின்னூட்டத்தில் இதை சொன்னேன்.

இதுதான் ஜேவிபியின் நகர்வாக இருக்க போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nochchi said:

ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) அரசியல் நிகழ் நிரலில் அவர்கள் முதலில் கையிலெடுப்பது 13ஆவது நீக்கமாகவே இருக்கும்.(இது ஏலவே கள உறவுகளால் யாழில் குறிப்பிடப்பட்டது) அவர்கள் அதனை ரில்வின் சில்வாவூடாக நூல்விட்டுப்பார்க்க, எங்கள் இந்திய முகவர்களான தமிழ்த்தலைமைகள் உட்படத் தமிழ்த் தேசியத் தலைமைகளும் வாய்விட்டு கொக்கரித்து நிற்கின்றார்கள். 13கிடையாது என்பதை இந்தியப் பயணத்தின் பின்னர் அனுர அரசு உறுதியாகக் கூறும். அதற்குப்பதிலாக நேரடியாக இந்தியாவோடு  பொருண்மிய மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து தமிழரது அரசியலை ஒடுக்கிவிடும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 

உண்மை அதுதான் நடை பெறும் ...இனவாதம் வேண்டாம் வேண்டாம் என சொல்லுவதும் சிங்கள நலன் கருதி என்பது எனது பார்வை...இவ்வளவு காலமும்(சுதந்திரம் கிடைத்த காலம் முதல்) சிங்கள இனவாதம் /இனக்கலவரங்கள் போன்ற வற்றை உருவாக்கி தங்களது இலக்கில் 90% அடைந்து விட்டனர் சிங்கள அரசியல்வாதிகள்..முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் நில தொடர்பை துண்டித்து விட்டார்கள் ..
அமைச்சர் சந்திரசேகரத்தின் பாராளுமன்ற உரையை கவனித்தீர்களா?...மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தல் நடை பெறும் பொழுது புலிகள் வெட்டு வைத்தார்கள் அதை தொடர்ந்து நூலகம் எரிக்கப்பட்டது என கூறுகிறார் ...மாவட்டங்களுக்கு சில சமயம் அதிக அதிகாரங்களை கொடுக்க முன்வரலாம் இதனால் ...தமிழர் நிலப்பரப்பு தனது அடையாளத்தை இழக்கும்...இலங்கையர் என சொல்வது வெளிநாட்டு உதவிகள் பெறுவதர்கு மட்டுமே....
அருண் ஹெமசந்திரா பிரதி வெளிநாட்டு அமைச்சராக் நியமித்துள்ளனர்...வெகு விரைவில் டயஸ்போராக்களை சந்திக்க முன்வரலாம் ...

டில்வின் சில்வா ஊடாக மாகாணசபை கலைப்புக்கு ஆதரவாக‌ போராட்டங்களை நடதுவார்கள்..அரசுக்கு தேவையான பொழுது இனவாத கருத்துக்களை பரப்ப/போராட்டங்களை நடத்த தான் அவருக்கு அரசாங்கத்தில் பதவிகள் வழங்கவில்லை போலும் மேல் மட்ட உறவில் இருப்பார்கள்..
மகிந்தா ..ரணில் உறவு போன்றது(வலதுசாரி) 
ரில்வின் ..அனுரா உறவு(இடது சாரி உறவு) 

 ..புதிய அரசியல் யாப்பில் அதிகார பகிர்வு மாவட்ட ரீதியில் இருக்கும் இதை சிங்கள மக்கள் சில சமயம் எதிர்க்க கூடும் ...
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

டில்வின் சில்வா ஊடாக மாகாணசபை கலைப்புக்கு ஆதரவாக‌ போராட்டங்களை நடதுவார்கள்..அரசுக்கு தேவையான பொழுது இனவாத கருத்துக்களை பரப்ப/போராட்டங்களை நடத்த தான் அவருக்கு அரசாங்கத்தில் பதவிகள் வழங்கவில்லை போலும் மேல் மட்ட உறவில் இருப்பார்கள்..
மகிந்தா ..ரணில் உறவு போன்றது(வலதுசாரி) 
ரில்வின் ..அனுரா உறவு(இடது சாரி உறவு) 

 ..புதிய அரசியல் யாப்பில் அதிகார பகிர்வு மாவட்ட ரீதியில் இருக்கும் இதை சிங்கள மக்கள் சில சமயம் எதிர்க்க கூடும் ...
 

மிக சரியான பார்வை.

மாவாட்டும் சபை….மன்னிக்கவும் மாவட்ட சபைதான் கிடைக்கப்போகிறது.

அதையே டில்வின் போன்றோர் எதிர்க்க எதிர்க்க, மீட்பர் அனுர பிரான் பெரும் பிரயத்தனப்பட்டு வழங்கினார்  என முடிப்பார்கள்.

எங்க பிரிகேட்டுகளும்…மாவட்டம் தந்த மஹா பிரபு என அனுர காலில் விழுந்து பிரளுவார்கள்.

தேசிய இனம் என்பதோ, காணி உரிமை என்பதோ எவரும் கேட்காதபடி, ஒரே இலங்கையர் கோசம் காதை பிளக்கும்.

இப்படி எம்மை மட்டகளப்பு, யாழ்பாணம் தேர்தல் தொகுதிக்குள் அடக்கிய பின், குடியேற்றம் அரச, தனியார் முறைகளில் துரிதப்படுத்த பட்டு, இந்த மாவட்டங்களுக்குள் நாம் முடக்கப்படுவோம்.

யாரும் எதிர்த்து கேட்டால், இனவாதி, பிரதேசவாதி, Xenophobe .

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

மிக சரியான பார்வை.

யாரும் எதிர்த்து கேட்டால், இனவாதி, பிரதேசவாதி, Xenophobe .

2009 க்கு பின்னர் எனது எழுத்துகளை மீண்டும் மீண்டும் உங்கள் சமீபத்திய கருத்துரைகள் ஞாபகப் படுத்துகின்றன. 

புலி முகம் குத்திய நான் பின்னால் நிற்கிறேன் மற்ற எல்லோரையும் அரவணைத்து ஏதாவது செய்ய எவராவது முன் வருவீர்களா என்று கத்தாத நாளில்லை. வேண்டாத கடவுளில்லை. காலில் விழாத குறை தான் இங்கு. 

இன்று நீங்கள் அதை செய்கிறீர்கள். பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

 

யாரும் எதிர்த்து கேட்டால், இனவாதி, பிரதேசவாதி, Xenophobe .

 

சாணக்கியன் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அனுரா தரப்பு உடனடியாக  தன்னையறியாமல் இப்படி சொன்னார் "உங்களை சுற்றியுள்ளவர்களின் பேச்சை கேட்க வேண்டாம் என்று" அதாவ்து தமிழரசு கட்சியை கேட்க வேண்டாம் என்ற அர்த்தத்தில்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 hours ago, வாலி said:

சுரேஸ் பிரேமச்சந்திரன் வகையறாக்களை விட நீதி நேர்மையானவர்களாக இருந்திருக்கலாம்……..

இருந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, nochchi said:

ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP) அரசியல் நிகழ் நிரலில் அவர்கள் முதலில் கையிலெடுப்பது 13ஆவது நீக்கமாகவே இருக்கும்.(இது ஏலவே கள உறவுகளால் யாழில் குறிப்பிடப்பட்டது) அவர்கள் அதனை ரில்வின் சில்வாவூடாக நூல்விட்டுப்பார்க்க, எங்கள் இந்திய முகவர்களான தமிழ்த்தலைமைகள் உட்படத் தமிழ்த் தேசியத் தலைமைகளும் வாய்விட்டு கொக்கரித்து நிற்கின்றார்கள். 13கிடையாது என்பதை இந்தியப் பயணத்தின் பின்னர் அனுர அரசு உறுதியாகக் கூறும். அதற்குப்பதிலாக நேரடியாக இந்தியாவோடு  பொருண்மிய மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து தமிழரது அரசியலை ஒடுக்கிவிடும். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    
 

நீங்கள் குறிப்பிட்ட அரசியலுக்குள் சீன ஆதிக்கம் வராதா?
ஏனென்றால் இந்தியாவை விட சிறிலங்காவிற்குள் பல அபிவிருத்தி,பாலங்கள், வீதிகளை போட்டவர்கள் சீன ஆதிக்ககாரர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் குறிப்பிட்ட அரசியலுக்குள் சீன ஆதிக்கம் வராதா?
ஏனென்றால் இந்தியாவை விட சிறிலங்காவிற்குள் பல அபிவிருத்தி,பாலங்கள், வீதிகளை போட்டவர்கள் சீன ஆதிக்ககாரர்கள். 

குமாரசாமி ஐயா நல்லது, நாம் கடந்த 100 ஆண்டுகளாகச் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் இருந்துவருகின்றோம். ஈழத்தீவிலே சீனர்களது வருகை நீண்டது. ஆனால், 1960இன் பின் சிறிமாவோ அவர்களது ஆட்சிக்காலத்திலேதான் அரசியல் மட்டத்தில் நெருங்கினார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், இந்தியா வல்லரசு என்று கூவ வெளிக்கிடவும், பொருண்மியத்தில் வளர்நிலையில் இருந்த சீனா முதலில் சந்தைப்பொருண்மியத்தில் தொடங்கி இன்று பொருண்மிய ஆதிக்கமாக வளர்ந்துள்ளதைக் காண்கின்றோம். இங்கே இந்தியா மிகமிக அருகில்; தமிழனத்தின் சுயநிர்ணயஉரிமைக்கு மிகப்பெரும்  தடைக்கல்லாகவும் இருக்கிறது. திபெத்தை ஆதரிக்கும் இந்தியா எம் அரசியல் உரித்தை எதிர்க்கிறது. அதற்காகத் தமிழீழத்தைச் சீனா ஏற்றதாகக்கூறவில்லை. எப்படிக் கருணாநிதியைச் சோனியா சத்தம்போடாமற் தமிழகத்தை வெச்சிருக்க வைத்து இனஅழிப்புக்கு துணைபோனாவோளூ அதேபோல் 13ஐத் தூக்கேக்க நீங்களும் சத்தம்போடக்கூடாது என்று அரசியல்மொழியிலை சொல்லப்போறார். சீனா ஓர் நேர்மையான எதிர்நிலையென்றால், இந்தியா சூழ்ச்சித்தனமான ஆதரவுநிலை. சிங்களத்தின் கொண்டையைப் பிடிக்க தமிழரைக் கொக்கியாகப் பார்க்கிறது. ஆனால், அதனைக் கடப்பதே ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP)   இன்றைய நிலைப்பாடு என்றே எண்ணுகின்றேன். அதன்பின்; யாழுறவுகள் சுட்டுவதுபோல் எல்லோரும் இலங்கையர் என்று தமிழரைச் சிங்களத்துள் கரைத்துவிடுதல்.  

தமிழினம் தமது  நட்புச்சக்திகளை இனங்காண்பது அல்லது நட்புச்சக்திகளை கண்டடைவது என்ற அரசியல் தொலைநோக்குச் செயற்பாடுகள் மிகமிக அவசியமானது. ஆனால், புலம்பெயர் தேசத்திலும்(கனடா தவிர்த்து)ஈழத்திலும் அதற்கான அறிகுறிகளையே காணவில்லை என்பது பெரும் பலவீனமாகும். சிலவேளை கடன்கொடுத்த சக்திகளான இந்தியா, சீனா மற்றும் மேற்குலகக் கூட்டு ஈழத்தீவை மூன்றாகப் பிரித்தெடுத்தாலும், எடுக்கலாம். ஆனால் அவர்கள் இப்படிப் பிரித்தால் நல்லது.  யாழ்ப்பாண அரசு, கண்டியரசு மற்றும் கோட்டையரசு என்றால் சிறப்பு.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

உண்மை அதுதான் நடை பெறும் ...இனவாதம் வேண்டாம் வேண்டாம் என சொல்லுவதும் சிங்கள நலன் கருதி என்பது எனது பார்வை...இவ்வளவு காலமும்(சுதந்திரம் கிடைத்த காலம் முதல்) சிங்கள இனவாதம் /இனக்கலவரங்கள் போன்ற வற்றை உருவாக்கி தங்களது இலக்கில் 90% அடைந்து விட்டனர் சிங்கள அரசியல்வாதிகள்..முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் நில தொடர்பை துண்டித்து விட்டார்கள் ..
அமைச்சர் சந்திரசேகரத்தின் பாராளுமன்ற உரையை கவனித்தீர்களா?...மாவட்ட அபிவிருத்திச்சபை தேர்தல் நடை பெறும் பொழுது புலிகள் வெட்டு வைத்தார்கள் அதை தொடர்ந்து நூலகம் எரிக்கப்பட்டது என கூறுகிறார் ...மாவட்டங்களுக்கு சில சமயம் அதிக அதிகாரங்களை கொடுக்க முன்வரலாம் இதனால் ...தமிழர் நிலப்பரப்பு தனது அடையாளத்தை இழக்கும்...இலங்கையர் என சொல்வது வெளிநாட்டு உதவிகள் பெறுவதர்கு மட்டுமே....
அருண் ஹெமசந்திரா பிரதி வெளிநாட்டு அமைச்சராக் நியமித்துள்ளனர்...வெகு விரைவில் டயஸ்போராக்களை சந்திக்க முன்வரலாம் ...

டில்வின் சில்வா ஊடாக மாகாணசபை கலைப்புக்கு ஆதரவாக‌ போராட்டங்களை நடதுவார்கள்..அரசுக்கு தேவையான பொழுது இனவாத கருத்துக்களை பரப்ப/போராட்டங்களை நடத்த தான் அவருக்கு அரசாங்கத்தில் பதவிகள் வழங்கவில்லை போலும் மேல் மட்ட உறவில் இருப்பார்கள்..
மகிந்தா ..ரணில் உறவு போன்றது(வலதுசாரி) 
ரில்வின் ..அனுரா உறவு(இடது சாரி உறவு) 

 ..புதிய அரசியல் யாப்பில் அதிகார பகிர்வு மாவட்ட ரீதியில் இருக்கும் இதை சிங்கள மக்கள் சில சமயம் எதிர்க்க கூடும் ...
 

உண்மையான நிலை இதுதான். ஆனால்,  சிங்களமக்கள் எதிர்காவிடினும் ரில்வின் மற்றும் பிக்குகளை வைத்துச் சிங்களக் கடும்போக்குவாதிகளையும், சிங்களவரையும் இணைத்துப் போராட வைத்து ஏதோ பெரிதாக அதிகாரப்பகிர்வு தமிழருக்குக் கொடுப்பதாக உலகுக்குக்காட்டித் தமிழருக்கு நாமம் போடும் இலக்கை அடையக்கூடும்.

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

பாராளுமன்ற தேர்தல் நேரம் @ஈழப்பிரியன் அண்ணாவுக்கு ஒரு பின்னூட்டத்தில் இதை சொன்னேன்.

இதுதான் ஜேவிபியின் நகர்வாக இருக்க போகிறது.

இதனை எதிர்கொள்ளக்கூடியவாறு தமிழ்த்தலைமைகள் இல்லாதது பெருந்துயரம். நாடாளுமன்றக் கொள்கைவிளக்க உரையில் அநுர தமிழரது பிரச்சினைகுறித்துத் தொட்டுக்கூடப்பார்க்கவில்லை. க.பொ.வைத்தவிர அனைவரும் சபையில் பாராட்டுத்தெரிவித்துவிட்டு வந்துள்ளார்கள். அங்கே வைத்து எமது பிரச்சினைகளை விவாதித்தால் சிங்கள மக்களையும் சென்றடையும் என்றுகூட யோசிக்கவில்லை.

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

க.பொ.வைத்தவிர அனைவரும் சபையில் பாராட்டுத்தெரிவித்துவிட்டு வந்துள்ளார்கள்.

சாணக்கியன் தனது உரையில்   அர்ச்சுனா மற்றவர்கள் மாதிரி இல்லாமல் காணாமல் ஆக்கபட்டோருக்கான நீதி  தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தமிழர்கான பிரச்சனைகள் பற்றி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி உரையில்  தொட்டுக்கூட பார்க்காதது பற்றி தெரிவித்து இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வரும்…..

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2024 at 03:31, Kapithan said:

உந்த டமில் இனம் அழிந்து போவதற்குத்  தகுதியானதே. 

சுமத்திரனை தமிழ்மக்கள் தோற்கடித்ததில் இருக்கும் மன உளைச்சலில் தமிழ்மக்களுக்கு சாபம் போடுகிறீர்கள். சுமத்திரன்>டக்ளஸ் .பிள்ளையான்>சித்தார்த்தன்.கருணா என்று பார்த்து பார்த்து தமிழ்மக்கள் வெளியேற்றி இருக்கிறார்கள்.செல்வம் 5000 சொச்ச வாக்குகளைப் பெற்றுக் கரையேறிக்கிறார். தமிழ்மக்கள் தமிக்கட்சிகளுக்கு ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து தமிழ்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

சுமத்திரனை தமிழ்மக்கள் தோற்கடித்ததில் இருக்கும் மன உளைச்சலில் தமிழ்மக்களுக்கு சாபம் போடுகிறீர்கள். சுமத்திரன்>டக்ளஸ் .பிள்ளையான்>சித்தார்த்தன்.கருணா என்று பார்த்து பார்த்து தமிழ்மக்கள் வெளியேற்றி இருக்கிறார்கள்.செல்வம் 5000 சொச்ச வாக்குகளைப் பெற்றுக் கரையேறிக்கிறார். தமிழ்மக்கள் தமிக்கட்சிகளுக்கு ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து தமிழ்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும்.

உந்தத் தேர்தல் விடயத்திலேயே நான் ஆர்வம் காட்டுவதில்லை. நிலைமை அப்படி இருக்கும்போது சும் தோற்றுவிட்டதால் நான் மனமுடைந்துவிட்டேன் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

சுமத்திரனை தமிழ்மக்கள் தோற்கடித்ததில் இருக்கும் மன உளைச்சலில் தமிழ்மக்களுக்கு சாபம் போடுகிறீர்கள். சுமத்திரன்>டக்ளஸ் .பிள்ளையான்>சித்தார்த்தன்.கருணா என்று பார்த்து பார்த்து தமிழ்மக்கள் வெளியேற்றி இருக்கிறார்கள்.செல்வம் 5000 சொச்ச வாக்குகளைப் பெற்றுக் கரையேறிக்கிறார். தமிழ்மக்கள் தமிக்கட்சிகளுக்கு ஒரு பாடம் எடுத்திருக்கிறார்கள். அதை உணர்ந்து தமிழ்க்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும்.

ஒட்டு மொத்த தேசியம் பேசிய கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளார்கள்.  அதிலும் வரட்டு தமிழ் தேசியம் பேசும் சைக்கிள் கட்சி  பெற்ற வாக்குகள் ஒட்டு மொத்தமாக அகில இலங்கை ரீதியாக 39894 மட்டுமே.  படு தோல்வி. 

யாழ்பாணத்தில் சைக்கில் கும்பல் பெற்ற வாக்குகளும் மூன்றே மாதம் அரசியல் செய்த அர்சனாவின் சுயேட்சை குழு பெற்ற வாக்குகளும் கிட்ட தட்ட சமமானவையே.  அதாவது சுயேட்சைக்குழு 27855. சைக்கிள் குழு 27986. சென்ற முறையை  விட அரைவாசி குறைவு. 

விருப்புவாக்கில் கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் பெற்ற விருப்பு வாக்குகள் கிட்டத்தட்ட சமமானதே. 

எனவே, மக்கள் கூறிய செய்தி வரட்டு தமிழ்  தேசியத்தை கைவிடுங்கள் என்பதாகும். சைக்கில் கும்பலை தோற்கடித்த மக்கள் சொல்லிய செய்தி  புலம் பெயர் நாடுகளில் இருந்து சைக்கில் கும்பலை ஆதரித்த சுயநல புலிவால் கும்பல்களுக்கும் சேர்தது தான்.    

இதன் திரு கஜேந்திரகுமார் அவர்களும் சற்றே உணர்திருக்கிறார் போலவே தெரிகிறது.  அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டால் அது வரவேற்கத்தக்கதே. தனது முன்னைய அரசியலை திருத்தி அவர் சரியான பாதையில் பயணிக்கும் போது இந்த புலம்பெயர் புலிவால்கள் அவருக்கும் துரோகிப்பட்டம் சூட்டுவார்கள். ஆனால் இந்த சுயநல கும்பலை  புறக்கணித்து அவர் இனியாவது சரியான பாதையில் பயணிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

@விசுகு நீங்கள் எனது கருத்தை விரும்பி விருப்ப புள்ளி இட்டால் ஐயோ நான் மொக்குதனமான கருத்தை எழுதிவிட்டேனோ என் று கவலையுறுவேன்.  ஆனால், நீங்கள் மைனஸ் புள்ளியிடும் போது நான் சரியாக நேர்மையாக சிந்தித்து கருத்தெழுதி  உள்ளேன் என்று அக மகிழ்வேன். நன்றி விசுகு. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

@விசுகு நீங்கள் எனது கருத்தை விரும்பி விருப்ப புள்ளி இட்டால் ஐயோ நான் மொக்குதனமான கருத்தை எழுதிவிட்டேனோ என் று கவலையுறுவேன்.  ஆனால், நீங்கள் மைனஸ் புள்ளியிடும் போது நான் சரியாக நேர்மையாக சிந்தித்து கருத்தெழுதி  உள்ளேன் என்று அக மகிழ்வேன். நன்றி விசுகு. 

உங்கள் வாந்திக்கான எச்சரிக்கை அது. வாந்தி எடுக்காமல் உங்களால் எழுத முடியாது. எனவே மீண்டும் மீண்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

உங்கள் வாந்திக்கான எச்சரிக்கை அது. வாந்தி எடுக்காமல் உங்களால் எழுத முடியாது. எனவே மீண்டும் மீண்டும்.....

எப்போது பார்த்தாலும் எச்சரிக்கை விடுக்கிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள். இப்படி மிரட்டல் விடுப்பதற்கும் எச்சரிக்கை விடுப்பதற்குமான மனநிலையை எது உங்களுக்குத் தருகிறது? 

தேசியத்திற்காக உழைத்ததன் காரணாமாக வருகிறதா? நிச்சயமாக அப்படி இருக்க முடியாது. தேசியம் எப்போதும் ஒத்த கருத்துள்ளோரை  அரவணைத்தே செல்லும். ஆகவே நிச்சயமாக தேசியத்திற்கான உழைப்பு பிறரை மிரட்ட எச்சரிக்கை விடுக்க அதிகாரத்தைத் தராது. 

ஆகவே,.உந்த அசட்டுத் துணிச்சல் எங்கிருந்து வருகிறது? 

🥺

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

உங்கள் வாந்திக்கான எச்சரிக்கை அது. வாந்தி எடுக்காமல் உங்களால் எழுத முடியாது. எனவே மீண்டும் மீண்டும்.....

உங்களுக்கு ஏற்கனவே சொல்லியாச்சு. உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்தால் தான் நான்  கவலைப்படவேண்டும்.  எனது கருத்தை நீங்கள் வெறுத்தால் அந்த கருத்து சரியானது என்பதால் மிக்க மகிழ்சசி எனக்கு உண்டாகும்.   எனவே, நன்றி விசுகு. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

ஒட்டு மொத்த தேசியம் பேசிய கட்சிகளை மக்கள் நிராகரித்துள்ளார்கள்.  அதிலும் வரட்டு தமிழ் தேசியம் பேசும் சைக்கிள் கட்சி  பெற்ற வாக்குகள் ஒட்டு மொத்தமாக அகில இலங்கை ரீதியாக 39894 மட்டுமே.  படு தோல்வி. 

யாழ்பாணத்தில் சைக்கில் கும்பல் பெற்ற வாக்குகளும் மூன்றே மாதம் அரசியல் செய்த அர்சனாவின் சுயேட்சை குழு பெற்ற வாக்குகளும் கிட்ட தட்ட சமமானவையே.  அதாவது சுயேட்சைக்குழு 27855. சைக்கிள் குழு 27986. சென்ற முறையை  விட அரைவாசி குறைவு. 

விருப்புவாக்கில் கஜேந்திரகுமாரும் சுமந்திரனும் பெற்ற விருப்பு வாக்குகள் கிட்டத்தட்ட சமமானதே. 

எனவே, மக்கள் கூறிய செய்தி வரட்டு தமிழ்  தேசியத்தை கைவிடுங்கள் என்பதாகும். சைக்கில் கும்பலை தோற்கடித்த மக்கள் சொல்லிய செய்தி  புலம் பெயர் நாடுகளில் இருந்து சைக்கில் கும்பலை ஆதரித்த சுயநல புலிவால் கும்பல்களுக்கும் சேர்தது தான்.    

இதன் திரு கஜேந்திரகுமார் அவர்களும் சற்றே உணர்திருக்கிறார் போலவே தெரிகிறது.  அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டால் அது வரவேற்கத்தக்கதே. தனது முன்னைய அரசியலை திருத்தி அவர் சரியான பாதையில் பயணிக்கும் போது இந்த புலம்பெயர் புலிவால்கள் அவருக்கும் துரோகிப்பட்டம் சூட்டுவார்கள். ஆனால் இந்த சுயநல கும்பலை  புறக்கணித்து அவர் இனியாவது சரியான பாதையில் பயணிக்க வேண்டும். 

கொஞ்சம் காரமாக இருந்தாலும்…கஜன் மீதான எனது எதிர்பார்ப்பும் இதுதான்.

புலம்பெயர் புலிவால்கள் - அப்படி இப்போ ஒருவருமில்லை - எல்லாரும் அனுர பிரிகேட்🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/12/2024 at 00:52, nochchi said:

குமாரசாமி ஐயா நல்லது, நாம் கடந்த 100 ஆண்டுகளாகச் சிங்கள ஆதிக்கத்தின் கீழ் இருந்துவருகின்றோம். ஈழத்தீவிலே சீனர்களது வருகை நீண்டது. ஆனால், 1960இன் பின் சிறிமாவோ அவர்களது ஆட்சிக்காலத்திலேதான் அரசியல் மட்டத்தில் நெருங்கினார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால், இந்தியா வல்லரசு என்று கூவ வெளிக்கிடவும், பொருண்மியத்தில் வளர்நிலையில் இருந்த சீனா முதலில் சந்தைப்பொருண்மியத்தில் தொடங்கி இன்று பொருண்மிய ஆதிக்கமாக வளர்ந்துள்ளதைக் காண்கின்றோம். இங்கே இந்தியா மிகமிக அருகில்; தமிழனத்தின் சுயநிர்ணயஉரிமைக்கு மிகப்பெரும்  தடைக்கல்லாகவும் இருக்கிறது. திபெத்தை ஆதரிக்கும் இந்தியா எம் அரசியல் உரித்தை எதிர்க்கிறது. அதற்காகத் தமிழீழத்தைச் சீனா ஏற்றதாகக்கூறவில்லை. எப்படிக் கருணாநிதியைச் சோனியா சத்தம்போடாமற் தமிழகத்தை வெச்சிருக்க வைத்து இனஅழிப்புக்கு துணைபோனாவோளூ அதேபோல் 13ஐத் தூக்கேக்க நீங்களும் சத்தம்போடக்கூடாது என்று அரசியல்மொழியிலை சொல்லப்போறார். சீனா ஓர் நேர்மையான எதிர்நிலையென்றால், இந்தியா சூழ்ச்சித்தனமான ஆதரவுநிலை. சிங்களத்தின் கொண்டையைப் பிடிக்க தமிழரைக் கொக்கியாகப் பார்க்கிறது. ஆனால், அதனைக் கடப்பதே ஜனதா விமுக்தி பெரமுனவினது (JVP)மறுவடிவான ஜாதிய ஜன பலவேகயவினது(NPP)   இன்றைய நிலைப்பாடு என்றே எண்ணுகின்றேன். அதன்பின்; யாழுறவுகள் சுட்டுவதுபோல் எல்லோரும் இலங்கையர் என்று தமிழரைச் சிங்களத்துள் கரைத்துவிடுதல்.  

தமிழினம் தமது  நட்புச்சக்திகளை இனங்காண்பது அல்லது நட்புச்சக்திகளை கண்டடைவது என்ற அரசியல் தொலைநோக்குச் செயற்பாடுகள் மிகமிக அவசியமானது. ஆனால், புலம்பெயர் தேசத்திலும்(கனடா தவிர்த்து)ஈழத்திலும் அதற்கான அறிகுறிகளையே காணவில்லை என்பது பெரும் பலவீனமாகும். சிலவேளை கடன்கொடுத்த சக்திகளான இந்தியா, சீனா மற்றும் மேற்குலகக் கூட்டு ஈழத்தீவை மூன்றாகப் பிரித்தெடுத்தாலும், எடுக்கலாம். ஆனால் அவர்கள் இப்படிப் பிரித்தால் நல்லது.  யாழ்ப்பாண அரசு, கண்டியரசு மற்றும் கோட்டையரசு என்றால் சிறப்பு.

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி    

உங்கள் கருத்துகளுக்கு நன்றி நொச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, island said:

உங்களுக்கு ஏற்கனவே சொல்லியாச்சு. உங்களிடம் இருந்து பாராட்டு கிடைத்தால் தான் நான்  கவலைப்படவேண்டும்.  எனது கருத்தை நீங்கள் வெறுத்தால் அந்த கருத்து சரியானது என்பதால் மிக்க மகிழ்சசி எனக்கு உண்டாகும்.   எனவே, நன்றி விசுகு. 

உங்கள் நோக்கம் 

தமிழரை புலம்பெயர் தாயகம் என பிரித்தல் 

தமிழர்களிடமும் அவர்களது போராட்டம் சார்ந்தும் குறைகளை மட்டுமே தேடி தேடி மீண்டும் மீண்டும் பரப்புரை செய்து தமிழர்கள் ஒற்றுமையாக பலமடையாது பார்த்துக் கொள்ளல் 

இதனூடாக தமிழ்த் தேசியத்தை பலவீனமாக்குதல்

இது போன்ற உங்கள் பரப்புரைகள் தொடரும் வரை உங்களை நான் எச்சரிக்கை செய்வேன். அது என் உயிர் உள்ளவரை......

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

புலம்பெயர் புலிவால்கள் - அப்படி இப்போ ஒருவருமில்லை - எல்லாரும் அனுர பிரிகேட்🤣

புலம் பெயர் புலிவால்களாக இருப்பதை விட அநுர பிரிகேட்றுக்கு போய்வருவது நல்லதே. புலிவால்களாக குண்டு சட்டிக்குள் குதிரையோடுகவர்களாக இருக்காமல் அங்கு சென்று சற்றே என்றாலும் அறிவை பெற்று வந்து அறிவார்ந்த தமிழ் தேசியவாதிகளாகவாவது மாறட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
 
May be an image of text
 
 
 
4d 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.