Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!

அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!

நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10ஆம் திகதி, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், பதினொரு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

https://athavannews.com/2025/1415826

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்ச‌லிகள்🙏

  • கருத்துக்கள உறவுகள்

51ம் ஆண்டு நினவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

51ம் ஆண்டு நினவஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.

நானும் ஒரு ஆள் என்று உந்த கூத்து பார்க்க போய் சைக்கிளையும் விட்டுவிட்டு வந்து அடுத்த நாள் போய் எடுத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்

10 JAN, 2025 | 04:06 PM
image

(எம்.நியூட்டன்)

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின்  51ஆவது ஆண்டு நினைவேந்தல் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இன்று (10) காலை நடைபெற்றது.  

இதன்போது உயிர் நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சிவகு ஆதீன குரு முதல்வர் வேலன் சுவாமிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், சோலமன் சிறில் இலங்கை தமிழரசு கட்சி பதில் தலைவர் சீ விகே சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம், முன்னாள் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட், முன்னாள் மாகாண சபை  உறுப்பினர் சுகிர்தன், கஜதீபன்,  முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் கருணாகரன் நாவலன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜோதிலிங்கம் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் பூ மரக்கன்றுகள் அப்பகுதியில் நட்டு வைக்கப்பட்டன.

IMG_20250110_093018.jpg

IMG_20250110_100153.jpg

IMG_20250110_102029.jpg

IMG_20250110_102136.jpg

IMG_20250110_102416.jpg

https://www.virakesari.lk/article/203490

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் நினைவேந்தல் யாழில்! 

10 JAN, 2025 | 06:33 PM
image

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (10) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது உயிரிழந்த ஒன்பது உறவுகளையும் நினைவுகூரி அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன் சி.வி.கே சிவஞானத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது.

இதன்போது வட மாகாண அவைத் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி.வி.கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரான சுகிர்தன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் ஆர்னோல்ட், இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/203518

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.