Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

நன்றி @Kapithan ஒத்துக் கொண்டமைக்கு. செம்மறி ஆட்டுக் கூட்டம் முன்னால் செல்லும் ஆடு எவ்வழியோ அதையே பின்பற்றும்.

அதே போலவே ஓரு சில பாதிரியார்களும் பாஸ்டர்களும் செல்லும் வழி பின்னே இந்த கூட்டமும்.

இங்கு பிரித்தானியாவில் ஒரு சில சபைகளில் January 1ம் திகதி பொங்கலும் கொடுத்து கைவிசேஷமும் கொடுத்தார்கள். இதுவும் சில வருடங்களில் தமிழர் மரபு என்று கொண்டாடப்படும்.

ஆரம்பத்தில் கூறியதுதான்:  உங்கள் சாதி சமய வெறுப்பை இனம் காட்டுவதுதான் எனது நோக்கம். அதைச் செவ்வனே செய்கிறேன். தாங்களும் நன்கு ஒத்துழைக்கிறீர்கள். தங்கள்  ஆதரவுக்கு நன்றி. 

(புகைந்தது இப்போது கொழுந்துவிட்டு எரிகிறது 🤣)

  • Replies 108
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • goshan_che
    goshan_che

    பொங்கல் என்பது….. Wait for it…..: தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல…. வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இத

  • Kadancha
    Kadancha

    இதை பொதுவாகத் தான் சொல்கிறேன். எவரையும் குறை சொல்வதற்கு இல்லை. பொங்கலின்  அர்த்த குறியீடு முன்பே சொல்லிவிட்டேன்.  ஒரு விடயத்தை மட்டும் வைத்து பார்க்க முடியாது , தைப்பொங்கலுக்கு பல

  • தைப்பொங்கல் வரலாறு   தைப்பொங்கல் -  ஒரு வரலாற்று நோக்கு நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேற

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

ஆரம்பத்தில் கூறியதுதான்:  உங்கள் சாதி சமய வெறுப்பை இனம் காட்டுவதுதான் எனது நோக்கம். அதைச் செவ்வனே செய்கிறேன். தாங்களும் நன்கு ஒத்துழைக்கிறீர்கள். தங்கள்  ஆதரவுக்கு நன்றி. 

(புகைந்தது இப்போது கொழுந்துவிட்டு எரிகிறது 🤣)

இங்கு வெளிவருவது உங்களது வெறுப்பு.

இதுவரை பொங்கல் தமிழர் பண்டிகை என நிறுவதற்கான எந்தவொரு ஆதாரத்தையோ ஆராட்சியையோ இணைக்கவில்லை.

(உங்க வீட்டு புக்கைப் பானை கருகிவிடும் கவனம்…)

பொங்கல் சூரியனை தெய்வமாக வழிபடுபவர்களுக்கானதே.

அம்புட்டுத்தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கல் வரலாறு

 
தைப்பொங்கல் -  ஒரு வரலாற்று நோக்கு

நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். அவற்றை வழிபாட்டு விழாக்கள், குடும்ப விழாக்கள், தொழில் விழாக்கள் என பருமட்டாகச் சில பகுப்புகளுக்குள் அடக்கலாம். ஓரினம் கொண்டாடிவருகின்ற அனைத்து விழாக்களுமே காலத்தின் வழியே நின்று நிலைத்து விடுவதில்லை. சில விழாக்கள் மறைந்துவிடக் கூடியவை, வேறு சில காலத்தை வென்று நிலைத்து நின்றுவிட வல்லவை.

இன்றைய காலத்தில் தமிழர் கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் பன்னூறு ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வோடு நிலைத்து நிகழ்கின்ற விழாவாகச் சிறப்புற்றிருக்கின்றது. கதிரவனுக்கு நன்றியறிவித்து, உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் விழாவாக மட்டுமன்றி, ஓரினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் மானுட விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தைப்பொங்கல் விழா.

%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%258D+1.jpgமானுடத்தின் வரலாற்றையும் வாழ்வையும் வடிவமைப்பதில் நிலவமைவு முதன்மை இடம் பெறுகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிலவமைப்பின் அடிப்படையில் தமது வாழ்வை நான்காக வகுத்து, ஒவ்வொன்றுக்குமான சிறப்புகளை வரையறுத்து அதற்கமைய வாழ்ந்தோர் தமிழர். இவ்வாறான நிலவகைப்பட்ட வாழ்விலிருந்தே தேவைக்கேற்ப, விழாக்களும் தோற்றம் கொள்கின்றன. நான்கு நிலத்து மக்களும் தமது அமைவுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, வேறுபட்ட விழாக்களையே கொண்டாடி வந்திருக்கின்றனர்.

பழந்தமிழர் வாழ்வு கொண்டாட்டங்களால் நிறைந்தது. ஆடுவோரும் பாடுவோரும் வாழ்வை அழகுமிக்கதாக்கினர். கூத்தர், பாணர், விறலியர் போன்ற இலக்கிய மாந்தரே இந்தக் கொண்டாடங்களுக்குச் சான்றாவர். ஒவ்வொரு நிலத்தவரும் பல்வகைப்பட்ட கூத்துகளை ஆடியுள்ளனர்.

நிலவமைவில் பொருளியல் வேறுபாடு:

மேற்குறித்த நில அமைவியல் வழி நின்றே தமிழரின் நிலவுடைமைச் சமூக வரலாறு தோற்றம் பெறுகின்றது. நிலவமைவைப் பொறுத்தே ஒரு சமூகத்தின் உறவுகள் வடிவமைக்கப்படுகின்றன வலிமை பெறுகின்றன. சமூக இருப்பின் தளமான பொருளாதார ஆக்கத்தையும் நிலவமைவே வடிவமைக்கின்றது.

"ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் காணப்படும் பண்பாடு என்பது அடிக்கட்டுமானமான பொருளாதார உற்பத்தியைச் சார்ந்தே அமைகின்றது" என்கிறார் கார்ஸ் மார்க்ஸ். நால்வகை நிலத்தினுடைய பண்பாட்டு வேறுபாடுகளும் பொருளாதார வளர்ச்சியின் போக்குகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

மலைகளைக் கொண்ட நிலவமைவான குறிஞ்சியும் மலைகளின் சாரல்களான காடுகளைக் கொண்ட முல்லை நிலமும் வேட்டை சமூக வாழ்வின் கூறுகளைக் கொண்டவையாக இருந்தன. அதேவேளை நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்கக் களங்களைக் கொண்டவையாகவும் இருந்தன. நெய்தல் நில மக்களின் பொருளாதார இருப்பு நிலத்தைச் சார்ந்திராது கடலைச் சார்ந்திருந்தது. இதுவே மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்களுக்குக் காரணமாயிற்று.
இந்நிலவமைவுகளில் மருதநிலமே வலிமையான நிலவுடைமைச் சமூகம் வேகமாக உருவாகவல்ல தளமாக இருந்தது. வரட்சியால் பெரிதும் அழிவுறும் நிலமாக இல்லாமலும் பரந்த விவசாய வயல்வெளிகளைக் கொண்ட தளமாகவும் இது அமைந்தது. நேர்த்தியான குடும்பக் கட்டமைப்பும் தலைமைத்துவத் தோற்றமும் இங்குதான் தோன்றியது என்பர். மக்கள் பாதுகாப்பாக வாழ வல்லதாகவும் தேவைகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய இடமாகவும் மருதம் அமைந்திருந்தது. மக்களின் வாழ்க்கை முறைரய மேலாண்மையை நோக்கி நகர்த்திய சமூகமாகவே மருதச் சமூகம் அடையாளம் காணப்படுகின்றது. இந்த நகர்வுகளின் வழியே நகர், நகரம், நகரியம் நாகரிகம் என்ற சொற்கள் தோன்றியதாகக் கூறுவர்.

ஒவ்வொரு நிலத்திலும் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உற்பத்திகள் வழியே அறுவடை முடிந்து, விளைந்த பொருட்கள் வீடு வரும் நாட்களை மகிழ்வோடு கொண்டாடியிருக்கின்றனர். ஏனைய மூன்று நிலத்தோருக்கும் தலைமை நிலமாகவே மருதம் திகழ்ந்தது. தமிழ் நிலத்தின் பெரும் பரப்பு மருதநிலமாகவே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி முறைக்கு அமைவாகவும் இருந்தது. இதன்வழியே தமிழ்ச் சமூகம் வேளாண்மை சார்ந்த நிலவுடைமைச் சமூகமாக உருப்பெற்றது.

விவசாய நிலங்களின் பண்பாடு மற்ற திணைக்குரிய சிறுபான்மை நிலப்பகுதிகளிலும் தாக்கம் செலுத்தியது. எனவே மருதத்திணையில் அறுவடைக்காலக் கொண்டாட்டங்கள் மற்ற திணை சார்ந்த மக்களிடம் பரவியது. இதனால் மருதநில மக்களின் அறுவடைக் கொண்டாட்டமான பொங்கல் விழா காலவோட்டத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமாக மாறியது. இப்பொங்கல் விழாவுடன் தொடர்புடைய பண்பாட்டுக் கூறுகள் தமிழர்களின் அடையாளங்களாக நிலைபெற்றன.

பொங்கல் விழாவின் தோற்றம்:

உழவு:

வேட்டைச் சமூக வாழ்வின் முடிவாகவும் வேளாண்மைச் சமூக வாழ்வின் தொடக்கமாகவும் அமைந்த காலமே மானுடத்தை வாழ்வியல் மேன்மையை நோக்கி நகர்த்திய காலமாகும். நீர்நிலையருகே நிரந்தரமாகத் தங்கி, உழவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய மாந்தர் இயற்கை இடர், பிறவுயிரிகள் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தே விளைவுகளைப் பெற்றனர். நீண்டதும் கடுமையானதுமான உழைப்புக்குப் பின்னர் உழவின் பயனை வீட்டுக்கு எடுத்துவரும் வேளையில் மகிழ்ச்சி இயல்பாகவே ஏற்படும். அந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கு வித்திடும். பொங்கல் என்ற அறுவடைத் திருநாளுக்கு இந்த மகிழ்வே வித்தாக இருந்திருக்க வேண்டும்.

உழவுத்தொழில் சிறு பயிர் உற்பத்தியிலிருந்து வளர்ச்சி பெற்று, மாரிகால மழையை நம்பிய பெரும்பயிர்ச்செய்கையாக மாற்றம் கண்ட காலத்தில் நெல் பயிரிடல் முதன்மைத் தொழிலாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆவணியில் விதைத்த விதை பயிராகி தைமாதத்தில் அறுவடைக்காகக் காத்திருக்கும். தன்னிறைவுக்கு அப்பால் பிறருக்கும் வழங்கும் வணிகத்தன்மையோடு உழவுத் தொழில் மேன்மை பெறத் தொடங்கிய காலத்தில் உழவைப் போற்றும் விழா மற்றுமொரு வடிவத்தைக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு.

உற்பத்திப் பொருட்களை வணிகம் செய்வதன் வாயிலாகப் பிற தேவைகளையும் நிறைவேற்றி மகிழும் காலமும் இதுவே என்பதால் இந்த அறுவடைக்காலம் கொண்டாட்ட காலமாகவே இருந்திருக்க வேண்டும்.

ஆனால் அறுவடைக்காலத்தில் புத்தரிசி இட்டு மக்கள் பொங்கல் கொண்டாடினர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் எவ்வகைச் சான்றுகளும் இல்லை. அறுவடை சிறப்பாக நடைபெற்று, தாம் விரும்பியவை நிறைவேற வேண்டும் என பெண்கள் தை மாதத்தில் நோன்பு இருந்தார்கள் எனச் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

"தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும் “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் “தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும் “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் கூறுகின்றன.

வானவியல்: 

ஆங்கில நாட்காட்டிக்கு அமைய ஜனவரி 14ம் நாள் தமிழ் நாட்காட்டியின்படி தை முதல்நாள் ஆகும். கதிரவனைச் சுற்றும் பூமின் நீள்வட்டப் பாதையில் கதிரவன் வடக்கு நோக்கி நகரத் தொடங்குவதைப் போன்ற நிலையில் பூமி தன் சுற்றுவட்டத்துக்குள் நகர்கின்றது. இதனை சூரியத் தோற்ற நகர்ச்சி என்பர். தை முதல் ஏற்படும் தோற்ற நகர்ச்சி ஆனி மாதம் வரை இருக்கும் இதை வட செலவு என்பர். வடமொழி உத்தர அயனம் எனப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை தென்படும் தோற்ற நகர்ச்சியைத் தென் செலவு (தக்கண அயனம்) என்பர். தென் செலவில் இருந்து கதிரவத் தோற்ற நகர்ச்சி வட செலவுக்குள் நுழையும் நாளே தமிழர் நாட்காட்டிக்கமைய தை முதல் நாளாகும்.

இரவும் பகலும் எப்போதும் ஒத்த நேரங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆண்டில் இரு நாட்கள் மட்டும் இரவும் பகலும் ஒத்த நேரத்தைக் கொண்டிருக்கும். இதைத் தமிழர் ஒக்க நாட்கள் என அழைக்கின்றனர்.  மார்ச் 22 இல் இரவும் பகலும் 12 மணி நேரத்தைக் கொண்டிருப்பதைப் போல, செப்டெம்பர் 22ம் நாளும் கொண்டிருக்கும். மார்ச் 23 வசந்தகாலத்தில் தொடக்கமாக ( Spring equinox) அமைகின்றது. செம்ரெம்பர் 23 இலையுதிர்காலத்தின் தொடக்கமாக அமைகின்றது.
 

இதைப் போன்றே ஓராண்டில் அதிக நீளமான இரவைக் கொண்ட நாள் ஒன்றும், அதிக நீனமான பகலைக் கொண்ட நாள் ஒன்றும் உள்ளன. டிசம்பர் 22 நீளமான இரவைக் கொண்ட நாளாகவும் ஆனி 22 மிக நீளமான பகலைக் கொண்ட நாளாகவும் உள்ளன. பனிகாலத்தைக் கொண்ட நீண்ட இரவு குறைத் தொடங்குவதால் இதைப் தமிழர் பனி முடங்கல் என்பர். கடும் வெய்யிலைக் கொண்ட வேனில் காலத்தின் பகல் நேரம் குறையத் தொடங்குவதால் ஆனி 23ம் நாளை வேனில் முடங்கல் என்பர்.

மேற்குறித்த இந்த நான்கு நாட்களுமே நான்கு காலத்தினதும் தொடக்கங்களாக இருக்கின்றன. அத்தோடு பலவினத்தவரின் ஆண்டுத் தொடக்கங்களாகவும் இவை இருக்கின்றன.
பூமி தன் உருட்டம் (self-rotation) வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration) என்ற இயக்கத்தையும் கொண்டிருக்கின்றது. இந்த இயக்கங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றும் பூமியை என்றும் ஒரே மாதிரியாக இயங்க விடுவதில்லை. நீண்டகால ஒழுங்கில் மேற்கூறிய நான்கு நாட்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த இயக்கங்களை அடிப்படையாக் கொண்டு கணிக்கும் முறைக்கு சக அயன முறை (Sayana method) என இந்தியர் பெயர் வைத்திருக்கின்றனர். இந்த முற்செலவத்தைப் பொருட்படுத்தாமல் காலம் கணிக்கும் முறைக்கு, நில்லாயன அயன முறை (Nirayana method) என்று பெயர். மேலை நாட்டவர் சக அயன முறையைப் (Sayana method) பின்பற்றியே காலத்தைக் கணிக்கின்றனர். இந்த முறைக்கமைய எப்போதுமே நீண்ட இரவு டிசம்பர் 22ம் நாளில் இருந்ததும் இல்லை. நீண்டகாலத்தின் பின் இருக்கப் போவதும் இல்லை. பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேறு நாட்களில் இருந்திருக்கும் என்கிறது அறிவியல். சில ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய,  பனி முடங்கல் என அழைக்கப்படும் இரவு கூடிய இறுதிநாள் ஜனவரி 14 அல்லது 15 நாளிலே முன்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். குளிர் தரும் இரவுப்பொழுது குறையத் தொடங்குகின்ற, பனி முடங்கல் எனப்படும் அந்த நாளை, தமிழர் பொங்கலாகக் கொண்டாடத் தொடங்கியிருப்பர் என்கின்றது இந்த ஆய்வு. தெற்கு நோக்கிச் சென்று குளிர் தந்த கதிரவன் இனி வடக்கு நோக்கிச் சென்று வெய்யில் தரப் போகின்றான், அவனுக்கு நன்றி கூறுவோம் எனத் தோன்றியதே தைப்பொங்கல் என மேலும் கூறுகின்றது இந்த ஆய்வு. இதுவே பண்டைத் தமிழரின் ஆண்டுத் தொடக்கமாகும் என்பதையும் இது குறிப்பிடத் தவறவில்லை.

பொங்கலின் தோற்றமும் ஊரக ஒருமைப்பாடும்

தைப்பொங்கல் விழாவின் தோற்றம் குறித்து பல்வகைக் கருத்துகள் கூறப்பட்டாலும் வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இந்த விழா நீண்டகாலமாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது எனக் கருத இடமுண்டு.

சமூகப் பொருண்மை மிக்க விழாக்களின் வேர்கள் பாமரர்களை அதிகமாகக் கொண்ட ஊரக வாழ்க்கைமுறைகளிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஊரும் உறவுமாய் நெருங்கி வாழும் கிராமத்தோர், சமூக ஒருமைப்பாட்டையும் ஒருமித்த இலக்குகளையும் கொண்டதாக விழாக்களை உருவாக்கினர். இவர்களே குடும்ப விழாக்களைக் கூட ஊர் கூடி நடத்தும் விழாக்களாகக் கொண்டாடியோர் ஆவர். விழைவுற்று நிகழ்த்துவது விழா என வேர்ச்சொல் ஆய்வாளர் கூறுவர். கிராமத்தார் எப்போதுமே விழைவுகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை நாட்டுப்புற இலக்கியங்கள் கூறுகின்றன. பொங்கல் விழாவும் ஊரக வாழ்வியலின் பொதுமைச் சிறப்புகளைக் கொண்டதாக அவர்களாலேயே வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வேதகால வழிபாட்டு நெறிகளை அறிந்திராத பாமர மக்கள், குழுக்களாக வழிபடும் கிராமியத் தெய்வ வழிபாடுகளை விடுத்து, அனைவருக்கும் பொதுவான கதிரவனுக்கு நன்றி செலுத்துவதைப் பொதுப் பண்பாகக் கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு.

பொங்கல் விழா வெளிப்படுத்தும் உயர் கூறுகள் ஊரக வாழ்வியலுக்கே உரியவை. நகர மாந்தரால் வகுக்கப்பட முடியாத தனித்துவங்கள் பொங்கல் விழாவிலே உண்டு.

சங்க இலக்கியங்கள் உட்பட பல பெரும்பாலான ஏட்டு இலக்கியங்கள், நாட்டுப்புற வாழ்வியலை பெரிதும் பிரதிபலிக்கவில்லை என்பது உண்மையே. வேந்தரையும் கடவுளரையும் பாடுபொருளாகக் கொண்ட இலக்கியங்கள் பாரம மக்களின் வாழ்வைப் பதிவு செய்யத் தவறியிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கியங்களுக்கு உண்டு. ஆனால் உழவுத்தொழில் குறித்துப் பல குறிப்புகளைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. ஏறு தழுவுதல் குறித்தும் பல செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.

இவ்வகையில் பாமர மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் போன்ற பல ஊரக மக்களின் விழாக்களை ஏட்டு இலக்கியங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறே ஊரக அளவில் நடைபெற்று வந்த பொங்கல்விழாவும் இலக்கியங்களில் வேறு பதிவுகளிலும் இடம் பெறாது போயிருக்கலாம்.


பொங்கல் பற்றிய வரலாற்றுச் சான்றுகள்:

பழங்காலப் பெண்கள் தைமாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன என்பதை முன்னர் பார்த்தோம்.
தைமாத்தில் நோன்பிருந்து, வையை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்ப்பபெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாகப் பரிபாடல் (பாடல் 11) கூறுகின்றது.
‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று
மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து
பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர்
தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ
தாயருகா நின்று  தவத் தைந்நீராடல்
நீயுரைத்தி வையை நதி’
பண்டைக்காலத்தில் நெற்பயிர்ச்செய்கை செழித்துச் சிறந்திருந்ததைப் பல இலக்கியங்கள் அழகாக எடுத்துக் கூறுகின்றன. உழவுத் தொழிலின் அனைத்துப் படிநிலைகளையும் சங்கப் பாடல்களில் காணலாம்.

சேற்றில் நாற்றை அழுத்தி நடுவதை, 'நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த
நடுநரொடு சேறி ஆயின்..." என நற்றிணை கூறுகின்றது.
 
%25E0%25AE%25AA%25E0%25AF%2586%25E0%25AE%25BE%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%258D+2+.jpg
'பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்" என அறுவடை செய்யும் உழவரைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

இவ்வாறு உழவைப் போற்றிய பண்டைத் தமிழர் அறுவடைவிழாவைக் கொண்டாடியிருப்பர் என்பதை உறுதியாக நம்பலாம்.

புறநானூறு என்ற சங்க இலக்கியத்தின் 22வது பாடலில், குறுங்கோழியூர்க் கிழார் என்ற புலவர், 'அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல.." எனக் குறிப்பிடுகின்றார்.
அதாவது  'நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன' என்று கூறுகின்றார். அறுவடைக்களங்களில் விழாக்கள் கொண்டாப்பட்டிருக்கின்றன என்ற செய்தி இதன் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாற்சோறு செய்யும் வழக்கம் பழந்தமிழர் காலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. அதை புழுக்கல் என்றே இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும் நோடையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' எனச் சுட்டுகிறார். சங்ககாலத்திலும் பக்தி இயக்க காலத்திலும் புழுக்கல் என்பது தான், பொங்கலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது.

அடுத்து, கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றிய  குறிப்பு இடம்பெறுகின்றது.

‘மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’

என கூறுவதன் வாயிலாகப் பொங்கல் என்ற சொல்லை முதல் தடவையாக இலக்கியத்தில் பதிவு செய்கின்றது.

சோழர்காலத்தில் 'புதியேடு' பண்டிகை என்ற என்ற பெயரில் புதிய அரிசியிட்டுப் பொங்கும் விழா நடைபெற்றதாகத் திருவொற்றியூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. முதல் ராஜேந்திரனின் காளஹஸ்தி கல்வெட்டில் மகர சங்கராந்தி அன்று பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலைத் தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். தை முதல்நாளைக் கதிரவனின் வடசெலவு தொடங்கும் மகர சங்கராந்தி என்றே வட இந்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு படைக்கப்பட்ட திருவமுதை நாம் பொங்கலாகக் கொள்ளலாம்.

கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு கீழ்க்காணும் தகவலைத் தருகின்றது.

சோழர் காலத்தில் உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள் 'உரட்டை சரஅபயன்" எனப்படும் திரிபுவன மாதேவி கைலாசமுடைய மாகாதேவர் கற்கோவிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளாள்.

சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில் நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறாள்.

இக்கல்வெட்டின் வாசகத்தில் 'உத்தராயண சங்கராந்தி" எனும் தொடரும், 'பொங்கல் சோறு" எனும் தொடரும் நம் கருத்தைக் கவருகின்றன. சமயப் போர்வையில் 'பொங்கல் விழா" கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது.

கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்போ டூபாய் எனும் போத்துகல் நாட்டைச் சேர்ந்த பயணி இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்" (Manners and Customs of the Indus  ) எனும் நூலை எழுதியுள்ளார்.

உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும் சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் மக்கள் செய்ததாகவும் வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் கூடக் குறிப்பிட்டிருக்கின்றார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் 'மஞ்சு விரட்டு" போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார்.


இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல்:

விஜயநகரப் பேரரசு காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் தைப்பொங்கல் பற்றிய செய்திகள் பரவலாக எங்கும் காணப்படவில்லை. எனினும் தொடர்ச்சியாக நாட்டார் வாழ்வியல் அழுத்தமானதோர் விழாவாக பொங்கல் நடைபெற்று வந்திருக்கின்றது. தமிழகக் கிராமங்களில் கொண்டாடப்படுகின்ற பொங்கல் விழாக்களை உற்று நோக்கினால் அதன் ஆழமான நீண்ட தொடர்ச்சியையும் செழுமையையும் உணர முடியும்.

தமிழினத்தவரிடையே இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல் பெற்ற எழுச்சி அதற்கு முன்னான காலங்களில் இருக்கவில்லை என்பது உண்மையே. பொங்கல் பற்றிய பிந்திய இலக்கியப் பதிவாக நமக்குக் கிடைப்பது பாரதிதாசன் பாடல்களே.

தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்கிறார் பாரதிதாசன்.

இக்காலத்தின் தோன்றிய திராவிட அமைப்புகளும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஊரக வாழ்வியலின் எல்லைகளுக்குள் மட்டுப்பட்டிருந்த பொங்கல்விழாவைத் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக வெளிக்கொணர்ந்தனர். பொங்கல் விழாவினூடே விரவிக் கிடந்த தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தி விழாவின் சிறப்பை உலகறிச் செய்தனர். அதுவே தமிழரின் புத்தாண்டு எனவும் அறிவித்தனர்.

இன்றைய நாட்களில் உலகத் தமிழர் அனைவரும் பொங்கல் திருநாளைத் தமது தனித்துவமான பண்பாட்டு விழாவாகவே கருதத் தலைப்பட்டுவிட்டனர். மெய்யியற் சமய வழிபாடுகளுக்கப்பால் பழந்தமிழர் வழிபாட்டு முறையான இயற்கை வழிபாட்டின் எச்சமாகவே பொங்கல்விழா திகழ்கின்றது. இவ்விஉண்மையும் உணர்வும் மிக்கதாக இருக்கின்றது.

பொங்கல் விழா வெளிப்படுத்தும் நுட்பமும் ஆழமும் மிக்க பண்பாட்டுக் கூறுகள் குறித்து மற்றுமொரு கட்டுரையில் காண்போம்.
 

https://paniveli.blogspot.com/2019/01/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்🙏 

LRG-20221215162614423727.jpg

@goshan_che சார்! மாட்டுப்பொங்கலையும் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்கள் பாகுபாடில்லாமல் கொண்டாடுவார்களா சார் 😃

பொங்கல் என்பது…..

Wait for it…..:

தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல….

வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இதை பற்றி யாழில் முன்பே எழுதியுள்ளேன்.

ஜனவரி 13-16 க்கு இடையில் இந்திய துணை கண்டத்தின் கிழக்கு கரையில் இருப்போர் கொண்டாடும் பண்டிகை.

அதில் மிகவும் ஸ்பெசலாக கொண்டாடும் கூட்டம் நாம். அவ்வளவுதான்.

அதில் கூட தமிழ் நாட்டில் பொங்கல் நான்கு நாள் கொண்டாட்டம். எமக்கு ஒருநாள். மாடு வைத்கிருப்போருக்கு 2 நாள்.

https://www.holidify.com/collections/harvest-festivals-in-india

————

பொங்கல் இயற்கையை வழிபட்டு நன்றி சொல்லும் நாள். சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் இந்த புதிய பைத்தியங்கள் எம்மை பீடிக்க முதல் நாம் இயற்கை வணங்கிகள். கடவுளாக அன்றி எம்மை பாலிக்கும் சக்தியாக இயற்கையை வணக்கிய தத்துவ மார்க்கத்தினர். அணங்குகளும், பேய்களும், சூரனும், நில தெய்வங்களுமே எமது இறை.

அதன் தொடர்சியே பொங்கல்.

இப்படி தனியே தமிழர் திருவிழாவும் இல்லாத, சைவத்துக்கு சம்பந்தமே இல்லாத பொங்கலை - தமிழ்-சைவர் கொண்டாட்டம் என நீங்கள் சுவீகாரம் செய்ய முனைவது அபத்தமானது.

————-

எனக்கு தெரிய கிறிஸ்தவர்கள் என் அயலில் கொண்டாடியதில்லை.

ஆனால் இங்கே பலர் தம் சொந்த அனுபவத்தை எழுதும் போது அதை நான் எப்படி மறுதலிக்க முடியும்?

சில இடங்களில் முன்பே கொண்டாடி இருக்கலாம். சில இடங்களில் புதிதாக கொண்டாட தொடங்கி இருக்கலாம்.

இதெல்லாம் ஒரு பொருட்டா?

எது முக்கியம்?

நாம் எல்லோரும் தமிழராக உணர்ந்து கொண்டாடும் ஒரு போக்கு வலுப்பெறுகிறது. இன ஒற்றுமைக்கு இது மிக நன்மையானது. இதை வரவேற்கவேண்டியது மட்டுமே நம் கடமை.

பெளத்த-சிங்களவன் ஏனைய சிங்களவரை இப்படித்தான் உள்வாங்குவான்.

என்ன செய்வது வட்டத்தை குறுக்கி, குறுக்கி அழிந்துபோவது இந்த இனத்தின் சாபக்கேடு.

 

54 minutes ago, goshan_che said:

 

எனக்கு தெரிய கிறிஸ்தவர்கள் என் அயலில் கொண்டாடியதில்லை.

ஆனால் இங்கே பலர் தம் சொந்த அனுபவத்தை எழுதும் போது அதை நான் எப்படி மறுதலிக்க முடியும்?

 

 

என் இரு நெருங்கிய கத்தோலிக்க நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று பொங்கல் வைத்து சிறப்பாக தைப்பொங்கலை கொண்டாடுவார்கள். அதில் ஒருவர் சமூகவலைத்தளங்களில் எழுதும் ஜூட் பிரகாஷ்.

சென்னையில் பல கத்தோலிக்க தேவாலயங்களில் பொங்கல் அன்று பொங்கி கொண்டாடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் பொதுவானது இயற்கை வழிபாடு தமிழர் மரபு எனில் தேவாலயங்களில் பொங்கல் ஏன்?  

தேவாலயங்களுக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?

பொங்கலுக்கு மீண்டும் சமய அடையாளம் கொடுப்பது ஏன்?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

நன்றி Justin.

எழுபதுகளிலிருந்து 90  கள் வரை கரவெட்டி மற்றும் பருத்தித்துறை அந்தோனியார் தேவாலயங்களிலோ அல்லது 90களில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திலோ பொங்கல் கொண்டாடியதை கண்டதில்லை.

"கிறிஸ்தவர்கள் பொங்கலை அண்மையில் தான் கொண்டாட ஆரம்பித்தனர்" என்ற உங்கள் கருத்தின் முக்கியத்துவத்தை கொஞ்சம் விளக்குங்கள். "கிறிஸ்தவர்கள் தமிழர் என்ற இன அடையாளத்தை விலக்கி வைத்து விட்டு இப்போது மீள அணிந்து கொள்ள முற்படுகின்றனர்" என்ற கருத்துடன் இருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

"கிறிஸ்தவர்கள் தமிழர் என்ற இன அடையாளத்தை விலக்கி வைத்து விட்டு இப்போது மீள அணிந்து கொள்ள முற்படுகின்றனர்" என்ற கருத்துடன் இருக்கிறீர்களா?

எப்போதும் தமிழர்களே.

23 minutes ago, Justin said:

"கிறிஸ்தவர்கள் பொங்கலை அண்மையில் தான் கொண்டாட ஆரம்பித்தனர்" என்ற உங்கள் கருத்தின் முக்கியத்துவத்தை கொஞ்சம் விளக்குங்கள்.

பொங்கல் பொதுவானது என்று விட்டு  தேவாலயத்திற்குள் கொண்டு செல்வது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பொங்கல் என்பது…..

Wait for it…..:

தனியே தமிழருக்கு மட்டும் உரிய ஒன்றல்ல….

வடகிழக்கு பருவ மழையால் பயிர் செய்து பயன் பெறும் அனைத்து இந்திய துணைக்கண்டத்தின் மக்களும் கொண்டாடும் பண்டிகை. இதை பற்றி யாழில் முன்பே எழுதியுள்ளேன்.

ஜனவரி 13-16 க்கு இடையில் இந்திய துணை கண்டத்தின் கிழக்கு கரையில் இருப்போர் கொண்டாடும் பண்டிகை.

அதில் மிகவும் ஸ்பெசலாக கொண்டாடும் கூட்டம் நாம். அவ்வளவுதான்.

அதில் கூட தமிழ் நாட்டில் பொங்கல் நான்கு நாள் கொண்டாட்டம். எமக்கு ஒருநாள். மாடு வைத்கிருப்போருக்கு 2 நாள்.

https://www.holidify.com/collections/harvest-festivals-in-india

————

பொங்கல் இயற்கையை வழிபட்டு நன்றி சொல்லும் நாள். சைவம், கிறிஸ்தவம், இஸ்லாம் இந்த புதிய பைத்தியங்கள் எம்மை பீடிக்க முதல் நாம் இயற்கை வணங்கிகள். கடவுளாக அன்றி எம்மை பாலிக்கும் சக்தியாக இயற்கையை வணக்கிய தத்துவ மார்க்கத்தினர். அணங்குகளும், பேய்களும், சூரனும், நில தெய்வங்களுமே எமது இறை.

அதன் தொடர்சியே பொங்கல்.

இப்படி தனியே தமிழர் திருவிழாவும் இல்லாத, சைவத்துக்கு சம்பந்தமே இல்லாத பொங்கலை - தமிழ்-சைவர் கொண்டாட்டம் என நீங்கள் சுவீகாரம் செய்ய முனைவது அபத்தமானது.

————-

எனக்கு தெரிய கிறிஸ்தவர்கள் என் அயலில் கொண்டாடியதில்லை.

ஆனால் இங்கே பலர் தம் சொந்த அனுபவத்தை எழுதும் போது அதை நான் எப்படி மறுதலிக்க முடியும்?

சில இடங்களில் முன்பே கொண்டாடி இருக்கலாம். சில இடங்களில் புதிதாக கொண்டாட தொடங்கி இருக்கலாம்.

இதெல்லாம் ஒரு பொருட்டா?

எது முக்கியம்?

நாம் எல்லோரும் தமிழராக உணர்ந்து கொண்டாடும் ஒரு போக்கு வலுப்பெறுகிறது. இன ஒற்றுமைக்கு இது மிக நன்மையானது. இதை வரவேற்கவேண்டியது மட்டுமே நம் கடமை.

பெளத்த-சிங்களவன் ஏனைய சிங்களவரை இப்படித்தான் உள்வாங்குவான்.

என்ன செய்வது வட்டத்தை குறுக்கி, குறுக்கி அழிந்துபோவது இந்த இனத்தின் சாபக்கேடு.

 

பேராசிரியர் சண்முகதாஸின் ஒரு உரையில் கேட்டிருக்கிறேன். ஜப்பானிலும் பொங்கலை "அறுவடை நாள், நன்றி கூறல்" என்ற நிகழ்வாகக் கொண்டாடுவார்களாம். இந்தப் பண்டிகை koshogatsu என்பார்கள் .


ஊரில், 90 களில் யாழ் நகரின் மத்தியில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் பொங்கல் கொண்டாடிய நினைவிருக்கிறது. ஆனால், கத்தோலிக்கர், ஏனைய கிறிஸ்தவர்களின் வீடுகளில் பொங்கலைக் கொண்டாடியதை 90 களில் நான் காணவில்லை.

சில தரவுகள், தகவல்களை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீய நோக்கத்திலும் பயன்படுத்தலாம்😂.

1960 களில், கத்தோலிக்க திருச்சபையில் இப்படியான ஒரு சிந்தனை உருவானது: "நாம் உலகம் முழுவதும் பல்வேறு இனங்கள் நாடுகளிடையே பரவி விட்டோம். ஐரோப்பிய மொழியான லத்தீனில் வழிபாடு செய்யும் படி இந்த ஐரோப்பியரல்லாத மக்களைக் கேட்க முடியாது. எனவே, அந்தந்த இனங்கள், நாடுகள், பாரம்பரியங்களின் படி வழிபாடு செய்ய விதிகளை வகுக்க வேண்டும்"

இதன் விளவு தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம். இதன் முடிவில் உருவான மாற்றங்களுள் சில உடனே அமலுக்கு வந்தன. உதாரணமாக, வழிபாட்டு மொழி, கீதங்கள் என்பன உடனே தாய்மொழிக்கு மாற்றப் பட்டன. சில மாற்றங்கள் நடைமுறையாக நீண்ட காலங்கள் எடுத்தன. பொங்கலை கத்தோலிக்க நிறுவனங்கள் கொண்டாடுதல் என்பது இப்படி நீண்ட நாட்களின் பின் அமலான மாற்றம்.

இது கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்குரிய விளக்கம்.

இங்கிலாந்து திருச்சபை - தமிழ் நாட்டில் வேரூன்றியிருப்பதால்- அவர்களும் பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஆனால், பெந்கோஸ்து, யெஹோவா போன்ற non-denomination இல் இருக்கும் மக்கள் பொங்கல் இன்னும் Paganism என்று தான் பார்ப்பர். இந்த வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளின் வரலாறு தெரியாதோருக்கு, குருடன் யானை பார்த்தது போன்ற "தெளிவு" கிடைக்கும்😎.  

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

எப்போதும் தமிழர்களே.

பொங்கல் பொதுவானது என்று விட்டு  தேவாலயத்திற்குள் கொண்டு செல்வது ஏன்?

முதல் வரியில் இருப்பதை மானசீகமாக எழுதியிருந்தால் இரண்டாவது கேள்வி வந்திருக்காதே😂?

தேவாலயத்திற்குள் தமிழர்கள் இருப்பதால், பொங்கல் தேவாலயத்தினுள்ளும் செல்ல முடியும். கிறிஸ்தவர்கள் தமிழர்களாக இருப்பதால் வேறென்ன எல்லாம் தேவாலயத்தினுள் எடுத்து செல்லப் பட்டன என்று தேடிப் பார்த்தால், இப்படியான முக்கியத்துவமற்ற கேள்விகள் எழாது: வண.சிங்கராயர், வண.இம்மானுவேல், இன்னும் பல கத்தோலிக்க, கிறிஸ்தவ தலைவர்களால் தமிழர்களுக்கெதிரான அநீதிகள் பற்றிய கதையாடலும் தேவாலயத்தினுள்  நுழைந்தது.

மறு பக்கம், சைவ சித்தாந்தத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று, அதை யாழ் பல்கலையில் முக்கிய துறையாக உருவாக்கிய வண. மரியசேவியர் அவர்களால், சைவம் பற்றிய அறிவூட்டல் கூட தேவாலயத்தினுள் நுழைந்தது (திருமறைக்கலா மன்றத்தில், அவர் நடத்திய சைவ சித்தாந்த வகுப்புகளுக்குச் சென்றோருக்கு இது புரியும்!).

எனவே, மீண்டுமொருமுறை: தரவுகள், தகவல்களை நல்ல நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம், தீய நோக்கத்திற்கும் பயன்படுத்தலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

என் இரு நெருங்கிய கத்தோலிக்க நண்பர்கள் ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று பொங்கல் வைத்து சிறப்பாக தைப்பொங்கலை கொண்டாடுவார்கள். அதில் ஒருவர் சமூகவலைத்தளங்களில் எழுதும் ஜூட் பிரகாஷ்.

சென்னையில் பல கத்தோலிக்க தேவாலயங்களில் பொங்கல் அன்று பொங்கி கொண்டாடுவார்கள்.

நினைவூட்டலுக்கு நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

பொங்கல் பொதுவானது இயற்கை வழிபாடு தமிழர் மரபு எனில் தேவாலயங்களில் பொங்கல் ஏன்?  

 

அனைவருக்கும் பொதுவான பண்பாட்டு நிகழ்வுதான் பொங்கல் எனும் போது அதை எங்கே கொண்டாடினால் என்ன?

ஹரோவில் கவுன்சிலே மண்டபம் எடுத்து பொங்கல் விழா கொண்டாடுவார்களே?

கட்டாயம் வீட்டில்தான் பொங்கல் வைக்க வேண்டும் என்பது விதி அல்லவே?

1 hour ago, MEERA said:

தேவாலயங்களுக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?

தேவாலயத்தின் தொழுபவர்கள் தமிழர்கள். 

பொங்கல் தமிழ(ரும்)ர் பண்பாட்டின் அங்கமான harvest festival விளைச்சல் விழா.

இதில் விளைச்சலுக்கு அத்தியாவசியமான சூரியனுக்கு நன்றி செலுத்தப்படும்.

பல கிறிஸ்தவர் தாலி கட்டுவது உங்களுக்கு தெரியாதா? சைவ உருவங்கள் இல்லாமல் குறிசு அல்லது பதக்கங்கள் போட்டு கட்டுவார்கள்.

அவர்களும் தமிழர்களே என நீங்கள் சொல்வது உண்மை எனில் - தாலி கட்டுவது, பொங்கல் வைப்பது போன்ற பண்பாட்டு விடயங்களை, தமது நம்பிக்கைக்கு ஏற்ப சிறிய மாறுதல்களுடன் கடைப்பிடிப்பது அவர்கள் உரிமை அல்லவா?

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

பொங்கலுக்கு மீண்டும் சமய அடையாளம் கொடுப்பது ஏன்?

எப்படி எந்த இந்து/சைவ நூலிலும் பொங்கல் ஒரு சைவ/இந்து விழாவாக சொல்லப்படவில்லையோ அப்படியே பைபிளிலும் பொங்கல் ஒரு கிறிஸ்தவ பண்டிகை என சொல்லப்படவில்லை.

அப்படி கிறிஸ்தவர் உரிமை கோருவதும் இல்லை.

ஆகவே இந்த பயம் அவசியமற்றது.

பொங்கல் இந்து, கிறிஸ்தவ தமிழர்களால் அவர்கள் மத அனுஸ்டானங்களை மீறாமல் கொண்டாடப்படும் ஒரு பண்பாட்டு நிகழ்வு. இதை எந்த மதமும் சுவீகாரிக்க முடியாது.

50 minutes ago, Justin said:

பேராசிரியர் சண்முகதாஸின் ஒரு உரையில் கேட்டிருக்கிறேன். ஜப்பானிலும் பொங்கலை "அறுவடை நாள், நன்றி கூறல்" என்ற நிகழ்வாகக் கொண்டாடுவார்களாம். இந்தப் பண்டிகை koshogatsu என்பார்கள் .


ஊரில், 90 களில் யாழ் நகரின் மத்தியில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் பொங்கல் கொண்டாடிய நினைவிருக்கிறது. ஆனால், கத்தோலிக்கர், ஏனைய கிறிஸ்தவர்களின் வீடுகளில் பொங்கலைக் கொண்டாடியதை 90 களில் நான் காணவில்லை.

சில தரவுகள், தகவல்களை நன்மைக்கும் பயன்படுத்தலாம், தீய நோக்கத்திலும் பயன்படுத்தலாம்😂.

1960 களில், கத்தோலிக்க திருச்சபையில் இப்படியான ஒரு சிந்தனை உருவானது: "நாம் உலகம் முழுவதும் பல்வேறு இனங்கள் நாடுகளிடையே பரவி விட்டோம். ஐரோப்பிய மொழியான லத்தீனில் வழிபாடு செய்யும் படி இந்த ஐரோப்பியரல்லாத மக்களைக் கேட்க முடியாது. எனவே, அந்தந்த இனங்கள், நாடுகள், பாரம்பரியங்களின் படி வழிபாடு செய்ய விதிகளை வகுக்க வேண்டும்"

இதன் விளவு தான் இரண்டாம் வத்திக்கான் சங்கம். இதன் முடிவில் உருவான மாற்றங்களுள் சில உடனே அமலுக்கு வந்தன. உதாரணமாக, வழிபாட்டு மொழி, கீதங்கள் என்பன உடனே தாய்மொழிக்கு மாற்றப் பட்டன. சில மாற்றங்கள் நடைமுறையாக நீண்ட காலங்கள் எடுத்தன. பொங்கலை கத்தோலிக்க நிறுவனங்கள் கொண்டாடுதல் என்பது இப்படி நீண்ட நாட்களின் பின் அமலான மாற்றம்.

இது கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்குரிய விளக்கம்.

இங்கிலாந்து திருச்சபை - தமிழ் நாட்டில் வேரூன்றியிருப்பதால்- அவர்களும் பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்.

ஆனால், பெந்கோஸ்து, யெஹோவா போன்ற non-denomination இல் இருக்கும் மக்கள் பொங்கல் இன்னும் Paganism என்று தான் பார்ப்பர். இந்த வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளின் வரலாறு தெரியாதோருக்கு, குருடன் யானை பார்த்தது போன்ற "தெளிவு" கிடைக்கும்😎.  

சில தெரிந்த, பல தெரியாத தகவல்களுக்கு நன்றி🙏.

  • கருத்துக்கள உறவுகள்

கோலம், மாவிலை, தோரணம் மற்றும் பூக்கள் என்று எல்லாவற்றையும் தமிழர் பண்பாடு என்று முழங்கி விட்டு மற்றைய நாட்களில் எட்டியும் பார்பதில்லை.

இவர்களின் உண்மை முகம் என்ன?

பொங்கல் திகதியே தமிழ் நாட்காட்டியின் மூலம் நிர்ணயிக்கப்படும் 🤣

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, MEERA said:

பொங்கல் பொதுவானது இயற்கை வழிபாடு தமிழர் மரபு எனில் தேவாலயங்களில் பொங்கல் ஏன்?  

தேவாலயங்களுக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?

பொங்கலுக்கு மீண்டும் சமய அடையாளம் கொடுப்பது ஏன்?

முஸ்லீம்களும் தமிழர்கள் தானே? அவர்கள் ஏன் பள்ளிவாசல்களில் பானை வைத்து பொங்குவதில்லை என கேட்டுச்சொல்லுங்கள் மீரா? 😁

  • கருத்துக்கள உறவுகள்

@நிழலி

இதுதான் இந்தியா
IMG-1567.jpg

@goshan_che

உங்களுக்கு பொங்கலுக்கும் பொங்கல் (தொடர்பான) விழாவிற்கும் வேறுபாடு புரியவில்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

 

ஆனால், பெந்கோஸ்து, யெஹோவா போன்ற non-denomination இல் இருக்கும் மக்கள் பொங்கல் இன்னும் Paganism என்று தான் பார்ப்பர். இந்த வெவ்வேறு கிறிஸ்தவ சபைகளின் வரலாறு தெரியாதோருக்கு, குருடன் யானை பார்த்தது போன்ற "தெளிவு" கிடைக்கும்😎.  

இங்கு கிறீஸ்தவர்கள் என்று பொதுவாக ஆரம்பித்த கருத்தாடல் பின்னர் கத்தோலிக்க கிறீஸ்தவர்கள் என்று வட்டமடித்தவர்களில் நீங்களும் ஒருவர்.

12 minutes ago, குமாரசாமி said:

முஸ்லீம்களும் தமிழர்கள் தானே? அவர்கள் ஏன் பள்ளிவாசல்களில் பானை வைத்து பொங்குவதில்லை என கேட்டுச்சொல்லுங்கள் மீரா? 😁

இல்லை அண்ணா அவர்கள் தனி இனம். ஆனாலும் ஒரு சிலர்  வீட்டில் பொங்குகிறார்கள் மசூதியில் அல்ல.

25 minutes ago, MEERA said:

@நிழலி

இதுதான் இந்தியா
IMG-1567.jpg

 

 

எங்களில் மறவன்புலவு சச்சிதானந்தன் இருப்பது போல் எல்லா இனங்களிலு எல்லா மதங்களிலும் இப்படியான லூசுக் கூட்டங்கள் இருக்கின்றன.  இதே போன்று அல்லா தான் ராமன் (இராமர்) என்று சொல்லும் இஸ்லாமிய மதவெறியர்களும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளனர்.

தம் குறுகிய நலங்களை அடைவதற்காக ஒற்றுமையாக இருக்கும் சமூகங்களிற்கிடையில் பிரிவினைகளை தோற்றுவிக்க முயல்கின்ற அயோக்கியர்கள் இல்லாத இனமோ மதமோ கிடையாது.

மாட்டிறைச்சி உண்டதுக்காக முஸ்லிம்களை வெட்டி கொன்ற இந்து சமய வெறியர்களும் இருப்பதும் இந்தியாவில் தான்.  

ஆனால் இப்படியானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு இனத்தையோ தேசத்தையோ எடை போட முடியாது. அவ்வாறு எடை போடுவதும் இவர்களை வைத்துக் கொண்டு இனவாத / மதவாத ரீதியில் நாம் சிந்திப்பதும் இப்படியானவர்களின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகவே அமையும்.

Edited by நிழலி
வரி ஒன்றை இணைக்க

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

இங்கு கிறீஸ்தவர்கள் என்று பொதுவாக ஆரம்பித்த கருத்தாடல் பின்னர் கத்தோலிக்க கிறீஸ்தவர்கள் என்று வட்டமடித்தவர்களில் நீங்களும் ஒருவர்.

இல்லை அண்ணா அவர்கள் தனி இனம். ஆனாலும் ஒரு சிலர்  வீட்டில் பொங்குகிறார்கள் மசூதியில் அல்ல.

தமிழ்க் கிறீஸ்தவர்களோ அல்லது கிறீஸ்தவ தேவாலயங்களோ இந்தத் திருநாளைக் கொண்டாடுகிறார்களோ என்று சமயத்தை இதற்குள் கொண்டுவந்தவர்  தாங்களே. 

உங்கள் கேள்விக்கு தேடிப்பிடித்து ஒரு யூரியூப் காணொளி ஒன்றை இணைத்துவிட்டேன். 

அதற்கு நீங்கள் ""15 வருசம், அதற்கு முதல் தெரியாது"" என்று  விடத்தைக் கக்கினீர்கள். 

தமிழ்க் கத்தோலிக்கரிடையே இந்த மாற்றம் எப்போதிலிருந்து ஏற்பட்டது என்பதை பதிலாகத் தந்திருந்தேன். 

உங்கள் பதிலோ  ""கிறீஸ்தவர்களது பொங்கலைப் ""புக்கைப்  பானை"" என்று அடுத்த துளி விடத்தைக் கக்கினீர்கள். 

அதன் பின்னர் நடப்பதுதான் உங்களுக்குத் தெரியுமே,........

உங்கள் உண்மையான பிரச்சனை கிறீஸ்தவம் அல்ல. உங்கள் பிரச்சனை  என்னவென்று என்னால் அடையாளம் காட்ட முடியும். ஆனால் அது நீண்டுகொண்டே போகும் அது யாழ் களத்திற்கு நன்மையானது அல்ல. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, MEERA said:

இங்கு கிறீஸ்தவர்கள் என்று பொதுவாக ஆரம்பித்த கருத்தாடல் பின்னர் கத்தோலிக்க கிறீஸ்தவர்கள் என்று வட்டமடித்தவர்களில் நீங்களும் ஒருவர்.

 

"Ignorance breeds fear and hatred"

அறிவின்மை என்பது பிரிவினைக்கு ஊற்றாகும் அச்சங்களின் விளை நிலம்!

நிறுவனமயமான கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும், உதிரிகளாக திரியும் ஓரக் குழுக்களான கிறிஸ்தவக் குழுக்களுக்குமிடையேயான வேறு பாடுகள் பற்றிய உங்களுடைய "அறிவின்மை" பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது (மேலே இஸ்லாமியர் பற்றி கேள்வி கேட்டவருக்கும் அதுவே பிரச்சினை😎).

இது ஏன் உங்களைப் போன்ற சில சைவர்களிடம் மட்டும் இருக்கிறதென எனக்கு விளங்கவில்லை. ஏனெனில், நித்தியின் கூத்துகளைப் பார்த்து இந்துக்களை வேறு  மதத்தவர் எடை போடுவதில்லை! சச்சியைப் பார்த்து "இலங்கை பீகார் போல ஆகி விட்டது" என நாம் யாரும் அச்சம் கொள்வதில்லை😂!

ஆனால்: மேலே, நிழலி சுட்டிக் காட்டியிருப்பது போல உங்களைப் போல ஏனைய மதங்கள் பற்றிய அறிவின்மையை தங்கள் முடிவுகளுக்கு அடிப்படையாகக் கொள்வோரால், ஈழம் பீகாராக மாற வாய்ப்புகள் இருக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

"Ignorance breeds fear and hatred"

அறிவின்மை என்பது பிரிவினைக்கு ஊற்றாகும் அச்சங்களின் விளை நிலம்!

நிறுவனமயமான கிறிஸ்தவ திருச்சபைகளுக்கும், உதிரிகளாக திரியும் ஓரக் குழுக்களான கிறிஸ்தவக் குழுக்களுக்குமிடையேயான வேறு பாடுகள் பற்றிய உங்களுடைய "அறிவின்மை" பல இடங்களில் வெளிப்பட்டிருக்கிறது (மேலே இஸ்லாமியர் பற்றி கேள்வி கேட்டவருக்கும் அதுவே பிரச்சினை😎).

இது ஏன் உங்களைப் போன்ற சில சைவர்களிடம் மட்டும் இருக்கிறதென எனக்கு விளங்கவில்லை. ஏனெனில், நித்தியின் கூத்துகளைப் பார்த்து இந்துக்களை வேறு  மதத்தவர் எடை போடுவதில்லை! சச்சியைப் பார்த்து "இலங்கை பீகார் போல ஆகி விட்டது" என நாம் யாரும் அச்சம் கொள்வதில்லை😂!

ஆனால்: மேலே, நிழலி சுட்டிக் காட்டியிருப்பது போல உங்களைப் போல ஏனைய மதங்கள் பற்றிய அறிவின்மையை தங்கள் முடிவுகளுக்கு அடிப்படையாகக் கொள்வோரால், ஈழம் பீகாராக மாற வாய்ப்புகள் இருக்கின்றன. 

உங்கட அறிவீனத்திற்கு நல்ல விளக்கம். 

இன்று இந்த சபைகளும் பல இலட்சக்கணக்கான தமிழர்களுடன் பயணிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

உங்கட அறிவீனத்திற்கு நல்ல விளக்கம். 

இன்று இந்த சபைகளும் பல இலட்சக்கணக்கான தமிழர்களுடன் பயணிக்கின்றது.

நித்திக்கு லட்சக் கணக்கில் பக்தர்கள் இருப்பது போல, இதுவும் அவர்களது உரிமை.

ஆனால், நித்தி குழுவுக்கும், இந்து/சைவ மதத்திற்கும் வேறுபாடு தெரிந்து கொள்ள வேண்டியது நோக்கர்களின் கடமை!

இப்படியான "கடமையை" உங்களிடம் நான் எதிர்பார்த்து இங்கே கருத்தாட ஆரம்பிக்கவில்லை😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

உங்கட அறிவீனத்திற்கு நல்ல விளக்கம். 

இன்று இந்த சபைகளும் பல இலட்சக்கணக்கான தமிழர்களுடன் பயணிக்கின்றது.

ஒரு தனிப்பட்ட  நம்பிக்கையாக அவை  பல்கி பெருவதில் எந்த அபாயமும் இல்லை, ஆனால் உங்களைப்போன்ற சைவ மத  வெறியர்கள் பல்கி பெருகுவது தமிழ் இனத்துக்கே ஆபத்தானது.  அனைத்து மதங்களைச் சேர்ந்த போராளிகளும் தமது உயிரை கொடுத்து நாட்டை  உருவாக்கி அது உங்களை போன்றவர்கள் சகிப்புத்தன்மையற்ற மத வெறியர்கள்  கையில் சிக்கி இருந்தால் எப்படி இருந்திருக்கும். அதை விட சிங்களவர்கள் ஆட்சியில் வாழலாம்.  இயற்கை தனது கடமையை சரியாக தான் செய்துள்ளது என்று நிம்மதி கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, island said:

 இயற்கை தனது கடமையை சரியாக தான் செய்துள்ளது என்று நிம்மதி கொள்ளலாம். 

ஓமோம் இப்ப இயற்கை உலகம் முழுக்க தன்ரை கடமையை செய்து கொண்டுதான் இருக்குது.உக்ரேன்,அமெரிக்கா ஐரோப்பா மத்தியகிழக்கு பிரச்சனைய மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

உங்களுக்கு பொங்கலுக்கும் பொங்கல் (தொடர்பான) விழாவிற்கும் வேறுபாடு புரியவில்லை

இல்லை நான் சொன்ன அனைத்து புலம்பெயர் நிகழ்வுகளும் பொங்கல் விழாவாகவே நடைபெறுகிறன. பொங்கல் பொங்குவது கூட நடப்பதுண்டு. 

வசதி கருதி பொங்கல் வாரநாளில் வந்தால் - அதை வார இறுதியில் கொண்டாடுவார்கள். இதில் எனக்கு உடன்பாடில்லை.

அதை தள்ளி வைத்த பொங்கல் என்று வேணுமானால் சொல்லலாம். பொங்கல் சம்பந்தமான விழா அல்ல.

4 hours ago, குமாரசாமி said:

முஸ்லீம்களும் தமிழர்கள் தானே? அவர்கள் ஏன் பள்ளிவாசல்களில் பானை வைத்து பொங்குவதில்லை என கேட்டுச்சொல்லுங்கள் மீரா? 😁

உப்பிடி உங்களை போன்றோர் அறளை கதையள் கதச்சதும் கூட முஸ்லிம்கள் தாம் தமிழர் அல்ல சோனகர் என்ற தனி இனம் என பிரிய காரணமாகியது.

இப்போ தமிழனாக உணரும் கிறிஸதவரையும் துரத்தி அடியுங்கோ.

இப்படியே எல்லாரையும் துரத்தி, துரத்தி, கடைசியா சாவச்சேரி வெள்ளாம் ஆட்கள் மட்டும்தான் தமிழன் எண்டு வந்து நிப்பியள் 🤣.

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.