Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதிகாலையில் வந்த தொலைபேசிச் செய்தி... 

மேலும் தெரிவிக்கையில், 

பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார்.  எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான்.  அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது.  

பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல் | Balachandran Prabhakaran Cause Of Death

பிரபாகரனின் இளைய மகன் போரில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதால் எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். 

இந்த மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல.  தவறுதலாக(க்ரோஸ் பயரிங்) நடந்தது.  பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல.  இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தான் தெரியவந்தது. 

போர் காலத்தின் போது எனது தந்தை மிகவும் மனம் வருந்திய சம்பவம் இதுவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/balachandran-prabhakaran-cause-of-death-1739072133?itm_source=article

  • கருத்துக்கள உறவுகள்+

நயவஞ்சகம் என்றால் அது சிங்களவன் தான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்த மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல.  தவறுதலாக(க்ரோஸ் பயரிங்) நடந்தது.  பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல.  இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தான் தெரியவந்தது. 

திட்டமிட்டே செய்யப்பட்டது. தலைவரின் குடும்பமே இருக்க கூடாது என்பதில் சிங்களம் மிகத்தெளிவாக இருந்தது. 16 வருடம் கழித்து நாமல் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இந்த மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல.  தவறுதலாக(க்ரோஸ் பயரிங்) நடந்தது.  பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல.  இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தான் தெரியவந்தது. 

போர் காலத்தின் போது எனது தந்தை மிகவும் மனம் வருந்திய சம்பவம் இதுவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி ஒரு கீழ்த்தரமான முறையில் நாமல் தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தி  போர்க்குற்றத்திற்கு உடந்தையாகின்றார்.

மகிந்த மனம் வருந்தியிருந்தால் ஒரு விசாரணை நடாத்தி உண்மையைக் கண்டறிந்திருக்கலாம். உலகுக்குச் சொல்லியிருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

இப்படி ஒரு கீழ்த்தரமான முறையில் நாமல் தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தி  போர்க்குற்றத்திற்கு உடந்தையாகின்றார்.

மகிந்த மனம் வருந்தியிருந்தால் ஒரு விசாரணை நடாத்தி உண்மையைக் கண்டறிந்திருக்கலாம். உலகுக்குச் சொல்லியிருக்கலாம். 

இது மகிந்தவை மாட்டி விட்டு….

கேஸ் ஆக்கி…

அதன் மூலம் நாமல் அனுதாப வாக்கு தேடும் நாடகமாய் இருக்குமோ?

6 hours ago, ஏராளன் said:

தவறுதலாக(க்ரோஸ் பயரிங்)

சாகடித்து விட்டு அதை இப்படி மாற்றி பயன்படுத்த ஒரு சைக்கோவால் மட்டும்தான் முடியும்.

கிரொஸ் பயரிங்ல கூல் டிரிங்ஸ், பிஸ்கெட் எல்லாமுமா கொடுபார்கள். படம் எடுப்பார்கள்களா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஏராளன் said:

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது இளைய மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் வாக்குகளை கவர நடத்தும் அனுதாப நாடகம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தமிழர்களின் வாக்குகளை கவர நடத்தும் அனுதாப நாடகம்.

அதே ...........................

  • கருத்துக்கள உறவுகள்

கொல்லச் சொன்னதே சித்தப்பா. இதில் அப்பா மயங்கி விழுந்தாராம்.

இந்த கும்பலுக்கு இன்னும் யுத்தக் கதையே அரசியல் மூல தனம். அதுதான் விட்டு விட்டு விடுகதைகள் அளந்து கொண்டிருக்கினம்.  சிங்கள மக்களுக்கே இதைக் கேட்டு கேட்டு காது புளிச்சு ஜே வி பிக்கு வாக்குப் போட்டிருக்குது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

திட்டமிட்டே செய்யப்பட்டது. தலைவரின் குடும்பமே இருக்க கூடாது என்பதில் சிங்களம் மிகத்தெளிவாக இருந்தது. 16 வருடம் கழித்து நாமல் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.

குடும்பத்தில் ஒருவரையும் விடாது அழிக்க வேற ஒரு அதிகாரத்தரப்பு கேட்டுக்கொண்டதாக எங்கோ வாசித்த நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் இதை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

ஆனாலும் இதை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டிருக்கிறார். 

சிறு பிள்ளை வேளாண்மை….

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

சிறு பிள்ளை வேளாண்மை….

என்ன செய்வது சிறி

எல்லாமே இழந்த பின்???

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

குடும்பத்தில் ஒருவரையும் விடாது அழிக்க வேற ஒரு அதிகாரத்தரப்பு கேட்டுக்கொண்டதாக எங்கோ வாசித்த நினைவு.

அந்தத் தரப்பு, கருணாதரப்பு என்று வந்த செய்தி ஒன்றை வாசித்த ஞாபகம்.

இறக்கும்போது துன்பம் ஏதுமின்றி அமைதியாக இறக்கக் கிடைப்பது ஒரு வரம். அந்த வரம், மகிந்தர் குடும்பத்திற்கும், அவரோடு சேர்ந்தோருக்கும் இல்லவே இல்லை.🥺

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, விசுகு said:

ஆனாலும் இதை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு வந்து விட்டிருக்கிறார். 

அவர்கள் பூனையும் எலியும் விளையாட்டு விளையாடுவார்கள்.அவர்களுடன்  எமது தமிழ் அரசியல்வாதிகளும் சேர்ந்து விளையாடுவார்கள்.

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, ஏராளன் said:

குடும்பத்தில் ஒருவரையும் விடாது அழிக்க வேற ஒரு அதிகாரத்தரப்பு கேட்டுக்கொண்டதாக எங்கோ வாசித்த நினைவு.

இந்தியாக்காரன் என்று நான் சொல்லவில்லை!

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.