Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

s_p_thamilchelvan_oslo_200.jpg

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப தமிழ்செல்வன் இன்று காலை நடந்த சிறீலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைத்துள்ளார். இவருடன் மேலும் சில போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர்.

தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு

[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 01:21 PM ஈழம்] [தாயக செய்தியாளர்]

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப்புலிகள்,

கிளிநொச்சி

2007.11.02

பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு

இன்று காலை ஆறு மணியளவில் எமது அமைப்பின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களும் லெப்-கேணல் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், கப்டன் நேதாஜி, லெப் ஆட்சிவேல், லெப் வாகைக்குமரன் ஆகியோரும் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தனர் என்பதை தமிழீழ மக்களுக்கும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சோ.சீரன்,

செயலர்,

தலைமைச் செயலகம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by nedukkalapoovan

  • Replies 152
  • Views 33.3k
  • Created
  • Last Reply

Thamilchelvan killed in SLAF air attack

[TamilNet, Friday, 02 November 2007, 07:27 GMT]

S.P. Thamilchelvan, Liberation Tigers Political Head was killed in Sri Lanka Air Force (SLAF) aerial bombardment Friday morning in Ki'linochchi. The Head Quarters of the Liberation Tigers of Tamileelam (LTTE) in a press communique said it was conveying the loss of Brigadier Thamilchelvan with profound sadness to the people of Tamil Eelam, the Tamil diaspora and the Global Community. The Sri Lanka Air Force attack has targeted the residence of the members of the Political Division.

S.P.Thamilchelvan

The Secretary General at the Head Quarters of the LTTE, S. Cheeran said the LTTE Political Head was killed in the SLAF bombardment that took place at 6:00 a.m. Friday along with Lt. Col. Anpumani (Alex), Major Mikuthan, Captain Neathaji, Lt. Aadchiveal and Lt. Vaakaikkumaran.

The LTTE has conferred its highest military rank, Brigadier, to Mr. Thamilchelvan.

தமிழ்நெற்

அதிர்சியான செய்தி தமிழ் செல்வன் அண்ணாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது அவருக்கு கண்ணீர் அஞ்சலிகள் அவரது குடும்பத்தினரின் துக்கத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கின்றோம்

பாலா மாமாவின் இழப்பையே நாம் இன்னமும் ....:wub:

எழுத முடியவில்லை..................... அண்ணா...

கண்ணீர் வழிகிறது...

Edited by vasisutha

  • கருத்துக்கள உறவுகள்

நினைக்கவே கவலையா இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழமக்களுக்கு இது ஒரு பேரிழப்பாகும். சுபதமிழ்ச்செல்வன் அண்ணாவிற்க்கு எனது வீர வணக்கங்கள். மிகப்பெரிய அதிர்ச்சிச் செய்தியாக இருக்கிறது.

ஐயோ........ கடவுளே? என்ன இது? :wub::lol: சோதனையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்சியான விமானத்தாக்குதல்களால் அண்மைக்காலத்தில் பல மூத்த போராளிகளை இழந்து கொண்டே வந்திருக்கின்றோம். இது அதி உச்சமாகிவிட்டது. விமானத்தாக்குதல்களால் எமது போராளிகளுக்கு தொடர்சியான ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும் கவனக் குறைவாக இருப்பதா..???!

எமது இனத்தின் குரல்கள் இப்படி ஓய்வதா...???!

கண்ணீரால் பேசுவதை விட.. ஆதங்கத்தைக் கொட்டுவதை விட என்ன செய்ய முடியும். உலகில் அநாதைகளாக உள்ள தமிழ் மக்களாகிய நாம். :wub:

செய்தி கேட்டதும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.

அவர் மறைவால் வேதனையடைந்துள்ள தமிழ் மக்களின் துயரத்தில் பங்குகொள்கிறோம்.

தொடர்சியான விமானத்தாக்குதல்களால் அண்மைக்காலத்தில் பல மூத்த போராளிகளை இழந்து கொண்டே வந்திருக்கின்றோம். இது அதி உச்சமாகிவிட்டது. விமானத்தாக்குதல்களால் எமது போராளிகளுக்கு தொடர்சியான ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும் கவனக் குறைவாக இருப்பதா..???!

எமது இனத்தின் குரல்கள் இப்படி ஓய்வதா...???!

கண்ணீரால் பேசுவதை விட.. ஆதங்கத்தைக் கொட்டுவதை விட என்ன செய்ய முடியும். உலகில் அநாதைகளாக உள்ள தமிழ் மக்களாகிய நாம். :wub:

பாதுகாப்பா இருந்திருக்கலாமே..:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்சியான விமானத்தாக்குதல்களால் அண்மைக்காலத்தில் பல மூத்த போராளிகளை இழந்து கொண்டே வந்திருக்கின்றோம். இது அதி உச்சமாகிவிட்டது. விமானத்தாக்குதல்களால் எமது போராளிகளுக்கு தொடர்சியான ஆபத்து உள்ளது என்பதை அறிந்தும் கவனக் குறைவாக இருப்பதா..???!

விமான எதிர்ப்பு பீரங்கியின் தேவை அதிகமாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்????.................................................... :wub::lol::D

Edited by Danklas

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

_40967664_breaking_news_203.jpg

பிபிசி தனது பிரதான செய்திகளில் இதை முக்கியம் கொடுத்துப் பிரசுரித்துள்ளது.

Senior Tamil Tiger leader killed

A senior leader of Sri Lanka's Tamil Tiger rebels has been killed in a government air raid, the rebels say.

SP Thamilselvan was the head of the Tigers' political wing and held an important position in the rebel hierarchy.

The rebels said he died along with five others in an air strike by the Sri Lankan military.

The Tamil Tigers announced the news on their website, saying Mr Thamilselvan died at 0600 local time on Friday.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7074450.stm

Edited by nedukkalapoovan

ஒரு நிமிடம் சுவாசமே நின்று விட்டது. இதன் விளைவை சிங்களம் அறுவடை செய்யும்.

மீண்டும் உறுதி கொள்வோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில் சில இடங்களில்வெடி (பட்டாசு) கொழுத்துகிறார்கள்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

:wub: எமது அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உயர்திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்னும் ஆறு போராளிகளுடன் வீரச்சாவு அடைந்துள்ளார். அவர் பிரிவால் துயருரும் எமது தேசியத்தலைவர், போராளிகள், தமிழ் மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

நிரந்தர வெற்றிடமொன்றை எதிரி ஏற்படுத்தி விட்டான். ஆனாலும் எமது பயணம் தொடரும் உமது நினைவுகளோடு !

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

சிறிலங்கா வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு வழிக்கிறது. அய்யோ, கவலையாகக் கிடக்குதே,

தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் மற்றைய வீரர்களுக்கும் வீரவணக்கங்கள்.

Edited by இணையவன்

மிகஅதிர்சியாய்இருக்கு

வீரச்சாவடைந்தஅனைவருக்கும் எனது

கண்ணீர்அஞ்சலிகள்.

பேச்சுக்குப் போனவர்களில் இது மூன்றாவது பேரிழப்பு!

தமிழ்ச்செல்வன்(பானு) அண்ணாவிற்கும் ஏனையவர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கின்றோம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மதிநுட்பமுடைய அரசியல் இராஜதந்திரம் கொண்டவரும் தனது சிரிப்புடனேயே சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு தகுந்த விதமாக செவ்வியளித்து விடுதலைப்புலிகள் அமைப்பை மிகவும் உயர் மதிப்பளிக்கச் செய்து வந்தவருமான தமிழ்த் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வனுக்கு புலம்பெயர் தமிழினம் தலைசாய்த்து அஞ்சலி செலுத்துகின்றது. நீங்கள் மறைந்தாலும் உங்கள் இலட்சியம் மறையாது. இவருடன் தம்முயிர் நீத்த போராளிகள் அனைவருக்கும் எம் இதய அஞ்சலிகள். அஞ்சலிப்பதோடு நின்றுவிடாது வான் தாக்குதல்களை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே புலம்பெயர் மக்கள் செய்ய வேண்டிய முதற் பணி.

  • கருத்துக்கள உறவுகள்

விமானத் தாக்குதலில் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பலி

வெள்ளிக்கிழமை, நவம்பர் 2, 2007

கிளிநொச்சி: கிளிநொச்சியில் இன்று காலை இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் பலியானார்.

முல்லைத்தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய நிலைகள் மீது நேற்று இலங்கை விமானப்படை கடும் தாக்குதல் நடத்தியது. இதில் முக்கிய பயிற்சி முகாம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை கிளிநொச்சியில் இலங்கை விமானப்படை விமானங்கள் முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தின. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களின் வீடுகள் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச் செல்வன் பலியானார். இத் தகவலை விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமையக பொதுச் செயலாளர் சீரன் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை 6 மணிக்கு இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில், அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் மரணமடைந்தார்.

அவருடன் அன்புமணி (அலெக்ஸ்), மேஜர் மிகுதன், நேதாஜி, அடைக்கவேல், வாகைகுமாரன் ஆகியோரும் பலியானார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சுப. தமிழ்ச் செல்வன், விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். அதன் நார்வே தூதுக்குழுவின் ஏற்பாட்டின் பேரில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் புலிகள் அமைப்பின் சார்பில் சென்ற குழுக்களுக்கு தமிழ்ச் செல்வனே தலைமை தாங்கிச் சென்றார்.

விமானத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் பலியானது விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2007/11...air-attack.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.