Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பேசப்படுவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுதது தானே தவிர....

மேலும் மலையகத்தின் வளம் மற்றும் மண் சார்ந்த தெளிவுள்ளவர்கள் அவர்களை காய்ந்த நிலப்பரப்பு களில் குடியேற்ற நினைக்கவே மாட்டார்கள்.

  • Replies 83
  • Views 3.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து

  • என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்ற

  • இவ் வகையான குடியேற்றங்கள் முன்னரும் நிகழ்ந்தது. டேவிட் ஐயாவின் 'காந்தியம்' அமைப்பு, 1970கள் மற்றும் 1980களில் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்தது. 1977 ஆம் ஆண்டில்

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che யின் குளிர்கால தூக்கம் (Winterschlaf) இடையில் சுமந்திரனால் குழம்பி விட்டதா. 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13/12/2025 at 07:12, தமிழ் சிறி said:

வாயால், வடை சுடுவதில்…. சுமந்திரன் கில்லாடி. 😁

இப்பிடி இவர் சுட்ட வடைகள்… ஏராளம். 😂

அதை தின்னத்தான் ஆட்கள் கிடைக்குதில்லை. 🤣

நடக்காத முடியாத விடயத்தை பேசு பொருளாக்கி தன்னை பிரபல்யமாக்குவதில் சுமந்திரனார் ஒரு நடிகர் திலகம்.

பிரதேசவாதம் பிரதேசவாதம் என யார் அலறுபவர்கள் யாரென்று பார்த்தால் எல்லாம் சுமந்திரன் போராளிகள் தான்.அன்றைய ஆயுத போராட்டத்தை அடியோடு வெறுக்கின்றேன் என கூறும் சுமந்திரன் தான் அந்த அவலத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, தமிழ் சிறி said:

@goshan_che யின் குளிர்கால தூக்கம் (Winterschlaf) இடையில் சுமந்திரனால் குழம்பி விட்டதா. 😂 🤣

கோசான் சார்! நீர்மூழ்கி கப்பல்ல கப்டனாய் வேலை செய்யுறார் எண்டு நான் நினைக்கிறன்.😂

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை.

தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமேகுய்யோ முறையோஎன்று கத்தவில்லை.

தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போஎன்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை.

புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து  வாழவில்லையா?

புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா?

சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்?

ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

லைன் ஒற்றை அறைக்குள் பல சந்ததிகள் குடும்பம் நடத்த வேண்டிய கலாச்சார கேடான நிலை.

மலை சரிவுகளில் லைன்கள்.

1000 ரூபாய் வேதனம்.

வெளிநாடுகாள் சொல்லும் modern slavery தான் மலையகத்தில் நடப்பது.

அந்த நரகத்தில் இருந்து அவர்களை மீட்டு நாம் அவர்களுக்கு ஒரு கெளரவமான வாழ்வை கொடுத்த படி, வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியாதா?

முதலில் நடக்கக் கூடிய விஷயங்களை பற்றிப் பேசுவோம்

வடக்கிலேயே காணிகள் அற்ற..... வீடுகள் அற்ற..... பல குடும்பங்கள் வீடமைப்புத் திட்டங்கள் மூலம் அதனப் பெற்று வாழும் இடங்களை பாருங்கள்.

மழைக்காலம் வெளியே செல்ல முடியாத அளவில் வெள்ளம் .....சரியான வீதிகள் இல்லை..... மின்சாரம் இல்லை...... போக்குவரத்து சுத்தமாக இல்லை

இப்படியான நிலையில் இருக்கும் போது-----

இன்னும் குடியேற்றம் வீடமைப்பு என்று வாய்ச சவடால் விடுவது சுமோவிற்கும் மனோவிற்கும் புதிதல்ல

ஏற்கனவே முஸ்லீம்கள் ஓட்டுமடத்தில் வாழும் நிலையைப் பாருங்கள்

முதலில் அவர்களுக்கு ஒரு சுகாதாரமான வாழ்க்கை வாழ ஆவன செய்ய வக்கில்லாத சுமோ........

மலையகத்தில் இருந்து மக்களை வரச் சொல்வது எப்படியான ஒரு கயமைத் தனமானது என்று எல்லோருக்கும் விளங்கும் 😂

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவிற்கு 1970ம் ஆண்டுகளில் குடிபெயர்ந்து காட்டு பகுதியை வளப்படுத்தி வயல், தோட்டம் செய்தார்கள் மலையகத்து மக்கள் பகுதியினர். இப்போது மூன்றாம் தலைமுறையும் வந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நியாயம் said:

இப்போது மூன்றாம் தலைமுறையும் வந்துவிட்டது.

அவர்கள் இன்றும் அந்த பகுதியில் மலையக மக்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள் என்பது தான் யதார்த்தம் வரலாறு. டொட்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

அவர்கள் இன்றும் அந்த பகுதியில் மலையக மக்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள் என்பது தான் யதார்த்தம் வரலாறு. டொட்.

ஏன் அழைக்கக் கூடாது? மலையகத் தமிழர் என்பது ஒரு தாழ்வான பெயர் என்று இருந்தால் தான் அப்படி அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். அது அவர்கள் பிறந்து வாழ்ந்த பிரதேசம் என்ற அர்த்தத்தில் சொன்னால் தவறு அதில் இல்லையே? வெளிநாட்டில் வளரும் எங்கள் அடுத்த சந்ததியை "பிரெஞ்சுக் காரன், ஜேர்மனியன், அமெரிக்கன் என்ற" தேசிய அடையாளங்களினால் அழைக்கலாம். அதே வேளை ஆசிய, தென்னாசிய, (சில சமயம்) தமிழ் என்ற வம்சாவளியைக் குறிப்பிட்டும் அடையாளப் படுத்துகிறார்கள் அல்லவா?

1 hour ago, வாத்தியார் said:

முதலில் நடக்கக் கூடிய விஷயங்களை பற்றிப் பேசுவோம்

வடக்கிலேயே காணிகள் அற்ற..... வீடுகள் அற்ற..... பல குடும்பங்கள் வீடமைப்புத் திட்டங்கள் மூலம் அதனப் பெற்று வாழும் இடங்களை பாருங்கள்.

மழைக்காலம் வெளியே செல்ல முடியாத அளவில் வெள்ளம் .....சரியான வீதிகள் இல்லை..... மின்சாரம் இல்லை...... போக்குவரத்து சுத்தமாக இல்லை

இப்படியான நிலையில் இருக்கும் போது-----

இன்னும் குடியேற்றம் வீடமைப்பு என்று வாய்ச சவடால் விடுவது சுமோவிற்கும் மனோவிற்கும் புதிதல்ல

ஏற்கனவே முஸ்லீம்கள் ஓட்டுமடத்தில் வாழும் நிலையைப் பாருங்கள்

முதலில் அவர்களுக்கு ஒரு சுகாதாரமான வாழ்க்கை வாழ ஆவன செய்ய வக்கில்லாத சுமோ........

மலையகத்தில் இருந்து மக்களை வரச் சொல்வது எப்படியான ஒரு கயமைத் தனமானது என்று எல்லோருக்கும் விளங்கும் 😂

🤣 ஓம்.."அங்கே பார்! மேலே பார்! கீழே பார்!.. உரையாடலுக்கு மையமான கருத்தை மட்டும் பார்க்காதே! " இந்த ட்ராபிக் கான்ஸ்ரபிள் வேலையை முன்னர் தமிழக அரசியல் திரிகளில் மட்டும் பார்த்தோம், இப்போது எல்லா திரிகளிலும் இந்த வேலையைச் செய்வோர் இருக்கிறார்கள் போல😎!

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2025 at 14:02, colomban said:

இங்கு மலையக மக்கள் என்றுதானே கூறியுள்ளார் அப்படியானால் மலையகத்தில் வாழும் நாங்கள் முஸ்லீம்களும் வந்து குடியேரலாமா?.

மலையக மக்கள் என்ற (வரலாற்று) சமூக அடையாளம் - சஞ்சிக்கூலிகளாக (indentured labour) இந்தியாவில் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிக்கு மட்டுமே.

அடிமை தனத்தை (தொழிலை சட்ட அடிப்படையில் தடைசெய்த பொது, இந்த சஞ்சிக்கூலி எனும் (அடிமைத்தனம் பாற்ப்பட்ட) தொழிலார் அமைப்பே, (அடிமை தொழிலுக்கு) மாற்றீடாக உருவாக்கப்பட்டது.

எனவே மலையக மக்கள் எனும் அடையாளம் என்று (சுமந்திரன்) சொல்வது அவர்களை குறித்து மட்டுமே, சரியானது.

மற்றவர்களுக்கு, இந்த வரலாறு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

இங்கே பேசப்படுவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுதது தானே தவிர....

மன்னிக்கவும் அண்ணா... உங்களுடைய இந்த கருத்து பண்பற்ற ஒன்றாக எனக்குப் படவில்லை .

நனைகிற ஆடு... குளிர் காய்கிற ஓநாய் ...

உண்மையில் மலையகத்து மக்களின் யதார்த்த லயத்து வாழ்க்கை நிலை, இற்றை திகதி வரைக்கும் எஸ்டேட்ட தோரை, கங்காணி, ஆராச்சி (கிராம சேவகர்) இப்படி வரிசையாக அந்த அப்பாவி மக்களை மனிதர்களாக கூட மதிக்காமல் நடத்தும் நடப்பு உங்களுக்கு தெரியுமா?

இன்று அனைத்தையும் இழந்து நிட்கும் அந்த மக்களை பற்றி பேசுகிற ஒரு தலைப்பில் நீங்கள் ஓநாய் வேட்டையில் புளங்காகிதம் அடைகிறீர்கள்.

மலையகத்து மண் வளமாக இருக்கிறது... அந்த மலையகத்தை பெருந்தோட்டமாக உருவாக்கிய மக்கள் இன்றுவரை வளமாக இருக்கிறார்களா?

சுமந்திரனை கழுவி ஊத்த மலையக மக்களின் கண்ணீர் வேண்டாமே. 🤲

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

மலையக தமிழ் மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதற்கான பிரதான காரணமாகவும், பெரு விருப்பமாகவும் நாங்கள் சொல்லும் காரணம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மிகவும் சரிந்து இருக்கும் சனத்தொகையையும், தமிழ் மக்களின் சனப் பரம்பலையும் அதிகரிக்கலாம் என்பதே. அதன் மூலம் எங்களின் நிலத்தையும், இருப்பையும், அரசியல் பலத்தையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இதன் பின்னால் இருக்கும் நோக்கம்.

இவ்வாறு குடியேற்றப்படும் மலையக தமிழ் மக்களின் நிலை என்னவாகும் என்றே நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மலையக மக்கள் இதை விரும்புகின்றார்களா என்ற இன்னொரு பிரதான கேள்வியும் இருக்கின்றது.

இந்த மக்கள் குடியேற்றப்படும் அல்லது குடியேறும் இடங்களில் அங்கு ஏற்கனவே இருக்கும் சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதே நிஜம். மூன்று தலைமுறைகளாக அவர்கள் புதிய ஒரு இடத்தில் இருந்தாலும், அங்கு அவர்கள் சமனான மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை.

பறை என்னும் இசை பற்றி சமீப காலங்களில் நிறையவே உரையாடப்படுகின்றன. தமிழர்களின் ஆதி இசைகளில் இதுவும் ஒன்று என்கின்றோம். கொண்டாடப்பட வேண்டும் என்கின்றோம். பறையும், இசையும், அந்த மனிதர்கள் பற்றியும் சினிமாக்கள், கதைகள் கூட வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த 50 வருடங்களாக, போராட்ட காலம் உட்பட, இந்த பறை வாசிப்பவர்கள் கோவிலுக்கு வெளியே அதே இடத்திலேயே நின்று வாசிக்கின்றார்கள் என்று நாம் சொல்லத் தவறுகின்றோம். கோவில்களில் ஒரு தவில் அல்லது நாதஸ்வரக் கலைஞக்கும், ஒரு பறையை வாசிப்பவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் வேறுபாடுகளை நாம் காணத் தவறுகின்றோம். இந்த வேறுபாடுகளின் பின்னால் இருப்பது சமூகக் காரணிகளே. அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நிற்கும் தோரணை, பார்க்கும் பார்வை இப்படி எல்லாமே வேறுபட்டவை. குடியேற்றப்பட்டால் இதுவே தான் மலையக தமிழ் மக்களுக்கும் ஆகும்.

ஆங்கிலேயர்கள் அவர்களின் தேவைக்காக இலங்கை, மலேசியா, பிஜி, கரீபியன், பர்மா என்று உலகெங்கும் தொழிலார்களாக இந்த மக்களை குடியேற்றினார்கள். பின்னர் கைவிட்டார்கள். இவர்கள் குடியேறிய எந்த தேசத்தில் வளமாக இருக்கின்றார்கள். இலங்கையில் தான் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே. பிஜியில் அரச அதிகாரம் கிடைத்தது, இந்த மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஒரே காரணத்தால். அதுவும் பிஜியின் மற்றைய சமூகத்தால் ஒரு இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. மற்றபடி அங்கும் இந்த மக்கள் ஒரு வளமான வாழ்வை வாழவில்லை.

ஆங்கிலேயர்கள் தங்களின் நோக்கத்துக்காக பெரும் சுயநலத்துடன் இந்த மக்களை குடியேற்றியது போலவே, நாங்களும் இந்த மக்களை இன்று மீண்டும் குடியேற்ற நினைக்கின்றோம் அல்லவா.

மலையக மக்களுக்கு முதலில் தேவையானது அவர்கள் வாழும் இடத்திலேயே சொந்த வீடும், அதனுடன் சேர்ந்த சிறிய நிலமும். அவர்கள் வளமாவதுஅங்கிருந்தே ஆரம்பிக்கும். அடுத்ததாக உயர் கல்வி அல்லது முறையான தொழில் பயிற்சிகள். மலையக, கொழும்பு, வட கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் இந்த திசையில் நகர்வது தான் மலையக மக்களுக்கு நிரந்தரமான, கௌரவமான ஒரு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கும்.

அந்த நாட்களில் ஊரில் பீட்டர் அம்மா என்று நாங்கள் கூப்பிடும் ஒருவர் ஒரு சின்னக்கடை வைத்திருந்தார். பாண் பணிஸ் போன்றன விற்பார். வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில், வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் அவரின் கடை இருந்தது. எனக்கு அவர் அடிக்கடி பணிஸ் கொடுப்பார். அது நான் அவருக்கு செய்யும் வேலைக்கு கிடைக்கும் கூலி, வேறு சில வேளைகளில் அது ஒரு பண்டமாற்று. கதையாகவே எழுதலாம். என்னையே ஒரு பணிஸை எடு என்று சொல்லிவிடுவார். எல்லா பணிஸும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதைப் போலவே தான் இந்த தமிழ் அரசியல்வாதிகள், எல்லோரும் ஒன்றே. 'பணிஸ் அரசியல்வாதிகள்..........'................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இங்கே பேசப்படுவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுதது தானே தவிர....

மேலும் மலையகத்தின் வளம் மற்றும் மண் சார்ந்த தெளிவுள்ளவர்கள் அவர்களை காய்ந்த நிலப்பரப்பு களில் குடியேற்ற நினைக்கவே மாட்டார்கள்.

60, 70 களில் புங்குடுதீவில் ஒரே snow அடிக்கும்.

அதனால்தான் அந்த ஊரவர்கள் பின்னர் பாரிஸ், இலண்டன், கனடா என வந்து காலூன்றியதை இலகுவாக்கியது.

6 hours ago, தமிழ் சிறி said:

@goshan_che யின் குளிர்கால தூக்கம் (Winterschlaf) இடையில் சுமந்திரனால் குழம்பி விட்டதா. 😂 🤣

நீங்கள் வேற… விண்டர் டைம் வெய்யில் காயலாம் எண்டு இலங்கை போய்…ஊருக்கே போக முடியாமல்…வெல்லம்பிட்டியவில் வெள்ள நிவாரண அதிகாரியாக காலத்தை கடத்தி விட்டு நாடு திரும்பி உள்ளேன்😂

6 hours ago, குமாரசாமி said:

கோசான் சார்! நீர்மூழ்கி கப்பல்ல கப்டனாய் வேலை செய்யுறார் எண்டு நான் நினைக்கிறன்.😂

4 hours ago, நியாயம் said:

வவுனியாவிற்கு 1970ம் ஆண்டுகளில் குடிபெயர்ந்து காட்டு பகுதியை வளப்படுத்தி வயல், தோட்டம் செய்தார்கள் மலையகத்து மக்கள் பகுதியினர். இப்போது மூன்றாம் தலைமுறையும் வந்துவிட்டது.

பலர் மாவீரர்.

4 hours ago, விசுகு said:

அவர்கள் இன்றும் அந்த பகுதியில் மலையக மக்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள் என்பது தான் யதார்த்தம் வரலாறு. டொட்.

இது யதார்த்தம் அல்ல. மையவாதம். இதைதான் இந்த திரியில் பலர் மறைமுகமாவும் கக்கி உள்ளார்கள்.

இந்த மையத்தை அடக்கும் வரை உய்ய வழியே இல்லை.

அருச்சுனா போன்ற பொய்மான்களின் பின்னால் ஓடி கொண்டே இருக்க வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை.

தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமேகுய்யோ முறையோஎன்று கத்தவில்லை.

தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போஎன்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை.

புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து  வாழவில்லையா?

புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா?

சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்?

ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.

இதற்குமேல் எழுத எதுவும் இல்லை🙏.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாத்தியார் said:

முதலில் நடக்கக் கூடிய விஷயங்களை பற்றிப் பேசுவோம்

வடக்கிலேயே காணிகள் அற்ற..... வீடுகள் அற்ற..... பல குடும்பங்கள் வீடமைப்புத் திட்டங்கள் மூலம் அதனப் பெற்று வாழும் இடங்களை பாருங்கள்.

மழைக்காலம் வெளியே செல்ல முடியாத அளவில் வெள்ளம் .....சரியான வீதிகள் இல்லை..... மின்சாரம் இல்லை...... போக்குவரத்து சுத்தமாக இல்லை

இப்படியான நிலையில் இருக்கும் போது-----

இன்னும் குடியேற்றம் வீடமைப்பு என்று வாய்ச சவடால் விடுவது சுமோவிற்கும் மனோவிற்கும் புதிதல்ல

ஏற்கனவே முஸ்லீம்கள் ஓட்டுமடத்தில் வாழும் நிலையைப் பாருங்கள்

முதலில் அவர்களுக்கு ஒரு சுகாதாரமான வாழ்க்கை வாழ ஆவன செய்ய வக்கில்லாத சுமோ........

மலையகத்தில் இருந்து மக்களை வரச் சொல்வது எப்படியான ஒரு கயமைத் தனமானது என்று எல்லோருக்கும் விளங்கும் 😂

இதை சொன்ன சுமந்திரனுக்கு இது தெரியாதா? சுமந்திரன் வாயை திறந்தால் 90 களிலேயே 15-35 ஆயிரம் கொடுக்கவேண்டும். அதுவும் பயங்கரவாத சட்ட்தில் உள்ளே இருந்த யாருக்கும் அந்த வாய் திறந்ததே இல்லை.

சுமந்திரன் மலையக தமிழர்களை வடக்கில் குடியேற்ற பேசுகிறார் என்றால் மலையக தமிழர்களின் காணிகளை திருட திருட்டுக்கு தரகு வேலைக்கு தயார் ஆகுகிறார் என்றே அர்த்தம்.

அது மேலே சுமந்திரனுக்கு குழை அடித்து கருத்து எழுதிய அனைவருக்கும் தெரியும் ......... ஆனால் இங்கே இன்னொருவருவரை வெற்றிகரமாக தாக்கி எழுதி இருக்கிறோமா? என்பதுதான் அடிப்படை கொள்கை....... அதில் மிகுந்த வெற்றியுடன் இந்த திரி நீளுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அருமையான கருத்தை…….

சுமன் சொன்னார் என்பாதால் மட்டுமே

எதிர்க்கும் அளவுக்கு…..

சுமன்லவர்ஸுக்கு காதல் ஜுரம் முற்றி விட்டது என்பதை இந்த திரி காட்டி நிற்கிறது.

போற போக்கில் சுமன் நாளைக்கு கருணா துரோகி எண்டு சொன்னால், இல்லை அவர் சொக்கதங்கம் எண்டு எழுதும் அளவுக்கு காதல் முற்றி விடும் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரசோதரன் said:

மலையக தமிழ் மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதற்கான பிரதான காரணமாகவும், பெரு விருப்பமாகவும் நாங்கள் சொல்லும் காரணம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மிகவும் சரிந்து இருக்கும் சனத்தொகையையும், தமிழ் மக்களின் சனப் பரம்பலையும் அதிகரிக்கலாம் என்பதே. அதன் மூலம் எங்களின் நிலத்தையும், இருப்பையும், அரசியல் பலத்தையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இதன் பின்னால் இருக்கும் நோக்கம்.

இவ்வாறு குடியேற்றப்படும் மலையக தமிழ் மக்களின் நிலை என்னவாகும் என்றே நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மலையக மக்கள் இதை விரும்புகின்றார்களா என்ற இன்னொரு பிரதான கேள்வியும் இருக்கின்றது.

இந்த மக்கள் குடியேற்றப்படும் அல்லது குடியேறும் இடங்களில் அங்கு ஏற்கனவே இருக்கும் சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதே நிஜம். மூன்று தலைமுறைகளாக அவர்கள் புதிய ஒரு இடத்தில் இருந்தாலும், அங்கு அவர்கள் சமனான மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை.

பறை என்னும் இசை பற்றி சமீப காலங்களில் நிறையவே உரையாடப்படுகின்றன. தமிழர்களின் ஆதி இசைகளில் இதுவும் ஒன்று என்கின்றோம். கொண்டாடப்பட வேண்டும் என்கின்றோம். பறையும், இசையும், அந்த மனிதர்கள் பற்றியும் சினிமாக்கள், கதைகள் கூட வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த 50 வருடங்களாக, போராட்ட காலம் உட்பட, இந்த பறை வாசிப்பவர்கள் கோவிலுக்கு வெளியே அதே இடத்திலேயே நின்று வாசிக்கின்றார்கள் என்று நாம் சொல்லத் தவறுகின்றோம். கோவில்களில் ஒரு தவில் அல்லது நாதஸ்வரக் கலைஞக்கும், ஒரு பறையை வாசிப்பவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் வேறுபாடுகளை நாம் காணத் தவறுகின்றோம். இந்த வேறுபாடுகளின் பின்னால் இருப்பது சமூகக் காரணிகளே. அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நிற்கும் தோரணை, பார்க்கும் பார்வை இப்படி எல்லாமே வேறுபட்டவை. குடியேற்றப்பட்டால் இதுவே தான் மலையக தமிழ் மக்களுக்கும் ஆகும்.

ஆங்கிலேயர்கள் அவர்களின் தேவைக்காக இலங்கை, மலேசியா, பிஜி, கரீபியன், பர்மா என்று உலகெங்கும் தொழிலார்களாக இந்த மக்களை குடியேற்றினார்கள். பின்னர் கைவிட்டார்கள். இவர்கள் குடியேறிய எந்த தேசத்தில் வளமாக இருக்கின்றார்கள். இலங்கையில் தான் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே. பிஜியில் அரச அதிகாரம் கிடைத்தது, இந்த மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஒரே காரணத்தால். அதுவும் பிஜியின் மற்றைய சமூகத்தால் ஒரு இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. மற்றபடி அங்கும் இந்த மக்கள் ஒரு வளமான வாழ்வை வாழவில்லை.

ஆங்கிலேயர்கள் தங்களின் நோக்கத்துக்காக பெரும் சுயநலத்துடன் இந்த மக்களை குடியேற்றியது போலவே, நாங்களும் இந்த மக்களை இன்று மீண்டும் குடியேற்ற நினைக்கின்றோம் அல்லவா.

மலையக மக்களுக்கு முதலில் தேவையானது அவர்கள் வாழும் இடத்திலேயே சொந்த வீடும், அதனுடன் சேர்ந்த சிறிய நிலமும். அவர்கள் வளமாவதுஅங்கிருந்தே ஆரம்பிக்கும். அடுத்ததாக உயர் கல்வி அல்லது முறையான தொழில் பயிற்சிகள். மலையக, கொழும்பு, வட கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் இந்த திசையில் நகர்வது தான் மலையக மக்களுக்கு நிரந்தரமான, கௌரவமான ஒரு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கும்.

அந்த நாட்களில் ஊரில் பீட்டர் அம்மா என்று நாங்கள் கூப்பிடும் ஒருவர் ஒரு சின்னக்கடை வைத்திருந்தார். பாண் பணிஸ் போன்றன விற்பார். வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில், வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் அவரின் கடை இருந்தது. எனக்கு அவர் அடிக்கடி பணிஸ் கொடுப்பார். அது நான் அவருக்கு செய்யும் வேலைக்கு கிடைக்கும் கூலி, வேறு சில வேளைகளில் அது ஒரு பண்டமாற்று. கதையாகவே எழுதலாம். என்னையே ஒரு பணிஸை எடு என்று சொல்லிவிடுவார். எல்லா பணிஸும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதைப் போலவே தான் இந்த தமிழ் அரசியல்வாதிகள், எல்லோரும் ஒன்றே. 'பணிஸ் அரசியல்வாதிகள்..........'................

இதுதான் உண்மையான யதார்த்த நிலை ....... இதற்கு சுமந்திரனோ மற்றைய ஊரை கொள்ளையடித்து ருசிகண்ட அரசியல்வாதிகளோ குரல் கொடுக்க போவதும் இல்லை அதை முன்னெடுக்க போவதும் இல்லை.

இது மலையக தமிழர்களுக்கு என்று இல்லை .... இலங்கை பூராக இதுதான் தேவை என்பது நிதர்சனமாக இருக்கிறது. எங்களுடன் முட்டி முரண்படுவதால் முஸ்லீம்களை விட்டு விடுகிறோம் உள்ளே பார்த்தல் அங்கும் பஞ்சம் பட்டினிதான் இருக்கிறது .... சிங்களவர்கள் நிலை அதைவிட மோசமாக இருக்கிறது.

சிறு மாத வருமானம் வராதா? என்ற அங்காலைப்பில்தான் பெரும்திரல் மக்கள் கொழும்புக்கு படை எடுக்கிறார்கள் அங்கே அவர்கள் நிலை பணவீக்கதால் விளையும் பெரும் செலவீனத்தால் இன்னமும் மோசம் அடைகிறது. இருந்துவந்த ஊர்களில் வளமிக்க நிலம் தரிசு நிலம் ஆகிறது. கொழும்பின் சனத்தொகை 6.5 மில்லியன் ஆகிவிட்ட்து அடுத்தவருடம் 7 ஆகினால் கூட ஆச்சரியப்பட ஏதும் இல்லை.

அரசியல்வாதிகள் ஆடசியாளர்கள் ஒருபக்கம் என்றால் அங்கு தபால் கந்தோரில் முத்திரை ஓட்டுபவனில் இருந்து கச்சேரியில் கையெழுத்து ஈடுபவன் வரை கொம்பு முளைத்து திரிகிறார்கள்.

இதுக்குள் அந்த நலிந்த மக்களையும் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maruthankerny said:

இதை சொன்ன சுமந்திரனுக்கு இது தெரியாதா? சுமந்திரன் வாயை திறந்தால் 90 களிலேயே 15-35 ஆயிரம் கொடுக்கவேண்டும். அதுவும் பயங்கரவாத சட்ட்தில் உள்ளே இருந்த யாருக்கும் அந்த வாய் திறந்ததே இல்லை.

சுமந்திரன் மலையக தமிழர்களை வடக்கில் குடியேற்ற பேசுகிறார் என்றால் மலையக தமிழர்களின் காணிகளை திருட திருட்டுக்கு தரகு வேலைக்கு தயார் ஆகுகிறார் என்றே அர்த்தம்.

அது மேலே சுமந்திரனுக்கு குழை அடித்து கருத்து எழுதிய அனைவருக்கும் தெரியும் ......... ஆனால் இங்கே இன்னொருவருவரை வெற்றிகரமாக தாக்கி எழுதி இருக்கிறோமா? என்பதுதான் அடிப்படை கொள்கை....... அதில் மிகுந்த வெற்றியுடன் இந்த திரி நீளுகிறது.

90 களில் 15 ஆயிரம் என்பது சாதாரண வக்கீல் கூலி தானே? ஓ.சியில் கூப்பன் அரிசி, மண்ணெண்ணை கிடைக்கலாம், வழக்குப் பேச வக்கீலும் ஓ.சியில் வேண்டுமென்றால் என்ன மன அமைப்பய்யா இது😂?

உங்களுக்கு கண்ணதாசன் என்ற புலிகளுக்கு ஆட் சேர்த்தார் என்ற பெயரில் கைதான ஒரு அரசியல் கைதியை சுமந்திரன் ஆஜராகி விடுவித்த செய்தி தெரியாதா? 2010 இல் அரசியலுக்கு வருவதற்கு முதலே சுமந்திரன் சில அரசியல் கைதிகள் வழக்கில் ஆஜராகி இருக்கிறார்! நீங்கள் என்னவென்றால் தகவல் ஏதுமில்லாத வெறுமையில் இப்படி அளந்து விடுகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் நடந்தது ஒரு ஆயுதப் போராட்டம்... பல வருடங்கள் இது தொடர்ந்திருந்தாலும் என்றாவது ஒரு நாள் ஒரு முடிவுக்கு வரும்.. வந்தது!!

ஆனால் மலையகத்தில் நடப்பது வாழ்நாள் போர் 200 ஆண்டு காலம் ஆகியும் முடிவு இல்லாத வாழ்க்கை போர். 

ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கும் போர்.  200 ஆண்டு காலம் என்பது எத்தனை தலைமுறைகள்? அங்கேயே அந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து அங்கேயே உழைத்த மக்களுக்கு உரிமை கிடைக்காது என்பது எப்படிப்பட்ட கொடுமை. 

மாட்டுக்கு கொம்பு முளைக்கும் முன்பே நம்மை முட்டாமல் இருக்க, அது பிறந்ததும் சூட்டுக்கோளால் கொம்பு முளைக்கும் இடத்தில் தீச்சு விடுவதும் அடுத்தது பருவத்துக்கு வரும் முன்னால் காய் அடித்து ஆண்மை நீக்கி வேலையில் கட்டி வசக்கிவிட்டால் வாழ்நாள் பூராவும் அதே வேலை வாங்கலாம்.

உரிமையை அபகரிப்பதும் காய அடிப்பதும் ஒன்றுதான். அந்த மக்கள் தொகையை அதிகமாகாமல் தமிழினம் பெருகாமல் பார்த்துக் கொள்வதும் ஒன்றுதான். 

பிரித்தானிய காலனித்துவவாதிகளால் பிழைப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவர்கள் அடைந்த வாழ்வியல் துயங்கள் அதற்கான காரணிகளான தேசிய புறக்கணிப்பு, அரசியல் புறக்கணிப்பு, குடியுரிமை பறிப்பு, நாடற்ற நிலை, நாடு கடத்தல், பதிவு குடியுரிமை, வசிப்பிட குடியுரிமை, திட்டமிட்ட கருத்தடை, கூடிசன குறைப்பு, நிலமற்ற நிலை, வீடற்ற நிலை, பொருளாதார ஒடுக்குமுறை, கல்வியொடுக்குமுறை, உள்ளூர் ஆட்சிக்குள் உள்வாங்காத ஒதுக்கு முறை, இம்மக்களின் வாழ்விடங்களை வணிக நிலம் ஆக்கி கம்பெனிக்காரர்களுக்கு நூறு ஆண்டு கால குத்தகைக்கு கொடுத்து விட்டமை, இம்மக்கள் வாழ்ந்த பல பெருந்தோட்டங்களை சுவைகரித்து சிங்கள மக்களுக்கு  சிறு தோட்ட உடைமையாளர்களாக கொடுத்து விட்டமை, இதனால் வாழ்விடங்கள் இழந்து வசிப்பிட தொழிலாளர்களாக காலனித்துவவாதிகள் கட்டிப்போட்ட அதே 200 ஆண்டுகால வரிசை லயங்களில் வாழும் நிலை என பல்வேறு நெருக்கடிகளை இன்றும் அந்த மக்கள் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 

இன்றும் இவர்கள் வாழும் நிலங்களை கிராமங்களாக கூட அங்கீகரிக்காமல், இம்மக்களை கிராம மக்களாக கூட ஏற்றுக் கொள்ளாமல், நாட்டு மக்கள் என்று தேசிய அந்தஸ்தை வழங்காமல் தோட்ட மக்கள் "வத்து கம்கரு"  என்றே புறக்கணித்து வைத்திருக்கின்றமை என இத்தனை அரசியல் தேச வஞ்சனைகளுக்கும் முகம் கொடுத்து உரிமைக்குப் போராடாமல் மௌனித்து 200 ஆண்டுகளை வீணடித்துவிட்டு வந்தேறி குடிகளாக வருடங்களை எண்ணிக்கொண்டு வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? 

~ ஒப்பாரி கோச்சி புத்தகத்தை வாசித்து... என்னை பாதித்த வரிகளுடன் ...

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Sasi_varnam said:

உரிமையை அபகரிப்பதும் காய அடிப்பதும் ஒன்றுதான். அந்த மக்கள் தொகையை அதிகமாகாமல் தமிழினம் பெருகாமல் பார்த்துக் கொள்வதும் ஒன்றுதான். 

இதனால்தான் சொல்கிறேன் சிங்களவர் கூர்ப்பில் முன்னேறிய இனம்.

இதை சொன்னால் கூட விளங்கி கொள்ள முடியாது ஈழதமிழ் சுண்ணாம்பு குவளைகளால்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

ஆங்கிலேயர்கள் தங்களின் நோக்கத்துக்காக பெரும் சுயநலத்துடன் இந்த மக்களை குடியேற்றியது போலவே, நாங்களும் இந்த மக்களை இன்று மீண்டும் குடியேற்ற நினைக்கின்றோம் அல்லவா.

மலையக மக்களுக்கு முதலில் தேவையானது அவர்கள் வாழும் இடத்திலேயே சொந்த வீடும், அதனுடன் சேர்ந்த சிறிய நிலமும். அவர்கள் வளமாவதுஅங்கிருந்தே ஆரம்பிக்கும். அடுத்ததாக உயர் கல்வி அல்லது முறையான தொழில் பயிற்சிகள். மலையக, கொழும்பு, வட கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் இந்த திசையில் நகர்வது தான் மலையக மக்களுக்கு நிரந்தரமான, கௌரவமான ஒரு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கும்.

@ரசோதரன் அண்ணை நீங்கள் குறிப்பிட்டுள்ள படி அவர்களுக்கான தீர்வு அவர்களுடைய நிலையான (sustainable) பொருளாதார முன்னேற்றத்துடன் கூடிய கெளரவமான சமூகப் பங்காளிகளாக வாழக்கூடிய தீர்வாக இருக்க வேண்டும்.

இதையே இயற்கைப் பேரிடர்களின் தாக்கம் குறைவாகவும் மற்றும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கக்கூடியதாகவும் வடக்கில் அவர்களைக் குடியிருத்த முடியும் என்றால் அது ஆங்கிலேயர் அவர்களைக் குடியிருத்தியது போல் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஆங்கிலேயர் செய்தது தமது பலனுக்காக, ஆனால் இது அவர்களுடைய நன்மைக்காகவும் பாதுகாப்பான எதிர்காலத்துக்காகவும்.

எடுத்ததெற்கெல்லாம் வெள்ளைக்காரன் நிறவெறி பிடித்தவன் என்று கூப்பாடு போடும் தமிழர்கள் தமது முதுகையும் கண்ணாடி கொண்டு பார்த்துக் கொஞ்சம் ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

மன்னிக்கவும் அண்ணா... உங்களுடைய இந்த கருத்து பண்பற்ற ஒன்றாக எனக்குப் படவில்லை .

நனைகிற ஆடு... குளிர் காய்கிற ஓநாய் ...

உண்மையில் மலையகத்து மக்களின் யதார்த்த லயத்து வாழ்க்கை நிலை, இற்றை திகதி வரைக்கும் எஸ்டேட்ட தோரை, கங்காணி, ஆராச்சி (கிராம சேவகர்) இப்படி வரிசையாக அந்த அப்பாவி மக்களை மனிதர்களாக கூட மதிக்காமல் நடத்தும் நடப்பு உங்களுக்கு தெரியுமா?

இன்று அனைத்தையும் இழந்து நிட்கும் அந்த மக்களை பற்றி பேசுகிற ஒரு தலைப்பில் நீங்கள் ஓநாய் வேட்டையில் புளங்காகிதம் அடைகிறீர்கள்.

மலையகத்து மண் வளமாக இருக்கிறது... அந்த மலையகத்தை பெருந்தோட்டமாக உருவாக்கிய மக்கள் இன்றுவரை வலமாக இருக்கிறார்களா?

சுமந்திரனை கழுவி ஊத்த மலையக மக்களின் கண்ணீர் வேண்டாமே. 🤲

தவறான புரிதல்

4 hours ago, Sasi_varnam said:

மன்னிக்கவும் அண்ணா... உங்களுடைய இந்த கருத்து பண்பற்ற ஒன்றாக எனக்குப் படவில்லை .

நனைகிற ஆடு... குளிர் காய்கிற ஓநாய் ...

உண்மையில் மலையகத்து மக்களின் யதார்த்த லயத்து வாழ்க்கை நிலை, இற்றை திகதி வரைக்கும் எஸ்டேட்ட தோரை, கங்காணி, ஆராச்சி (கிராம சேவகர்) இப்படி வரிசையாக அந்த அப்பாவி மக்களை மனிதர்களாக கூட மதிக்காமல் நடத்தும் நடப்பு உங்களுக்கு தெரியுமா?

இன்று அனைத்தையும் இழந்து நிட்கும் அந்த மக்களை பற்றி பேசுகிற ஒரு தலைப்பில் நீங்கள் ஓநாய் வேட்டையில் புளங்காகிதம் அடைகிறீர்கள்.

மலையகத்து மண் வளமாக இருக்கிறது... அந்த மலையகத்தை பெருந்தோட்டமாக உருவாக்கிய மக்கள் இன்றுவரை வளமாக இருக்கிறார்களா?

சுமந்திரனை கழுவி ஊத்த மலையக மக்களின் கண்ணீர் வேண்டாமே. 🤲

தவறான புரிதல் தம்பி

நம் சுயநலத்திற்காக அவர்களை அழைக்கிறோமே தவிர...?

அதற்காக மட்டுமே அவ்வுதாரணம்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

60, 70 களில் புங்குடுதீவில் ஒரே snow அடிக்கும்.

அதனால்தான் அந்த ஊரவர்கள் பின்னர் பாரிஸ், இலண்டன், கனடா என வந்து காலூன்றியதை இலகுவாக்கியது.

நீங்கள் வேற… விண்டர் டைம் வெய்யில் காயலாம் எண்டு இலங்கை போய்…ஊருக்கே போக முடியாமல்…வெல்லம்பிட்டியவில் வெள்ள நிவாரண அதிகாரியாக காலத்தை கடத்தி விட்டு நாடு திரும்பி உள்ளேன்😂

பலர் மாவீரர்.

இது யதார்த்தம் அல்ல. மையவாதம். இதைதான் இந்த திரியில் பலர் மறைமுகமாவும் கக்கி உள்ளார்கள்.

இந்த மையத்தை அடக்கும் வரை உய்ய வழியே இல்லை.

அருச்சுனா போன்ற பொய்மான்களின் பின்னால் ஓடி கொண்டே இருக்க வேண்டியதுதான்.

புங்குடுதீவில் எத்தனை சதவீதம் புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டோர் வாழ்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா??

வெளிநாடுகளில் வெளிஊர்களில் அதிலும் வன்னி நிலப்பரப்பில் எத்தனை கிராமங்கள் புங்குடுதீவு தீவுமக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா? அது ஏன் என்றாவது உங்களுக்கு புரியுமா??

மலையக மக்களை குடியேற்ற கரம்பனில் வீடுகள் சும்மா கிடக்கிறது என்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ???

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, villavan said:

@ரசோதரன் அண்ணை நீங்கள் குறிப்பிட்டுள்ள படி அவர்களுக்கான தீர்வு அவர்களுடைய நிலையான (sustainable) பொருளாதார முன்னேற்றத்துடன் கூடிய கெளரவமான சமூகப் பங்காளிகளாக வாழக்கூடிய தீர்வாக இருக்க வேண்டும்.

இதையே இயற்கைப் பேரிடர்களின் தாக்கம் குறைவாகவும் மற்றும் வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கக்கூடியதாகவும் வடக்கில் அவர்களைக் குடியிருத்த முடியும் என்றால் அது ஆங்கிலேயர் அவர்களைக் குடியிருத்தியது போல் அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். ஆங்கிலேயர் செய்தது தமது பலனுக்காக, ஆனால் இது அவர்களுடைய நன்மைக்காகவும் பாதுகாப்பான எதிர்காலத்துக்காகவும்.

எடுத்ததெற்கெல்லாம் வெள்ளைக்காரன் நிறவெறி பிடித்தவன் என்று கூப்பாடு போடும் தமிழர்கள் தமது முதுகையும் கண்ணாடி கொண்டு பார்த்துக் கொஞ்சம் ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும்.

வில்லவன்,

மலையக தமிழ் மக்களின் நன்மைக்கும், பாதுகாப்பிற்கும், எதிர்காலத்துக்குமாக, மலையக மக்களின் சுயவிருப்புடன் அவர்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட்டு, கௌரவத்துடன் நடத்தப்படுவார்கள் என்றால், அதைவிட நல்லதொரு விடயம் இருக்கமுடியாது. ஆனால் எனக்கு எம் மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எம் மக்களின் சில பிடிவாதங்கள், கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் என்பன மனிதர்களை அவர்களின் பிறப்புகளினால் வரும் அடையாளங்களை வைத்து வகைப்படுத்துகின்றன. ஒரு மனிதன் ஒடுக்கப்படுகின்றான் என்பது கண்ணீரை வரவழைக்கின்றது.

மார்த்தாண்டம் என்னும் ஊர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா என்று தெரியாது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் கறுப்பு என்றால் மார்த்தாண்டக் கறுப்பு என்று சொல்வார்கள். அங்கிருந்து ஒரு பையன் இங்கு வேலை செய்ய வந்தான். டாடா கன்சல்டிங். மிகப் பெரிய விசயம். அந்தச் சமூகத்திலிருந்து அப்படி ஒரு பையன் இங்கு வருவது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. அதுவும் டாடா கன்சல்டிங் போன்ற நிறுவனங்களில் இருந்து வருவது. ஆனாலும் அவனை இங்கிருந்த தமிழ்நாட்டவர்கள் முற்றாகவே, வெளிப்படையாகவே ஒதுக்கினார்கள். வேலையில் என்னை மீறி அந்தப் பையனை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது தமிழ்நாட்டு மக்கள், ஆனால் நாங்கள் வேறு என்று நாங்கள் நினைக்கக்கூடும். இந்த விடயத்தில் யாழ்ப்பாண மக்களும் இவ்வாறானவர்களே. இது தான் என்னுடைய பயம்.

என்னுடைய வேறு பல சொந்த அனுபவங்களும் உள்ளன. சிலவற்றை நான் எழுதினாலும், அப்படி நடந்திருக்கும் என்று பலர் நம்பப் போவதில்லை. ஆனாலும் இந்த விடயம் அடங்கிய பின், கதைகளாக எழுதுவதாக உள்ளேன்.

இவ்வகையான சமூக புறக்கணிப்புகள் இருக்காது என்றால், அந்த மக்கள் இந்தக் குடியேற்றத்தை விரும்புகின்றார்கள் என்றால், இதை வரவேற்கும் முதல் ஆட்களில் ஒருவனாக, உங்களைப் போலவே நானும் இருப்பேன்.

இது நான் இங்கு இணைந்தவுடன் எழுதிய ஆக்கங்களில் ஒன்று. சொந்த அனுபவமே.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கூட்டத்துக்கு ஈழ நிலத்தின் பூர்வீக மைந்தர்கள் என்ன செய்யலாம்; இவர்களது வஞ்சிக்கப்பட்ட வாழ்க்கையை எப்படி அனுகலாம்? 

1 hour ago, Sasi_varnam said:

~ ஒப்பாரி கோச்சி புத்தகத்தை வாசித்து... என்னை பாதித்த வரிகளுடன் ...

சொந்த அனுபவத்தில் கதவை தட்டி செய்யப்படும் எந்த உதவியிலும் உடன்பாடில்லை. அவை ஒன்றில் சுயநலத்திற்காக இருக்கும் அல்லது துஸ்பிரயோகம் செய்யப்படும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.