Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

200-67uyuyy.jpg?resize=200%2C132&ssl=1

யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். அதன் போதே , 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் , 203 மாணவர்கள் காணப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து , அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மருத்துவபீடத்தினர் தெரிவிக்கையில்,

மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த யுவதியும் மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து , விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது

https://athavannews.com/2026/1460463

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை.... இப்படி தான் பைத்தியமும், வைத்தியர் ஆனாரோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மருத்துவபீடத்தினர் தங்கள் பக்கம் என்ன தவறு எப்படி ஏற்பட்டது என்பதையும் அறியத்தரலாமே. பல்கலைக்கழகத்தில் எப்படி மாணவியை பதிவு செய்தார்கள்? விடுதிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்? இங்கு பல தகவல்கள் தவறவிடப்பட்டுள்ளன அல்லது மறைக்கப்பட்டுள்ளன.

மருத்துவராக வருவதற்கு மூன்று சாதாரண சித்திகள் போதாது என்றெல்லாம் இல்லை. சாதாரண சித்திகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று பயின்று பலர் மருத்துவர்களாக வந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

200-67uyuyy.jpg?resize=200%2C132&ssl=1

யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். அதன் போதே , 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் , 203 மாணவர்கள் காணப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து , அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மருத்துவபீடத்தினர் தெரிவிக்கையில்,

மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த யுவதியும் மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து , விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார். இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது

https://athavannews.com/2026/1460463

பெரும்பான்மை ..அதுவும் கண்டிப்பெரும்பான்மை ..கமுக்கமாய் அமுக்கிபோடுவினம் ...இப்ப சிலநாட்களுக்கு முன் ..யாழ் பல்கலையில் ...முக்காடுபோட்ட மாணவி ...தொலைபேசி காதுத்தொடுக்கிமூலம் உதவிபெற்று ...மருத்துவபீட இறுதித்தேர்வை எழுதிப் பிடிபட்டார் ...இதுவும் அமுக்கப்பட்டுவிட்டது ...இதில் ஒன்று நம்மினம் என்றால் ..அங்கு வம்பன் தொடங்கி ..முழுக் காணோலிக் கோமாளிகள் .. அங்கு குவிந்திருப்பர்..

Edited by alvayan
சொற்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

மருத்துவராக வருவதற்கு மூன்று சாதாரண சித்திகள் போதாது என்றெல்லாம் இல்லை

இலங்கை நிலவரம் பற்றியதுதான் செய்தி,

இலங்கையில் மருத்துவராக வருவதற்கு சாதாரண சித்தி போதுமா? இது தெரிஞ்சிருந்தா நானும் எப்பவோ டாக்டர் சுங்கப்பா ஆகியிருக்கலாம்.

Edited by valavan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

இலங்கையில் மருத்துவராக வருவதற்கு சாதாரண சித்தி போதுமா?

ஓம்

சித்தி, பெரியம்மா எவருமே அசாதாரணமானோராக இருக்க வேண்டியதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcTzbNyApbwPAE0ry_ELAMM

யாழ். மருத்துவ பீடத்தில் அரங்கேறிய விசித்திரம்: அனுமதி பெறாமல் இரண்டு மாதங்கள் கல்வி கற்ற யுவதி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முறையான அனுமதி இன்றி, மாணவர்களுடன் இணைந்து யுவதி ஒருவர் சுமார் இரண்டு மாத காலம் விரிவுரைகளில் கலந்துகொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்த விபரங்கள்:

கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீடத்திற்கான புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதன்போது, கண்டியைச் சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர், பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தன்னை ஒரு மாணவியாகப் பதிவு செய்துகொண்டு தங்கியிருந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக ஏனைய மாணவர்களுடன் இணைந்து மருத்துவ விரிவுரைகளிலும் அவர் எவ்வித தடையுமின்றி கலந்துகொண்டு வந்துள்ளார்.

வெளிச்சத்திற்கு வந்த உண்மை:

கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவ பீடத்தின் கற்றல் செயற்பாடுகளின் போது மாணவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அந்தத் தொகுதியில் 202 மாணவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 203 மாணவர்கள் இருந்தமையால் பேராசிரியர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சரிபார்ப்பின் போதே, பல்கலைக்கழக அனுமதி பெறாத குறித்த யுவதி விரிவுரைகளில் கலந்துகொண்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

கல்வித் தகுதி: குறித்த யுவதி உயர்தர உயிரியல் பாடத்துறையில் 3 சாதாரண (S) சித்திகளை மாத்திரமே பெற்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை: இந்தச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு (UGC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த யுவதி மீது சட்ட நடவடிக்கை அல்லது அடுத்தகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என மருத்துவ பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு கெடுபிடிகள் மற்றும் பதிவுகள் இருக்கும் ஒரு பீடத்தில், இரண்டு மாதங்களாக எவரும் அறியாமல் ஒரு யுவதி கல்வி கற்றுள்ளமை பல்கலைக்கழக மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ARV Loshan News ·

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, alvayan said:

பெரும்பான்மை ..அதுவும் கண்டிப்பெரும்பான்மை ..கமுக்கமாய் அமுக்கிபோடுவினம் ...இப்ப சிலநாட்களுக்கு முன் ..யாழ் பல்கலையில் ...முக்காடுபோட்ட மாணவி ...தொலைபேசி காதுத்தொடுக்கிமூலம் உதவிபெற்று ...மருத்துவபீட இறுதித்தேர்வை எழுதிப் பிடிபட்டார் ...இதுவும் அமுக்கப்பட்டுவிட்டது ...இதில் ஒன்று நம்மினம் என்றால் ..அங்கு வம்பன் தொடங்கி ..முழுக் காணோலிக் கோமாளிகள் .. அங்கு குவிந்திருப்பர்..

செய்தியின் மூலம் என்ன? முகநூலா? அல்லது அல்வாயன் யாழ் பல்கலை மருத்துவ பீடத்தில் பணியாற்றுவதால் "அமுக்கப் பட்ட" தகவல்களும் தெரிய வந்திருக்கின்றனவா😇?

2023/24 இல் யாழ் பல்கலை மருத்துவ பீடம் முஸ்லிம் மாணவிகள் முக்காடு போட்ட படி பரீட்சை எழுத அனுமதி மறுத்து, கண்டனங்களின் பின்னர் பின் வாங்கியது. இதை வைத்துக் கொண்டு அல்வாயன் போன்ற "இஸ்லாமின் நண்பர்கள்" முகநூலில் கதைகள் பரப்புகிறார்கள் என ஊகிக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.