Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறங்கிய காதல்...

Featured Replies

உறங்கிய காதல்

avisse14cf0.jpg

பார்த்ததும் உன்மேல்

பூத்தது காதல் என்னில்

பழகாமலே ருசித்தேன்

விலகியே நடந்தேன்

விண்ணில் இருந்தே

மண்ணில் இருக்குமுனை

தொட நினைத்து

நீட்டினேன் கைகளை

முடியாமல் தவித்தேன்

சிட்டாக மாறியுனை

கட்டியணைக்க எண்ணி

சட்டென வந்தேன் மண்மீது

அருகிருந்தே உனை நான்

அளந்தேன் பார்வைகளால்

இதமாக இருந்த போதிலும்

இமைகள் படபடத்தன பயத்தில்

பூவான நான் காதலை இயம்ப

புயலாக நீ மாறி எனை காயமாக்கி

அனலான பார்வையால் எனை

தகனம் செய்துவிடுவாய் என்று

சொல்ல நினைத்த காதலை

சொல்லாமலே புதைத்தேன்

இன்றுதான் தெரிந்துகொண்டேன்

அன்று நீயும் எனைபோலவே.....

ம்ம்ம்ம்ம்...!

உன்மீதான என் காதலும்

என்மீதான உன் காதலும்

உச்சரிக்கப்படாமல் உரசாமல்

உறங்கியது மனக்கல்லறைகளில்

நிலா அக்கா "உறங்கிய காதல்" கவிதை பல கருத்துகளை சொல்லி செல்கிறது :rolleyes: முடிவில் "காதல்" உச்சரிக்கபடாமலே மனகல்லறையில் துயில் கொள்கிறது :( .............நிலா அக்கா ஒரு வார்த்தை நேக்கு சொல்லி இருந்தா நாம கெல்ப் பண்ணி இருப்போம் தானே!! :rolleyes:

இறுதி வரிகள் சோகமான அழகிய வரிகள் :) ..........மொத்தத்தில் சொல்லாமலே காதல் துயில் கொள்கிறது அழகான கவிதை ஆனா சோகமான சம்பவம் :( துயில் கொண்ட காதல் துயிலை விட்டு எழும்ப பேபியின் வாழ்த்துகள் அக்கா!! :unsure:

உன்மீதான என் காதலும்

என்மீதான உன் காதலும்

உச்சரிக்கப்படாமல் உரசாமல்

உறங்கியது மனக்கல்லறைகளில்

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

சுடர்கொண்ட சூரியன் எமக்காய் ஒளிருது.

உலகம் எங்கிலும் வெளிச்சம் படருது.

உள்ளே நீங்கள் முடங்கிக் கொண்டால்.

உண்மைகள் எப்படி புரிய போகுது!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒருவர் காதலுன்னு தலைப்பிச்சுக்காம தப்பிட்டார்..! காதலே போ போ... சாதலே வா வா என்று புலம்பவிடாம காதலை உறங்க வைச்சது பெருங்காரியம்..! :rolleyes:

அழகு கவிதை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆயாசம்தீர நன்றாக உறங்கட்டும். இப்போதைக்கு எழுப்பவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை.உங்களின் உள்ள கிடக்கைகளை கவிதை அருவியாக்கியுள்ளீர்கள்.

உன்மீதான என் காதலும்

என்மீதான உன் காதலும்

உச்சரிக்கப்படாமல் உரசாமல்

உறங்கியது மனக்கல்லறைகளில்

வேதனையான வரிகள். வேதனையை சாதனையாக மாற்ற என் வாழ்த்துக்கள் நிலா.

உறங்கிய காதலின் கனவு அருமை.... அதைவிட உங்கள் கவி அருமை..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்ததும் பூத்ததும் ரசித்ததும் சரி சொல்ல நினைத்ததை சொல்லாமல் புதைத்ததேனோ? நல்லதொருகவிதை பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்மீதான என் காதலும்

என்மீதான உன் காதலும்

உச்சரிக்கப்படாமல் உரசாமல்

உறங்கியது மனக்கல்லறைகளில்

வெண்ணிலா காதலை உறங்க விடாதீங்கோ விளைவு என்னவானாலும் சொல்லி விடுவதே மேல்.

ஏதும் உதவி வேணுமென்றால் செய்கிறேன் :rolleyes:

  • தொடங்கியவர்

நிலா அக்கா "உறங்கிய காதல்" கவிதை பல கருத்துகளை சொல்லி செல்கிறது :lol: முடிவில் "காதல்" உச்சரிக்கபடாமலே மனகல்லறையில் துயில் கொள்கிறது :lol: .............நிலா அக்கா ஒரு வார்த்தை நேக்கு சொல்லி இருந்தா நாம கெல்ப் பண்ணி இருப்போம் தானே!! :)

இறுதி வரிகள் சோகமான அழகிய வரிகள் :lol: ..........மொத்தத்தில் சொல்லாமலே காதல் துயில் கொள்கிறது அழகான கவிதை ஆனா சோகமான சம்பவம் :lol: துயில் கொண்ட காதல் துயிலை விட்டு எழும்ப பேபியின் வாழ்த்துகள் அக்கா!! :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை-

சுடர்கொண்ட சூரியன் எமக்காய் ஒளிருது.

உலகம் எங்கிலும் வெளிச்சம் படருது.

உள்ளே நீங்கள் முடங்கிக் கொண்டால்.

உண்மைகள் எப்படி புரிய போகுது!! :wub:

:lol:தம்பிக்கு எப்ப பார்த்தாலும் லொள்ளு தான். சீ சும்மா சத்தம் போடாதீங்க ஜம்மு. உறங்கும் காதலை தட்டி எழுப்பாதீங்க.

ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தான். ஆனால் என்னமோ அது ஊமைகிட்டுது. என்ன செய்ய இப்ப?

சிட்டுவேசன் கவிதை நல்லாக இருக்கு

யாரோ ஒருவர் காதலுன்னு தலைப்பிச்சுக்காம தப்பிட்டார்..! காதலே போ போ... சாதலே வா வா என்று புலம்பவிடாம காதலை உறங்க வைச்சது பெருங்காரியம்..! :D

அழகு கவிதை. :lol:

ஓ அப்போ சாதனை என்று சொல்லுறியளோ நெடுக் அண்ணா?

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

ஆயாசம்தீர நன்றாக உறங்கட்டும். இப்போதைக்கு எழுப்பவேண்டாம்.

ம்ம் தூக்கமாத்திரை போடாமலேயே தூங்கிட்டன. கும்பகர்ணனுக்கு தோஸ்த் போல இந்தக்காதல் :wub: எழும்புதே இல்லை. சரி உங்க விருப்பபபடியே எழுப்பலை சுவிப்பெரியப்பா. :lol:

நல்லதொரு கவிதை.உங்களின் உள்ள கிடக்கைகளை கவிதை அருவியாக்கியுள்ளீர்கள்.

வேதனையான வரிகள். வேதனையை சாதனையாக மாற்ற என் வாழ்த்துக்கள் நிலா.

:):lol: சோதனைகள் வேதனைகளை எல்லாம் சாதனையாக்கும் அளவுக்கு சக்தி இல்லையுங்கோ. என்ன செய்ய நான் செய்ய................... :)

  • தொடங்கியவர்

உறங்கிய காதலின் கனவு அருமை.... அதைவிட உங்கள் கவி அருமை..... :lol:

:lol::lol:அண்ணாக்கு எப்படி தெரிஞ்சது உது கனவு என்று? :wub: ஓ கவி அருமையோ? நன்றிகள் அண்ணா.

பார்த்ததும் பூத்ததும் ரசித்ததும் சரி சொல்ல நினைத்ததை சொல்லாமல் புதைத்ததேனோ? நல்லதொருகவிதை பாராட்டுக்கள்

கன்னத்தில் அடிச்ச போல ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டீர்கள். நீங்கள் இக்கேள்வியைக் கேட்டதும் தான் நானும் யோசிக்கிறேன் ஏண்டா சொல்லாமல் புதைச்சேன் என. ம்ம் இனி என்ன செய்ய? :lol:

வெண்ணிலா காதலை உறங்க விடாதீங்கோ விளைவு என்னவானாலும் சொல்லி விடுவதே மேல்.

ஏதும் உதவி வேணுமென்றால் செய்கிறேன் :)

:) உறங்கிய காதலை மீண்டும் தட்டி எழுப்பி விடிஞ்சிட்டுது எழும்பு என சொல்லுற அளவுக்கு இன்னும் இருள் அகலவில்லை. எனவே அது உறங்கட்டும் என விட்டுவிட்டேன் இன்னிசை.

அட உதவியா? உதவ முன் வந்தமைக்கு நன்றிகள். ஆனால் அவ்வளவுக்கு உதவி தேவைப்படவில்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தேன், ரசித்தேன், நல்ல வரிகள்.

பாராட்டுக்கள்!

சில வார்த்தைகள் உச்சரிக்கபாடத்தால் தான் இன்று இங்கு சிலர்!!

எல்லாம் ஏதொ ஒரு நல்லதுக்கு தான் !!!! :wub::lol:

உன்மீதான என் காதலும்

என்மீதான உன் காதலும்

உச்சரிக்கப்படாமல் உரசாமல்

உறங்கியது மனக்கல்லறைகளில்

கவி வரிகள் மிகவும் அழகாக உள்ளது!!

என்ன வெண்ணிலா ஏன் கதாநாயகனையும் கதாநாயகியையும் உச்சரிக்க விடாமல் உறங்க வைச்சுட்டீங்கள்.

கவி வரிகள் அழகு

நல்ல கவிதை நிலாக்கா...ஒரே கவிதையா எழுதிறீங்கள் கதை எப்ப வரும்?

  • தொடங்கியவர்

சில வார்த்தைகள் உச்சரிக்கபாடத்தால் தான் இன்று இங்கு சிலர்!!

எல்லாம் ஏதொ ஒரு நல்லதுக்கு தான் !!!! :lol::o

கவி வரிகள் மிகவும் அழகாக உள்ளது!!

என்னமோ சொல்ல வாறீங்க எனக்கெண்டா ஒன்றும் விளங்கலை.

நன்றிகள் இனியவள்

பார்த்தேன், ரசித்தேன், நல்ல வரிகள்.

பாராட்டுக்கள்!

நன்றிகள் வல்வையண்ணா

  • தொடங்கியவர்

நல்ல கவிதை நிலாக்கா...ஒரே கவிதையா எழுதிறீங்கள் கதை எப்ப வரும்?

:lol: நன்றிகள் சினேக். ம்ம் கவிதை எழுதக்கூடாதா? அட கதையா? கதை எழுதி ஒருக்கா பட்டபாடு போதும். :o

என்ன வெண்ணிலா ஏன் கதாநாயகனையும் கதாநாயகியையும் உச்சரிக்க விடாமல் உறங்க வைச்சுட்டீங்கள்.

கவி வரிகள் அழகு

அவங்கள் இருவரும் மெளனிகளாக இருந்தாங்க. அப்போ உறங்க வைச்சுட்டேன். இதில் என்ன தப்பு அக்கா?

காதலனுக்கும்

காதலிக்கும்

ஒரே நாளில்

திருமணம்

ஆனால்

மண்டபங்கள்

வேறு வேறு :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இரண்டு கலியாண வீட்டு சாப்பாடு ஒரே நாளில் என்று சொல்லுறீங்க நிலா. :lol::o

காதலனுக்கும்

காதலிக்கும்

ஒரே நாளில்

திருமணம்

ஆனால்

மண்டபங்கள்

வேறு வேறு :lol::o

இதயம் மட்டும் ஒரிடத்தில்

ஆனால் அவர்கள்

வேறிடத்தில்

ஏனேனின் இதயம்

பேசிய வார்த்தைகளை

உதடுகள் உச்சரிக்க

மறந்து தூங்கிவிட்டது!! :icon_idea::lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

அப்போ இரண்டு கலியாண வீட்டு சாப்பாடு ஒரே நாளில் என்று சொல்லுறீங்க நிலா. :lol::o

:icon_idea: அட நீங்கள் சாப்பிடுறதிலேயே இருங்கோ

இதயம் மட்டும் ஒரிடத்தில்

ஆனால் அவர்கள்

வேறிடத்தில்

ஏனேனின் இதயம்

பேசிய வார்த்தைகளை

உதடுகள் உச்சரிக்க

மறந்து தூங்கிவிட்டது!! :lol::)

அப்ப நான் வரட்டா!!

ஆகா ஜம்முபேபி நல்லாக சொல்லி இருக்கிறீங்க. சரி சும்மா அழாதீங்க. :lol: ஏன்னா காதலர்கள் வேறு வேறு இடத்தில் இருப்பினும் சந்தோசமாகவே இருக்கின்றார்களாம்.

காதல் உறங்குவதில்லை

காதலர்கள்தான் உறங்கிவிடுகின்றார்கள்

வாழத்துக்கள் வெண்ணிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.