Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்ணை வீட்டில் போதையில் குத்தாட்டம்: வாலிபர்களுடன் பெண் என்ஜினீயர்கள் குளியல்; போலீசாரிடம் சிக்கினர்

Featured Replies

நாகரீக வளர்ச்சி கலாச்சார முன்னேற்றம் என்ற பெயரில் துரைபாக்கம் மற்றும் பெருங்குடி பகுதியில் உள்ள கம்ப்ïட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்கள் உடன் வேலை பார்க்கும் பெண்களை, பண்ணை வீடுகளுக்கு அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்து அவர்களின் கற்பையும் சூறையாடுவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் குவிந்தது.

போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில், தெற்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் துரைராஜ் மேற்பார்வையில் போலீசார் பண்ணை வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

நீலாங்கரை அடுத்த பனைïரில் உள்ள கோரமண்டல் பண்ணை வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு சோதனை நடத்த சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிப்புடி கட்டிப்புடிடா... என்ற சிக்கான பாடல் சத்தமாக இசைக்க அங்கிருந்த நீச்சல் குளத்தில் ஆண்களுடன் சில பெண்கள் கட்டி புரண்டபடி நீச்சலடித்தனர். கையில் மது கிண்ணம் இருந்தது.

சில பெண்கள் இரவு உடையுடன் கவர்ச்சியாக இருந்தனர். மூக்கு முட்ட குடித்த பெண்கள் போதையில் தள்ளாடியபடி நீச்சல் குளத்தின் சுற்று சுவரில் பல்லி போல் ஒட்டிக் கொண்டிருந்தனர். அந்த பெண்களை பார்த்ததுமே நல்ல வசதியான வீட்டு பெண்கள் என்பது தெரிந்தது.

போலீசாரை கண்டதும் திருடனுக்கு தேள் கொட்டியது போல் தங்களது ஜோடிகளை விட்டு, பிரிந்து தட்டு தடுமாறி கரையேறினர். சிலர் அதிகமான போதையினால் நீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்டு போலீசார் கரையேற்றினர்.

அங்கு மொத்தம் 10 பெண்களும், 7 இளைஞர்களும் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் துரைப்பாக்கத்தில் உள்ள பிரபல கம்ப்ïட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் என்ஜினீயர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்கள் போலீசாரிடம் எங்கள் சொந்த விஷயத்தில் எப்படி தலையிடலாம் என உரிமை குரல் எழுப்பினர். மேலும் சிலர் சார், எங்களை விட்டு விடுங்கள், இனிமேல் இப்படி செய்யமாட்டோம் என்றனர்.

நீச்சல் குளத்தில் குளியல் போட்ட சில பெண்கள் அரைகுறை ஆடை அணிந்திருந்தால் குளிரில் நடுங்கினர். அவர்கள் தங்கள் ஆண் நண்பர்களின் சட்டை, பேண்டுகளை எடுத்து அணிந்து கொண்டனர். சில பெண்கள் தலையை தொங்க விட்டபடியே அமர்ந்திருந்தனர். அவர்கள் குடித்த காலி மது பாட்டில்கள் மேஜை மீது நிறைந்திருந்தது.

இதில் சிக்கிய 10 பெண் என்ஜினீயர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோரையும் வரவழைத்து பேசினர். இதில் அந்த பெண்கள் இரவு நேர பணிக்கு செல்வதாக கூறி விட்டு உடன் வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக பொழுதை கழிக்க வந்துள்ளது தெரிய வந்தது.

பெண்களை அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்து குத்தாட்ட குளியல் நடத்திய 7 ஆண் நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களது பெயர் விவரம் வருமாறு:-

சென்னை கிரசன்ட் பார்க் நாகராஜன் (வயது 22), மின்ட் பிரசன்னகுமார் (27), அண்ணா நகர் வினோத் கிருபா (21), குடியாத்தம் வினோத்குமார் (23), திருநகர் ரோஷன் (22), அண்ணாநகர் ஆசிஷ் (29), திருவொற்றிïர் ஷியாம் (27).

இவர்கள் வார இறுதி நாட்களில் பெண் தோழிகளை கூட்டிக்கொண்டு ஓட்டல் பண்ணை வீடுகளுக்கு கூட்டி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரிய வந்தது.

இது பற்றி உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கம்ப்ïட்டர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பணி புரிவோருக்கு கை நிறைய பணம் கிடைக்கிறது. பகல்- இரவு என எந்த நேரமும் பெண்களுடன் வேலை பார்க்கின்றனர். அவர் களது நடை, உடை, பாவனை எல்லாமே மேலை நாட்டை தழுவியே உள்ளது.

வயதுக்கு வந்த பெண் ஒருத்தி கையில் மது கிண்ணத்துடன், ஆபாச பாடலுக்கு வாலிபன் ஒருவனுடன் உல்லாசமாக ஆட எந்த தாய், தகப்பனாவது அனுமதியளிப்பார்களா? அதைத்தான் இவர்கள் கலாச்சார வளர்ச்சி என செல்கிறார்கள்.

பொது இடத்தில் மது அருந்தி கொண்டு நள்ளிரவில் ஆபாச பாடலை இசைத்து மற்றவர்கள் தூக்கத்தை கெடுப்பது, போதையில் தள்ளாடி நீச்சல் குளத்தில் விழுந்து உயிரை இழப்பது, போதை ஏறிய நிலையில் வாகனத்தை ஒட்டி விபத்துக்களை ஏற்படுத்துவது இது தான் இவர்களின் செயல். இவற்றை போலீசார் வேடிக்கை பார்க்கமாட்டார்கள்.

வருகிற புத்தாண்டை ஒட்டியும் இது போன்ற சோதனை தொடரும். அத்துமீறி நடப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். இதை சில மேல்நாட்டு கலாச்சார விரும்பிகள் ஆதரிக்கலாம். நாங்கள் ஆதரிக்க விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இது போன்ற நடவடிக்கையால் தமிழ் கலாச்சாரத்தைதான் காப்பாற்ற முடியவில்லை தமிழனின் உயிரையாவது காப்பாற்றுவோம்.

paraparappu.com

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சிக்கிய 10 பெண் என்ஜினீயர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோரையும் வரவழைத்து பேசினர். இதில் அந்த பெண்கள் இரவு நேர பணிக்கு செல்வதாக கூறி விட்டு உடன் வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக பொழுதை கழிக்க வந்துள்ளது தெரிய வந்தது.

பெண்களை அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்து குத்தாட்ட குளியல் நடத்திய 7 ஆண் நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர்.

அதென்ன பெண்களை மட்டும் எச்சரிக்கை செய்து அறிவுரை கூறி அனுப்புகினம்; ஆண்களை மட்டும் கைது? பெண்களுக்கு போச்சி போத்தலில மது ஊத்தி பருக்கிவிட்ட மாதிரி?

வயதுக்கு வந்த பெண் ஒருத்தி கையில் மது கிண்ணத்துடன், ஆபாச பாடலுக்கு வாலிபன் ஒருவனுடன் உல்லாசமாக ஆட எந்த தாய், தகப்பனாவது அனுமதியளிப்பார்களா? அதைத்தான் இவர்கள் கலாச்சார வளர்ச்சி என செல்கிறார்கள்.

பொது இடத்தில் மது அருந்தி கொண்டு நள்ளிரவில் ஆபாச பாடலை இசைத்து மற்றவர்கள் தூக்கத்தை கெடுப்பது, போதையில் தள்ளாடி நீச்சல் குளத்தில் விழுந்து உயிரை இழப்பது, போதை ஏறிய நிலையில் வாகனத்தை ஒட்டி விபத்துக்களை ஏற்படுத்துவது இது தான் இவர்களின் செயல். இவற்றை போலீசார் வேடிக்கை பார்க்கமாட்டார்கள்.

வருகிற புத்தாண்டை ஒட்டியும் இது போன்ற சோதனை தொடரும். அத்துமீறி நடப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். இதை சில மேல்நாட்டு கலாச்சார விரும்பிகள் ஆதரிக்கலாம். நாங்கள் ஆதரிக்க விரும்பவில்லை.

இந்தாள் சுத்த விளக்கம் கெட்ட மனுசன் போல இருக்கு. பகுத்தறிவோட இப்பிடி வாழாமல் (அப்பிடி தானே பெரிய பெரிய மனிசரெல்லாம் சொல்லியிருக்கினம்) சேலை உடுத்தி பொட்டு வைத்து கோயிலுக்கு போகச் சொல்லுவர் போல இருக்கு.

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களுக்கு போச்சி போத்தலில மது ஊத்தி பருக்கிவிட்ட மாதிரி?

:rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ம்...ம்... யாராவது ஏழை பாழையென்றால் ஸ்ரேசனுக்குள்ளேயே நாலுநாள் போட்டு கட்டிவைத்து அடிச்சிருப்பினம். இது பெரிய இடமென்றபடியால் விட்டிட்டினம். :rolleyes::unsure:

பெண்களுக்கு ஆண்கள் தான் வழிகாட்டி. பெண்களால் துணிந்து இப்படி எல்லாம் களியாட்டம் ஏற்பாடு செய்ய முன்வரமாட்டார்கள்.

ஆண்களுக்கு தண்டனை சரியே

  • கருத்துக்கள உறவுகள்

குடிக்கட்டும் விடுங்கள். எத்தினை காலத்துக்குத்தான் பெண்களை அடைச்சு வைக்கப் போறீங்க.

பெண் விடுதலை பெற வேண்டும். இன்று ஆண்கள் வேண்டிக் கொடுக்க பெண்கள் குடிக்கும் நிலை ஆணாதிக்க நிலை. பெண் தானாகவே பாரில் போய் வாங்கி வந்து குடிக்கட்டும் சுதந்திரமளியுங்கள். போலீசை ஏன் ஏவ வேண்டும். அது பெண்கள் மீது செய்யப்படும் அரசாங்க ஆணாதிக்க அராஜகம்.

அதென்ன கற்பு என்பது. அப்படி என்ற ஒரு சிந்தனையே சமூகத்தில் இருக்கக் கூடாது. எவன் எவளோட போனா உங்களுக்கு என்ன..??! அது அவளின் சுதந்திரம். அவள் விரும்பினால் கூட்டமாகக் கூட கூடிக் களிப்பாள்.. அதைத் தட்டிக்கேட்க நீங்கள் யார். இந்த ஆணாதிக்கப் போக்குத்தான் பெண்களின் சுதந்திர குடித்தனத்தை கட்டிப் போடுகிறது..!

அதென்ன சாவ்வெயர் இஞ்சினியர்.. நாலு கணணி மொழிகளை படிச்சிட்டா அவையெல்லாம் இஞ்சினியரா. அப்படின்னா உலகில் எல்லாரும் இஞ்சினியர்தான்..! சும்மா போங்கையா.. எவன் குடிச்சா என்ன எவள் கூத்தடிச்சா நமக்கென்ன. பாதிக்கப்படுறவனும் படுறவளும் தெரிஞ்சுதானே செய்யுறாங்க பாதிப்பில்லை என்று..! அப்புறம் நமக்கென்ன அடுத்தவன்ர விசயத்தில.. மூக்கை நோண்டிக் கொண்டு.

ஏதேனும் வியாதிகளோட கொஸ்பிற்றலுக்கு போகேக்க உணருவினம்..! அதுவரை பொறுக்க..! :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்கள் குடிச்சோடன பண்பாடு கலாச்சாரம் மண்ணாங்கட்டி எண்டு கத்திக்கொண்டு வாற கூட்டம் ஆண்கள் குடிச்சா பேசாம இருக்கும்.............................. இப்பிடியான அறிவுகெட்ட அரைவேக்காட்டு சனத்த என்ன செய்யிறது.............................. :unsure:

குடிக்கிறதே லூசுத்தனம்.............. இதில ஆணெண்டா ஒரு கதை பெண்ணெண்டா ஒரு கதை................ விசுக்கோத்து சனம்....................... தாங்க குடிச்சுப்போட்டு பாரில கூத்தடிக்கேக்க ஒண்டுமில்ல.................. பெண்கள் குடிச்சோடன பொங்கிக்கொண்டு வருதாக்குமு்................................ முதல்ல குடிக்க கற்றுக்கொடுத்த முன்னோடியள செருப்பால அடிக்கணும்.................. இனியாவது திருந்தட்டும்....................... ஆண்கள் எண்டுற பேரில திமிர் பிடிச்சு கொழுப்பெடுத்து ஆடுற கூட்டத்த தூக்கில போடவேணும்.................. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வருகின்றீர்கள் பூஸ்குட்டி! முதலில் குடிக்கக் கற்றுக் கொடுத்தது என்றால் எல்லோருடைய அம்மாமார் தான், பால் குடிக்கக் கற்றுக் கொடுத்தது.

:rolleyes:

பூனையோ, பூனைக்குட்டியோ குறுக்காலபோனால் கூடாது என்று சொல்லுறவர்கள். நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்?

பாவம் ஆண்கள் இனி எவன் எவனையோ கல்யாணம் கட்டி ஏமாத்த போயினமோ தெரியல இந்தப்பெண்கள்.

இந்த விடயத்தில் நான் பெண்களுக்காக கதைக்க வரல :rolleyes::unsure:

வணக்கம் இந்த விடயத்தில் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்.

பெண்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்று கூறுவது மடைமைத்தனம்.அறியாமை.

ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலே கட்டாயம் ஒரு பெண் இருப்பாள். ஆனால் அவனின் அழிவிற்குப் பின்னாலும் பெண் இருப்பாள்.

ஊசி இடம் கொடுக்காமல் எப்படியும் நூல் கோர்க்க முடியாது. புரிந்தால் சரி

பெண்களுக்கு ஆண்கள் தான் வழிகாட்டி. பெண்களால் துணிந்து இப்படி எல்லாம் களியாட்டம் ஏற்பாடு செய்ய முன்வரமாட்டார்கள்.

ஆண்களுக்கு தண்டனை சரியே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாவம் ஆண்கள் இனி எவன் எவனையோ கல்யாணம் கட்டி ஏமாத்த போயினமோ தெரியல இந்தப்பெண்கள்.

இந்த விடயத்தில் நான் பெண்களுக்காக கதைக்க வரல :unsure::D

ஏன்????? ஆம்பிளயளும் தானே குடிச்சவை..... அவை கல்யாணம் கட்டி எத்தரின பேர ஏமாத்த போயினம்????? ஏன் பெண்கள் தான் ஏமாத்தப் போகினம் எண்டு சொல்லுறீங்கள்................

குடிச்சுப்போட்டு கூத்தடிக்கிற ஆண்கள் கூட்டம் தாயின்ர மார்பில பால் குடிச்சிருக்காது................. மானங்கெட்ட இழிபிறப்புகள்.................. இவர்கள் மனுசயென்மங்களே இல்ல.................. மிருகங்கள்................. இதுகள் ஏமாத்தாது????? ஆனா பெண்கள் மட்டும் ஏமாத்துவினமோ?????? உங்கட சிந்தனை வாழ்க................................ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

குடிச்சா என்ன கும்மாளம் அடிச்சா தான் என்ன? ஆணோ பெண்ணோ ஒருவரை ஒருவர் பலோத்காரமாகா நடத்தாத வரை. இச்சம்பவத்தில் எல்லோரும் (ஆணோ, பெண்ணோ) ஒருமித்தே கும்மாளம் போட்டுள்ளார்கள். இதில் ஒருவரையுமே குற்றம் சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிரச்சினையில ஆண்கள் கடுப்பானதுக்குக் காரணம் தங்களால இப்படி ஆட்டம் போட முடியெல்லையே எண்டுதான். :):D

  • கருத்துக்கள உறவுகள்

குடிச்சா என்ன கும்மாளம் அடிச்சா தான் என்ன? ஆணோ பெண்ணோ ஒருவரை ஒருவர் பலோத்காரமாகா நடத்தாத வரை. இச்சம்பவத்தில் எல்லோரும் (ஆணோ, பெண்ணோ) ஒருமித்தே கும்மாளம் போட்டுள்ளார்கள். இதில் ஒருவரையுமே குற்றம் சொல்ல முடியாது.

நீங்கள் சொல்றது சரி ஆனால் இதுதான் சரியில்லை.

இதில் சிக்கிய 10 பெண் என்ஜினீயர்களுக்கு அறிவுரை கூறி எச்சரித்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெற்றோரையும் வரவழைத்து பேசினர். இதில் அந்த பெண்கள் இரவு நேர பணிக்கு செல்வதாக கூறி விட்டு உடன் வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் உல்லாசமாக பொழுதை கழிக்க வந்துள்ளது தெரிய வந்தது.

பெண்களை அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்து குத்தாட்ட குளியல் நடத்திய 7 ஆண் நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதைத்தான் நாகரீகம் என்று பலர் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆங்கிலம் தெரியாத ஒருவரை குறைவாக மதிப்பிடுவது போல, இப்படிப்பட்ட குடித்துப்போட்டு கும்மாளம் அடிக்கும் சிறந்த பண்புகள் இல்லாதோரை நாகரீகம் அற்றவர்கள் என தாழ்வாக எண்ணும் காலமும் வெகு விரைவில் வரும்.

பட்டும் படாமல் இருப்பதைவிட படாதபாடு பட்டு தெளிவது மேல். மேற்கத்திய பெண்களைபோல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.