Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடிகாரர்களுக்கு யாரும் பெண் கொடுக்க வேண்டாம்: திருமண விழாவில் டாக்டர் ராமதாஸ் பேச்சு

Featured Replies

சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூரில் இன்று காலை ஒரு திருமண விழா நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதா வது:-

ஒவ்வொரு மனிதருக்கும் தாயே உயிர். அதனால்தான் நாம் மொழியைக்கூட தாய் மொழி என்கிறோம். என்றும் தாயை மதிக்க வேண்டும். பெண்களை யாரும் அடிமை யாக நடத்தக்கூடாது. பேசும் தெய்வம் தாய் தான். தாய் - தந்தையருக்கு என்றும் அன்பு செலுத்த வேண்டும்.

குடிப்பழக்கம் மோச மானது. மதுவால் நாட்டுக் கும், வீட்டுக்கும், உயிருக் கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டு அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்துகிறது. என் குடும்பத்தில் 2 தம்பிகள் குடிப்பழக்கத்தால் அல்பஆயுசில் போய் சேர்ந்து விட்டார்கள்.

குடிகாரர்களுக்கு யாரும் பெண் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு நாயை கட்டி வையுங்கள்.

டாஸ்மாக் மூலமாக ஒருவரிடம் இருந்து 100 ரூபாயை பறித்துக் கொண்டு 10 ரூபாய் அளவுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறார்கள். கடந்த ஜனவரி 1-ந் தேதி ரூ.100 கோடிக்கு மது குடித்து இருக்கிறார்கள். காணும் பொங்கல் அன்று ரூ.70 கோடிக்கு மது குடித்து இருக்கிறார்கள். இதுதான் நம் மக்களின் சாதனை. காமராஜர் ஆட்சியில் கிராமந்தோறும் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக் கப்பட்டன. அன்று கல்வி அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. தற்போது கல்வி தனியார் வசம் உள்ளது. தனியார் வசம் இருந்த மதுபான கடைகளை அரசு ஏற்று நடத்துகிறது.

சேலம், தர்மபுரி, விழுப் புரம் மாவட்டங்களில் அதிகம் பேருக்கு மது பழக்கம் உள்ளது. அதில் இருந்து விடுபட வேண்டும். அதே போன்று பெண் சிசு கொலைகள் தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அதிகம் நடக்கிறது. அதனை தடுக்க முன்வர வேண்டும். பெண்களை படிக்க வைத்து நன்றாக ஆளாக்க வேண்டும். அவர்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும்.

கொளத்தூர் பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடந்து உள்ளது. அதில் பெண்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார் கள். இதை நான் மக்கள் தொலைக்காட்சி சந்தனகாடு தொடரில் பார்த்த போது மனம் கொதித்து போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாநில வன்னியர் சங்க தலைவர் குரு பேசும்போது, "திராவிட கழக தலைவர் வீரமணியை கண்டித்து பேசினார்.

இதில் செந்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, தமிழரசு, கண்ணையன், காவேரி, முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

viparam .com

ம்ம்ம்...எங்கே எல்லாரும் ஜோரா கையை தட்டி விடுங்கோ ராமதாஸ் அண்ணாவிற்கு :wub: ...குடிகாரர்களிற்கு நாயை கட்டி வைக்கிறதா நல்லா இருக்கே நாய் என்ன பாவம் செய்தது :wub: இதனை நான் வன்மையா கண்டிக்கிறேன் அனைத்து நாய்கள் சார்பாக :) ..குடிகாரர்களும் அந்த நாட்டின் குடிமக்கள் தான் ராமதாஸ் அண்ணே. :) .எங்கே நம்ம கு.சா தாத்தா இதை நீங்களும் வன்மையா கண்டியுங்கோ தாத்தா... :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"குடியை நிற்பாட்ட சொல்ல முன்னம் குடிக்கு என்ன காரணம் என்பதனை அறியலாமே" :)

  • கருத்துக்கள உறவுகள்

ம். நாய்கள் என்டதும் எல்லாருக்கும் இளக்காரமாய்ப் போச்சுது. :wub::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவையளுக்கு கதைக்க வேறை கதையொண்டும் கிடைக்கேல்லையோ :wub:

இதை நான் மப்புறுப்பினர் என்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன் :wub:

உவையளுக்கு கதைக்க வேறை கதையொண்டும் கிடைக்கேல்லையோ :wub:

இதை நான் மப்புறுப்பினர் என்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன் :)

:wub:

குடி குடியைக் கெடுக்கும் எண்டு சொல்லி இருக்கிறாங்கள்..

நான் குடிப்பதிலை. எதிர்காலத்திலும் குடிக்கப்போவதில்லை... எதிர்காலத்தில் நான் திருமணம் செய்து எனக்கு குழந்தைகள் வந்தால் நானும் குடிகாரர்களிற்கு எனது பெண்ணை கொடுக்க மாட்டேன்.

ராமதாஸ்ஸின் பேச்சுக்கு யாழ் சும்மா வந்து சும்மா போவோர் சங்கம், மற்றும் யாழ் காதல் வளர்ப்பு சங்கம் சார்பில் பரிபூரண ஆதரவை தெரிவித்து கொள்கின்றேன்..

மேலும்.. எனது சீடர்களையும் இந்த விடயத்தில் (அட இந்த விசயத்திலாவது) குருநாதன் சொல் கேட்டு நடக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

குடி என்ற ஒன்றை ஒழித்தால் குடிகாரன் என்றொருவர் இருக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தநாள் பிறந்த குஞ்சுகுருமனெல்லாம் குடியைப்பற்றி புத்திமதி சொல்ல வெளிக்கிட்டுட்டுதுவள் :lol:

எங்கை போய் முட்டுறதண்டு தெரியேல்லை :o

:( உலகக்குடிடிடிடி மக்களை கேவலப்படுத்தும் இந்தக்கருத்தை வன்மையாகக்கண்டிக்கிறேன்

:huh::(:(:o

முந்தநாள் பிறந்த குஞ்சுகுருமனெல்லாம் குடியைப்பற்றி புத்திமதி சொல்ல வெளிக்கிட்டுட்டுதுவள் :o

எங்கை போய் முட்டுறதண்டு தெரியேல்லை :(

எங்கை முட்டுறதோ கு சா ஒவ்வொருநாளும் முட்டி மோதித்தானே வீட்டை போறநாங்கள்

:lol:

குடி என்ற ஒன்றை ஒழித்தால் குடிகாரன் என்றொருவர் இருக்க மாட்டார்.

நன்றீறீறீறீ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் சட்டங்களை கொண்டுவந்து குடிகாரர்களை திருத்தனும் :lol: ஆனா திருந்தமாட்டாங்க :o

இப்படித்தான் சட்டங்களை கொண்டுவந்து குடிகாரர்களை திருத்தனும் :o ஆனா திருந்தமாட்டாங்க :(

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வன்மையா கண்ணடிக்கிறன் சே....கண்டுபிடிக்கிறன். ..இல்லை கண்டிக்கிறன் ஒய் கு.சா ...சின்னா எங்கடை பிறப்புக்கே அவமானம் ..குடிகாரருக்கு பெண் குடுக்ககூடாது எண்டால் அப்ப இனி யார் எங்களுக்கு பெண்தருவாங்கள். :lol::o:(:huh:

மேலும்.. எனது சீடர்களையும் இந்த விடயத்தில் (அட இந்த விசயத்திலாவது) குருநாதன் சொல் கேட்டு நடக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

குருவே!!

இதை கூட உங்களிற்காக கேட்கமாட்டேனா :( என்ன சீடனும் உது எல்லாம் டச் பண்ணுறதில்லை சோ வொறி பண்ண வேண்டாம் பாருங்கோ :lol: ..ஆனாலும் ராமதாஸ் மாமா வந்து நாய்களை இன்சல்ட் பண்ணுற மாதிரி ஒரு டயலக் சொல்லி இருக்கிறார் அதை என்னால தாங்கி கொள்ள முடியாது குருவே நீங்களும் வன்மையாக கண்டிக்க வேண்டும் :o ...குடிகாரர்களை நாய்களிற்கு கட்டி வைத்தா நாய்கள் எவ்வளவு பாவம் குருவே அதுதான் :o ..என்னத்தை பற்றி வேண்டும் என்றாலும் கதைக்கலாம் ஆனா நாயை பற்றி கதைக்க கூடாது என்ன வசபண்ணா நான் சொல்லுறது சரி தானே... :lol::huh:

அப்ப நான் வரட்டா!!

நானும் வன்மையா கண்ணடிக்கிறன் சே....கண்டுபிடிக்கிறன். ..இல்லை கண்டிக்கிறன் ஒய் கு.சா ...சின்னா எங்கடை பிறப்புக்கே அவமானம் ..குடிகாரருக்கு பெண் குடுக்ககூடாது எண்டால் அப்ப இனி யார் எங்களுக்கு பெண்தருவாங்கள். :huh:

சாத்திரி அங்கிள் இது உங்களுக்கே ஓவரா தெரியவில்லை :lol: ...உந்த வயசில எத்தனையாவது கல்யாணம் பண்ண போறியள் :lol: ..நீங்க எனி குடிகாட்டியும் ஒருத்தரும் பெண் தரமாட்டீனம் பாருங்கோ :( முனியம்மாவோட தான் காலம் தள்ள வேண்டும்...(எங்கே என்ட முனியம்மா அக்கா உங்கே ஒருக்கா வாங்கோ :o )...

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வன்மையாாாாாாாாாாாாக கன்டிகிறேன்.சும்மா இப்படி தனித்தனியாக கன்டிப்பதை விட ஒரு சங்கம் அமைத்து கன்டன அறிக்கை

விடவேன்டும் :lol:

நானும் வன்மையாாாாாாாாாாாாக கன்டிகிறேன்.சும்மா இப்படி தனித்தனியாக கன்டிப்பதை விட ஒரு சங்கம் அமைத்து கன்டன அறிக்கை

விடவேன்டும் :D

என்ன ளொள்ளா :lol: என்ன பிளானில இத சொல்லுறீர் இப்ப நான் கேக்கிறன் தம்பீ யார் சார்பா கதைக்கிறீர்

:)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதற்கு இரண்டு காரணங்கள்...

1. பெண்களைக் காதலிச்ச பின்னால மற்றும் கலியாணம் முடிச்ச பின்னே தான் அநேக ஆண்கள் குடிக்கப் பழகுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளாததற்கு..!

2. ஏதோ பெண்கள் பெரிய திரவியம். அவர்களைக் கலியாணம் கட்டிக்கனும் என்றதுக்காக குடியைக் கைவிடனும் என்று பெண்கள் எல்லோரையும் உச்சாங்கொப்பில் ஏத்திறதுக்கு.. குடியைப் பயன்படுத்தியதற்காக..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.