Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் அமைதி பேரணி நடத்திய மலேசிய தமிழர்கள் மீது தாக்குதல்

Featured Replies

மலேசியாவில் அமைதி பேரணி நடத்திய மலேசிய தமிழர்கள் மீது தாக்குதல்

கோலாலம்பூர் : மலேசியாவில் அமைதி பேரணி நடத்திய தமிழர்கள் மீது மலேசிய போலீசார் தடியடி நடத்தி தாக்குதல் நடத்தினர்.

மலேசியாவில் சமஉரிமை கோரி மலேசிய தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியினர் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி போராட்டம் நடத்தினர். இவர்கள் மீது தடியடி நடத்தியும் கலைத்தனர். மேலும் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இன்று மலேசியாவில் தமிழர்கள் அமைதியாக பேரணி நடத்தி, கையில் ரோஜாக்களுடன் பிரதமர் படாவியிடம் மனு கொடுப்பதற்காக பார்லிமென்ட் நோக்கி சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து.நிறுத்தியதோடு அல்லாமல், அவர்கள் மீது தடியடி நடத்தியும், தண்ணீரை பீச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் பேரணியில் கலந்து கொண்டவர்களைக் கலைத்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் தினமலர்

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய அரசுக்கு பிஜேபி கண்டனம்

.

Saturday, 16 February, 2008 04:16 PM

.

சென்னை,பிப்.16: மலேசியாவில் இந்து இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மலேசிய அரசின் இந்த நடவடிக்கை களை பிஜேபி வன்மையாக கண்டிப்பதாக இல.கணேசன் கூறியுள்ளார்.

.

தமிழக பிஜேபி மாநில தலைவர் இல.கணேசன் தனது 64வது பிறந்தநாளை இன்று கமலாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கொண்டாடி னார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து இல.கணேசன் கூறியதாவது:

மலேசியாவிலிருந்து மன வேதனை அளிக்கக்கூடிய செய்தி வந்துள்ளது. ஏற்கனவே பல இந்து தலைவர்கள் அங்கு கைது செய்யப்பட்டள்ளனர். இந்நிலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய 300 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப் பட்டுள்ளனர். மேலும் மலேசியாவில் இந்து இயக்கத்தில் முழு நேர ஊழியராக பணியாற்றும் ராமச்சந்திரன் என்பவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் பெரும்பாலான தமிழர்களுக்கு மனித உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. சிறிய அளவில் இருந்த இந்த பிரச்சனை தாங்க முடியாமல் போன போதுதான் அது வெடித்துக் கிளம்பி தற்போது போராட்டமாக மாறியுள்ளது.

மலேசிய வாழ் தமிழர்களின் கோரிக் கைகளை கேட்டு செயல்படுத்த அந்த அரசு முன்வர வேண்டும். இந்து மத நடவடிக்கை களை முற்றிலும் ஒடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு மலேசிய அரசு செயல்படுகிறது. இதை பிஜேபி வன்மையாக கண்டிக்கிறது.

இந்து முன்னணி சார்பில் இன்று கூட சென்னையில் மலேசிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. வரும் மார்ச் மாதம் 7, 8 ஆகிய இரண்டு நாட்களும் பிஜேபியின் மாநில செயற்குழு கூட்டம் திருத்தணி யில் நடைபெறவுள்ளது. முன்னதாக மார்ச் 2ந் தேதி தமிழகத்தின் 4 இடங்களில் பிரச்சார யாத்திரையை பிஜேபி தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

maalaisudar.com

இலங்கையை வைத்து அரசியல் செய்தார்கள் இப்போது மலேசியாவை வைத்து வோட்டு சேர்க்கநினைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலேசிய இந்துக்களுக்காக அழும் <_< இவர்கள் -பிஜேபி- இலங்கையில் அவதியுறும் இந்துக்களுக்காக - இந்துக்கடவுள்கள் - கோவில்களுக்காக வாய் திவாதது ஏன்?

இந்த அழிவைச் செய்த்தூண்டும் தம் நாட்டு அதிகாரிகள் தொடர்பாக ஏதும் கூறியதுண்டா?

ஐயா தமிழர்கள் அதுவும் உலகத் தமிழர்கள் விழித் தெழும் காலம் இது

மலேசிய இந்துக்களுக்காக அழும் <_< இவர்கள் -பிஜேபி- இலங்கையில் அவதியுறும் இந்துக்களுக்காக - இந்துக்கடவுள்கள் - கோவில்களுக்காக வாய் திவாதது ஏன்?

இந்த அழிவைச் செய்த்தூண்டும் தம் நாட்டு அதிகாரிகள் தொடர்பாக ஏதும் கூறியதுண்டா?

ஐயா தமிழர்கள் அதுவும் உலகத் தமிழர்கள் விழித் தெழும் காலம் இது

மலேசியா முஸ்லீம் நாடாச்சே பிற்கென்ன எல்லாருக்கும் அல்வா கிடைச்ச மாதிரிதான்............

மலேசிய தலைநகரில் இந்திய பூர்வகுடியினர் ஆர்ப்பாட்டம்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் சுமார் இரண்டாயிரம் இந்திய பூர்வகுடியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை மலேசிய காவல்துறையினர் கலைத்துள்ளனர். அரசாங்கம் தங்களை பாரப்பட்சமாக நடத்துவதாக கூறி இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசாங்க தடையையும் மீறி கூடியிருந்த இவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதோடு, தண்ணீரையும் பீய்ச்சியடித்தனர்.

சுமார் நூற்று இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு ஹிண்ட்ராப் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அரசாங்கம் மலாய் பெரும்பான்மையினருக்கே வேலை மற்றும் கல்வியில் முன்னுரிமை கொடுப்பதாக இவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

நன்றி பிபிசி தமிழோசை

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வம்சாவளியினரின் போராட்டத்தை புகைக்குண்டுகள் வீசி அடக்கியது மலேசியா

2/17/2008 9:28:54 AM

வீரகேசரி வாரவெளியீடு - மலேசிய நாடாளுமன்றம் முன்பாக சிறுபான்மையின ருக்கு அதிக உரிமைகள் தரக்கோரி போராட்டத்தில் கலந்து கொண்ட 200 இற்கும் மேற்பட்ட இந்தியத் தமி ழர்களை பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி யும், இரசாயன திரவங்கள் அடங்கிய தண்ணீரை பாய் ச்சியடித்தும் கலைத்திருக்கின்றனர். இதனால் மலேசியா விலுள்ள இந்தியத் தமிழர்களின் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. சிறுபான்மை தமிழர்களுக்கும், பெரும்பான்மை மலே சியர்களுக்கு வழங்கப்படுவது போன்ற உரிமைகளை வழங்கக் கோரி நாடாளுமன்றம் முன்பு அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்போவதாக ஹிண்ட்ராப் என்ற அமைப்பு அறிவித்திருந்தது.

ஆனால் இந்தப் போராட்டத்திற்கு மலேசிய அரசு அனுமதி வழங்கவில்லை தடை விதித்தது. ஆனால் அந்த தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் என ஹிண்ட் ராப் அமைப்பு அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று நாடாளுமன்ற வளாகம் முன்பு ஏராளமான சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட தமிழர்கள் கூடினர். 200 இற்கும் மேற்பட்டோர் கூடி நாடாளுமன்றத்தின் முன்பு கூடி சிறுபான்மையினருக்கு உரிமைகள் தரக் கோரி கோஷமிட்டனர். பிரதமர் அப்துல்லா படாவியை சந்தித்து ரோஜாப் பூக்களைக் கொடுக்கப் போவதாக அங்கிருந்த சிறுவர்கள் கூறினர். காதலர் தினத்தையொட்டி, தமிழர்களின் அன்பைத் தெரிவிக்கும் வகையில் ரோஜாக்களைக் கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.

இருப்பினும் இதற்கு மலேசிய அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில் நேற்று தடையை மீறி கூடிய தமிழர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், இரசாயானத் திரவமடங்கிய தண்ணீரை பீய்ச்சியடித்தும் கலைத்தனர். பின்னர் ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த 20 பேரை கைது செய்தனர்.

இருப்பினும் போராட்டத்தையொட்டி நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு முதல் நேற்றுவரை 60 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிண்ட்ராப் உறுப்பினரும், வழக்கறிஞருமான சுரேந்திரன் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிரித்தானியத் தூதரகம் நோக்கி ஹிண்ட்ராப் அமைப்பினர் ஊர்வலம் நடத்த முயன்றபோதும் இதேபோலத்தான் பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இந்த நிலையில் 2 ஆவது முறையாக ஹிண்ட்ராப் அமைப்பு நடத்திய போராட்டமும் கலைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய இந்துக்களுக்காக அழும் இவர்கள் -பிஜேபி- இலங்கையில் அவதியுறும் இந்துக்களுக்காக - இந்துக்கடவுள்கள் - கோவில்களுக்காக வாய் திவாதது ஏன்?

காரணம், இலங்கையில் 'தமிழர்' என்பதற்காக அடிக்கிறான் என்று சொல்லி, இந்தியாவை, இந்தியை, பிராமண, இந்துவை வெறுக்கும் தமிழ் தேசியவாதிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு தமிழ் ஈழம் கேட்கிறார்கள்.

மலேசியாவில் இந்து என்பதற்காக அடிக்கிறான் என்று சொல்லி இந்து அமைப்பு சமஉரிமை கேட்டு போராடுகிறது. வித்தியாசம் தெரிகிறதா?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

pi-1-l.jpg

நேற்று சனிக்கிழமை மலேசியாவில் பாராளுமன்றத்திற்கு அருகில் தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்திய சமூகத்தவர்கள் அமைதிப் பேரணியொன்றில் ஈடுபடுவதைக் காணலாம். ...

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் நாங்கள் இந்துக்களென்று முந்தி ஆதரவு தேடின நாங்கள்தான். அவங்கள் கணக்கெடுக்கையில்ல.

நாங்களும் நாங்கள் இந்துக்களென்று முந்தி ஆதரவு தேடின நாங்கள்தான். அவங்கள் கணக்கெடுக்கையில்ல.

யார் இந்துக்கள் என்று ஆதரவு தேடினார்கள்? எதை சொல்கின்றீர்கள்? புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இந்து ஆலய நிர்வாகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்திய இந்து அமைப்புக்கள் இலங்கையில் இந்துக்கள் கொல்லப்படுவதை கண்டிக்க வேண்டும் என்று சொன்னதை சொல்கின்றீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் ஒரு அரசியல் கட்சி தான் குரல் கொடுத்திருக்கு, அதிகார பூர்வமா இந்திய அரசு ஒண்டும் சொல்ல இல்ல! காரணம் இந்தியா ஒரு கையாலாகாத போலித்தனமான பிராந்திய வல்லரசு. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போல தன் பிரஜைகள் வம்சாவளியினர் நலன் பேணும் ஒரு நல்லரசல்ல. இதுவே பிஜித் தீவிலயோ வேறு எங்கயோ நடந்திருந்தா ராஜதந்திரம் என்ற போர்வையிலயாவது ஏதாவது செய்திருப்பினம். மலேசியாவை ஒண்டும் செய்ய ஏலாது. மலேசியாவின் முதலீடுகள் இந்தியாவில் ஏராளம். இந்தியாவுக்கு எரி பொருள் தேவை உண்டு. மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் நண்பன் மலேசியா. மலேசியாவிடம் முண்டப் போய் மத்திய கிழக்கப் பகைக்கவும் விருப்பமில்லை. ஒவ்வொருவருக்கும் ஆப்பு வைக்க ஒருவன் வருவான் என்பது இது தான்!

காரணம் இந்தியா ஒரு கையாலாகாத போலித்தனமான பிராந்திய வல்லரசு

அவர்களிடம் அணுகுண்டு உள்ளது. நீங்கள் எப்படி இவ்வாறு கூற முடியும்?

மலேசியாவை ஒண்டும் செய்ய ஏலாது. மலேசியாவின் முதலீடுகள் இந்தியாவில் ஏராளம். இந்தியாவுக்கு எரி பொருள் தேவை உண்டு. மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளின் நண்பன் மலேசியா. மலேசியாவிடம் முண்டப் போய் மத்திய கிழக்கப் பகைக்கவும் விருப்பமில்லை. ஒவ்வொருவருக்கும் ஆப்பு வைக்க ஒருவன் வருவான் என்பது இது தான்!

உண்மைதான். இலங்கை அரசே இந்தியாவை தான் நினைத்தபடி ஆட்டிப்படைக்கின்றது. இந்த லட்சணத்தில் மலேசியாவில் என்னத்தை புடுங்கிறது. கண்டனம் தெரிவித்தாலே வாயை பொத்து என்று பதில் வரும்.

மலேசியத்தமிழர்களின் பிரச்சனையில் அங்குள்ள தமிழர்களுக்கு சாதகமாக இந்தியா நடந்துகொள்ளவேண்டிய ஒரு அவசியமும் இல்லை. இந்தியா ஆதரவு தரும் என்று மலேசியத்தமிழர்கள் நம்பினால் அது அவர்களுக்கு பாதகமாகவே முடியும்.

மலேசியாவில் உள்ள மத சுதந்திரத்தில் ஒரு வீதம் கூட இந்தியாவில் உள்ள தலித்துக்களுக்கு இல்லை என்பது புரியாதவர்களா மலேசியத்தமிழர்கள்? மலேசியத்தமிழர்களை தூண்டிவிட்டு அரசியல் நடத்த முனையும் இந்திய மதவாதசக்திகள் மலேசிய தமிழர்களை என்னும் மோசமான ஒரு நிலைக்குள் தள்ளிவிடுகின்றது. ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய செய்த செய்துகொண்டிருக்கும் வஞ்சகங்களை மலேசியத்தமிழர்கள் புரிந்து கொண்டு தமது உரிமைகளை இந்திய அரசு சாராமல், மதவாத அரசியல் கட்சிகளின் தூண்டுதலுக்கு உட்படாமல் சாத்வீக வளியில் போராடி பெற்றுக்கொள்ள தவறினால் அவர்கள் மிக மோசமான நிலமைக்கு செல்வார்கள் என்பது உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன், அணுகுண்டு மட்டும் தான் வல்லரசொன்றின் முக்கிய தகுதி என்று சொல்ல வருகிறீர்களா? தன்னையே நிலையாக வைத்திருக்கத் தெரியாத பாகிஸ்தானிடமும் அணுகுண்டு உண்டு. அது ஒரு வல்லரசா? ரஷ்யா வல்லரசு நிலையை இழந்த போது அமெரிக்கா, நேட்டோ நாடுகளை விட அதிகமான அணுஆயுதங்களை அது வைத்திருந்ததே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.