Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வத்திக்கான் அறிவித்துள்ள புதிய பாவச்செயல்கள்

Featured Replies

உலகமயமாகி வரும் சூழ்நிலையில் ஏழு பாவச் செயல்கள் பட்டியலை வத்திக்கான் கத்தோலிக்க சர்ச் மாற்றியமைத்துள்ளது.

வத்திக்கான் சர்ச், மனிதர்கள் செய்யக்கூடாத பாவச் செயல்கள் பட்டியலை ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. தற்போது, உலகமயமாகி வரும் சூழ்நிலை காரணமாக, இந்த பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வாடிகனின் பழமையான பாவப்பட்டியலில், ஏழு செயல்கள் பாவச் செயல்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன. சிற்றின்ப வெறி, பெருந்தீனி, பொருள் திரட்டும் பேராசை, சோம்பல், கோபம், பொறாமை, தற்பெருமை ஆகியவை பாவச் செயல்களாக அறிவிக்கப்பட்டு இருந்தன.

தற்போது உலகமயமாகி வரும் சூழ்நிலையில், திருத்தி அமைக்கப்பட்டுள்ள பாவப்பட்டியலில், போதை கடத்தல், ஒழுக்கக் கேடான செயல்கள் மூலம் செல்வம் சேர்த்தல், சுற்றுச்சூழலை கெடுத்தல், மரபணுக்களை மாற்றியமைக்கும் விஞ்ஞானம் ஆகியவையும் பாவச் செயல்களாக இடம் பெற்றுள்ளன. இந்த பாவச் செயல்களில் ஈடுபட்டோர், பாவ மன்னிப்பு பெறாவிட்டால், நரகத்துக்கு செல்வர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வத்திக்கான் சர்ச்சின் பிராயச்சித்த திருத்தூதர்களின் தலைவராக உள்ள பிஷப் ஜியான்பிரான்கோ கிரோட்டி, புதிய பாவச் செயல்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். வாடிகனின் சர்ச் வெளியிடும், ஹலோ சர்வேட்டர் ரொமானோ' பத்திரிகையில், இந்த பட்டியல் இடம் பெற்றுள்ளது. தற்போதைய மதச்சார்பின்மை உலகில், தாங்கள் செய்யும் செயல்கள் பாவச் செயல்கள் என்ற உணர்வு குறைந்து வருவதாக போப் வேதனை தெரிவித்துள்ளார்.

பாவச் செயல்களில் ஈடுபட்டோர் பாவ மன்னிப்பு கேட்கும்போது, தற்போதை உலகமயத்தில் தடுத்து நிறுத்த முடியாத பாவச் செயல்களை மத குருக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனிதர்களின் செயல்களில், மிக சாதாரண பாவம், குறைந்தளவிலான பாவம்,பெரியளவிலான பாவம், உயிருக்கு ஊறு ஏற்படுத்தும் பாவம் என்று பிரிக்கப்பட்டுள்ளன. இயேசுவின் பத்து கட்டளைகள் மற்றும் பேரின்ப நிலைப்பாடு கட்டளைகளை, பெரிதும் மீறும் வகையில் இருப்பவை அதீத பாவச் செயல்களாக கருதப்படுகின்றன. இந்த பாவச் செயல்களில் ஈடுபடுவோர் நரகத்துக்கு செல்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் தினமலர்

உலகம் முழுவதும் காலப்போக்கில் மனித முன்னேற்றத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியமானவை. மனிதன் உருவாக்கிய மதங்கள் மட்டும் விதிவிலக்கானவை அல்ல. வத்திக்கான் தனது மத நம்பிக்கைகளில் அடிக்கடி மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியில் ஆயிரம் ஆண்டுகால நம்பிக்கைகள் மூடத் தனமாக இருந்தால் அதைப் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரவேற்கத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

மரபணுக்களை மாற்றியமைக்கும் விஞ்ஞானம்

நானிதை ஆல்ரெடி செய்திட்டேனே..! அப்ப என்ன ஆகும்..??! :lol::unsure:

இத்தாலியில் பாவ மன்னிப்பு கேட்பவர்கள் எண்ணிக்கை குறைகின்றதாம்..! அதுக்குதான் இந்த பட்டியலா?

மரபணு பரிசோதனைகள் மருத்துவ வளர்ச்சிக்கு முக்கியம்.. அதப் போயி....! சரி இதுவும் கலிலியோ கதை தான் போல்.

  • கருத்துக்கள உறவுகள்

நானிதை ஆல்ரெடி செய்திட்டேனே..! அப்ப என்ன ஆகும்..??! :D:wub:

உங்களுடைய பாவங்கள் நிச்சயமாக கத்தரால் மன்னிக்கபடும். வீண்கவலை கொள்ளாதீர்கள்

அருகில் அமைந்திருக்கும் ஒரு சார்ச்சில் சென்று மதகுருவிடம் உங்களது பாவங்களை ஏற்றுக்கொள்ளும்படி மனதினால் கொடுத்திடல் வேண்டும்.

நீங்கள் யாழ்களத்தில் செய்யும் இத்தனை பாவங்களையும் நாம் மன்னிக்கவில்லையா?

இதனுடன் ஒப்பிடும் போது மரபணு மாற்றம் எம்மாத்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோபர் நிகஸ் பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்ற கருத்தை முன்வைத்தபோது அதையும் அன்றைய மதகுருக்கள் பாவச் செயலாக்கி அவரைக் கொல்லத் தூண்டினார்கள். இறுதியில் அவர் கொல்லப்பட்டார். இவ்வாறுதான் பல நோய்களுக்குத் தீர்வுகாணக்கூடிய மரபணு ஆய்வுகளையும் இந்தக் குருமார் பாவச்செயலாக்கி நடக்கவிருக்கும் நன்மைகளைத் தடுக்கப் பார்க்கிறார்கள். விஞ்ஞானத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முனைவது பெரும்பாவச்செயலாகும். அதற்காக இறைவன் இவர்களைத் தண்டிக்கப் பார்ப்பார். கர்த்தாவே இவர்கள் தாம் செய்யும் தவறை உணராதிருக்கிறார்கள். இவர்களை மன்னியும். ஆனால் இவர்கள் மேன்மையடையும் விஞ்ஞானத்தைத் தடுத்து விடாதிருக்க உமது ராச்சியத்தை இங்கு மேன்மையடையச் செய்யும். ஆமென்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாழ்களத்தில் செய்யும் இத்தனை பாவங்களையும் நாம் மன்னிக்கவில்லையா?

நா... உங்களைக் கேட்டனா.. மன்னிக்கச் சொல்லி. வேற வேலையில்லாம.............. :D:wub:

பாவச் செயல்களைச் செய்பவர்களே புதிய பாவச் செயல்களை அறிவிக்கிறார்களாம். கர்த்தரே இவர்களை மன்னிப்பாராக. ஆமென். :wub:

Edited by Thamilachchi

எல்லாம் மாறத்தான் வேணும்...

அது சரி பாவமா? எது?

மன்னிப்பா? யாருக்கு? யாராலை?

அய்யோ மீண்டும் கடவுளா? மனிதருக்கு விடிவே இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

பழயபடி தொடங்கப்போறாங்களப்பா :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.