Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் தனிய இல்லை

Featured Replies

நான் தனிய இல்லை

தலைநகராம் கொழும்பில்

காலையில் குண்டுவெடிப்பு

தொலைக்காட்சி பார்த்ததில்

மலைத்து போனேன்

வலைப்பின்னலில்

கண்களை சுழல விட்டதில்

கண்டுகொண்டேன்

மீண்டும் பல செய்திகளை

குண்டுவெடிப்பில் பலியானோர்

எண்ணிக்கையை விட

தேடிப்பிடித்த தமிழர்களின்

தொகையோ பன்மடங்கு என

ஒவ்வோர் இடமாக தேடி

வெவ்வேறு முகாம்களில்

அடைக்கப்பட்டுள்ள அப்பாவித்

தமிழர்களை நினைக்கையில்

பகலவனுக்கே தாங்க முடியாமல்

இருளைக் கக்கினான்

வெண்ணிலவும் மங்கலாக

உருண்டது வானமதில்..

அடையாள அட்டையை எடுத்து

தலையணைக்கடியில் வைத்து

ஆடம்பரமின்றி ஆனால் அழகாக

ஆடை அணிந்து

படுக்கையில் புரண்ட போது

உறக்கம் எனக்குள்

தூரவாகிப் போனபோதும்

உறங்கினேன் என்னையும் மறந்து.

சிலமணி நேரத்தில்

சேவல் கூவியது போல

வாசல்மணி சத்தம் கேட்டு

சாத்து வாய் துடைத்து

கண்களைக் கசக்கி எழ முற்பட

வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினர்

கேட்டுக்கேள்வியின்றி

ஆயுதமுனையில் வண்டியில் ஏற்றினர்

நித்திரை இன்றிய முகம்

பயத்தில் அழுத கண்கள்

புரியாத மொழியில்

தெரியாத முகங்களோடு

செல்கையில் எனக்கோ

சொல்ல முடியாத பதட்டம்

வண்டியில் இருந்து இறக்கி

சிறைக்குள் அடைக்கப்பட்ட

அக்கணம் தான்

என் உதடு சிரித்தது

"நான் தனியாள் இல்லை

எனக்கு துணையாக

என் இனத்தவர்கள்

பலர் உளர்" என்றெண்ணி

  • கருத்துக்கள உறவுகள்

அடடடா உங்களையும் ஏத்திகொண்டு போனவங்களா?? சரி கவலை படாதையுங்கோ :o

நான் தனிய இல்லை

அடையாள அட்டையை எடுத்து

தலையணைக்கடியில் வைத்து

ஆடம்பரமின்றி ஆனால் அழகாக

ஆடை அணிந்து

படுக்கையில் புரண்ட போது

உறக்கம் எனக்குள்

தூரவாகிப் போனபோதும்

உறங்கினேன் என்னையும் மறந்து.

யதார்த்தமான வரிகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதா அல்லது நிகழ்வை எண்ணி கவலைப்படுவதா என்று தெரியவில்லை!!!

  • தொடங்கியவர்

அடடடா உங்களையும் ஏத்திகொண்டு போனவங்களா?? சரி கவலை படாதையுங்கோ :D

:o:huh: இதுவரையில் ஏத்தவில்லை

ஏத்தினாலும் என்ற ஒரு மனப்பயத்தின் வெளிப்பாடே :lol::lol::)

யதார்த்தமான வரிகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதா அல்லது நிகழ்வை எண்ணி கவலைப்படுவதா என்று தெரியவில்லை!!!

:(:(:(:( ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நான் தனிய இல்லை

தலைநகராம் கொழும்பில்

காலையில் குண்டுவெடிப்பு

தொலைக்காட்சி பார்த்ததில்

மலைத்து போனேன்

ஏன் மலைக்கக்கூடிய புது நிகழ்வா கொழும்பு மாநகருக்கு!!! கவிதை நன்று...நன்றி.[/

வலியை கொட்டியுள்ளீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா, உங்கள் கவிதையை வாசித்து பார்த்த பொழுதில் கண்களின் ஓரத்தில் எட்டிப்பார்த்தது நீர்.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு நிம்மதியாக இருந்தோம்.இன்று படுக்கைக்கு போனால் விடிய உயிருடன் இருப்போமா? இருந்தால் எங்கே இருப்போம் என்பதே தெரியாமல் பூவின்றி பொட்டு இன்றி வாழும் தமிழர்கள் எல்லோரும் உங்களுடன்...............

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரை இன்றிய முகம்

பயத்தில் அழுத கண்கள்

புரியாத மொழியில்

தெரியாத முகங்களோடு

செல்கையில் எனக்கோ

சொல்ல முடியாத பதட்டம்

பதட்டத்தில் வாழும் எமது இனம் எப்போ விடுதலை பெற்று சுதந்திரகாற்றை சுவாசிக்கப்போகின்றனர்?

சூழ்நிலைக்கு ஏற்ற கவிதை. நன்றி நிலா உண்மை நிலையை கவிதையாக்கியமைக்கு.

  • தொடங்கியவர்

ஏன் மலைக்கக்கூடிய புது நிகழ்வா கொழும்பு மாநகருக்கு!!! கவிதை நன்று...நன்றி.[/

:D கொழும்பு மாநகருக்கு மலைப்பில்லாமல் இருக்கலாம். தமிழ்ர்களுக்கு அது மலைப்பு தானாக்கும் :)

:D:lol::o

:):( விகடகவி உங்க கண் கலங்கலாமா சொல்லுங்கோ :)

வலியை கொட்டியுள்ளீர்கள்...

:D ரொம்ப ரொம்ப பயத்தில் இருந்தேனே :D . அப்போ அபப்டியே கொட்டிட்டேன்

  • தொடங்கியவர்

வெண்ணிலா, உங்கள் கவிதையை வாசித்து பார்த்த பொழுதில் கண்களின் ஓரத்தில் எட்டிப்பார்த்தது நீர்.

:) உங்களுக்குமா?

அச்சோ இது கவிதையுங்கோ

ஆனால் இப்படி ஒரு நிகழ்வு வெண்ணிலாக்கு நடக்கும்பட்சத்தில் கவிதை எல்லாம் வராது. :D

எவ்வளவு நிம்மதியாக இருந்தோம்.இன்று படுக்கைக்கு போனால் விடிய உயிருடன் இருப்போமா? இருந்தால் எங்கே இருப்போம் என்பதே தெரியாமல் பூவின்றி பொட்டு இன்றி வாழும் தமிழர்கள் எல்லோரும் உங்களுடன்...............

யாழ்ப்பாணத்திலும் இதே நிலைமையாக தானே இருக்கின்றது.

நான் நிம்மதியாக உறங்கினேன் என்றால் இந்தியா சென்றிருந்த போது தான்.

மற்றும்படி இங்கிருக்கும் போது பயத்தில் நித்திரை வராது :)

பவர் கட் ஆகினால் அண்டைக்கு பிளேன் வந்துடுமோ னு கூட பயப்பட்டு விடிய என்ன நடக்குமோ னு பயத்திலேயே .... :D:lol::o

பதட்டத்தில் வாழும் எமது இனம் எப்போ விடுதலை பெற்று சுதந்திரகாற்றை சுவாசிக்கப்போகின்றனர்?

சூழ்நிலைக்கு ஏற்ற கவிதை. நன்றி நிலா உண்மை நிலையை கவிதையாக்கியமைக்கு.

எப்போ என்று தெரிஞ்சால் அந்நாளை எண்ணியபடியே வாழலாம். ஆனால் இது............

:):D:(

Edited by வெண்ணிலா

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நிலா!

கவிதை வரிகள் மூலம் தழிழனின் பரிதாப நிலையையும், நாட்டின் நடப்பையும் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.

உங்கள் கவிதையை பாராட்டவா, அல்லது உடன்பிறப்புக்களின் அவல நிலையைப் பார்த்து வருந்துவதா...

நன்றி நிலா.

அட...நிலா அக்கா அக்கா காகாகாகாகாகா........என்ன ஆச்சுசுசுசுசுசுசு?? :D ...கவிதையில் "நான் தனிய இல்லை" என்னு பலரின் ஏக்கத்தை வெளிபடுத்தி இருக்கின்றீங்க உங்கள் கவிதையை வாழ்த்துகிறேன், :D

பலரின் ஏக்கங்களை எண்ணி பார்க்கும் போது வாயடைத்து போய் நிற்கிறேன்..(வேற என்ன செய்ய முடியும்??) :D ...கடசியில் அங்கும் நான் தனிய இல்ல என்று சொல்லும் போது அவனின் வலிகள் எங்களையும் வலிக்க செய்கிறது உள்ள சுமையையும் கண்ணின் வலியையும் கவிதையாக்கிமைக்கு வாழ்த்துக்கள் அக்கா... :D

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை -

வண்டியில் ஏறிய போது

தெருவில் ஒரு

நாய் குரைத்தது..

அப்போது என் மனதில்

தெரு நாய்குள்ள சுகந்திரம்

கூட..

நமகில்லையா?? :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

வணக்கம் நிலா!

கவிதை வரிகள் மூலம் தழிழனின் பரிதாப நிலையையும், நாட்டின் நடப்பையும் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.

உங்கள் கவிதையை பாராட்டவா, அல்லது உடன்பிறப்புக்களின் அவல நிலையைப் பார்த்து வருந்துவதா...

நன்றி நிலா.

வணக்கம் வல்வை அண்ணா

அச்சோ கவிதைக்கு எல்லாம் பாராட்டு வேணாம். ஆனால் கவிதை நடைமுறைக்கவிதை. ஏன்னா கவிதையில் குறிப்பிட்ட போல தான் என்னுடையதும், என் நண்பிகள், எனக்கு தெரிந்த சிலரது நிகழ்வுகளும். :lol::(

கொழும்பில் உள்ளவர்களின் எண்ணத்தினைப் பிரதிபலிக்கும் அருமையான சோகமான கவிதை வரிகள்.

  • தொடங்கியவர்

அட...நிலா அக்கா அக்கா காகாகாகாகாகா........என்ன ஆச்சுசுசுசுசுசுசு?? :lol: ...கவிதையில் "நான் தனிய இல்லை" என்னு பலரின் ஏக்கத்தை வெளிபடுத்தி இருக்கின்றீங்க உங்கள் கவிதையை வாழ்த்துகிறேன், :)

பலரின் ஏக்கங்களை எண்ணி பார்க்கும் போது வாயடைத்து போய் நிற்கிறேன்..(வேற என்ன செய்ய முடியும்??) :( ...கடசியில் அங்கும் நான் தனிய இல்ல என்று சொல்லும் போது அவனின் வலிகள் எங்களையும் வலிக்க செய்கிறது உள்ள சுமையையும் கண்ணின் வலியையும் கவிதையாக்கிமைக்கு வாழ்த்துக்கள் அக்கா... :(

ஜம்மு பேபி சிட்டுவேசன் கவிதை -

வண்டியில் ஏறிய போது

தெருவில் ஒரு

நாய் குரைத்தது..

அப்போது என் மனதில்

தெரு நாய்குள்ள சுகந்திரம்

கூட..

நமகில்லையா?? :(

அப்ப நான் வரட்டா!!

:( கடைசியில் வெண்ணியை காக்கா ஆகிட்டியள் போல உது நன்னாவே இல்லை.

ம்ம்ம்ம் அங்கிருந்த எல்லோரது முகத்திலும் சந்தோசம். அவர்களும் "நான் தனிய இல்லை" என்ற நினைப்பில் சந்தோசப்பட்டிருப்பார்கள் போல.

ஹாஹா உங்க சிட்டுவேசன் கவிதை வரிகள் நன்னா இருக்கு பேபி. ஆமா தெருநாய்களின் சுதந்திரம் கூட நமக்கு இல்லையே என்கிற போது கோவப்படுவதா அழுவதா தெரியலை:(

  • தொடங்கியவர்

கொழும்பில் உள்ளவர்களின் எண்ணத்தினைப் பிரதிபலிக்கும் அருமையான சோகமான கவிதை வரிகள்.

:lol::( ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

கொழும்பு வாழ் தமிழர்களின் யதார்த்தத்தை அழகா கவிதையாக வடித்தள்ளீர்கள் நிலா


அக்கணம் தான்

என் உதடு சிரித்தது

இப்படி எழுதியிருக்கலாம்

உள்ளம் ஆறுதல்கொண்டது

Edited by vvsiva

வெண்ணிலாக்கா, சமகால நிகழ்வுகளை

அதுவும் வலியுடனான நிகழ்வுகளை

யதார்த்தமாக கவிதையின் வடித்துள்ளீர்கள்

எனது மனமார்ந்த பாராட்டுக்கள். :lol:

  • தொடங்கியவர்

கொழும்பு வாழ் தமிழர்களின் யதார்த்தத்தை அழகா கவிதையாக வடித்தள்ளீர்கள் நிலா


அக்கணம் தான்

என் உதடு சிரித்தது

இப்படி எழுதியிருக்கலாம்

உள்ளம் ஆறுதல்கொண்டது

:( நன்றிகள் விவிசிவா

சிவா உங்கள் எண்ணம் எனக்கு புரிகிறது, இருப்பினும் நான் வாய்விட்டு ஹாஹா னு சிரிக்க்கலையே. என் உள்ளம் ஆறுதலடைந்ததை உதடு சிரித்தது என்று போட்டதில் எனக்கு பெரிதாக தப்பு தெரியவில்லை :icon_idea:

வெண்ணிலாக்கா, சமகால நிகழ்வுகளை

அதுவும் வலியுடனான நிகழ்வுகளை

யதார்த்தமாக கவிதையின் வடித்துள்ளீர்கள்

எனது மனமார்ந்த பாராட்டுக்கள். :lol:

பாராட்டு எல்லாம் இருக்கட்டும். கனி நீங்கள் எப்போ இனி கவிதை எழுதுவீங்க? :(

:( கொழும்பு மாநகருக்கு மலைப்பில்லாமல் இருக்கலாம். தமிழ்ர்களுக்கு அது மலைப்பு தானாக்கும் :icon_idea:

கொஞ்சம் கோபம் வந்துட்டுது போல.... குண்டு வெடிப்பும் கைதுகளும் சாதாரணமாகி பழகிப்போச்சு பலருக்கு. சுரணையே இல்லாமல் போச்சு.. அதுதான் மற்றபடி நோகடிக்கும் எண்ணம் இல்லை...

  • தொடங்கியவர்

கொஞ்சம் கோபம் வந்துட்டுது போல.... குண்டு வெடிப்பும் கைதுகளும் சாதாரணமாகி பழகிப்போச்சு பலருக்கு. சுரணையே இல்லாமல் போச்சு.. அதுதான் மற்றபடி நோகடிக்கும் எண்ணம் இல்லை...

:icon_idea: அபப்டின்னா தமிழர்களுக்கு சுரனை இல்லை னு சொல்லுறியளா?

பழகிப்போனாலும் பயம் என்ற ஒன்று இருக்கும் தானே :(

நிலா அக்கா உதுகுள்ளக் குழப்புறன் என்டு கோவிக்க வேண்டாம் டக்கென்று போயிடுறன் அதுகுள்ள ஒன்னு செய்து போட்டு போறன் என்ன.. :lol:

வெண்ணிலாக்கா, சமகால நிகழ்வுகளை

அதுவும் வலியுடனான நிகழ்வுகளை

யதார்த்தமாக கவிதையின் வடித்துள்ளீர்கள்

எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

தங்கச்சி நன்னா சொல்லி இருக்கிறியள் :D ...அது சரி உது எல்லாம் எங்க பொறுக்கினியள் :) ..எங்கையோ கேட்ட மயக்கமா இருக்கு..(சரி சரி ஏசாதையுங்கோ நான் போறன் :D )..

அப்ப நான் வரட்டா!!

கவிதைக்கு பாராட்டுக்கள் வெண்ணிலா..!

சிலமணி நேரத்தில்

சேவல் கூவியது போல

வாசல்மணி சத்தம் கேட்டு

சாத்து வாய் துடைத்து

கண்களைக் கசக்கி எழ முற்பட

வீட்டுக்குள் நுழைந்த இராணுவத்தினர்

கேட்டுக்கேள்வியின்றி

ஆயுதமுனையில் வண்டியில் ஏற்றினர்

வெண்ணிலா இதில.... சாத்து வாய் துடைத்து எண்டு எழுதிருக்குறீங்கள் தானே... நான் இதை வாசிச்சிட்டு..... யோசிச்சுக் கொண்டு இருந்தது ஹிஹி பிறகு தான் சாத்து வாய் எண்டால் என்ன எண்டு தெரிஞ்சுது....... :) கதைக்கும் போது சாத்து வாய் எண்டு சொல்லுறயில்லை தானே .....அது தான் எனக்கு தெரியல..... புது சொல்லாயிருந்தது......அல்லாட்டி நீங்கள் அப்படி கதைக்கிறதா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.