Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓபாமாவைப் போல நானும்...........

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

vijyakanth_dharmapuri.jpg

ஓபாமாவைப் போல நானும்..: விஜயகாந்த்

சென்னை: அமெரிக்க அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள பாரக் ஓபாமாவைப் போல தமிழகஅரசியலிலும் பெரும் மாற்றத்தை நான் ஏற்படுத்துவேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். அதில், நிறவெறி காரணமாக காலம் காலமாய் வெள்ளையர்களுக்கும், கறுப்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு.

ஆனால், அமெரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபராகி புதிய வரலாற்றை பாரக் ஒபாமா படைக்க இருக்கிறார். அதுபோல தமிழகத்தில் நானும் மாற்றத்தை கொண்டு வருவேன்.1016764-1199751636-hakoom2zx2.gif

தற்போது தேவைப்படுவதெல்லாம் மாற்றம் தான். நிச்சயம் அது நிகழும். தற்போது தேர்தலில் போட்டியிட மட்டுமே நான் விரும்புகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலை போல் அல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கண்டறிந்து அதில் தேமுதிகவின் பலத்தை அதிகரிக்க கடுமையாக பாடுபட்டு வருகிறோம்.

மூன்றிலிருந்து ஐந்து தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2 தொகுதிகளில் வென்றால் கூட தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கும்.

தேர்தலில் தனித்து போட்டி என்பது என்னுடைய தற்போதைய நிலை. இதில் மாற்றம் ஏற்படவும் செய்யலாம். பல்வேறு கட்சிகளிலிருந்து கூட்டணி அமைத்துக் கொள்ள எனக்கு தூது விடுகிறார்கள். ஆயினும் தனித்து போட்டி என்பதுதான் இப்போதைக்கு என்னுடைய நிலையாகும்.

தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. சட்டமன்ற தேர்தல் மட்டுமே என்னுடைய இலக்கு. இது 2011ல் வந்தாலும் சரி அல்லது அடுத்த ஆண்டிலேயே வந்தாலும் சரி.

அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று சொன்னால் மற்றவர்கள் கேலியாக பார்க்கிறார்கள். ஆனால் இவ்வாறு சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

http://thatstamil.oneindia.in

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மக்களே

ஓட்டுப்போட்டு என்னை அடுத்த முதல்வராக்குங்கள்

அல்லது

கத்தி பேசும் என்கிறாரா???

அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று சொன்னால் மற்றவர்கள் கேலியாக பார்க்கிறார்கள். ஆனால் இவ்வாறு சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

அவுஸ் பிரதமரா வருவதுபற்றி நம்ம ஜம்ஸ் அடக்கடி சொல்லுறவரெல்லோ அத விஜயகாந்த் வாசிச்சிருபார்போலக்கிடக்கு

அவுஸ் பிரதமரா வருவதுபற்றி நம்ம ஜம்ஸ் அடக்கடி சொல்லுறவரெல்லோ அத விஜயகாந்த் வாசிச்சிருபார்போலக்கிடக்கு

அட...நான் நிசமாவே அவுஸ் பிரதமரா வருவன் அல்லோ சிவா அண்ணா :) என்ன இப்படி சொல்லி போட்டியள் எனக்கு எவ்வளவு கவலையா இருக்குது பாருங்கோ..அவுஸ் மக்கள் எல்லாருமே எண்ட பக்கம் தான் அல்லோ..ஆனா மக்கள் எப்ப கால வாறுவார்களோ யாருக்கு தெரியும்... :D

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா முதலமைச்சர் ஆகிறது முக்கியமல்ல கடசிவரை அதை தக்க வைக்கிறது தான் முக்கியம்" :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன ஒரு விசயம் பாருங்க சினிமா காரந்தான் தமிழ் நாட்டின் மக்களின் தலைவிதியை மாற்றூகிறான்

பாருங்க. சினிமா வை நம்பி வாழும் கூட்டம் அல்லவா

இவர்கள் அரசியல் வாதி ஆன பின்பு தானும் தன் அரசியல் வாழ்கை பற்றியும்

சிந்திப்பார்கள் தற்பொழுது உள்ள முதல்வர் கூட தான் ஆட்சிக்கு வந்தால்

ஈழ தமிழரின் துயர் துடைப்பேன் என்றும் கூறியவர் தானே

மறக்க முடியவில்லையடா

இந்த முனிவரால்

இவர்களுக்கு மீன் வேண்டும் ஆனால் மீனவர்கள் வேண்டாம்

ஓவ்வொரு நாழும் ஒன்றும் இரண்டுமாகா சிங்களவனால் சுட பட்டு இறந்தால்

ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவிக்கவே முடியும் இவர்களால்

ஈழதமிழனால் காப்பாற்றமுடியும் தமிழிழம் மலரும் பொழுது

ஓம் நமச்சிவாய

முதலில் சிந்தியுங்கள் பிறகு செயற்படுங்கள்

தமிழ் நாட்டு மக்களே

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முதலமைச்சர் நான் தான் என்று சொன்னால் மற்றவர்கள் கேலியாக பார்க்கிறார்கள். ஆனால் இவ்வாறு சொல்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

அதனை தகுதியானவர்கள் சொன்னால் கேலியாகப் பார்க்கமாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப்பாருங்கள்

தன்வாயாலேயே தன் மரியாதையை இழந்தார்.........

இவருக்கு சில நாட்கள் முன்வரை ஈழத்தமிழரிடம் எவ்வளவ மரியாதை

வாயைத்திறந்தார்.............கவுண்டர

  • கருத்துக்கள உறவுகள்

விசயகாந்த்க்கு ஏன் தேவையில்லாத வேலையெல்லாம்

இனி விஜயகாந்தின்ர படத்துக்கு வடிவேல் தேவயில்லை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அட...நான் நிசமாவே அவுஸ் பிரதமரா வருவன் அல்லோ சிவா அண்ணா :lol: என்ன இப்படி சொல்லி போட்டியள் எனக்கு எவ்வளவு கவலையா இருக்குது பாருங்கோ..அவுஸ் மக்கள் எல்லாருமே எண்ட பக்கம் தான் அல்லோ..ஆனா மக்கள் எப்ப கால வாறுவார்களோ யாருக்கு தெரியும்... :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா முதலமைச்சர் ஆகிறது முக்கியமல்ல கடசிவரை அதை தக்க வைக்கிறது தான் முக்கியம்" :D

அப்ப நான் வரட்டா!!

யாழ்களத்திலையும் மக்கள் உங்கள் பக்கம்

அவுஸ்சிலும் மக்கள் உங்கள் பக்கம்

எனவே அடுத்த பிரதமர் நீங்கள்தான்

அதற்கு நீங்கள் செய்யவேண்டியது

உங்கள் கட்சியின் பிரதிநிதிகளாக கீழ்க்கண்டவர்களை நியமித்துவிடுங்கள் வெற்றி நிச்சயம்

கந்தப்பு--கொள்கை பரப்புச் செயலாளர்

புத்தன்--ஊடகத் தொடர்பு

ஈழவன்--இளைஞர் அணி

இன்னிசை--மகளிர் அணித்தலைவி

இனி விஜயகாந்தின்ர படத்துக்கு வடிவேல் தேவயில்லை,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இது அசத்தல். நல்ல காலம் அமெரிக்க ஜனாதிபதி ரேன்ஜுக்கு போகாதது :lol:

இது அசத்தல். நல்ல காலம் அமெரிக்க ஜனாதிபதி ரேன்ஜுக்கு போகாதது :)

தமிழக மக்கள் இப்படியே இருந்தா இதுகூடநடக்கும்,,,,,,,,,,,,,,,,,,,,,,

எனக்கென்னமோ அடுத்தமுறையும் கிழவந்தான் வரும் போலகிடக்கு....

தெரியாத பேயைவிட தெரிந்த பிசாசே பாறவாயில்லை....

தேர்தல் எப்போ?

தேர்தல் எப்போ?

சட்டமன்றத்தேர்தல் எப்ப எண்டுதெரியாது ஆனால் நாடாளுமன்றத்தேர்தல் வருகிறவருடம் என்று மாத்திரம் தெரியும்...

எனக்கென்னமோ அடுத்தமுறையும் கிழவந்தான் வரும் போலகிடக்கு....

இதை தற்போது நிச்சயமாக சொல்லிவிட முடியாது. அடுத்து வரும் கூட்டணிகள், டெல்லி தேர்தல் முடிவு, கலைஞரின் வயது இப்படி பல காரணிகள் உண்டு

தெரியாத பேயைவிட தெரிந்த பிசாசே பாறவாயில்லை....

இதையே நானும் அடிக்கடி நினைப்பதுண்டு! ஆனால் அடுத்து வந்தால் ஸ்டாலின் தான் முதல்வர்.

ஈழத்தமிழர் பற்றி வெளிப்படையாக பேசுவதை சில வருடங்களாக ஸ்டாலின் தவிர்த்தே வருகிறார். ஆனால் நிர்வாக அனுபவம் கொண்டவர். விஜயகாந்தை விட முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்றே சொல்வேன்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த தேர்த்தலில் இவர் தனியாக எல்லா தொகுதியிலும் முதல் தடவையாக போட்டியிட்டு எதிர்பார்க்காத வாக்குகளை பெற்றார். அடுத்த தேர்த்தலில் இவர் வென்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. கலைஞரையும், ஜெயலதிதாவையும் எவ்வளவு காலத்துக்கு தான் தமிழ் நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருப்பார்கள

உண்மைதான் எதையும் இப்ப சொல்ல ஏலாது...

அது சரி யார்வந்தாலென்ன பெருசா ஒன்றும் மாறாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.