Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் யுத்தநிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரிப்பு

Featured Replies

விடுதலைப்புலிகளின் யுத்தநிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரிப்பு

[செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 01:08 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்]

விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.வடபோர் முனையில் எதிர்நோக்கிவரும் தொடர்ச்சியான பின்னடைவுகளால் நலிவடைந்துள்ள புலிகளின் தந்திரோபாய நகர்வே இது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதற்குஅரசு தயாரில்லை என்றும் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டால் வந்தால் மாத்திரமே அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, சிறிலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க கூறுகையில், விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு சமாதான அனுசரணையாளர்களான நோர்வேயின் ஊடாக விடுக்கப்பட்டிருக்கவேண்டும

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவுக்கு சகுனப்பிழை என்று நினைக்கின்றேன்...

மகிந்த நல்ல சாத்திரியை பார்ப்பது அவருக்கும் அவரது இனத்திற்கும் நல்லது...........

தமிழர்களும் யுத்த நிறுத்தம் பண்ணவேண்டும்! சிங்களமும் அதை நிராகரிக்க வேண்டும்!

அப்போது தான் இரட்டிப்பு நன்மை நமக்கு!

சார்க் மாகாநாட்டில் இனி மகிந்த எந்த குண்டையும் வைத்து விட்டு புலி வைத்ததாக அபயக்குரல் எழுப்ப முடியாது.

நன்றி மகிந்தரே! இவர் எல்லாம் எப்படி ஒரு நாட்டின் ஜனாதிபதி ஆக முடிந்தது என்று வியக்கிறேன்!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மகிந்தரே! இவர் எல்லாம் எப்படி ஒரு நாட்டின் ஜனாதிபதி ஆக முடிந்தது என்று வியக்கிறேன்!

அவர் எங்கே யனாதிபதி ஆனார்

தலைவர் அவரை கொண்டுவந்து இருத்தினார்.........

அவர் எங்கே யனாதிபதி ஆனார்

தலைவர் அவரை கொண்டுவந்து இருத்தினார்.........

நிச்சயமாக!!!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பம்பரத்தை சுத்திவிட்டுட்டு.................

பார்த்துக்கொண்டிருக்கிறார்..

.........

பம்பரம் சுத்தி.........ஆடி............களைத்து...........

.விழ

தலைவர் ஆடத்தொடங்குவார்.............

அப்ப தெரியும் மகிந்தவுக்கு..........

ஸ்ரீலங்காவில் மட்டுமல்ல............

ஆசியாவையே இயங்கவைக்க பிரபாகரனால் மட்டுமே முடியும் என்பது.............

இந்த பதில் தலைவருக்கு தேவைப்பட்டதாக இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: மகிந்தவை ஜனாதிபதியாக்கியது தலைவர்தான். இது சிங்களத்தின் உண்மை முகத்தை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்டது. ஆனால் இவ்வளவு அட்டூழியங்களுக்குப் பிறகும் கூட சர்வதேசம் என்பது எமது பக்க நியாயத்தையோ அல்லது சிங்களப் பேரினவாதத்தின் கோர முகத்தினையோ கண்டுகொள்ளவில்லை. நடந்ததெல்லாம் எமது மக்களும் சொத்துக்களும் அழிந்தது மட்டுமே. எமது வாழ்விடங்கள் சிறிது சிறிதாக வல்வளைப்புக்குள்ளானது, மக்கள் ஏதிலிகளாக விரட்டப்பட்டனர். இனியும் சர்வதேசம் இதைப் புரிந்துகொள்ளுமா என்பது சந்தேகமே.

மகிந்தவை ஜனாதிபதியாக்கியதற்கு நாம் பெரிய விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ரணில் வந்தால் இதைவிடப் பெரிதாக நடப்பதற்கு எதுவுமில்லை. சர்வதேச வலைப்பின்னலுக்குள் புலிகளை இழுத்து பேச்சுவார்த்தை என்ற பொறிக்குள் எம்மை வீழ்த்தி சிறிது சிறிதாக போராட்டத்தையே மழுங்கடித்திருக்கும். ஆகவே இந்த ரெண்டில் எதனாலும் எமக்குப் பயனில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நேரே முன்னால் வரும் எதிரியைவிட

வேசம்போட்டு ..........பின்னால் குத்தும் எதிரி ஆபத்தானவன் இல்லையா??

இந்த பதில் தலைவருக்கு தேவைப்பட்டதாக இருக்கலாம்
  • கருத்துக்கள உறவுகள்
:icon_idea: உண்மைதான் குகன். மகிந்த மடையன். ரணில் குள்ளநரி. மற்றும்படி இருவராலும் ஏற்படும் அழிவுகள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
  • கருத்துக்கள உறவுகள்

இதன் அர்த்தம் புரியவில்லை

ஆனால் தலைவருக்கு புத்திசொல்லவில்லை

அதே நேரம் உண்மையை சொல்வது முகத்துதியும் ஆகாது......

:icon_idea: உண்மைதான் குகன். மகிந்த மடையன். ரணில் குள்ளநரி. மற்றும்படி இருவராலும் ஏற்படும் அழிவுகள் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

இது சிங்களவன் எமை ஆளும்வரை மாற்றமுடியாது

அழிவுகளைத்தவிர்க்கவும் முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிற்பார்த்தது நாமும் புலிகளும். இனிமேல் தான் ஆட்டமே இருக்கு

அரசியல் நாடகம் நடத்த வேண்டும் சில நேரங்களில்.

பாவம் ரணில் இந்த "சர்வதேச வலைப்பின்னல்" என்ற ஒரே ஒரு வார்த்தையால, பதவியையும் பறிகொடுத்து, கட்சியையும் உடைய விட்டு... ஈராக்கில எண்ணை கொள்ளையடிக்க அமெரிக்கா பாவித்த "உயிரியல் ஆயுதம்" போலத்தான் இதுவுமோ? இப்ப சிரிலங்கா அரசாங்கத்திற்கு உதவுற வலைப்பின்னல் என்ன செவ்வாய்கிரகத்து வலைப்பின்னலோ?

ரணிலுக்கே இந்த சொல்லுக்கு விளக்கம் தெரியுமோ தெரியாது... யாராவது விளக்கினீங்கள் என்றா அந்தாள் அரசியலை விட்டே போயிடும்!

என்ன சாணக்கியன் உதுகளை சொல்லி எங்க விளங்க ! செகிடனுக்கு தெரிஞ்சும் கொண்டும் சங்கூதுறது செகிடன்ர பிழை இல்லை உதுறவனின்ர பிழை தானே?

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி நாற்காலியில் மகிந்தவை அமர்த்தியது வேறு யாருமல்ல பிரபாகரன் :

நாம் தற்போது கட்சியினை மறுசீரமைத்து வருகிறோம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆதரவு ரனில் விக்கிரமசிங்கவுக்கே இருந்தது. எனினும் வாக்கு எண்ணும் போது மகிந்த வெற்றிபெற்றார். உண்மையில் அது நாம் கேட்டு வாங்கி பெற்ற தோல்வி. உண்மையில் எம்மை தோற்கடித்தது யார்? 6 லட்சம் பேர் வாக்களிக்காமல் தடுக்கப்பட்டனர். இதனால் அவர்கள் வாக்களிக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி .திசாநாயக்க தெரிவித்தார்.சிலாபத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் கிளை ஸ்தாபிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தர். பிரபாகரன் ரணிலை தோற்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, ரணில் - பிரபா ஒப்பந்தம்

குறித்து பேசினர். எம்மவர்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. பசிலும் தானும் வடக்கு சென்று பணம் கொடுத்ததாக ஸ்ரீபதி இறப்பதற்கு முன்னர் என்னிடம் தெரிவிததார். மங்கள் தற்போது வெளியில் இறங்கி எம்முடன் இணைந்து பணியாற்றுகிறார். மகிந்தவை ஜனாதிபதி நாற்காலியில் அமர்த்தியது வேறு யாருமல்ல பிரபாகரன். தற்போது யுத்தம் பற்றிய பேசுகின்றனர். இனபிரச்சினையை யுத்ததின் மூலம் தோல்வியடைய செய்த நாடுகள் எதுவும் இல்லை. அதிகாரத்தை பரவலாக்குவது தற்போது யதார்த்தமான ஒன்றாக மாறியுள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் இருந்த நாடுகளில் அதிகார பகிர்வின் மூலமே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன. இனவாத ரீதியில் இதனை தீர்க்க முடியாது. இந்தோனேசிய உலகில் அதிக சனத்தொகையை கொண்ட

6வது நாடாகவுள்ளது. அந்த நாடு கிழக்கு திமோருடன் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டது. இவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் நாடு அழிந்து போகும்.இன ரீதியான பிரச்சினைகள் இருந்த நாடுகள் 73ஆம் ஆண்டு, 52ஆம் ஆண்டுகளில் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டன, அலை அதிகாரங்களை பகிர்ந்து கொண்டன.ஒற்றையாட்சி என்ற

காலங்கடந்த எண்ண கரு தொடர்பில் பேசி பிரயோசனம் இல்லை. தொடர்ந்தும் இனவாத ரீதியில் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. ஜே.வி.பியினரும், ஹெல உறுமயவும் இவற்றுக்கு எதிர்ப்பை தெரிவிக்கின்றன.நான் கூறிய நிலைமைதான் உண்மையானது, நான்

கூறிய விடயங்கள் பற்றிய கிராமங்களுக்கு சென்று அஞ்சாமல் பேசுங்கள். இதுதான் யதார்த்தமானது, நாம் சரியான நிலைப்பாட்டில் உள்ளோம், ஒன்றையாட்சி என்பது பண்டடைய கல்யுகத்தின் ஆட்சி முறை எனவும் எஸ்.பி திசாநாயக்க குறிப்பிட்டார். மறுபுறத்தில் பார்க்கும் போது தற்போது வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.பொருட்களின் விலைக பாரியளவில் உயர்ந்துள்ளன. இடி விழக்கூடிய குற்றங்களை செய்யும் போது இவ்வாறான நிலையேற்படும். இடி விழக்கூடிய

குற்றச்செயல்கள் என்ன?நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் பாதுகாக்க வரவு செலவு திட்டத்தில் ஆயிரத்து 400 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது.இவர்கள் வெறும் 108 பேர், ஆனால் சமூர்த்தி உதவி பெறும் 18 லட்சம் பேருக்கு வெறும் 800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இப்படி செய்யும் போது பணம் பிரச்சினை ஏற்படும், பணம் பிரச்சினை ஏற்படும் போது பணத்தை அச்சிடுவர். சீனா, ரஸ்யா, வியட்நாம் போன்ற நாடுகள் கூட தற்போது திறந்த பொருளாதார கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. அங்கு பொதுவுடமை இல்லை. எம்மில் சிலர் கோபம் போடுவதால் பொதுவுடமையை ஏற்படுத்த

முடியாது என எஸ்.பி திசாநாயக்க குறிப்பிட்டார்.

http://globaltamilnews.com/?p=98

அவர் எங்கே யனாதிபதி ஆனார்

தலைவர் அவரை கொண்டுவந்து இருத்தினார்.........

அதுதான் இப்படி நன்றி சொல்றாரோ? மடையனாயிருப்பான் என்று கொண்டு வந்து விட்டதால இப்படி நடக்குது...

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம் இன்னும் முடியவில்லையே???

என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் விடுதலைபபுலிகள்; அடிக்கமாட்டார்கள். ஆகவே உங்களுடைய ஆட்டத்தை போடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்தம் செய்து சிங்களப் படைகளை அழிவிலிருந்து காப்பாற்ற மகிந்த சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் பலவீனம் என்று நினைத்து விட்டார்கள். தற்காப்புத் தாக்குதலை இனியும் தொடராமல் வலிந்த தாக்குதலை மேற்கொள்ள சிங்களப் படைகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மதவாச்சியையும் தாண்டி ஓடும் காட்சி அரங்கேறவுள்ளது என்பதை அறியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.. இலுப்பைக் கடவை மட்டும் வந்து ஆயுதங்களை விநியோகம் செய்யத் தயாராக உள்ள மோட்டுச் சிங்களவரை நினைக்கச் சிரிப்புத்தான் வருகின்றது.. :rolleyes:

யுத்த நிறுத்தம் செய்து சிங்களப் படைகளை அழிவிலிருந்து காப்பாற்ற மகிந்த சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் பலவீனம் என்று நினைத்து விட்டார்கள். தற்காப்புத் தாக்குதலை இனியும் தொடராமல் வலிந்த தாக்குதலை மேற்கொள்ள சிங்களப் படைகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மதவாச்சியையும் தாண்டி ஓடும் காட்சி அரங்கேறவுள்ளது என்பதை அறியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.. இலுப்பைக் கடவை மட்டும் வந்து ஆயுதங்களை விநியோகம் செய்யத் தயாராக உள்ள மோட்டுச் சிங்களவரை நினைக்கச் சிரிப்புத்தான் வருகின்றது.. :rolleyes:

உந்த உச்சி கொழுப்பு மட்டும் அடங்காதோ...??

யுத்த நிறுத்தம் செய்து சிங்களப் படைகளை அழிவிலிருந்து காப்பாற்ற மகிந்த சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் பலவீனம் என்று நினைத்து விட்டார்கள். தற்காப்புத் தாக்குதலை இனியும் தொடராமல் வலிந்த தாக்குதலை மேற்கொள்ள சிங்களப் படைகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மதவாச்சியையும் தாண்டி ஓடும் காட்சி அரங்கேறவுள்ளது என்பதை அறியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.. இலுப்பைக் கடவை மட்டும் வந்து ஆயுதங்களை விநியோகம் செய்யத் தயாராக உள்ள மோட்டுச் சிங்களவரை நினைக்கச் சிரிப்புத்தான் வருகின்றது.. :rolleyes:

அண்ணாத்தை சிங்களவன் மோடனா இல்லையா என்பதிருக்கட்டும்

தமிழருக்காக போராடுபவர்கள் முட்டாள்கள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சொல்வது போன்று இலுப்பைக்கடவையையும் தாண்டி சென்றுள்ள படையினர் தமிழர் தரப்பிற்கான படைய கலங்களிற்கான வழங்கலைச் செய்யத்தான் போகினம். அதேபோன்று மதவாச்சி தாண்டி எம்மவர்கள் தமது முன்னரங்க பாதுகாப்பு நிலைகைளை அமைக்கத்தான் போகினம். தயவுசெய்து உங்கள் நெக்கல் நெய்யாண்டிகளை கொஞ்சம் தள்ளிவைத்த விட்டு போராட்டதிற்கான உங்கள் கடமைகளைச் செய்யங்கள்.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாத்தை சிங்களவன் மோடனா இல்லையா என்பதிருக்கட்டும்

தமிழருக்காக போராடுபவர்கள் முட்டாள்கள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சொல்வது போன்று இலுப்பைக்கடவையையும் தாண்டி சென்றுள்ள படையினர் தமிழர் தரப்பிற்கான படைய கலங்களிற்கான வழங்கலைச் செய்யத்தான் போகினம். அதேபோன்று மதவாச்சி தாண்டி எம்மவர்கள் தமது முன்னரங்க பாதுகாப்பு நிலைகைளை அமைக்கத்தான் போகினம். தயவுசெய்து உங்கள் நெக்கல் நெய்யாண்டிகளை கொஞ்சம் தள்ளிவைத்த விட்டு போராட்டதிற்கான உங்கள் கடமைகளைச் செய்யங்கள்.

இதுவும் கடவுளை நம்புவதுபோல்தான்

இருக்குதோ இல்லையோ......

நம்பித்தான் ஆகவேண்டும்....

ஏனெனில் இருந்தால்தான் உலகம் உருப்படும்......

இதுவும் கடவுளை நம்புவதுபோல்தான்

இருக்குதோ இல்லையோ......

நம்பித்தான் ஆகவேண்டும்....

ஏனெனில் இருந்தால்தான் உலகம் உருப்படும்......

தசாவதாரம் படத்திலை கடைசியில் சொல்லி முடிப்பார்களே...

"கடவுள் இல்லை எண்று நான் சொல்ல வில்லை, ஆனால் இருந்தால் நல்லா இருக்கும்" இதுதான் நிதர்சனம்..! அதுதான் நீங்கள் சொல்ல வருவதுக்கும் பொருந்தும்....!

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்தம் செய்து சிங்களப் படைகளை அழிவிலிருந்து காப்பாற்ற மகிந்த சகோதரர்களுக்கு கொடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் பலவீனம் என்று நினைத்து விட்டார்கள். தற்காப்புத் தாக்குதலை இனியும் தொடராமல் வலிந்த தாக்குதலை மேற்கொள்ள சிங்களப் படைகள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மதவாச்சியையும் தாண்டி ஓடும் காட்சி அரங்கேறவுள்ளது என்பதை அறியாமல் துள்ளிக் குதிக்கிறார்கள்.. இலுப்பைக் கடவை மட்டும் வந்து ஆயுதங்களை விநியோகம் செய்யத் தயாராக உள்ள மோட்டுச் சிங்களவரை நினைக்கச் சிரிப்புத்தான் வருகின்றது.. :lol:

உங்களை நினைக்க எங்களுக்கல்லோ சிரிப்பு வருகிறது. :rolleyes::wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.