Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருவிழா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா கடைசியா இவனும் அறுகக்க வெளிக்கிட்டான் என்று யோசிக்காதையுங்கோ

இப்பகொஞ்ச நாளா ஊர் சம்பந்தமான பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்கும் சநதர்ப்பங்கள்

கிடைத்ததன் விளைவுதான் இது. :unsure:

ஊரில பொதுவாக கோயில் திருவிழாக்கள் தான் பெரியோர் முதல் சிறியோர் வரை கொண்டாட்டங்களின்

மையம்.கலை நிழச்சிகளை ரசித்தால் என்ன,கச்சான் தும்பு மிட்டாய் போன்றவை வாங்கி சாப்பிட்டால்

என்ன,பெரிசுகள் தங்கள் மலரும் நினைவுகளை மீட்ப்பதும் இளசுகள் உயிர்ச்சிலைகளை ரசிப்பதும்

சிறுசுகள் தேர்முட்டியில் நித்திரையிலிருக்கும் தங்கள் சகாக்களுக்கு மீசை வைப்பது தொடக்கம் வால்

கட்டுவது என்று சகல திருவிளையாடல்களுக்கும் என்று இந்த திருவிழாக்கள் களைகட்டும்.

இதை விட தமது வசதி வாய்ப்புகளை மற்றவர்களுக்கு காட்டுவதுக்கும் இந்த திருவிழாக்கள்தான் களம்.

முதள் நாள் கட்டிய சேலை அடுத்தநாள் திருவிழாவுக்கு கட்டமாட்டார்கள்.இதைவிட நகை நட்டு

இத்தியாயிகள்.இந்த விசையத்தில் ஆண்களின் நிலை ரொம்ப மோசம்.கீளே ஒரு வேட்டி மேலுக்கு

திறந்த மேனிதான்.இதைவிட திருவிழா உபயகாரர்களும் தங்கள்,விலாசங்களை,காட்ட வேண்டாமோ?

அவர்களும் தங்கள் பங்கிற்க்கு முதல் திருவிழாக்காரர் இரன்டு கூட்டம் மேளம் பிடித்தால் மற்றவர்

நாலு கூட்டம் அல்லது இசைக்குளுவோ வில்லுப்பாட்டோ பிடித்து பின்னிப்போடுவார்.

இதில மகேஸ்வர பூசை அதுதான் அன்னதானம் என்றால் சொல்லவே வேண்டாம்.சாப்பாட்டு

வாழியோட திரிபவகர்கள்தான் அந்தநேரத்து கதாநாயகர்கள்.முன்னுக்கு,பின்

னுக்கு,சைற்றுக்கு என்று

எந்தப்பகமும் பார்ககாமல் நேராய் பெண்கள் இருக்கும் பக்கத்தில் போய்தான் நிப்பினம்.இஞ்சால

பக்கம் குஞ்சுகுறுமன்கள் அண்ணை இஞ்சை கொஞ்சம் சாம்பார் விடுங்கோ என்றும் பெரிசுகள் அப்பு

ராசா இஞ்சை எப்பன் சோத்தைப்போட்டுட்டு போவப்பு என்றும் வாய் கிளிய கத்தினாலும் சாம்பாரும்

வராது சோறும் வராது.சாப்பிட்ட கையும் காஞ்சுபோயிடும்.

ஆணால் அங்கால பெண்கள் பக்கம் ஒரு இலைக்கு சாம்பாரோ சோறோ போட நாலு பேர் வாழியோட

நிப்பினம்.அப்ப யோசிக்கிறது எங்களுக்கும் ஒருகாலம் வரும் அப்ப நாங்களும் சாப்பாட்டு வாழியோட

கதாநாயகர் ஆகலாம் என்று.இதைவிட தேர்த்திருவிழா என்றால் அது ஒரு தனிச்சிறப்பு.இப்படி ஊர் கூடி

தேர் இழுத்த கூட்டம் இப்ப ஊர்ஊரா அலையுது.திரும்புமா அந்தக்காலம்.

சஜீவனும் முதன்முதலாய் சொந்தமாக ஒரு கதை எழுதிப்போட்டு இருக்கிறீங்கள். வாழ்த்துகள். இப்பிடி திருவிழா பற்றி கிட்டடியில ஒரு மூண்டு நாலு மாதத்துக்க யாழில எங்கையோ நாங்கள் எல்லாரும் நீண்ட கருத்துக்கள் எழுதி இருந்தம். எதில எண்டு மறந்து போச்சிது. எங்களுக்கு ஊரே அகதியாய் போனதால உதுகள் எல்லாம் சின்னவயசிலயே ஒண்டும் அனுபவிக்க முடியாமல் போச்சிது. நாங்கள் பார்த்த திருவிழா ஷெல்லடியும், குண்டு விழுறதும், சூடுபாடும், மண்டையில போடுறதும்.. ஊர் ஊராய் அகதியா ஓடுறதும்.. உதுகள்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜீவனும் முதன்முதலாய் சொந்தமாக ஒரு கதை எழுதிப்போட்டு இருக்கிறீங்கள். வாழ்த்துகள். இப்பிடி திருவிழா பற்றி கிட்டடியில ஒரு மூண்டு நாலு மாதத்துக்க யாழில எங்கையோ நாங்கள் எல்லாரும் நீண்ட கருத்துக்கள் எழுதி இருந்தம். எதில எண்டு மறந்து போச்சிது. எங்களுக்கு ஊரே அகதியாய் போனதால உதுகள் எல்லாம் சின்னவயசிலயே ஒண்டும் அனுபவிக்க முடியாமல் போச்சிது. நாங்கள் பார்த்த திருவிழா ஷெல்லடியும், குண்டு விழுறதும், சூடுபாடும், மண்டையில போடுறதும்.. ஊர் ஊராய் அகதியா ஓடுறதும்.. உதுகள்தான்

நன்றி மாப்பு வாசித்து கருத்து சொன்னதுக்கு.நீங்கள் சொல்வது நான் எழுதியகாலத்துக்கு முந்தியது.

  • கருத்துக்கள உறவுகள்

சகிவன் வாழ்த்துக்கள்....உந்த கதாநாயக செட்டைகளை இப்ப புலத்தில நம்மன்ட வாரிசுகளும் செய்யுதுகள்....ஒரு வித்தியாசம் இங்கிலிசில செய்யுதுகள்

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகிவன் வாழ்த்துக்கள்....உந்த கதாநாயக செட்டைகளை இப்ப புலத்தில நம்மன்ட வாரிசுகளும் செய்யுதுகள்....ஒரு வித்தியாசம் இங்கிலிசில செய்யுதுகள்

வாசித்து ஊக்கப்படுத்தியதற்கு நன்றி புத்தன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sagevan

சிறுவயது நினைவுகளை மீட்டிப் பார்க்க வைத்ததற்கு வாழ்த்துக்கள்.....

பக்கத்து இலைக்கு பருப்பு வேணுமாம் என்று விட்டு கூப்பிட்டுவிட்டு எனக்கும் கொஞ்சம் போடுங்கோ அண்னை என்று கேட்பதெல்லாம்.....! ஆகா.. அந்தக்காலம்....

பழைய நினைவுகளின் நல்ல மீட்பு....

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீடு கூட கோவில் வீதியில்த் தான் உள்ளது.திருவிழா தொடங்கினால் எமது வீட்டு கொண்டாட்டம் போல் இருக்கும்.தேருக்கு எல்லோரும் மடை வைப்பார்கள்.இப்போதும் கூட.

சஜீவன் இப்போது உள்ளவர்களுக்கு இப்படியான அனுபவங்கள் வரவே வராது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகீவன் நானும் ஊரிலை குருபூசை, பிள்ளையார் கதை,திருவம்பா , பாறணை எண்டு மோதகத்தை பாதியாய் வெட்டி குடுக்குறதிலிருந்து கதலிவாழைப்பழத்தை பிரிச்சு குடுக்குறவரைக்கும் எல்லாத்தையும் முன்னுக்கு நிண்டு செய்தனான்.

அப்ப நான் மினைக்கெட்ட என்ரை அவவுக்கு :o இரண்டு பாதி மோதகத்தை நைசாய் குடுத்திட்டன்.

இதை பாத்த என்ரை வில்லன் கோயில் மணியகாரரிட்டை போட்டுக்குடுத்துட்டான் . :)

அண்டு புடிச்ச தரித்திரம் இண்டைவரைக்கும் நிக்குது. இப்பவும் பந்தியிலை அப்பளம் மிளகாய் கூட போட விடுறாங்களில்லை :D

என்ரை பழையவில்லன் பிரான்சிலையோ இல்லாட்டி கனடாவிலை தான் இருக்கிறானாம் டேய் எண்டைக்காவது உனக்கு இருக்கடா திருவிழா :unsure:

சகீவன் இதைமாதிரி கலியாணவீட்டு பந்தியிலை பாயாசம் குடுத்த கதையும் இருக்குமெண்டு நினைக்கிறன்.எனவே தொடர்ந்து குட்டிசுயவிபரங்கள் எழுதவும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகி ஊர் நினைவெல்லாம் வருகுது ஏன் நெப்போலியனோட கதைத்தனிங்களோ :unsure: (சும்மா கோவிக்கப்படாது ) எனக்கு ஒரு பழக்கம் திருவிழா என்றால் கோவிலுக்கு போறதில்லை சும்மா நாட்களில தான் போவேன் ஆனால் திருவிழாவில கட்டுத்தேர் கட்டுறது நானும் எனது நண்பர்களுமே கட்டி கொடுத்திட்டு வந்திடுவோம்.பழைய நினைவுகளை தொடர்ந்து மீட்டுங்கோ எங்களுக்கும் சொல்லுங்கோ என்ன

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளங்கவி,ஈிழப்பிரியன்,கு.சா மற்றும் சுப்பண்ணை பதிவை வாசித்து கருத்து சொன்னதுக்கும் ஊக்கம் தந்ததுக்கும் மிக்க நன்றி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் உங்கள் அனுபவங்களை மீட்டி என்னை மீண்டும் பருப்பு வாளி தூ(தா)க்கின சம்பவங்களை நினைக்க வைத்ததற்கு நன்றிகள். நீங்கள் வாளி தூக்கினதிற்கும் ஏதும் பிரயோசனம் கிடைச்சதா?? :rolleyes::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சஜீவன் உங்கள் அனுபவங்களை மீட்டி என்னை மீண்டும் பருப்பு வாளி தூ(தா)க்கின சம்பவங்களை நினைக்க வைத்ததற்கு நன்றிகள். நீங்கள் வாளி தூக்கினதிற்கும் ஏதும் பிரயோசனம் கிடைச்சதா?? :rolleyes::o

எங்கே கிடைச்சுது :D .வாசித்து கருத்து சொன்னதுக்கு நன்றி சாத்திரி.

இப்படி ஊர் கூடி தேர் இழுத்த கூட்டம் இப்ப ஊர்ஊரா அலையுது.திரும்புமா அந்தக்காலம்.

ம்ம்ம்... "அது ஒரு அழகிய நிலாக்காலம். தினம் தினம் கனவினில் உலாப்போகும்... நிலவுகள் கூடி பூமியில் வாழ்ந்ததே அது ஒரு பொற்காலம்". :wub::(

சஜீவன், தொடருங்கள் உங்கள் அனுபவங்களை பதிவுகளாக. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லிகை வாசம் உங்கள் கருத்துக்கும் ஊக்கத்திற்க்கும் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையாக உண்மையை , கூறிய சஜீவனின் ஏக்கம் நன்றாக இருந்தது . :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவையாக உண்மையை , கூறிய சஜீவனின் ஏக்கம் நன்றாக இருந்தது . :lol:

நன்றி தமிழ் சிறி உங்கள் கருத்துக்கு :)

  • 2 weeks later...

சகிவன் தாத்தா..!!

திருவிழா எல்லாம் கலைகட்டுது வாழ்த்துகள்..ள்.. :lol: நானும் எல்லாம் திருவிழாவிலையும் சாமியை கும்பிட தான் போறனான் ஆனா திருவிழா முடிந்தா பெறகு சாமி மாயமா மறைந்திடுது ஒவ்வொரு முறையும் தாத்தா..தா எந்த சாமியை சொல்லுறன் எண்டு விளங்குது தானே.. :lol:

உதுக்கு ஏதாச்சும் பரிகாரம் இருக்கோ..கோ..??.. தொடரட்டும் தாத்தாவின் விழாக்கள்..ள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சகிவன் தாத்தா..!!

திருவிழா எல்லாம் கலைகட்டுது வாழ்த்துகள்..ள்.. :lol: நானும் எல்லாம் திருவிழாவிலையும் சாமியை கும்பிட தான் போறனான் ஆனா திருவிழா முடிந்தா பெறகு சாமி மாயமா மறைந்திடுது ஒவ்வொரு முறையும் தாத்தா..தா எந்த சாமியை சொல்லுறன் எண்டு விளங்குது தானே.. :lol:

உதுக்கு ஏதாச்சும் பரிகாரம் இருக்கோ..கோ..??.. தொடரட்டும் தாத்தாவின் விழாக்கள்..ள்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

கருத்துக்கும்,ஊக்கத்திற்க்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.