Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூயாவுடனான ஒலியுரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுநாளான திட்டமொன்றிற்கான ஆரம்பம் இது. பல பதிவர்களோடு உரையாடி அவற்றை அவ்வப் போது அவரும் இவரும் எனும் ஒரு ஒலிப் பதிவுத்தொடராக சாரலில் வெளியிட வேண்டுமென்பதே அது. அதன் ஆரம்பத்தை பதிவர் தூயாவுடனான ஓர் ஒலியுரையாடலில் ஆரம்பித்திருக்கிறேன்.

தூயா குறித்த ஓர் ஆச்சரியம் எனக்குண்டு. புலம் பெயர்ந்த நாடுகளில் இன்றைய இளைய தலைமுறையின் இன உணர்வுச் செயற்பாடுகள் பெருமிதம் கொள்ளக் கூடிய அளவில் இருக்கின்றன எனிலும் தமிழ் மொழியிலான ஆழமான செயற்பாடுகள் கவலைக் கிடமாகத்தான் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

எனது பார்வையில் வாழும் சூழலில் அது இயல்பானது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அதையும் தாண்டி தமிழ் மொழியிலான ஆழமான செயற்பாடுகள் ஒரு இளையவரிடத்தில் இருக்குமானால் அதில் அவரது அதீத ஆர்வமும் ஒரு காரணியென்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தூயாவின் தமிழ் மொழிச் செயற்பாடுகள் குறித்து அவரோடு பேசியிருக்கின்றேன்.

தவிரவும் வலைப்பதிவுகள் குறித்தும் உரையாடல் தொடர்கிறது. உரையாடலின் ஊடே அவரது நானும் எனதும் ஈழமும் தொடர் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப் படுகிறது என்ற தகவலைச் சொன்னார். மகிழ்வாயிருந்தது.

ஒலியுரையாடலைக் கேட்க

http://blog.sajeek.com/?p=450

  • Replies 63
  • Views 7.3k
  • Created
  • Last Reply

வணக்கம் சயந்தன் ..நன்றாக இருக்கிறது உங்கள முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.உங்கள் கணீரென்ற குரல் உங்களின் அறிவிப்பு திறமையை மேலும் பட்ட வெளிச்சமாக்கிறது,...அறிவிப்பா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலத்தில் தளிர்த்த தமிழாலமரமா தூயா.

அவருடைய ஆக்கங்களை தேடிப்பிடித்து படிக்கத் தோன்றுகிறது.

ஓ...

சயந்தன் அவர்கள் ஒலிபரப்பாளரா. ஒலிபரப்பாளருக்கு உரித்தான தேன்மதுரத் தமிழ் காதினில் பாய்கிறதே. பாராட்டுகள்.

Edited by அமரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒலிபரப்பாளருக்கு உரித்தான தேன்மதுரத் தமிழ் காதினில் பாய்கிறதே. பாராட்டுகள்

நக்கல் நையாண்டிக்கும் ஒரு அளவிருக்கு :rolleyes::o:D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நக்கல் நையாண்டிக்கும் ஒரு அளவிருக்கு :rolleyes::o:D:)

மன்னிக்க..

கண்ணாடி வீட்டிருந்து கல்லெறிய மாட்டேன்.

சொன்ன பின் நீங்கள் சிரித்ததில்

பழைய ரணம் தெரியக் கண்டேன்.

Edited by அமரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமரன்..

நான் பகிடிக்குத்தாம்பா சொன்னேன்.. ஸ்மைலிஸ் வேற நாலைஞ்சு போட்டேனே :rolleyes:

சொன்ன பின் நீங்கள் சிரித்ததில்

பழைய ரணம் தெரியக் கண்டேன்.

புரியல :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு முயற்ச்சி சயந்தன்.உண்மையிலேயே வானெலியில் அனுபவமிக்க அறிவிப்பாளர் போல் உரையாடியிருக்கின்றீர்கள் . நல்ல எதிர்காலமிருக்கின்றது.

தூயாவின் பேச்சு வழக்கு அவ்வப்போது தமிழ்நாட்டை ஞாபகப்படுத்துகின்றது . எனினும் அவரின் தமிழார்வம் தமிழினத்திற்கு கிடைத்த ஒரு கல்தூண்.

இந்த பதிவை படைப்பு களத்தில் போட்டிருக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

அலுப்புத்தட்டாத ஓர் உரையாடல் நன்றாய் இருக்கிறது.

வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி சயந்தன். தூய்ஸ்சின் குரல் மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் குரலில் ஏதும் மாற்றமா? எனக்கு வேறுபாடு உள்ளது போலத் தோன்றுகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவின் தமிழ் ஆர்வம் பிரமிக்க வைக்கின்றது. புலம் பெயர்ந்த மக்களுக்கு அவர் உதாரணமாக திகழ்வார் என்பதில் ஐயமில்லை. சயந்தன் மட்டும் பேட்டி காண்பதில் சளைத்தவரா என்ன? இருவரின் முயற்சிக்கும் நன்றி. அடுத்தது ஜம்முவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமரன்..

நான் பகிடிக்குத்தாம்பா சொன்னேன்.. ஸ்மைலிஸ் வேற நாலைஞ்சு போட்டேனே :rolleyes:

சொன்ன பின் நீங்கள் சிரித்ததில்

பழைய ரணம் தெரியக் கண்டேன்.

புரியல :o

அட.. பகிடி என்பதை தெரிந்துதான் அப்படிப் பதிலிட்டேன் சயந்தன். பொதுவாக அறிவிப்பாளர்கள் என்றால் அதிமேதாவிகளாக" தம்மைத்தாமே சித்தரிப்பார்கள் என்பது பொதுவான பார்வை. அந்தப் பார்வை உங்களை ஏற்கனவே கீறி இருக்கலாம் என்ற அர்த்தத்தில் எழுதினேன். இப்போதுதான் தெரிகிறது அந்த அர்த்தம்த்தை தளிவுபடுத்தாதது உங்களை காயப்படுத்தி இருப்பது. இந்த சிறு உரசலை நம் உறவின் உரமாக எடுத்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதன் முறையாக யாழ் களத்தில் , உள்ள சயந்தன் , தூயா இருவரின் குரலை

அதுகும் ஒரே நாளில் கேட்டது மிக்க மகிழ்ச்சி .

வித்தியாசமான முயற்சி , இவ்வளவு காலமும் யாழ் உறவுகளின் எழுத்துக்களை பார்த்து வந்தோம் , இனி குரலை கேட்போம் .

ஒலி உரையாடலை ஒழுங்கு படுத்திய சயந்தன் ,

நன்றாக பதில் கூறிய தூயா இருவரிற்கும் பாராட்டுக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

புகலிடத்தில் பொதுவாக குழந்தைகளுக்கு இருக்கும் வசதிகள்.. வாய்ப்புக்கள் அதிகம். நிச்சயம் அவர்கள் அதனைப் பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் என்ற ஒன்றும் (சமூகப் போட்டிகள் காரணமாக கூட) இருக்கிறது. அந்த வகையில் நடனம்.. நாட்டியம்.. கராத்தே.. நீச்சல்.. இப்படி வெள்ளைக்காரன் என்ன செய்யுறானோ அதைப் பார்த்தோ.. புரட்டியோ செய்யத் தயங்குவதில்லை எம்மவர்கள். அவற்றில் சில அத்தியாவசியமானவை.. சில ஆடம்பரமானவை..!

ஆனால் மொழி ரீதியாக.. தன் பிள்ளை தன் தாயின் மொழியில் ஆர்வம் கொண்டு பேச வேண்டும்.. பழக வேண்டும் என்று சொல்பவர்கள் குறிப்பாக படித்த.. தலைக்கணம் பிடித்த தமிழர்களிடத்தில் வெகு குறைவு.

புலம்பெயர் நாடுகளில் ஆங்கில அல்லது பிறமொழிச் சூழலில் வளரும் ஒரு பிள்ளைக்கு பாடசாலை அந்த மொழியை போதிய அளவுக்குக் கற்றுக் கொடுக்கும். வீட்டுச் சூழல் தான் தாய் மொழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் பல பெற்றோர் இந்த மொழிக் கையாடல் உண்மையை அறிந்திருப்பதில்லை. இப்போ புலம்பெயர் நாடுகளில் speech and language therapy இல் கூட வீட்டில் தாய் மொழியை குழந்தைகளோடு பேசுங்கள் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார்கள். தூயாவின் பெற்றோர் இந்த இடத்தில் தமது பிள்ளையை சரியாக வழி நடத்தியதற்குப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

எனக்கு தூயாவின் பின்னணி பற்றித் தெரியாது. ஆனால் அவரின் எழுத்தாற்றல்.. பேச்சாற்றல் என்பன தமிழில் ஒரு சராசரி பாண்டித்தியம் பெற்ற ஒருவருக்குரிய நடையில் இருக்கிறது. உண்மையில் அது பாராட்டத்தக்கது.

தூயாவின் ஸ்பெசல் சமையல்.. அது கூட சிறப்பானதே..! அதைப் பற்றியும் ஒரு நாலு வார்த்தை பகர்ந்திருக்கலாமே தூயா. ஏனென்றால்.. ஊரிலையே ஆங்கிலேய அல்லது மேற்கத்தேய உணவுகளை சமைத்துக் காட்டுவதையே வெட்டிக் கெளரவமாக கொண்டு வாழ்ந்த சமூகம் எமது தமிழ் சமூகம். ஆனால் அவர்கள் மத்தியில்.. அவல்.. தொடங்கி கூழ் வரை.. சமைத்துக் காட்டியவர் தூயா..!

செவ்வி.. சுற்றிச் சுற்றி.. மொழி சார்ந்து இருப்பது கொஞ்சம் திகட்டலாக இருக்கிறது. ஆனாலும் தூயாவின் பதில்கள்.. ரசிக்க வைக்கின்றன..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தூயாவின் எழுத்தில் மட்டுமல்ல கதையிலும் தமிழின் முதிர்ச்சி தெரிகிறது. அடுத்ததாய் நெடுக்கு சொன்னமாதிரி சமையல் பற்றியும் கேட்டிருந்தால் சிலநேரம் தூயா மாட்டுப்பட்டிருப்பார்.அல்லத

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தரமான முயற்சி . மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா தனது சமையல் குறிப்புகள் குறித்து பரபரப்புத் தகவல்களை வெளியிட்டிருந்தார். அவை தனியாக யாழ்களத்திற்கென பிரத்தியேகமாக வரும் :lol:

உண்மையில் யாழின் தொண்டு என்பது தூயாவை மட்டுமல்ல தெரியாத எத்தனை தமிழ்தெரியாத தமிழர்களை தமிழர்களாக்குகிறது என்பது 100வீதம் உண்மை

Edited by கிருபா

சரியான தமிழ்நாட்டு வாடை அடிக்கிது தூயாவிண்ட பேச்சில. யாழ்ப்பாணத் தமிழக் காண இல்லை. எம்.எஸ்.என் அண்ணாமார் ஒருத்தரும் தமிழ் சொல்லி தர இல்லையோ? உப்பிடி எம்.எஸ்.என் ஆக்களையும் ஒருக்கால் பிடிச்சு ஒரு பேட்டி போடுங்கோ சயந்தன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத் தமிழக் காண இல்லை

மாப்பிளை / கலைஞன் மாதிரி கஸ்டப்பட்டு அவவால யாழ்பாண தமிழில கதைக்க முடியல்லை போல :lol:

ஹிஹி.. நான் யாழ்ப்பாணத்து தமிழை கஸ்டப்பட்டு கதைச்சு இருந்தாலும் தமிழ்நாட்டு தமிழில போட்டு உங்கள் ஒருத்தரையும் வாட்டி எடுக்க இல்லைத்தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணத்து தமிழை கஸ்டப்பட்டு கதைச்சு இருந்தாலும்

அட.. அதுதானே மனுசரை வாட்டி எடுத்தது. தமிழ்நாட்டுத் தமிழுமல்லாமல் யாழ்ப்பாணத்து தமிழுமல்லாமல் - அட எந்தக் கிரகத்து தமிழென்றே தெரியாமல் வாடிப் போனோமில்லையா :lol:

அதை நேரத்தில் தூயா அவ்ரது கேள்வி்களை எப்படியோ புரிந்து கொண்டு சளைக்காமால் பதில் அளித்திருந்தார் ..வாழ்த்துக்கள் தூயா... தூயா எப்படியோ சயந்தனின் தமிழ் கேள்விகளு்க்கு பதில் சொல்லி போட்டார். நான் என்றால் தமிழ்-தமி்ழ் அகராதியை பார்த்துதான் பதில் சொல்லி இருப்பேன் :lol:

சின்னகுட்டி,

ஏதோ உங்களுக்காச்சும் என் கஸ்டம் புரிந்ததே. இதற்கு பதிலாக சயந்தன் அண்ணாவை நான் பேட்டி எடுத்து பழிவாங்கலாம் என்றுள்ளேன். :lol:

புலத்தில் தளிர்த்த தமிழாலமரமா தூயா.

அவருடைய ஆக்கங்களை தேடிப்பிடித்து படிக்கத் தோன்றுகிறது.

ஓ...

சயந்தன் அவர்கள் ஒலிபரப்பாளரா. ஒலிபரப்பாளருக்கு உரித்தான தேன்மதுரத் தமிழ் காதினில் பாய்கிறதே. பாராட்டுகள்.

வணக்கம் அமரன்,

நலமா? உங்களை யாழில் இந்த பதிவில் தான் சந்திக்கின்றேன்.

சயந்தன் அண்ணா அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் ஒஸ்திரேலிய தமிழ் வானொலியொன்றில் அறிவிப்பாளராக இருந்தார்.

நல்லதொரு முயற்ச்சி சயந்தன்.உண்மையிலேயே வானெலியில் அனுபவமிக்க அறிவிப்பாளர் போல் உரையாடியிருக்கின்றீர்கள் . நல்ல எதிர்காலமிருக்கின்றது.

தூயாவின் பேச்சு வழக்கு அவ்வப்போது தமிழ்நாட்டை ஞாபகப்படுத்துகின்றது . எனினும் அவரின் தமிழார்வம் தமிழினத்திற்கு கிடைத்த ஒரு கல்தூண்.

சயந்தன் அண்ணா அனுபவமிக்க அறிவிப்பாளர் தான். (அதனால் புதிது என மனதிறங்க வேண்டாம். என்னை கஸ்டமான கேள்வி கேட்டதற்கு திட்டலாம்.கிகிகி)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.