Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவைக்கஞ்சா சிங்கமே! அண்ணன் பாலசிங்கமே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவைக்கஞ்சா சிங்கமே! அண்ணன் பாலசிங்கமே!

இதயத்தில் இடி விழுந்தது!

எம் தேசத்தின் குரல் ஒடிந்தது!

விடியும் வேளையில் விளக்கு அணைந்தது!-புலிக்

கொடியும் இறங்கி அரைக் கம்பத்தில் பறந்தது!

ஈழத்தின் அரசியல் யாப்பை எழுத வேண்டியவனே!

எப்படித் தாங்குவோம் உன் இழப்பை!

தமீழீத்தில் இன்னொரு சுனாமியாய் உன் இழப்பு!

நீ இல்லாத பேச்சுவார்த்தைக் களம்!-அது

நீர் இல்லாத குளம்!

நோய் வந்த போதும்-புலிக்கு

ஓய்வு மரணத்தில் தான்!-என்று

சிரித்தபடியே நீ செப்பியதை!

நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!-நான்

நினைக்கிறேன் இனிப்பேச்சு வார்த்தை இல்லை!

பேச வேண்டியதெல்hம் நீ பேசி விட்டாய்!

பேச்சுக்கு இனி ஓய்வு-அதனால் தானோ-நீ

எடுத்து விட்டாய் ஓய்வு!-நீ

பேச வருகின்றாய் என்றால்

எதிரிக்கு குலை நடுக்கம்!-உன்னை

எதிர்க்கப் பயிற்சிப் பட்டறை!-உன்னை

மடக்கப் பத்திரிகையாளர் படை!-வந்தவர்க்கும்

வகுப்பெடுத்து வழங்குவாய் விடை!

என்னே உன் நடை!

நக்கல் இருக்கும்! நளினம் இருக்கும்!

குத்தல் இருக்கும் கூர்மை இருக்கும்!-கொண்ட

இலட்சியக் கொள்கை இருக்கும்!-குறை

காணாத சட்டம் இருக்கும்!

சர்வதேச சட்ட நுணுக்கம்-உன்

சட்டடைப் பைக்குள் தானே அடக்கம்!

தேசியத் தலைவன் ஆற்றிடும் உரைதனை!

அக்குவேறு ஆணி வேறாக!

பிரித்துப் பிரித்து விளக்க விளக்க!

இலை மறை காயாய் இருக்கும்!-அந்த

சூட்சுமப் பொருளைச் சொல்லச் சொல்ல!

சொல்லால் கட்டுண்டு சொக்கிக் கிடப்போமே!

இடைக்கிடை சிரிப்பலை எழுந்து அடங்குமே!

இந்த ஆண்டு இல்லையே உன் தரிசனம்!

சிரித்திருக்கும் சிரிப்பெங்கே!

செந்தமிழின் வனப்;பெங்கே!

சிந்தனையின் சிறப்பெங்கே!

சீறி எழும் நாவெங்கே!

அவைக் கஞ்சா சிங்கமே!

அண்ணன் பாலசிங்கமே!

அரசியல் பெட்டகமே!

அறிவியல் நூலகமே!-அழுகின்றோம்

அன்பாலா! பண்பாலா! ஆளுமைச் சிறப்பாலா!

ஆற்றாத தவிப்பாலா! அயராத உழைப்பாலா!

உள்ளத் துடிப்பாலா! உறவென்ற நினைப்பாலா!

உலகத்து மதிப்பாலா!

உணர்ச்சிக் கொந்தளிப்பாலா!

தலைவனின் நட்பாலா! தத்துவத் தொகுப்பாலா!

வித்துவச் செழிப்பாலா! விகடச் சிரிப்பாலா!

பேச்சு வனப்பாலா! பிற பிற நினைப்பாலா!

தேசத்தின் குரல்பாலா! திருக்குறளின் அறப்பாலா!

தமிழன்னை மறப்பாளா! தமிழன்னை மறப்பாளா!

மாவீரனே! மாவீரனே!

உறுதியுடன் உரைக்கின்றோம் ஈழம்!

உனக்கே காணிக்கை!!!

நாரந்தனை கவிநயன் (இலண்டன்)

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புலவரே தொடரட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி முனிவரே! தவத்தின் மத்தியிலும் கவிதையை இரசித்தற்கு!

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை தேசத்தின் குரலின் 2வது நினைவு நாள். அவருக்கு எனது வீர வணக்கங்கள்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஐய்யாவுக்கு எனது வீர வணக்கங்கள்

இரண்டு வருடம் போய் விட்டது :)

  • கருத்துக்கள உறவுகள்

அவைக்கு அஞ்சாச்சிங்கம்

அன்ரன் பாலசிங்கம்.

எங்கள் தேசத்தின் குரலை இழந்து ஆண்டு இரண்டு உருண்டோடிவிட்டன. இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறார்.

பாலாண்ணாவிற்கு எங்கள் வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம்மை விட்டு அகன்றாலும் அகலாது நிற்கும் அண்ணா...!

என்றும் உன்நினைவுகளுடன்...!

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணா என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்......

பாலா அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்

அன்பாலா! பண்பாலா! ஆளுமைச் சிறப்பாலா!

ஆற்றாத தவிப்பாலா! அயராத உழைப்பாலா!

உள்ளத் துடிப்பாலா! உறவென்ற நினைப்பாலா!

உலகத்து மதிப்பாலா!

உணர்ச்சிக் கொந்தளிப்பாலா!

தலைவனின் நட்பாலா! தத்துவத் தொகுப்பாலா!

வித்துவச் செழிப்பாலா! விகடச் சிரிப்பாலா!

பேச்சு வனப்பாலா! பிற பிற நினைப்பாலா!

தேசத்தின் குரல்பாலா! திருக்குறளின் அறப்பாலா!

தமிழன்னை மறப்பாளா! தமிழன்னை மறப்பாளா!

மாவீரனே! மாவீரனே!

உறுதியுடன் உரைக்கின்றோம் ஈழம்!

உனக்கே காணிக்கை!!!

நாரந்தனை கவிநயன் (இலண்டன்)

அழகிய கவி வரிகள்... தொடரட்டும் புலவரே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு நன்றி மல்லிகை வாசம்.

பாலா அண்ணாவின் இடம் இன்னும் நிரப்பப்படாமல் இருப்பதே அவருடைய பெறுமதியைக் காட்டுகிறது.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வின் மிகுதியில் சில வரிகள்

உணர்ச்சியின் பிடிப்பில் சில வரிகள்

உள்ளக்கொந்தளிப்பில் சிலவரிகள்

உள்ளத்தின் தவிப்பில் சிலவரிகள்

உவமை சொல்லும் சிலவரிகள்

உண்மையெல்லாமே உன் வரிகள்

தேசத்தின் குரலாய் ஒலித்த எங்கள் பாலா அண்ணையின் முகவரிகள் சொல்லி நிற்கும் ஒவ்வொரு வரிகளுமே இதயத்தைப்பிழிந்து இழப்பின் தாக்கத்தை இன்னும் அதிகரித்துச் செல்கின்றது.

நிரப்ப முடியா இடம் அண்ணன் பால சிங்கம் அவர்களின் வெற்றிடம்...எப்போதும் அவர் குரல் எங்களுக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்த்ததும் மனசில் பதிந்தன இந்த வரிகள்..

இதயத்தில் இடி விழுந்தது!

எம் தேசத்தின் குரல் ஒடிந்தது!

விடியும் வேளையில் விளக்கு அணைந்தது....!

எனது மனசு நிறைஞ்ச வாழ்த்துக்கள் உரித்தாக...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலவருக்கு

பாலா அண்ணையின் பிரிவையும் அவரின் அத்தனை தகமைகளையும் சொன்ன உங்கள் வரிகளைக் கண்டு வியந்துவிட்டேன். மேலும் தொடர என் வாழ்த்துக்கள்...

இளங்கவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையாலே கருத்துச் சொன்ன தமிழ்த்தங்கை மற்றும் நியூமான் இளம்கவி எல்லோருக்கும் என் நன்றிகள்.நான் உண்மையிலேய படு சோம்பேறி. எழுதுவது மிகக்குறைவு உங்களைப் போன்றவர்களின் ஊக்கிவிப்பு என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது. தொடருவேன்..........

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை மறு நாள்(14.12.2009) பாலா அண்ணாவின் நினைவுதினம்.காலத்தின் தேவை கருதி அவரது நினைவுகளுடன் மீண்டும் இந்த நினைவு வணக்கக் கவிதை.

பாலா அண்ணாவுக்கு எனது வீரவணக்கங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் ,

அன்ரன் அண்ணாவை போல,

ஒருவர் இனி மேல் கிடைப்பார்கள் என்று ஏங்குவோம்.

இருக்கிறதெல்லாம் ....... மொள்ளமாதிரியும், விசுக்கோத்துகளும் தான் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் தமிழ் சிறி பாலா அண்ணா இருந்திருந்தால் எந்த நெருக்கடியையும் சமாளித்திருப்பார்.எதிரியிடமிருந்தே ஆயுதம் வாங்கியவர் அவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணாவின் நினைவு நாள் இன்று. தேசத்தின் குரலுக்கு எனது வீரவணக்கங்கள்,

  • கருத்துக்கள உறவுகள்

.

தமிழ் தேசிய தொலைக்காட்சியினரால், பாலா அண்ணாவின் முதலாவது ஆண்டு நினைவு அஞ்சலியின் போது .....ஒளிபரப்பப்பட்ட காணொளி.

  • 11 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் நினைவுதினம். அவர் நினைவாக காலத்தின் தேவை கருதி இக் கவிதையை மிண்டும் இணைக்கிறேன்.

தேசத்தின்குரல் பாலா அண்ணாவுக்கு வீரவணக்கங்கள்!!!!!!!!!!!!

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
121210%20004.jpg
  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.eelamwebsite.com/wp-content/uploads/2010/12/Anton-Balasingham-247x300.jpg

இன்று தேசத்தின் குரலின் 5வது ஆண்டு நினைவுதினம்.காலத்தின் தேவை கருதி இத்திரி மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.

தேசத்தின்குரலுக்கு எனது வீர வணக்கங்கள்!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு, வரைந்துவிட்ட,

வழிநெடுகில் நடக்கையில்,

வழிகாட்டி, நீ,

விதியின் அழைப்பு வர,

விடை பெற்றுப் போய் விட்டாய்!

வாழ்ந்தோம் என்றுமில்லாமல்,

வீரம் விளைத்து,

வீழ்ந்தோம் என்றுமில்லாமல்.

விதி விட்ட பாதையில்,

வேதனையில் வாழ்கின்றோம்!!!

நன்றிகள், புலவரே!

உங்கள் கவிதையில், எனது ஏக்கத்தைப் பார்த்தேன்!

Edited by புங்கையூரன்

அரசியல் ரீதியாக எமது மக்களின் போராட்டத்தின் செயல் வீரனாக இருந்த தேசத்தின் குரலுக்கு வீரவணக்கங்கள் !!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.