Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்தில் தொடங்கும் காலை: நிழலி

Featured Replies

மரணத்தில் தொடங்கும் காலை

எனது காலை மரணம்

பற்றிய செய்திகளில்

விடிகின்றது

நாள் முழுதும்

அவலத்தின் கூக்குரல்

எனது கண்களை

ஆயிரம் கைகளால்

பொத்தி விடுங்கள்

என் காதுகளை

அறுப்பதற்காய்

வாட்களை கொண்டு வாருங்கள்

என்னை நான் ஒளிப்பதற்கு

பாதாளங்களை

திறந்து விடுங்கள்

இறந்த குழந்தையின்

தலையை வருடி விடுகின்றாள் தாய்

சிதைந்த மகனின் உடலை

அள்ளி கொள்கின்றான் தந்தை

நொடியில் அழிந்து போன

தன் அம்மாவின்

கைகளை பற்றிக் கொள்கின்றான்

ஒரு சிறுவன்

வேண்டாம்

இவை எதையும் எனக்கு

இனி சொல்லாதீர்கள்

ஒற்றைச் கையில்

தாயின் கபாலம் ஏந்தி

ஒரு குழந்தை

கனவில் வருகின்றது

என் கோப்பையில்

போடும் உணவில்

பிஞ்சு ஒன்றின்

இரத்தம் கசிகின்றது

வெட்ட வெளியில்

தூரத்தே தெரிகின்ற

ஒரு புள்ளியிலும்

சவ ஊர்வலத்தினை

காணுகின்றேன்

பாடையை கூட பிணங்கள்

தான் காவுகின்றன

படுக்க போன பின்

தலை மாட்டில்

இருந்து மூன்று பிள்ளைகளை

இழந்த அப்பன் ஒருவன்

சத்தமின்றி அழுகின்றான்

மீண்டும் சொல்கின்றேன்

இனி நான்

இவற்றை கேட்கப்

போவது இல்லை

சத்தம் வரும்

எல்லா திசைகளையும்

நான் அடைத்து விட்டேன்

கண் பார்க்கும் எல்லா

உருவங்களிலும்

இருளை சாத்தி விட்டேன்

ஒரு சிறு

செய்தியைத் தானும் நான்

கேட்க போவதில்லை

யுகங்களின் பின்

ஊழி முடிய தேவன்

வருவானாம்

அண்ட சராசங்களின்

வல்லமை கொண்டு

அவன் வருகையில்

மரித்து போன எம்

பிள்ளைகள் அனைத்தும்

எழுந்து கொள்வார்களாம்

அது வரை காத்திருக்கின்றேன்

இறுக்கி வைத்த மூச்சை

யுகங்களின் பின்னே

மீண்டும் விட காத்திருக்கின்றேன்

-நிழலி-

(22-January-2009 10:11 PM)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த பல நாட்களாக என்னிதயத்தில் கனத்துக்கொண்டிருக்கும் நெருடல்களை உங்கள் கவியில் வடித்துள்ளீர்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பூச்சு புனைவில்லாத யதார்த்தமான வரிகளில் உண்மையைக்கூறினீர்கள் கவிதை நடை தரம்.

Edited by theeya

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தில் தொடங்கும் காலை

வெட்ட வெளியில்

தூரத்தே தெரிகின்ற

ஒரு புள்ளியிலும்

சவ ஊர்வலத்தினை

காணுகின்றேன்

பாடையை கூட பிணங்கள்

தான் காவுகின்றன

-நிழலி-

(22-January-2009 10:11 PM)

வேதனையான கவிதை நிழலி .

  • கருத்துக்கள உறவுகள்

கவலை அளிக்க கூடிய நிஜமான கவிதை வரிகள்.வாழ்த்துகள் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டதால் வந்த நினைவுகளின் வலி........ வார்த்தைகளில்,

வார்த்தைகளால் வந்த வலிகள் ............. கவி வடிவில்

.நல்ல எழுத்து ஆற்றல் ,. மேலும் வளர வாத்துக்கள்.

  • தொடங்கியவர்

வாசித்து பாராட்டி கருத்து சொன்ன செல்வமுத்து, தீயா, தமிழ் சிறி, ரதி மற்றும் நிலாமதி அக்காவுக்கு என் நன்றிகள். சாவே வாழ்வாய் போன ஒரு சமூகத்தின் கிளைகளில் வாழும் எமக்கு ஒவ்வொரு நாளும் நரகமாகவே போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தத் தேவனும் எங்களுக்காக இரங்கா நிலையில் நமது நிலம் சாவிளைச்சல் நிலமாகிக் கிடக்கிறது. :rolleyes:

அழுதழுதே அழியும் விதியிதுதானோ ?

துயர் தாளாமல் நிழலி உங்கள் கவிதை யில் ரத்தம் வழிகிறது.

தேவன் வருவான் எங்கள் தேசியத்தலைவன் வருவான் எம் தோழர்களுடன் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இறுதியும் உறுதியுமான பதிலோடு வருவார்கள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வேதனையை எல்லாம் தாங்கிக் கொள்ளக் கூடாது தான் என்றோ கடவுள் கூட கல்லாய்ப் போனார்?

பாடையை கூட பிணங்கள்

தான் காவுகின்றன

மேலுள்ள வரிகள் வன்னியில நிதர்சனமாய் நடக்கிற நாளந்த வாழ்க்கையாகி போச்சிது. கீழ இருக்கிற கவி வரிகள்... கவிதைக்காக எழுதப்பட்டு இருந்தாலும்.. இதே எதிர்பார்ப்பில - யாதார்த்தத்தில - இதே மனநிலையோட பல்லாயிரம் சனம் இருக்கிதுகள் எண்டுறது பொய் இல்லை நிழலி.

யுகங்களின் பின்

ஊழி முடிய தேவன்

வருவானாம்

அண்ட சராசங்களின்

வல்லமை கொண்டு

அவன் வருகையில்

மரித்து போன எம்

பிள்ளைகள் அனைத்தும்

எழுந்து கொள்வார்களாம்

அது வரை காத்திருக்கின்றேன்

இறுக்கி வைத்த மூச்சை

யுகங்களின் பின்னே

மீண்டும் விட காத்திருக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை நிழலி. வரலாறு மகிந்தாவிற்கு ஒரு நாள் எங்கள் பிஞ்சுக்குழந்தைகளின் மரணத்திற்கு தண்டனை கொடுத்தேதீரும்

  • தொடங்கியவர்

சாந்தி அக்கா, பிரசாந்த், முரளி மற்றும் பரதேசிக்கும எனது அன்பு நிறைந்த நன்றி.....

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி அண்ணா,

கேட்கின்ற செய்திகளில் அவலமும் ஓலமும் தான் என்பதை நாம் உணர்ந்தோம் உணர்த்தவேண்டியபொறுப்புக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி

செடியில் மலர்களைப் பறிப்பதுபோல் மனிதஉயிர்களைப் பறிக்கக் காத்திருக்கும் காலனை வரவேற்கும் காலைகளை எதிர்பார்த்தபடி சாவின் விளிம்பில் ஏங்கிக் கிடக்கும் எம்மினத்தின் இன்னல்கண்டு இதயம் நொந்து உங்கள் உணர்வினை கவிதையாக்கி இருக்கிறீர்கள் நன்றிகள்.

உண்மை தான் நிழலி.

தினம் தினம் எமது மக்களின் அவலங்களை மட்டுமே சுமந்து வருகின்றன செய்திகள்.

நியாயங்கள் எப்போதும்

நித்திரையில் இருப்பதில்லை

நீசக் காரர்கள்

நிம்மதியாய் இறப்பதில்லை

என்று நம்பினோம். நம்புகிறோம். ஆனால்.... தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்க வேண்டியது தானா??????

  • கருத்துக்கள உறவுகள்

சத்தம் வரும்

எல்லா திசைகளையும்

நான் அடைத்து விட்டேன்

கண் பார்க்கும் எல்லா

உருவங்களிலும்

இருளை சாத்தி விட்டேன்

ஒரு சிறு

செய்தியைத் தானும் நான்

கேட்க போவதில்லை

சோகவரிகளை தந்த நிழலிக்கு நன்றி. இது தான் காலத்தின் கட்டளை போலும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.