Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகனுக்கு இதய ஆபரேஷன் : பிரணாபிற்கு அதிக முக்கியத்துவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகனுக்கு இதய ஆபரேஷன் : பிரணாபிற்கு அதிக முக்கியத்துவம்

ஜனவரி 24,2009,00:00 IST

புதுடில்லி : பிரதமர் மன்மோகனுக்கு இதயத்தில் உள்ள அடைப்புகளை நீக்க, இன்று இதய அறுவை சிகிச்சை (பை-பாஸ் சர்ஜரி) செய்யப்படுகிறது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடக்கிறது. கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்ட பிரதமர் மன்மோகனுக்கு, சமீபத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப் போது, அவரது இதயத்தின் ரத்த நாளங் களில் ஒன்றுக்கும் மேற்பட்ட அடைப் புகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இதன்பின், நேற்று முன்தினம் காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இருந்தாலும், பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், பிரதமருக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்பது முடிவு செய்யப்படும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, டாக்டர்கள் எடுத்த முடிவின் அடிப்படையில், பிரதமருக்கு இன்று இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இத்தகவலை, பிரதமர் அலுவலக தகவல் தொடர்பாளர் தீபக் சந்து கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினரும், மும்பை ஆசியான் இதய நிறுவன டாக்டர்களும் பிரதமருக்கு அறுவைச் சிகிச்சை செய்வர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக, மும்பையில் இருந்து இதயநோய் நிபுணர் ரமாகாந்த் பாண்டா, தீவிர கண்காணிப்பு பிரிவு நிபுணர் விஜய் டிசில்வா, மயக்க மருந்து நிபுணர் நரேந்திர காரேச் உட்பட 11 டாக்டர்கள் டில்லி வந்துள்ளனர். அவர்கள் 20 பெட்டிகளில் சிறப்பு உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு தீபக் சந்து கூறினார்.

அவசரம் ஏன்: அறுவை சிகிச்சை செய்வதை குடியரசு தினம் வரை தள்ளி வைக்கலாமா என, பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுள்ளார். அப்படி தள்ளிப் போடக்கூடாது என, டாக்டர்கள் அறிவுரை கூறியதால், அறுவைச் சிகிச்சைக்கு சம்மதித்துள்ளார். இதையடுத்து, அவருக்கு இன்று காலை இதய அறுவை சிகிச்சை செய்ய, நேற்று காலை டாக்டர்கள் தீர்மானித்தனர். அறுவை சிகிச்சை முடிந்த பின், ஒரு வாரம் ஓய்வெடுத்துவிட்டு பிரதமர் பணிக்கு திரும்பலாம். இருந்தாலும், ஒரு மாதம் கழிந்த பின்னரே அவரால் முழுமையாக பழைய சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை அவர் ஓய்வெடுப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியத்துவம்: பிரதமர் பணிக்கு வராத இந்த காலகட்டத்தில், அரசின் செயல்பாடுகளையும், நிதி அமைச்சக பொறுப்புகளையும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவனித்துக் கொள்வார். கேபினட் கூட்டத்திற்கும் அவரே தலைமை வகிப்பார். குடியரசு தின பேரணியிலும் பிரதமரின் சார்பாக அவர் பங்கேற்பார் என்றும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே வெளியுறவு அமைச்சராக இருக் கும் அவர், கூடுதலாக பிரதமர் கவனித்த நிதித்துறையையும் கவனிப்பார். அத்துடன் மேற்கு வங்க காங்கிரஸ் தலைமைப் பொறுப்பும் அவரிடம் தரப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சந்தித்துப் பேசினார். அதன்பின் நிருபர்களிடம் பேசிய அவர், ""இது வழக்கமான சந்திப்பு தான். சில பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் விவாதித்தேன். இனி பிரதமரையும் சந்திக்கச் செல்கிறேன்' என்றார். பிரதமர் மருத்துவமனையில் இருக்கும் நாட்களில், அவரின் பொறுப்புகளை நீங்கள் கவனிப்பீர் களா என, பிரணாப்பிடம் கேட்ட போது, "அரசு ஆட்சியில் இருப்பதால், இதெல்லாம் வழக்கமான நடைமுறைகளே. இருந்தாலும், எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என, எங்களுக்கு தெரியாது. பிரதமர் சிகிச்சைக்கு செல்வதால், அவரை பார்க்கச் செல்கிறேன். பிரதமர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நேரத்தில், நான் வெளிநாட்டில் இருந்தேன்' என்றார்.

இதற்கிடையில், மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி நேற்று "எய்ம்ஸ்' மருத்துவமனைக்குச் சென்று, பிரதமரின் அறுவை சிகிச் சைக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பிரதமர் சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால், எய்ம்ஸ் மருத்துவமனையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மன்மோகன், கடந்த 1999ம் ஆண்டில் ஏற்கனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அதன்பின், 2003ம் ஆண்டில், அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. மீண்டும் ஒரு முறை பிரதமருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்வதால், எந்த ஆபத்தும் ஏற்படாது. சில வாரங்கள் மட்டும் அவர் ஓய்வெடுக்க நேரிடும். அத்துடன் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம் என, நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் குணமடைய வாழ்த்து: "பிரதமரின் உடல்நிலை குறித்து ஒவ்வொருவரும் கவலை கொண்டுள்ளனர். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்' என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை குறித்து அறிந்ததும், நாங்கள் எல்லாம் மிகுந்த கவலை அடைந்துள்ளோம். அவர் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்புவார். குணமடைய வேண்டும் என, வாழ்த்துகிறேன். வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நான் அவ்வப்போது தொடர்பு கொண்டு, பிரதமரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து வருகிறேன். இவ்வாறு அத்வானி கூறினார். இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரதமர் மன் மோகன் சிங்கை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்தார். சிகிச்சை முடிந்து விரைவில் குணமடைய வேண்டும் என, வாழ்த்தினார்.

நன்றி: தினமலர்

தமிழனை

காக்க காக்க கனகவேல் காக்க

நோக்க நோக்க நொடியில் நோக்க

தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் பெரும்பகை அகல

வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

උලතෙ ලාමංඋණරංනං තෝතරං. කරියවනං.

නිලවු ලාවිය නීරංමලි වේණියනං.

අලකිලං චෝතියනං. අමංපලතං තාටුවානං.

මලරංචි ලමංපටි වාළං.තංති වණඞංකුවාමං.

  • கருத்துக்கள உறவுகள்

அரகர மக தேவா ..............

பதவில இருக்கும்போது இதுகளை செய்தாத்தான் செலவுக்கு மிச்சம்.

வளர்முக நாடுகளில் முதியோரில்லம், மற்றும் அவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்கவேண்டும்.... கிழட்டுத்தொல்லை தாங்க முட்யல?

வீணி வடிச்சு வடிச்சு அரசியல் நடத்தி பிழக்கவேண்டிய அபலம்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்

நிலவு லாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்

மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

උලතෙ ලාමංඋණරංනං තෝතරං. කරියවනං.

නිලවු ලාවිය නීරංමලි වේණියනං.

අලකිලං චෝතියනං. අමංපලතං තාටුවානං.

මලරංචි ලමංපටි වාළං.තංති වණඞංකුවාමං.

குமாரசாமியண்ணே. சிங்கள தேவாரத்தை மொழிபெயர்து போட்டால்தானே எமக்கு புரியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமியண்ணே. சிங்கள தேவாரத்தை மொழிபெயர்து போட்டால்தானே எமக்கு புரியும்?

எனக்கு சுட்டுப்போட்டாலும் சிங்களம் வராது.dancer.gif

நாசமறுப்பு அங்கை சிலோனிலை சிங்களம் படிக்கமாட்டம் எண்டு அவங்களோடை குத்துப்பட்டுப்போட்டு இப்ப எங்கடை பிள்ளையள் இஞ்சை எத்தினை பாசையளை முக்கிமுக்கி படிக்கவேண்டிக்கிடக்கு. :rolleyes:

அதுசரி சிங்களவனும் தமிழ்படிக்க ஓமெண்டவனே????? :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வளமோடு வாழ வாழ்த்துக்கள்

உந்த அடைப்புக்கள் நீங்கின பிறகாவது எங்களுக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற அடைப்புக்களை நீக்கிவிடுங்கோ :) .

ஈழமக்களின் துயர் கண்டு அவருக்கு இதயம் அடைத்துவிட்டதாம்.

வளமோடு வாழ வாழ்த்துக்கள்

உந்த அடைப்புக்கள் நீங்கின பிறகாவது எங்களுக்கும் உங்களுக்கும் இடையில இருக்கிற அடைப்புக்களை நீக்கிவிடுங்கோ :) .

என்கன்ட அடைப்பை எடுத்தால் சோனியா தப்பா நினைச்சிடுவா?

மன்மோகனுக்கு இதயம் இருந்ததே பெரிய விசயம்... அதுக்கு ஒப்பிரேசன் எண்டது ஆச்சரியப்படும் விடயம்....

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகனுக்கு இதயம் இருந்ததே பெரிய விசயம்... அதுக்கு ஒப்பிரேசன் எண்டது ஆச்சரியப்படும் விடயம்....

அது பொம்மைதானே.ஆடுது.ம்ம்ம் ஆடும் வரை ஆடட்டும்

சிங்களவனுக்கு மாமா வேலை பார்க்கும் உந்த நாய் செத்து துலைய வேண்டுமென கடவுளை பிரார்திக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு மாமா வேலை பார்க்கும் உந்த நாய் செத்து துலைய வேண்டுமென கடவுளை பிரார்திக்கின்றேன்

அதே அதே, அது மாதிரி மற்றதும் ஆஸ்பத்திரியில போய்ப் படுத்துக் கொண்டதாக் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்
அதே அதே, அது மாதிரி மற்றதும் ஆஸ்பத்திரியில போய்ப் படுத்துக் கொண்டதாக் கேள்வி.
:( :( :( :(

பாவம் யாரைத்தான் பிள்ளையள் விட்டது 10 தலைமுறை போனாலும் கலைச்சடிக்காமல் விடாது

:(:(:(:(:(:(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.