Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் சிங்களத்தின் அருவருக்கத்தக்க சதி அம்பலம்

Featured Replies

பிரித்தானியாவில் இளையோர் அமைப்பினால் தொடர்ந்து, பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் நடத்தி வரும் சிங்களத்தின் தமிழின அழிப்பிற்கு எதிரான போராட்டத்தில் இன்று சிங்களம், அவர்களது கைக்கூலிகளாக இயங்கி வரும் ஒட்டுக்குழுக்களை பயன்படுத்தி அரங்கேற்றிய அருவருக்கத்தக்க சதி அம்பலத்துக்கு வந்துள்ளது.

இன்றும் பல ஆயிரக்கணக்காக திரண்ட எம்மவர்கள், பல வீதிகளை முடக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அங்குள்ள மக்களுக்கு உணவுகள், சிற்றுண்டிகள் வழங்குதல் எனும் போர்வையில் சிங்களத்தின் ஏவலில் இயங்கும் ஒட்டுக்குழு கூலிகள் சிலர், இனிப்புக்களில்போதைப் பொருட்களையோ, மயக்கத்தை உண்டு பண்ணும் பொருட்களை கலந்து அங்குள்ள சிறார்களுக்கு கொடுத்ததில், இரு சிறார்கள் மயக்கமுற்று, அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

இச்செயற்பாடுகள் மூலம் எம்மவர் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியும், பிரித்தானிய பொலிஸாரை மக்களின் பாதுகாப்பு சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கச் செய்து இப்போராட்டத்தை குழப்ப சிங்களம், தனது கைக்கூலிகளான ஒட்டுக்குழுக்கள் மூலம் முயன்றிருப்பதாகவும், மேலதிக விசாரனைகள் முடக்கி விடப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

நீண்ட விடுமுறைக்குப் பின்னர் நாளை பிரித்தானிய பாராளுமன்றம் கூடுவதற்கு முன், சிங்களம் இப்போராட்டத்தை குழப்ப முற்பட்டது தெளிவாகியுள்ளது.

இச்சதி அம்பலமானதை அடுத்து பல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவு

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவா?சிங்களத்தின் சதி என்று சொல்வதை பார்க்கிலும் ஒட்டுக்குழுவின் சதி என்று சொல்வது தான் சரி.......

நானும் கேள்விப்பட்டேன், எம்மக்களின் ஒற்றுமையை கலைப்பதற்கு தீய சக்தியினரின் மும்முரமாய் செயல்படுகிறார்கள். இது அங்கு அதிகமாகக் கூடியிருக்கும் இளையோர் மீது வீண்பழி சுமத்தி மக்கள் எழிர்ச்சியை இடையில் முறியடிக்கவே ஆகும்.

இந்த செய்தி உண்மையெண்டு தான் நினைக்கிறன் உங்னை இருக்கிறவை தான் உறுதிசெய்ய வேணும்!

பிரித்தானியாவில் 9 வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சதி !

பிரித்தானியா பாராளுமன்றம் முன் 9 வது நாளாகத் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.மக்களின் எழுச்சிப் போராட்டத்தை எப்படியாவது முடக்க பிரித்தானியாக் காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.எனினும் அது கைகூடாத நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து வருகின்றனர்.

எனினும் தொடரும் ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க சில சக்திகள் சதி வேலைகளிலும் இறங்கியுள்ளன.வழமையாக இரவு பகல் பாராது போராட்டங்களில் கலந்துகொள்ளும் தாயக மக்களுக்கு உணவுப்பொட்டலங்கள் வழங்கப்படுவது வழக்கம். இன்று மாலையும் அது போலவே சிலர் சிறுவர்களிடையே மயக்கமருந்து கலக்கப்பட்ட இனிப்புகளை வழங்கியிருக்கின்றனர் இதனால் 2 சிறுவர்கள் உடனடியாக மயக்கமாகியுள்ளனர். உடனடியாக விரைந்து செயற்பட்ட மாணவர்கள் இனிப்புக்களை வழங்கிய இருவரை பிடித்ததோடு ஏனையோரையும் தேடி வருகின்றனர்.

இவ்வாறான கோழைத்தனமான செயற்பாடுகள் இனியும் நடைபெறும் என்பதால் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு காவற்துறையினரும் மாணவர்களும் தாயக உறவுகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்

ஒலிவடிவிலான செய்தி இங்கே =>>>>>> http://voicefromtamils.blogspot.com/2009/04/9.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் பல ஆயிரக்கணக்காக திரண்ட எம்மவர்கள், பல வீதிகளை முடக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அங்குள்ள மக்களுக்கு உணவுகள், சிற்றுண்டிகள் வழங்குதல் எனும் போர்வையில் சிங்களத்தின் ஏவலில் இயங்கும் ஒட்டுக்குழு கூலிகள் சிலர், இனிப்புக்களில்போதைப் பொருட்களையோ, மயக்கத்தை உண்டு பண்ணும் பொருட்களை கலந்து அங்குள்ள சிறார்களுக்கு கொடுத்ததில், இரு சிறார்கள் மயக்கமுற்று, அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள்.

அடப் பாவிகளா ........ ஒட்டுக்குழு என்பதை விட , ஸ்ரீலங்கா அரசின் *** நக்கல் குழு என்பதே பொருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ,ஒட்டு குழுக்களின் இயலாமையின் வெளிப்பாடே இந்த ஈனச்செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுமட்டுமா?

எங்கள் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும்போது, இன்னும் அதிகமான, கசப்பான சம்பவங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

இதன் பிறகு நேற்று உண்மையான நல்ல நோக்கோடு சிலர் கொண்டுவந்து கொடுத்த உணவு பொட்டலங்களையும் , தேனீரையும் வாங்கி கொள்ள பல மக்கள் பின் நிக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களையும் தண்ணீர் போன்றவற்றையும் தாங்களே கொண்டு செல்வதே சிறந்தது.

இண்றும் சில செய்தி ஊடகங்களுக்கு சிலர் போராட்ட இடம் மாற்றப்பட்டு உள்ளது எண்று செய்திகளை வழங்கி குழப்பம் விளைவிக்க முயண்று உள்ளார்கள்...

இப்படி பல விஷயங்கள் நடக்குது... என் நண்பன் அங்க போய் நின்ற இடைத்திலை ஒரு சிங்கள பெடியன் றொம்ப நேரமாய் ஏதோ நின்று நோட்டம் விட்டு இருக்கான்..என் நண்பன் அவனை துரத்தி அப்புறம் பெடியள் எல்லாமாய் சேர்ந்து துரத்தி அவன் ஒடி போய் போலிஸ் சொல்லி விட்டு ஒடி போய் விட்டான் இவர்களை போலிஸ் புடித்து விசாரித்து அதுக்கு அப்புறம்தான் உண்மை அவங்களுக்கு தெரிய வந்து அவர்கள் அவனை துரத்தி கொண்டு போனார்கள் ஆனால் புடி வட வில்லை...

இதில் என்ன என்றால் அவனை யார் ஏன் இதிலை நிக்கிறாய் என்று கேட்க அவன் நான் இந்தியா குசராத்தி என்று சொல்ல இவர்கள் அதிலை சில வார்த்தை எனக்கு சொல்லன் என்று கேட்க அவனுக்கு அதுக்கு பதில் சொல்ல தெரியலை என் நண்பனுக்கு விளங்கி விட்டுது சிங்கள பெடியன் என்று என் நண்பன் சிங்களத்தால திட்ட அவனும் திட்டிதான் ஒடு பட்டு துரத்தினது... அவன் ஒடி போய் விட்டான்...

நேற்று இரவு 11 மணியளவில் வெஸ்ற்மினிஸ்ரர் புகையிரத நிலயத்தில் 2 நபர்களைத்தாண்டி போனோம், பார்வைக்கு எம் நிறத்தைக் கொண்டவராக இருந்தாலும் தமிழில் பேசாததால் வேறுநாட்டவர் என்று நினைத்து கடந்துபோய் விட்டோம். இரண்டாவது ரயிலில் ஏறியதும் அசதியில் சற்று அயர்ந்து விட்டேன், ஒருபக்கம் என்னோடு கூட வந்தவர்கள் தமிழில் பேசிக்கொண்டிருந்தனர், மறுபக்கத்தில் ஆங்கிலத்துக்கு இடையிடையே ஓரிரு சிங்கள சொற்கள் என்காதில் விழுந்தது. கண்விழித்துப்பார்தால் அதே இருவர்! அதன்பிறகு கண்கள் மூடாமல் அவர்களையே பார்த்த(முறாய்த்த) வண்ணம் இருந்தேன், அதை அவதானித்த அவர்கள் 3 ஆவது தரிப்பில் இறங்கி கண்ணாடி யன்னலின் வழியாக பார்த்த வண்ணம் சென்றனர். (சிங்களவனுக்கு அந்த நேரத்தில் வெஸ்ற்மினிஸ்ரர் புகையிரத நிலயத்தில் என்ன வேலையாக இருக்கும்?)

  • கருத்துக்கள உறவுகள்

இண்றும் சில செய்தி ஊடகங்களுக்கு சிலர் போராட்ட இடம் மாற்றப்பட்டு உள்ளது எண்று செய்திகளை வழங்கி குழப்பம் விளைவிக்க முயண்று உள்ளார்கள்...

முந்த நாள் பின்னேரம் காவல் துறையினர் வானில் றோட்டின் முன் பக்கமாக வந்து சிவப்பு வெளிச்சத்தில்[எழுத்தில்] இப்படியான எச்சரிக்கை விட்டார்கள் அதாவது போராட்ட இடத்தை இனிமேல் பாராளுமன்ற பின் பக்கத்தில் உள்ள வீதிக்கு மாற்றி விட்டதாகவும் இனிமேல் 50 பேர் மட்டுமே பங்கு பற்றலாம் எனவும் தடை செய்யப்பட்ட தலைவரின் படத்தையோ,புலிகள் தொடர்பான பாதாகைகளை பிடிக்கக் கூடாது என சிவப்பு எழுத்துகளில் ஓடியது. அதனால் நேற்றில் இருந்து தலைவர் படமோ கொடியோ ஒருவரும் பிடிக்கவில்லை.

துண்டு பிரசுரங்கள் வேறை கொடுத்தார்களே ரதி....

இது நம்மவர்களின் பலவீனத்தைதான் காட்டுகின்றது. பேச்சு, கருத்து சுதந்திரம் பிரித்தானியாவில இல்லையோ? யாரும் காவல்துறையுடன் வாதாட இல்லையா?

இது நம்மவர்களின் பலவீனத்தைதான் காட்டுகின்றது. பேச்சு, கருத்து சுதந்திரம் பிரித்தானியாவில இல்லையோ? யாரும் காவல்துறையுடன் வாதாட இல்லையா?

ஏன் இல்லை... நிறையவே நடக்கிறது... ஆனால் இளையவர்கள் , மாணவர்களின் தலையீடுகள் வேண்டுதல்களால் குறைவாக நடக்கிறது....

தேசிய கொடியை பறிக்க முற்பட்ட காவல்த்துறையினன் ஒருவனோடு வாதாட்டம் ஏற்பட்டு பல பெடியள் கூடிவிட்டார்கள் , அப்போ காவல்துறையோடை வாதாடுபவர்களிட்டை வந்து ஒரு அக்கா ஒருக்கா சொன்னா அவையிட்ட எங்களுக்கு நல்ல பேர் இருக்கு அதை கெடுத்து போடாதேங்கோ எண்டு... அதுக்கு பெடியள் அக்காவுக்கு குடுத்தாங்களே அரிச்சனை.... இனி அக்கா வேறை எங்கையும் வாயை திறக்க மாட்டா..... அக்காவுக்கு எப்பவும் அடிமையாக நல்ல பேர் வாங்கி கொண்டு இருந்த பழக்கத்திலை அப்படி கதைச்சு இருப்பா... அவவை அப்பவே மன்னிச்சு போட்டார்கள்...

பிரித்தானியாவில் இப்படி ஒரு எழுச்சி எப்பவும் எங்கையும் ஏற்பட்டு இருக்காது எண்ட அளவிலை இருக்கு... எனக்கு தெரிய புலிகளையும் போராட்டத்தையும் வசைபாடியவர்களில் பலர் இரவு இரவாக வந்து நிக்கிறார்கள், குரல் எடுத்து கொட்டொலிகள் சொல்கிறார்கள்...... ((பாதிக்க பட்டு வசை பாடி ஒதுங்கி இருந்தவர்களே தவிர துரோகம் செய்தவர்கள் அல்ல))

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லண்டனிலும்,ஜரோப்பாவிலும் ஒரு சட்டம் இருக்குறதாம் அதாவது ஒரு ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்ந்து நடத்த வேண்டுமாயின் ஒரு நாளைக்கு எத்தனை பேர் வருவார்களோ அத்தனை பேர் தொடர்ந்து வர வேண்டுமாம்.[இன்று 1000 பேர் வந்தால் தொடர்ந்து 1000 பேர் வர வேண்டுமாம் அந்த எண்ணிக்கை கூடி குறைய கூடாதாம்] அப்படி வருபவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டால் அந்த ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் உண்டாம்.இது எந்த அளவிற்கு உண்மை என எனக்கு தெரியாது.

லண்டனில் கிட்ட தட்ட 40,000 ற்கு மேற்பட்ட பல்கலைகளக தமிழ் மாணவர்கள் இருக்குறார்களாம் ஆனால் ஒரு குறிப்பிட்ட மாணவர்களே தொடர்ந்தும் நிற்கிறார்கள் அதுவும் குறிப்பாக இங்கே பிறந்த மாணவர்கள். இலங்கையில் இருந்து மாணவ விசாவில் வந்தவர்கள் என்ன செய்து கொண்டு இருக்குறார்கள்.[அவர்களும் வருகிறார்கள் ஆனால் குறைவாகவே உள்ளார்கள்.] அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரத்திலாவது வரலாம் தானே.

பாலுமேகந்திராக்களால், இலங்கையில் இருந்து மாணவ விசாவில் வந்தவர்கள் தமது உயிருக்குப்பயந்து பின்வாங்கும் நிலை உருவாகி உள்ளதுபோல் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.