Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேவையும் ஆசையும்

Featured Replies

தேவைக்கும் ஆசைக்கும் இடையில் தமிழீழம் என்ற லட்சியத்திற்க்கு இமக்கிரிகைகள் நடக்கின்றது. இதுவே எமது இனத்தின் வரலாற்றுத் தவறுகளுக்கான தண்டனையுமாகின்றது. ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என வறுமைப்பட்ட மக்களே இறுதியில் செத்து மடிகின்றனர்.

வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது.

ஒரு மனிதன் பாதுகாப்புடனும் பொருளாதார நொருக்கடிகளை சமாளித்து வாழ்வதற்கும் அவனது சொந்த தேசம் அவசியமா என்று ஒரு கேள்வி எழும் போது அவசியம் இல்லை என்ற பதிலாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இருக்கின்றார்கள்.

ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட்ட ஒரு சுதந்திர தேசம் குறித்த சிந்தனை என்பது லண்டன் கனடா ஜேர்மனி பிரான்ஸ் சுவிஸ் அவுஸ்த்திரேலியா போன்ற நாடுகளுக்கு நகர்ந்து விடுதல் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டு நீண்டகாலம் ஆகிவிட்டது.

ஒரு நகர்தலின் போது மொழி கலாச்சார பாண்பாடு போன்றனவற்றை மூட்டைகட்டிக்கொண்டு மூட்டைக்குள்ளே கடவுளர்களையும் போட்டுக்கொண்டு நகர்ந்து விடலாம். தேசியக் கூற்றில் எஞ்சியிருப்பது நிலம் மட்டுமே. அதைத்தான் தூக்கிக் கொண்டு நகர முடிவதில்லை.

நிலத்தை நம்பி சீவியம் நடத்திய வறுமைப்பட்ட மக்களே எஞ்சிநிற்கின்றனர். அவர்களும் சுதந்திரம் குறித்த மேற்கூறிய சிந்தனைக்குள் சிறைப்பட்டவர்களாக நகர்தலை விருப்பமாக கொண்டு நிற்கின்றர்.

இத்தால் முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒரு சுதந்திர தேசத்திற்கான அத்தியாவசியம் எங்களுக்குள்ளாகவே சிதைக்கப்பட்டுள்ளது என்பதையே ஆகும்.

இதுவே ஒரு பாரிய தோல்வி நிலை. இதன் அடுத்த கட்டம் என்னும் சிதைந்து சிதிலமாகி உருத்தெரியாமல் போகும் என்பதுவே யதார்த்தம்.

இது எவ்வாறெனில் புலம்பெயர்தேசத்தின் அடுத்த தலைமுறைக்கு தமிழீழத்தின் மீதான பெரு விருப்பம் இந்த தலைமுறைக்கு இருப்பது போல் நிச்சயம் இருக்கப்போவதில்லை. மூட்டைகட்டி காவிவந்த தேசியச் சொத்துக்களான மொழி கலாசாரம் பண்பாடுகள் போன்றன விரையமாகிக் கொண்டும் கலப்படமாகிக் கொண்டும் உள்ளது.

இதேபோல் நாட்டில் மக்கள் விரக்தி நிலைக்குச் சென்று அடிமைத்தனத்தை இயல்பாக ஏற்று கிடைத்தளவு வாழ்வே போதுமானது என்ற நிலைக்கு அடுத்த தலைமுறை நகர்கின்றது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டில் வந்த பின்பு உருவாகிய தலைமுறையிடம் இந்த இயல்பு நிலையை காண முடியும். என்னும் பதினைந்து வருடங்களின் பின்பு தமிழீழத்தின் அனைத்து இடத்திலும் இதே இயல்பு நிலையை காண முடியும். தேவைகளில் இருந்தும் தமிழீழம் விலகிச்செல்லும் தூரதிஸ்ட நிலையே இதுவாகும்.

தேர்வுகளில் வெட்டுப்புள்ளிகள் என்றதில் கிழர்ந்தெழுந்த காலமெங்கே இன்று பசியால் தினம் சாகும் நிலையில் உணர்வெங்கே. இன்று எதைச்செய்தால் என்ன அமைதியாக இருக்க வேண்டியதுதான் என்ற நிலைக்கு எவ்வளவு சாதாரணமாக வந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியமாகின்றது.

மனிதனை இயக்கும் மகத்தான சக்திகளான தேவை மற்றும் ஆசை இரண்டில் இருந்தும் இலட்சியம் வழுவுகின்றது. இந்த நிலையில் தோல்வி என்பது தமிழீழத்தை பூர்வீகமாக கொண்ட ஒவ்வொருவனதும் நிச்சயமான தோல்வியாக அமையும்.

தேவை என்பதே யதார்த்தம். அதுவே ஆசைக்கும் தாயாகும். புலம்பெயர் வாழ் தமிழர்கள் தமிழீழத்தில் வாழும் மக்களின் தேவைகளின் குரலாக மாறவேண்டும். அது ஒன்றே எங்கள் பெருவிருப்பமும் நிறைவேற அடித்தளமாக அமையும்.

பெரு விருப்பத்தின் அடிப்படையில் எமது செயற்பாடுகளில் பெரும்பான்மையானவை இருந்ததே ஒரு பின்னடைவு நிலைக்கு எம்மைத்தள்ளியது. எந்த மக்களை சாரந்து தேவை என்ற கருப்பொருள் நிற்கின்றதோ அந்த மக்களின் குரலாக பலமாக நாம் இருப்பது ஒன்றே நேர்மையானது. அதுவே இலட்சியம் நோக்கி முதல் அடியை எடுத்துவைக்கும் முயற்ச்சியாகும். வதை முகாம்களில் வாழும் மக்களின் பாதுகாப்பு மறுவாழ்வுக்கான போராட்டங்களை தவிர வேறெந்த முயற்ச்சியும் எம்மை நாமே வழமைபோல் ஏமாற்றுவதற்கு ஒப்பானதாகும். நெருக்கடியான காலத்தை விட அதிகளவு போராட்டங்களை செய்யவேண்டிய காலம் இதுவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல் நாட்டில் மக்கள் விரக்தி நிலைக்குச் சென்று அடிமைத்தனத்தை இயல்பாக ஏற்று கிடைத்தளவு வாழ்வே போதுமானது என்ற நிலைக்கு அடுத்த தலைமுறை நகர்கின்றது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் அரசகட்டுப்பாட்டில் வந்த பின்பு உருவாகிய தலைமுறையிடம் இந்த இயல்பு நிலையை காண முடியும். என்னும் பதினைந்து வருடங்களின் பின்பு தமிழீழத்தின் அனைத்து இடத்திலும் இதே இயல்பு நிலையை காண முடியும். தேவைகளில் இருந்தும் தமிழீழம் விலகிச்செல்லும் தூரதிஸ்ட நிலையே இதுவாகும்
.

யதார்த்தம் இது தான் உண்மையும் கூட

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்தொரு பதிவு ஆனால் பலரால் கவனிக்கப்படவில்லை  நான் உட்பட

நல்தொரு பதிவு, நன்றி சாத்திரி மீண்டும் கொண்டு வந்ததிற்கு. இதுதான் இன்றைய நிலை, ஒரு மாதம் இலங்கைக்கு போய்வந்த நண்பனுடன் கதைத்தபோது சொன்னான்

நல்தொரு பதிவு, நன்றி சாத்திரி மீண்டும் கொண்டு வந்ததிற்கு. இதுதான் இன்றைய நிலை, ஒரு மாதம் இலங்கைக்கு போய்வந்த நண்பனுடன் கதைத்தபோது சொன்னான்

 

இன்றைய தெரிவில் இது இணைக்கப்பட்டு இருக்கு.

 

இன்றைய தெரிவில் இருப்பதை வாசிப்பவர்கள் ஒரு சின்ன பதிலை போடுவதன் மூலம் 'புதிய பதிவுகள்' தேடலில் மற்றவர்களும் இலகுவாக பார்க்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

 வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது.
 
சிங்களத்தின் பிடியிலும் முகாம்களிலும் இருக்கிற மக்களின் பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மைக்கான நிலையின் உண்மைத்தன்மை உணராத புலம்பெயர் பெருவிருப்பானது சுத்த தன்னலமிக்க்கது.
 
 
 

 பெரு விருப்பத்தின் அடிப்படையில் எமது செயற்பாடுகளில் பெரும்பான்மையானவை இருந்ததே ஒரு பின்னடைவு நிலைக்கு எம்மைத்தள்ளியது. எந்த மக்களை சாரந்து தேவை என்ற கருப்பொருள் நிற்கின்றதோ அந்த மக்களின் குரலாக பலமாக நாம் இருப்பது ஒன்றே நேர்மையானது. அதுவே இலட்சியம் நோக்கி முதல் அடியை எடுத்துவைக்கும் முயற்ச்சியாகும். வதை முகாம்களில் வாழும் மக்களின் பாதுகாப்பு மறுவாழ்வுக்கான போராட்டங்களை தவிர வேறெந்த முயற்ச்சியும் எம்மை நாமே வழமைபோல் ஏமாற்றுவதற்கு ஒப்பானதாகும். நெருக்கடியான காலத்தை விட அதிகளவு போராட்டங்களை செய்யவேண்டிய காலம் இதுவாகும்

 

இன்னும் இந்த நெருக்கடியான காலத்தைச் சாமாளிக்கும் பக்குவத்தில் ஒரு சிறுபகுதியைக்கூட நாம் அடையவில்லை.
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் நடக்க இருக்கும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டத் தொடரில் இறுதி யுத்தத்தில் நடந்த படுகொலைகளுக்கு சுயாதீன விசாரணை வேண்டும் என்று சலசலப்பைக் காட்டிவிட்டு உறக்கத்திற்குப் போய், மே மாதத்தில் விழித்து எழுந்து படுகொலை செய்யப்பட்ட மக்களினை ஒருநாள் நினைவு கூர்ந்துவிட்டு, மீண்டும் நவம்பரில் மாவீரர் தினத்தில் நித்திரையால் எழும்பி உடனடியாக உறக்கத்திற்குச் செல்லுவது ஒரு சுழற்சியாக நடக்கின்றது. இதுதான் எமது தேவைகளும் ஆசைகளும்..

  • 1 year later...

முகத்தில் அறையும் உண்மைகள்.  எதிரிகளின் வெற்றி தமிழீழத்தின் தோல்வியாகிக் கொண்டிருக்கின்றது.  அதற்கு நாம் துணைபோவதும் வேதனையளிக்கின்றது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
அருவருக்கத்தக்க பல தோற்றங்களுக்கும் ஆழாகி உயிர் பிழைத்துப் பின் மலர்ந்துதான் கண்ணைக்கவரும் வண்ணம், வண்ணத்துப் பூச்சியும் வெளிவந்து பறக்கிறது. தமிழீழம் என்ற வரைபடத்தை முதன்முதலில் பார்த்த தலைமுறையில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வண்ணத்துப் பூச்சியின் முதல் தோற்றத்தில் இருக்கின்றோம் என்றும் கொள்ளலாம். மாற்றங்களைச் சகித்துக் கொள்ளவேண்டிய நேரமிது. 
 
மனிதனை இயக்கும் மகத்தான சக்திகளான தேவை மற்றும் ஆசை இரண்டில் இருந்தும் இலட்சியம் வழுவுவது போன்ற தோற்றம் பொய்யானது என்பதை தமிழர் சமீபத்தில் நிரூபித்தார்கள். பேயின் ஆட்சி போய் வரப்போவது பிசாசின் ஆட்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தாலும். எதிரியும் பேயின் ஆட்சியை விரட்டி நல்வாழ்வு தேட முற்பட்ட வேளையில், அவனும் நல்வாழ்வு வாழவேண்டி ஆதரவு நல்கியதை தை 8ல் கண்டோம். எத்தகைய துன்பத்திலும் பிறர் நலத்திலும் அக்கறைகொள்ளும் மனதையுடைய ஒருவனின் இலட்சியம் நிச்சயம் தோல்வி காணாது. 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.