Jump to content

நள்ளிரவுக் கூட்டம்


Recommended Posts

மதிலொன்று மறித்துக் கிடக்கிது.

கருங்கல்லாய் இருக்கலாம்

காரிரும்பாய் இருக்கலாம்

ஒருவேளை தேவலோகத்துச் சாமானாயுமிருக்கலாம்

மதில் தெரியிது

அதன் பலம் தெரியிது

முன்னர்:

பூசாரி வந்து குளை அடிச்சுப்; பாத்தார்

பரியாரி வந்து மூலிகை வைச்சார்

பாம்புக்கடி வைத்தியரும் ஒருக்கா வந்துதான் போனார்

கைமருந்து பலிக்கேல்ல

சீமையில் படித்த சிறப்புச் சிகிச்சைகள்,

கேரள மாந்திரீகர்,

மட்டக்களப்புச் சமாச்சரம்,

ஒண்டும் தான் பலிக்கேல்ல

மதில் இப்ப மினுமினுப்புக் கூடிக் கிடக்கிது

பூசாரி ஊத்திய பாலும் பஞ்சாமிர்தமும் காரணமாயிருக்கலாமாம்;: பேச்சுமிருக்குது

கனகாலம் கதைக்காது புதிராய்க் கிடந்த ஊர்க் கிழவர் ஒருநாள் திடுப்பெண்டு சொன்னார்

"உதுக்கும் ஒரு சாமானிருக்கு

கிண்டாத கிணறில்லை தோண்டாத கிடங்கில்லை

பாக்காத பேயில்லை, போகாத ஊரில்லை

உந்த மதிலுக்கும் மருந்திருக்கு அதைக் கையாளவெண்டொரு முறையுமிருக்கு

வெளியாலை நிண்டு வேலைக்காவாது

புறத்தால தோண்டி ஆளமாய்ப் போகோணும்,

ஆளமாய்ப் பக்குவமாய் அடியில வைக்கோணும்

அத்திவாரம் ஆடினால் மசிர நிண்டிச்சு"

கண்ணெல்லாம் மின்னச் சனம் கிழவரைப் பாத்திச்சு

குளியெல்லாம் தோண்டிக் கிழவர் விளையாட்டைத் தொடங்கினார்

விரல்கள் பின்னச் சனம் நிரையாய் நிண்டிச்சு

பெடி பெட்டை விரல்கள் கொஞ்சம் இறுக்கமாய்ப் பின்னிச்சு

குளிக்குள்ள புகைச்சதை எல்லாரும் கண்டவை

வெடியும் கேட்டதை எல்லாரும் கேட்டவை

ஆனால் மதில் இன்னும் மறிச்சுத் தான் நிண்டிச்சு

மினுமினுப்புக் குறையாமல் விறைச்சுத் தான் நிண்டிச்சு

கிழவர் இப்ப பகிடியாய்ப்போனார்

பொத்தச் சொல்லி குஞ்சுகுருமான் சிரிச்சுது

இளந்தாரிப் பொடியள் கொடுக்குக் கட்டினர்

சனத்துக்கு மீண்டும் கண்கள் மின்னிச்சு

சனம் விரல்கள்பின்னி நிரை கட்டி நிண்டிச்சு

பொடியள் உம்மேல்ல நல்லாத் தான் செய்தாங்கள்

நாட்டு வெடிக் கிழசுகளும் ஒத்துத் தான் கொண்டினம்

முதல் முதலா மதிலில சிறுசாய் ஒரு ஆட்டம்

மினுமினுப்பை இப்ப மதிலில காணேல்ல

ஒருநாள் மதிலின் ஒரு பெரும் துண்டு பொடியாய்ப் போச்சுது

நினைச்சும் பாக்கேல்ல ஆனால் உண்ணாண நடந்திச்சு

மதிலின் ஓட்டேக்கால சனம் பூந்து திரிஞ்சுது

மசிர்க்கூச்செறிய பெருமிதம் பொங்கிச்சு

முழுசா மதில விழுத்தலாம் எண்டு நம்பிக்கை கூட சனத்துக்கு வந்திச்சு

விரல்கள் பின்னிச் சனம் நிரை கட்டி நிண்டிச்சு

பொடி பெட்டை விரல்கள் கொஞ்சம் இறுக்கமாயப் பின்னிச்சு

ஒருநாள் காலையில் பரப்பரப்பாய்ச் சத்தம்

ஊருக்க சனமெல்லாம் தெருவில ஓட்டம்

ஏதோ நடப்பது எல்லார்க்கும் தெரிஞ்சுச்சு

என்னெண்டு தெரிய கொஞ்ச நாள் செண்டிச்சு

மதில் தன் ஓட்டையை நிரவத் தொடங்கிச்சு

இளந்தாரிப் பொடியள்,

அருக நிண்ட சனங்கள்,

மரஞ் செடி கொடியள்,

மாடாடு உசிர்கள்

மதில் எல்லாத்தையும் திண்டிச்சு

மதில் தின்னத்தின்ன ஒட்டை சிறுத்திச்சு

மதில் நிறையத் தான் திண்டிச்சு

ஓட்டை இப்ப காணாமல் போச்சுது

மறுபடி மதிலிப்ப மினுமினுத்துக் கிடக்கிது

அது திண்ட சனங்களின் என்பு மச்சைதான் காரணமாம்: பேச்சும் இpருக்கிது

இனி:

மதிலிற்கு சந்தண குங்கும மலர்மாலை சாத்தி வணங்கலாமெண்டு ஒரு யோசனை

மதில் பெருசுதானே ஒரு சுருவமும் அங்கால கீறுவம் எண்டு சந்தில சில சிந்து

"அதிகாரம் அனுசரிக்கப்படவேண்டும்" கோசங்கள் கேக்குது

"நோகுது" என்ற குரல்களை விட "நோகும்" எண்டு அதிகம் குரல்கள்

பூசாரி, மந்திரவாதி, வெடிவச்ச கிளவற்ற சந்ததி, பரியாரி எல்லாரும் கதைக்கீனம்

இளந்தாரிப் பொடியளின் கொடுக்கில கிடந்த ஓட்டைகள் பற்றிக் கனக்கக் கதைக்கினம்

எல்லாரும் கதைக்கீனம்

மதில் இப்ப மினுமினுத்துக் கிடக்கிது

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

காணாத காட்சி கனவாக முடியாதென்று எங்கேயோ வாசித்த பழைய ஞாபகம்!

Link to comment
Share on other sites

எங்கடை சமகால நிலமையை வேற ஒரு வடிவத்தில பார்வையில அழகாய்ச் சொல்லி இருக்கிறீங்கள். சிக்கல்கள் நிறைந்த ஒரு விசயத்தை, பிரச்சனையை நேராய் சொல்லாமல் இப்படி வேறு கோணத்தில நின்று படம் பிடிச்சு இருப்பது அருமை. யாழில் இப்படியான ஓர் கவிதையை கண்டது மகிழ்ச்சி. உண்மையில நீங்கள் ஒரு ஏபீதான் இன்னுமொருவன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம்!

மதில் இப்பவும் மினுமினுப்புக் கூடி நின்றாலும், மதிலே இல்லை அதை உருக்கிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்வோம்.

புரியாமல் புரியும் கவிதை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

innumoruvan

கனவாய்த் தோன்றி கவிதையில் சொல்லப்பட்ட சரித்திரம் வித்தியாசமான சிந்தனை.... வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை, கிருபன், இளங்கவி உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

புரியாமல் புரியும் கவிதை..

இது முழவதும் கனவா? அல்லது narrative மற்றும் கனவு கலந்ததா? அவ்வாறு கலந்தாயின் எப்பகுதி கனவு? என்ற குளப்பம் வாசிப்பவர்களிற்கு வரலாம் என எதிர்பார்த்தேன்.

வந்ததா தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை ஊர் நிலவரம் பற்றிய எண்ணங்கள் மூளையின் எங்கோ ஒரு பாகத்தில் இருக்கத் தான் செய்கின்றன. வாழ்வியல் விடயங்களில் மூள்கிப் போகும் போது அடிமனதிலும், சும்மாயிருந்தால் வெளிப்படையாகவும் ஊர் நிலவரம் தொடர்பான சிந்தனை இருக்கவே செய்கிறது. படுத்துக் கிடந்தால் எண்ணங்கள் இரைமீட்கப்படுகின்றன. பின் கண்ணயரும் போது, முழிப்புலக எண்ணங்கள் உறக்க நிலை உலகிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுத் தொடர்வதாய்ப் படுகிறது. சுpல சயமயங்களில் எது கனவு எது இரைமீட்பு என்று தெரியாபடிக்கு விடயங்கள் தோன்றுகின்றன. இந்தக் குளப்பத்தை அப்படியே இப்பதிவில் வெளிக்காட்ட முயன்றமை தான் மேற்படி குளப்பத்திற்கான காரணம்.

எனினும் “நள்ளிரவுக் கூட்டம்” என்ற தலைப்பும் கடைசி வரியில் கனவு கண்டதான ஒத்துக்கொள்ளலும் இருக்கின்ற நிலையில்,

பதிவில் உள்ள நள்ளிரவுக் கூட்டம் தொடர்பான காட்சி மட்டும் கனவு என்று கொள்வது ஏற்புடையது.

கனவில் நடந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகள் எனது பரிந்துரைகளா என்ற கேள்வி ஆரிற்கும் வரின், “காணாத காட்சி கனவாகாது” என்ற வரி அக்கேள்விக்காக எழுதப்பட்டது.

காணல் என்பது நேரடியாய்க் கண்டவை, வாசித்து அறிந்தவை, செய்தியில் பார்த்தவை, ஆரும் சொல்லக் கேட்டவை, விருப்பத்தின் அடிப்படையில் கற்பனை செய்தவை என பலவகைப் படலாம்.

கனவு முடிந்து விழித்தபோது மகிழ்ச்சி நிலைத்தது என்றால் மேற்படி பரிந்துரைகளோடு நான் உடன்படுகின்றேனா என்ற கேள்வியும் பிறக்கலாம். இப்போது உடன்படுகின்றேனா, நாளை உடன்படுவேனா, சில ஆண்டுகளின் பின் உடன்படுவேனா என்று நுணக்கமாகக் கூறத் தெரியவில்லை, ஆனால் நேரத்தின் அச்சில் ஏதோ ஒரு ஆள்கூறில் எப்போதோ, சிலவேளை இப்போதும், மேற்படி பரிந்துரைகள் எனக்கு மகிழ்சி அளிப்பனவாக இருந்திருக்கின்றன என்றே படுகின்றது.

எழுதுவது அரைப்பங்கு தான். வாசிப்பர்கள் சார்ந்தது மீதி அரைவாசி. எனவே இப்பதிவின் பொருளை வாசகர் கைகளில் விட்டுவிடுகின்றேன்.

Link to comment
Share on other sites

கவிதை சூப்பராய் அமைஞ்சு இருக்கிது. வாசகர்களுக்கு கலைரசனையும், சிறிதளவு பொறுமையும், மற்றும் தாயகம்பற்றிய சிறிதளவாவது கரிசனையும் இருந்தால் இந்தக்கவிதை நிச்சயம் வெறும் கனவாகத் தெரியாது. நான் வாசிக்கும்போது தலைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க இல்லை. ஆனால்.. நீங்கள் இறுதியில் கனவு என்று சொன்னது கவிதையின் யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள கவிதைக்கு ஓர் முழுப்பரிணாமத்தை கொடுக்க உதவி இருக்கிது.

வித்தியாசமான ஓர் படையல். தொடருங்கள். பாராட்டுக்கள்!

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை,

கவிதையைப் புரிந்து இரசித்தமைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடியள் உம்மேல்ல நல்லாத் தான் செய்தாங்கள்

நாட்டு வெடிக் கிழசுகளும் ஒத்துத் தான் கொண்டினம்

முதல் முதலா மதிலில சிறுசாய் ஒரு ஆட்டம்

மினுமினுப்பை இப்ப மதிலில காணேல்ல

ஒருநாள் மதிலின் ஒரு பெரும் துண்டு பொடியாய்ப் போச்சுது

நினைச்சும் பாக்கேல்ல ஆனால் உண்ணாண நடந்திச்சு

மதிலின் ஓட்டேக்கால சனம் பூந்து திரிஞ்சுது

மசிர்க்கூச்செறிய பெருமிதம் பொங்கிச்சு

முழுசா மதில விழுத்தலாம் எண்டு நம்பிக்கை கூட சனத்துக்கு வந்திச்சு

விரல்கள் பின்னிச் சனம் நிரை கட்டி நிண்டிச்சு

பொடி பெட்டை விரல்கள் கொஞ்சம் இறுக்கமாயப் பின்னிச்சு

ஒருநாள் காலையில் பரப்பரப்பாய்ச் சத்தம்

ஊருக்க சனமெல்லாம் தெருவில ஓட்டம்

ஏதோ நடப்பது எல்லார்க்கும் தெரிஞ்சுச்சு

என்னெண்டு தெரிய கொஞ்ச நாள் செண்டிச்சு

மதில் தன் ஓட்டையை நிரவத் தொடங்கிச்சு

இளந்தாரிப் பொடியள்,

அருக நிண்ட சனங்கள்,

மரஞ் செடி கொடியள்,

மாடாடு உசிர்கள்

மதில் எல்லாத்தையும் திண்டிச்சு

மதில் தின்னத்தின்ன ஒட்டை சிறுத்திச்சு

மதில் நிறையத் தான் திண்டிச்சு

ஓட்டை இப்ப காணாமல் போச்சுது

மறுபடி மதிலிப்ப மினுமினுத்துக் கிடக்கிது

அது திண்ட சனங்களின் என்பு மச்சைதான் காரணமாம்: பேச்சும் இpருக்கிது

இனி:

மதிலிற்கு சந்தண குங்கும மலர்மாலை சாத்தி வணங்கலாமெண்டு ஒரு யோசனை

மதில் பெருசுதானே ஒரு சுருவமும் அங்கால கீறுவம் எண்டு சந்தில சில சிந்து

"அதிகாரம் அனுசரிக்கப்படவேண்டும்" கோசங்கள் கேக்குது

"நோகுது" என்ற குரல்களை விட "நோகும்" எண்டு அதிகம் குரல்கள்

பூசாரி, மந்திரவாதி, வெடிவச்ச கிளவற்ற சந்ததி, பரியாரி எல்லாரும் கதைக்கீனம்

இளந்தாரிப் பொடியளின் கொடுக்கில கிடந்த ஓட்டைகள் பற்றிக் கனக்கக் கதைக்கினம்

எல்லாரும் கதைக்கீனம்

மதில் இப்ப மினுமினுத்துக் கிடக்கிது

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

இந்த வரிகள் சொல்ல விளைவதென்ன இன்னுமொருவன்?

காணாத காட்சி கனவாக முடியாதென்று எங்கேயோ வாசித்த பழைய ஞாபகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன்....

உங்களின் கனவுக் கவிதை கொஞ்சம் பெரியதாயினும் நன்றாகவே உள்ளது.நன்றி உங்களுக்கு.

யாயினி.

Link to comment
Share on other sites

" நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

இந்த வரிகள் சொல்ல விளைவதென்ன இன்னுமொருவன்?" --

இந்தத் தலைப்பில் மேலுள்ள பின்னூட்டத்தை (Post #5) வாசித்தீர்களோ தெரியவில்லை. அப்பின்னூட்டத்தில் உங்களின் கேள்விக்கான பதில் உள்ளது என்றே நம்புகின்றேன்.

இன்னுமொருவன்....

உங்களின் கனவுக் கவிதை கொஞ்சம் பெரியதாயினும் நன்றாகவே உள்ளது.நன்றி உங்களுக்கு.

யாயினி.

பிரச்சினை பெரியது என்பதால் பதிவும் பெரிதாகிவிட்டது :D உங்களின் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

நான் விழித்துக்கொண்டதால் கனவு தொலைந்தது. ஆனால் மகிழ்ச்சி நின்றது

காணாத காட்சி கனவாக முடியாதென்று எங்கேயோ வாசித்த பழைய ஞாபகம்!

அருமையாக , ஆனால் ,நடக்க வேண்டியதை அழகுபடுத்தியுள்ளவிதம் சிறப்பானது. தொடரட்டும் இதுபோன்ற படைப்புகள். தொலைட்டும் இனி முடியாதென்ற முதிர் குணம்.

Link to comment
Share on other sites

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

X-Files, ஏலியன்கள் பற்றிய படங்கள் பார்த்ததன் தாக்கமோ?

என்ன கோதாரியையோ செய்யுங்கோ ஆனா மீண்டும் மக்களுக்கா என்று சொல்லி எங்களை மாட்டி விடாதையுங்கோ... !

ஆக மொத்தத்தில "அதிரடித்தாக்குதலில் படையினர் பலி, பெருமளவிலான ஆயுதங்கள் மீட்பு, இராணுவத்தினரின் சடலங்கள் கையளிப்பு, கிளைமோர் தாக்குதலில் இராணுவ உயரதிகாரி பலி, கொழும்பில் பாரிய குண்டுவெடிப்பு, மீண்டும் விமானத்தாக்குதல்" போன்ற செய்திகள் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு கஸ்டமாக இருக்கிறது!

Link to comment
Share on other sites

சாணக்கியன் அண்ணை, மதில் உடைப்பு வன்முறைரீதியாக நடைபெறவேணும் என்று இல்லைத்தானே. நீங்கள் ஏன் மீண்டும் பிறகு கிளைமோரையும், பாரிய குண்டு வெடிப்பையும் கொண்டு வாறீங்கள். அடக்கமாய் இருந்து வன்முறை ரீதியாக இல்லாமல் மதிலை உடைக்க வழி இல்லையா? சிந்தனைகள் சரியான விதத்தில் செயல்வடிவம் பெற்றால் வன்முறை ரீதியாக இல்லாமல் மதிலுடைப்பு நிகழமுடியும். எங்களால் அப்படியாக சிந்தித்து செயற்படுவது முடியாமல் இருக்கலாம். ஆனால்... எங்கள் இயலாமையை காரணம் காட்டி இதர வழிமுறை இல்லை என்று தீர்மானம் சொல்ல முடியாது.

Link to comment
Share on other sites

சிந்தனைகள் சரியான விதத்தில் செயல்வடிவம் பெற்றால் வன்முறை ரீதியாக இல்லாமல் மதிலுடைப்பு நிகழமுடியும். எங்களால் அப்படியாக சிந்தித்து செயற்படுவது முடியாமல் இருக்கலாம். ஆனால்... எங்கள் இயலாமையை காரணம் காட்டி இதர வழிமுறை இல்லை என்று தீர்மானம் சொல்ல முடியாது.

மாப்பிள்ளை,

தப்பித்தவறி நீங்கள் கௌரவ, குரோத, பழிக்குபழி என்ற கண்ணாடிகளை கழட்டிப்போட்டு சிந்தித்தீங்கள் என்றா அந்த மினுமினுப்பா தெரியிறது ஒரு மதிலே இல்லை அது ஒரு கதவு என்கிற விசயம் தெரியவரும். ஆனா பிறகு நீங்கள் துரோகியாகி டக்கிளசோட சேர வேண்டி வரும் பறவாயில்லையா?

Link to comment
Share on other sites

சாணக்கியன் அண்ணை,

நான் கெளரவ, குரோத, பழிக்குப்பழி என்கின்ற கண்ணாடிகளை கழற்றிப்போட்டு பார்த்தாலும் மதில் மதிலாகத்தான் தெரியும். குடு அடிச்சுப்போட்டு இல்லாட்டிக்கு குடிச்சுப்போட்டு பார்த்தால் சிலவேளைகளில் அது கதவாகவோ இல்லாட்டிக்கு அண்டவெளியாகவோ தெரியக்கூடும்.

டக்லஸ் சந்தர்ப்பவாத அரசியல்செய்து இப்போது மகாத்மா காந்திபோல சிலருக்கு தெரிகின்றார். ஆனால்.. டக்லஸ் செய்த கொலைகளை, அட்டூழியங்களை மறப்பது என்பது கடினமானது. என்னைப்பொறுத்தவரை நான் அவரை துரோகியாக பார்க்கவில்லை. ஓர் கொலைகாரனாகவே பார்க்கின்றேன்.

இனி அடுத்து நீங்கள் சொல்லுவீங்கள் புலிகளும் கொலைகாரர்தானே என்று. சரி... டக்லஸ் தமிழர்களுடன் மட்டும் மோதினார், ஆனால்.. புலிகள் பொதுவான எதிரிகளுடனும் மோதினார்கள் என்று சொன்னால் பிறகு நீங்கள் சொல்லுவீங்கள் சிங்களவர் தமிழருக்கு எதிரிகளே இல்லையே என்று.

மதில் மதில்தான் சாணக்கியன் அண்ணை. கண் குருடாய் இருந்தால் அது உங்களுக்கு மதிலாக தெரியாமல் போகலாம். அல்லது தேய்த்துக்கொள்வதற்கும், முதுகு சொறிவதற்கும் வசதியாக இருப்பதால் சிலவேளைகளில் மதில் உங்களுக்கு நெடுக்காலபோவான் சொல்கின்ற மாங்கனியாகக்கூட தெரியலாம்.

சிங்களப்பேரினவாதம் தனது அதிகாரங்களை ஜனநாயகம் என்கின்ற முகமூடியைப்போட்டு சர்வதேச அங்கீகாரத்தை பயன்படுத்தி அக்கிரமங்கள் செய்து, அயோக்கியத்தனங்கள் செய்து, அவலங்களை ஏற்படுத்தி அப்பட்டமான அநீதிவழியில செல்கின்றது. நீதி என்பது துட்டர்களின் கையில் சிக்கித்தவிக்கின்றது. துட்டர்கள் மிகச்சிறப்பாக காடைத்தனங்கள் செய்து அதில் வெற்றிபெற்றுச் செல்கின்றார்கள். ஆனால்.. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக.. துட்டனை நல்லவன் என்று பயத்தில் சொல்லமுடியாது.

புலிகள் மதிலை உடைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதில் வெற்றிபெறவில்லை. ஆனால்.. நிச்சயம் ஒரு நாளில் மதில் உடையத்தான் போகின்றது. வல்லவனுக்கு வல்லவன் நிச்சயம் இருப்பான். சிங்களப்பேரினவாதத்தின் கொட்டத்தை ஒருநாள் தமிழனாக இல்லாவிட்டாலும் யாரோ ஒருத்தன் நிச்சயம் அடக்குவான் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அது இயற்கை அன்னையாகக்கூட இருக்கலாம். இந்த மதிலை இயற்கை அன்னைகூட உடைப்பாள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் மதில் உங்களுக்கு நெடுக்காலபோவான் சொல்கின்ற மாங்கனியாகக்கூட தெரியலாம்.

அப்படின்னா சாணக்கியனுக்கு நல்ல சந்தோசம். கள்ள மாங்காய் பறிக்கலாம் எல்லோ. எதையும் களவெடுத்து தட்டிப்பறிச்சு சாப்பிடுறதென்றால் சாணக்கியனுக்கு அலாதி பிரியம். ஏன்னா.. அவரின் தலைவர் டக்கிளஸ் தேவானந்தா தமிழர்களிடம் அதைத்தானே செய்து.. மதிலை கதவாக்கி.. மாநிலத்தை உள்ளூராட்சி சபையாக்கி வைச்சிருக்கிறார்..!

சாணக்கியன் நாளைக்கு வந்து அது கதவில்ல கடப்புத்தான் என்றும் சொல்லுவார். தமிழர்கள் என்ற செம்மறியாடுகளின் கழுத்தில் பனை மட்டதான் தொங்குது.. ஒரு மாதிரி மட்டையை நுழைச்சு கிழைச்சு கடப்பை தாண்டி வந்திட்டா.. தும்பினியின் இடுப்பில் எல்லோரும் கூடிக் குதூகலிக்கலாம் என்றும் சொல்லுவார். அவருக்கு அதில தான் சுதந்திரமே பொதிந்திருக்குது. ஏன்னா அவர் மட்டும் மரணத்தை வென்று இந்த உலகில் சிங்களவரோடு கூடி வாழப் போகும் சிரஞ்சீவி..! இல்ல உவர் கிளைமோருக்கும்.. குண்டுக்கும் பயப்பிடுறதைப் பார்த்தா.. அப்படித்தான் தெரியுது..! :unsure::lol:

உவற்ற கண்ணுக்கு பேரா ஆத்துக்குள்ள மிதக்கிற தமிழிச்சிகளின் உடலங்கள் தெரிவதில்லை. அதில மனிதாபிமானம் மலர்வதில்லை..!

(Bodies of 2 Up-Country Tamil women found in canal in Colombo HSZ.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30015 )

Link to comment
Share on other sites

மாப்ஸ்,

நான் கெளரவஇ குரோதஇ பழிக்குப்பழி என்கின்ற கண்ணாடிகளை கழற்றிப்போட்டு பார்த்தாலும் மதில் மதிலாகத்தான் தெரியும். குடு அடிச்சுப்போட்டு இல்லாட்டிக்கு குடிச்சுப்போட்டு பார்த்தால் சிலவேளைகளில் அது கதவாகவோ இல்லாட்டிக்கு அண்டவெளியாகவோ தெரியக்கூடும்.

அதுதான் முதலிலேயே சொன்னேனே... கழட்டிப் போட்டு பாக்க வேணும் என்று. நீங்கள் கழட்டாமலேயே அது அப்படித்தான் இருக்கும் இது இப்படித்தான் தெரியும் என்கிறீர்கள். 30 வருசமா போட்டுக்கொண்டு இருந்ததை அவ்வளவு சீக்கிரமாக கழட்டுவது கஸ்டம்தான். அதுவும் கனடாவில இருந்து கொண்டு கழட்டுவது என்றா கனவுதான்.

சிங்களப்பேரினவாதம் தனது அதிகாரங்களை ஜனநாயகம் என்கின்ற முகமூடியைப்போட்டு சர்வதேச அங்கீகாரத்தை பயன்படுத்தி அக்கிரமங்கள் செய்துஇ அயோக்கியத்தனங்கள் செய்துஇ அவலங்களை ஏற்படுத்தி அப்பட்டமான அநீதிவழியில செல்கின்றது. நீதி என்பது துட்டர்களின் கையில் சிக்கித்தவிக்கின்றது. துட்டர்கள் மிகச்சிறப்பாக காடைத்தனங்கள் செய்து அதில் வெற்றிபெற்றுச் செல்கின்றார்கள். ஆனால்.. இந்த ஒரே ஒரு காரணத்திற்காக.. துட்டனை நல்லவன் என்று பயத்தில் சொல்லமுடியாது.

இன்னமும் குழந்தைப்பிள்ளை மாதிரி சிங்களவன் கெட்டவன், நீதி, நியாயம் என்று கதைக்கிறியள். ஒரு எதிரி என்ற முறையில் அவன் செய்யிறதை சிறப்பா செய்யிறான். இனி அவனோடதான் வாழ்வு. அவன் எங்களுக்கு நல்லவனாக நடக்க வேணும் என்றா நாங்கள் முதலில நட்பாக நடந்து சந்தேகங்களை அகற்ற முயற்சிக்க வேணும். இனியும் புலி, தமிழீழம், நாடுகடந்த தமிழீழ அரசு என்று பேசிக் கொண்டு அதை சாதிக்க முடியாது.

புலிகள் மதிலை உடைக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அதில் வெற்றிபெறவில்லை. ஆனால்.. நிச்சயம் ஒரு நாளில் மதில் உடையத்தான் போகின்றது. வல்லவனுக்கு வல்லவன் நிச்சயம் இருப்பான். சிங்களப்பேரினவாதத்தின் கொட்டத்தை ஒருநாள் தமிழனாக இல்லாவிட்டாலும் யாரோ ஒருத்தன் நிச்சயம் அடக்குவான் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அது இயற்கை அன்னையாகக்கூட இருக்கலாம். இந்த மதிலை இயற்கை அன்னைகூட உடைப்பாள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம். அதாவது நீங்கள் உங்கடை நம்பிக்கைகளோடு நாளாந்த வாழ்கையை சீராக நடத்தமுடியும். அது உங்களுக்கு ஒரு பொழுது போக்கு அம்சம். நம்பிக்கை பலிக்காவிட்டால் ஒரு நாள் துக்கம் கொண்டாடிவிட்டு, நீங்கள் உங்கடை பதவி உயர்வுக்கான பரீட்சையை எழுத போய்விடுவீர்கள்.

எங்களுக்கு வெறும் நம்பிகையை வைச்சு இன்றைக்கு சாப்பிட முடியாது, தொழில் செய்ய முடியாது. நீங்கள் காசையும், ஒரு நாள் லீவையும், வைச்சு போராட்டம் நடத்துவீங்கள். ஆனா நாங்கள் அதற்கு ஈடா எங்கட உயிரையும் எதிர்காத்தையும் பிள்ளைகளையும் குடும்பத்தையும் அழிச்சு போராட வேணும்.

இதை பற்றி இனி நான் கனக்க அலட்ட வேண்டியதில்லை, நீங்கள் சொன்ன மாதிரி உண்மைதான் எப்பவும் வெல்லும், இனியும் அது வெல்லும்! மீண்டும் அடுத்தவாரம் சந்திப்போம் வணக்கம்!

நெடுக்ஸ்,

நல்லா எழுதுறியள் வாழ்த்துக்கள். வணக்கம்!

Link to comment
Share on other sites

மதிலொன்று மறித்துக் கிடக்கிது.

....

ஊர் உறங்கின பொழுதொண்டு

ஒதுக்குப்புறமா இருந்த ஒரு பாவியாத மண்டபம்

கூட்டம் ஒண்டு நடந்திச்சு

கொஞ்சப் பேர் இருக்கினம். அடையாளம் தெரியேல்ல

குரல்களை வைத்து ஊகம் ஒண்டு வந்திச்சு

பழசு, இழசு. பெடி, பெட்டை, படிச்சது, பாமரன் எண்டு ஒரு வித்தியாசக் கூட்டம்

ஆனால் சில நூறு பேர் தான் கூட்டத்தில் இருக்கினம்

கதைச்சவை திடீரென மௌனமாச்சினம்

முடிவெண்டு சிலதை அறிவிச்சு கேட்டுது:

நாம் மதிலுடைக்கவிழைவது மதிலறிஞ்சாப் பறவால்லை ஊரறியக் கூடாது!

கட்டமைப்பு, அறிக்கை, அலுவலகம், மேடை, ஒலிவாங்கி எங்களிற்கிருக்காது!

மதில் வடிவங்களைக் கடந்தது என்பதால் எமது மருந்தும் வகைப்படுத்தலற்றது!

நாங்கள் வேலைக்குப் போவம், சமூகத்தில் வாழ்வம், மக்களாய் இருப்பம்!

இதைச் செய்தது இவையெண்டுசொல்ல எங்களைப் பற்றி எவைக்கும் தெரியாது!

மதிலாய் நொந்து விலகும் வரைக்கும் கற்பனை நிறைத்து முயன்று நிற்பம்!

மதிலிற்கு நோகும், ஆனால் ஏனெண்டு அதுக்கு இனம் பிரிக்க முடியாது!

மதிலிற்கு மட்டுமில்ல ஊரிற்கும் காரணம் என்றைக்கும் தெரியாது!

இனம் புரியா நோயாய் மதிலை உருக்குவோம!, மதிலாய் விலகும் அட்டவணை வேண்டாம்!

...

உட்கருத்துக்கள் நிறைந்த அருமையான, வித்தியாசமான வடிவில் நோக்கப்பட்ட கவிதை, பாராட்ட வேண்டியது... வாழ்த்துக்கள் இன்னுமொருவன்!

Link to comment
Share on other sites

ஓம் சாணக்கியன் அண்ணை...

சிங்களவன் எள் என்று சொன்னால்... நாங்கள் எண்ணெய் என்று ஒழுகி நம்பிக்கை ஏற்படுத்தும்படியாக நடக்கவேண்டும். அவன் கழட்டச்சொல்லி செய்தால்... நாங்கள் தமிழர் கழட்டிப்போட்டு திரியவேணும். அத்தோட கழட்டிப்போட்டு திரியாத ஆக்களை பலவந்தமாக கழட்ட வைக்கவேணும்.

சிங்களப்பேரினவாதத்துக்கு எல்லாத்தையும் திறந்துகாட்டி.. உரிஞ்சாங்குண்டியோட அவனுடன் நண்பனாக வாழ நீங்கள் ஆசைப்படுறீங்கள். உதுவும் ஒரு நம்பிக்கைதான். உரிஞ்சாங்குண்டியோட அவனோட சேர்ந்து வாழ்ந்தால்.. உங்கள் இருப்பை, உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நீங்கள் நம்புறீங்கள். உங்கள் நம்பிக்கைப்படி நீங்கள் தாராளமாக வாழ்ந்துகொள்ளுங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.