Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழைத்த சாதம் .........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குழைத்த சாதம் .........

ராசம்மா அன்றுமிகவும் பரபரப்பாக இருந்தாள். மகன் வரப்போகிறான் என்று விதம் விதமாக் சமைத்தாள். ஆம் அவள் மகன்" ராசன் .....மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து ஐந்து வருடங்களிற்கு பின் வருகிறான். அவளது நினைவலைகள் ஐந்து வருடங்கள் பின்னோக்கி சென்றன. அவனுக்கு வயது இருபத்தொன்று , அப்போது தான் படிப்பை முடித்தவன் . கிழக்கு மாகாண படையினரின் கெடு பிடிகளுக்கு மத்தியில் வாழ முடியாதென்று முடிவெடுத்து . வீட்டையும் நிலத்தையும் அடகு வைத்து .மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றான். அவனுக்கு மேலும் படித்து பல்கலைக் கழகம் செல்லும் ஆவல் இருந்தாலும் ஊரின் நிலை அதற்கு இடங் கொடுக்க வில்லை . இராணுவத்தினரின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கிய வேளை .அங்கு சென்றவனுக்கு அதிகம் படித்திராததால் ஒருகந்தோரில் எடு பிடி வேலை தான் கிடைத்தது . அதுவும் அவனுக்கு நல்ல காலம் இருந்ததால் தொடார்ந்து ஐந்து வருடங்கள் வேலை செய்ய கிடைத்தது அவனது அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். வேலை.யில் மிகவும் சுறு சுறுப்பாகவும் , பண்பாகவும் நடந்ததால் எல்லோருக்கும் பிடித்து போனது. மெல்ல மெல்ல வீட்டுக் கடனையும் அடைத்தான் .அவனுக்கு இப்போது வயது இருபத்தியாறு .

அவனுக்கு இரண்டு தங்கை மார். மூத்தவள் கலியாணத்துக்காக காத்திருந்தாள். அவன் வீட்டையடைந்ததும் , உற்சாகமான வரவேற்பு காத்திருந்தது. ஊர்க்கதைகளில் இருந்து அவனது பள்ளி தோழர் சிலர் காணாமல் போயிருந்தனர். வேலை கிடைத்த பின் திருமணம் செய்வேன் என்று சத்தியம் செய்த காதலி ....இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருந்தாள். ஏற்கனவே ஒழுங்காக்கி இருந்த மாப்பிள்ளைக்கு திருமணத்துக்காக தங்கைக்கு நாள் பார்க்க பட்டது. எல்லாம் சுபமே முடிந்தது. அவன் அதிகம் வெளியில் செல்ல விரும்பவில்லை ஊர் மாலை ஆறு மணி ஆகியதும் அடங்கி விடும். இன்னும் அவர்களின் அட்ட காசம் இருந்தது.

ஒரு நாள் இவன் திண்ணையில் சாய்ந்து அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்த போது ....அம்மா தேநீர் கோப்பையுடன் வந்தார். மெல்ல கதையை தொடங்கினார் . உனக்கு வெளிநாட்டுக்கு போக உதவி செய்த , கொழும்பு மாமா தன் மகளுக்கு உன்னை கேட்கிறார் என்றாள். இப்போது அதெல்லாம் வேண்டாமம்மா . எனக்கு இருபத்தியாறு தானே . அடுத்த தடவை வரும் போது பார்க்கலாம். இளையவளின் திருமணம் முடியட்டும் என்றான். அந்த வாரத்தில் வந்த ஞாயிறு சந்தையில் முன்னைய காதலி சுபாங்கியை சந்தித்தான் . முதலில் , ராசன் எப்படி இருகிறாய் .....என்றவள் , தான் சோக கதையை சொன்னாள் .அவன் வெளி நாடுக்கு சென்ற பின் ராணுவ அட்டகாசம் தலைதூக்கி எல்லோர் வீடுகளிலும் , சோதனை என்றும் , விசாரணை என்றும் பெண்களை பிடித்து சென்றார்கள். தாய் தந்தைக்கு ஒரே மகளான அவளை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதால் , அவ்வூரின் கிராம சேவகருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது குழந்தை பிறந்த பின் , ஒரு நாள் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் இன்னும்அவரை விடுதலை செய்ய வில்லை என்றாள். அவளது சோகம் அவனையும் தொற்றி கொண்டது.

அவனது தந்தை மீன் பிடி வள்ளங்களை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். கடலில் , கடற்படையினரின் , தொல்லைகளால் , மீனவர்களும் தொழிலுக்கு செல்வதில்லை . பலர் கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது காணாமல் போயினர். சில சமயம் வலைகளையும் அறுத்து , பிடித்த மீன்களையும் பறித்து சென்றனர். தமிழராய் பிறந்தமையினால் அவர்கள் பட்ட் துன்பம் எழுத்தில் எழுத முடியாது. அவன் மீண்டும் பயணமாகும் நாளும் வந்தது . மிகவும் சோகத்துடனும் , ஒருகடமை முடித்த திருப்தியுடனும் இருந்தான். மதியம் தாய் வகை வகையான் உணவு வகைகள் செய்தாள். தாயார் சாப்பிட அழைத்த போது , அவற்றை குழைத்து தரும் படி கேடான். வெளி நாட்டில் கிடைக்காதது இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு .........விடை பெறும் வேளை ..வீட்டு வாயிலில் சுபாங்கி .........ஒரு சிறு பார்சலுடன் சின்னவனை இடுப்பில் இருத்தியவாறு ......அவனுக்கு மிகவும் பிடித்த வளைய முறுக்கு செய்து கொண்டு வந்திருந்தாள். எல்லோருடனும் விடை பெற்று புறப்பட்டான் . அவனுக்காக் அவனது உறவுகள் காத்திருக்கின்றன. இன்னொரு சேமமான வருகைக்காய் ........

வெளி நாட்டில் தொழில் நிமித்தமாய் வாழும் .இளையவர்கள் , தனிமையிலும் பணி நிமித்தமாய் கஷ்டப்படாலும் .காத்திருப்பது .....சகித்து வாழ்ந்து கொண்டிருப்பது ....ஊரில் தனக்காக் வாழும் உறவுகளுக்காய். எனக்கு தெரிந்த மத்திய கிழக்கில் வாழும் சில நட்புகள் நினைவாய் எழுதியது .....உள்ளத்தை தொட்டு சென்றால் ஒரு வரி எழுதுங்கள். .............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயார் சாப்பிட அழைத்த போது , அவற்றை குழைத்து தரும் படி கேடான். வெளி நாட்டில் கிடைக்காதது இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு .........விடை பெறும் வேளை ..வீட்டு வாயிலில் சுபாங்கி .........ஒரு சிறு பார்சலுடன் சின்னவனை இடுப்பில் இருத்தியவாறு ......அவனுக்கு மிகவும் பிடித்த வளைய முறுக்கு செய்து கொண்டு வந்திருந்தாள். எல்லோருடனும் விடை பெற்று புறப்பட்டான் . அவனுக்காக் அவனது உறவுகள் காத்திருக்கின்றன. இன்னொரு சேமமான வருகைக்காய் ........

போங்கள் அக்கா உங்களுக்கு இதுதான் வேலையாய் போய்விட்டது..... மனசு வலிக்கிறது. இதைப் படித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை எழுத்து வடிவத்தில் கொண்டிவர முடியவில்லை.. இயலாமைக்கு மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

நிஜத்தோடு கூடிய கதை மறுபடியும் மனதை தொட்டு செல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நிலா அக்கா....

என்ன அக்கா சிறுகதைப் பகுதிக்குள் வந்தால் ஒரே அழுகிற வேலையாய் தான் இருக்கிறது.மிகவும் நன்றி உங்கள் சிறுகதைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

குழைத்த சாதம் இருக்கு என்று வந்து பார்த்தால் என்ற கதையா கிடக்கு நிலா அக்கா உங்களோடு சரியான கோபம் நான் :lol:

மீண்டும் நினைத்து நினைத்து அழவைக்கிறீங்களே நிலா அக்கா :wub::):D

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ சாப்பாட்டு விசயம் என்றுதான் வந்து பார்தனான்.நிலா நாம் காத்திருக்கலாம் ஆனால்

காலம் நமக்காக காத்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

மதியம் தாய் வகை வகையான் உணவு வகைகள் செய்தாள். தாயார் சாப்பிட அழைத்த போது , அவற்றை குழைத்து தரும் படி கேடான். வெளி நாட்டில் கிடைக்காதது இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு .........விடை பெறும் வேளை .

நெஞ்சை தொட்ட வரிகள் சிறு சிராப்பையும் ஏற்படுத்தி விட்டு தான் செல்கிறது. இந்த முறை கொழும்பில் பேக்கறி பாண் தான் கிடைத்தது. :lol: அதிஸ்டம் இருந்தால் அடுத்த முறை பார்ப்போம். :wub:

என்ன அக்கா நல்ல சுவையான புளிப்பான குழை சாதம் சுவைக்கலாம் எண்டு

வந்தால்.........................ஊரையே மறந்து உல்லாசமாக வாழும் எங்களை சாதத்தைக் காட்டி

கண்களில் கண்ணீரை வர வைத்து விட்டீர்களே!!!!!!!!!

அருமையான உணர்வுகளிற்கு மதிப்பு கொடுத்து எல்லோரையும் அத்தனை நிமிட

துளிகளையும் ஊரோடு அழைத்து சென்று விட்டீர்கள்!!!!!!!

அருமையான குழை சாதம் சுவைத்த அதே சுவை உங்கள் கதையை படித்த போது

கிடைத்தது..............................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலாமதி அக்கா

அடிக்கடி ஊரை ஞாபகப்படுத்தி எங்களை கவலைப்பட வைக்கிறிங்க. எங்கை இருந்தாலும் என்ன செய்தாலும் ஊரின் நினைவுகளையோ அல்லது அம்மா கையாலை சாப்பிட்ட குழைசாதத்தையோ மறக்கமுடியாது. இங்கை இருப்பதே இதெல்லாம் கொஞ்சகாலத்துக்கு நினைக்ககூடாது என்று தான். நீங்க திரும்பவும் ஞாபகப்படுத்தி விட்டீர்கள் ... :lol:

கதை நல்லா இருக்கு அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் இவன் திண்ணையில் சாய்ந்து அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்த போது ....அம்மா தேநீர் கோப்பையுடன் வந்தார். மெல்ல கதையை தொடங்கினார் . உனக்கு வெளிநாட்டுக்கு போக உதவி செய்த , கொழும்பு மாமா தன் மகளுக்கு உன்னை கேட்கிறார் என்றாள். இப்போது அதெல்லாம் வேண்டாமம்மா . எனக்கு இருபத்தியாறு தானே . அடுத்த தடவை வரும் போது பார்க்கலாம். இளையவளின் திருமணம் முடியட்டும் என்றான். அந்த வாரத்தில் வந்த ஞாயிறு சந்தையில் முன்னைய காதலி சுபாங்கியை சந்தித்தான் . முதலில் , ராசன் எப்படி இருகிறாய் .....என்றவள் , தான் சோக கதையை சொன்னாள் .அவன் வெளி நாடுக்கு சென்ற பின் ராணுவ அட்டகாசம் தலைதூக்கி எல்லோர் வீடுகளிலும் , சோதனை என்றும் , விசாரணை என்றும் பெண்களை பிடித்து சென்றார்கள். தாய் தந்தைக்கு ஒரே மகளான அவளை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதால் , அவ்வூரின் கிராம சேவகருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது குழந்தை பிறந்த பின் , ஒரு நாள் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் இன்னும்அவரை விடுதலை செய்ய வில்லை என்றாள். அவளது சோகம் அவனையும் தொற்றி கொண்டது.

ராசன் தனது , மாமாவின் மகளை திருமணம் செய்வானா´...... அல்லது சுபாங்கியை திருமணம் செய்வானா ?

ராசனின் மனநிலையை ..... நீங்கள் சொல்லாமல் வாசகர்களின் முடிவுக்கு விட்டுவிட்டீர்களே ... நிலாமதி அக்கா.

சுபாங்கியின் கணவரை அழைத்துச் சென்ற புலனாய்வுத்துறையினர் , அவரை ஒன்ரும் செய்யாமல் விடுதலை செய்வார்கள் என்று நம்பிக்கையுடன் இருப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரியந்தான்.......யாயினி.......சஜீவன்..........தமிழ் மாறன்...........நுனாவிலன்.......ஜீவா ..........யாவருக்கும் கருத்து பகிர்ந்தமைக்கு என் நன்றிகள். ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் ஒரு சோகம் மறைந்திருக்கும் அதிலும் தாய் பாசம் ...மண் வாசனை ஈடுகட்ட முடியாத ஒன்று.

முனிவர் .........உங்கள் கதை போல இருக்கா? மன்னிக்கவும் மீண்டும் சோகத்தை

மீளவும் வர செய்ததற்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவ்வூரின் கிராம சேவகருக்கு வாழ்க்கை பட்டாள். ...இரண்டாவது குழந்தை பிறந்ததும்

அவரை (கிராமசேவகரை ) அழைத்து சென்றவர்கள் இன்னும் விடுதலை செய்யவில்லை. ...

..........இப்படி வருகிறது . தமிழ் சிறி உங்கள் கருத்து பகிர்வுக்கு நன்றி. .

  • கருத்துக்கள உறவுகள்

யாதார்த்தத்தை கதையாக்கி உள்ளீர்கள்...வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சகோ தரி! இதுவும் ஒரு பொக்கிஷம்தான் . இருபது வருடங்கள் பின்னோக்கி நினைக்க வைத்திவிட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழைத்த சாதம் .........

வெளி நாட்டில் கிடைக்காதது இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து குழைக்க பட்ட உணவு

அவனுக்காக் அவனது உறவுகள் காத்திருக்கின்றன. இன்னொரு சேமமான வருகைக்காய் ........

வெளி நாட்டில் தொழில் நிமித்தமாய் வாழும் .இளையவர்கள் , தனிமையிலும் பணி நிமித்தமாய் கஷ்டப்படாலும் .காத்திருப்பது .....சகித்து வாழ்ந்து கொண்டிருப்பது ....ஊரில் தனக்காக் வாழும் உறவுகளுக்காய்.

மிகவும் யதார்த்தமான வரிகளால் கண் கலங்க வைத்துவிட்டீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி...........சுவி ........அல்வாயூரான் உங்கள் வருகைக்கும்

கருத்துக்கும் நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.